Jump to content

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7331
  • Joined

  • Days Won

    45

Everything posted by ராசவன்னியன்

  1. சுமோ அக்கா, வாணன் மற்றும் குமாரசாமி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  2. இந்த திட்டம் 50 வருடங்களுக்கு மேலாகவே சென்னையில் இருக்கிறது... ஆனால் குறுக்கு வழியில் சுகத்தை தேடும் சென்னை தமிழர்கள், வாளாவிருப்பார்களா? கையூட்டு, அலட்சியம், அரசின் மெத்தனம்...எல்லாம் சேர்ந்து கூவத்தை நாறடித்துவிட்டன.
  3. கூவம் நதியில் 1950 ஆண்டுகள் வரை 49 வகையான மீன்களும் கடல் உயிரினங்களும் வாழ்ந்தன என்றால் ஆச்சரியப்படுவீர்கள்... எழுபதுகளில் இதே கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராகவும், பின்னர் முதலமைச்சராகவும் இருக்கும்பொழுது 22 மில்லியன் ரூபாய் செலவில் கூவம் நதி சுத்தமாக தூர்வாரப்பட்டு, புதிய நதி நீரில் படகு சேவைகளும் தொடங்கப்பட்டன. பல இடங்களின் இதற்கென படகு துறைகளும் அமைக்கப்பட்டது... "ஆகா இன்ப நிலாவினிலே...ஓகோ ஜெகமே ஆடிடுதே... பாடிடுதே... விளையாடிடுதே...!" என கொஞ்ச நாட்கள் நாங்களும் பயணம் செய்தோம்.. பொறுப்பார்களா திருவாளர் சென்னை பொதுசனங்கள்? தத்தம் வீட்டுலுள்ள, தொழிற்சாலையிலுள்ள புண்ணிய நீரையில் கூவத்தில் கலந்தனர். அத்தோடு கூவ மங்கை நாற்ற மங்கையாகிப் போனாள்..! லாரிக்குள், பேருந்துகளினுள்ளே வாசனை ஊதுபத்திகளை கொளுத்திகொண்டு பயணம் செய்து பாலத்தை கடக்க வேண்டியதுதான்! அப்போ வாசனை வராதில்லையா?
  4. நன்றி வாத்தியார் மற்றும் டங்கு, தங்களின் கரிசனைக்கும், பதில்களுக்கும். போராட்டம் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் பெறுவதை நீர்த்துப்போக செய்யக் கூடாதென்ற எண்ணத்தில் இந்த மாதிரி செய்திகளை இங்கே இணைப்பதற்கு முதலில் தயங்கினேன்... ஆனால் இங்கே வரும் சினிமா செய்திகளைப் பார்க்கையில், தாய் தமிழகத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களின் நிலையை ஈழத்தமிழர்கள் அறிந்துகொள்ளட்டுமே என்ற வகையில் பதிந்தேன். மீண்டும் நன்றி!
  5. உண்மைதான்! ஆனால் என்ன கருமாந்திரமும் இந்த அரசியல் கட்சிகள் செய்துவிட்டு போகட்டும்... ஆனால் அன்றாடம் போக்குவரத்து நெரிசலால் தினந்தோறும் அவதியுறும் சென்னை மக்களுக்கும், சென்னை நகரத்தின் தொழில் வளர்ச்சிக்கும் மிக முக்கிய உயிர் நாடி இந்த விரைவு மேம்பாலத் திட்டம். அதற்கு இந்த ஜெ அரசு போடும் முட்டுக்கட்டை ரொம்ப அநியாயம். இத்திட்டத்தை நம்பி, சென்னை துறைமுகத்தில் பல்நோக்கு வசதிகள் கொண்ட புதிய சரக்குப்பெட்டிகள் கையாளும் வளாகம்(New Container Terminal) மற்றும் திருபெரும்புதூரில் புதிய தொழிற்பேட்டை போன்ற திட்டங்கள் தொங்கி நிற்கின்றன.
