Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9084
  • Joined

  • Days Won

    14

Posts posted by யாயினி

  1. On 7/2/2024 at 16:19, ஈழப்பிரியன் said:

    தங்கச்சி எனக்கு நித்திரை ஒரு கொடை. படுத்தால் சிறிது நேரத்தில் தூங்கிவிடுவேன்.

    இடையில் எழும்பி சிறுநீர் கழிக்க போய் வந்து படுத்தால் உடனேயே தூங்கிவிடுவேன்.

    ஆனால் நான் எழும்பி போய்வர மனைவியின் தூக்கம் அதோடு சரி.

    urinary tract infection,bladder stone... etc...எதற்கும் குடும்ப வைத்தியரோடு ஆலோசித்துப் பாருங்கள்.ஏன் எனில் வயது வந்தவர்களுக்கு இதர நோய்களின் அறிகுறிகள் பற்றி  வைத்தியர்கள் ஆரம்பத்தில் சொல்ல மாட்டார்கள்...ஓரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் இரண்டு 2,3தடவைகள் வைத்தியசாலைக்கு அலைந்த பின் தான் உமக்கு இது பற்றித் தெரியாதா என்று கேட்பார்கள்...? சிலவேகைளில் கூடப் போற பாவத்திற்கு அதாவது குடும்ப உறுப்பினர்கள். பேச்சும் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

    • Haha 1
  2. 7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

    இந்த கனடாக்காரர் யாரெல்லாம் ஊர் வர போறிங்கள் என்று சொன்னால்  சுகமா இருக்கும் 

    இன்னும் சில மாதங்களின் பின் கொழும்பு மட்டும் வர கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.அங்கு அவசரமாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் சில இருக்கிறது..பார்க்கலாம்.✍️

    • Like 1
  3. 14 hours ago, உடையார் said:

    கனடா நபர்கள் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் காப்புறுதி செய்துவிட்டு ஊருக்கு போனல் நல்லது👍🤣

     கனடாகாருக்கு  காப்புறுதி முக்கியம் என்று அண்மையில் அறிந்து கொண்டேன்.. இனி மொன்றியல் பக்கத்தால் காது செய்தி வந்தால் தான் உண்மையா அல்லது பொய்யா என்று அறியலாம்.😆

  4. எதுவுமே நிரந்தரமல்ல
     
    சமீபத்தில் வலைதளங்களில் பார்த்த ஒரு வீடியோ க்ளிப் மனத்தை வலியில் தள்ளியது. அதில் புகழ்பெற்ற திரைப்பட பாடகி திருமதி. பி. சுசீலா பேசியிருந்தார். அது:
     
    "செத்துப்போயிடலாமான்னு இருக்கு. சாவு நம்ம கையில இல்லை. கடவுள் எப்ப கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான். ஒரு ஆர்டிஸ்டு உயிரோடு இருக்கறப்ப யாரும் பார்க்கறதில்லை சார். பாட முடியாம இருக்கிறேன். வாய்ஸ்ம் இல்லை, சக்தியும் இல்லை. எண்பது வயதுக்கு மேல அதிகமாயிடுச்சு. யாராவது வந்து கேட்கிறாங்களா. சுசீலாம்மா சரஸ்வதிதேவி, மேல் உலகத்திலிருந்து கீழே வந்தவங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. சரஸ்வதிக்கு உடுத்தறதுக்கு துணி வேணாமா? சாப்பிடறதுக்கு பணம் வேணாமா? வீட்டில வளர்க்கிற நாய்க்குகூட வேளாவேளைக்கு சாப்பாடு போடுவாங்க. தேசத்துக்காக நாங்க எவ்வளவு பண்ணறோம். எங்களுக்கு என்ன பண்ணிச்சு தேசம்? கவர்மெண்ட் எங்களை ஜெயில்ல வைப்பாங்களா? வீடு கூட ஜெயில் மாதிரிதான் இருக்கு. இருக்கு! சாப்பிடறதுக்கு இருக்கு! பிச்சை எடுக்கறதுக்கு இன்னும் . . . . . ", இப்படி பேசிக்கொண்டே சென்றார்.
     
    பல மொழிகளில் நாற்பதாயிடம் பாடல்களுக்கு மேல் பாடியவர். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பாடி வந்துள்ளார். அந்த கானக்குயிலின் குரல் பல நாட்கள் நம் கவலைகளை மறந்து உறங்க வைத்துள்ளது. தென்னிந்தியாவில் பி. சுசீலாவின் குரலை கேட்காமலோ, முணுமுணுக்காமலோ ஒரு நாள்கூட நாம் கடந்துவிட முடியாது. தவிர்க்க முடியாத இசையரசியாக வாழ்ந்தவர், இன்று தொலைந்துபோன தன் முகத்தை இன்றைய சமுதாயத்தில் தேடிக்கொண்டிருக்கிறார். இவரைப் போலவே தன் முகத்தை தொலைத்த பல பெரிய மனிதர்களை இன்றும் பார்க்கிறோம். சிலர் வெளிப்படையாக தனது தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பலர் இன்னமும் 'முன்னால்' சிந்தனையோடு இந்நாளும் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.
     
    சமீபத்தில் கிராமத்து கோவிலில் ஒரு பெரியவரை சந்தித்தேன். நெற்றியில் விபூதிப்பட்டை. பார்ப்பதற்கு எளிமையான தோற்றம். அவரின் படிப்பறிவை அனுமானிக்க முடியாத தோற்றம். மெதுவாகப் பேச்சுக்கொடுத்தேன். அவர் சொன்ன விஷயங்கள் என்னை ஆச்சர்யத்தில் தள்ளியது. அவர் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
     
    "நான் சர்வீஸ்ல இருக்கும் போது என்னைச் சுத்தி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். யாரைப் பார்த்தாலும் இவனுக்கு நம்மைவிட அதிகம் தெரியாது என்று நினைக்கத் தோன்றும். சிறிய தவறுக்கும் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று தோன்றும். கோபமே பணியாளர்களை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதம் என்று நினைப்பேன். பணியின் கடைசி நாளில் கல்கத்தாவிலிருந்து ரசகுல்லா வாங்கி வந்து அழகாக பேக் செய்து எல்லா பணியாளர்களின் மேஜைக்கும் அனுப்பிவைத்தேன்.
     
