Jump to content

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3585
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Posts posted by alvayan

  1. விசுகர் தொடருங்கோ...அதுக்காக அன்ய்ஹநாட்டில் பாலும் தேனூம் ஓடுது என்று எழுதாதையுங்கோ....பிறகு யாழில்.. 13 பக்கம் ஓடலாம்... சும்மா சிரிப்பதற்காக மட்டுமே...கோசான்ஜி கோபிக்க வேண்டாம்..

    • Thanks 1
  2. 22 hours ago, Kandiah57 said:

    நானும் உங்கள் வீட்டுக்கு கிட்ட தான் நிற்கிறேன். பின்னேரம்.  5மணிக்கு ஜேர்மனிக்கு விமானம்    4 -4-24.   தொடக்கம் இங்கே சுத்தி திரிகிறேன்.  😀

    அய்யனே..அஞ்சப்பரில்  நிற்பதாகப் பார்த்தேன்..அப்ப நீங்கள்  அந்தப் பக்கம்..காலையிலை பார்த்தால் கிட்ட நிற்பதாக..அட ஆளப்பிடிச்சு..இசுபைசியில் ஒரு பிரேக்பாஸ்ட்..லிங்கத்தில் 2 மாலுபணிசும்,ஒரு இசுபெசல் ஐஸ்கிறீமும்,பூரணியில் பருத்தித்துறைவடையும் வாங்கித்தர யோசித்தேன்...கிரகண லீவு எடுத்தபடியால்..முதலாளி .. வாவா..உடனை வாவென்றூ நிக்கிறான்...போகாவிட்டால் கதை கந்தல்..இதாலை கந்தையரை...காய் வெட்ட வேண்டி வந்திட்டுது...உங்களுக்கு ஜேர்மன் பக்கத்திலைதானே மீளவும் வருவியள்..தானே .. சந்திப்போம்...மு.கு..இந்த கடை மூன்றும் எனக்கு நடைத்தூரம்...

    உங்கள்   வருகைக்கு நன்றி கந்தையர்...சந்திப்போம்..

    • Thanks 1
  3. 13 hours ago, ஏராளன் said:

     

    https://www.virakesari.lk/article/180935

    நியாயம் இலங்கையில் இந்த வியாழன், வெள்ளி விடுமுறை. சனி, ஞாயிறு வாரவிடுமுறை. இது போதாது என்று ஒரு குரூப் திங்கள் அரசாங்கவிடுமுறை தேவை என போராடுதாம். அவரவர்ட்கு அவரவர் பிரச்சனை. 

    நம்ம நாட்டுக்காசா..கடன்பட்டதுதானே...அள்ளி விசுக்கு..

  4. 57 minutes ago, colomban said:

    . சிங்களவனும் தமிழனும் ஒன்றாக கயிரிளுக்கும் போட்டியில் கலந்து கொள்கின்றார்கள். நாடு அந்த மாதிரி இருக்கு   

    ஆமா ...இப்பிடி கயிரிளுத்தால் நாடு அந்த மாதிரி இருக்குமா ? அதுசரி ஒங்களுட ன்  முன்னம் நோம்புக்கஞ்சி  ...சாப்பிட்டிருப்பாங்களே...  நீங்க கயிறு இழுக்கலையா...அந்த  டைம் நாடு எப்புடி இருக்குமின்னும் சொல்லு😃ங்க..

    • Haha 1
  5. சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..

    நிர்வாகம்..வணக்கம்...எனது இந்தக் கவிதையை...26வது அகவை  தொகுப்பில் நகர்த்திவிட வேண்டுகின்றேன்...

  6. 9 hours ago, ஈழப்பிரியன் said:

     

    அது சரி ஏன் அகவை 26இல் பதியவில்லை?

    மனுப் போடுங்கோ மாற்றுவார்கள்.

    காலம் கடந்து விடவில்லையா?ஏதற்கும் கேட்டுப் பார்க்கின்றேன்...

