Jump to content

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15887
  • Joined

  • Last visited

  • Days Won

    23

Posts posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. 11 கோடியில் ஸ்டாலின் கட்டித் தந்த கீழடி அருங்காட்சியகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    EV_Velu.jpg

    சிவகங்கை: 11 கோடியே மூன்று லட்ச ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம் ஒன்று கீழடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    அதனை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் முதன்மைச் செயலர் உதயசந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    வகைவகையான வடிவத்தில் காட்சியகங்கள்:

    சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 10 கட்டடங்களுடன் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முழுப் பணிகளும் ஏறக்குறைய நிறைவை எட்டியுள்ளன. இப்போது வண்ணம் பூசும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. மேலும் தொல்பொருட்களை வைப்பதற்கான மர அலமாரிகளைத் தயாரிக்கும் பணிகள்கூட இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.

    இதன் முதல் தளத்தில் நிர்வாக கட்டடம் உள்ளது. 2வது தளத்தில் காட்சிக் கூடமும் 3வது தளத்தில் உலோக தொல்பொருட்கள், நான்கில் மணிகள் மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட தொல்பொருட்கள், ஐந்தில் விலங்கு தொல்பொருட்கள், ஆறாவது தளத்தில் சுடுமண் பொருட்கள் என்று தனித்தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    இதில் தங்கப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், உழவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் என காட்சிப்படுத்த தனித்தனி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது செட்டிநாட்டுக் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னல் மற்றும் கூரை, கதவு என அனைத்தும் தேக்கு மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. தரை முழுவதும் ஆத்தங்குடி பாணியில் போடப்பட்டுள்ளன.

    ஜன்னல்களில் விதவிதமான வண்ணங்களில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அனைத்து சாளரங்களும் சூரிய ஒளி உள்ளே புகும்படி நேர்த்தியாக உயரப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த அருங்காட்சியகமானது நல்ல காற்றோட்ட வசதிகளுடன் இயற்கையான ஒளி அமைப்புடனும் காட்சி தருகின்றது.


    செழுமையான செட்டிநாட்டு கலாச்சாரம்:

    அழகிய கண்ணாடி மாடல் கூரை விளக்குகள், பழங்காலத்து அரிக்கன் விளக்குகள், மரத்தால் செய்யப்பட்ட தாழ்வாரம், அதன் உட்புறம் மானாமதுரை தட்டு ஓடுகள், நான்கு மாடங்களிலும் பார்வையாளர்கள் அமர்ந்து ரசிக்கக் கூடிய தெப்பக் குளம், அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைப் பற்றிய விளக்க உரையை உட்கார்ந்து கேட்கும் படியான ஒலி மற்றும் ஒளி வடிவிலான காட்சிக் கூடம், பார்வையாளர்கள் உயரே நின்றபடி பார்வையிட, மேல் மாடங்கள் என ஒவ்வொரு வசதிகளையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்துள்ளனர்.

    ஒலி மற்றும் ஒளி வடிவிலான காட்சிக் கூடத்தில் 50 பேர் வரை அமரலாம். 15 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவுக்குக் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை அங்கே வரும் பார்வையாளர்களுக்குப் போட்டுக் காட்ட உள்ளனர்.

    மேற்புறமாக நின்று இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்கும் போது, நீள வடிவில் மிகச் சிறப்பாகக் காட்சி தருகிறது. அந்த அனுபவம் வியப்பை அளிக்கும்படி உள்ளது. கூடுதலாக இங்கு லிஃப்ட் வசதியும் உள்ளது. மேலும் இங்குள்ள ஒரு சுவரில் ஜல்லிக்கட்டைப் படம்பிடித்துக்காட்டும்படி காளை ஒன்றும் புடைப்புச் சிற்ப பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 9 கட்டமாக நடத்தப்பட்ட கள ஆய்வுகளில் இதுவரை நான்கு கட்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்களை மட்டுமே இங்குப் பார்வைக்கு வைக்க உள்ளனர்.

    சமீபத்தில் நடைபெற்ற 6 மற்றும் 7வது கட்ட அகழாய்வில் பல பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் தங்கத்தால் ஆன காதணிகள், புதிய கற்காலக் கருவிகள், காதில் அணியும் பாம்படம் ஆகியவை கிடைத்துள்ளன.

    மேலும் முதன்முறையாக குறுவாள் ஒன்றும் கிடைத்துள்ளது. பெண்கள் அணியும் மணிகள், பானை எழுத்துகளில் தமிழ் எழுத்துகள், அதில் முதன்முறையாக, ஆதன், கதரன் என்ற 13 கொண்ட பானை ஒன்றும் கிடைத்துள்ளது. இவ்வளவு நீளம் கொண்ட எழுத்துகள் உடைய பானை இதுவரை கிடைத்ததில்லை. இந்த இரண்டு கட்ட ஆய்வுகளில் 700 பொருட்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டன.


    உலகம் பேசும் தமிழர்களின் நாகரிகம்:

    இது குறித்து தொழில் மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'வைகைநதி நாகரிகம் என்பது கீழடியிலிருந்து உருவானது என்பதற்கு பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. இதுவரை நகர நாகரிகம் கங்கைச் சமவெளியிலிருந்துதான் தொடங்கியது என்ற கருத்தாக்கத்தை இந்த ஆய்வுகள் உடைத்தெறிந்துள்ளன.

    கீழடியிலும் அதே காலகட்டத்தில் நகர நாகரிகம் என்பது இருந்துள்ளது. சாதாரண மக்கள் எழுத்தறிவைப் பெற்றவர்களாக இருந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. தமிழர்களின் நாகரிகம் என்பது பழமையான நாகரிகம். இதற்கு முன்பாக இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கணிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தமிழ்நாடு அரசின் ஆய்வின் மூலம் இந்த நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என அறிவியல்பூர்வமாக நிறுவி இருக்கிறோம்' என்கிறார்.

    தொடர்ந்து பேசிய அவர், ' கீழடி 8ம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் கனசதுர (Cubical) வடிவில் மட்டுமே பகடைக்காய்கள் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தால் ஆன பகடைக்காய் கிடைத்துள்ளது.

    மேலும் 'ன்' என்ற எழுத்து அசோகனின் பிராமியில் இல்லை. ஆனால் கீழடி அகழாய்வு ஆதன் என்ற இடத்தில் 'ன்' வருகிறது. கீழடி அகழ்வாராய்ச்சியில் உறைக்கிணறு ஒன்றில் அலங்கரிக்கப்பட்ட மீன் சின்னம் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

    கூடவே 146 செ.மீ. ஆழத்தில் வெள்ளியிலான முத்திரைக் காசு கண்டு பிடித்துள்ளோம். கங்கைச் சமவெளியுடன் பழந்தமிழர் வணிக தொடர்புக் கான மற்றுமொரு சான்று இது' என விளக்கம் அளித்தார்.

