-
Posts
15887 -
Joined
-
Last visited
-
Days Won
23
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
-
தாய் மடியில் உறங்கும் குட்டி
- 1
-
ஐரோப்பாவில் தமிழ் சாரதிகளின் (லொறி) சமையல் ..
சோறு , சிக்கன், உருளைகிழங்கு, ,ரசம்..
-
வாழ்த்துக்கள்..
-
அட ஏனப்பா.. அலேக்கா அனுமன் மலைய தூக்குன மாறி .. எடுத்து ரெல்லி பக்கத்தில் வைக்குக .
-
புத்தாண்டு பரிசா..?
-
ஈழ-தமிழ் வலையொளி பேட்டி..
- 1
-
கண்ணீர் அஞ்சலிகள்.
-
வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு வரி..?
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் ஏராளன்..
- 1
-
கற்றாழை பாயாசம்..
-
கருணைக்கிழங்கு வறுவல்..
- 1
-
மிக்ஜாம் பாவங்கள்..
-
குளிர் காலத்துக்கு ஏற்ற மாங்காய் பஜ்ஜி..😊
- 2
-
புயல் - சோறு போடுற இடத்தில் என்னப்ப அரசியல்?
பசி தீர்த்தமைக்கு பாராட்டுவம்
-
உக்கார்ந்து சாப்பிட 60 பொதி சாப்பாடு 65 நெகிழிக்கு கூடுதல் விலை..5
சரி சாப்பிட்டு விட்டு கழிவுகளை குப்பையில் போடுகினமா அதுவும் கிடையாது.. நாளை காலை கொடுங்கையூரில் கழிவு நீர் பதையை அடைத்த நெகிழிய கொண்டுவந்து கொட்டுவீனம்.. அப்போது தெரியும்..
அது போக வடிகால் வசதியில்லா அடுக்குமாடி குடியிருப்பு மொள்ளமாறித்தனம்..டிஸ்கி :
நாளைக்கு மறுநாள் ஆரியம் vs திராவிடம் என்று ஒரு உருட்டு உருட்டுவினம் பாருங்கள் சனம் எல்லாத்தையும் மறந்து மறுபடி புள்ளடி போடுவினம்.. அட போங்கப்பா.. -
4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால்.. எந்த பயனும் இல்லை.! இபிஎஸ் கடும் விமர்சனம்.!
வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக நிலைகொண்டுள்ள காரணத்தால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சென்னையில் பலவேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிருப்தியை எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக கூறுகிறது. இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது.
திமுக அரசு நிர்வாகத் திறனற்று செயல்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி. இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது. திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு, இந்த சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத மழைநீர் வடிகால் திட்டமும் அதனால் பரவும் டெங்கு உட்பட பல பருவ மழைக்கால நோய்களால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பாமல், ஆங்காங்கே உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுக என்று கேட்டுக்கொள்கிறேன் என அந்த பதிவில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
வாழ்த்துக்கள்..தோழர்..
- 1
-
-
மத்திய அரசு அலுவலகத்தில் மாநில அரசு ரெய்டு..
இந்த பிரெக்கிங் நியுஸ் சவுண்டுக்கு மட்டும் குறைச்சல் கிடையாது..
டிஸ்கி :
இவயளின்ற அதிகார போட்டியில் 5 சதம் கூட கொள்ளை அடிக்க பட்ட பணம் மக்களுக்கு கிடைக்காது.. தண்டனையும் கிடைக்காது..வேடிக்கை மட்டும் பார்ப்பம்.. -
28 minutes ago, தமிழ் சிறி said:
பல ஜேர்மன் ஆண்கள் தாய்லாந்து பெண்களை திருமணம் செய்து இருக்கின்றார்கள்.
100% உண்மை தோழர்.. வித விதமா தேத்தண்ணி தயாரிப்பதில் சிலோன் காரரை மிஞ்சிவிட்டினம்..
- 1
- 1
- 1
-
விசில் அடித்தான் குஞ்சுகள்...
பழ.கருப்ஸ்க்கு நாலு பச்ச மட்டை அடி கொடுத்து விடுக...
-
ஒடிசா ஐஏஎஸ் அதிகாரியை மணந்ததால் தலைகீழாக மாறிய விகே பாண்டியன் வாழ்க்கை..
புவனேஸ்வர்: ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணந்த தமிழனான விகே பாண்டியனை ஒடிசா அரசியலுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் எப்படி தேர்வு செய்தார் என்தை பார்ப்போம்.
