-
Posts
1903 -
Joined
-
Last visited
-
Days Won
22
பகலவன் last won the day on April 26 2021
பகலவன் had the most liked content!
About பகலவன்
- Birthday March 15
Profile Information
-
Gender
Male
-
Interests
கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,மகன்.
Recent Profile Visitors
5253 profile views
பகலவன்'s Achievements
-
துவாரகாவிற்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பதும் வெளிநாடு சென்று மருத்துவபடிப்பை கற்றார் என்பது சிங்கள புலனாய்வாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளே. அதன் மூலம் மக்களுக்கு புலிகளின் தலைமைமீது ஒரு அதிருப்தியை தோற்றுவிக்கும் எண்ணமே அவர்களுக்கு இருந்தது. துவாரகா உயர்தரத்தின் பின்னர் விவசாயபீடத்துக்கு தெரிவாகி இருந்தார். இருப்பினும் அவர் அதன் பின்னர் வன்னி தொழினுட்ப நிறுவனத்தில் (வன்னி ரெக்) தகவல் தொழினுட்பம் கற்றார். கூடவே அவரது தோழியான அரசியல்துறைப்பொறுப்பாளரான நடேசன் அண்ணையின் மகளான பிரியதர்ஷினியும் கல்விகற்றார். இவர்களின் பாதுகாப்புக்காக வன்னி ரெக் ஆனது ரெக் நிறுவனத்திடமிருந்து கணிணிப்பிரிவு பொறுப்பெடுத்துக்கொண்டது. அப்போது அங்கிருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த புலிகள் சாராத பொறியியல் ஆசான்கள் வெளியேற்றப்பாடார்கள். (இது விமர்சனத்துக்குள்ளானது) அப்போது கணிணிப்பிரிவால் நியமிக்கப்பட்ட இயக்குனரான பேராதனை பொறியியளார் தயாபரராஜ், தனிப்பட்ட நன்னடத்தை காரணமாக விலக்கப்பட்டார். (2009 ஏப்பரலில் புலிகளின் காவலில் இருந்து தப்பி ஓடி சிங்கள இராணுவத்திடம் சரணடைந்து இப்போது இந்தியாவில் முகாமில் இருப்பதாக செய்தி) துவாரகா மற்றும் பிரியதர்சினி உருவாக்கிய தொலை மருத்துவ மென்பொருளும், ஆவணக்காப்பக தேடுபொறி மென்பொருளும் கணிணிப்பிரிவு நடாத்திய கண்காட்சியில் வெற்றிபெற்றன. மேலே கிருபன் மீரா கோசான் சொன்னதுபோல துவாரகாவுக்கு படிப்பிப்பதற்கு வன்னியிலேயே போதுமான ஆசான்கள் இருந்தார்கள், அவர் அதில் கற்று தேர்ந்தும் இருந்தார். (மருத்துவ துறை அல்ல தகவல் தொழினுட்பதுறை) வன்னியில் துறை சார் மென்பொருட்களை உருவாக கணினுட்பம் எனும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் 55ம் கட்டை அருகில் கட்டப்பட்டு வைப்பகம், நிதி மேலாண்மை, மோட்டர் படையணிகள், வரைபட பிரிவு, ஆவணக்காப்பகம், மருத்துவத்துறைக்கு தேவையான் மென்பொருட்கள் அந்த நிறுவனத்தால் உருவாக்கப்படிருந்தது. அங்குதான் துவாரகாவும், பிரியதர்ஷினியும் இளநிலை மென்பொறியியளாளர்களாக வேலை செய்தார்கள். மாதாந்த கணிணி சஞ்சிகையாக கணினுட்பம் எனும் சஞ்சிகை 2008 சண்டை பெரிதாகும் வரை வன்னியில் வெளிவந்துகொண்டிருந்தது. துவாரகா இறுதிவரை களத்தில் இருந்து, காயத்துடனும் போராடி மதிமகள் என்ற பெயருடன் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.