    சமீபத்தில் தான் முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கைகளை, அதாவது 2014 - 2015 மற்றும் 2015- 2016 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளை ஒன்றிய அரசின் தொல்பொருள் தலைமை இயக்குநரிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.

    அதில் 2600 ஆண்டுகள் கீழடி நாகரிகம் பழமையானது என்பது கார்பன் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ஏற்று மத்திய அரசு கால அளவை திருத்தி அமைத்து வெளியிட்டால், தமிழர்களின் நாகரிகம் மேலும் பழமையானது என்பது உலகத்தார் முன் உறுதியாகும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து ஒன்றிய தொல்லியல்துறை தென்னிந்திய ஆலய திட்டக் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசும்போது, 'தமிழ்நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட தொல்லியல்துறை சார்ந்த அகழாய்வுகளில் கீழடியில்தான் அதிகமான கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    அதற்கான இறுதி அறிக்கையை நான் எழுதிய போது எனக்கே வியப்பு ஏற்பட்டது. இவை கி.மு.300க்கு முன்னால் கட்டப்பட்ட கட்டடங்கள். அதில் உள்ள கட்டடங்களை இரண்டு வகையாகப் பிரித்து ஆய்வு செய்துள்ளோம்' என்கிறார்.

    'தமிழர் வரலாற்றுப் பெட்டகம் கீழடி வரலாற்றுக் கண்காட்சிக் கூடத்தின் பணிகளைத் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு , முதல்வரின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் இஆப ஆகியோருடன் பார்வையிட்டேன். பல ஆண்டுக்கால கனவு நிறைவேறியுள்ளது' என்கிறார் எம்.பி. சு.வெங்கடேசன்.

    மேற்கொண்டு 8 மற்றும் 9ஆம் கட்ட ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின்தான் சில மாதங்கள் முன்பாக தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு அவர் நேரடியாகவே சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பொருட்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.


    20 ஆயிரம் தொல்லியல் பொருட்கள்:

    இதுவரை இங்கு தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நான்கு கட்ட அகழாய்விலும் தங்கப் பொருட்கள், தந்த பொருட்கள், சுடுமண் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரும்பு பொருட்கள், பானைகள், எலும்புகள், முதுமக்கள் தாழிகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    இங்கு வந்த ஞானம் என்ற சுற்றுலாப் பயணி, 'இங்குள்ள பொருட்களை எல்லாம் பார்க்கும்போது நமது முன்னோர்கள் எந்தளவுக்கு நாகரிகமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பது தெரிந்துகொள்ள முடிகிறது.

    ஆனால், நாம் என்ன நினைக்கிறோம். நாம் தான் அவர்களைவிட நாகரிகமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகக் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளோம். ஆனால் அவர்கள் நம்மைவிடச் சுகாதாரமாகவும் நாகரிகமாகவும் வாழ்ந்துள்ளார்கள். அதைப் பற்றிய அறிவு இல்லாமல்தான் நாம் இத்தனை காலம் இருந்துள்ளோம்' என்கிறார்.

    '2600 வருடங்களுக்கு முன்னதாகவே இங்கு வாழ்ந்த நமது முன்னோர்கள் சுகாதாரமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். விவசாயத்தை உறைக்கிணறு வடிவில் அமைத்துச் செய்துள்ளனர். பார்க்கவே வியப்பாக உள்ளது' என்கிறார் உடுமலைப்பேட்டையிலிருந்து கீழடியைப் பார்வையிட வந்துள்ள மாணவி.

    திமுக ஆட்சியில் தொல்லியல் கண்டுபிடிப்புகள்:

    கீழடி மட்டும் இல்லாமல், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தூத்துக்குடி கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமனல், கங்கைகொண்ட சோழபுரம் என்றும் பூம்புகாரை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையான துறைமுகம் ஒன்றும் கடலுக்கு அடியில் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னதாகத் தான் இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணி தொடங்கியது. மின்னல் வேகத்தில் பணிகள் முடிவடைந்து விரைவில் திறக்கப்பட உள்ளது.

    https://tamil.oneindia.com/news/sivagangai/a-museum-has-been-set-up-at-a-cost-of-11-crore-rupees-at-keezhadi-499620.html

  2. தமிழ்நாட்டு திருவிழாவில் பிரபாகரன் படம்

    IMG-20230221-214619.jpg

    தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம் கோயில் திருவிழா மின் காணொளி பதாகையில் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை காண்பித்து மக்கள் திருவிழாவை கொண்டாடியுள்ளனர்.

    தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை கண்டு வணங்கி மக்கள் தமது அன்பையும் ஆதரவையும் வெளிபடுத்திய நிகழ்வு அங்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.

    https://vanakkamlondon.com/world/india/2023/02/185753/

    • Thanks 1
  3. தோழர் தமிழ் சிறி இன்னும் பல காலம் பின்னி பெடல் எடுக்க .. எதிரிகள் தலை தெறிக்க..  வாழ்த்துக்கள்..r💐

  4. வடக்கும் கிழக்கும் மோடியின் கைகளில்! – அண்ணாமலை தெரிவிப்பு

    IMG-20230220-071254.jpg

    இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. மோடியையே அந்த மாகாணமக்கள் நம்பியிருக்கிறார்கள். ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம்.13 ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.”

    – இவ்வாறு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

    இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் தமிழகம் சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

    இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசியல் திருத்தம் நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வே அவசியம் என்றும் தமிழ் மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அண்ணாமலை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து 13ஆவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் கோரிக்கையை முன்வைத்தோம். இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

    “இலங்கையில் இப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே பேசுபொருளாக உள்ளார். அண்மையில் இந்திய மத்திய இணை அமைச்சர் முருகன் இலங்கை சென்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார மண்டபத்தை இலங்கை மக்களுக்கு , அதாவது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காகச் சென்றிருந்தார்.

    அங்கு வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. அந்த மாகாண மக்களும் அவரையே நம்பியுள்ளனர். ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம்.

    பலாலியில் விமான நிலையம், காங்கேசன்துறையில் துறைமுகம், மன்னாரூடாக இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து, யாழ்ப்பாணத்தில் 11 மில்லியன் டொலர் செலவில் கலாசார மண்டபம், கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் தண்டவாளம் என்று எங்கு பார்த்தாலும் இந்திய அபிவிருத்தித் திட்டங்களே மேற்கொள்ளப்படுகின்றன.

    அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்தியப் பிரதமர் மோடியையே அந்த மக்கள் நம்பியிருக்கிறார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை.

    இலங்கையைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தம்தான் தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இலங்கைக்குச் சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விடயத்தை அந்தநாட்டு அரசிடம் உறுதியாகத் தெரிவித்து வந்திருக்கின்றார்.

    இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

    தற்போது தேவை மாகாணத்துக்கான அதிகாரங்கள் தான். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தேவை. இலங்கை சென்றிருந்த மத்திய இணை அமைச்சர் முருகனும் இது தொடர்பான பேச்சுக்களை நடத்தியிருந்தார். நிறைய விடயங்கள் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் நடக்கும்.

    ஒருவர் (பிரபாகரன்) இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி பழ.நெடுமாறனின் தொடர்ந்தும் பேசுகின்றார். எங்களைப் பொறுத்தவரையில் அவற்றையெல்லாம் தாண்டி இலங்கை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் மோடி மட்டுமே” – என்றார்.

    https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/185572/

    “13” ஐ அமுல்படுத்த ஒருபோதும் அனுமதியோம்! – அண்ணாமலைக்கு வீரசேகர எச்சரிக்கை

    IMG-20230220-071928.jpg

    வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டும், அது தமிழர் தாயகம் என்பதை மறைமுகமாக எடுத்தியம்பும் வகையிலேயே தமிழக பாரதிய ஜனதாத் கட்சித் தலைவர் கே.அண்ணாமலை கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு எதிராக இலங்கை அரசு போர்க்கொடி தூக்கக்கூடாது என்பதற்காகவே வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளிலேயே உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த விசமத்தனமான கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”

    – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

    இலங்கையைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மோடியில் கைகளில்தான் உள்ளன என்று இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் சென்னையில் வைத்து பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே சரத் வீரசேகர மேற்கண்டவாறு பதிலளித்தார்.

    அவர் மேலும் கூறுகையில்,

    “அண்ணாமலை கூறுவது போல் 13 ஆவது திருத்தச் சட்டம் தீர்வாக அமையாது. ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

    நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் உளறுவதை இந்தியத் தரப்பினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் அல்ல. 13ஆவது திருத்தத்தை நாடாளுமன்றம் ஊடாக முழுமையாக இல்லாதொழிப்பதற்கான நேரமே கனிந்துள்ளது.

    இலங்கையில் 13 க்கு எதிராக பிக்குகள் கூட வீதியில் இறங்கியுள்ளமை அண்ணாமலைக்குத் தெரியவில்லையா? இது பௌத்த நாடு என்பதை அவர் மறந்துவிட்டாரா?” – என்றார்.

    https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/185578/

    வடக்கு, கிழக்கு தேர்தல்களில் பா.ஜ.க. போட்டியிடலாமாம்! – விமல் கிண்டல்

    IMG-20230220-071751.jpg

    வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களின் போது மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிட்டாலும் நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்ற நிலையையே தற்போது காணப்படுகின்றது.”

    – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

    “வடக்கையும் கிழக்கையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளிலே இலங்கை அரசு எப்போது தாரைவார்த்தது? வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தலைவராக மோடி எப்போது பிரகடனப்படுத்தப்பட்டார்? அண்ணாமலையின் கருத்துக்கள் ஊடாக எம்மிடம் எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்.

    அண்ணாமலை அண்மையில் இலங்கை வந்து தமிழகம் திரும்பிய பின்னர் சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதன் பின்புலம் தொடர்பில் நாம் தீவிரமாக ஆராய வேண்டும்.

    இந்தியாவில் உள்ள ஒரு தரப்பினர் பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் நடத்த, அண்ணாமலை மோடியையும் வடக்கு – கிழக்கையும் இணைத்துப் பேசி அரசியல் நடத்துகின்றார். இலங்கை அரசு இவற்றையெல்லாம் கைகட்டி ஏன் வேடிக்கை பார்க்கின்றது? எல்லாம் மர்மமாகவே உள்ளது” – என்றார்.

    https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/185575/

    டிஸ்கி :

    எனக்கு தலைவரின்ட " பத்த வச்சிட்டியே பரட்ட.."

    hqdefault.jpg

     "சும்மா இருந்தவன சொறிஞ்சு விட்டுட்டுடானுங்கடா.."

    போன்ற பஞ்ச் வசனங்களே நினைவுக்கு வருகிறது..😊

  5. “13” முழுமையாக அமுலாக இடமளியோம்! – பிக்குகள் எச்சரிக்கை

    IMG-20230219-072820.jpg

    அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கூட அதனை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அத்துடன், இதனைச் செய்வதற்கு முற்படும் ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகளின் அரசியல் முகவரியும் இல்லாது செய்யப்படும் எனவும் அவர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

    ஊடகவியலாளர்களை சந்தித்தவுடன் நடைபெற்ற நேர்காணலின்போதே உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

    அக்மீமன தயாரத்ன தேரர் ஹெல உறுமயவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவர். தற்போது சிங்கள ராவய அமைப்பை வழிநடத்துகின்றார். உலப்பனே சுமங்கல தேரர், அதிபர் – ஆசிரியர்களின் சம்பள போராட்டத்தின்போது முன்னின்று செயற்பட்டவர்.

    இருவரும் 13 இற்கு எதிராக மகா சங்கத்தினர் கொழும்பில் நடத்திய போராட்டத்தை ஏற்பாடு செய்வத்கு முன்னின்று செயற்பட்டவர்கள்.

    “விக்னேஸ்வரன் ஒரு கள்ளத்தோணி. அவருக்கு என ஒரு இனம் இல்லை. வடக்கு மக்களுக்காகக் கதைக்கின்றார். ஆனால், கொழும்பு 7 இல் வாழ்கின்றார். அவரின் பிள்ளைகள் சிங்களவர்களையே மணம் முடித்துள்ளனர். படித்தது றோயல் கல்லூரி. கதைப்பது ஆங்கிலம். இப்படியானவர்கள்தான் கள்ளத்தோணி.

    விக்னேஸ்வரன் சில்றைத்தனமான மனிதன். ஒற்றையாட்சி அரசமைப்பில் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு, சமஷ்டி பற்றி கதைக்கின்றார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றும் குறித்த தேரர்கள் குறிப்பிட்டனர்.