  6. இதே தமிழக அரசு, MRTS (Madras Rapid Transit System) சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, பக்கிங்காம் கால்வாயின் நடுவே சில இடங்களில் தூண்கள் எழுப்பபட்ட போது ஆட்சேபிக்கவில்லை! விரும்பியதெல்லாம் எங்கே நடக்கிறது? ஆனாலும், சென்னை பெரும்பாலும் தி.மு.க.வின் கோட்டைதான்.
  7. NHAI said it was the State which should bear the financial implications on account of the stoppage of work The National Highways Authority of India (NHAI) has filed an additional affidavit in the Madras High Court seeking its intervention with the “arbitrary and irrational” act of the State Government in stalling the 19-km long “Chennai Port-Maduravoyal Elevated Corridor.” The project was mainly for speedy evacuation of cargo from Chennai port. Work commenced in September 2010. The NHAI had already filed a writ petition to quash the records of the Chief Engineer, PWD, Water Resource Organisation, Chennai Region, of January 28 this year and consequently direct the authorities to co-ordinate and take all steps to complete it within a planned time. By the January 28 letter, the PWD had sought revised Coastal Regulation Zone clearance for the elevated corridor and also said certain remedial measures such as dredging two metre beyond the outer column and construction of the retaining wall for three to four meters in the extended portion should be carried out. The NHAI said it was aggrieved by the stumbling blocks put up by the Tamil Nadu Government for the due execution of India’s first elevated project involving Rs.1800 crore. In a latest additional affidavit filed a few days ago, the NHAI has said it was the State government which should bear all the consequential financial implications on account of the stoppage of work and delay in handing over the work fronts to the concessionaire. ‘Motivated action’ The NHAI could not be made responsible for the alleged losses suffered by the concessionaire as it was in no way responsible for the stoppage of the work. It was the “motivated, tainted” action of the State Government which had led to the situation of stalling of the project work. Along with the affidavit, a document had also been filed of a meeting in which concessionaires of various NHDP projects in Tamil Nadu expressed their concern on the difficulties being faced by them in getting burrow area permission and stated that unless the present impasse was resolved, it would be difficult to complete the projects in hand. New projects They also expressed apprehension in taking up new projects in the State. On the award of new projects in Tamil Nadu, the NHAI said that unless the State Government signed the State Support Agreement and extended necessary cooperation to the concessionaires, the authority may not be in a position to award new projects in the State. Source: http://www.thehindu.com/news/national/tamil-nadu/nhai-seeks-court-intervention-in-portmaduravoyal-project/article5010537.ece .
  8. முடங்கியதா.. சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்? சென்னையின் நெடுநாளைய கனவான சென்னை - மதுரவாய்ல் இடையே ஏறத்தாழ 19 கி.மீ தூரத்திற்கு கூவம் ஆற்றின் கரையோரமாகவே ரூபாய் 1850 கோடி செலவில் திட்டமிடப்பட்ட விரைவு மேம்பால்ச் சாலை மத்திய மாநில அரசுகளின் ஈகோ போட்டியால், திட்டம் 30 சதவீதம் நிறைவேற்றப்பட்டு (ரூபாய் 500 கோடிகள்) செலவழித்த பின் பாதியில் முடங்கி நிற்கிறது. இத்திட்டத்தால் சென்னைக்கு உள்ளேவரும் & வெளியேரும் துறைமுக சரக்கு வாகனங்கள் பூந்தமல்லி சாலை, கடற்கரை சாலை, மவுண்ட் ரோடு வழியே செல்லாமல் நேரடியாக சென்னை நுழைவாயிலான மதுரவாயல் மூலம் விரைவாக் சென்னை துறைமுகத்தை அடைய இயலும். இதன்மூலம் வழக்கமான 120 நிமிட சாலை பயணம், 20 நிமிடதிற்குள்ளேயே முடியும். இத்திட்டம் கடந்த திமு.