-
பகிர்வுக்கு மிக்க நன்றி. இவர்கள் போன்றவர்களை வெளிக்கொணரும் ஊடகங்களுக்கும் மிக்க நன்றி.
-
சங்கத்தலைவர் முன்னிடத்தில் இருப்பதையிட்டு மகிழ்ச்சி.
-
யாழ் இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த மாணவனும், துடுப்பாட்ட வீரனுமான அபிராம் 90 களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அபிராமின்(நிரோஜன்) நுண்ணறிவையும் தேசப்பற்றையும் இனங்கண்ட புலனாய்வுத்துறையின் தலைவர் பொட்டம்மான் அவர்கள் அபிராமை தன்னுடைய பிரிவில் இணைத்துக் கொண்டார், 96 ல் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பை வகித்த அபிராம் பின்னர் தாக்குதல் நடவடிக்கைகளை கையாள நியமிக்கப்பட்டார். உலகமே திரும்பிப் பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்களின் மூளையாக செயற்பட்ட அபிராமை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னரும் வேண்டப்படும் நபராக சிங்கள அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேசப் பொலிசார் தமது தளத்தில் அபிராமை சிவப்பு எச்சரிக்கை பகுதியில் இணைத்திருந்தனர், சிங்கள அரசும் சர்வதேசமும் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதென அறிவிக்கப்பட்ட பின்னரும் அபிராம் குறித்து அச்சம் கொண்டமைக்கு அபிராமின் ஆளுமையும் கடந்த கால வீரச் செறிந்த நடவடிக்கைகளுமே காரணமாகும். தேடப்படுவோர் பட்டியலில் இருந்ததால் கடந்த 12 வருடங்களாக மலேசியாவில் தலைமறைவு வாழ்க்கையில் செயற்பட்டு வந்த அபிராம் 21.10.2021 மாரடைப்பால் காலமானார். தமிழீழ விடுதலையின் புலனாய்வுப் போரியல் வரலாற்றில் குறிக்கத்தக்க பங்காற்றிய அபிராமுக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
-
அன்பு இந்த சந்திப்பு முடியும் வரை நகரவிடாமல் தடுப்பது உனது பொறுப்பு.தலைவரின் பேச்சுக்கு அதிக இடைவெளி கொடுக்காமல் அன்பு வாத்தி தொடர்பாடலை பொறுப்பெடுத்து கட்டளைகளை வழங்கத்தொடங்கினார். உண்டியல் சந்திக்கு அருகில் கடைசி சந்திப்பு அப்போத்தான் தொடங்கி இருந்தது. கப்பலடி, பள்ளிக்கூடத்தடி தாண்டி தலைவருக்கு 25 மீட்டருக்குள் ராணுவம் நகர்ந்திருந்தது. 50 பேர் கொண்ட அணியை கரும்புலிகளுக்கு பயற்சி வழங்கும் அன்பு வாத்தியார் தலைமையில் வழிமறித்து தாக்குதலை ஆரம்பித்து இருந்தார்கள். சண்டை தொடங்கி 10 நிமிடங்களுக்குள் 19 பேர் வீரச்சாவு. அகிலன் அன்புவாத்தியிடம் கரும்புலி தாக்குதலுக்கு அனுமதி கோரினான். அலைபேசி கெஞ்சியது. X1, 8-2 இனை பின்னகர்த்தசொல்லி அகிலன் கெஞ்சிக்கொண்டிருந்தான். தலைவர் கேட்டுக்கொண்டுதான் இருந்தார். அடுத்தது நான் என்ன செய்யவேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர என் எதிரி இல்லை. இது உனக்கு விளங்குதா அன்பு. வார்த்தைகளில் உறுதியும் தெளிவும் இருந்தது. அவர் தலைவர். மேதகு.
-
கரும்புலிகளுக்கும் மறைமுக கரும்புலிகளுக்கும் வீர வணக்கம்
-
நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!