    “13 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் எதிர்க்கின்றோம். பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடக்கூடும். அதனால்தான் 13 ஐக் கொண்டு வந்த ஜே.ஆர். கூட இந்த அதிகாரங்களைப் பகிரவில்லை. 13 ஐ அமுல்படுத்த வேண்டும் என நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால்கூட அது அமுலாவதற்கு மகாசங்கத்தினர் இடமளிக்கமாட்டார்கள். 13 ஐ வழங்க முற்படும் அரசியல்வாதிகளும் முகவரியற்றுப்போவார்கள்” – என்றும் தேரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/185446/

  6. சமஷ்டி பற்றி வாய் திறக்காதீர்கள்! – தமிழ்த் தலைவர்களை எச்சரிக்கிறார் சாந்த பண்டார

    IMG-20230213-122046.jpg

    “தயவுசெய்து சமஷ்டி தீர்வைக் கேட்க வேண்டாம் என்று தமிழ்த் தலைவர்களிடம் சொல்கின்றோம். சமஷ்டிக்கு நாம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் .  ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது.”

    – இவ்வாறு இராஜாங்க அமைச்சர் கே.டபிள்யூ. சாந்த பண்டார தெரிவித்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

    “வடக்கு – கிழக்குதமிழ் மக்கள் அன்றிருந்து இன்று வரை கேட்பது அரசியல் தீர்வைத்தான். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்குச் செல்கின்ற போது தமிழ் மக்கள் அரசியல் தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

    தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஒற்றையாட்சிக்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

    பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என்றும், நாட்டைப் பிரிப்பதற்கு இடமளிக்கமாட்டாது என்றும் ஜனாதிபதி கூறி வருகின்ற போதிலும் சிலர் ஜனாதிபதிக்கு எதிராக – அரசியல் தீர்வுக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.

    தமிழ்த் தலைவர்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம். தயவு செய்து சமஷ்டி தீர்வைக் கேட்க வேண்டாம். சமஷ்டிக்கு நாம் கடும் எதிப்பு தெரிவிக்கிறோம்.  ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது.

    தமிழ்த் தலைவர்கள் சிலர் உண்மையில் தீர்வை விரும்பவில்லை. தீர்வு கிடைத்துவிட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. இதனால்தான் அவர்கள் வழங்கப்பட முடியாத சமஷ்டி தீர்வைக் கேட்கின்றனர்.

    நாம் ஒற்றையாட்சிக்குள் தீர்வை வழங்கத் தயார். அரசு தேர்தலை ஒத்திப்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

    பொருளாதாரப் பிரச்சினை என்று வரும்போது அது இந்த நாட்டுக்கு மட்டும் உரியது அல்ல. முழு நாட்டிலும் உள்ளது. இங்கிலாந்தில்கூட இப்போது வாழ்க்கைச் செலவீனம் அதிகரித்துள்ளது.

    இப்போது எமது நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வருட இறுதிக்குள் நாம் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுவோம். மக்கள் அனைவரும் எமது இந்த வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – என்றார்.

    https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/185131/

  7. நாட்டைவிட்டு இலண்டனுக்கு ஓடுங்கள்! – விக்கிக்குப் பொன்சேகா எச்சரிக்கை

    IMG-20230212-110201.jpg

    இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச் சொல்லுங்கள்” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    “இலங்கையானது ஒற்றையாட்சி நாடாகும். இங்கு சமஷ்டிக்கு இடமில்லை. இங்கு வாழ முடியாவிட்டால் விக்னேஸ்வரனை இங்கிலாந்து போகச் சொல்லுங்கள்.

    விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணையே திருமணம் முடித்துள்ளார். அவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான். விக்னேஸ்வரன் தெற்கில்தான் படித்தார். தொழில் செய்தார். தற்போது வடக்கு மக்களுக்காகக் குரல் கொடுப்பதுபோல் பாசாங்கு செய்கின்றார். அவர் சந்தர்ப்பவாதி” – என்றார்.

    சமஷ்டி தொடர்பிலும், மகாசங்கத்தினர் குறித்தும் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்கள் தெற்கு அரசியலில் பெரும் சொற்போரை ஏற்படுத்தியுள்ளது. பல தரப்பினரும் விக்கியை விமர்சித்து வருகின்றனர்.

    https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/185098/

  8. மனமானது ஒரு விசித்திரமான கொள்கலனாகும் புற சூழல்களை வைத்தே தான் உருக்கொள்கிறது

    மீனுடைய மனமானது பாசிகளாலும் , மணலும் ஆனது உலகம் என்று கணிக்கிறது 

    பறவையின் மனமானது மலை உச்சிகளிலும் மரகிளைகளிலும் தானிய கதிர்களிலும் தங்கியுள்ளது 

    அவ்வாறே மனிதனின் மனமானது தான் நிகழ்த்திய தான் கண்ணில் கண்டதையே , அனுபவங்களையே உலகம் என வரித்து கொள்கிறது 

    -சுவாமி விவேகானந்தர்

    டிஸ்கி 

    16 hours ago, colomban said:

    இது ஒரு பெண்ணின் வ‌றுமையை ப‌ய‌ன்ப‌டுத்தி அவ‌ளை பாலிய‌ல் வ‌ல்லுற‌வுக்குட்ப‌டுத்தும் அகோர‌ செய‌லாகும்

     

    • Like 1
  9. 6 hours ago, கிருபன் said:

    மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன்

     

    6 hours ago, கிருபன் said:

    கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

    ஏதாவது ஆக்கபூர்வமா கதையுங்கோ.. 👍

  10. 14 minutes ago, கிருபன் said:

    அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட 300 பேர் கொண்ட இராணுவக் குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நான் கூட "காசோ " என்டு பயந்துட்டன்

  11. இலங்கைத் தமிழ்த் திரைத்துறை | சில கருத்துகள்! | அ.யேசுராசா

    IMG-20230207-114753.jpg

     

    இலங்கைத் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியை மூன்றுப்பிரிவுகளாகப் பார்க்கலாம்

    .i) 1962 – 1983

    Ii) 1990 – 2009

    iii) 2009 இற்குப் பின்.

