-
Posts
7324 -
Joined
-
Days Won
45
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ராசவன்னியன்
-
முழுவதையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். படிக்கும்போது பல்வேறு உணர்வலைகள்.. அதுவும் முல்லைத்தீவு நோக்கிய பயண விவரிப்பு மனசை மிகவும் அலைக்கழித்து கவலை கொள்ளச் செய்தது. மீண்டும் சுயநினைவிற்கு வர நேரமெடுத்தது. காலம் நல்ல தீர்வை வழங்கட்டும். வலிகளை சொல்லிய அருமையான பயணக் கட்டுரைக்கு மிக்க நன்றி, திரு.ரஞ்சித் 😌🙏
-
🙏
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
ராசவன்னியன் replied to தமிழ் சிறி's topic in சிரிப்போம் சிறப்போம்
உருட்டுகள் எல்லாம் கனஜோரா இருக்கு..! 🙂 -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ராசவன்னியன் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அருமை, உண்மைதான்..😃 -
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
ராசவன்னியன் replied to கிருபன்'s topic in கருவிகள் வளாகம்
நான் கடந்த இரண்டு வருடங்களாக ஐபோன் 13 ஐ உபயோகிக்றேன். இன்னமும் பாவிக்கும்போது தடுமாற்றம்தான்.வேறு கைப்பேசிக்கும் மாற இயலாது, ஏனெனில் இந்த ஐபோன் என் பிள்ளைகள், எனக்கு பரிசளித்தது. அவர்களிடம் பாவிப்பதில் சிரமத்தை சொன்னால் 'இவ்வளவு கணணி மென்பொருள்களை கையாள்கிறீர்கள், இது கூட புரிந்து பாவிக்க இயலாதா?' என சிரிக்கிறார்கள். ஒன்னும் சொல்ல இயலாது.😟 -
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
ராசவன்னியன் replied to மோகன்'s topic in யாழ் உறவோசை
பெரிய மனுசர், பெரிய மனுசர்தாய்யா. அதுதான் அழகு. 😃 ஆனாலும் அரசியல் கருத்துக்களை ஈயம் பூசினால் போல வைப்பதில் தவறில்லை. நீங்கள் கருத்து வைக்காமல், வெளியாட்களாகிய நாங்கள் கருத்து வைப்பதால் என்ன பயன்? 😌 -
யாழ் உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.. 🙏
-
மிக்க நன்றி நுணா.🙏 தங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள்..🙂 மிக்க நன்றி பெருமாள்.🙏 யாவரும் நலம். தாங்கள் மற்றும் குடும்பத்தார் நலமா?🙂 மிக்க நன்றி ஈழப்ப்ரியன்.🙏 நலமா.? குடும்பத்தார் நலமா?🙂 மிக்க நன்றி, கு.சா.🙏 நலமா.? பரிமளம் அம்மணி நலமா?🙂
-
மிக்க நன்றி, நிலாமதி அக்கா(?)..🙏 நீங்கள் நலமா? 🙂 இங்கு எல்லோரும் நலமே. வணக்கம் சுவி..நலமா? 🙏 பேசி ரொம்ப நாளாச்சி ஐயா..😌 எத்தனை பேரப் பிள்ளைகள்? எல்லோரும் சுகமா?🙂
-
வணக்கம் விசு.. 🙏 தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.🙂 இங்கு அனைவரும் நலம்.. புதுவருடத்தில் யாழ் எப்படி இருக்கிறது என எட்டிப் பார்த்தேன் ஐயா. ஏன் திண்ணைக் கிணற்றை காணேல்ல..?🙂 பெரியவர் பாஞ் அவர்களிடம் அலைப்பேசியில் பேசினேன். 'ஏன் யாழ் வருவதில்லை..?' என ஆதங்கப்பட்டார். குதிச்சிட்டேன்.😌
-
உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..🙂
-
தமிழீழ நாடு இப்போது எப்படி இருக்கிறது..?
