Jump to content

shanthy

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4644
  • Joined

  • Last visited

  • Days Won

    29

Everything posted by shanthy

  1. தமிழ்ப்பொடியனுக்கு வாழ்த்துக்கள்.
  2. இக்கவிதையை கொப்பியடித்து தனதாக சொந்தம் கொண்டாடியிருப்பவர் தான் ஒரு பத்திரிகையாளனென்று முகப்புத்தகத்தில் தன்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
  3. இக்கவிதை ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டது. அதன் இணைப்பு கீழே இணைத்துள்ளேன் நீலப்பறவை. இக்கவிதையை எழுதிய கவிஞர் நிக்சன் என்பவர். ஆனால் நீங்கள் கொடுத்திருக்கும் தொடுப்பில் உள்ளவர் தனது கவிதை போல முகப்புத்தகத்தில் இணைத்துள்ளார். http://www.yarl.com/forum3/index.php?showtopic=116677
  4. இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  5. தமிழச்சிக்கு இனிய பிறந்ததின வாழ்த்துகள். விஜயகுமாருக்கு இனிய பிறந்ததின வாழ்த்துகள்.
  6. தொடருங்கோ நீதிமதி "அதுவொரு கனாக்காலம்"
  7. சொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ் ச.பொட்டு (பொட்டு அம்மான் ) நினைவுப் பதிவு பலதடவைகள் இணைக்கப்பட்டுள்ளது. பார்க்க: http://www.yarl.com/...showtopic=37433 http://www.yarl.com/...showtopic=64513 http://www.yarl.com/...showtopic=73706 http://www.yarl.com/...showtopic=79943 கேணல் சாள்ஸ் வீரவணக்க உரை ச.பொட்டு http://youtu.be/GgvnZdeCidk 05.01.2008 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அவர்களுடன் லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மா வீரர்களை இன்றைய நாளில் நினைவு கூறுகின்றோம். அத்துடன் இன்றையாய நாளில் வீர காவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கேணல் சாள்ஸ் நினைவூட்டல் http://youtu.be/racf-3AZNog நியானி: திருத்தம் செய்யப்பட்டுள்ளது
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகாறா.
  9. அன்னிலிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சபேசன்.
  11. விசுகுவுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ஜீவாவுக்கு பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். மற்றும் துன்னையூரானுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  12. சிட்டு 15ம் வருட நினைவுகளோடு ‘சிட்டு’ சிரிப்பு நிறைந்த மகிழ்ச்சியின் உறைவிடம் நீ. நீயழைந்த காற்றும் நீ நடந்த நிலமும் நினது நினைவுகள் நிறைந்து மௌனித்துக் கிடக்கிறது. கனவுகளோடும் கலையாத நினைவுகளோடும் நீ நிறைந்த இசையும் பாடல்களும் உயிர்ப்பின் இருப்பாய் ஈரமாய்…… இசை நிறையும் திசையெல்லாம் உன்னை ஏந்தியிருக்கிறது ஒலிக்கதிர்கள்….. தீயின் சுவடுகள் மீதேறிய உனது கால்களும் மூச்சும் 01.08.1997அன்று ஓய்வெடுத்து உறங்கிய நாள் கடந்து இன்றுன் நினைவுகள் 15ம் ஆண்டைத் தொட்டு நிற்கிறது. ஆற்ற முடியாச் சோகத்தை இந்த நூற்றாண்டு தந்துவிட்டுச் சலனமின்றி நகர்கிற இந்நாட்கள் பற்றிச் சொல்வதானால்…….???? நீயுறங்கிய நிலம் மீது பேயுலவித் திரிகிறது….. அமைதியைக் கொன்று