    மாலை பிரிவு உபசார விழா நடந்தது. அது முடிந்ததும் என் இருக்கைக்கு வந்து கடைசியாக ஒரு முறை அமர்வதற்காக வந்தேன். அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய மேஜை முழுவதும் ரசகுல்லா நிரம்பியிருந்தது. யாருக்கெல்லாம் நான் கொடுத்தேனோ, அவர்கள் எல்லாம் மேஜையின் மீது வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் கோபத்தை வெளிபடுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இந்த நாளை நான் எதிர்பார்க்கவில்லை. பிறகு அங்கிருந்து வந்து இந்த கிராமத்தில் தங்கிவிட்டேன். என்னை மறைத்துக்கொள்ள இந்த கிராமமும், பக்தியும் எனக்கு உதவுகிறது, என்றார் அந்த மனிதர்.
     
    எல்லாம் முடிந்தபிறகு உணர்ந்துகொள்வது அடுத்தவரின் வாழ்க்கை பயணத்திற்கு ஒரு பாடமாக உதவலாம். அது நமக்கு எந்த வகையிலும் உதவாது.
     
    அட்டென்ஷன் சீக்கிங் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தனிமை, வருத்தம், தன்னம்பிக்கை இழந்த நிலை, இன்னும் சிலருக்கு பொறாமை, இவையெல்லாம் வயது முதிர்ந்தவர்கள் பலருக்கு இருப்பதை பார்க்கிறோம். அவர் குடும்பத்தோடுதான் இருக்கிறார். அதெப்படி தனிமை என்று சொல்ல முடியும்? உண்மையில் அதுவும் தனிமைதான். சுற்றி பலர் இருந்தாலும், அந்த கூட்டத்தினிடையே தன்னை தனிமையாக உணரும் நிலை அது. ஒரு காலத்தில் எதையெல்லாம் சாதனை என்று நினைத்தோமோ அவையெல்லம் இன்றைய நாளின் நினைவுகளாய், சோதனைகளாக மாறிப்போயிருக்கும். ஒரு குட்டிக்கதை.
     
    ஒர் முதிர்ந்த அரசன். வயது தொன்னூறு. ஒருநாள் இளவரசன் அவரிடம் வந்து,
    தந்தையே! எனக்கு ஐம்பது வயதாகிவிட்டது. எல்லோரும் என்னை இளவரசே என்று தான் அழைக்கிறார்கள். எனக்கு இது வருத்தமாக இருக்கிறது. நீங்கள் அடிக்கடி, 'பதினெட்டுவயதில் அரசனாக முடிசூட்டிக்கொண்டேன்', என்றுபெருமையாக சொல்வீர்களே! அதே போன்ற பெருமை எனக்கு கிடைக்கவில்லையே! எனக்கு எப்போது முடிசூட்டப்போகிறீர்கள்? என்று கேட்டான்.
     
    அரசன் பதிலளித்தான்.
     
    மகனே! பல காலங்களுக்கு முன் ஒரு சாதுவை சந்தித்தேன். நான் நூற்றி ஐம்பது ஆண்டுகள் வாழ்வேன் என்று எனக்கு வரமளித்திருக்கிறார். அரசன் என்ற பதிவியில்லாமல் நூற்றி ஐம்பது ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. ஆகையால், உன்னுடைய ஆசையை விட்டுவிடு என்று சொன்னான் அரசன்.
     
    அதிர்ந்துபோனான் இளவரசன். அடுத்த நாள் காலை. தனது ஆதரவாளர்களுடன் அரண்மனைக்குச் சென்றான். தூங்கிக்கொன்டிருந்த அரசனை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தான்.
     
    இரண்டு வருடங்கள் ஓடிப்போனது. அரசனை சந்திக்க சாது வந்தார்.
     
    'சாதுவே! என் நிலையைப் பார்த்தீர்களா? இந்த நாட்டையும், மக்களையும் சிறப்பாக ஆட்சி செய்தேன். ஆனால், இன்று வீட்டுச் சிறையில் இருக்கிறேன். எனக்காக மக்கள் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், யாரும் குரலெழுப்பவில்லை', என்று வருத்தப்பட்டார்.
    அதோடு நிற்காமல் தான் செய்த சாதனைகளையெல்லாம் சாதுவிடம் சொல்லி புலம்பினார்.
     
    'சாதுவே! என் ஆயுள் நூற்றி ஐம்பது வருடங்கள் என்று வரமளித்திர்கள். அன்று அது வரமாகத் தெரிந்தது. இன்று அது சாபமாகத் தெரிகிறது. எந்த முக்கியத்துவமும் இல்லாமல் எப்படி அடுத்த அறுபது ஆண்டுகள் உயிர்வாழ்வது? என்னுடைய மனைவிகள் எல்லோரும் இறந்து போய்விட்டார்கள். என் மகன் என்னை புறக்கணித்துவிட்டான். நான் உங்களிடம் வரம் கேட்கும் போதே அந்த வரத்தில் ஒளிந்திருக்கும் இந்த மோசமான நிலையை எனக்கு உணர்த்தியிருக்க வேண்டாமா? நீங்கள் எனக்கு அளித்தது வரமல்ல. சாபம்', என்று வருத்தப்பட்டான் அரசன்.
     
