கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது 2 hours ago
கனத்தைப் பேய்க் கவிதை…..
இந்துவில் படித்த காலம்..
இருப்பதுவோ நாரகேன்பிட்டி..
இது பொரளை
மன்னிங்ரவுன்….
இது நம்ம அண்ணருடன் வாசம்
சரித்திரம்..வேண்டா மே
ஆடிவேல் விழாக்காலம்..
அடிபட்டு பிடிபட்டு..
அனுமதி பெற்று..
சம்மாங் கோட்டாரிடம்
போயுமாச்சு..
இந்துக்கூட்டம்
ஒருவம்புக்கூட்டம்..
வெள்ளவத்தை
சந்து முந்து ரோட்டெல்லம் போய்
கூடப் படிக்கிற பிகருகளின்
வீட்டு பூந்தொட்டிகளை
ரோட்டில் போட்டுடைத்து
தூக்கிவைத்து….
உள்ள
கடையெல்லாம் சாப்பிட்டு
ஐஸ்கிறீம் குடித்துமுடிய
மணி சாமம் ஒரு மணியாச்சு…
என்னதான் சுத்து சுத்தினாலும்
படுக்கைக்கு கட்டைக்கு வந்திடவேணும்..
இல்லையோ
வீட்டிலை நிற்கின்ற மரத்து தடி பாவம்..
சரி
ஒரு கரும்பு வாங்கி
முழத்தில் .இரண்டாக்கியாச்சு
போகும்பாதை திருடர் காடையர்
உள்ள பாதையாகையால்..ஆயுதம்
154 இலக்க பஸ் எடுத்து
கனத்தை சந்தியில் இறங்கி
ஒரு மைல் வடக்கை நடக்கணும்
கை இரண்டிலும் கரும்பு
நிமிர்ந்த நடை..
கனத்தை பெரும் பேயுலாவும்..சுடலை..
என்பது அறிந்த கதை..
இனி…
நடை தொடங்க
மெல்லிய சலங்கைச் சத்தம்..
நிற்க கேட்கவில்லை…
நடக்க சலங்கை ஒலி
நிற்க இல்லை
ஏம சாமம்…
பேய் என்னோடை வருகுது
கரும்பும் கையும் நடுங்குது..
ஓட ..சலங்கைச் சத்தம் துரத்துது
நிற்க ..இல்லை.
சலங்கைச் சத்தம் கேட்க கேட்க
ஓடிவந்து
ஒருமாதிரி அறைக் கதவை பூட்டியாச்சு..
சத்தம் இல்லை…
சாரம் எடுக்கப் போக
மீண்டும் சத்தம்..
கத்தியை கையிலை வைத்தபடி
உடுப்பை கழட்டினால்..
சிரிப்பை அடக்க முடியவில்லை
உள்ளங்கியில் (ஜட்டி)..தகடு
கொழுவுப்படாமல்.. போட்ட கிணு கிணுத்த
சத்தம் தான்
கனத்தை பேய்…
(மன்னிக்கவும்..பெண் பிரசைகள் வாற இடத்தில்…இப்படி
ஒரு கிறுக்கல் போட்டதிற்கு…. எல்லாம் சிரிப்பதற்கு மட்டுமே)