-
Posts
2299 -
Joined
-
Last visited
-
Days Won
1
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by வாதவூரான்
-
-
3 minutes ago, நீர்வேலியான் said:
நன்றி, இவர்கள் போட்ட திட்டமா, அல்லது ஆர்வத்தில் ஆதரவாளர் குரூப் செய்த வேலையா? ராணுவத்தின் நிலை என்ன? இனி என்ன நடக்கும் என்று யோசிக்கிறேன்
ஊரடங்கு தளர்த்தப்படுகிறதாம். கோத்தாநினைச்சதுநடந்திட்டுதோ?
-
40 minutes ago, Sasi_varnam said:
இந்த போராட்டம் ஆரம்பித்தபோது இதை சிறுபிள்ளைதனமாகவும், நக்கலும் நையாண்டியுமாய் இருந்தவரும் இருக்கிறார்கள்... இன்று நடப்பவைகளை அவர்களும் பார்த்து பரசவமடைவதில் மகிழ்ச்சி 😃இது எனக்கென்னவோ கோத்தா தான் தப்ப செய்தமாதிரி இருக்கு
-
47 minutes ago, தமிழ் சிறி said:
அமைதி வழியில்... போராடிய மக்கள் மீது, வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை... கண்டிக்கிறேன் – அங்கஜன்
ஜனநாயக மரபுகளின்படி அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார்.
காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது , வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி , அவர்களின் கூடாரங்களை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்துள்ளது.இந்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோக பூர்வ முகநூலில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் உள்ளதாவது, பொதுமக்கள் தமது கோரிக்கைகளை அமைதிவழியில் வெளிப்படுத்திய நிலையில், அவர்கள் மீது இன்று கொழும்பில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலானது மிகவும் அநாகரிகமானது.
ஜனநாயக பண்புகளுக்கமைய அமைதியாக போராடும் உரிமை நாட்டு மக்களுக்குண்டு. இன்று அந்த உரிமை மீது இரத்தக்கறை படிந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவங்களானது நாட்டின் மக்கள் உரிமைகள், அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மாண்பின் மீது நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலாக நான் கருதுவதோடு எனது கண்டனத்தை வேதனையடைந்த மனதுடன் தெரிவிக்கிறேன்.
சர்வதேச ஒத்துழைப்புடன் நாடு, பொருளாதார மீட்சியை எட்டுமென எதிர்பார்த்துள்ள நிலையில் இச்சம்பவமானது பேரிடியாக மாறியுள்ளது என்றுள்ளது.
இஞ்சை பார்றா இவர் இன்னும் இருக்கிறராம்
-
Just now, Nathamuni said:
இதுவரை அறிவிக்கப்படவில்லை.
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு 1000/2000 என்டாலும் சாகாட்டில் அதென்ன கலவரம்
- 3
-
அன்னையர் தின வாழ்த்துகள்
-
6 hours ago, விசுகு said:
அப்ப நம்ம சம்பந்தர்???
அவரிட்டை அதுகும் இல்லை
- 1
-
7 hours ago, தமிழ் சிறி said:
அவசரகால நிலையில்.... அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள்... பாதிக்கப்படாது என நம்புகின்றோம் – மனித உரிமைகள் ஆணைக்குழு
நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து கவலையடைவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போராட்டங்கள் அமைதியானதாகவும், சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளின் வரம்பிற்குள்ளும் இருந்ததால் ஏன் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.எனவே அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு அவசரகால நிலையில் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடல், கைது உள்ளிட்ட விடயங்களில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பாதிக்கப்படாது என நம்புவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஓம் நல்லா நம்புங்கோ
- 1
-
4 hours ago, தமிழ் சிறி said:
புதிய... பிரதி, சபாநாயகராக... ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு
புதிய பிரதி சபாநாயகராக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகராக அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இந்த வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளையும் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கர் 65 வாக்குகளையும் பெற்றனர்.
3 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பதிவுசெய்யப்பட்டன.
அதன்படி, 83 மேலதிக வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மயந்த திசாநாயக்க, வினோ நோக இராதலிங்கம், உத்திக பிரேமரத்ன, இம்ரான் மௌரூப், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் சமூகமளிக்கவில்லை.
பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவித்ததையடுத்து, இன்றைய தினம் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
என்னத்துக்காம் முதல் பதவி விலகினவர்?
-
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சுவி அண்ணா
- 1
-
4 hours ago, satan said:
சுப்பிரமணிய சுவாமியின் பேச்சுக்கும், இவரின் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லை. வெறும் அரசியல் கோமாளிகள் இவர்கள். கொரோனா காலத்திலும் பெரும் எடுப்பில் ராஜபக்க்ஷ கொம்பனியுடன் நட்பு கொண்டாடிய சுப்பிரமணி, இப்போ வாயடைத்து இருக்கிறார். ஆபத்து காலத்தில் அறியலாம் உண்மையான நண்பனை!