போட்டவர்கள் உனதும் உனது தோழர்களும் தாங்கிய கனவுகள் மீதும் காலூன்றி உங்கள் கனவுகள் சிதைகிற பொழுதுகளிவை….. ஊழித்தீமூட்டி உனதும் உன்போன்றோரின் கனவுகளும் நிலமிழந்து நின்மதியிழந்து அலைகிறது. நீங்கள் தா(தூ)ங்கிய இடங்களும் தோற்றுப் போய் நீங்கள் எதிர்த்துக் களமாடியவர்கள் கைகளிலே…. எனினும் நம்பிக்கைகள் த(து)ளிர்க்கிறது. நாங்கள் நேசித்த உங்கள் கனவுகள் மெய்த்திடக் காலமெங்கள் கண்ணீரைத் துடைக்குமென்று நம்புகிறோம்….. அதுவரை காத்திருங்கள் உங்கள் அனைவருக்கும் அன்று தீயெடுத்துத் தீப்பந்தமேந்தித் துயர் கரைப்போம். (01.08.2012.மேஜர் சிட்டு இவ்வுலகைவிட்டுப் பறந்து 15 ஆண்டுகள் நிறைகிறது. ஒரு போராளியாக பாடகானாக நடிகனாக தமிழர் தேசத்தின் விடுதலைக்காக ஓயாது உழைத்த ஒரு போராளி. 75இற்கு மேற்பட்ட தேசப்பாடல்களைப் பாடியவர். கலைஞனாய் இயங்கியவன் 01.08.1997அன்று களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்)
  13. எங்கள் ஊர் முனையில் உயிர் விதைத்து எங்கள் ஊர்காத்த தளபதியே உன்னையிழந்த அந்தநாள்....எங்கள் ஊரின் செம்பாட்டு மண்மீது உனது உடல் சரிந்த நாள்....இன்றும் நினைவுகளில் நிறைகிறது.... தளபதி ராதா அவர்கள் குப்பிளான் கற்கரைப்பிள்ளையார் கோவில் மேற்கு வீதியில் எதிரியின் சூடுபட்டு வீரச்சாவடைந்தார். ராதா அவர்களின் குருதி தோய்ந்த மண்ணை அருகில் நின்ற ஒரு போராளி அவர் இறந்த இடத்திற்கு அண்மையில் இருந்த புளியமரத்தின் அடியில் போட்டு மூடியதாக சொல்வார். ஒருகாலம் ஊர் நிலமைகள் சரியாகிற போது ராதா வீரச்சாவடைந்த பிள்ளையார் கோவில் மேற்கு வீதிக்கு ராதா வீதியெனப் பெயர் வைக்க வேண்டுமென்றும் சொல்வார். ராதா உயிர்விட்ட வீதி ராதாவீதியாக வழிகிடைக்குமா என்பதே கேள்வியாக அந்த வீரனின் நினைவுகள் சுமக்கும் அந்த வீதி காத்திருக்கிறது.
  14. அமுதமழையில் நனையும் பொழுதில்.... பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
  15. விழிகள் கரைய உருகியுருகி தினமும் அழுகின்றோம். பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
  16. அலைபாடும் இசையோசை கேட்கலியா.... பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ***நீமறைந்து போனாலும் உனது ஞாபகங்களை என்றும் சுமக்கும்உ னது தோழமைகள் உனது குரலுக்கு வசமான உலக இசைவிரும்பிகளும் உனது குரலையும் உனது நினைவுகளையும் காலமுள்ள வரையும் காத்துச் செல்வோம்***
  17. அவர் நக்கல் அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்பதால் ஏதாவது நன்மை வந்துவிடுமா ? அர்யுன் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார் என்றால் அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விமர்சனமா ? நீங்கள் ஒருபக்கத்தை மட்டும் பார்த்திருப்பதற்கு நான் என்ன செய்ய முடியும் விசுகு. நான் நேசிப்பது பிரபாகரன் என்ற தலைவனை அவர் வளர்த்த எல்லாவல்ல மாவீரர்கள் போராளிகளை. அவர்களை யாரோ ஒருவர் விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை சோத்துப்பாசல் பருப்புப்பாசலென்று பட்டம் தெளிக்கமாட்டேன். ஏனெனில் தலைவர் பிரபாகரனும் அவர்கள் வளர்த்தவர்களும் வஞ்சம் தீர்த்தலையே