    நானும் கண்ணாடி இல்லாததால் வெளியே போய் பார்க்கவில்லை.

    கண்ணாடி சிலவேளை காட்டவில்லை..முழுக்கண்ணால் பார்த்து ..இன்பம் கண்டுமிருந்தேன்..அசட்டுத்துணிவு..

    ஏதோமனதில் பட்டதை எழுதினேன்..வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றி..

    ரசோதரன்,யாயினி வந்து எட்டிபார்த்து சிரித்தமைக்கு நன்றிங்க..

  7. 15 minutes ago, நியாயம் said:

    ஆனந்த சங்கரி, டக்லஸ் இப்படி ஒவ்வொருவராய் ஓய்வு பெற்றால் எங்கள் ஆட்களுக்கு போர் அடிக்கப்போகிறது. 

    சுமந்திரன் அவர்களால் டக்லஸ் தேவானந்தா இடத்தை நிரப்ப முடியுமா. 

    தூற்றுவதற்கு எவரும் இல்லை என்றால் தேசிய அரசியலை எப்படி நகர்த்தப்போகின்றார்கள். 

    ஏன் யாழில்கூட ...தகுதியானவர் இருக்கினம்தானே....?🙃

  8. சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..

     

    திங்க ள்  வேலைக்கு லீவு வேணும்..

    சாட்டேதும் சொன்னால் மனிசி நோண்டுவா..

    அடிச்சது லக்கு…

    சூரிய கிரகணம்

    சனிதோசம்…உள்ளவை

    கட்டாயம் பார்க்க  வேணும்..இது

    செல்வகணபதி ..அய்யர்

    கண்மூடி மூன்று நிமிசம் பார்த்தால்…

    கண்ட தோசமும் ஓடிடும்..இது

    அம்மன் கோயில் அய்யர்….

    அடிசக்கை…ஆரும் இதை விடாதையுங்கோ

    பாருங்கோ..பெரும்பேறு கிடைக்கும்

    அய்யப்பன் அய்யர்..

     

    சனியனை

    சாட்டுச்  சா ட்டாக சொல்லி

    சமாளிச்சு …லீவு எடுத்தாச்சு..

    எனி பிளான் இரண்டு…

    மச்சுமுடிய இரண்டு மணியாகும்

    கிரகணம் மூன்று மணிக்கு…

    காலை பத்துமணிவரை காவல் இருக்கோணுமே..

    பிளான் மூன்றும் ரெடி…

    நடைபயிற்சி பொய்சொல்லி..

    தமிழ் கடையில்..

    கொடுவாமீனும்…காரல்மீனும்

    கீரையும் மாங்காயும் வாங்கிவந்தாச்சு…

    முழுகிவிட்டு…

    முழுச்சமையல்..நான்..

    மனுசி வடக்கு சமையல் என்றால் இன்று

    நான் தெற்கு சமையல்

    அம்மணியும் பச்சைக்கொடி..காட்டியாச்சு.

     

    மச்சும் தொடங்கியிட்டுது…

    தோனிவர..கைதட்டி

    மரியாதை செய்துவிட்டு

    மனம் விட்டு

    மச்சை  ரசித்தால்

    நேரமோ வட்டுக்கிள்ளை போட்டுது..

    கிரகணம் வரப் போகுது..

    கிங்சும் வெண்டுட்டுது..

    சந்தோசத்தில்  சமையல்

    நாலு அடுப்பிலும்

    நடக்குது..

     

    கிரகணத்தை பார்க்க

    பின்புற காணியில்..

    பொடியன் கமராவுடன்

    மனிசி போனுடன்..

    நானும் இரண்டு கறுப்பு கண்ணடியுடன் ரெடி..

    குழம்பு,காரல் தீயல்

    கீரைக்கறி அடுப்பில் கொதித்தபடி..

    பொடியன்

    அப்பா வாங்கோ வாங்கோ..

    கண்ணடி போட்டு

    கிரகணம் காண

    புல்லரித்த உடம்பு…நேரம் மறந்தது..

