Jump to content

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5161
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Posts posted by MEERA

  1. 3 hours ago, goshan_che said:

    😔 ம்ம்ம்ம்

    குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.

    அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள்.

    உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது.

    நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது.

    ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.

     

    தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.

  2. 30 minutes ago, goshan_che said:

    உண்மைதான் மீரா - நல்லூர் ஆதீனம் அருகில் ஒரு அம்மாவிடம் சிறுவயதில் வாங்கி சாப்பிடுவேன். அன்று முதல் விருப்ப உணவு. கெடுதல் அதிகம் இல்லை.

    கொண்டு வந்ததை 3 கிழமையில் அரைத்து முடித்தாயிற்று.

    இங்கே இலக்கியா அவனில் வறுப்பது, கடிக்க மா போல் வரும். ஊரில் வறுத்தது பதமாக கடிபடும். கடலை போல் இருக்கும். 

    அடுத்த தடவை நீங்கள் Wembley இல் உள்ள Ganapathy cash & carry க்கு செல்லும் போது கடையின் பின் பக்கம் மரக்கறிகள் வைத்திருக்கும் Cool Room வாசலுக்கு அண்மையில் இடது பக்கமாக பல brand களில் இந்த மஞ்சள் கடலை உள்ளது. வாங்கிப் பாருங்கள்.

  3. 8 minutes ago, குமாரசாமி said:

    அப்படியென்றால் வெளிநாட்டாக்களுக்கான அந்த வடை வடை விலையையும் கொத்துரொட்டி விலையையும் ஆதரிக்கின்றீகள்.

    நிச்சயமாக இல்லை அண்ணா. அரசாங்கமே கொள்ளயடிக்கும் போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்?

    அதனால் தான் விலை கூட என்றாலும் நான் பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி விற்கும் கடைகளை நாடுவது.

    நாங்கள் என்னதான் வேட்டியைக் கட்டி வெறுங்காலுடன் போனாலும் எம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள். 

    ஏற்கனவே பலர் கூறியது போல் கடை வைத்திருக்கும் நண்பன் கூறியது …..,.

    எமது தோல், வாசனைத் திரவியங்கள், கைத் தொலைபேசி & Cover, நகைகள்,

    கைப்பைகள் ( உள்ளூர் கைப்பைகள் ஏதாவது ஓரிடத்தில் தேய்ந்து கறுப்பாக ஏதாவது ஒட்டி அல்லது சிப் இற்கு அண்மையாக சிறிதளவு தூசி படித்து இருக்கும்)

    , உடுப்புகளின் தன்மை ( சாரமோ வேட்டியோ புதிதாக இருக்கும்) அதேபோல் காலணிகள் ( பாட்டா செருப்பு என்றாலும் புதிதாக இருக்கும்) மிக முக்கியம் Self hygiene சுய சுத்தம். இப்படி பல….

     

    • Like 1
  4. On 9/4/2024 at 18:24, goshan_che said:

    படங்கள் IV

    கல்கிசையில் தெருவோர கடை ஒன்றில் விற்பனைக்கு இருக்கும் டிவியில் ஆப்கான்-இலங்கை கிரிகெட் போட்டி ஓடுகிறது.

    ஏழைகள் நிரம்பி வழியும் “நரகாபுரியில்” வீதியோர சோரூம் கடை ஒன்றில் ஏன் இந்த டிவியை வைத்துள்ளார்களோ, அதை வாங்கத்தான் யாரிடமும் காசில்லையே🤣.

    large.IMG_5774.jpeg.17cab8e59788e4ebc06a82e957eafb37.jpeg

     

    இவ்வகையான தொலைக்கட்சிகள் 100% உள்ளூர் நிதி மூலம் வெளிநாட்டு நிதி உதவின்றி வாங்கப்படுகின்றனவா?