திருப்பி காறித்துப்புவதையோ தங்கள் பணியாகக் கொள்ளவில்லை. நீங்கள் அவர்களை நேசிப்பதாக சொல்லிக்கொண்டு சோற்றுப்பாசல் பருப்புப்பாசல் என திருப்பித் துப்புவது தலைவர் பிரபாகரனையும் அவர் வளர்த்த எல்லாரினது தியாகங்களையும் கொச்சைப்படுத்துவது போலிருக்கிறது. இன்னா செய்தாரை ஒறுத்தல்... துறவறவியலில் திருவள்ளுவர் ஒரு அற்புதமான திருக்குறளை நமக்கெல்லாம் தந்திருக்கிறார்- இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். நாமெல்லாம் சாமியார் அல்ல. சாமியார்களே ஒன்றையும் விடுவதில்லை என்பதைத் தற்போதைக்கு மறந்து விடுவோம். இந்தக் குறளுக்கு பரிமேலழகர் அழகான உரை தந்திருக்கிறார்- இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.) இதன் பொருள் சமகால தமிழில் இப்படி புரிந்து கொள்ளப்படலாம் (சொற்குற்றம் பொருள் குற்றம் காணும் பெரியவர்கள் பண்பான மொழியில் என்னை இடித்துரைத்துத் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்) இன்னா செய்தாரை ஒறுத்தல் - தான் விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை சாமியார்கள் தண்டிப்பது எப்படி என்றால் அவர் நாண நல் நயம் செய்து விடல் - அப்படி செய்தவர்களே வெட்கப்படுமாறு அவர்கள் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும்படியான செயல்களைச் செய்து நல்லது கெட்டது இரண்டையும் மறந்து விட வேண்டும் (இந்த நல்லது கெட்டது இரண்டையும் மறக்காமல் இருந்தால் திரும்பத் திரும்ப வம்பு வழக்கு தொடரும் என்பதால் இவ்விரண்டும் மறக்கத் தக்கதாயின. அதனால்தான் இந்த ஐடியா தரப்படுகிறது. தண்டிப்பது, நல்லது செய்வது, அப்புறம் எல்லாவற்றையும் மறப்பது இதிலெல்லாம் கோபத்துக்கு இடம் தரக்கூடாது). பரிமேலழகர் எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா? ஏன் தேவை இல்லாமல் நாம் வன்மம் வைத்து பகை செய்ய வேண்டும்? இந்தக் குறளுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஒற்றை வாக்கியத்தில் நச்சுன்னு சொல்லிட்டாரே- "நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலை குனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்." கோபத்தை விட்டோம்னா நாம அவங்க வெட்கப்படணும்னு நினைத்து நல்லது செய்ய மாட்டோம், அவங்க சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு நல்லது செஞ்சுட்டு, அதையும் மறப்போம். அதுதான் குறள் வழி. நட்பு வழி. பகை அழிப்போம். நட்பு வளர்ப்போம். இக்கருத்தை வளங்கிய தளத்தின் இணைப்பு :- http://www.sasariri.com/2011/04/blog-post_8783.html
  18. இங்கு தொடர்ந்து அர்யுன் அவர்களை பலர் சோத்துப்பாசல் என்று எழுதிக் கொண்டிருப்பதனையும் இனிமேல் நிறுத்த நிர்வாகம் விதியமைக்க வேண்டும். அர்யுனும் ஒரு முன்னாள் போராளிதான். அவரும் தாயகக்கனவோடுதான் ஆயுதம் தூக்கப்போனோர். அவரது தெரிவும் தலைமையும் தவறானது என்பதற்காக தொடர்ந்து சோத்துப்பாசல் துரோகி போன்ற அர்தத்தத்தில் சாடுவதையும் சாடுவோர் கவனித்து நிறுத்திக் கொள்வதே சக கருத்தாளனுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு.
