-
Posts
2298 -
Joined
-
Last visited
-
Days Won
1
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by வாதவூரான்
-
-
21 hours ago, P.S.பிரபா said:
இருக்கிற சட்டங்கள் கடுமையானவை இல்லை என்பதால்தான் பயமின்றி இந்த மாதிரி செயல்களை திரும்பத் திரும்ப செய்கிறார்கள் என நினைக்கிறேன். சிறையில் அடைத்தால், தண்டனை காலம் முடிய வெளியே வந்து விடுவார்கள்,
பாலியல் கல்வி பற்றி விழிப்புணர்வு இருந்தாலும் இந்த மாதிரி குற்றச் செயல்கள் குறையவேண்டும் என்றால் தண்டனை பற்றிய பயம் ஏற்படவேண்டும்.
பிரபா, இலங்கையில் இருக்கும் சட்டமும் இங்கிலாந்தில் இருக்கும் சட்டமும் கிட்டத்தட்ட ஒன்று தான் (இப்ப தான் சில மாற்றங்கள் கொண்டுவந்துள்ளார்கள்). ஒரே ஒரு வித்தியாசம் சட்டத்தின் அமுல்ப்படுத்துகையும் லஞ்சம் ஊழலும் தான் (என்ன பெரிய பிழை செய்தாலும் லஞ்சம் கொடுத்து இலகுவாக வெளியே வந்துவிடலாம்)
-
கண்ணீர் அஞ்சலிகள்
-
21 hours ago, P.S.பிரபா said:
விழிப்புணர்வு மட்டும் போதாது, இந்த மாதிரி துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனையும் கடுமையாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் இவை குறைவடையும்.
இருக்கிற சட்டத்தை ஒழுங்கா அமுல்படுத்தினாலே போதும்
- 1
-
கடைசிவரைக்கும் அவரது தாயைக் காணவிடாமலே கொன்று விட்டார்கள்
-
1 hour ago, ஏராளன் said:
27 FEB, 2024 | 03:49 PM
தமிழக கடற்தொழிலாளர்கள் விடயத்தில் தனக்கு அழுத்தங்கள் அதிகரித்தால், அமைச்சு பதவியை துறந்து விட்டு எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (27) இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இந்திய தூதுவருடனான சந்திப்பின் போது தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன்.
குறிப்பாக எமது கடல் வளங்கள் சுறண்டப்படுவது தொடர்பிலும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.
இலங்கை எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டமை தொடர்பில் தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போராட்டம் செய்வது அவர்களது உரிமை. அதேநேரம் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஆனால் சட்டரீதியாக இதை பார்க்க வேண்டும்.
2018 இல் இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒரு தடவை எல்லை மீறியிருந்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுவர் என்றும் அதற்கு மேல் மீண்டும் எல்லை தாண்டியிருந்தால் சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கேற்ப தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லைதாண்டி உள்நுழைந்த வந்தவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் படகு ஓட்டி உரிமையாளர்கள், தண்டிக்கப்பட்டுள்ளனர்.
என்னைப் பொறுத்தளவில் எமது நாடு, எமது கடல், எமது மக்கள் அதற்கே எனது முன்னுரிமை என்பதாகும். அதுவே நியாயம் என்றும் கருதுகின்றேன். அதற்காக எனது அமைச்சு பதவியை துறந்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் என தெரிவித்தார்.
வேளைக்கு செய்யுங்கோ எனக்குநிறைய வேலை கிடக்கு உங்கடை பதவிலகலைப் பார்த்திட்டு தான் போக வேணும் என்றுநிக்கிறன்
- 1
- 1
-
11 hours ago, விளங்க நினைப்பவன் said:
ஆகவே உள்ளி என்றும் கோவா என்று தான் இலங்கையில் சொல்கின்றார்கள். எதற்காக யாழ்பாணத்து பத்திரிக்கையான நியூ உதயன் பூண்டு, முட்டைகோஸ் என்று இந்தியாவை கொண்டுவர நிற்கின்றது.