பகலவன் replied to கிருபன்'s topic in மாவீரர் நினைவு
வீரவணக்கம் -
வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம்கலி
பகலவன் replied to கிருபன்'s topic in மாவீரர் நினைவு
வீரவணக்கம் -
நாகர்கோவிலில் காவியமான 38 மாவீரர்கள் மற்றும் லெப்.கேணல் நிஸ்மியா நினைவு
பகலவன் replied to மின்னல்'s topic in மாவீரர் நினைவு
வீரவணக்கம் -
தடா சந்திரசேகரின் ஒலிப்பதிவும் சிரஞ்சீவியின் மறுப்பும்
பகலவன் replied to பகலவன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
காலப்பிழைக்காக காத்திருக்க முடியவில்லை. நேற்று அம்மானுக்கு இன்று சிரஞ்சீவிக்கு. கூட களமாடியவனை கொச்சைபடுத்துவதை பார்த்து சும்மா இருக்கும் மனப்பக்கும் இன்னும் வரவில்லை. புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறோம். இதன் பாதை போய் சேரும் இடம் என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்தமையால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மன்னிக்கவும். சிரஞ்சீவியின் பதிவை எந்த ஊடகம் வெளிப்படுத்தும் என்று தெரியவில்லை. யாழ்களம் போராடியவர்களின் பதிவை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் தான் பதிவிட்டேன். சிரஞ்சீவி மாஸ்ரருக்கு நிறைய நன்றி கடமைப்பட்டு இருக்கிறேன். -
தடா சந்திரசேகரின் ஒலிப்பதிவும் சிரஞ்சீவியின் மறுப்பும்
பகலவன் replied to பகலவன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
குறிப்பு : இந்த பதிவை இட்டமைக்காக எனது பூர்வீகம் எல்லாம் கிளறி எடுத்து பதிவிடும் உறவுகளுக்கு வணக்கம். எனது நண்பனும் கூட களமாடிய நண்பனுமான சிரஞ்சீவியின் குரல் வெளிவரவேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான் இந்த பதிவே தவிர வேறெந்த உள்நோக்கம் எனக்கு இல்லை. மேலே உள்ள காணொளி கூட தடா சந்திரசேகர் என்ன பேசினார் என்பதற்காகத்தான் இணைக்கபட்டிருக்கிறது. சீமானின் பக்தி மிகுதியில் வலைத்தளங்களில் காணொளி பதிவிடும் உறவுகள், தங்கள் உயிரைக்கொடுத்து போராடிய தளபதிகளுக்கு கிட்டவும் நிற்க முடியாது, ஆனால் எழுதும் கருத்துகளில் காட்டும் தேசிய பாசம் பிழையான் பாதைக்கு இட்டுசெல்லும். சிரஞ்சீவி, பொட்டம்மானின் நிர்வாகத்தில் இந்தியாவுக்கு பொறுப்பாக இருந்த முக்கிய தளபதி. சீமானை பொட்டம்மானை சந்திக்க வைப்பதை ஒழுங்குபடுத்தியவர். அண்மையில் சீமானின் ஒலிப்பதிவில் (திராவிட கும்பலினால் மிமிக்கிரி செய்ததாக மூடி மறைத்த) குறிப்பிடப்படும் பொட்டம்மானின் தளபதி. சீமானின் வன்னி நடமாட்டங்களை ஒழுங்குபடுத்திய கண்காணித்த புலனாய்வு பொறுப்பாளர். இனி உங்கள் தெரிவுக்கே விட்டுவிடுகிறேன். யார் வேணுமென்றாலும் என்னையோ, சிரஞ்சீவி மாஸ்ரரையோ, பொட்டம்மானையோ துரோகி என்றாலும், திராவிட செம்பு என்றாலும், ரோவின் கையாள் என்றாலும், கோத்தாவின் பணத்தில் இயங்குவது என்று முழங்கினாலும் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் நாங்கள் உங்களுக்காக போராடியவர்கள், இன்னும் போராடிக்கொண்டே இருப்போம். ஒவ்வொரு நாள் காலையிலும் மண்மீது ஆணையிட்டு சத்தியபிரமாணம் செய்ததை உயிர் போனாலும் விட்டுக்கொடுக்கபோவதில்லை. நன்றி பகலவன்- 50 replies