    1. முதலாவது காலகட்டத்தில், 1962 இல், முதலாவது தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ உருவாக்கப்பட்டது; பிறகு 28 திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்ப் படங்களைத் தயாரித்த பெரும்பாலானவர் சினமா மீதான கவர்ச்சியினாலேயே இதில் ஈடுபட்டனர். இத்துறையினால் வரக்கூடிய விளம்பரமும் புகழும் அவர்களின் உந்துசக்திகளாகும்! திரைக்கலை நுட்பங்கள் பற்றிய அறிவு, கலைநோக்கு, உலகத் திரைப்பட வளர்ச்சிநிலை பற்றிய விழிப்புணர்வு போன்றவை அவர்களிடம் இருக்கவில்லை. தமிழகத் திரைப்படங்கள் மற்றும் ஹிந்தித் திரைப்படங்களே அவர்களுக்குப் பரிச்சயமானதால், அவையே இவர்களின் ஆதர்சங்களாகவும் அமைந்தன. அதனால், வழமையான – சூத்திரப்பாங்கான கட்டமைப்பில் கதை, நடிப்புமுறை, பாடல்கள் என்பவற்றை வைத்து, யதார்த்தமற்ற – மிகைப்பாங்கான – வெளிப்பாட்டுமுறையில் படங்களை உருவாக்கினர். துறைசார் நிபுணத்துவ அறிவின் போதாமை, வரையறைக்குட்பட்ட குறைந்த நிதிப் பங்களிப்பு போன்றவையும் செய்நேர்த்தியில் பாதகமான முறையில் தாக்கம் செலுத்தின. (கலைத்துவரீதியில் குறைபாடுகள் இருந்தாலும்) தொழில்நுட்ப ரீதியில் முன்னேறியிருந்த தமிழகத் தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கைப் படங்கள் பலவீனங்களுடன் இருந்தன. இலங்கைத் தமிழ் வாழ்வும் அடையாளங்களும், தனித்துவத்துடன் உரியமுறையில் வெளிப்படுத்தப்படவுமில்லை. இவ்வாறான காரணங்களால், தமிழகப் படங்களுக்குப் பழக்கமாகியிருந்த பெருந்திரள் பார்வையாளரை ஈர்ப்பதில், இரண்டொன்றைத் தவிர ஏனையவை வெற்றியடையவில்லை.

    பொன்மணி, வாடைக்காற்று, குத்துவிளக்கு ஆகிய படங்களில் மாறுதலான அம்சங்கள் இருந்தன. பொன்மணியின் நெறியாளர், சிங்களத் திரைப்படத்துறை மறுமலர்ச்சியில் சாதனை புரிந்த தர்மசேன பத்திராஜ; எனவே, காட்சிப்படுத்தலிலும் ஏனைய அம்சங்களிலும் முன்னேற்றகரமான நிலைமை இருந்தது. வாடைக்காற்று ஒரு ஜனரஞ்சக நாவலை அடிப்படையாகக் கொண்டிருந்தது; திரைத்துறைக்கு அரிதான மீனவர் வாழ்க்கைக் களமும் கவர்ச்சியைக் கொடுத்தது. குத்துவிளக்கு யாழ்ப்பாண விவசாயச் சூழல், சீதனப் பிரச்சினை போன்றவற்றை மண்வாசனையுடன் சித்திரிக்க முனைந்தது. இவற்றால் இம்மூன்றும் கவனிப்புக்குரியவையாகும். இக்காலகட்டப் படங்கள் யாவும் திரைச்சுருளில் (ஃவில்ம்) தயாரிக்கப்பட்டவை.

    1983 இல் தமிழர் மீதும், அவர்களது நிறுவனங்கள் – குறிப்பாகத் திரைப்பட ஸ்ரூடியோக்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், தமிழ்த் திரைப்படத்துறை வளர்ச்சியையும் பாதித்தன! அதற்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு தேக்க நிலை அடைந்தது.

    2. இரண்டாவது காலகட்டம், வடக்குக் கிழக்கில் யுத்தம் நடைபெற்றுக்கொண் டிருந்த காலகட்டமாகும். அரசாங்கத்தினால், மின்சாரத்தடை மற்றும் பொருளாதாரத் தடைகள் இப்பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலங்களாகும். விடுதலைப் புலிகள் அமைப்பினர், பல பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து செயல்பட்டனர். பல்வேறு நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்த அவர்கள், கலை பண்பாட்டுக் கழகம், நிதர்சனம் தொலைக்காட்சி போன்றவற்றையும் நடத்தினர். இவ்வமைப்பு கள்மூலம் இலக்கிய முயற்சிகளையும் நாடகங்களையும் ஊக்குவித்தனர். நிதர்சனத்திற்கூடாக நூற்றுக்கணக்கான குறும்படங்கள், முழுநீளக் கதைப் படங்கள், விவரணப் படங்கள் ஆகியவற்றைத் தயாரித்து, தமது பகுதிகளி லுள்ள மக்களுக்குக் காட்டினர்; புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் அவற்றைப் பரப்பினர். இப்படைப்புகள் யாவும் விடியோவில் தயாரிக்கப் பட்டவை. யுத்த நெருக்கடிக்குள்ளான மக்களின் வாழ்வியல் அல்லல்கள், படை நடவடிக்கைகளின் பாதிப்புகள், போராட்ட வாழ்வு போன்றனவற்றை அவை வெளிப்படுத்தின. யுத்தகால நடவடிக்கைகளின்போது சண்டைக் களங்களில் எடுக்கப்பட்ட, உண்மைக் காட்சிகளைக்கொண்ட ஆவணப் படங்களையும் தயாரித்தனர். பிரக்ஞை பூர்வமாகச் சொந்த மண்ணையும் மக்களையும் திரைப்படங்களில் பதிவுசெய்தமை முக்கியமானது. உரிய பயிற்சிகள் இல்லையென்றாலும், எழுத்தாளர் ஞானரதன் போன்று, திரைப்படக் கலை பற்றிய புரிதல்கொண்டவர்களின் ஒத்துழைப்புடன், மெல்ல மெல்ல படைப்பாக்க முயற்சிகள் நடந்தன; அனுபவங்களூடான கற்கை, வளர்ச்சிக்கு உதவியது. சில சிங்களக் கலைஞர்களின் பயிலரங்குகளும் உதவியதாகத் தெரிகிறது. ஞானரதனின் ‘முகங்கள்’, ‘காற்றுவெளி’ ஆகிய முழுநீளக் கதைப்படங்களும்; ‘நேற்று’ என்னும் குறும்படமும் விதந்து போற்றத் தக்கவை! ; தமிழகப் படைப்புகள் உள்ளிட்ட மொத்தத் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும் அவை முக்கியமானவை!

    தமது பிரதேசங்களில் காட்டப்படும் தமிழகத் திரைப்படங்களின் எண்ணிக்கையைப் புலிகள் கட்டுப்படுத்தினர்; பண்பாட்டுச் சீரழிவுக்குரிய காட்சிகளைத் தணிக்கையும் செய்தனர். பொதுமக்கள் இரசனையில், இவை எல்லாம் ஓரளவு சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தின!

