அதெல்லாம் இயற்கையின் படைப்பு. உலகில் உள்ள எல்லா நாடுகளும்,காலநிலைகளும்,மனித உருவங்களும் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன? ஐந்தறிவுடன் வனத்தில் வாழும் விலங்கினங்களை பாருங்கள் ஒன்றை ஒன்று பிடித்து சாப்பிடுகின்றன அல்லவா? சிங்கம் புலிகளுக்கு இரையாகும் மான் மரைகளைப்பற்றி நாம் எப்போவாவது கவலைப்பட்டதுண்டா? அந்த மான் மரைகளை நாம் காப்பாற்ற நினைத்தால் சிங்கம் புலிகளுக்கு உணவு என்ன? அவைகளை தாவரபட்சணிகளாக்க முடியுமா?
அதே போல் நாம் வீட்டில் வளர்க்கும் ஆடு மாடு கோழிகளை கொன்று உணவாக உண்கின்றோம். அந்த ஆடுமாடு கோழிகளுக்கும் ஆறறிவு இருந்தால் நம் கதி என்னவாக இருக்கும்?
இயற்கையின் படைப்பு அப்படி.அதிகம் சிந்தித்தால் நாம் வாழவே முடியாது.
மனிதனுக்கு மட்டும் ஏன் ஆற்றிவு? அதை ஒழுங்காக பிரயோகிக்காமல் அந்த இயற்கையின் மீது ஏன் பழியை போடுகின்றீர்கள்?
தவறாக நினைக்க வேண்டாம். நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வட்டத்திற்குள் மட்டும் நின்று எழுதுகின்றேன்.