  5. சிறீலங்காவில் அரசாங்கமே உள்ளூர் வாசிகளிக்கு ஓர் கட்டணம் வெளிநாட்டவர்களுக்கு ஓர் கட்டணம் என்று நிர்ணயம் செய்யும் போது இது பெரிய விடயம் அல்ல. ஆனால் காவல்துறையும் நீதிமன்றும் தலையிடுகிறது என்றால் விடயம் சற்று பாரதூரமானது.

    ஆனால் பிரித்தானியாவில் நீங்கள் பின்லாந்துக்காரான் என்றாலும் பிரித்தானியக்காரன் என்றாலும் கட்டணம் ஒன்றே!

  6. Just now, goshan_che said:

    ஓம் மீரா கணக்கில் பிழை விட்டுள்ளேன்.

    விசிட் வீசாவை தவிர மீதி எல்லாம் கொஞ்சம் ஓவராய்தான் தெரியுது.

    கொஞ்சம் இல்லை ரெம்ப ஓவர்

  7. On 10/4/2024 at 21:08, goshan_che said:

    அம்மு  சன்ரைசர்ஸ் ஐதரபாத்துக்கு எடுபட்டதாக நினைக்கிறேன். 

    அதே போல் நேற்று replacement ஆக யாழின் வியாஸ்காந்த் எடுபட்டுள்ளார்.

    ஐ பி எல் லில் ஈழத்தமிழருக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரே அணி கலாநிதி மாறனின் ஹைதரபாத் தான்.

    @வாலி உங்கள் கவனத்துக்கும்.

    நான் சி எஸ் கே (வாய்ப்பு முழுக்க இலங்கை வீரருக்கே) விட்டு, ஈழத்தமிழரை உள்ளீர்ர்கும் எஸ் ஆர் எச் க்கு மாற நினைக்கிறேன்.

    என்ன சொல்கிறீர்கள் @MEERA

    எல்லாம் உங்க விருப்பம் எசமான்🤣

    • Haha 1
  8. 5 hours ago, goshan_che said:

    விசிட் வீசா கட்டணம் $50 இல் இருந்து - 75 ஆகியுள்ளது.

    ஆனால் முன்னர் 1 மாதம். இப்போ 3 மாதம், 60 நாளைக்கு ஒரு தரம் வெளியே போய் வர வேண்டும்.

     

    கோசான் 6 மாதங்கள் - 180 days.

     

    5 வருட இந்திய விசாவிற்கு $80 ஆனால் இவை $500 ஆம்.

  9. 56 minutes ago, goshan_che said:

    @MEERA வியாபாரிகளின் கொள்ளை இலாபத்தை பற்றி கதைத்திருந்தோம்.

    இந்த மஞ்சள்/பட்டாணி கடலை 100g யாழ்ப்பாணத்தில் ஒரு பலசரக்கு கடையில் 100 ரூபாய்க்கும் (லூசாக), கொழும்பில் டேவிட் கிராம் ஸ்டோரில் 150 ரூபாய்க்கும் வாங்கினேன் (பொதி செய்து). 

    இதை உற்பத்தியாளரிடம், அதிக எண்ணிக்கையில் வாங்கும் போது நேரடியாக பக்கெட் செய்த நிலையில் 80 ரூபாய்க்கு வாங்கலாம் என நினைக்கிறேன்.

    இங்கே £1.10.

    அதாவது இன்றைய மதிப்பில் 415 இலங்கை ரூபாய்கள்.  நான் நின்ற சமயம் 450 ரூபாய்.

    எல்லாரும் இலாபம் பார்க்கத்தான் வேண்டும். ஆனால் 1, 2, 3 இல்லை 5 மடங்கு கூட்டி விற்பது கொள்ளை அல்லவா?

    அதுவும் இது நீண்டநாள் கெடாத பொருள்.

    போக்கு வரத்து இதர செலவுகள் போட்டால் கூட 3 மடங்கை தாண்ட கூடாதல்லவா?

    large.IMG_7357.jpeg.569166566d634e5009e874e1ad5b022a.jpeg 

    சிறீலங்காவிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதில் அளிக்கிறேன்.

    ஆனால் Local Market Quality க்கும் Export Quality க்கும் வித்தியாசம் இருக்கும் என நினைக்கின்றேன்.