  19. இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  20. அருணாண்ணையின் வீரச்சாவுச் செய்தி கேட்ட 2வது நாள் எழுதிய பதிவு இது. மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு ஆளரவமற்ற வனாந்தரத்துப் பெருமுகத்தில் அலைகிறது ஆன்மா. மீள் பொழுதின் வரவில் - உன் நினைவுகளைத் தெளித்துவிட்டுக் கனவாகிப் போனாய்.... நீயெழுதிய கடிதங்கள் மஞ்சள் கடதாசிப்பூக்கள் மறக்காமல் அனுப்பும் பிறந்தநாள் புத்தாண்டு வாழ்த்து மடல்கள் - உன் நினைவாய்க் கிடைத்தவைகள் எல்லாம் கண் முன்னால் உன்னை நினைவுபடுத்திபடி.... 'போய் வருகிறோம்' போர் நிறுத்த காலத்துச் சந்திப்பு முடிந்து பிரியும் நேரம் 'சந்திப்போம்' என்றாய் இன்று வந்த செய்தியுன்னை இழந்தோமென்கிறது. மாமாவின் மரணம் கேட்ட உன் மருமக்கள் சொல்கிறார்கள். 'கடிதம் மாமா' இனியெங்களுக்கு இல்லை... இதயம் நொருங்கிச் சிதிலமாகிறது. அவர்கள் பகிரும் உனது ஞாபகங்களில்.... மாமா தந்த சிலுவைப் பென்ரன் மாமா தந்த ஐஸ் கிறீம் மாமாவுடனான மோட்டசயிக்கிள் பயணம் மாமாவின் மடியில் விளையாடிய நினைவென்று நீட்டுகிறார்கள் நினைவுகளை..... மாமா இல்லையினி மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு அவர்கள்.... எங்கடை மாமாக்களும் அன்ரியவையும் ஏனம்மா சாகினம் ? திருப்பிச் சுடலாம் தானே ஆமிக்காறனை...? கேட்கிறான் உங்கள் பார்த்திக்குட்டி சொல்ல வார்த்தையில்லை. சொல்லியழ முடியவில்லை. இன்னும் யாரை எவரையெல்லாம் இழக்கப்போகிறோம்.....? வரும் நாட்கள் இனியெந்தத் தோழனைத் தோழியை அண்ணனைத் தம்பியை அக்காவையென எங்கள் வீரங்களைத் தன்னோடு கூட்டிப் போகப்போகிறது...? 29.02.09
  21. மூசுமலை பேசவில்லையோ துறைமுகத்தில் அனலெழுந்து வீசவில்லையோ.....!!!!!!!!!!!!