    3. தற்போதைய மூன்றாம் காலகட்டம் ‘டிஜிற்றல்’ காலகட்டமாகும். இலகுவாகக் கிடைக்கும் நவீன ஒளிப்பதிவுக் கருவிகள், கணினியில் படத்தொகுப்புச் செய்யக்கூடிய இலகு வசதிகள் போன்றவற்றினால், அதிகமானோர் அவ்வப்போது குறும்பட முயற்சிகளிலும்; ஒருசிலர் முழுநீளத் திரைப்பட முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். முதலாம் காலகட்டம் போலவே இவர்களில் பெரும்பாலார் சினமாக் கவர்ச்சியினாலும், புகழ்பெறும் ஆசையாலும்தான் இம்முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். பிறமொழிகளிலுள்ள முக்கிய திரைப்படங்களை இவர்கள் பார்ப்பதில்லை; அவற்றைப்பற்றி அறிவதில் ஆர்வமுமில்லை. அதைப்போலவே இலக்கியப் படைப்புகள், திரைச்சுவடிகள் போன்றவற்றை வாசிக்கும் ஈடுபாடுமில்லை! ஆனால், ‘சுயம்புலிங்கங்கள்’ போன்று தோன்றுகிறார்கள்! இவைகாரணமாகப் பலவீனங் கள் கொண்டவையாக – குறிப்பாகத் திரைச்சுவடியில் – பெரும்பாலான ஆக்கங்கள் உள்ளன. கணிப்புக்குரிய முயற்சிகளைச் செய்வோரின் எண்ணிக்கை மிகக்குறைவே!

    **

    எமது திரைப்பட முயற்சிகளில் தீவிர செல்வாக்குச் செலுத்திப் பாதிப்பை உருவாக்குவதில் முதன்மையானவை, தமிழகத் திரைப்படங்கள்தான். திரையரங்குகள், தொலைக்காட்சி அலைவரிசைகள், டி. வி. டி.கள் மூலமாக இவை, எமது மக்களை இலகுவாகவும் தொடர்ச்சியாகவும் வந்தடைகின்றன. யதார்த்தமற்றரீதியில் – வெறும் பொழுதுபோக்குக்குரியனவாக உள்ளவைதான் திரைப்படங்கள் என்ற தவறான கருத்தை மக்களின் மனங்களில் இவை, ஆழமாகப் பதித்துள்ளன. வானொலி, செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் முதலிய தொடர்பு ஊடகங்களும் இவற்றையே செய்கின்றன. இவற்றால் கட்டமைக்கப்படும் இரசனை கொண்டவர்கள்தான் இரசிகர்களாகவும், படத்தை உருவாக்கும் படைப்பாளிகளாகவும் அமைகின்றபோது, நல்ல திரைப்படங்கள் உருவாகுவது அரிதாகின்றது; அரிதாக வரக்கூடிய நல்ல படைப்புகளை ஆதரிப்பவர்களும் எண்ணிக்கையில் குறைந்து போகின்றனர்.

    நல்ல திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் அதிகளவில் ஊடகங்களில் வெளிவரவேண்டும். நல்ல திரைப்படங்களைப் பொதுமக்கள் பார்க்கவும், அவைபற்றிக் கலந்துரையாடவும், ஊர்மட்டங்களில் – சனசமூக நிலையங்களில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் இம்முயற்சியை முதலில் ஆரம்பிப்பதும் பொருத்தமானது!

    இவ்விதத்தில் திரைப்படக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டுச் செயற்படலாம். சிங்கள சினமாத்துறை கலைத்துவ ரீதியில் வளர்ச்சியடைந்திருக்கிறது; 1956 முதல் அதற்குச் சிறப்பான தொடர்ச்சியும் உள்ளது. எனவே, தமிழ்த் திரைத்துறைப் பக்கம் திரைப்படக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தவேண்டும். தமிழகத் தமிழ்த் திரைப்படங்களின் இறக்குமதியால், இக்கூட்டுத்தாபனம் பெரும் பண வருவாயையும் பெற்றுக்கொள்கிறது! ஆகையால், தார்மிகப் பொறுப்பும் அதற்கு உள்ளதெனலாம்.

    வடக்குக் கிழக்கிலும் மலையகத்திலும் திரைப்பட இரசனைப் பயிலரங்குகளை அது ஒழுங்குசெய்யவேண்டும். தமிழரிடையேயுள்ள தகுதிவாய்ந்த வளவாளர்களுடன், சிங்களக் கலைஞர்களையும் சேர்த்து – மொழிபெயர்ப்பு வசதியுடன் – இப்பயிலரங்குகள் ஒழுங்குசெய்யப்படவேண்டும். இவற்றினால் சரியான திரைப்பட இரசனைக் கண்ணோட்டமுள்ளவர்களின் எண்ணிக்கை பரவலடையும். இதைப்போலவே ஆர்வமும் திறமையும் கொண்டவர்களைத் தேர்வுசெய்து, திரைப்பட உருவாக்கம் பற்றியும் – அதன் சகல கூறுகளையும் உள்ளடக்கி – பயிலரங்குகள் அவ்வப்போது நடைபெறவேண்டும்.

    சிங்களத் திரைப்படத்துறைக்குப் போட்டியில்லை; இலங்கையில் மட்டும்தான் அவை தயாரிக்கப்படுகின்றன; தமது மொழிப் படங்களை ஆதரிப்பதற்குச் சிங்கள மக்கள் தயாராகவுமுள்ளனர். ஆனால், தமிழகத்தில்தான் பெரும் எண்ணிக்கையில் தமிழ்ப் படங்கள் – எண்பத்தாறு ஆண்டுகளாக – தயாரிக்கப்பட்டு வருவதுடன், அவை இலங்கைத் தமிழர் இரசனைமீது பாதகமான தாக்கத்தையும் செலுத்திவருகின்றன. இவற்றுக்குப் போட்டியாகத் திரைப்படங்களில் முதலீடுசெய்து இலங்கையில் செயற்படுவது, பொருளாதார நட்டத்தைத் தருமென்ற அச்சமும் இருக்கிறது; இந்நிலைமை புதிய முயற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, கலை அக்கறையுடன்கூடிய நல்ல திரைச்சுவடிகள் திரைப்படமாக உருவாக்கப்படுவதற்கு, வேண்டிய பண உதவியையும் செய்யத் திரைப்படக் கூட்டுத்தாபனம் முன்வரவேண்டும். இந்திய மத்திய அரசின், ‘தேசிய திரைப்பட வளர்ச்சிக் கூட்டுத்தாபனம்’ (N. F. D. C. ) என்ற அமைப்பை, முன்னுதாரணமாக இங்கு எடுத்துக்கொள்ளவேண்டும்!

    தெளிவான நோக்குநிலைகளுடனான தொடர் செயற்பாடுகள், காலநகர்வில் -இலங்கைத் தமிழ்த் திரைத்துறையில், நல்ல விளைவுகளைத் தருமென நம்புவோம்!