எல்லாம் குறைந்த சம்பள தொழிலாளர் என்பதால் வந்த வினை. இப்ப செய்தி எழுதுவது எல்லாம் இந்தியாவில் தான்நடக்குதாம்
- 2
-
8 hours ago, Justin said:
இந்த கோவைக்காய் மருத்துவம் போன்ற பல செய்திகள் உதயன் பத்திரிகையில் வருகின்றன. அவற்றை தமிழன்பன் இங்கே இணைக்கிறார் என நினைக்கிறேன். உதயன் எங்கேயிருந்து எடுக்கிறதெனத் தெரியவில்லை. ஆனால், அனேகமாக ஊதிப் பெருப்பிக்கப் பட்ட நன்மைகள். சில தகவல்கள் முற்றிலும் தவறு. (இன்னொரு திரியில் பனஞ்சீனியில் வெள்ளைச் சீனியை விட அதிக நன்மை, குறைந்த கலோரி என்று ஒரு உருட்டலும் போகிறது - சீனி சீனி தான், வெள்ளை, கறுப்பு வித்தியாசமெல்லாம் சீனியை ஆரோக்கியமாக மாற்றாது)
பனங்கட்டி குருதியின் சீனி அளவைக் கூட்டுமா கூட்டாதா? (பனங்கட்டியை கனக்க சாப்பிடுரதெண்டில்லை சதாரணமாக தேநீர் அல்லது உளுத்தம்களியுடன்)
-
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்
- 1
-
நினைவஞ்சலிகள்
-
4 hours ago, கிருபன் said:
பறவையைப் புரட்டவில்லை
நல்ல கூகிள் மொழிபெயர்ப்பு
-
தாத்தாவுக்கும் பேரனுக்கும் வாழ்த்துக்கள்
- 1
-
தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்
-
-
வாழ்த்துக்கள் சுவி தாத்தா பாட்டி
- 1
-
4 hours ago, ஏராளன் said:
பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவைத் தகர்த்த நியூசிலாந்து
கட்டுரை தகவல்
- எழுதியவர், அபிஜித் ஸ்ரீவஸ்தவா
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
25 நிமிடங்களுக்கு முன்னர்
உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா அணி பெற்றது.
இந்தியா ஏற்கனவே 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது அணி தென்னாப்பிரிக்கா அணியாகும்.
இப்போது, அரையிறுதிக்குள் நுழைய ஒரேயொரு அணிக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன.
எனினும் நேற்று இரவு (நவ. 09) இலங்கைக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெறும் 23.2 ஓவர்களில் வெற்றி பெற்ற நியூசிலாந்தின் நிகர ரன் ரேட் 0.743-ஐ எட்டியதோடு, அரையிறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில் மற்ற இரண்டு அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை விடவும் முன்னிலையில் உள்ளது.
இன்று (நவ. 10), வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் அகமதாபாத்தில் மோத உள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிகர ரன் ரேட் மைனஸில் உள்ளது. -0.338 என்ற நிகர ரன் ரேட்டுடன் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி 0.036 என்ற நிகர ரன் ரேட்டுடன் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
எனினும், தில்ஷன் மதுஷங்க மற்றும் மஹீஷ் தீக்ஷனா இருவரும் இணைந்து 10-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் அடித்தனர். இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் 10-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் ஆகும்.
இருந்தபோதிலும் இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து அபாரமாக பந்துவீச்சு செய்த நியூசிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக இலங்கையை வென்றது.
இந்தப் போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை நியூசிலாந்து அணி பலப்படுத்த விரும்புகிறது.
இந்த வெற்றியின் மூலம் 160 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் நியூசிலாந்தின் நிகர ரன் ரேட் 0.74 ஆக அதிகரித்து அரையிறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில் மற்ற இரண்டு அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை விட வெகுவாக முன்னேறியுள்ளது.