  22. லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 27.02.2009 அன்று விமானக்குண்டுத் தாக்குதலால் வீரச்சாவடைந்தார். 3ம் ஆண்டு கடந்த நினைவுநாளில் இன்று அருணாண்ணா பற்றிய பதிவுகள் சில:- கொள்ளைபோன கனவும் ஓராண்டு நினைவுகளும் ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம் உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில் நீ எத்தனையோ அடையாளங்களாய்..... தேசம் தேசியம் என்றெல்லாம் கனவுகள் நிரம்பியல்லவா உனது கடிதங்களை எழுதினாய்...! ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும் உரமூட்டி உரமூட்டியல்லவா உன்னைத் தீட்டிக்கொண்டாய்....! உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும் காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில் எங்கள் கோட்டைகள் சிதைவுறத் தொடங்கியது.... எங்கள் கொள்கைகள் நலிவுற்றுச் சாகத் தொடங்கிய நாளில் நீ ஞானிபோய் சொன்னாயாம்.... மேமாத முடிவுகளைத் தைமாதமே உரைத்த நீ மாசி27 கிபீரடியில் உன் கொள்கையும் இலட்சியமும் தமிழீழ தேசத்தின் கனவுடனே கரைந்து போனது.... நீ கண்ட கனவும் உன்போல் ஆயிரமாயிரம் பேரின் கனவுகளும் கொள்ளைபோய்விட்டன..... தடுப்பு முகாம்களிலும் அகதி முகாம்களிலும் அள்ளுண்டு அரியுண்டு அனைத்துமே பூச்சியத்தில் போய் நிற்கிறது. வாழ்வோடு உன்னில் பாதியானவள் - உன் உயிரின் துளியான உன் குழந்தை உனது வயதான பெற்றோர்கள் உன்னை நேசித்த நாங்கள் எல்லோரும் நீயிருந்தால் நீயிருந்தாலென்று எத்தனையோ விதமான கற்பனைகள் எங்களுக்குள்..... உன்னை வார்த்தாற்போல உன் செல்வமகன் அவன் மழலைக்குரலில் உன் குணங்கள் யாவும் தேங்கிக் கிடப்பது போல.... உன்னை எழுதுகிறான் உன்னைத் தேடுகிறான்.... உன் நினவுகளை எங்களோடு தேக்கி அவன் மழலைக்குரலில் நீயே வாழ்கிறாய்.... தொலையலையில் அழைக்கும் போதெல்லாம் என்னை அத்தையென்கிறான் உன் பிள்ளை அக்கா அண்ணா பற்றியெல்லாம் அக்கறைப்படுகிறான்..... அவன் குரல் கேட்டால் உன்னையே காண்பது போன்ற பிரமை.... நீ வந்தால்.... இந்த மகிழ்வுகள் எத்தனை நிறைவாயிருக்கும்...? (லெப் கேணல் அருணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு 27.02.2010) அருணாண்ணை வீரச்சாவு அதை நம்பவா…..? இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது....காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்.... தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு தெரியுதா? இல்லை... என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழனின் குரல் அது. குழந்தைகள் , குடும்பம் என விசாரிப்புகள் நீண்டு இறுதியில் வன்னிக் களமுனையில் போய் விழுந்தது கதை. செய்தியேதும் அறிஞ்சியளோ ? என்ன வளமையான செய்திதானே... சாவும் துயரும் இதைவிட என்னத்தை இப்பெல்லாம் அறியிறம்.....? என்ற எனக்கு… நேற்று "அருணாண்ணை" வீரச்சாவு என்றான் அந்தத் தோழன். உண்மையாவா ? நம்பிக்கையிழந்து மீளவும் கேட்ட எனக்கு அவன் மீளவும் சொன்னான். ஓம்.... 