    மேலும் வெளிநாட்டிற்கு என்றால் எந்த வியாபாரியும் விலையை கூட்டியே சொல்வார்கள். 

    • Like 1
  10. 6 hours ago, goshan_che said:

    2022 இல் அல்ல. பல வருடமாகவே இதுதான் நடைமுறை என நினைக்கிறேன். நான் 2010/12 இல் போகும் போது விசாரித்த போதே இதே AA பதிவு பற்றி கூறினார்கள்.

    நீங்கள் மேலே கொடுத்துள்ளது DVLA உங்கள் யூகே லைசன்சின் தகவலை, சர்வதேச லைசன்சுக்கு மாற்றி தரும் பத்திரம். ஆனால் அதை கொண்டு போய் கொழும்பில் AA யிடம் கொடுத்து அங்கே ஒரு அனுமதி எடுக்க வேண்டும்.

    ஆனால் வீதியில் மறிக்கும் இலங்கை பொலிசுக்கு இது தெரியாதபடியால் நீங்கள் காட்டும் பத்திரத்தையே ஏற்பார்கள்.

    இப்போ இந்த கொழும்புக்கு போய் AA யிடம் பதிவதை, ஏர் போர்ட்டிலேயே செய்து தரப்போகிறார்கள்.

    மறுபடியுமா?

    2022/2023 இல் இருந்து கட்டாயமாக்கி உள்ளார்கள்.

    2 hours ago, alvayan said:

    உள் நாட்டிலேயே சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்தவன் ஒரு நாளைக்கு பத்துப் பேரை கொல்கிறான்...இவையிந்திறத்தில்.. வெளிநாட்டவருக்கு அனுமதிப் பத்திரமாம்.. கேட்கிறவன் கேணையன் என்றால்......கழுதைகூட ஏரோப்பிளேன் ஓடுமாம்

    வெளிநாட்டில் ஏற்கனவே சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளவர்களுக்கே சிறீலங்காவில் மட்டும் செல்லுபடியாகும் வகையில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும்.

  11. On 6/4/2024 at 17:40, goshan_che said:

     

     

    படம் பார் பாடம் படி

    நான் கண்டு வந்து சொன்னதை கோஷான் முதலைகளோடு கும்மாளம் அடித்து விட்டு, பாண் இல்லாவிட்டில் என்ன கேக் சாப்பிடுங்கள் என சொல்கிறார் என கூறியவர்கள் கவனத்துக்கு.

    மேலே நீர்கொழும்பு, மாத்தறை பகுதிகளில், சிஙக்ளவர்களால் நடத்தப்படும் துணிக்கடைகளில் இன்று பொருட்கள் வாங்கி விட்டு, காசு கட்ட காத்து நின்ற கூட்டம்.

    இவர்கள் வெளிநாட்டு காசில் வாழும் தமிழர்கள் அல்ல, பெருநாளுக்கு உடுப்பு எடுக்கும் முஸ்லிம்களும் அல்ல. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு உடுப்பு எடுக்கும் சராசரி, சிறு நகர்ப்புற சிங்கள மக்கள்.

    மாத்தறையில் காசு கட்டி முடிக்க ஒரு மணத்தியாலம் ஆகியது என ஒருவர் கூறியுள்ளார்.

     

     

    இந்த படங்களை வைத்து சிறீலங்காவின் பொருளாதார நிலையினை கணிக்கும் உங்களின் திறன் அற்புதம்.

  12. காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு - நாட்டு நிலமை.
     

    தெரிவித்தது 2024 இல் சிறீலங்காவிற்கு பயணம் செய்தவர்.

    உலக வங்கிக்கு இந்த விடயம் தெரியாது போல………..

    • Haha 1
  13. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நடை தூரத்திலேயே Hotel உள்ளது (பெயர் மறந்துவிட்டது - Restaurant சேர்ந்தே உள்ளது)

    திருச்செந்தூரில் Hotel Chitra Park ( Restaurant இல்லை) சில நிமிட நடை தூரம்.