இந்த தோல்விக்குப் பிறகு இலங்கை அணி புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதனால் 2025ம் ஆண்டில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இலங்கை விளையாடும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராஃபிக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில், பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா?
இலங்கைக்கு எதிரான நியூசிலாந்தின் வெற்றியால் அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதாவது இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமல்லாமல், நியூசிலாந்து அணியைவிட நிகர ரன் ரேட் சிறப்பாக இருக்கும் வகையில் பெரிய வித்தியாசத்தில் இருக்க வேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாட உள்ளது. எனவே, முதலில் பாகிஸ்தான் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. சாதாரண வெற்றி பாகிஸ்தானை அரையிறுதிக்கு செல்ல அனுமதிக்காது.
சனிக்கிழமை (நவ. 11) இங்கிலாந்தை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் விளையாடி 300 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான் இந்த இலக்கை 6.1 ஓவர்களில் மட்டுமே அடைய வேண்டும். அதாவது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் 6 ரன்கள் எடுத்தாலும், அவர்களால் 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும்.
இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 100 ரன்களில் ஆல் அவுட் செய்தாலும், 2.5 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும்.
அதேசமயம், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்து அணியை வெறும் 13 ரன்களில் ஆட்டமிழக்க செய்ய வேண்டும்.
அதாவது, அரையிறுதிக்கு செல்ல பாகிஸ்தான் 287 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும்.
நியூசிலாந்துடனான போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங், "பாகிஸ்தானுக்கு இப்போது அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர்கள் போட்டியில் 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவர்கள் அவ்வளவு ரன்களை எடுக்காமல் கூட போகலாம்," என தெரிவித்தார்.
”இதுபோன்ற சூழ்நிலையில், 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால், பாகிஸ்தான் 450 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். இல்லையென்றால், நியூசிலாந்து அணி முதல் அரையிறுதியில் இந்தியாவுடன் விளையாடும்" என தெரிவித்தார்.
"பாகிஸ்தான் முதலில் பேட் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் பூட்டி வைத்துவிட்டு டைம்டு அவுட் முறையில் அனைவரையும் ஆட்டமிழக்க வைக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நகைச்சுவையாகக் கூறியதாக பாகிஸ்தானின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரையிறுதிப் போட்டியிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிய ஆப்கானிஸ்தான்
அதேசமயம், ஆப்கானிஸ்தானின் நெட் ரன் ரேட் மைனஸில் இருப்பதால் அதைவிட பெரிய இலக்கு அவர்களுக்கு முன்னால் உள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய போட்டியில் 438 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டும். இதனால் அதன் நிகர ரன் ரேட் நியூசிலாந்தை விட சிறப்பாக இருக்கும்.
இதனுடன், முன்பே சொல்லப்பட்டது போன்று பாகிஸ்தான் வெற்றி பெறாது அல்லது வெற்றிபெற வேண்டிய பெரிய வித்தியாசத்தை அடையாமலும் இருக்க வேண்டும்.
2023 உலகக்கோப்பைக்கு இன்னும் மூன்று லீக் போட்டிகள் மட்டுமே உள்ளன. இன்று, நவ. 10 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் நடைபெறவுள்ளது.
நியூசிலாந்து தகர்க்கேலை இலங்கை தான் தகர்த்தது
- 1
-
உதவாத படம். ஒரு கதையும் இல்லை. சும்மா ஒரே சண்டை மட்டும் தான். 600 கோடி வசூலாம் எப்பிடியெண்டு தெரியேலை
-
தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
-
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்......!