க அரசினால் முன்வைக்கப்பட்டு, அனைத்து தமிழக, மத்திய அரசின் துறைகளால் ஒப்புதல் பெற்ற பின் தொடங்கப்பட்டு மடமடவென நடந்த வேலைகள் 2011ல் ஆட்சி மாறியவுடன் அதே தமிழக அரசு துறைகள் இப்பொழுது திட்ட வரைவின்படி சாலகளின் தடம் அமையவில்லை, கூவம் ஆற்றின் நடுவே இப்பாலத்தின் தூண்கள் அமைவதால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அழிவு ஏற்படும் என நொண்டிச் சாக்குகள் கூறி திட்ட நிறைவேற்றுதலை அப்பட்டமாக் நிறுத்தி வைத்துள்ளனர். இத்தடைக்குப்பின் அரசியல் காரணங்கள்/பெரும் புள்ளிகள் உள்ளதாக இதிட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட மத்திய அரசு நிறுவனமான அரசு நிறுவனமும்(NAHI), ஒப்பந்த நிறுவனமும்(SOMA) திட்டத்தை தமிழக அரசு தடங்களின்றி முடிக்கவும், திட்ட தாமதத்திற்கு நஷ்ட ஈடு கேட்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.. இவ்வழக்கு பற்றிய தினமலரில் வந்துள்ள செய்தி: http://www.dinamalar.com/district_detail.asp?id=679629 தமிழக அரசின் தடையால், சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை பணிகள் முடங்கி, ஓராண்டு முடிந்து விட்டது. பிரதமரின் ஆலோசகர் நேரில் பேசியும் சிக்கல் தீரவில்லை. நெரிசலுக்கு தீர்வாக அமையும் இந்த பணி, எப்போது துவங்கி முடியும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 20 சதவீதம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்கேற்ப, சாலை வசதியை மேம்படுத்த, சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை, 19 கி.மீ., நீளத்திற்கு மேம்பால சாலை அமைக்கும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவக்கியது. கூவம் கால்வாயை ஒட்டி, பிரமாண்ட தூண்கள் அமைக்கும் பணிகளில், 20 சதவீதம் முடிந்தன. இதனிடையே, "கூவம் கரையோரம் தூண்கள் அமைக்காமல், நீரோட்டத்தை தடுக்கும் வகையில் பணிகள் நடக்கின்றன. உடனே நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்" என, கடந்தாண்டு மார்ச், 29ம் தேதி, தமிழக நீர்வள ஆதார துறை தலைமை பொறியாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனருக்கு, "நோட்டீஸ்' அனுப்பினார்.அன்றைய தினமே பணிகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, பல கடித போக்குவரத்துகளுக்கு பின், பிரதமரின்ஆலோசகர், டி.கே.நாயர், சென்னை வந்து தலைமை செயலரை சந்தித்தார்.பல கட்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அது, விசாரணையில் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநில அரசின் தடையால், பணிகள் முடங்கி, ஓராண்டு ஆகிவிட்டது.இதனால், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், 668 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உள்ளது.தமிழக அரசு, தடை நீக்காததால், வேறு வழியின்றியே கோர்ட்டுக்கு சென்றோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார். ஓராண்டு கால கதை இதுதான்...! 29.3.2012 நீரோட்டம் பாதிப்பதாக பணிகளை தொடர தமிழக அரசு தடை 02.4.2012 விதிமீறல் இல்லை என, மத்திய நெடுஞ்சாலைத் துறை செயலர், மாநில அரசுக்கு கடிதம் 25.4.2102 மத்திய நெடுஞ்சாலைத் துறை செயலர் உபாத்தியா, தலைமைச்செயலருடன் சந்திப்பு 16.7.2012 தலைமைச் செயலருக்கு, உபாத்தியா மீண்டும் கடிதம் 09.11.2012 பிரதமர் ஆலோசகர் டி.கே.நாயர், தலைமைச் செயலருடன் சந்திப்பு 2.11.2012 தொழில்நுட்ப ஆலோசகர்கள் கூட்டம் நடத்த திட்ட இயக்குனர், மாநில அரசுக்கு கடிதம் 28.11.2012 வடிவமைப்பை மாற்ற பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், திட்ட இயக்குனருக்கு கடிதம் 14.2.2013 திட்ட இயக்குனர், பொதுப்பணித் துறைக்கு மீண்டும் கடிதம் 25.2.2013 பணிகள் முடங்கியதால், ஒப்பந்த நிறுவனம், 668 கோடி ரூபாய் இழப்பீடு கோரல் 11.3.2013 ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தொடக்கம் 14.3.2013 விசாரணை மூன்று வாரம் தள்ளிவைப்பு. கடைசியாக வந்துள்ள செய்தியின்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசின் முழு ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில் இத்திட்டத்தை கைவிடப்போவதாகவும், இதுவரை இத்திட்டத்திற்கு செலவழித்த தொகையையும், நஷ்ட ஈட்டையும் தமிழக அரசே ஏற்க வேண்டுமென தெரிவித்துள்ளது. Curtains down for elevated expressway, NHAI seeks closure. http://articles.timesofindia.indiatimes.com/2013-08-10/chennai/41265961_1_nhai-soma-enterprises-national-highways-authority ஜெ. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால், தி.மு.க அரசின் காலத்தில் தீட்டப்பட்ட அனைத்து திட்டங்களும் தற்பொழுது கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்களே பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது...ஏனெனில் இதன் முழுஉரிமை தமிழக அரசிற்கே!