    கைகூப்பி கண்மூடி

    மனுசியையும் மூடவைத்து

    கும்பிட்டவுடன்

    என்னை மறந்தவுடன்..

     

    வித்தியாசமான வாசனை

    அடுப்படில் இருந்து

    அடித்துப் பிடித்து

    ஓடிப்போய் பார்த்தால்..

    கீரையும் அடிப்பிடித்து

    காரல் தீயலும் தண்ணியின்றி

    என்னைப் பார்த்து சிரிக்குது..

    அய்டியா ஆறுமுகம் எனக்கு..

    அடுக்களை வேலயென்ன கொக்கா..

    தீயலக்கு…புளியும்

    கீரைக்கு பாலும் விட்டு..

    சமையல் முடித்தாயிற்று..

     

    கிரகணம் பார்த்த

    கிரகங்கள் இரண்டும்

    குசினிக்குள்  வர

    எனக்கு..

    கிரகமாற்றம் ஆரம்பிச்சிட்டுது

    பொடியன்…மக்டொனால்ட்ஸ் போட்டான்..

    தெற்குச் சமையலை

    சாப்பிட்ட மனுசியின்

    முகம்பார்க்க..அஞ்சி

    நானும் ரிம்கோட்டனுக்கு ..

    பறந்திட்டன்…

     

    இனி

    இந்த கிரகணப்பலன் வேலை செய்யும்..

    சுப்பர் கிங்க்ஸ்  மச் பார்க்கு மட்டும்

    தோனி தலைவா

    என்னை நீயே காப்பாற்று..

     

    (சொற்பிழை..பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்...இது எனது..இன்றைய நாள்..அல்வையன்..08 04 2024)

    • Like 1
    • Haha 5
  9. உள் நாட்டிலேயே சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்தவன் ஒரு நாளைக்கு பத்துப் பேரை கொல்கிறான்...இவையிந்திறத்தில்.. வெளிநாட்டவருக்கு அனுமதிப் பத்திரமாம்.. கேட்கிறவன் கேணையன் என்றால்......கழுதைகூட ஏரோப்பிளேன் ஓடுமாம்

  10. இவருதான்...வடகிழக்கில் 10000 விகரை கட்ட அத்திபாரம் போட்டவர்..அத்துடன் வனபாதுகாப்பு..தொல்பொருள் ஆராச்சி விடயத்தில் மிக மும்மமரமாக நின்று...புத்தகோவில் கட்டி நிலம்பிடித்த ஆரம்ப கர்த்தா....படு தமிழினத் துவேசி..

    • Like 1
  11. 7 minutes ago, Kapithan said:

     

    கொசுறு… 

    புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்களும் சிங்களவர்களும் (தமிழரைப் பலவீனப்படுத்துவதற்காக) கைகோர்க்கிறார்கள். 

    நம்ம ஆட்கள் அவர்களுடன் கை கோர்க்காமல் இருந்தால் சரிதானே...நன்றி

    • Haha 1
  12. இது என் சுய ஆக்கம்..அல்ல... பார்த்த  செய்திக்கான பதிவு மட்டுமே

    1 hour ago, நிழலி said:

    தன் குழந்தைகள் பற்றி கேவலமாக கதைத்தவரை கேள்வி கேட்ட தாயை தாக்கியை பொறுக்கியை நியாயப்படுத்த உடனே போலித் தமிழ் தேசிய முகமூடியை அவருக்கு அணிவித்து விட்டீர்கள். 

     

     

    43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெண் மீது தாக்குதல்

    கடந்த (30-03-2024)ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

    காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    அந்தப்பெண் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிக இழிவாக தகாத வார்த்தைகளால் பேசிய ஒரு இலங்கை பெரும்பான்மை இன பெண் என கூறப்படுகிறது

    இந்த செய்தியை யாழிலும் இணைத்திருக்கக் கூடாது...உங்கள் தடையை உடைத்து இந்த செய்தி யாழில் உலாவுவது நல்லதில்லையே

  13. அந்தப்பெண் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிக இழிவாக தகாத வார்த்தைகளால் பேசிய ஒரு இலங்கை பெரும்பான்மை இன பெண் என கூறப்படுகிறது.

