எட ஆதி ராடர் பூட்டினாலும் அமசடக்காய் வந்து நாங்கள் மலர் தூவுவமேல்லே.இருந்தாலும் என் வாழ்த்துக்கள் ஆயிரம்.மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிளக்கப் பாயாதாம் உங்கையெப்பிடி?????
தங்களின் பெயர் அழகான தமிழினால் உருவாக்கப்பட்டதல்லவா!!!எதற்காக அச்சமடைகின்றீர்கள்?உங்கள் கைவண்ணத்தை இங்கே படையுங்கள்.அறிவுப்பசியில் நாங்கள் தவிக்கின்றோம்.
தம்பி ராசா மாப்பிளை!உந்த சீனாக்காரன்ரை வெள்ளையரிசிச்சோத்தை நாள்முழுக்க சாப்பிட்டுப்போட்டு இஞ்சை வந்து கொஞ்சப்பேர் கதை விடுகினம் தாங்கள் ஊரிலையே பசுமதியரிசிச்சோறுதான் சாப்பிட்டு வளர்ந்தவையாம்.சரி அது இருக்கட்டும் லண்டனுக்கு பாய்வம் எண்டு சொல்லுறீர்.இப்ப பொம்புளை இறக்குமதி முடிஞ்சு மாப்பிளை இறக்குமதி தான் கூடுதலாய் நடக்குது.இஞ்சை இப்ப கன குமருகள் கிலுகிலுத்துக்கொண்டு திரியினம்.என்ன மாதிரி உமக்கும் ஒண்டை பார்க்கவோ?கையிலை குறிப்பு,சாதகக்கொப்பி ஏதும் வைச்சிருக்கிறீரோ?
வணக்கம் கறுப்பி அக்கா! உங்கள் இரண்டாவது வலைப்பூ படைப்பை எனக்கு ஈமெயிலில் அனுப்பியதிற்கு நன்றி.சிறுத்தையை பற்றிய இந்த விவரண ஆக்கம் மிகவும் நன்றாக உள்ளது.மேன்மேலும் உங்கள்படைப்புகள் வளர என் கோடி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்