    'அரசனே! ஒரு மனிதனின் ஆயுட்காலம் வயதோடு தொடர்புடையது. அதில் குறிப்பிட்ட சில வருடங்களை சாதனைக்காலம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல, அந்தக்காலம் நீங்கள் செய்த சாதனைக்கானது என்றால், அந்தச் சாதனைகளையெல்லாம் நீங்களே செய்தீர்கள் என்றால், இன்று அது உங்களுடனே இருக்க வேண்டுமல்லவா? அப்படி இல்லையே! இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள். அந்த சாதனைகளை செய்வதற்கான காலத்தின் கருவியே நாமெல்லாம். உயர்ந்த நிலையை அடையும் போது,
     
    இது நிரந்தரமானதல்ல என்பதை நீங்கள் உணரவில்லை. "நல்ல நிலையில் இருக்கும் போது இப்படி ஒரு மோசமான நிலை நமக்கு வரும் என்று கணிக்கத் தவறியவனும், மோசமான நிலையில் இருக்கும் போது வாழ்ந்து முடித்த நாட்களே உயர்ந்தது என்று கணக்குப்போடுபவனும் நிம்மதியாக வாழமுடியாது". ஆகையால், பிரச்னையோ அல்லது அதன் தீர்வோ எல்லாமே நம் மனத்தில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுமே மாயைதான். இந்த உண்மையை புரிந்துகொண்டவர்கள் இறந்த காலத்தை உயர்ந்த காலம் என்று சொல்லமாட்டார்கள்.
     
    நிகழ்காலத்தை ரசிக்கின்ற ஒருவனே வாழ்க்கையின் கடைசி நாள்வரை நிம்மதியாக வாழ்கிறான். இதை உணராதவனின் வரங்கள் எல்லாமே சாபமாகிறது, என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது
    அரசன் சிறையில் இருக்கும் நிகழ்காலம் ரசிக்க வேண்டிய விஷயமல்ல. ஆனால், இந்த நிலையை இறந்தகாலத்தில் உணர்ந்திருந்தால், அதை அரசன் தவிர்த்திருக்கலாம். இராமாயணத்தில், தசரதன், தன் தலையில் முதல் நரை முடியைப் பார்த்தவுடன், ராமனுக்கு முடிசூட்ட விரும்பினான் என்று படித்திருக்கிறோம். இருக்கும் வரை தான் மட்டுமே அனுபவிக்கவேண்டும் என்று தசரதன் நினைக்கவில்லை. தன்னைச் சார்ந்தவர்களை அமர்த்தி அழகு பார்க்கும் பக்குவம் அவனிடம் இருந்தது. இந்தப் பக்குவம் மொகலாய பேரரசர் ஷாஜகானிடம் இல்லை.
     
    அதனால்தான் அவனுடைய கடைசி நாட்களை சிறையில் கழிக்கும் நிலையை அவனது மகன் ஒளரங்கசீப் ஏற்படுத்தினான்.
    இந்தக் கதை நமக்கு உணர்த்தும் விஷங்கள் இரண்டு.
     
    ஒன்று, உயர்ந்த நிலயாகக் கருதப்படும் நிலையிலிருக்கும் போது அது நிரந்தரமல்ல என்பதை உணருதல்.
     
    மற்றொன்று, தனக்கு மட்டுமே எல்லாக் காலங்களிலும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது.
     
    "அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர்", என்று இதற்கு ஒரு பெயரிட்டு உலவியல் ரீதியாக இதை அணுக வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். இந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் கடந்துதான் தீரவேண்டும். இந்த நிலையை கடப்பதற்கு பெரும்பாலானவர்களுக்கு உதவியாக இருந்தது இறைநம்பிக்கை, பக்தி. உயர்ந்த நிலை என்று சொல்லப்பட்ட காலங்களிலும், நலிவடைந்த நிலை என்று சொல்லப்பட்ட காலத்திலும் நம்முடன் இணைந்திருக்கும் ஒரே இணைப்பு பக்தி.
     
    ஒன்றை உதற வேண்டுமென்றால், மற்றொன்றை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். எந்த நேரமும் இறைநம்பிக்கையை பிடித்துக் கொண்டவனுக்கு மற்ற விஷயங்கள் நிரந்தர பிடிப்பை ஏற்படுத்தாது.
     
    திருமதி. பி. சுசீலாவின் இன்றைய நிலைக்கு என்ன பெயர் வைத்தாலும் சரி, அல்லது அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர் என்றே வைத்துக் கொண்டாலும் சரி, அவர் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குறியது. ''உயர்ந்த மனிதன்'' என்ற திரைப்பத்தில் அவருக்கு தேசிய விருதுபெற்றுத் தந்த அந்தப் பாடல் வரிகள் என்றும் இளமையானவை. அவை நம் நினைவிற்கு வருகிறது. முகம் தெரியாத காதலனுக்காக பாடுவதாக அந்தப்பாடல் காட்சியமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலுக்காகத்தான் பின்னணி பாடகர்களுக்கான முதல் தேசிய விருதைப் பெற்றார் திருமதி. பி. சுசீலா. ஐந்து முறை தேசிய விருதும் பெற்றவர்..
     
    நாளை இந்த வேலை பார்த்து ஓடிவா நிலா . . .
    இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.. . . .
    தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு. . .
    தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு . . .
     
    திருமதி. பி. சுசீலாவின் இன்றைய தனிமைக்காக தென்றல் நின்று போனாலும் வருத்தத்தோடு அதை ஏற்றுக்கொள்கிறோம். இனிவரும் நாட்களில் அவருக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் இறைவன் கொடுக்கட்டும். அதற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
     
    (Bala shares..........))
    May be an image of road, fog and street
     
     
     
     
    • Like 5
    • Thanks 1
  5. On 6/2/2024 at 12:06, ஈழப்பிரியன் said:

    கடந்த 10-15 வருடமாக ஒரே போராட்டம் தான்.

    குளிசை இல்லாமல் கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருக்கிறேன்.

    கொஞ்சம் கூடும் குறையும் சராசரி 6.0 இல் நிற்கிறது.