இது எதிர்பார்த்தது தானே
-
3 hours ago, satan said:
வெள்ளைவேட்டி கள்ளர், தங்கள் களவுகளையும், ஊழல்களையும் மறைப்பதற்காக; போர் வெற்றித்தூபிகளையும், விகாரைகளையும் கட்டி, தமிழருக்கு விரோதமான காதாநாயகர்களாக தங்களை காட்டி, மக்களை கள்ளுண்ட வண்டுகளாக மயங்கவைத்து ஆடிய ஆட்டமெல்லாம் ஒன்றொன்றாக வெளிவந்துகொண்டிருக்கு. குடுக்கிறமாதிரி குடுத்து, ஆதாரங்களையும் எடுத்து வைத்து, தக்க சமயத்தில், தக்க ஆட்களிடம் கையளித்திருக்கிறார்கள். இதிலிருந்து எப்படி மீளும் இந்தகோஸ்ட்டி?
மானநஷ்ட வழக்கு போடுவினம்.நீதிமன்றம்,நீதிபதி எல்லாம் இவைநியமிக்கிற ஆக்கள் தானே ,இவையெல்லாம் உருவாக்கப்பட்ட ஆதாரம் ,எல்லாரும் சொக்கத்தங்கங்கள் என்டு தீர்ப்பு வரும். அல்லது அனுர விபத்திலை மேலை போவார்
- 1
-
2 hours ago, தமிழ் சிறி said:
மஹிந்த ராஜபக்ச... பதவி விலகவுள்ளதாக, வெளியான செய்தி குறித்து... அரசாங்கம் விளக்கம்!
மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது, நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், அப்படியான எந்த முடிவும் இல்லை என்றும் நாட்டின் பொருளாதாரம், மக்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிடவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
https://athavannews.com/2022/1280064
இது எதிர்பார்த்தது தானே எத்தினை பேரைக் கொன்று வந்த பதவி சும்மா விட்டுக்குடுப்பியளே
-
3 hours ago, தமிழ் சிறி said:
அப்போதைய ஐ. நா. செயலாளர் பெயர்.... பான் கீ மூன்.
கொரியாவை பிறப்பிடமாக கொண்டவர்.அத்துடன்... அந்நேரம் இந்திய வெளியுறவு செயலாளராக இருந்து,
இலங்கையுடனும், ஐ.நா. வுடனும் பேச்சு வார்த்தை நடத்தியவர்..
நம்பியார் (மலையாளம்) என நினைக்கின்றேன். (பெயர் சரியாக தெரியவில்லை)
அவரின் மகனும், பான் கீ மூனின் மகளும்...
திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தது.ஈழத் தமிழர் பிரச்சினை கதைக்கப் போய்... சம்பந்தியான கேவலமும் நடந்தது.
இப்படிப் பட்டவர்களிடம்... தமிழன் எப்படி, நீதியை எதிர் பார்க்க முடியும்.அவை ஈழத்தமிழர் பிரச்சினை பற்றித்தான் கதைச்சவை என்டுநினைச்சியளோ? அதைச்சாட்டி தங்கடை சம்பந்தப்பிரச்சினையல்லோ கதைச்சவை
-
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:
இது போல வேற நாடுகள் ஏதும் கொள்கை அறிவித்த்தால் வீடு வளவுக்ளை வித்து வெளியேறலாம் இலங்கையை விட்டு
விக்கிறதை வாங்க ஆள் வேணுமே
-
வாத்தியார் உங்கள் மாமனாரின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்கள் குடும்பத்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
கோமகனின் இறுதி ஊர்வலத்தில் யாழ்களம் சார்பாக பங்கு கொண்டு சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்.
-
வாழ்த்துக்கள் மணமக்களுக்கு. இன்று போல் என்றும் வாழ்க
- 1
-
12 minutes ago, தமிழ் சிறி said:
” கோட்டா கோ ஹோம்” எனக் கூறுவதை.... உடனடியாக, நிறுத்திக்கொள்ளுங்கள்” – போராட்டக் காரர்களுக்கு கீதா குமாரசிங்க எச்சரிக்கை.
