-
Posts
660 -
Joined
-
Last visited
-
Days Won
4
ஆதித்ய இளம்பிறையன் last won the day on August 8 2014
ஆதித்ய இளம்பிறையன் had the most liked content!
Profile Information
-
Gender
Male
-
Location
தமிழ் தேசம்
-
Interests
தமிழ், காதல், வீரம்
Recent Profile Visitors
5112 profile views
ஆதித்ய இளம்பிறையன்'s Achievements
-
கற்பனைக்கும் வேலி வேண்டும் தலைவா !!??
ஆதித்ய இளம்பிறையன் replied to ஆதித்ய இளம்பிறையன்'s topic in தமிழும் நயமும்
காட்சியை இணைத்தமைக்கு நன்றி நிலாமதி. வரவேற்றலுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நிழலி, சுவி. கற்பனை மிகுதின் கட்டிலும் சிறக்குமே தலைவா! -
இது ஒரு பழைய பாடல் தான்.. பல முறை கேட்டு கடந்து சென்று இருக்கிறேன். ஆனால் சில நாட்களாக அப்படி இல்லை. புத்தனுக்கு ஞானம் வந்ததுபோல், ஓர் மாலையில் காதில் விழுந்த இந்த வரிகளும் எண்ணுறக்கம் திண்கிறது. பாடல் வரிகளை கேட்பதனால் இன்பமா இல்லை அது மீட்டுத்தரும் நினைவுகள் இன்பமா தெரியவில்லை. பாடலில் ஒளிந்திருக்கும் மறைபொருள் இதுவோ!? அதுவோ ?!! என்று என் கற்பனைகளையும் அதனுடன் பொருத்திப் பார்க்கும்போது உடலெங்கும் இன்பம் தோய்கிறது. உங்கள் கற்பனைகளே.. உங்கள் உயிர்ப்பினை உறுதி செய்யும்..! கீழ் உள்ள வரிகள் உங்களுக்காக. சுட்டிக்காட்டிய வரிகளுக்கு பொருள் அறிந்தாலும் / புரிந்தாலும் பதிவிடுங்கள். அறிய ஆவல் !! மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே மரகத மணியே என் மயில் இள மயிலே மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே தங்கமலர் பாதம்மேவி தாளம் போடும் கொலுசு போல அங்கும் இங்கும் ஆடிப் பார்க்கும் ஆசை எனக்கு ஓ செங்கமலம் போல தேவி தேரில் ஏறி உன்னைக் கூட இங்கு வந்த நேரம் என்ன காதல் வழக்கு அள்ளி அள்ளி கூடும் போது ஆசை வளர அங்கம் எங்கும் காதல் என்ற பூவும் மலர கிள்ளிக் கிள்ளி வாசம் பார்க்க மோகம் தொடர சொல்லிச் சொல்லி காம தேவன் பாணம் படர என்னை தினம் பாடும் குயிலே வண்ணம் கொண்டு ஆடும் மயிலே ....... ஓ வெற்றிக் கொடி ஏற்றி ஏற்றி வேகமோடு தேரை ஓட்டி சுற்றி வந்த ராஜராஜன் உன் தாழ் போற்றி முற்றுகையை போட்ட போது மோகம் விடுமோ முன் இருக்கும் மோக வாசல் தாகம் விடுமோ கற்பனைக்கும் வேலி போட வேண்டும் தலைவா காதலிக்கு நாணம் மேலும் கூடும் அல்லவா மோகம் இசை பாடும் உடலே காமன் விளையாடும் திடலே
-
தமது விருப்பங்களாக (Interests) தமிழ், காதல், வீரம் என ஆதித்த இளம்பிறையன் அவர்கள் அடுக்கியது ஒரு மூன்று சொற்கவிதை. தம் வாழிடம் (Location) தமிழ் தேசம் என்றது தனிக் கவிதை. அவர்தம் வாழ்வு 'ரசனை' என்று நாம் சேர்ப்போமே !