- 1
-
-
3 hours ago, கிருபன் said:
எதுவித அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை என்கிறது CID!
adminOctober 12, 2023முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் , அவரது திடீர் வெளிநாடுப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25ஆம் தேதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, செப்டம்பர் 24ஆம் தேதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஏதேனும் குழுக்களின் செல்வாக்கு இருக்கிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரச்சுறுத்தல் காரணமாக நீதிபதி சரவணராஜா பதவியை இராஜினாமா செய்தது தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
இதைத்தான் சொல்லுவியளெண்டு எல்லாருக்கும் தெரியும் தானே. இதுக்கேன் மக்கள் பணத்தில் விசாரணையெண்டு வெள்ளையும் சொள்ளையுமா அலையுறியள்
-
5 hours ago, ஏராளன் said:
06 OCT, 2023 | 02:47 PM
மக்கள் எதிர்பார்க்கும் தலைவருக்கு தமது அணி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு மயூராபதி ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (06) இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,
'நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்துக்கு தெரிவு செய்யப்படுவார்.
எமது அணியில் இளைஞர் அணியினர் பலரும் உள்ளனர். எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆதரவை வழங்கி முன் கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம்.
நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான சிரேஷ்ட பிரஜை ஒருவருக்கு கட்சி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்க்கிறது.
மக்கள் ஏற்று கொள்ளும் உறுப்பினருக்கு தலைமைத்துவம் வழங்கப்படும். மக்களே எனக்கும் தலைமைத்துவத்தை வழங்கினார்கள் எதிர்காலத்திலும் அவ்வாறே இடம்பெறும் எனத் தெரிவித்தார்.
நீண்ட காலமாக பொதுவிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாட்டின் பல்வேறு வணக்கஸ்தலங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு-ஜே.சுஜீவகுமார்)
அந்த இளைஞர்நாமல் தானே சும்மா கிச்சுக்கிச்சு மூட்டாதேங்கோ
- 1
-
வாழ்த்துக்கள் பிரியன் அண்ணா
- 1
-
ஆர்ப்பாட்டம் செய்யேக்கை இடையிலை வச்சு மறிக்கிறமாதிரி கொழும்பிலையிருந்து போற ஆக்களை மறிக்கலாம் தானே
-
5 hours ago, nunavilan said:
வெகு விரைவில் ஆட்சிக்கு வருவோம்;நாமல் உறுதி
பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கஸ்பாவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் மத்தியில் ராஜபக்சர்கள் தொடர்பில் நல்லதொரு மனப்பான்மை காணப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பொருளாதார ரீதியில் நன்னிலையிலிருந்த முன்னேற்றமடைந்த அரசாங்கத்தையே மஹிந்த ராஜபக்ச நல்லாட்சி அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டை முன்னேற்றுவது குறித்து அவதானம் செலுத்தாமல் ராஜபக்சேக்களை பழிவாங்குவதிலேயே அவதானம் செலுத்தியது.ராஜபக்சேக்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.ஆனால் அவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
ராஜபக்சேக்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் பதுக்கி வைத்துள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
அரசியல் பிரசாரத்துக்காகவே ராஜபக்ஷர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.2019ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சிமாற்றம் மீண்டும் ஏற்பட்டது.ஒரு தரப்பினரது தவறான ஆலோனைகளினால் அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் பலவீனமடைந்தது.
பொருளாதார பாதிப்பு காரணமாக அரசியல் நெருக்கடி தோன்றியது.பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.அரசியல் ரீதியில் பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் கட்சி என்ற ரீதியில் சிறந்த முறையில் போட்டியிடுவோம்.தேர்தல் மூலம் ராஜபக்சேக்கள் தலைமையிலான அரசாங்கத்தை கூடிய விரைவில் மீண்டும் தோற்றுவிப்போம் என நாமல் தெரிவித்தார்.
https://www.tamilmirror.lk/செய்திகள்/வக-வரவல-ஆடசகக-வரவம-நமல-உறத/175-320259
அப்ப இப்ப ஆற்றையாம் ஆட்சிநடக்குது?
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
in ஊர்ப் புதினம்
Posted
பிரித்தவராலைதான் ஒட்ட ஏலும்