“கோட்டா கோ ஹோம்“ எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள் என போராட்டக்காரர்களுக்கு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்
1971 இல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர் வீடு செல்லவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.அதன்பின்னர் ஜேஆரை எதிர்த்தனர். அவரும் வீடு செல்லவில்லை. எனவே, கோட்டா கோ ஹோம் என்ற பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலம் வரும்போது ஜனாதிபதி நிச்சயம் செல்வார். அவர் வீடு செல்ல வேண்டுமா என்பதை தேர்தல் தீர்மானிக்கப்படும். காலி முகத்திடலில் உள்ள இளைஞர்களை சிலர், விற்று பிழைக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவாக்கு சுவிஸ் பிரஜாவுரிமையுடன் அமைச்சராக இருக்க வேணுமென்டால் காவடி தூக்கித்தானே ஆக வேணும்
-
எல்லா போராட்டத்தையும்நீர்க்கச் செய்திடுவாங்கள்.நன்றி புத்து மாமா
- 1
-
5 hours ago, putthan said:
பிச்சை எடுத்து நீங்கள் வயிற்றை பார்த்து கொள்வீர்கள்......புத்தசாசனப்படி ...ஆனால் பிச்சை கொடுக்கிறவனுக்கு சாப்பாட்டுக்கு முதலாளித்துவாதிகளிடம் கையேந்த வேணுமே ....
உங்கன்ட புத்தசான வங்கியில் பில்லியன் டொலர் இருக்கோ
தமிழனை எப்படி இந்த பிரச்சனைக்குள் கொர்த்துவிட்டு ராஜபக்சாவை காப்பற்றுவதற்கான தீர்வு....
அதென்ன சங்கசாசனம் ?யாராவது விளக்கம் சொல்லுங்கோ?
-
2 hours ago, தமிழ் சிறி said:
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு... உண்மையைக் கண்டறியவும்: நாமல்
ரம்புக்கனை சம்பவம் குறித்து சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறோம். இந்த சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிய சாதாரண சோதனைகளை மேற்கொள்ள முடியும்.
முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைப்பது மற்றும் எரிபொருள் பவுசரை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காட்டும் காணொளிகள் வெளியாகின.
இந்நிலையில் விசாரணைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவும் குறித்த சம்பவம் தொடர்பான காணொளிகள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கட்டாயமாக சி.சி.ரி.வி. காணப்படும். எனவே அதனை பரிசோதிப்பதன் மூலம் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.
இதன்மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். நாட்டில் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை அரசியலாக்கமால் தீர்வு காண வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
எப்பிடியும் சீசீடீவி வேலை செய்திருக்காது
-
1 hour ago, தமிழ் சிறி said:
பொலிஸார்... சட்டத்திற்கு முரணாக, எதையும் செய்யவில்லை : துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து... பொது பாதுகாப்பு அமைச்சர்
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணையை செய்ய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விசாரணையை விரைந்து முடித்து அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.மேலும் ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் சட்டத்திற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் அரசியல் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே செயற்பட்டதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
போராட்டக்காரர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் போராட்டக்காரர்கள் பொது நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் போது தலையிடுவது பொலிஸாரின் கடமை எனவும் அவர் கூறினார்.
நேற்று சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த பிரசன்ன ரணதுங்க, காயமடைந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸாரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்
இப்பிடிச் சொல்லுவியள் என்டு எங்களுக்கு தெரியும் தானே. உங்களுக்கு அது காலம் காலமா ரத்தத்திலை ஊறினது தானே
-
ஆழ்ந்த இரங்கல்கள்.
கோமகனின் பிரிவால் துயருற்று இருக்கும், குடும்பத்தினருக்கும்…
உற்றார் உறவினருக்கும், ஆழ்ந்த அனுதாங்கள். -
3 hours ago, தமிழ் சிறி said:
ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு... ஆளான, பிரதமர் !
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அட பாவியளாநீங்களே செய்து போட்டுநீங்களே வருத்தம் தெரிவிப்பீங்களோ? தமிழருக்கு செய்யும் போது தான் இப்பிடியெண்டால் உங்கடையாக்களுக்குமா
-
On 17/4/2022 at 15:19, கிருபன் said:
இரண்டையும் வீணாக்கியாயிற்று. குழந்தைகளை அனுமதிக்க பல கொலைக் காட்சிகளை சென்ஸார் பண்ணியிருந்தனர். யார் செத்தார்கள் என்றே தெரியவில்லை!
போதாதற்கு பின்வரிசையில் ஒரு குழந்தை ஒன்று தொடர்ந்து கத்தி அழுதுகொண்டிருந்தது!
நானும் தான்
யோகிபாபுவின் கூர்க்கா பாத்தால் இது பாக்க தேவையில்லை. கூர்க்கா இதை விடநல்ல படம்
மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !
in ஊர்ப் புதினம்
Posted
எங்கடை ஞானசாரவைக்காணேலை