'அருணாண்ணை' இழந்தோமா உங்களை ....? அந்தத் தோழன் விடைபெறும் வரையிலும் ஒளிந்திருந்த அழுகையை வெளிப்படுத்தாமல் கண்களும் குரலும் என்னைக் காத்துக் கொள்கின்றன. அருணாண்ணை அருணாண்ணையின் குடும்பம் , அடுத்து அந்தக் களமுனையில் வாழும் தோழ தோழியர்கள் அவர்கள் குடும்பங்கள் என விசாரிக்கிறேன். மேலும் பலர் வீரச்சாவுகள் , விமானத்தாக்குதலில் இழப்புகள் என அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அடுத்ததென்ன நடக்கப்போகுது ? கேட்ட எனக்குச் சொன்னான். யாரையும் எதையும் சொல்ல முடியாத நிலமையிருக்கு…..எல்லாம் முடியப்போகிறது…..நம்ப முடியாதவைகள் எல்லாம் நடக்கப்போகிறது….. எல்லாம் முன்னறிந்த கடவுள் போல அவன் சொன்னான். ஏன் அப்பிடி ? அவன் அடுக்கிக் கொண்டு போன காரணங்களில் நியாயம் உண்மையென்று பல்லாயிரம் விடயங்களை ஏற்றுக் கொள்ளும்படியாக அவனது கதையிருந்தது. அழிபடாமல் வரலாறுகளைச் சேகரிக்க வேணும்….அதற்கான வேலைகளைச் செய்ய வேணும்…..அதற்கான வழிகள் பலவற்றையும் சொன்னான். மீண்டும் தொடர்புகளோடு இருப்போமென விடைபெற்றுக் கொண்டான். இமை விட்டிறங்காமல் முட்டிய கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அருணாண்ணை நினைவுகளை விட்டிறங்காமல் எங்களுக்குள் நிரந்தரமாகிப் போனாரா? நம்பவே முடியவில்லை. கதைப்பதை விட அதிகம் கடிதங்களில் தான் அருணாண்ணை பேசுவது நிறைய….2006 வரை அவ்வப்போது கடிதங்களோடு களம் நிலம் காவியம் மாவீரம் என அருணாண்ணை எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் கனமான பொழுதுகளில் மீளவுமான உயிர்ப்பையும் எழுச்சியையும் தரும் வல்லமை மிக்கவை. „மீழும் நினைவுகள்“ என அரசபயங்கரவாதம் செய்த இன அழிவுகளையெல்லாம் தன் எழுத்துக்களுக்குள் சேமித்து அவர் அனுப்பிய தொலைமடல்கள் கையெழுத்துப் பிரதிகள் ஏராளம். ஐரோப்பிய வானொலிகள் பலவற்றில் அருணாண்ணையின் எழுத்துக்கள் ஒலிவடிவாக உயிர்த்து அவலங்களையெல்லாம் ஆவணமாக்கியது. தமிழ்வெப்றேடியோ என்ற இணைய வானொலியின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் அருணாண்ணையின் ஆக்கம் இருக்காது போகாது. தமிழினம் மீதான சிங்களப்பயங்கரவாதப் புடுகொலைகள் 1956 முதல் 2001 கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் வரை எழுதிய ‘மீழும் நினைவுகள்‘ இன்றுவரையும் மீட்கப்படக் காரணமாய் தனது எழுத்துக்களால் பதிந்த ஒரு போராளி. போர்க்குணம் மிக்க அந்த மனிதனுக்குள் அரசியல்ஞானம் உலகியல் விஞ்ஞானம் என எதைக்கேட்டாலும் இலகுவாய் புரிவிக்கும் திறன்மிக்க ஆழுமையென அருணாண்ணையின் அமைதியான தோற்றத்திற்கும் பின்னாலும் பேச்சுக்குப் பின்னாலும் ஆல்போல் விழுதேற்றிப் பரவியிருக்கிறது. சட்டென்று மூக்குநுனியில் நிற்கும் அவரது கோபம்….