    இரவில் அதிக நேரம் தூக்கமில்லாது இருப்பதும் இவற்றுக்கு ஒரு காரணம்..நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள்..மேலதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்திய குழந்தை நல வைத்தியர்கள் அருண்குமார் மற்றும் சிவபிரகாஸ் போன்றவர்களும் இவ்வாறன விளங்களை யூருப்பில் கொடுத்திருக்கிறார்கள் போய் பார்க்கலாம்.
    இரவு ஏழு, எட்டு மணிக்கு மேல் எதுவும் குடிக்காமல் நித்திரைக்கு போக முயற்சியுங்கள் அய்யா.✍️

    • Thanks 1
  6. இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகத் தான் இரண்டாம் பாகம் பதிவிடப்பட்டுள்ளதால் மிகுதி எப்போ வரும்... யாழின் 26 ஆண்டு பகுதி காத்திருக்கிறது....🖐️

  7. ஆக்கங்களை இணைப்பதற்கு உரிய 26 ஆம் பகுதியியும் தயார் படுத்த, பட்டு இருக்கிறது..ஆகவே அந்தப் பகுதிக்குள் உங்கள் ஆக்கங்களை  பதிவிட்டால் சரி என்று நினைக்கிறேன்..நன்றி.✍️

  8. மீனாச்சிபாட்டி(சிறுகதை)
     