-
இவங்க சொன்னது கொஞ்சம் தான். சிற்றிலியக்க நூலான குற்றாலக் குறவஞ்சி வர்ணனைகள் எல்லாம் வேற மாதிரி. இந்நூல் மெல்லிய காமம் கலந்த மாதிரி இருக்கும். குறவனுக்கும் குறத்திக்கும் நடக்குமாறு எழுதியிருக்கும் ஒரு உரையாடலின் பகுதி இது... தமிழ் அறிந்தவர்கள் ரசிக்கலாம்.. குன்றத்தைப் பார்த்தாற் கொடியிடை தாங்குமோ சிங்கி - ??? கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா இல்லாத சுற்றெல்லா மெங்கே படித்தாய்நீ சிங்கி - நாட்டில் நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி - இந்த வெட்ட வௌியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்கா கட்டிக்கொண் டேசற்றே முத்தங் கொடுக்கவா சிங்கி - நடுப் பட்டப் பகலில்நா னெட்டிக் கொடுப்பேனோ சிங்கா முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி - காம மட்டுப் படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா சேலை யுடைதனைச் சற்றே நெகிழ்க்கவா சிங்கி - சும்மா நாலுபேர் முன்னெனை நாணங் குலையாதே சிங்கா பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி - மனப் போதம் வருடிப்போய் பூனையைக் குத்தடா சிங்கா நாக்குத் துடிக்குதுன் நல்வா யிதழுக்குச் சிங்கி - உன்றன் வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா ஒக்கப் படுக்க வொதுக்கிடம் பார்க்கவோ சிங்கி - பருங் கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா விந்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி - அது சந்தேக மோஉன்றலைப் பேனைக் கேளடா சிங்கா தென்னாடெல் லாமுன்னைத் தேடித் திரிந்தேனே சிங்கி - அப்பால் இந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய் சிங்கா நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி - மணிப் பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா பாடிக்கொள் வாரெவ ராடிக்கொள் வாரெவர் சிங்கி - நீதான் பாடிக்கொண் டால்போது மாடிக்கொள் வேனடா சிங்கா பார்க்கப் பொறுக்குமோ பாவியென் னாவிதான் சிங்கி - முன்னே ஆக்கப்பொறுத்தவ ராறப் பொறர்களோ சிங்கா.
-
தமிழில் எழுதப்பட்ட, தற்பொழுது நம்மிடம் உள்ள மிகப்பழைய இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின் கால வரையறை விக்கிப்பீடியா தகவலின் படி கி.மு 2100 (ஏற்ககுறைய வருட 4000 பழமையான நூல்). தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் தொல்காப்பியர் ஐந்திரம் மற்றும் 'முந்துநூல்'(அகத்தியமும்) கண்டிருந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஆகையால் தொல்காப்பியத்திற்கு முனபே பல இலக்கண நூல்கள் இருந்தது உண்மை. தொல்காப்பியம் 4000 வருட பழமையான நூல் எனில் தமிழ் மொழியின் தோற்றம் அதைவிட பழமையாக இருக்க வேண்டும். விக்கிப்பீடியா காய்சின வழுதி என்ற பாண்டிய மன்னன், பாண்டி நாட்டின் தலைநகரான குமரியாற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆராய்ந்தான் என இறையனார் களவியல் உரைகூறுகிறது. மேலும் 9 அரசர்கள் 4440ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக கூறுகிறது. இசங்கத்தில் இயற்றிய நூல்களின் வரிசையும் கூறுகிறது. இறையனார் களவியல் உரையில் முதற்சங்க நூல்களின் பட்டியலில் தொல்காப்பியம் கூறப்படவில்லை. மேலும் தொல்காப்பியம் எழுதப்பட்டது இடைச் சங்க கால நூல் என தமிழ் பண்டிதர்கள் கூற்று. இது உண்மையெனில் தமிழ் மொழியின் தோற்றம் ஏறக்குறைய 8000 ஆண்டுகள் பழமையானது உண்மை என்னவெனில் தமிழ் மானுடம் பிறந்ததிலிருந்து பேசப்படும் மொழி. தமிழ் ஒரு இறை மொழி அது என்றும் இறவா மொழி !!