-
- 13
-
-
-
சிரஞ்சீவியின் மறுப்பறிக்கை. 25/04/2021 பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயற்படக்கூடாது என்று தலைமையினை கோருகின்றேன்.. நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா அவர்கள் சற்றும் உண்மை கலக்காத பொய்யினை கட்டவிழ்த்து விட்டு, சிரஞ்சீவி ஆகிய என்னைப்பற்றி அவதூறு பரப்பும்படி ஒருவருடன் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்றினை கேட்க நேரிட்டது. தமிழர்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக கட்டமைக்கப்பட்வருகின்ற நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா பேசியிருப்பது உண்மையென எண்ணி தொடர்ந்தும் தனிப்பட்ட அழைப்புக்களில் இதன் உண்மை தன்மை குறித்து என்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தடா ஐயா பேசிய எல்லா விடயங்களுக்கும் அவரே பொறுப்பானவர். அதன் உண்மை தன்மை குறித்த விளக்கத்தினையும் அவரே வழங்க வேண்டும். ஆயினும் அவர் , என்னைப்பற்றி பரப்ப முற்பட்டுள்ள பொய்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டய கடமை எனக்கு உள்ளது. , என்னைப்பற்றி அவர் பேசிய விடயத்தில் துளியளவும் உண்மையும் இல்லை என்பதனை பொதுவெளியில் தெரிவித்துக் கொள்கின்றேன். உண்ணும் உணவுத்தட்டில் அசிங்கப்படுத்தும் செயலை செய்திருக்கின்றார் என்பதே வருத்தத்துக்குரிய விடயமாக உள்ளது. என் மீதான அவதூறு பொதுவெளியில் வந்துள்ளமையால் பொதுவெளியில் விவாதிக்க நான் தயாராகவே உள்ளேன். ஐயா தடா தயாராக உள்ளாரா என்பதை மட்டும் தெரியப்படுத்தவும். பொய்களும் உண்மைகளும் பொய் 1: சத்தியமங்கலத்தில் இருபது ஏக்கர் காணி வாங்கி விவசாயம் மற்றும் பண்ணை செய்கின்றேன்.. கொளத்தூர் மணி அண்ணாவின் தயவில் வாழ்கின்றேன். உண்மை: என்னிடமோ எனது குடும்பத்தாரிடமோ பினாமியிடமோ சொந்தமாக ஒரு சதுர அடி நிலம் கூட இல்லை என்பதை தெரியப்படுத்துகின்றேன்.. கொளத்தூர் மணி அண்ணா மட்டுமல்ல வேறு எவரது தயவிலும் நான் வாழவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் . அவ்வாறு காணி இருப்பதை உறுதிப்படுத்தினால் பேராசை கொண்ட தடா ஐயா அவர்கள் இருபது ஏக்கார் நிலத்தையும் எடுத்துக்கொள்ளலாம். பொய் 2: RAW agent ஆக செயற்படுகின்றேன். உண்மை: பெரியவர் தடா சந்திரசேகர் ஐயாதான் அதற்கு தலைவராக இருந்து அதில் என்னையும் அவர் இணைத்துக் கொண்டிருந்தால் அவ்விடயம் உண்மையாக இருக்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் அதில் எதுவித உண்மையும் இல்லை. அவர் மிகப்பெரிய வழக்கறிஞராக உள்ளார் . அவரே இவ்விடயத்தை உறுதி செய்து வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். ஒருவரின் உண்மைத்தன்மையினை சீர்குலைக்க வேண்டுமாயின் அவரை இந்திய உளவுத்துறை, சிங்கள உளவுத்துறை , RSS ,திராவிட கைக்கூலி என்று முத்திரை குத்தி ஒதுக்குவதை நாம்தமிழர் வழமையாக