சொன்ன வேலையை சொன்ன நேரத்துக்குள் செய்து கொடுக்கப்படாவிட்டால் தனது அமைதியால் அதையுணர்த்தி அடுத்த வேலையை அவர் கேட்கும் அவகாசத்துக்கு முன்னால் செய்வித்துவிடுகின்ற சாதுரியம் எல்லாம் அருணாண்ணையின் ஆழுமை தான். 2001 அக்கினி கீல நடவடிக்கையில் இலங்கையரச படைகள் ஆயிரமாயிரமாய் செத்துடிந்து வல்லமை பொருந்தியதாய் நம்பப்பட்ட அரச இராணுவபலம் புலிகளின் காலடியில் விழுந்தபடியிருக்க ஒரு கடிதம் எழுதியிருந்தார்…..அந்தக் களமுனையின் நுனியிலிருந்து களமாடிக் காவியமான தனது தோழர்கள் பற்றியும் உலகு அந்தக்கள முனையை எப்படிப் பார்க்கப்போகிறது என்பதையெல்லாம் தனது எழுத்துக்குள் நிரப்பியனுப்பிய நீலக்கடித உறைக்குள் நான் கண்டது ஒரு சாமானியக் குணத்தையல்ல…..ஒரு போராளியின் இதயத்தை….. அக்கடிதத்திலிருந்து சில வரிகள் இவை…… உலகே வன்னிக்கு உலாப்போய்வரக் கிடைத்த சமாதான காலம் ஊர் போன போது அருணாண்ணையைச் சந்தித்தது கதைத்தது சேர்ந்து உணவருந்தியது மாவீரர் துயிலிடங்கள் சென்றது என நினைவுகள் யாவும் அருணாண்ணையுடனான அந்து நாட்களைத்தான் மீளமீளக் கொண்டு வந்தது. தனது தோழர்கள் தனது தொடர்பில் உள்ளவர்களென அருணாண்ணையை நேசிக்கும் அனேகருக்கு எங்களை அறிமுகம் செய்து அவர்களுடனான உறவுகளை ஏற்படுத்தித் தந்து விட்டதெல்லாம் ஒருநாள் இப்படி இழந்து போவதற்கா…..? மறுமுறை சந்திப்பதாய் பயணம் சொல்லிய அந்தக் கடைசிச் சந்திப்பு……வன்னிப் பெருநிலப்பகுதியிலிருந்து வவுனியா வர வெளிக்கிட்ட நேரம்….பிள்ளைகள் ஒவ்வொருவராய் மாமா அக்கா அன்ரி அண்ணாவென விடைபெற்று கடைசியில் அருணாண்ணையிடம் விடைபெறப் போனார்கள். பிள்ளையள் நல்லாப்படிச்சு கெட்டிக்காறரா எங்கடை நாட்டுக்குத் திரும்பி வரவேணுமென்ன….. எனச்சொல்லி என் மகன் பார்த்திபனை கட்டிப்பிடித்துக் கொஞ்சினார். எனது மகள் வவுனீத்தா மட்டும் ஏதோ கோபித்துக் கொண்டு நின்றாள். மாமாக்குச் சொல்லீட்டு வாங்கோம்மா…. என்ற எனக்குப் பின்னால் வந்து நின்றாள். என்னம்மா என்ன சொல்லீட்டு வாங்கோவன்….. இல்லையென்பதைத் தலையசைப்பால் உணர்த்தினாள். ஏன் ? என்னம்மா ? மாமா மருதன்மாமாவைப் பேசினவர். அதான் நான் அவரோடை கோவம். ஆக்களைப் பேசக்குடாது…அவருக்ககொண்டும் தெரியாது……என்றாள். காலையில் ஏதோ அருணாண்ணை சொன்னவிடயமொன்றை மருதன் மறந்து போனதற்காக விழுந்த பேச்சு அது. அது மாமா சும்மா பேசினவரென்னை….என மருதன் சொன்ன சமாதானத்தையும் அடம்பிடித்தாள். பிள்ளையைக் கொண்டு போய் யாழ்ப்பாணத்தில விட வேணும் கனபேருக்குப் பாடம் நடத்தப்பிள்ளைதான் சரி….