-
நாம் தமிழர் அரசியல் - பாகம் 2
ஆதித்ய இளம்பிறையன் replied to இசைக்கலைஞன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
தமிழ் எல்லா சமயங்களுக்கும் இடம் கொடுத்தது. எல்லா சமயங்களும் தமிழுக்கும் இடம் கொடுத்தன. எந்தெந்த சமயங்கள் தமிழுலகில் நுழைந்ததோ அத்தனை சமயங்களும் உரிமை கொண்டாடும் ஒரு நூலாக திருக்குறள் விளங்குகிறது. ஒரு நூல் போதும்... தமிழர்களின் வாழ்க்கைக்கு; இந்த ஒரு நூல் போதும்; அந்தளவுக்கு நமது வாழ்க்கை முழுவதையும் ஒரு சிறிய நூலுக்குள் அடக்கி எளிமையாகத் தந்திருக்கிறார் திருவள்ளுவர். இது தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய சொத்து. இந்த சொத்தை பொதுவுடமையாக்கி உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்ட நமது *"திருக்குறள்”* நூலை அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யபட்ட போதும், அது கத்தார் நூலகத்தில் இல்லாதது பெரும் குறையாக இதுநாள் வரை எங்களுக்கு இருந்து வந்தது. அது நமது செந்தமிழர் பாசறை கத்தார் உறவுகள் மூலம் இன்று தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நமது திருமறை, மற்றும் *"பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்"* தொகுப்பு இரண்டையும் "செந்தமிழர் பாசறை கத்தார்" உறவுகளின் முயற்சியில், நமது தாயகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, *கத்தார் நூலகத்தில்* வைப்பதற்கு அனுமதியும் பெற்று, 13-10-2018 அன்று கத்தார் தேசிய நூலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய சிறப்பான செயலினை நடத்திக் காட்டிய அனைத்து செந்தமிழர் பாசறை கத்தார் உறவுகளுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளும், வணக்கங்களும். இந்நேரத்தில் அரபு மொழியில் திருக்குறளையும், பாரதிதாசன் கவிதைகளையும் பொழிபெயர்ப்பு செய்த *"டாக்டர் திரு. ஜாகிர் ஹூசைன்"* (சென்னை பல்கலை கழக அரபு மொழி துனை பேராசிரியர்) அவர்களுக்கும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம். தமிழால் இணைவோம் நாம் தமிழராய் நிமிர்வோம் *செந்தமிழர் பாசறை கத்தார்* Source : Verified Whatsapp Message- 2995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
ஆதித்ய இளம்பிறையன் replied to தமிழ் சிறி's topic in வண்ணத் திரை
இதுபற்றி நாம் மிகவும் கலைப்பட தேவை இல்லை என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்த ஒருவனிடம் இதுபற்றி கேட்கும்போது..."Just jolly " என்று சொன்னான். இது ஒரு கொண்டாடும் மனநிலை. படிப்பறிவு குறைந்த உழைக்கும் வர்க்கத்திற்கு கவலை மறந்து கொண்டாட எதாவது ஒன்று தேவை. இப்பொழுது சினிமா. இந்த மாதிரி மனிதர்கள் சமூகத்தில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவே. வாக்கு என்று வரும்போது இதில் உள்ள பெரும்பாலானோர் வேறு மாதிரியான நிலைப்பாட்டையே எடுப்பார்கள். ஆனால் காசு வாங்கி கொண்டு சினிமா நடிகர்கள் பற்றி தினமும் செய்தி போட்டு அவர்களை ஒரு கடவுள் மாதிரி சித்தரிக்கும் ஊடகங்கள் தான் மிகவும் ஆபத்தானவை -
எனது படங்களை பதிவேற்ற இயலவில்லை... எல்லா வடிவங்களிலும் முயன்று விட்டேன் (.png,.jpg ). 1MB க்கு குறைவுதான்
-
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தாமரை எழுதிய இந்த வரிகளையும் கேட்டுப் பாருங்களேன்... மறு வார்த்தை பேசாதே! மடிமீது நீ தூங்கிடு! இமை போல நான்காக்க.. கனவாய் நீ மாறிடு ! ..... மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே ..! பிரிந்தாலும் என் அன்பு.. ஒருபோதும் பொய்யில்லையே ! ..... இதழ் என்னும் மலர்கொண்டு.. கடிதங்கள் வரைந்தாய்! பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் ..!
-
திரிதபாதி அல்ல திரிபதாதி. இது இலக்கியப் பாங்குகளில் ஒருவகை. பரிதிமாற் கலைஞர்(வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி) எழுதிய சிந்திரக் கவி விளக்கம் என்ற நூலில் திரிபதாதி பற்றி சொல்லப்படுகிறது. "மூன்றெழுத் தொருமொழி முதலீ றிடையீ றன்ற பொருள்பிற வாந்திரி பதாதி "
-
சகுனி சனி குனி
-
சரியான விடை வாலி !! மெச்சுகிறேன் வேந்தனுக்கு செய்திகளை விரைந்து தருபவன் --> வேவாள் முதல் போயின் பெண்ணின் அங்கத்திற்கு உவமையாவது ஆபத்தானதும் கூட --> வாள் இடை போயின் தலைகாக்கும் செயல் --> வேள் - உதவி
-
இதற்கு யாரும் இன்னும் விடை கூறவில்லையே
-
சரியான பதில்.. தகழி - உண்கலம் காற்றும் இசையாகும் இதனிலடைத்தால் => கழி =>மூங்கில் கம்பு காற்றும் புகாது காதலர்கள் செய்தால் => தழி => தழுவு ஆகா பச்சை இல்லையே !! நாளை இடுகிறேன் வல்வை ...
-
முற்காலத்தில் கோட்டை மதில்களை ஒட்டிய நீர்நிலைகளை குறிக்கப் பயன்படுத்தும் சொல்லை ஒத்தது. முயன்று பாருங்கள்