-
Content Count
5,404 -
Joined
-
Days Won
29
போல் last won the day on December 8
போல் had the most liked content!
Community Reputation
1,559 நட்சத்திரம்About போல்
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Male
-
Interests
வாசித்தல், இசை, விளையாட்டு, ...
Recent Profile Visitors
-
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு
போல் replied to போல்'s topic in ஊர்ப் புதினம்
அசோகச் சக்கரவர்தி என்கிற மிக மோசமான மனிதப் படுகொலைகாரன் முதல் ராஜபக்ச கொலைகாரக் கும்பல் வரை புத்தரைப் பயன்படுத்தியே நல்லவர்கள் வேடம் தரித்து உலகை ஏமாற்றி வருவருவதால், அவர்களின் கோட்பாடுகளின் படி புத்தர் மிகமோசமான நரகலோகத்தில் கடூழிய தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும். -
தீவகப் பகுதியில் கடல் வள உற்பத்திகளை அதிகரிக்க டக்ளஸ் நடவடிக்கை!
போல் replied to ampanai's topic in ஊர்ப் புதினம்
தீவகப் பகுதியிலுள்ள பெண்கள் கூடுதலான கவனத்துடன் இருக்க வேண்டும். -
இது வாக்குமூலம் பெறுவது போலத் தெரியவில்லை! உண்மைகளை மறைக்க ஒவ்வொரு நாளும் பேரம் பேசும் பேச்சுவார்த்தை நடத்துவத்தைப் போலவே தெரிகிறது.
-
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு
போல் replied to போல்'s topic in ஊர்ப் புதினம்
பிரியங்க பெர்னான்டோவுக்கு ராணுவத்தில் புதிய பதவி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ ராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக கடமைகளை ஏற்றுக்கொண்டார் ராணுவத் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் தனது கடமைகளைப் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, முன்னதாக ரணவிரு சம்பத் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தார். 2018ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காட்டி அச்சுறுத்தியதாக பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 2400 பவுண்ட்ஸ் (இலங்கை மதிப்பில் 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்) அளவில் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/priyanka-fernando-assumed-duties-as-the-new-director-of-real-estate/ -
பதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன் - சுமந்திரன்!
போல் replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
உண்மையிலேயே ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றுவதிலும் தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பதிலும் சுமந்திரனைவிடத் திறமைசாலிகள் இப்போதைக்கு இல்லை. -
கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் இன்றையதினம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது ஒழுங்கு சட்டத்தின் பிரிவு 4 ஏ இன் கீழ் தமிழர்களை அச்சுறுத்தினார் என்பதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தறுப்பது போன்று சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தார். அதன் பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன், இந்த விடயம் பாரிய எதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு லண்டன் வெஸஸட்மினிஸ்டர் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/community/01/233121?ref=imp-news புலம்பெயர் தமிழர்களுக்கு கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல்! இன்று பிரியங்கவுக்கு தீர்ப்பு? பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து 'கழுத்தை அறுக்கும்' சைகையை காண்பித்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் லண்டனில் விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கமைய, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணைகள் இடம்பெறவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் விசேட கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. ஸ்ரீலங்காவின் சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வெளியில் புலம்பெயர் தமிழர்கள் கணடனப்போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை பார்த்து ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு பதவி நிலை அதிகாரியாக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ கழுத்தை அறுப்பது போல் சைகையை காண்பித்திருந்தார். இந்த செயல் காணொளியாக பதிவு செய்யப்பட்டு ஊடகங்களிலும், சமூகவலைத் தளங்களிலும் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரிகேடியரின் இந்த செய்கையால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதுடன், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்த போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவோ அவரது சார்பில் சட்டத்தரணிகளோ முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் இந்த பிடியாணை ஸ்ரீலங்கா அரசின் கடும் அழுத்தங்கள் மற்றும் இராஜதந்திர முயற்சியினால் பிரித்தானிய வெளியுறவுத்துறை தலையீட்டின் பின்னர் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் இந்த செயல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர பணிக்கு உட்பட்டது அல்ல என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதற்கமைய, குறித்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அறியமுடிகின்றது. https://www.ibctamil.com/srilanka/80/132530?ref=home-imp-flag
-
தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். 13 வது தெற்காசிய விழா நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற 64KG பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்ற முதல் தமிழ் வீராங்கணையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வரலாறு படைத்துள்ளார். தனது 13 ஆவது வயதில் பளுதூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுநராக செயற்பட்டு வருகின்றார். 2014ஆம் ஆண்டில் தனது 13ஆவது வயதில் பாடசாலை மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்ஷிகா, அன்று முதல் பாடசாலை மட்ட சகல போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார். கனிஷ்ட பிரிவில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 4 தங்கப்பதக்கங்களையும், சிரேஷ்ட பிரிவில் 3 வெள்ளி, 2 தங்கப்பதக்கங்களையும் ஆர்ஷிகா வென்றுள்ளார். அகில இலங்கை பாடசாலைகள் மட்ட 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான பளு தூக்கல் போட்டிகளில் மூன்று தேசிய சாதனைகளுடன் வெற்றியீட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தெற்காசிய-போட்டியில்-யாழ/
-
நாட்டில் மீண்டுமொரு குழப்பகர சூழலை உருவாக்கும் முயற்சிகள்..!
போல் replied to ampanai's topic in ஊர்ப் புதினம்
இந்த இனமதவெறி நிறைந்த இது போன்ற சிங்கள-பௌத்த பீடங்கள் இலங்கையில் இல்லாதிருந்தால் இலங்கை என்றோ முன்னேறிய நாடாக மாறியிருக்கும். -
புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணி சுவீகரிப்பு!
போல் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
தமிழினத்துக்கு எதிரான அரச பயங்கரவாதம் அரங்கேற்றும் புதிய நாடகம்! -
பாராளுமன்றம் ஒத்திவைப்பு ; வெளியானது விசேட வர்த்தமானி
போல் replied to ampanai's topic in ஊர்ப் புதினம்
போர்க்குற்றவாளிகளின் ஜனநாயகப் படுகொலை ஆரம்பம். -
இலங்கையில் பார்த்தெழுத அனுமதிக்காத ஆசிரியர்களை தாக்கிய மாணவர்கள்
போல் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
முஸ்லிம்களின் முறைகேடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்! -
குடும்பத் தகராறு முற்றி திருகுவளையாலேயே கணவனை அடித்துக் கொன்ற மனைவி!
போல் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
பெண்களை அப்பாவிகள் போல சித்தரிப்பவர்கள் திருந்த வேண்டும்!