வைத்துள்ளார்கள். அதன் பிதாமகரான நீங்கள் என் மீதும் அவ்வாறான சேற்றை வாரி இறைக்க முற்பட்டுள்ளீர்கள். பொய் 3: பொட்டம்மான் உயிரோடு இருப்பதாக காவல்துறைக்கு வாக்குமூலம் கொடுத்தேன். அந்த செய்தி வார இதழில் செய்தியாக வந்தது. அதனால் RAW agent. (பொட்டம்மான் உயிரோடு இல்லை என்று செய்தி வந்திருந்தாலும், பொட்டம்மான் உயிரோடு இல்லை என்று காவல்துறைக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார் . அதனை திட்டமிட்டு ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்துள்ளார் , போராட்ட சிந்தனையில் உள்ளவர்களை அதிலிருந்து விலக வைப்பதற்காக RAW சொல்லியே சிரஞ்சீவி செயற்பட்டார் என்றும் நாக்கை பிரட்டிப் பேசக்கூடிய மகாநடிகன் ஐயா நீங்கள். அது வேறு கதை. இருக்கட்டும்) உண்மை: பத்திரிக்கைச் செய்தி இணைத்துள்ளேன்- தடுப்பில் இருந்த என்னை பார்க்க வந்த வழக்கறிஞர் ஊடாகவே அந்த பேட்டி கொடுக்கப்பட்டதாக வார இதழிலில் பதிவாகி இருந்தது . என்னைப்பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதற்காக , நான் கைதாகி சில நாட்களில் ஒரு தடவை பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா வந்து சென்றார் (என்னை சந்திக்க வந்த போது தடா ஐயா நாம் தமிழர் கட்சியில் இணைந்திருக்கவில்லை. மூத்தவர் பழ.நெடுமாறன் ஐயா அவர்களுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.). தடா ஐயா என்னைபார்த்து சென்ற பின்னரேயே வார இதழ் ஒன்றில் மேற்குறித்த செய்தி வெளியாகி இருந்தது. எனது கைதுக்கும் செய்தி வெளியாகிய திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வேறு வழக்கறிஞர் எவரும் என்னைப் பார்க்க வரவில்லை.தடா ஐயாவின் திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த செய்தி வழங்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் இப்போது தோன்றுகின்றது. இந்த செய்தி வெளிவந்த பின்னர் காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறையினரின் கடுமையான விசாரணைகளை எதிர்கொள்ள நேரிட்டது. . என்னுடன் தடுப்பில் இருந்தவர்கள் விசாரணை தொல்லைகளை அறிந்த சாட்சிகளாக இப்போதும் உள்ளனர். பொய் 4: எனது வழக்கினை நடாத்தி விடுதலை வாங்கி கொடுத்தாக கூறியுள்ளார். உண்மை: என் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தது. அதில் பிரதான வழக்கு, ஒன்பது வருடங்களாக மாவட்ட நீதிமன்றத்திலும், பின்னர் உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்றது. எனது வழக்கறிஞர்களாக மதுரை பகத்சிங் அண்ணாவும், தம்பி ராஜீவ்காந்தியுமே செயற்பட்டார்கள். அவ்வேளைகளில் ஒரு நாள் கூட சந்திரசேகர் ஐயா எனக்காக நீதிமன்றம் வந்ததும் கிடையாது. எனது வழக்கிற்காக அவரை வழக்கறிஞராக ஒருபோதும் நான் நியமித்ததும் கிடையாது! வழக்கறிஞர் ராஜிவ்காந்தியை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததாக சொல்லுகின்ற விடயமும் மிகவும் பொய்யானது. நாம் தமிழர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வழக்கறிஞர் பகத்சிங் அண்ணா