ராசவன்னியன் posted a topic in தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
நீண்ட மாதங்களுக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி..🙏 இந்தக் காணொளியை காண நேரிட்டது..😌 -
வேலை களைப்பிற்கிடையே நேற்று பார்த்து ரசித்த பாடல்.. பொடுசுகளின் குரலும், உடல் பாவங்களும் அசத்தல்..!! 💯 இறுதியாக இந்த பாடல் வரிகள்.. "கட்டுப்பாட்ட மீறாமே.. சட்ட திட்டம் மாறமே.. காத்திருக்க வேணும், கொஞ்ச காலம் வரையில் பிறகு கல்யாணம் ஆகிவிட்டால், ஏது தடை? ஏது தடை? மாமா மாமா மாமா..!" ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.. ஒல்டு ஈஸ் கோல்ட்..! 😍
-
“ஒரு ஆலயம்” ஆகும்.. 41F நம்பர் பஸ்ல, ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் ஸ்டாப்ல ஏறி மந்தைவெளிக்கு டிக்கெட் எடுத்தாங்க.. கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு கண்டக்டர் அவர் சீட்டுல இடம் கொடுத்து உக்கார சொன்னார். முன்னாடி எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டு, அவர் சீட் நோக்கி வரும்போது அந்த அம்மா அலறுனாங்க..! “என்னம்மா..?”ன்னு அவர் கேட்டாரு. “எவனோ கழுத்துல இருந்த செயின்ன திருடிட்டான்”னு அந்த அம்மா அழுதாங்க.. அந்த கண்டக்டர் பதட்டபடாம சுத்தி பாத்தாரு.. அந்த அம்மாகிட்ட “உங்க செயின் நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்டபடாதீங்க.. பயப்படாதீங்க..!”ன்னு ஆறுதல் சொன்னார்.. அடுத்து வந்த எல்லா ஸ்டாப்லயும் பஸ் நின்னது.. சில பேர் ஏறுனாங்க.. சில பேர் இறங்குனாங்க.. ஆனால் கண்டக்டர் தேடவே இல்லை.. இந்த அம்மாவுக்கு பயம் அதிகமாகி கண்டக்டர்கிட்ட கேட்டாங்க.. “என்ன கண்டக்டர் தம்பி, செயின் கிடைக்குமுன்னு சொன்னீங்க.. ஆனால் இது வரை அதுக்காக நீங்க எதுவுமே பண்ணலையே..?”ன்னு கேட்டாங்க.. அந்த கண்டக்டர் அதுக்கு அமைதியா சிரிச்சிகிட்டே “உங்க செயின் 1 நிமிஷத்துல கிடைக்க போகுது..”ன்னு புதிர் போட்டார்.. அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல.. அந்த பஸ் டிரைவர் அடுத்த ஸ்டாப்ல நிறுத்த பஸ் ஸ்லோவ் பண்ணும்போது கண்டக்டர் ‘டபுள் விசில்’ கொடுத்தார்.. பஸ் அந்த ஸ்டாப்ல்ல நிக்காம மூவ் ஆகிடுச்சு... அந்த சமயம் பார்த்து ஒரு குரல்..! “யோவ் கண்டக்டர்..! பஸ் ஸ்டாப்ல நிக்காம போகுதுய்யா.. நான் இந்த ஸ்டாப்ல தான் இறங்கணும்..! பஸ்ஸ நிறுத்த சொல்லுய்யா..”ன்னு அந்த அம்மா முன் சீட்டு பக்கத்துல இருந்து ஒரு குரல்..! கண்டக்டர் இப்போ அந்த செயின் பறிகொடுத்த அம்மாவை பார்த்து சிரிச்சிகிட்டே சொன்னாரு.. “அம்மா உங்க செயின் கிடைச்சாச்சி..”ன்னு சொல்லிட்டு அந்த ஸ்டாப்ல நிறுத்த சொன்ன அந்த ஆளை செக் பண்ணாரு. அவன்கிட்ட தான் செயின் இருந்தது..! அந்த செயின் வாங்கி அந்த அம்மாகிட்ட கொடுத்துட்டு, அந்த திருடனை பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சாரு கண்டக்டர். இப்போ அந்த அம்மாவுக்கு ஒரே ஆனந்தம்... அதோட ஆச்சரியமும் கூட..! “அதெப்படி அவன் திருடன்னு அவ்ளோ துல்லியமா கண்டுபிடிச்சிங்க..?”ன்னு கேட்டாங்க.. அதுக்கு அந்த கண்டக்டர் “அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்தான் அவனை காட்டி கொடுத்தது..!”ன்னு சொன்னாரு. “அப்படி என்னப்பா அந்த ஸ்டாப் பேரு..?”ன்னு அந்த அம்மா ஆர்வமா கேட்டாங்க. கண்டக்டர் அந்த ஸ்டாப் பேர சிரிச்சிகிட்டே சொன்னாரு. " ****** " (அது ஒரு அரசியல் கட்சியின் அலுவலக பேருந்து நிறுத்தம் 😷😎) படத்திலிருந்து நீங்கள் ஊகித்துக்கொள்ளுங்கள்..! - டிவிட்டரில் ரசித்தது
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ராசவன்னியன் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
-
தமிழ் சிறியின் தங்கையின் கணவர் காலமானார்.