    பாட்டிக்கு ராத்திரிபூராம் தூக்கம் வரல பொறண்டு பொறண்டுபடுக்குது குளிருவேற வீட்டுல எட்டாவது மகனோடபொண்டாட்டியும் ரெண்டுபேரப்புள்ளைகளும் நாளைக்கி ஆர் ஆரெல்லாம் வருவாக அப்பத்தான்னுகேட்டு தேஜா வருவாளா கோபிவருவானான்னு கேட்டுகளைச்சுப்போயி இப்பத்தான் அசந்து தூங்க ஆரம்பிச்சுதுக
    மருமக அவ பேத்திதான் அம்மாயி உங்கமகன் அதான் என் வீடுக்காரரு நாளைக்கி வரலயாம் நு சொல்லிட்டு படுக்கப்போனா. ஏம்மா மாவெல்லாம் ஆட்டிவைச்சிட்டயா சட்ணிக்கி சாமானெல்லாம் வாங்கிவைச்சிட்டயான்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு மீனாட்சிபாட்டி அதுக்கு உன் பிள்ளக பேரம்பேத்தி அம்புட்டுப்பேரும் வாராகன்னவன்ன ஒன்னபுடிக்கமுடியல வீட்டுல இருக்குற பேரம்பேத்திக எல்லாம் பெருசாத்தெரியலன்னு கிண்டல் பண்ணா மருமககாரி... வெள்ளனா எல்லாரும் வந்துருவாக எந்திரிச்சி காப்பிகீப்பி போட்டுக்குடுக்கனும் சரிசரி போயிப்படுனு சொல்லிச்சி பாட்டி
    நாளைக்கி ஆராரு என்ன என்ன பண்ணுவாகன்னுன்னு யோசிக்க ஆரம்பிச்சது
    போனவாரம் பாட்டியோட மூத்தமகன் முத்தையா போன் பண்ணான் அவனோட மூத்தமகன் குலதெய்வத்துக்கு பூசைபோட வரப்போறதா .ரெட்டக்கெடா வெட்டி பூசைபோடவேண்டுதலாம்
    அவன் ஒலகம்பூராம் கப்பல்ல சுத்துறவன் போனவருசம்தான் கலியாணமாச்சு இன்னும் அவன்பொண்டாட்டி வயத்துல புழுப்பூச்சி தங்கல.பூசைபோட்டாவது சரியாகும்ன்னு நெனச்சான்
    அப்ப ஆராருக்குசொல்லனும்னு கேட்டான் மகன்.பாட்டி நம்ம சொந்தங்கதான் அதுலயேஅம்பதுபேரு வருது அப்புறம் கோயிலுக்குவாரவுகபோறவுக எல்லாம் சாப்புடுவாக எப்புடியும் நூறநெருங்கும் னுசொல்லிச்சி பாட்டி
    பாட்டிக்கு ஏழுமகன்க ரெண்டு மகளுக
    உள்ளூருல மூணுபேரு மெட்ராசில ரெண்டு பக்கத்து ஊருல ஒண்னு கோயம்புத்தூருல ஒருமக பரமக்குடில ஒருமக ன்னு துண்டுதுண்டாக்கெடந்தாக
    அவுக எல்லாத்தையும் இந்தபூசை ஒண்ணுசேக்கும்ன்னு நெனச்சா பாட்டி
    எல்லாத்துக்கும் சொல்லிட்டயான்னு கேட்டுச்சு மகன
    சொன்னேன் பரமக்குடி மக வரலயாம் கோயம்புத்தூரு மகளுக்கு ஒடம்புசரியில்லையாம்னு சொன்னான்
    சரிவா பாத்துக்கலாம்னுமுத்தையா. சொல்லிச்சி பாட்டி நம்பிக்கையோட
    எப்பதூங்குனோம்னு தெரியல பாட்டிக்கு
    ஆரோ காலத்தொட்டமாதிரி இருந்துச்சு முழிச்சிப்பாத்தாமுத்தையாகாலத்தொட்டுகும்புட்டுகிட்டுஇருந்தான் கூட அவன் சம்சாரமும் ரெண்டாவது பேரனும்... .எந்திரிக்க நெனச்சா முடியல எம்பது வயசாச்சே
    வாப்பான்னு சொன்னா மருமக கும்புட்டா
    பேரனும்வணக்கம் சொன்னான் எப்ப வந்தீகன்னுகேட்டா பாட்டி காலையில வந்துட்டோம்அங்கயேகுளிச்சிட்டோம்னான்.மகன்
    பேத்திய எழுப்பிவிட்டுச்சுபாட்டி
    சீக்கிரம் காப்பிய கீப்பியபோடு முத்து வந்துட்டான் இனி எல்லாரும் வர ஆரம்பிச்சிருவாகன்னா
    அவ காப்பிபோடபோனா
    பேரன் எனக்கு வேணாம்னுன்னான் மருமக சக்கரை கம்மியாகுடுன்னா
    பரமக்குடிதங்கச்சி என்னாசொல்லிச்சின்னு கேட்டுச்சுபாட்டி. அப்புடியே போன போட்டுக்குடுன்னுசொல்லிச்சி
    போனுல நீ கட்டாயம் வரனும் ஒன்னப்பாக்கனும்போல இருக்கு ஆத்தான்னுசொல்லிச்சி அந்தப்பக்கம் ஏதோசொன்னவன்ன அதெல்லாம் விடு நான் சொல்றேன் வந்தே ஆகனும்னு சொல்லிடுச்சு பாட்டி
    அடுத்து கோயம்புத்துருக்குப் போனப்பொடுன்னு சொல்லிச்சி போட்டுகுடுத்தவன்ன ஏம்மா பேரம்பேத்திய பாக்கனும் கூட்டிட்டு வரயான்னு கேட்டுச்சு மறுபேச்சில்ல
    வாரென்னு சொல்லிடுச்சு
    அதுக்குள்ள ரெண்டாவதுமகனோட மகன் வந்து அப்பத்தா எல்லாரும் வந்துட்டாகளான்னு கேட்டான் முத்தப்பாத்துட்டு வாங்க பெரியப்பான்னான்
    அவனோட அப்பா இப்ப இல்ல அவனுக்கு மூணு அக்காமாருக அவுகளயும் வரசொல்லியாச்சு வாரென்னாக
    மூணாவது மகனும் இப்ப இல்ல அவனோட மக மெட்ராசுல வேலபாக்குது அந்தப்பேத்தியும் வாரென்னுசொல்லிருச்சு மீதிபேரனும் பேத்தியும் உள்ளூர்தான்
    நாளாவதுமகனும் மெட்ராசுதான் அவன் வரலன்னுசொல்லிட்டான் வெளியூர்போறானாம்
    எப்புடிப்பாத்தாலும் முக்காவாசிப்பேரு வந்துருவாகன்னு சொல்லிச்சி பாட்டி
    முத்து பூசைக்கிசாமாஞ்சட்டு வாங்க டவுனுக்குப்போயிட்டு சாயந்தரமா வந்தான்
    அன்னிக்கி அமாவாசை மூணாவது மகன் இல்லாததால அங்க வெரதம் விட்டாகஅன்னிக்கி எல்லாரும் அங்கதான் சாப்பாடு.
    இதுக்குநடுவுல கெடாப்புடிக்கபோனவன் போன்பண்ணான் கருப்புக்கெடா எங்கயும் கெடைக்கலன்னு மணி சாயங்காலம் ஆறு
    என்னா பண்ணுறதுன்னு தெரியல கையப்பெசஞ்சான்முத்துபாட்டிசொல்லிச்சி ஒன் மச்சானக்கேட்டுப்பாரு அவனுக்கு இதெல்லாம் பழக்கம்னு.
    போனபோட்டு வெவரம் சொன்னான்
    கொஞ்சநேரத்துல அவன் போன் பண்ணான் திருமங்கலத்துக்குப்பக்கத்துல செங்கப்படை கிராமத்துல ரெண்டு கருப்புக்கெடா இருக்குறதா.
    ஒடனே ஒரு ஆட்டோவப்புடிச்சிக்கிட்டு கெளம்புனான் முத்து அவன்கூட ரெண்டு பேரன்களும் போனாக வழில மச்சான் ஏறிக்கிட்டான்
    ஒருவழியா செங்கப்படையில கெடாகெடச்சது அப்புடியே கோயில்ல கொண்டுபோயி கட்டிட்டு வந்தாக
    காலையிலே கெடா வெட்டியாச்சு
    ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாக மொதல்லவந்துது கோயம்புத்துரு பேத்திதான் இப்பவும் மாசமா இருந்தா அவளோடபுருசனோட மகனும் வந்திருந்தான் அப்புறமா பரமக்குடி மக வந்துச்சு இதுக்கு நடுவுல ப்பூசபோடுற பேரன் பொண்டாட்டி மச்சானோட வந்தான்
    அப்புறம் நண்டுஞ்சிண்டுமா பேரன் பேத்திக மகன்க மருமகளுக அக்கா தங்கச்சின்னு கோயிலு நெறைஞ்சிடுச்சு
    புள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டாம் குறுக்க நெடுக்கயுமா ஒடுச்சுக பாத்து புள்ளைகளா கீழ விழுந்துடாதீகன்னு பாட்டிசொல்லிச்சி
    ஒருபக்கம் கிடா பிரியாணி சக்கரபொங்கல் புளியோதர வெந்துக்கிட்டு இருந்துச்சு
    இன்னோருபக்கம் நாட்டுக்கோழிஅடச தனியா ஆம்பளைக தயார்பண்ணிக்கிட்டு இருந்தாக அது பொம்பளைக கைப்படக்குடாதுன்னு பழக்கம்
    மறுபக்கம் மட்டன் குழம்பு சுக்கான்னு தயாராகிட்டு இருக்கு வாசம் மூக்கத்தொளைக்கிது
    வந்தவுக எல்லாம் கதை பொறணி எல்லாம் பேசிக்கிட்டுஇருந்தாக கோயிலே கலகலப்பா இருந்துச்சு.
    மறுபக்கம் சாமிகளுக்கு அபிசேகம் அலங்காரம்ன்னு களகட்டிடுச்சு
    நெருக்கி எல்லாரும் வந்துட்டாக ஆனா கெடாப்புடிச்சிக்குத்த மச்சான் வரல
    அவுக ஊருல ஒரு கேதமாம் வரலேட்டாகும்ன்னாக
    மணி 12 ஆயிப்போச்சு இனிமே லேட்டுப்பண்ண முடியாதுன்னு பூஜையபோட்டாக சைவச்சாமிக்கி சைவ பூஜை அசைவச்சாமிகளுக்கு அசைவபூஜைன்னு கோயிலே சாம்பிராணி பத்தி வாசனையோட மட்டன் சிக்கனும்
    பிரியாணியும் மணத்துச்சுபூசை முடிஞ்சிச்சி.இப்போ எல்லாரும்
    பாட்டிய சுத்திநின்னாக
    பாட்டி ஒவ்வொருத்தரா கூப்புட்டு துண்ணூரு குடுத்துச்சு. மூத்தமகனும் மருமகளும் கால்ல விழுந்து வாங்கிக்கிட்டாக அப்புறம் பூசைபோட்ட பேரனும் அவனோட சம்சாரமும் கால்ல விழுந்தாக கொள்ளுப்பெரனோ பேத்தியோ சீக்கிரம் வரனும்ன்னு பாட்டி சொல்லும்போது கண்ணு கசிஞ்சிச்சு
    ரெண்டாவது மகனோட மகனோட மகன் வந்துகால்லவுழுந்தப்ப செத்துப்பொன மகன் நெனப்புவந்து அழுக ஆரம்பிச்சிடுச்சு. முத்தையா இவனுக்கு நல்ல ஆயுள குடுன்னுஅழுதுகிட்டே சொல்லிச்சி
    மூணாவதுமகனோட மகன் மகளுக மருமக எல்லாரும் மொத்தமா கால்ல வுழுந்தப
    மருகளை கட்டிப்புடிச்சி கண்ணீர் விட்டுச்சு
    அவளும் கண்ணீர்விட்டா போன புருசன நெனச்சு. பக்கத்துல நின்ன எல்லாருக்கும் கண்ணீர் முட்டுச்சு. முந்தானையில தொடச்சிக்கிட்டாக
    அப்புறம் நாலாவதுவராததை நெனச்சு ஏங்குச்சு அஞ்சாவது ஆறாவது ஏழாவதுன்னு பேரன் பேத்திகளுக்கு துண்ணூரு பூசிவிட்டுச்சு
    அப்புறமா மூத்தமக பரமகுடிக்காரியும் அவளோட மக மருமகன் வந்திருந்தாக அவுகளுக்கும் பிள்ளயில்ல
    அதநெனச்சி கண்ணீர்விட்டுச்சு
    ஒருவழியா எல்லாம் முடிஞ்சி சாப்புடப்போனாக சாப்பாடு திருப்திகரமா இருந்துச்சு. சக்கரபொங்கலும் புளியோதரையும் கிடாபிரியாணியும் சுக்காவும் கொஞ்சூண்டு கருவாட்டுக் கொழம்பும் கலக்கிடுச்சு. கோயிலுக்கு வந்துருந்த எல்லாரும் சாப்புட்டாக
    வெளில இருந்த பிச்சகாரவுக சாமியாருக எல்லாரும் சாப்புட்டாக அப்ப மச்சான் வந்தான் அவனும் சாப்புட்டுட்டு பேசிகிட்டு இருந்தான்
    எல்லாரும் கெளம்புறதுக்கு முன்னாடி பாட்டி சொல்லிச்சி எப்பயும் இதுபோல வருசத்துக்கு ஒருதடவையாவது வாங்க மக்கான்னு சொல்லும்பொது பாட்டி அழுதிருச்சு எல்லாரும் கண்ணுகலங்க தொடச்சிக்கிட்டே கெளம்புனாக
    அந்தகாலத்துல ஒம்போது புள்ளபெத்தமகராசி கண்ணுகலங்க வழியனுப்பிக்கிட்டு இருந்தா
    இனிமே எல்லாம் வார வாரிசுகளுக்கு இந்தக்குடுப்பின கெடையாது
    சித்தப்பா சின்னம்மா மாமா மச்சான் பெரியப்பா பெரியம்மா ஒண்ணுவிட்ட சகோதரன் சகோதரின்னு கெடையாது
    அடுத்த தலமொறல எல்லாரும் தனிதான் கூட்டமே இல்ல ஆரும் ஆலமரமா இருக்க முடியாதுஎல்லாம்ஒத்தப்பனமரம்போலத்தான் ந்னு நெனைக்கும்போதுஅவவிட்ட கண்ணீருல கருப்பசாமியே கண்ணீர் விட்டமாதிரி இருந்துச்சு
    இந்தக்கூட்டமான பழக்கம் இனிமே இருக்குமான்னு தெரியல நம்ம சொந்தங்கஎல்லாம் இப்புடி ஒண்ணுசேருமா இனிமேன்னு தெரியல
    இப்புடி எல்லாரும் ஒண்ணா சேந்து நம்மள வழியனுப்பனும் முத்தையான்னு கையெடுத்துக்கும்புடும்போது கண்ணீரால பாட்டியோட சேல நனைஞ்சது.
     
    கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்
    May be a black-and-white image
     
     
     
     
    • Like 4
  9. 44 minutes ago, இணையவன் said:

    சுவி அண்ணா நீங்கள் தந்த இணைப்பு வேலை செய்யவில்லை.

    இதே மாதிரியான ஒரு திரி ஏற்கனவே பல பக்கங்களோடு இருந்ததே அது எங்கே..இந்த திரி கடந்த வருடம் நவம்பறில் அல்லவா ஆரம்பிக்கப் பட்டு இருக்கிறது...🤔

  10. எப்படித் தான் விலையேற்றங்கள் ஏற்பட்டாலும் வெளி நாடுகளில் உள்ளவர்களை விட ஊரில் இருப்பவர்கள் விருப்ப பட்டதை அவ்வப்போது செய்து கொண்டே இருக்கிறார்கள்.ஊருக்கு போய் வந்தவர்களிடம் அங்குள்ளவர்களின் வாழ்வு முறை பற்றி கேட்டால் அந்த நாடே வேணாம்,  இருந்தது போல் நாம் இருக்கும் நாடுகளிலயே வாழ்ந்து விட்டு போவோம் என்ற நிலைப் பாடு தான் மனதில் இருக்கிறது..முதல் நாள் சமைத்த உணவையே மறு நாள் வைத்து சாப்பிட மறுக்கிறார்களாம்.நாம் இங்கு முடிந்தவரை கொட்டுவதை தவிர்க்கிறோம்.சூடாக்கி உண்பதையே நடை முறையில் வைத்திருக்கிறோம்..அப்படி இருக்கையில் ஊரில் செலவீனங்கள் கூடுவதை தவிர்க்க இயலாது தானே.