     

     

  14. ஓர் சரக்கு கப்பல் ஓர் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வருகிறது என்றால் அந்த கப்பலில் உள்ள எல்லா கொள்கலன்களும் அங்குள்ள துறைமுகத்தில் இறக்கப்படுவதில்லை. 

    சில சந்தர்ப்பங்களில் ஓர் பெரிய துறைமுகத்திலிருந்து  அண்மையிலுள்ள துறைமுகங்களுக்கு சிறிய Feeders மூலம் கொண்டு செல்லப்படும்.

     

  15. On 1/4/2024 at 00:13, குமாரசாமி said:

    உங்கள் பார்வையில் இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை யார் நடத்தியது?

    ஏற்கனவே மேற்குலகின் செல்லப் பிள்ளையான ரணில் பிரதமர், மேற்குலகின் மறைமுக கரங்களின் பிடியில் மைத்திரி. 

    அந்நிலையில் மேற்குலகு குண்டுத் தாக்குதலை செய்ய வேண்டிய காரணம் என்ன?

  16. 21 hours ago, விசுகு said:

    இது தாயகத்தில் வாழும் யாழ் கள உறவு ஒருவரின் முகநூல் பதிவு. 

    நாடு நன்றாக இருக்கிறது என அந்நாட்டு மக்களே சொல்ல வேண்டும் மாறாக நாற்பது நாளில் நாட்டைசுற்றிப்பார்த்து விட்டு மிக பிரமிப்பாக இருக்கிறது என சொல்ல முடியாது.

     

    இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும் , நாள்கூலி வரை பிரட்டிப் போட்டுள்ள நாட்டின் பொருளாதார சரிவு மக்களை எப்போது மீட்டெடுக்க முடியும் என சொல்ல முடியாது மாறாக அடகு வைக்கப்பட்டுள்ளார்கள். அடகு வைத்தும் வாழ்வை தொடர்கிறார்கள். என்றே சொல்லலாம்.

     

    கொழும்பில் இருந்து பாரக்கும் போது அழகாக தெரியும் போட் சிற்றி ,தாமரை கோபுரம்,அடுக்கு மாடி உல்லாச விடுதிகள் கொள்ளை அழகுதான் போட்டிருக்கும் காப்பட் வீதிகள் கூட  

     

    ஆனால் உங்கள் நாட்டின் காசின் பெறுமதிக்கு இலங்கை இலகுவாக இருக்கும் தரமாகவும் இருக்கும் ஐம்பது சதம் காசுக்கு வாங்கிய ரொபி ஒன்று 10 ரூபாய். உழைப்புக்கு ஊதியம் என்பது பாம்பாட்டி விரித்திருக்கும் துண்டில் விழும் சில்லறை போல எடுத்து எண்ணுவதற்குள் சிதறி விடுகிறது.

     

    எங்கோ ந சட்டமக்கும் ஓர் மாற்றம் வாழ்வியலில் நிகழ்ந்து விடாதா என ஏங்கும் சாமானிய மக்களே இங்கு இலங்கையில். 

     

    ஆனால் நடப்பதோ எரிவதில் பிடுங்குவது இலாபம் என்ற நோக்கு .

    https://www.facebook.com/share/p/QGe169avBt5AkuP7/

    நன்றி அண்ணா….

    ஆனால் நாம் சிலதை ஏற்றுக் கொள்ள வேண்டும்…

    2019 நவம்பரில் ஓர் பிரித்தானிய பவுண்ட்ஸ் 230/= இன்று 04/04/24 371/=. ஆனால் பொருட்களின் விலைகள் பல மடங்கு கூடியுள்ளன.

    கடந்த சில வருடங்களாக உச்சத்தில் இருந்த பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள் சில அத்தியாவசிய பொருட்கள்.

     

    அதே போல் அங்குள்ள 50% மேற்பட்ட தமிழ் இளம் சமுதாயம் ஒற்றை சிறீலங்காவிற்குள் உள்வாங்கப்பட்டு விட்டார்கள்.

