Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13556
  • Joined

  • Days Won

    74

Everything posted by புங்கையூரன்

  1. தலை நிறைய தங்களுக்குத் தான் மூளை உள்ளது என நினைக்கும் பிரித்தானியர்களின் திமிர்க்குணம் தான் காரணம்…! நான் ஒரு முறை பிரித்தானிய யுத்த அருங்காட்சியகத்தில், அவுஸ்திரேலிய பகுதி எங்கிருக்கின்றது என விசாரித்தேன். அங்கிருந்த உதவியாளர் பிரித்தானிய பகுதியில் தேடுங்கள் என்று கூறினார். மிச்சம் உங்களுக்கு விளங்கும் தானே…!
  2. அண்மையில் தலதா மாளிகையின் பெரஹரா யானை மரணித்தது. அது மரபுக்கும் போது வெறும் எலும்புக் கூடு மட்டுமே அந்த யானையுடன் மிச்சமாக இருந்தது. ஒரு போர்வையை போர்த்தி… இறுதி வரை அதைப் பிழிந்தெடுத்தது பௌத்தம்..! இது தான் சிங்கள பௌத்தம்..!
  3. பலூடா என்று அடுத்த முறை போகும் போது ஏதாவது சர்பத் கடையில் கேட்டுப் பாருங்கள்…!
  4. அழகிய ஒரு ஆக்கம் சு.ப. சோமசுந்தரம் ஐயா…! சுவடுகளை விட்டுச் செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை..! ஆனால் மற்றவர் மனங்களில் எனது நினைவுகள் நிலைக்குமெனில் நான் ஒரு பாக்கியவான் என்றே என்னைக் கருதுகின்றேன்..! எவ்வளவோ அக்கினிக் குஞ்சுகள் எனது வாழ்க்கையிலும் தங்களை ஆகுதியாக்கியுள்ளன…! அவர்களின் நினைவுகள் எனது கல்லறை வரை என்னுடன் பயணிக்கும்..! நன்றி…!
  5. உண்மை தான்…! ரைற்ரானிக் உண்மையில் ஒரு கல்லறை…! அதை அப்படியே விட்டு விடுவதே நல்லது…! இதே போலவே எலன் மஸ்கின் விண்வெளி உல்லாசப் பயணத்திற்கும் ஒரு மீள இயலாத விபத்து நடக்க வேண்டும்…!
  6. ஒரு கவிஞனின் எதிர் பார்ப்பும், அது நிறைவேறாத போது அதனால் ஏற்படும் ஆற்றாமையையும் கவிதை அழகாகச் சொல்லி நிற்கின்றது...! பருவத்தே பெய்யாத மழையால் எந்தப் பயனுமில்லைத் தான்..! நான் சுவைத்த நல்ல கவிதைகளுள் இதுவும் ஒன்று...!
  7. பொதுவாகத் தமிழர்கள் தான் வேலையில் விளையாட்டில் காட்டுவார்கள் என்றால், சிங்களவர்கள் படு சோம்பேறிகள் போல கிடக்குது..! எல்லோராலும் காசு கொடுக்க முடியாது தானே..! சனம் மிகவும் கஷ்டப் படுகுது போல கிடக்கு..!ஆபிரிக்க நாடுகளில் கூட, ஆஸ்பத்திரிகள் இவ்வளவு மோசமில்லையே..!
  8. எனதினிய வாழ்த்துக்களும், சுவியர்…!
  9. செவ்விளனியை நம்பேலாது, சுவியர்..! சிங்களப்பக்கமிருந்து வாற இளனி இன்னும் மோசம்..! தீவுப் பக்க இளனிகள் அந்த மாதிரி இருக்கும்..!
  10. சுமே…! இவ்வளவு தான் சொந்தம்..! அண்ணா தங்கச்சிக்கு எவ்வளவோ செய்திருக்கிறார் என்று சொன்னால், உலகத்தில எல்லா அண்ணர் மாரும் தானே செய்யினம் எண்டும் சொல்லிவினம்..! சோழவரியை.. சோலை வரி எண்டு மாத்தி விடுங்கோ..! தொடருங்கோ…!
  11. தோழர் புரட்சிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்…!
  12. குதிரையின் நிலைமையும் இப்படியாய்ப் போச்சுது...! ஆராய்ச்சி தொடரட்டும்..!
  13. ஒரு யாழ்ப்பாணியின் வாழ்க்கை வட்டத்தை அனுபவித்து எழுதியிருக்கிறார் டொக்ரர் கோபிசங்கர்..! ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘நெத்த்யடி’…!
  14. எனக்கும் இது புரியவில்லை. தென்னமெரிக்காவிலிருந்து அமெரிக்கா, கனடா போன்ற இடங்களுக்குக் கடத்துவது தான் வழமையாக நடப்பது..! இவர்கள் கனடாவிலிருந்து இலங்கைக்கும் கடத்த வேண்டும்..! தமிழன் அந்தளவுக்கு மொக்கனாகி விட்டானா?
  15. சுமே..! தொடர்ந்து எழுதுங்கள்...! பலரது திட்டங்களை மறு பரிசீலனை செய்ய....அல்லது மீளமைக்க உங்கள் அனுபவங்கள் நிச்சயம் உதவும்...! அலுப்பாக இருந்தால் சொல்லுவம் தானே...!😄
  16. இரத்த உறவுகளுக்குள் ஒரு வித இனம்புரியாத ஈர்ப்பு இருப்பது உண்மை தான் போலுள்ளது..! எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் ஒரு நாய்க்குட்டி வாங்கி வளர்த்து வந்தார். வேற ஒரு நாயையும் கண்ணில காட்ட இயலாத மாதிரி அதன் சுபாவம் அமைந்து விட்டது! போகாத நாய்ப் பள்ளிக்கூடமில்லை!ம்...கும்..! ஒரு முறை அந்த நாயின் சகோதரர்களை அந்த நாஇ எதிர் பாராத விதமாகச் சந்திக்க வேண்டி வந்தது..! எல்லா நாய்களும் மிகவும் அன்னியோன்னியமாக இணைந்து விளையாடுவதை அவதானிக்க முடிந்தது! பிரபஞ்சம் எவ்வளவோ விடையங்களை இரகசியமாகவே தன்னுள் புதைத்து வைத்துள்ளது..! அவ்வாறு இருப்பதே நல்லது போலவும் உள்ளது! மனிதன் மிகவும் கொடுயவன்...மிகுந்த சுயனலவாதியும் கூட..! கதையும், சம்பவக் கோப்புக்களும் அருமை..கரு...!
  17. கலி காலம் கனிந்து வருகின்றது…! புத்தன் கூட இவர்களை இனிக் காப்பாற்ற முடியாது..! பாவம் குரங்குகள்..! பலிக் கடாவாகின்றன…! கவிதை நன்று…!
  18. இந்த உலகில் நாம் வெறும் விருந்தாளிகள் என்பதை மறந்து நிரந்தரமானவர்கள் என நினைப்பதன் விளைவு தான் இது…! காலம் இவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் என நம்புவோமாக..!
  19. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நிலாக்கா…!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.