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், கோம்ஸ்.
  10. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, டங்கு, நந்தன், நவரத்தினம், நுணா மற்றும் புங்கையூரன். (சு)மேரியம்மாவிற்கும் வாழ்த்துக்கள்..
  11. வாழ்த்திய விசு, தயா மற்றும் சுவி அவர்கள் அனைவருக்கும் நன்றி! உங்களுக்கும் மனமார்ந்த வாழ்துக்கள் தயா.
  12. சாம்பவி, காரி மற்றும் கா ளா ன், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி! தமிழ்சிறி, உங்களின் .கிராபிக்ஸ் மற்றும் நகைச்சுவையான பதிவுகளின் ரசிகன் நான். விலாவரியான தங்களின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
  13. மெச்சிய பச்சை உள்ளங்கள் தமிழ்சூரியன், சுவி, குமாரசாமி, வாத்தியார், தமிழரசு, நந்தன் மற்றும் புத்தன் ஆகியோருக்கும் நன்றி.
  14. வாழ்த்துக்களுக்கு நன்றி... வந்தி, நெடுக்ஸ், புங்கையூரன் மற்றும் உடையார்.. உங்களோடு நானும் சேர்ந்து மற்றோரையும் வாழ்த்துகிறேன்.
  15. வேலைகள் முற்றாக முடியட்டுமென அனைத்து அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன. பொதுமக்கள் பாவனைக்கு திறக்கும்போது பாருங்கள் இவர்களின் குடுமிச் சண்டையை...! ஒவ்வொருத்தரும், தன் தாத்தா, பாட்டி பெயரைத்தான் சூட்ட வேண்டுமென குதிப்பார்கள்.. மீனம்பாக்க வானூர்தி நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள உள்நாட்டு & வெளிநாட்டு முனைய விவாக்கத்திற்கு, சமீபத்தில் தங்கள் தலைகளின் பெயரைச் சூட்ட அடித்துக் கொண்டார்கள்.. சட்டமன்றத்தில் தீர்மானமும் கொண்டுவந்தார்கள்.. மத்திய அரசு மூச்சு விடவில்லை, இதுவரை. கேள்விப்பட்டிருப்பீர்களே? அது உயர்வகுப்பு பயணிகளுக்கானது டங்கு...பயணக்கட்டணம் சிறிது அதிகம்... தற்போதுள்ள புறநகர் சேவையிலும் முதல் வகுப்பு என தனிப்பெட்டி உள்ளது.
  16. நன்றி திரு.சுவி. புட்போர்ட் அடிக்கிற மாதிரி வடிவமைத்தால், சுரங்கப் பாதையில் தொடருந்து வேகமாக நுழையும்போது தொங்கிப் பயணிப்பவர்கள், சடுதியில் கீழோலகத்திலிருந்து மேலோகம் பயணித்துவிடுவர். பரவாயில்லையா? இரவில் தொடருந்து பயண பாதுகாப்பு அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லைதான். சனத்தொகை ஊதிப் பெருத்துவிட்டதே...! பொழைக்க வேணாம்?
  17. திட்ட பகுதிகளில் படங்கள் கருத்து தெரிவித்த சுவி, விசு, யாழ்கவி, ரகுநாதன், தமிழ்சிறி மற்றும் டங்கு அனைவருக்கும் நன்றி.