    • Like 1
  11. செல்லம்மாப்பாட்டி.     (சிறுகதை)
     
    செல்லம்மா பாட்டிக்கு வாடிக்கை யாளர்கள்ரஎல்லாம் சின்னப் புள்ளைங்க தான்
    காலங்காத்தால அஞ்சுமணிக்கி அடுப்புப்பத்தவைச்சி குழிப்பணியாரம் இட்லி சூடா பாசிப்பருப்பு சாம்பார் தேங்காசட்ணி காரச்சட்டிணியோட தெருவோரத்துல கடைபோட்டுருக்கும் சின்னபுள்ளக கொடுவாய் கூடக்கழுவாம
    தூக்குபோணியும் காசுமா வந்து நிக்கும்
    அப்பத்தா எனக்கு ரெண்டு இட்லி மூணுபணியாரம்ன்னு. அவுகளோட அம்மா மாருக செலபேரு கூட வருவாக செலபேரு புள்ளகிட்ட குடுத்து விட்டுருவாக. பல்லக் கூடவெளக்காம பிள்ளக பணியாரம் வாங்க வந்துடும்.
    சின்னபுள்ளகளுக்காகவே காரமில்லாத சாம்பார் சட்டிணி இருக்கும்
    காரசாரமா வேணுங்குறவுக காரச்சட்டிணி சுள்ளுன்னு தனியா இருக்கும் வாங்கிக்கலாம்.
    அம்புட்டும் அம்புட்டு ருசியா இருக்கும்
    வீட்டுல எல்லாராலயும் தெனம் இட்லி சுடமுடியாது. பச்ச புள்ளகளுக்கு செல்லம்மா இட்லிக்கடைதான் கைகொடுக்கும். அதேமாதிரி வயசானவுகளும் வந்து பக்கத்துல ஒக்காந்து சுடச்சுட வாங்கிச்சாப்புடுவாக
    ரம்சான் மாசத்துல மாத்திரம் சாயங்காலமும் கடை தெறக்கும் பாட்டி. நோம்பு தொறக்குற நேரத்துல இட்லி பணியாரம் மொத்த மொத்தமா வாங்கிட்டுப்போவாக பாய் மாருக
    அதேபோல மசூதிக்கும் வாங்கிட்டுப்போயி
    எல்லாருக்கும் வாசல்ல தானமாக் குடுப்பாகஅப்ப எல்லாம் நல்ல வருமானம் பாட்டிக்கு
    ஆனா என்ன மாவாட்டி இடுப்பு ஒடஞ்சுபோயிடும்.
    அப்பெல்லாம் கிரைண்டர் வரல . எல்லாம் கைலதான் ஆட்டனும்
    பாய்மாருக விசேசத்துக்குக் கூட வீட்டுல போயி இட்லி வடை பணியாரம் செஞ்சுகுடுக்கும். நல்லா கவனிப்பாக சேல துணிமணி காசெல்லாம் நல்லா குடுப்பாக.
    காலையில பத்துமணிக்கு வியாபாரம் முடிச்சிட்டு காசக் கொண்டுபோயி நாடார்கடைல மொதநா வாங்குன அரிசி பருப்பு உளுந்து காய்கறிக்கெல்லாம் காசக்குடுத்துட்டு அன்னிக்கி வேணுங்குறத வாங்கிட்டு வரும் பாட்டி. அப்புறம் ஊரைவைச்சிட்டு சாயங்காலமா மாவாட்டும்.
    கடையிலயே நெலவரத்தைபாத்துட்டு சோறுவடிக்கும் இட்லி பணியாரம் மீந்துபோச்சுன்னா அதுதான் அன்னிக்கிசாப்பாடு பாட்டிக்குக் மகனுக்கும்
    பாட்டி அவரோட புருசன் போனதில இருந்து இதை வைச்சித்தான் பொழப்பு ஓட்டுச்சு
    அவ்வளவு செரமத்துலயும் மகன மாவாட்ட விடாது. அதுதான் ஆட்டும். ஒடம்பு கிடம்பு அதுக்கு சரியில்லாமபோச்சுன்னா கடை தொறக்காது. சின்னபுள்ளக சாப்புடுறது
    ஒட்டுவாரொட்டி மாதிரி புள்ளைகளுக்கு நோவு ஒட்டிக்கிடும்னு சொல்லும்
    . பாட்டி கடதொறக்கலைன்னா சின்ன புள்ளகள அவுக அம்மா மார்களால சமாதானப்படுத்த முடியாது இந்தகஸ்டத்துலயும் மகன நல்லாப் படிக்கவைச்சாங்க பாட்டி. அவனும் நல்லாபடிச்சி நல்ல வேலைக்கிப்போனான்
    வேலைக்கிபோனதும் அவன் செஞ்ச மொதவேலை கடையமூடும்மா. நீ கஸ்டப்பட்டது போதும்ன்னு சொன்னான்.
    அதுக்கு பாட்டிசொல்லிச்சி வருமானத்துக்காக கடை வைச்சோம்தான். ஆனா அதைவிட முக்கியமானது அந்த சின்னபுள்ளக வயிறு ரொம்புறது. அந்த பாக்கியம் எல்லாருக்கும் கெடைக்காதுன்னு சொல்லுச்சு. அவனும் வேறவழியில்லாம கிரைண்டர் மிக்ஸி யெல்லாம் வாங்கிக்குடுத்தான். கடை ஓடிச்சி. அப்பத்தான் கலியாணம் பேசுச்சு பாட்டி மகனுக்கு. ந்ல்ல இடம் கெடச்சது. அவங்கபோட்ட ஒரே கண்டிசன் இட்லிக்கடைய மூடனும்றது
    இப்ப பாட்டியால ஒண்ணும் சொல்ல முடியல
    ஒத்துகிச்சி. கலியாணத்துக்கு மொதநாளு
    பெரிய விருந்து . விருப்பம்போல உணவு அதான்
    பப்பெட் சாப்பாடு . பொண்ணுவீட்டுல இருந்து ஏற்பாடு பண்ணிருந்தாக. பாட்டி மகன் கிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்டுச்சு. அந்த விருந்துல ஓரமா இட்லியும் பணியாரமும் வைக்கனும் அத நாந்தான் செய்வேண்ணு சொல்லிடுச்சு.
    அவனும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டான்
    விருந்தும் ஆரம்பிச்சிச்சு. விருந்துக்கு வந்த இவன் கூட வேலபாக்குறவுக சாம்பிளுக்கு சாப்பிட ஆரம்பிச்சு. அடாடா விருந்து அப்ப அப்ப நடக்குறதுதான் . பாட்டி இட்லி பணியாரம் வித்யாசமா .ரொம்ப நல்லாருக்கேன்னு சாப்பிட ஆரம்பிச்சு....வந்தவுகல்ல பாதிப்பேருக்குமேல
    இட்லி பணியாரம் பக்கம் வந்துட்டாக
    சீக்கிரமே தீந்துபோச்சு. விருந்துக்கு வந்தவுகளெல்லாம் இதைப்பத்தியே பேசுனாக
    பாட்டிக்கு ரொம்பச்சந்தோசமாஆச்சு.
    அங்க வந்திருந்த ஒரு முக்கிய பிரமுகர் சொன்னாரு. செஞ்ச தொழில மறக்காம இருக்குறது பெரிய விசயம். ஏன்னா செய்யிற தொழில்ல ரொம்ப புண்ணியம் தாரது இதுதான் அதுல கவுரவக்கொறச்சல் ஏதுமில்ல. மனசாறப் பாராட்டுறேன்னாரு.
    இதை ஒருத்தரு யூடுயூப்ல எடுத்து அப்லோடு பண்ணாரு. லைக்கும் கமெண்டும் குவிஞ்சிச்சி. பாட்டிக்கு ரொம்பசந்தோசமா ஆயிடுச்சி. இப்ப சம்பந்திக சொன்னாங்க பாட்டி தாரளமா கடை வச்சிக்கட்டும்னு.
    சீக்கிரமே பாட்டி இட்லிக்கடை தொறந்துச்சு அப்புடி கொஞ்சநாளு ஓடுச்சு ஒருநா செல்லம்மாப் பாட்டி செத்துபோச்சு அன்னிக்கி கடைதெறக்கல அப்பயும் ரெண்டு சின்னப்புள்ளக தூக்குப்போணியோட கடைக்கிட்ட நின்னுக்கிட்டு இருந்துச்சுக ஒரு அம்மா வந்துசொல்லிச்சு பாட்டி இனிமே கடதொறக்காதுன்னு
    அதுகளுக்குப்புரியல அதுல ஒண்ணு வீட்டுக்கேபோயிடுச்சு. அங்க எல்லாரும் அழுதுகிட்டு இருந்தாக. எதுக்குன்னு அதுக்குப்புரியல. அதுபாட்டுக்கு பாட்டிகிட்டபோயி பாட்டி எந்திரிச்சி வா வந்து இட்லிகுடு பசிக்குத்துன்னு சொல்லி அழுதுச்சு பாத்தவுக கண்ணு கலங்கிடுச்சு]
     
    கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்
    May be an image of 2 people
     
     
     
     
    • Like 1
  12. கவிஞர் பளநிபாரதியவர்களின் கவிதை  ஒன்று படிக்கும் போது இங்கு பதிவிடத் தோன்றியது அதனால் இங்கு இணைக்கிறேன்..எமது நாடு பற்றியது.
     
     
    அங்கே நான் உன்னை
    அழைத்துச் செல்லமாட்டேன்
    அது கருணையற்ற நிலம்
    பிரிவின் யுகாந்த வெள்ளத்தில்
    அது மூழ்கடிக்கப்பட்டது
    காதலற்ற சொற்களின் முள்வேலியால்
    சுற்றி வளைக்கப்பட்டது
    அங்கே நான் உன்னை
    அழைத்துச் செல்லமாட்டேன்
    காதலர் சந்தித்த மரங்கள்
    வெறுமையின் காலவெளியில்
    கல்மரங்களான காடு
    கைவிடப்பட்ட இதயங்கள்
    நடுகற்களாக
    புதையுண்டிருக்கின்றன
    சபிக்கப்பட்ட காதலர்
    அங்கே
    கற்களை உண்ணும் புறாக்களாக
    அலைந்து திரிகிறார்கள்
    அங்கே நான் உன்னை
    அழைத்துச் செல்லமாட்டேன்
    வாழ்வை விட அழகானவள் நீ
    மரணத்தைவிட உறுதியானவன் நான்
    அங்கே நான் உன்னை
    ஒருபோதும்
    அழைத்துச் செல்லமாட்டேன்
     
    No photo description available.
     
     
     
     
     
     
    • Like 1
  13. வேறு விதமான வெத்து இலை களும் போட பழகீட்டினம் என்று கேள்வி .ஆகவே அந்த வெத்திலையின் தாக்கம் என்றும் சொல்லலாம்..எல்லாம் ஒவ்வொரு விதமான சக்தியைக் கொடுப்பவை தானே.விடுங்கோ..😀

  14. நாய்களுக்கு இடையே நடாத்தப்பட்ட ஓட்டப்போட்டியின் போதான பதிவுகள்.
    417219747_3522436644636479_6857982945662
     
     
    417211629_3522436751303135_9097202402251
     
     
    418726220_3522436971303113_1010619731098
     
     
    418169280_3522437147969762_7675632655657
     
     
    417243263_3522436484636495_8108273175091
     
     
     
    இந்தப் பகுதிக்குள் இணைப்பது தவறு என்று நினைக்கிறேன்..இப்படியும் ஒரு போட்டி பாருங்கள்..மிருகவதை.😒
     
     
    • Like 1
  15. அந்தப் பிள்ளையின் இறப்பால் துயர் உற்று இருக்கும் குடுமபத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு..🙏

    இதில் கருத்து பகிரும் உறவுகள் தயவு செய்து இந்தப் பதிவோடு விட்டு விடுங்கள்..ஒரு பெண் பிள்ளையின் இறப்பில் கூட உங்களுக்கு வேண்டாத விமர்சனம் வேணுமா..உங்களால் ஏன் அந்த பிள்ளையை உங்கள் சகோதரியாக  இல்லை ஒரு பெண் பிள்ளையாக தன்னும் நினைக்க முடியாதிருக்கிறது..?தவறாக நான் எதுவும் பகிரவில்லை..கடந்த சில நாட்களாக இந்தப் பகுதி படும் பாட்டை பார்த்து விட்டு தான் இந்தக் கருத்தை பகிர்கிறேன்.

    • Like 4
    • Thanks 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.