அக்டோபர் மாதம் ஐஏஏஸ் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற விகே பண்டியன், திருகார்த்திகை நன்னாளில், நேரடியாக ஒடிசா முதல்வரின் வீட்டிற்கு சென்று, முதல்வர் நவீன் பட்நாயக்கின் பாதங்களைத் தொட்டு வணங்கி, "ஜெய் ஜகநாத்" என்று முழக்கமிட்டு, பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் எனப்படும் விகே பாண்டியன், 2000 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் பஞ்சாப் மாநிலப் பிரிவின் ஐஏஎஸ் அதிகாரியாகத்தான் வெற்றி பெற்றார். ஆனால் ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை திருமணம் செய்ததால், ஒடிசா மாநில அதிகாரியாக இடம் மாறினார். ஒடிசா மொழியில் சிறப்பாக பேசக்கூடியவர். ஒடிசாவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 2011 முதல் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக விகே பாண்டியன் பணியாற்றி போது, முதல்வரிடம் நெருக்கமானார்.
அப்போது இருவரின் நெருக்கம் வளர்ந்தது. இதனால் 'நிழல்முதல்வர்' என்று பிஜேடி தலைவர்களே கூறும் அளவிற்கு நெருக்கம் வளர்ந்தது. சிலர்இதனால் அதிருப்தி அடைந்து, பிஜேடி கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்கள். எனினும் நவீன் பட்நாயக்கை விகே பாண்டியனை எதற்காவும் ஒதுக்கி வைக்கவில்லை. தொடர்ந்து அதிக பொறுப்புகளை வழங்கி வந்தார். ஒடிசாவில் அரசியலாக இருந்தாலும் சரி, அதிகார மட்டமாக இருந்தாலும் விகே பாண்டியன் சொல்வது நடக்க தொடங்கியது. இந்நிலையில் தேர்தல் வரப்போகும் நிலையில், விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விகே பாண்டியன் பிஜேடியில் இணைவார் என்று கூறப்பட்டது. அதன்படியே கடந்த அக்டோபர் 23-ல் ஐஏஎஸ் பணியில் இருந்து விகே பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் விருப்ப ஓய்வு கேட்ட இரண்டாவது நாளே மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்தது.
அதன்பின்னர் உடனடியாக ஒடிசா அரசின் முன்னோடி வளர்ச்சித் திட்டங்களின் தலைவராக கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் வி.கே.பாண்டியனை நியமித்து முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். இச்சூழலில், எதிர்பார்த்ததை போலவே வி.கே.பாண்டியன் திரு கார்த்திகை பவுர்ணமி நாளில் பிஜேடியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். நவீன் பட்நாயக் முன்னிலையில் விகே பாண்டியன் பிஜேடியில் இணைந்தபோது, கட்சியின் மூத்த தலைவர்களும் உடனிருந்தார்கள்.
இதுபற்றி முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், "உங்கள் அனைவருக்கும் தெரியும், விகே பாண்டியன் நம்முடைய ஒடிசா மாநில மக்களுக்காக பல ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்ததால், நமது மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளார். பிஜேடி கட்சி நிர்வாகியாக இனி அவர் ஒடிசா மக்களுக்காக தொடர்ந்து செயல்படுவார். நான் அவருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
முதர்வர் நவீன் பட்நாயக்கிற்கு பதில் அளித்த விகே பாண்டியன், எல்லாம் உங்களுடைய ஆசிர்வாதம், வழிகாட்டுதல் மற்றும் உங்களுடைய ஆதரவு தான் தலைவரே.. உங்கள் ஆதரவுடன், ஒடிசா மக்களுக்கு நான் உண்மையாகவும், பணிவாகவும், தன்னலமின்றி சேவை செய்வேன் என்று கூறினார்.
விகே பாண்டியனை அரசியல் வாரிசாக நவீன் பட்நாயக் தேர்வு செய்தது ஏன்? 78 வயதாகும் நவீன் பட்நாயக், விகே பாண்டியனின் திறமை மீது அபரிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார். தொடர்ந்து ஒடிசாவன் ஐந்து முறை முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக், தன் காலத்திற்கு பிறகு இளம் தலைவர் ஒருவரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பாண்டியனை தேர்வு செய்திருப்பதாக ஒடிசா ஊடகங்கள் சொல்கின்றன. ஒடிசாவின் தலைவரும் தன தந்தையுமான பிஜு பட்நாயக்கின் மரணத்திற்கு 25 வருடமாக முதல்வராக உள்ள நவீன் பட்நாயக், தமிழரான விகே பாண்டியன் தான் சரியான அரசியல் வாரிசாக இருப்பார் என்று நினைத்து தேர்வு செய்திருப்பார் என்கின்றன ஒடிசா ஊடகங்கள்.
