Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43054
  • Joined

  • Days Won

    438

Posts posted by குமாரசாமி

  1. 32 minutes ago, விசுகு said:

    நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 

    தமிழ் மக்கள் கொஞ்சம் தூர நோக்கோடு தெளிவான முடிவுகளை தொடர்ந்து எடுக்கிறார்கள்.

    தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

  2. 41 minutes ago, satan said:

    அது சரி ....... இலங்கை பெற்ற கடன்களை மீள செலுத்தி விட்டதா? பௌத்த விகாரைகளின் கட்டுமானப்பணிகள் குறைந்து விட்டதா? மக்கள் தங்கள் நிலங்களில் சுதந்திரமாக குடியேற அனுமதித்துள்ளார்களா?

    அடிச்சான் பார் ஆப்பு...🤣

    டம்பியர் இனி அங்காலை இஞ்சாலை அரக்கேலாது...😎

  3. 26 minutes ago, Kandiah57 said:

    முதலில் துய தமிழில் எழுதுங்கள்  

    இதே ஆலோசனையை ஏனைய கருத்தாளர்களுக்கும் ....
    அறிவுறுத்துவீர்களா? 
    அறிவுறுத்துவீர்களா? 
    அறிவுறுத்துவீர்களா? 

    • Like 1
  4. 7 hours ago, ஈழப்பிரியன் said:

    எந்தக் கப்பல் என்றால் என்ன ஒரு நாட்டுக்குள் போகும்போது குறிப்பிட்ட கடல் எல்லையில் இருந்து சிறிய படகில்வந்து எந்த துறைமுகத்துக்கான போட்கப்ரின் என அழைக்கப்படுபவரின் கட்டளைப்படி தான் கப்பல் கொண்டுபோய்க் கட்டப்படும்.

    அதே மாதிரி துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டுபோய் விடுவதும் போடகப்ரனின் பொறுப்பே.

    இதே கட்டளைகளைத் தான் விமான ஓட்டிகளும் பின்பற்றுகிறார்கள்.

    குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் கொன்றோல்ரவரில் இருப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும்.

    இந்தக் கப்பல் வர முதலே கப்பல் பற்றிய சகல தரவுகளும் அந்த துறைமுகத்துக்கு கிடைக்கும்.பெரிய கப்பல் தண்ணீர் போதாது கீழே மேலே முட்டும் என்பது துறைமுகத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்து தான் அனுபதிப்பார்கள்.

    சாமானுடன் வந்த கப்பல் வெறுமையாக போனால் பல அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும்.

    இப்போது அது வந்த பாலத்தை கடக்க முடியுமா என்றதை எல்லாம் துறைமுகத்தவர் கணிக்க வேண்டும்.

    தகவல்களுக்கு நன்றி....👍 

  5. 1 hour ago, goshan_che said:

    ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது.

    லேடீஸ் அன்ட் ஜென்ரில்மன் !   இவர் தான் கொக்கை தடிமாதிரி உயரமானவர் எண்டு சொல்லாமல் சொல்லுறார் 🤣

    ஓகே....இப்ப என்ர கேள்வி என்னவெண்டால்......
    தமிழர்களை பற்றி சிங்களச்சனம் என்ன நினைக்கினம்? தமிழர் பிரச்சனையை பற்றி ஏதும் கதைக்கினமோ? 

    அல்லது தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லையென்று நினைக்கின்றர்களா?

  6. 432999261_813485780808859_21845411957151

    அவையள் வேறை ஏதும் கோபத்தை வைச்சு என்னை துன்புறுத்துகிறார் எண்டு பொய் வழக்கு போட்டால் என்ன செய்யிறது? அப்பாவி ஆண்கள் என்ன ஆதாரத்தை காட்டுறது? 🤣

  7. 27 minutes ago, vasee said:

    ட்ரம், பைடன் இவர்களை விட சிறந்த தலைவர்கள் அமெரிக்காவில் இல்லையா?

    வினோதம் நிறைந்த அமெரிக்கா!

    எல்லா நாடுகளிலும் இதே பிரச்சனைதான். 😂

  8. IMG-2543.jpg

    கப்பலில் வருகின்ற கனவான்களின் 
    நடிப்பை  கணிப்புடனே  
    சொல்கின்றேன் கவனமாய் 
    கேள் தங்கமே
    கருணை எனும் மிகப்பெரிய 
    கடலை தாண்டி புகழ் சேர்க்க 
    வருவாரடி புலம்பெயர் 
    செல்வச் சீமான்கள்.

  9. 7 minutes ago, ரசோதரன் said:

    இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இத்தனைக்கும் போனவர்கள் பலர் பெரும் படிப்புகள் படித்தவர்கள்.   

    நோட் திஸ் பொயின்ட்... யுவர் ஆனர்  🤣

    படித்தவர்கள் எல்லோரும் மேட்டுக்குடிகளுமல்லர். படிக்காதவர்  எல்லோரும் பட்டிக்காடுகளுமல்லர்.

    நிற்க....

    அன்று தொடக்கம் இன்று வரைக்கும் கேடுகெட்ட போலி சாமிகள் வளர்வதற்கும் சொத்துக்கள் சேகரிப்பதற்கும் அறப்படித்தவர்களே காரணம்.அதிகம் படித்தவர்களே காரணம். எல்லாம் தெரியும் என பினாத்துபவர்களே காரணம்.