வழக்கறிஞர் காமராஜ், வழக்கறிஞர் பாலாஜி, வழக்கறிஞர் ராஜிவ்காந்தி ஆகியோர் எனது தொடர்பில் இருந்தார்கள். நாம் தமிழர் அமைப்பாக தொடங்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பின்னர் தான் வழக்கறிஞர் பாலாஜி., வழக்கறிஞர் ராஜிவ்காந்தி போன்றோரால் தாங்கள் நாம் தமிழர் கட்சியில் இணைக்கப்பட்டீர்கள் (2011) என்பதை கூட மறந்து விட்டீர்களா ? தடா ஐயா கட்சிக்குள் வந்தால் நல்லது பேசிப்பாருங்கள் என்று வழக்கறிஞர் பாலாஜியிடம் கூறியதே நான் தான் என்பது கூட நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ராஜிவ்காந்தி மாற்று கட்சிக்கு சென்று விட்டார் அதனால் அவரிடம் கேட்க முடியாது. வழக்கறிஞர் பாலாஜி இருக்கின்றார் . அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ஐயா . அண்ணன் சீமான் அவர்களுடன் சேர்ந்து செயற்பட அழைத்தபோது அண்ணன் சீமான் குறித்து நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை நீங்கள் மறந்திருக்கலாம். எனக்கு நினைவிருக்கின்றது. அதனை பொது வெளியில் சொல்ல விரும்பவில்லை. பொய் 5: தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சி காலத்தில் சிறப்பு முகாம்கள் எல்லாம் மூடப்பட்டு என்னையும் அங்கிருந்து விடுதலை செய்தார்கள். உண்மை: சிறப்பு முகாம் நடைமுறை இன்று வரை நடைமுறையில்தான் உள்ளது. அவ்வாறு சிறப்பு முகாம் மூடப்பட்டு நான் விடுதலையாகவில்லை. வழக்கறிஞர் பிரபு அவர்களின் ஏற்பாட்டில் வழக்கறிஞர் ரூபஸ் அண்ணா மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே விடுதலையானேன். பொய் 6: எனது குடும்பத்தினரை முகாமிலிருந்து வெளியே எடுத்து தங்க வைத்து பராமரித்ததாக கூறியுள்ளார். உண்மை: எனது குடும்பத்தினர் எந்த முகாமில் இருந்தார்கள்?. எங்கே வீடு எடுத்து தங்க வைத்து இருந்தீர்கள் ? என்பது குறித்து ஐயாவே விளக்கமளிக்க வேண்டும் பொய் 7 என்னைக் கண்டால் கதைக்க மாட்டாராம் . பிடிக்காதாம் . உண்மை: இவர் பெரியவர் என்ற மரியாதை மட்டுமே எனக்கிருந்தது. வழமையாகவே போதையில் இருப்பவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பது எனது வழக்கம். அந்த அடிப்படையில் ஐயாவை கண்டால் நான் ஒதுங்கிக்கொள்வது என்பது தான் உண்மை .தனது வீட்டுக்கு வரும்படியும் "நீங்களெல்லாம் எனது வீட்டுக்கு வருவது பெருமை" என்று கூறியவர்தான் ஐயா " தடா . *அது வேற வாய் இது நாற வாய்" என்பது போல் இப்போது பேசியுள்ளார். பொய் 8: ராஜிவ்காந்தி ,மற்றும் கல்யாணசுந்தரத்தை கட்சியிலிருந்து வெளியேற்றிய போது அவர்களுக்காக வக்காலத்து வாங்க வந்தேனாம். உண்மை : ஐயா பெரியவரே உங்களை போன்று வன்மத்துடன் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் எனக்கில்லை. அண்ணன் சீமான் அவர்களுக்கு அனைவரது கூட்டு செயற்பாடுகளும் இந்த தேர்தல் நேரத்தல் அவசியம் என்பதால் கட்சியிலிருந்த மாநில பொறுப்பிலிருந்தவர்கள் வெளியேறுவது அல்லது வெளியேற்றப்படுவது பொருத்தமாக அமையாது என்பதாலேயே இது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தை