2019 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, பட்நாயக்கிடம் அவரது வாரிசு யார் என்று அடிக்கடி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போது அவருடைய பதில் என்ன வென்றால் இதனை "ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள்" என்று கூறியிருந்தார். நவீன் பட்நாயக்கின் மருமகன் அருண் பட்நாயக் அரசியல் வாரிசாக இருப்பார் என்று நினைக்க சில சந்தர்ப்பங்கள் நடக்கும் என்று பார்த்தார்கள். இருப்பினும், ஒருபோதும் அதற்கான சந்தர்பங்கள் நடக்கவில்லை. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பிஜேடி மேலிடம் விகே பாண்டியனை கட்சிக்கு உள்ளே கொண்டு வந்திருப்பது அவரது கட்சியினருக்கு மட்டுமல்ல , எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்கும் மிகப்பெரிய அரசியல் சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
பிஜேடியின் முக்கியத் தலைவரும் புரி தொகுதி எம்.பி.யுமான பினாங்கி மிஸ்ரா கூறுகையில், "இது மிகவும் நல்ல வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன். ஒப்பற்ற அரசியல் சிந்தனை கொண்ட நவீன் பட்நாயக்குடன் மிக நெருக்கமாக பணியாற்றியதால், பரந்த நிர்வாக அனுபவத்தையும், மிக நேர்த்தியான அரசியல் திறமையையும் நவீன் பட்நாயக்கிடம் கொண்டு சென்றார். இதனால் பாண்டியன் ஒரு மாஸ்டரின் காலடியில் அரசியலை கற்றுக் கொள்ள வாய்ப்பினை பெற்றார். விகே பாண்டியனால் பிஜேடி பெரிதும் பயனடையும். மேலும், அவரது அனுபவம் மற்றும் புத்திசாலித்தனத்தால் அரசும் தொடர்ந்து பயனடையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
அவர் மிகவும் கடின உழைப்பாளி. காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவேளையின்றி வேலை செய்யக்கூடியவர். விகே பாண்டியன் கட்சிப் பொறுப்பு பின்னர் அறிவிக்கப்படும். தனது ஐஏஎஸ் பணிக்காலத்தை போல் கட்சிக்கும் அவர் வெற்றியை தேடித் தருவார் என நம்புகிறோம். இவரது இணைப்பால், கட்சியின் மற்ற தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். விகே பாண்டியன் வருகையால் பிஜேடிக்குள் எந்த அதிருப்தியும் இல்லை . அதேநேரம் பாண்டியனின் சேர்க்கை ஒரு வாரிசு திட்டமாக பார்க்கப்படக்கூடாது . நவீன் பட்நாயக் மீண்டும் முதலமைச்சராக ஆறாவது முறையாக வருவார். அதற்கு பாண்டியன் உதவுவார்" என்றார்.
பாண்டியனை கட்சிக்கு வரவேற்க முதலில் முதலமைச்சரின் இல்லமான நவீன் நிவாஸிலும், பின்னர் புவனேஸ்வரில் உள்ள பிஜேடியின் தலைமையகமான சங்க பவனிலும் அணிவகுத்து நின்ற கார்களை பார்த்து மிரண்டு போனார்கள் ஒடிசா மக்கள். இந்த கார்களின் அணிவகுப்பை பார்க்கும் போதே, பிஜேடியின் மற்ற மூத்த தலைவர்களின் கருத்தை மிஸ்ரா வெளிப்படுத்தியதாக தெரிகிறது. பாண்டியனுக்கு முதல்வரின் வெளிப்படையான ஒப்புதல் வலுவான அரசியல் சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
அரசியலில் பின்னாளில் தனக்கு எதிராக வருவார்கள் என்று தெரிந்தால், அவர்களை அப்போதே முற்றிலும் ஓரங்கட்டிவிடுவார் நவீன் பட்நாயக். தன் பதவிக்கு ஆபத்து வந்தால், எதையும் செய்ய தயங்கமாட்டார். நவீன் பட்நாயக், சராசரி அரசியல்வாதியாக அல்லாமல், உணர்ச்சிவசப்படாமல் மிகச் சரியாக முடிவெடுப்பார். அப்படிப்பட்டவர் விகே பாண்டியனை தேர்வு செய்ய வலுவான காரணங்கள் இருக்கும் என்கிறார்கள் ஓடிசா அரசியல் நிபுணர்கள்.