  18. சென்னை 'மெட்ரோ இரயில்' திட்ட குறிப்பு இந்த திட்டம் தொடர்பாக ஒரு விரிவான திட்ட அறிக்கையினை டெல்லி மெட்ரோ இரயில் கழகம் தயாரித்துள்ளது. இந்த அமைப்பு மெட்ரோ இரயில் திட்டதை டெல்லியில் சிறப்பாக அமைத்து செம்மையாக செயல்படுத்தி வருகின்றது. இந்த விரிவான திட்ட அறிக்கையில் முதற்கட்டமாக கீழே காணும் இரண்டு மெட்ரோ இரயில் வழித்தடங்களை அமைத்திடலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது : வழித்தடம் - 1 தொலைவு : 23.1 கி.மீ. வழித்தட விவரங்கள்: வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை 23.1 கி.மீ. வண்ணாரப் பேட்டை - பிராட்வே (பிரகாசம் சாலை) - சென்னை சென்ட்ரல் - ரிப்பன் மாளிகை - கூவம் கரை ஒரமாக - அரசினர் தோட்டம் - தாராப்பூர் கட்டிடம் - ஸ்பென்ஸர்ஸ்-ஜெமினி-அண்ணா சாலை-சைதாப்பேட்டை - கிண்டி - சென்னை விமான நிலையம். வழித்தடம் - 2 தொலைவு : 22 கி.மீ. வழித்தட விவரங்கள்: சென்னை சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரை 22 கி.மீ. சென்னை சென்ட்ரல் - ஈ.வே.ரா பெரியார் சாலை வழியாக வேப்பேரி - கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - அமைந்தக்கரை - ஷெனாய் நகர் - அண்ணாநகர் கிழக்கு - அண்ணாநகர் இரண்டாவது நிழற்சாலை - திருமங்கலம் - கோயம்பேடு பேருந்து நிலையம் - ஜவகர்லால் நேரு சாலை வழியாக - வடபழனி - அசோக்நகர் - சிட்கோ - ஆலந்தூர் - புனித தோமையர் மலை. இரு வழிதடங்களின் மொத்த தூரம் : 45.1 கி.மீ முதல் வழித்தடத்தில், வண்ணாரப் பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை 14.3 கி.மீ் தூரம் சுரங்கப் பாதையாகவும் மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் இருக்கும். இரண்டாவது வழித்தடத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர் இரண்டாவது நிழற்சாலை வரை 9.7 கி.மீ தூரம் சுரங்கப் பாதையாகவும், மீதமுள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைக்கப்படவுள்ளன. செய்தி மூலம்: http://chennaimetrorail.gov.in/cmrl_ta/project.php
  19. இப்படம் சென்னை மாநகர தொடருந்தின் வழிதடங்களை குறிக்கின்றது. இத்தொடருந்து, சில பகுதிகளில் நிலதிற்கு அடியில் 15 மீ ஆழ சுரங்க வழியிலும், சில பகுதிகளில் உயர்த்தப்பட்ட வழிகளிலும் பயணிக்கும். பட உதவி: http://chennaimetrorail.gov.in/cmrl_ta/route_schematic.php .
  20. சிங்காரச் சென்னைக்கும் உலகத் தரத்தில்(?) மாநகர தொடருந்து (Metro Rail) வசதி கூடிய விரைவில் - அதாவது அடுத்தாண்டு இறுதியில் மக்கள் பாவனைக்கு வரவிருக்கிறது. தொடருந்தின் உட்புறம் எப்படி இருக்குமென காட்சிப் படம் உங்கள் குழாயில் துழாவியபோது அம்புட்டது... நீங்களும் பாருங்கோவன்... http://youtu.be/Tcn05fP5tSg மேலதிக விவரங்களுக்கு அத்திட்ட அலுவலகத்தின் இணையத்தில் பாருங்கள்... http://chennaimetrorail.gov.in/
  21. சாந்தி அக்கா(?)வுக்கும்,தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  22. பிறந்தநாள் வாழ்த்துக்கள், சுண்டல் அண்ணா. மனம் போல் மனைவி அமையட்டும்.
  23. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நுணா..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.