    பரிஸ் பெண்ணும் பெரும்பான்மையினம்...கனடாவிலும் பெரும்பான்மையினம்...இதில் எதுவும் சதிவேலை இருக்குமோ....தமிழர்களே  உணற்சி வசப்படாது...பொறுமையாக இருக்கவும்...

  14. நன்றி அய்யா...தலைக்கு மேலை வேலை...அத்ஹடியில் இருப்பது ..அவசரமாகத் தேடுவ்து..தவறவிட்டுவிட்டேன்.. மன்னிக்கவும் ...இருவரும்

    2 hours ago, ஈழப்பிரியன் said:

    https://yarl.com/forum3/forum/247-யாழ்-26-அகவை-சுய-ஆக்கங்கள்/

    மேலே உள்ள சுட்டியை அழுத்தி பாருங்கள்.எல்லாமே பத்திரமாக இருக்கிறது.

    அதற்கு யாயினியைக் கேட்டால் அவ என்ன தான் செய்வா?

     

  15. யாயினி என்னுடைய சிலகவிதைகள்   கவிதைக் கள த்தில்/26 ஆவது அகவையில் போட்டென்..அவை எங்கு இருப்பதாகவும் தெரியவில்லை ...அவையின் கள  நிலைமைகளை அறிய ஆவலாக உள்ளேன்...அவற்றை உரிய இடத்துக்கு மாற்ற முடியுமா..

    கண்டால் வரச் சொல்லுங்க

    நானும் ஒரு அடிவிட்டன்

    கனத்தைப் பேய்க்  கவிதை…..

    பிஞ்சுக் காதல்

    தம்பி நீ கனடாவோ?

    26 வது அகவை மலருக்காக எழுதப் ப்ட்டவை

  16. தேர்தல் வருமட்டும் சுமந்துவின் ஏற்பாட்டில் அணில் (நரி)  வேலை செய்து கடத்திக்கொண்டே போவார்...அப்புறம்  தமிழரசுக் கட்சியே இருக்காது..

  17. மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புத்தசாசன, கலாசாரத்திற்கு எதிரான விடயங்கள் மற்றும் விளையாட்டுக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு, தற்போதுள்ள சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

     

    அப்ப சிங்கள  புத்தாண்டு மட்டும் கொண்டாட வேண்டுமோ....

  18.  

    4 hours ago, தமிழ் சிறி said:

    சிங்கள அரசியல்வாதிகள் தேனும், பாலும் ஓடுது என்கிறார்கள். 
    உலக வங்கி இப்பிடி சொல்லுது.
    இதிலை யாரோ ஒரு பகுதி பொய் சொல்லுது என்பது மட்டும் உண்மை. 😂

    ஏன் யாழ் களத்திலை குறைச்சலா?

    • Haha 2
  19. இந்த இடத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு பொறிமுறையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கு, பூர்வீகமாகக் கொள்ளாதவர்களுக்கும் ஒரு விவசாய பொறிமுறையைச் செய்யுமாறு ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார்,” என்றார்.

    அதாவது தமிழர் நிலத்தைபிடுங்கி...சிங்களவரிடம் கொடு...அதற்கு  நீதான் இடைதரகன்...உன்னை பிழை சொன்னால் இந்தியா விடாது...எப்படியிருக்கிற்து நரியின் தந்திரம்..

    இதுமட்டுமில்லை..சோனகரிடம் மன்னிப்பு  கேட்கிறார் ஒரு பாதி மந்திரி...நரித்தந்திரம்  இப்ப அரை இந்தியரை மையம்கொண்டு ...வோட்டுக்காக சுழல்கிறது..

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.