-
இன்டைக்கு யுரூப் முழுவதும் ஒரெ அலசல்தான்..
துவராகா கட்சி தொடங்கினால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கதி என்ன.?
டிஸ்கி :
கட்சி நிதி என்று உங்களிடம் உண்டியல் குலுக்கினால் பதில் என்ன..? ரெல் மீ
-
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
in வண்ணத் திரை
பதியப்பட்டது
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
சென்னை தியாகராய நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, என்னை இசை ஞானி என மக்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. ஆனால், நான் என்னை அப்படி நினைக்கவில்லை.
அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இளையராஜா பேசுகையில், "எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ எதுவும் கிடையாது. புத்தக வெளியிடுக்கு சம்பந்தம் இல்லாத ஆள் நான்.
நான் முதன் முதலாக ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அந்தப் படம் பிண்ணனி இசைக்காக என்னிடம் வருகிறது. முதல் ரீல் ஓடுகிறது...
கதாநாயகி அறிமுக காட்சி. அதில் ஆண்டாள் நடனத்தை கதாநாயகி பார்க்கிறாள். அதற்கு நான் இசை அமைத்தேன். அதனால் முதல் படத்திலே ஆண்டாள்
எனக்கு அருள் புரிந்துவிட்டாள் என நினைத்துக்கொண்டேன்.
அப்போதெல்லாம் மாதத்தில் 30 நாட்களிலும் எனக்கு வேலை இருக்கும். அப்போது 7 மணியிலிருந்து 1 மணி வரைக்கும் 1 கால்ஷீட். இப்போது கால்ஷீட் எல்லாம் கிடையாது.
இரவு பகலாக வேலை செய்கிறார்கள். 1 பாட்டு மியூசிக் பண்ணுவதற்கு ஆறு மாதம் ஆகிறது. 1 வருஷம் எடுத்தவர்கள் கூட இருக்கிறார்கள். அதில் ரெக்கார்ட் பிரேக் செய்பவர்கள்
எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. அவர்களுக்கு மியூசிக் வரவில்லை...
நான் கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டு வந்தவன் எல்லாம் இல்லை. நான் இசைஞானி என்ற பேருக்கு தகுதியானவனா என்று கேட்டால் என்னை பொறுத்தவரை அது கேள்விக்குறிதான்.
ஆனால் மக்கள் அப்படி அழைக்கிறார்கள். அதற்கு என் நன்றி. நான் என்னை அப்படி நினைத்துக் கொள்வதில்லை. அதனால் எனக்கு ஒரு கர்வமும் கிடையாது.
அதையெல்லாம் சின்ன வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன்.
நான் சிறுவனாக இருக்கும்போது கச்சேரி நடக்கும்போது, ஹார்மோனியம் வாசிப்பேன். மக்கள் கைதட்டுவார்கள்.
அதைக் கேட்கும் போது பெருமையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்று நிறைய வாசித்தேன். கைதட்டலும் ஜாஸ்தியாகிட்டே போனது.
எனக்கு கிடைக்கும் கைதட்டல் ஜாஸ்தி ஆக, ஜாஸ்தி ஆக... கர்வமும் அதிகரித்துக்கொண்டே போனது.
ஒரு கட்டத்தில், இந்த கைதட்டல், பாட்டுக்காகவா, இசைக்காகவா இல்லை நான் வாசிக்கிற திறமைக்காகவா என மனசுக்குள் ஒரு கேள்வி.
அப்புறம் பாட்டுக்கு தான் கை தட்டல் வருகிறது என உணர்ந்தேன். பாட்டு விஸ்வநாதன் சார் போட்டது. அதனால் கைதட்டல் அவருக்கு போகிறது. அதற்குப் பிறகு என் தலையில்
இருந்த பாரமெல்லாம் இறங்கிப் போய் விட்டது. நமக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். அதனால் எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டும் என்னை அதைப் பற்றியே சிந்திக்க வைக்காது.
தீபாவளி நேரத்தில், மூன்று நாட்களில் 3 படங்களுக்கு நான் பிண்ணனி இசையை அமைத்திருக்கிறேன். அப்படி இசையமைத்தவர்கள் உலகிலேயே கிடையாது.
இது என்னுடைய திறமையை சொல்வதற்காக அல்ல. படக்குழுவின் நெருக்கடி அப்படி இருந்தது" எனப் பேசினார்..
https://tamil.oneindia.com/news/chennai/ilayaraja-says-that-i-got-rid-of-head-weight-many-years-ago-571859.html