    அனுஷா சிவலிங்கத்தின், ‘தெமள சினமாவே லாங்கேய பிரயத்னய’

    என்னும் சிங்களப் புத்தகத்தில் இடம்பெற்ற கட்டுரை)

    https://vanakkamlondon.com/stories/research-stories/2023/01/184046/

  12. வடக்கு – கிழக்கு தமிழரின் தாயகம் அல்ல! – தென்னிலங்கை இனவாதிகள் கூக்குரல் !

    IMG-20230207-113104.jpg

    வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கின்றது? தமிழர்களுக்கென ஒரு தாயகம் இந்த நாட்டில் இல்லை. தமிழர்களுக்கு தாயகம் வேண்டும் என்று போராடிய விடுதலைப் புலிகள் போரில் ஒழிக்கப்பட்ட பின்னர் என்ன நோக்கத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் போராட்டம் நடத்தப்படுகின்றது? இந்தப் போராட்டத்தின் பின்னால் உள்ள சர்வதேச நாடுகள் எவை?”

    – இவ்வாறு ஆக்ரோஷமாக சிங்களக் கடும்போக்குவாதி நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவும் சரத் வீரசேகரவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ‘ஆக்கிரமிப்புக்களை நிறுத்து!’ என்ற கோஷத்துடன் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கிய பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர்கள் இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

    சரத் வீரசேகர

    “தனிநாட்டைக் கோரும் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த படையினரை அவமதிக்கும் வகையிலும் கோஷங்களை எழுப்பியவாறு வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிப் புறப்படும் தமிழர் பேரணிக்கு அனுமதி வழங்கியது யார்? நாடு இருக்கும் தற்போதைய நிலைமையில் இப்படியான பேரணி ஒன்று தேவையா?

    இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சு மௌனம் காத்தது ஏன்? வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கின்றது? தமிழர்களுக்கென ஒரு தாயகம் இந்த நாட்டில் இல்லை.

    இது ஒற்றையாட்சிக் கட்டமைப்பைக்கொண்ட நாடு. எனவே, இந்த நாட்டை எந்தத் சந்தர்ப்பத்திலும் பிளவுபடுத்த முடியாது. சமஷ்டி வேண்டும் என்று ஊளையிடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” – என்றார் சரத் வீரசேகர எம்.பி.

    விமல் வீரவன்ச

    “இந்தப் பேரணிக்கு புலம்பெயர்நாடுகளில் இருந்து நிதியுதவிகளை வழங்குபவர்கள் யார்? அன்றாட கருமங்களில் இருக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வீதிக்கு அழைத்து வந்தவர்கள் யார்? என்பது தொடர்பில் அரச புலனாய்வுத்துறையினர் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.

    இப்படியான போராட்டங்களும் பேரணிகளும் நாட்டை வன்முறைக்களமாக்கி மீண்டும் இருண்ட யுகத்துக்கே கொண்டு செல்லும்.

    இந்த விடயம் தொடர்பில் அரசாங்கமும் அதிகாரத்தில் இருப்பவர்களும் அதிக கவனம் எடுக்கவேண்டும்” – என்றார் விமல் வீரவன்ச எம்.பி.

    https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/184814/

  13. இவரு ஊதறதையும் அந்தம்மா ஆடுறதையும் பார்க்க தில்லானா மோகனாம்பாள் ல வாற சிவாசி கணேசனையும் - பத்மினியும் நேர்ல பார்த்த மாறி இருக்கு.. 😊

    memees.php?w=650&img=b3RoZXJfY29tZWRpYW5

     

    • Haha 1
  14. சமஷ்டியை உச்சரிக்கத் தமிழரசுக் கட்சிக்கே உரித்துண்டு ! – சுமந்திரன் விளாசல்

    IMG-20230205-115037.jpg

    சமஷ்டி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்குத் தமிழரசுக் கட்சியைத் தவிர வேறு எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.”

    – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

    இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ‘இருள் சூழ்ந்த சுதந்திரம்’ எனப் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று (04) நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    “கடந்த காலங்களில் சமஷ்டியைப் பழித்துப் பேசியவர்கள் இன்று அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தாங்கள்தான் சமஷ்டிக்கு உண்மையானவர்கள்; அதற்காகவே போராடினோம் என்று கூறுகின்றார்கள். ஆனால், சமஷ்டி என்பது தமிழரசுக் கட்சியின் கோஷம். அதுவே எமது அரசியல் சித்தாந்தம். எனவே, சமஷ்டி என்ற வார்தையை உச்சரிப்பதற்கு எம்மைத் தவிர வேறு எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.”

    இன்று தமிழரசுக் கட்சி தனித்து நிற்பதையும் பலர் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு விபரம் தெரியாது. அத்துடன் விபரம் தெரியாமல் பல ஊடகங்களும் எம்மை விமர்சிக்கின்றன” – என்றார்.

    https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/184717/

    டிஸ்கி

    அதெல்லாம் சரி.. அந்த குல்லா.. 

    jawahar_lal_nehru_843f597724.jpg

    அசல் நேரு மாமா போலவே இருக்கீங்க..😊

    • Haha 1
  15. ஈழத்து தெருக்கள் எங்கும் ஒலித்த இசை வாணியின் இதயக் குரல் !!

    vani_jayram.PNG

    கட்டுரையாளர்   – ஐங்கரன்விக்கினேஸ்வரா

    (ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனையோ பாடல்களை பாடிய இசைவாணியின் இதயககுரல் இயற்கையோடு இணைந்து ஓய்ந்துள்ளது. தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்த பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வதுவயதில் காலமானார். அவர் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)

    தமிழில் மல்லிகையாய் மணம்வீசி

    எழு சுவரங்களுக்குள் எத்தனையோ பல பாடல்களை பாடிய பாடகி வாணி ஜெயராம் அவர்கள், பல ஈழ விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை.

    காலம் கடந்தும் வாழ்வார்!

    தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்கள் பாடிய மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வது வயதில் காலமானார். பத்தாயிரம் பாடல்களை பலமொழிகளில் பாடியிருக்கும் அந்தக் குரலிசைக் கலைஞர் காலமானாலும் காலம் கடந்தும் வாழ்வார்.

    பாடும் பறவைகள் வாருங்கள்…புலி வீரத்திலீபனை பாடுங்கள்….என்று தியாக தீபத்தின் தியாகத்தை உணர்வோடு பாடியஇசைக்குயில் வாணி ஜெயராம்..உயிர் பிரிந்ததாலும் ஓயாத அந்த இசைக் குயில் எப்போதும் மீண்டும் மீண்டுமாய் எங்கோ ஒரு மூலையில் இசைத்துக் கொண்டே இருக்கும்.