என்றான் இன்னொரு போராளி….. இறுதியில் எல்லாரும் சேர்ந்து அவளைச் சமாதானம் செய்து வாகனத்தில் ஏற்றிவிட்டு கையசைத்து விடைதந்து அனுப்பி வைத்தனர். மாலையில் அருணாண்ணையின் இருப்பிடம் வந்து சேரும் போது பிள்ளைகளை ஒருதரம் மோட்டார் சயிக்கிளில் ஏற்றிச் சுற்றி அவர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் ஒரு மாமாவாய் அருணாண்ணை எத்தனையோ அவதாரங்களாய்……பணம்மட்டுமே குறியாய் கடிதங்களால் குதறியும் காசைமட்டுமே கறந்த உறவுகளின் சபித்தலால் சோர்ந்து போய்விடும் வேளைகளில் அருணாண்ணைக்கு அதையெல்லாம் கடிதங்களாய் எழுதுவேன். எனது கடிதங்களுகெல்லாம் தனது பதில்களால் துணிவையும் மீண்டும் எழுகைக்கான எழுத்துக்களாக எழுதிய கடிதங்கள் யாவும் ஒரு நல்ல தோழமையின் அண்ணணின் ஆதரவைத் தரும் வல்லமை மிக்கவை…..எதை மறந்து எதை நினைத்து……இனி எங்கள் அருணாண்ணையை எங்கே தேட…… ஆட்கள் வந்து சந்தித்துச் செல்லவென அமைக்கப்பட்ட ஒற்றையறை மர நிழலில் பேசியவை……பகிர்ந்தவை…….அவர் அனுப்பிய வைத்த ஈழநாதம் வெள்ளிமலர்…..முதல் முதலாகப் பதிப்பித்த “சாள்ஸ் அன்ரனி“ படையணியின் சிறப்ப நூல் என்னையும் வந்தடைய வழிசெய்த அருணாண்ணையிடமிருந்து விடைபெற்று அவரை அவரது தோழர்களை நினைக்க நேசிக்கவென நிறையவே அறிமுகங்கள் தந்த அந்தத் தோழனின் ஆழுமையைச் சொல்ல பல்லாயிரம் பக்கங்கள் நீட்ட வேண்டும். தொடர்ந்த தொலைபேசி உரையாடல்….கடிதங்கள்…..என தொடர்ந்தது உறவு. என் குழந்தைகளின் நினைவுகளுக்குள் நிற்கும் பலருக்குள் அருணாண்ணைக்குத் தனியிடம் உண்டு. எங்கே நின்றாலும் மறக்காமல் பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்துமடல் அனுப்ப மறப்பதில்லை. யார் அனுப்புகிறார்களோ இல்லையோ அருணாண்ணையின் வாழ்த்துமடல் வந்தால் போதும் என்ற நிலைக்கு என் குழந்தைககளின் மனசுக்குள் குடியிருந்த இராஜகுமாரன் அருணாண்ணை. பிள்ளைகளுக்குத் தனித்தனியே கடிதம் எழுதி அவர்களின் கடிதம் மாமாவாகி…….எங்களுக்கும் கடிதம்மாமாவென்றே நினைவுகொள்ள வைத்த அருணன் என்ற ஆழுமை……27.02.09 அன்று நிரந்தரமாய் பிரிந்துவிட்டதாய் வந்த செய்தி…..செய்தி கேட்டதும் என் மகன் பார்த்திபன் உடைந்து கலங்கியதும்…மகள் வவுனீத்தா மெளனமாகி அருணாண்ணை எழுதிய கடிதங்களை ஒவ்வொன்றாய் எழுத்துக்கூட்டி வாசித்ததும்…..மாவீரர் துயிலிடத்தில் மாமாவை சந்திப்போமென்று சமாதானம் கூறியதும்……பொய்த்து எல்லாம் எங்கள் கைகளைவிட்டுத் தொலைவாகிக்கிடக்கிறது…… காலம் அருணாண்ணையையும் குடும்பமாக்கி ஒரு குழந்தைச் செல்வத்துக்குத் தந்தையுமாக்கியது……அந்தச் செல்வத்தைச் சிரித்தபடி தூக்கி வைத்திருந்த படம் மட்டும்தான் இன்று அருணாண்ணையின் ஆழுமையைச் சொல்லியபடி நினைவுகள் நீண்டு விரிந்து நிழல்பரப்பிக் கிடக்கின்றன…… 03.07.09
  23. தாத்தா வயசாகீட்டுது நண்பா ஞாபகம் இருக்கட்டும்.
  24. மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம் பகைவீடு துயில்கின்ற விடிகின்ற நேரம் புயலாகித் தமிழீழப் புலியாகிச் சென்றீர் பூனகரில் நிலையான பகையாவும் வென்றீர். பூனகரி நாயகரின் நினைவுப்பாடல். http://www.tamilnews24.com/parthipan/nesakkaram/chiddu/malaimeekam.asx
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.