     

    • Like 3
    • Thanks 1
  17. @Kapithan

    யாருக்கு சாதகம்?

    சிறீலங்கா தமிழ் கிறீஸ்தவர்களை அழிப்பதற்கு அனுமதித்த மேற்குலகை ஆதரிக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?

  18. 7 hours ago, satan said:

    ஆமா ...... அவர் சுற்றுலா  போய், உல்லாசம் அனுபவித்து, தான் ரசித்தது ருசித்தது எல்லாம் புளுகுகிறார், நீங்கள் போதாததற்கு பண முதலைகளுக்கு காசு அனுப்புகிறேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்? இவர் இலங்கையில் இருந்த காலத்தில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. மற்றவைகளை நினைத்துப்பாருங்கள்.... இவை நாளாந்த வாழ்வில் முக்கியமான பொருட்கள். சாதாரண விவசாயி எரிபொருள் விலையேற்றம், பசளை விலையேற்றம், கூலி அதிகம் கொடுத்து விவசாயத்தை தொடர முடியவில்லை. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு முறிந்து திணறுகிறது. வெளிநாட்டு உதவியுள்ளவர்கள், சாதாரண பிறந்த நாளையே பிரமாதமாக கொண்டாடுகிறார்கள். சாதாரண மக்கள் தம் அன்றாட வாழ்வை ஓட்ட திணறுகிறார்கள். இவர் சந்தித்தவர்களும், இவரை சந்தித்தவர்களும் பணமுதலைகளே. அவருக்கு எப்படி ஏழைகளின் அவலம் புரியும்? அவர் கொடுத்த தலையங்கத்தை பாருங்கள்..... முன்பு எங்கோ கேட்ட நினைவு வருகிறதா என நன்றாக நினைவு படுத்திப்பாருங்கள். வெளிநாட்டுக்காரருக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவு சொற்பமாகத்தெரியும், அவர்களுக்கோ  சுமக்க இயலாதது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல ராசா!

    சாதான்… கோசான் கூறுவதை பலர் ஆமோதிக்கிறார்களே? அதுவும் சிறீலங்கா பக்கம் அண்மையில் போகாதவர்கள்…. 

    சென்றவருடம் போனவர்களின் கருத்துக்கள் கூட 2024 இன் நிலை என்று மறுதலிக்கப்படுகிறதே?

  19. 7 hours ago, goshan_che said:

    5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்).

    இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50?

    ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?

    பிகு

    எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.

    எனக்கு தெரிந்த கடைக்காரர்களிடம் விசாரித்ததில் எள்ளுப்பாகு இங்கேயே தயாரிக்கப்படுகிறது.

    மேலும் கடைக்காரர்களின் இலாபம் 40% ற்கும் மேல். விற்பனை விலை £ 3.50 எனில் கொள்வனவு விலை ஆகக் குறைந்தது £ 2.50. மேலும் இங்கு 1kg எள்ளின் விலை £ 12.00 

    https://www.tesco.com/groceries/en-GB/products/259652136

    மணித்தியாலத்திற்கு ஆகக்குறைந்தது £ 8 சம்பளம் என்று வைத்துக்கொண்டாலும் ஒருவரால் ஒரு மணித்தியாலத்தில் எத்தனை எள்ளுப் பாகினை தயாரிக்க முடியும்? அண்ணளவாக 50 எனின் ஓர் எள்ளுப் பாகினை தயாரிக்கும் செயவு 0.16p.

    இனி மின்சாரக் கட்டணம் தயாரிப்பு செய்பவரின் வரி உட்பட மற்றைய செலவுகளை கூட்டிப் பாருங்கள்.

  20. அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை”

    இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

    உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.

     

  21. @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி…

    ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா?

    நீங்கள் குறிப்பிட்டவாறு

    தமிழ்தேசிய கூட்டமைப்பு 

    தமிழ் தேசிய மக்கள் முன்னணி

    தமிழ் மக்கள் கூட்டணி

    ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.