    சத்திய சாய்பாபா அவலங்களை சொல்ல வெளிக்கிட்டால் பூமி தாங்காது 😄

    • Like 1
  10. 20 hours ago, alvayan said:

    இந்துவில் படித்த காலம்..

    இருப்பதுவோ நாரகேன்பிட்டி..

    இது பொரளை

    மன்னிங்ரவுன்….

    இது நம்ம அண்ணருடன்  வாசம்

    சரித்திரம்..வேண்டா மே

    சிலவேளை என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும். :cool:

    இருந்தாலும் நீங்கள் பேய்க்காய் 🤣

    • Haha 1
  11. 2 hours ago, ஈழப்பிரியன் said:

    இவர் முதலிருந்தே ரம்புக்குத் தான் ஆதரவாக உள்ளார்.

    உண்மை/ நியாய தர்மங்கள்  உணர்ந்தவர்கள் டொனால்ட் ரம்ப் அவர்களை ஆதரிப்பார்கள் தானே....😎

    • Like 1
  12. 4 hours ago, ரசோதரன் said:

    🤣🤣.....நல்ல சிரிப்பு, அல்வாயன்.

    அந்த நாட்களில் டாக்டர் கோவூர் என்று ஒருவர் இருந்தவர். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பேய் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்று, பேய்கள் நடமாடும் இடங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களிற்கு எல்லாம் போய், அவை பொய்கள் என்று நிரூபித்தவர். 

    நீங்கள் தப்பி விட்டீர்கள்.....😀

    அவருடைய கதைகள்/சம்பவங்கள் வீரகேசரிப் பிரசுரமாக ஒரு நாவலாகவும் வந்தது என்று ஞாபகம்.

    ஆபிரகாம் கோவூரின் புத்தகங்கள் படிக்க சுவாரசியமாக இருக்கும்.ஆனால் அவராலும் சமுதாயத்தை மாற்ற முடியவில்லை. 😂

  13. பிலாக்கொட்டை குருவிகள் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் உள்ள தாவரத்தில் தாமாகவே வந்து கூடுகட்டி வாழும். சிலகாலம் வாழ்ந்து விட்டு இடம்பெயர்ந்து விடும். இடம் பெயர்ந்தால் சிலர் அதை கெட்ட சகுனமாக பார்ப்பர்.😒

    இது நான் கண்முன்னே பார்த்த அனுபவங்களில் ஒன்று.😎

  14. 10 hours ago, goshan_che said:

    இலங்கைப் பயணகட்டுரை 

    போகேக்கை எனக்கு ஒரு கதை சொல்லியிருக்கலாம்,,,, இரண்டு ------  ------  தந்து விட்டுருப்பன்  🤣

  15. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை  புட்டினின் ஆட்கள் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக மேற்குலக ஊடகங்கள் கூறுகின்றன.

    f72f24ae6a325b78eb863cdf820c70b0,d0b3e60

     

    8f11bd8545999846f53eaf9abac187f1,64540cf

    ef8b88cd3f197f0dc2276e311e1b4f48,e6a8cc4

    474ab4aaac059c589c6ed9da999053e4,4ee5d5f

    ஆதாரம்

  16. 8 hours ago, ரஞ்சித் said:

    உண்மைதான். ஆனால், மனிதர்கள் இப்படி மிருகங்களாகத் தோன்றுவது யார் செய்த பாவம்? அப்பாவிகள் அழிக்கப்படுவது யார் செய்த பாவம்? 

    எல்லாவற்றையும் படைப்பது இறைவன் என்றால், எதற்காக மனித வடிவில் அரக்கர்களைப் படைத்து உலவ விடுகிறார்? 

    அதெல்லாம் இயற்கையின் படைப்பு. உலகில் உள்ள எல்லா நாடுகளும்,காலநிலைகளும்,மனித உருவங்களும் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன? ஐந்தறிவுடன்   வனத்தில் வாழும் விலங்கினங்களை பாருங்கள் ஒன்றை ஒன்று பிடித்து சாப்பிடுகின்றன அல்லவா?  சிங்கம் புலிகளுக்கு இரையாகும் மான் மரைகளைப்பற்றி நாம் எப்போவாவது கவலைப்பட்டதுண்டா? அந்த மான் மரைகளை நாம் காப்பாற்ற நினைத்தால் சிங்கம் புலிகளுக்கு உணவு என்ன? அவைகளை தாவரபட்சணிகளாக்க முடியுமா?
    அதே போல் நாம் வீட்டில் வளர்க்கும் ஆடு மாடு கோழிகளை கொன்று உணவாக உண்கின்றோம். அந்த ஆடுமாடு கோழிகளுக்கும் ஆறறிவு இருந்தால் நம் கதி என்னவாக இருக்கும்?
    இயற்கையின் படைப்பு அப்படி.அதிகம் சிந்தித்தால் நாம் வாழவே முடியாது.

    9 hours ago, ரஞ்சித் said:

    அண்ணை, 2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.  

    மனிதனுக்கு மட்டும் ஏன் ஆற்றிவு? அதை ஒழுங்காக பிரயோகிக்காமல் அந்த இயற்கையின் மீது ஏன் பழியை போடுகின்றீர்கள்?

    தவறாக நினைக்க வேண்டாம். நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வட்டத்திற்குள் மட்டும் நின்று எழுதுகின்றேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.