தெரியப்படுத்தி இருந்தேன். இந்த விடயத்தை பதிவு பண்ணும் இன்றைய நாள் வரை ராஜீவ்காந்திக்கும் கல்யாணசுந்தரத்திற்கும் அவர்களுக்காக நான் உங்களுடன் பேசிய விடயம் கூட தெரியாது என்பது தான் உண்மை. பலமான சக்தியாக இருக்க வேண்டும் என்று சிந்தித்ததில் என்ன வன்மம் இருக்கின்றது என்பதை தெரியப்படுத்தினால் அனைவரும் அறிந்து கொள்ளலாம். பொய் 9: RSS ன் கைக்கூலியாக செயற்படுகின்றேன். உண்மை : கற்பனை கலக்காத பொய் . இதனை உறுதி செய்யுங்கள் பெரியவரே . நான் உங்களுடன் பொய்களை பரப்பும் கூட்டுக் களவானியாக சேர்ந்து கொள்கின்றேன். பொய் 10: அண்ணன் சீமானுக்கெதிராக சதி செய்தேனாம் உண்மை: அண்ணன் சீமான் அவர்களை தலைமைக்கு அறிமுகம் செய்து வைத்தவன் என்கின்ற முறையில் அவருக்கும் எனக்கும் இடையில் புரிதல் இருக்கின்றது .- (இது குறித்த ஆதாரங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளது.) அவருக்கெதிராக சதி செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. உங்களைப்போன்ற பெரியவர்கள் இவ்வாறான நிலைமையினை ஏற்படுத்தாமல் இருப்பதே சாலச் சிறந்தது. பொய் 11: அண்ணன் சீமான் அவர்களது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வேனாம் எனது தில்லு முல்லை அறிந்து என்னை அண்ணன் துரத்தி விட்டாராம் (ஏன் இந்த நயவஞ்சக குணம்?) உண்மை: நான் விடுதலையாகி ஒரு வருடம் மட்டுமே சென்னையில் தங்கி இருந்தேன். அக்காலப்பகுதியில் முக்கிய தேவைகளின் அடிப்படையில், அண்ணன் சீமான் அவர்கள் அழைத்தால் மட்டுமே சந்திக்க செல்வதுண்டு..!! ஒரு சில காரணங்களுக்காக நானே தான் அங்கிருந்து ஒதுங்கி இருந்தேன் என்பது அண்ணன் சீமானுக்கு தெரியும். என்னைத் தொடர்பு கொள்வதற்கு மூன்று வருடங்களாக எவ்வாறான முயற்சிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே தற்போதும் உள்ளது. எனவே நீங்கள் செய்யும் போலிப்பிரச்சாரங்கள் எதுவும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை புரிந்து கொண்டு அண்ணன் சீமான் அவர்களின் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்காமல் தாங்கள் ஒதுங்கி கொள்ளவதே நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும்.. அண்ணன் சீமானை அமைப்பு சார்ந்து முதலில் தொடர்பு கொண்டது யார் என்பது தொடக்கம் அவருடன் தொடர்ந்து பயணித்தது வரையான ஆட்கள் எல்லோரும் தற்போதும் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் என்பது அண்ணனுக்கு தெரியும். கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்யாமல் தாங்கள் இருந்தாலே இனத்துக்கு செய்கின்ற மாபெரும் செயலாக அமையும் . என்னை மிரட்டினால் உங்களின் காலடியில் இருப்பேன் என்றும் இல்லையென்றால் கடத்தி கொலை செய்வேன் என்றும் கதை அளந்துள்ளீர்கள். உங்கள் வயதுக்கேற்ப உங்கள் செயற்பாடுகளை வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வெளிப்படுத்துகின்ற வீர வசனங்களில் அல்ல உங்கள் மீதான மரியாதை . நீங்கள் பிறரை அணுகும் குணத்தில் தான் உள்ளது . நன்றி சிரஞ்சீவி