ராசவன்னியன் replied to ஈழப்பிரியன்'s topic in துயர் பகிர்வோம்
என் ஆழ்ந்த இரங்கல்கள்.. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.. -
இப்படத்தை திரையரங்கில் இன்று பார்க்க நேரிட்டது. முதல் காட்சியான ரயில் குண்டு வெடிப்பும், அதில் பாதிக்கப்பட்டவர்களாக காண்பித்ததில் , இயற்கையாக இல்லாமல் படத்திற்காக போடப்பட்ட செட் என்பது அப்பட்டமான பல இடங்களில் தெரிகிறது. தண்டவாளத்தின் தொடர்ச்சியே இல்லாமல் தனியாக நதியில் தெரிவதால் போடபட்ட செட் பல்லிளிக்கிறது. மற்றபடி அடர்ந்த வனத்தில் இயற்கையாக படமாக்கி தொய்வில்லாமல் படத்தை கொண்டு சென்றிருப்பதில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. க்ளைமாக்ஸில் உக்கிர துப்பாக்கி சண்டைக் காட்சிகளில் தெருவில் நிற்கும் பொது மக்கள், சர்வ சாதாரணமாக சினிமா சூட்டிங்கை வேடிக்கை பார்ப்பது போல நிற்பது சிரிப்பை வரவழைக்கிறது. சிறுசிறு குறைக்களை கவனத்தில் கொள்ளாமல் பார்த்தால் அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்.
-
தமிழ் நாட்டிலிருந்து பலரும் உறுப்பினராகி கலந்துரையாடிவர்கள், இப்பொழுது யாரும் கருத்துக்களை பதிவதில்லை அல்லது ‘ஆண்டு 2009தோடு எல்லாம் முடிந்துவிட்டது, இங்கே வருவதற்கு இனியென்ன தேவை?’ என அசிரத்தையாக இருக்கலாம். ஈழ உறவுகளும் அப்படியே ஒதுங்கிவிட்டார்கள் போலும். கிட்டதட்ட 2005லிருந்து ஒரே முனைப்புடன் வாசித்து வருகிறேன். நான் இங்கே உறுப்பினராகி 14 வருடமாகிவிட்டது. களத்தில் இணைந்த புதிதில் ஒரு யாழ் கள பெரியவர் ‘இன்னாப்பா நீ.. அப்பா டக்கரா?’ என்ற மாதிரி கேட்டுவிட்டார். ‘அப்படியெல்லாம் விடலாமா?’ என இங்கே தொடர்ந்தேன். அப்பெரியவர் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க! ஈழம் பற்றிய நுணுக்கங்களை யாழ் களமே எனக்கு கற்றுவித்தது. அவ்வகையில் யாழ் களத்திற்கு மனமார்ந்த நன்றிகள். யாழ் களம் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்!
-
இந்த இசையை கேட்டுள்ளீர்களா? ஆறு வருடங்களுக்கு முன் நாள் முழுவதும் ஒலித்தது..! 😔 கேட்கும்போது ஏதோ ஒரு ஈர்ப்பு..
-
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !!
ராசவன்னியன் replied to தமிழ் சிறி's topic in தமிழகச் செய்திகள்