    ” வீசும் காற்றே தூது செல்லு தமிழ்.

    நாட்டில் எழுந்தொரு செய்தி சொல்லு…” மேகங்களே இங்கு வாருங்கள்…எனப்பல எழுச்சி பாடல்களை பாடிய தென்னிந்திய பிரபல மூத்த பாடகி வாணி ஜெயராம், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலப் பகுதியில் இருந்து, எமது தாயக விடுதலைப் பாடல்கள் பலவற்றை உணர்வுபூர்வமாக பாடி, விடுதலைக்கு உணர்வூட்டிய குரல் ஓய்ந்து போனது ஈழ மக்களின் மனதை நெருடிக் கொண்டுள்ளது.

    “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி…காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…என கணீரென ஒலித்த இவரின் குரலிசைஅமைதியின்றி தவிக்கும் அகங்களுக்கு என்றென்றும்.

    அருமருந்தாகியதே என்று கூறலாம்.

    ‘நல்லூர் வீதியில் நடந்தது யாகம்..

    நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்..

    தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை

    திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை’ என வரலாற்றில் தன் பாடல்கள் மூலம் பங்களிப்பு செய்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறுவர்.

    தாயக விடுதலைக்கு தோள் கொடுத்தவர்:

    தமிழகத்தில் பலரும் பாடத் தயங்கிய சூழலில் துணிச்சலாகக் ‘களத்தில் கேட்கும் கானங்கள்’ இறுவட்டிற்காக ‘வீசும் காற்றே தூது செல்லு..தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு..ஈழத்தில் நாம் படும் வேதனைகள் – அதை

    எங்களின் சோதரர் காதில் சொல்லு..

    கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ..கடல்

    கை வந்து தாங்கிடும் நீளமல்லோ.,

    எத்தனை எத்தனை இங்கு நடந்திட

    எங்களின் சோதரர் தூக்கமல்லோ..

    இங்கு குயிலினம் பாட மறந்தது..

    எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது..

    இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை.. உங்களின் ராணுவம் செய்து முடிக்குது…எனும் உணர்ச்சிமிக்க பாடலைப் பாடி தாயக விடுதலைக்கு தோள் கொடுத்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மண் ஒருபோதும் மறவாது.

    ஈழப் போரின் உச்சக் கட்ட காரங்களான 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய “சென்பகமே சென்பகமே ..சிறகை விரித்து வா.. என்ற பாடலை வாணி ஜெயராம் அவர்கள் அவருடைய இனிமையான குரலில் மிக அற்புதமாக பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் தேவேந்திரன்தான் இசையமைத்த “ஈட்டி முனைகள்” என்ற இசைத் தொகுப்பில் இப்பாடல்கள் வெளியிடப்பட்டன.

    1974இல் ‘தீர்க்க சுமங்கலி’

    1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது. இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.

    கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். “எல்லா மொழிகளிலும் அவற்றினுடைய இலக்கணம் தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே” – என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்.

    இசை மருந்து விருந்து:

    பேசும்போதும் மிக மென்மையாக பேசக்கூடிய அவர் தமிழ் திரைப்படங்களில் அவர் பாடிய பலப் பாடல்கள் பலருக்கும் மிகவும் பிடித்தமானவை. இசை என்பது ஒரு வித மருந்து. அதை தம் குரல்களால் விருந்தாக படைக்கும் இசை வைத்தியர்கள் வரிசையில் பாடகி

    வாணி ஜெயராம் முன்னிலையில் என்றும் நிற்கிறார் என்பதே உண்மை.

    பிரபல தென்னிந்திய திரையிசைப் பாடகி, வாணி ஜெயராம் தனது 78வது வயதில் காலமாகியது பலரையும் கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது.

    தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த “பாடும் பறவைகள் வாருங்கள் என்ற பாடலுடன், களத்தில் கேட்கும் கானங்கள் ஒலி நாடாவில் வீசும் காற்றே தூது செல்லு, தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும், என்னும் பாடல்கள், பாசறைப் பாடல்கள் ஒலி நாடாவில் பரணி பாடுவோம் புதியதானதோர் பரணி பாடுவோம், மேகங்கள் இங்கு வாருங்கள், வீரன் மண்ணில் புதையும் போது, போன்ற விடுதலைப் பாடல்களுடன், தலை வாரி பூச் சூடினேன், செந்தமிழ் வீரனடா சீறிடும் வேங்கையடா எங்கள் … போன்ற இன்னும் பல எழுச்சிப் பாடல்களைப் பாடி தாயக விடுதலைக்கு உயிர்க்குரல் கொடுத்தவர் வாணி ஜெயராம்

    அவர்களை ஈழத்துக் கலைஞர்கள் கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன் ஒருபோதும் மறவர்.

    இசை வாணியின் இதயக்குரலால் எத்தனையோ மொழிகள், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிரசித்தி பெற்றன.

    இசை வாணியின் மாயக் குரலில் மயங்கிக் கிடந்த காலங்கள் பல. வானலைகளில் தேனென ஒலித்த அந்த குரல் ஓய்ந்து போனாலும், ஈழத்து தெருக்கள் எங்கும் இசை வாணியின் இதயக் குரல் என்றும் ஒலித்த வண்ணமே உள்ளது.

    https://vanakkamlondon.com/stories/featured-story/2023/02/184744/

    • Like 2
    • Thanks 1
  16. 13 இற்கு முடிவு கட்ட இந்தியா சம்மதிக்காது ! – சம்பந்தன் நம்பிக்கை

    IMG-20230129-073532.jpg

    அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அந்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும். இந்த நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.”

    – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

    “13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும், அந்தச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் எனவும் இனவாதிகளான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர கூறும் கருத்துக்களைக் குப்பையில் தூக்கி வீச வேண்டும். அவர்களின் விசமத்தனமான கருத்துக்கள் இப்போது வேகாது” – என்றும் சம்பந்தன் பதிலடி கொடுத்தார்.

    அவர் மேலும் தெரிவித்ததாவது:

    “13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்,ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திவிட்டு சென்றுள்ளார். எம்முடன் ஜெய்சங்கர் நடத்திய பேச்சின் போதும் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

    ஜெய்சங்கரின் பயணத்தின் பின்னர் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதி, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். ஜனாதிபதி வாயால் மாத்திரம் கருத்துக்களை வெளியிடாமல் அதனைச் செயலிலும் காட்டவேண்டும்” – என்றார்

    https://vanakkamlondon.com/world/srilanka/2023/01/184227/

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.