Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13556
  • Joined

  • Days Won

    74

Posts posted by புங்கையூரன்

  1. 6 hours ago, குமாரசாமி said:

    அவுஸ்க்கு ஏன் கவலை?

    வேற என்ன?

    நாங்கள் அமெரிக்காவுக்கு தலையும் , சீனாவுக்கு வாலும் காட்டின படி காலம் தள்ளுறம்..!

    இது சீனனுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பான் என்ற கவலை தான்..!😃

    • Haha 1
  2. மிகுந்த கவனத்துடன் எழுதப் பட்ட ஆய்வுக்கட்டுரை இது என்பேன்..! நிறைய நேரம் செலவளித்திருப்பீர்கள் போல உள்ளது. இது நிச்சயம் ஒரு ஆவணமாக யாழில் நிலைத்திருக்கும் என நம்புகின்றேன்.

    மிக்க நன்றி, ஜஸ்ரின்…!

  3. ஒரு வித்தியாசமான அனுபவம் போலத் தான் உள்ளது...!

    நாங்களும் உங்களுடன் சேர்ந்து சறுக்கியது போல உங்கள் எழுத்து நடை..!

    மிக்க நன்றி, ஈழப்பிரியன்..!

    • Thanks 1
  4. நல்ல சந்தோசமான முடிவு, சுவியர்…! உங்கள் எழுத்து நடை வாசிக்க மிகவும் இலகுவானது. கதைக்கு மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்…!

    • Like 1
  5. சுவியர், இன்று தான் இந்தப் பக்கம் வந்தேன்..!

    கதை நல்ல படியாக நகர்கின்றது..! கதா நாயகன் ஒரு பச்சை சுய நலம் பிடித்தவன் போல உள்ளது..!

    எனது கவலையெல்லாம் நிர்மலா தாலியை மட்டும் வைத்துவிட்டுத் தாலிக்கொடியையும் கொண்டு போயிருக்கலாம் என்பது தான்..!

    தொடருங்கள்…!

    • Like 1
  6. என்னடா...கொஞ்ச நாளா நம்ம நிழலி மரணத்தைப் பற்றிக் கதைக்காமல் இருக்கிறார். ஒரு வேளை ' மரணத்தைப் போலொரு மாமருந்தில்லை' பாடலைக் கேட்டுத் திருந்தியிருப்பாரோ என்று நினைத்தேன்!

    இல்லை நான்...அதே நிழலியே தான் என்று மீண்டும் நிரூபித்து விட்டார்..!

    நீங்கள் சொன்னது போல 'ஒரு ஆயுள் தண்டனையிலிருந்து தப்பி விட்டீர்கள், நிழலி...!

    அருமையான ஒரு அனுபவப் பகிர்வு...!

  7. உங்களைப் போன்ற சிந்தனை என்னிடமும் உள்ளது. ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியப் படும் என்று தெரியவில்லை.அண்மையில் கூடத் தாயகம் சென்ற போது ஒரு அன்னியனாகவே என்னை உணர்ந்தேன். எனது ஊருக்குச் செல்லும் போதும் இராணுவதினருக்கு நான் ஏன் போகின்றேன் என்று காரணம் கூற வேண்டிய நிலை எனக்கு..!மீன் வாங்கப் போனால் எனக்கு வேற விலை. வெறும் சாரத்துடன் போனாலும் அடையாளம் பிடித்து விடுகின்றார்கள். ஓட்டோக் காரனிடம் வேறு விலை எனக்கு..!

  8. ஒரு வித்தியாசமான அனுபவ பகிர்வு..! தொடருங்கள், நிழலி..!

    வயது மனிதர்களில் ஒரு சின்ன மாற்றத்தையாவது ஏற்படுத்துவது இல்லையா?😊

  9. 3 minutes ago, தமிழ் சிறி said:

     

    No photo description available.

     

    INSPIRED TREASURES: 2011

     

    Thal Leave Fence | Jaffna, Crafts, Leaves

     

    INSPIRED TREASURES: 2011

     

    Passion Parade: Lifestyles of Jaffna ~ An Exhibition to Preserve Our  History and Heritage

     

    Jaffna – A Sentimental Journey Home | Sanjiva Wijesinha -writer and  physician

     @விளங்க நினைப்பவன் , @குமாரசாமி@suvy@ஈழப்பிரியன்

    @நிலாமதி, @nilmini, @alvayan@புங்கையூரன்

    முன்பு ஊரில் இருந்த சண்டியர்கள், தங்கள் ஆயுதமான... 
    சைக்கிள் செயின், வாள் போன்றவற்றை வேலியில் தான் மறைத்து வைப்பார்களாம் 
    என ஊரில் இருக்கும் போது கேள்விப் பட்டுள்ளேன். 

    எனது அப்பாவின் அம்மா கூறியது இது... 👇
    ஆங்கிலேயர் காலத்தில்..... வெள்ளிக்கிழமை  போன்ற விசேட நாட்களில், விரதம் இருந்து 
    வாழை இலையில் சாப்பிட்ட பின்... அந்த இலையை வேலியில் செருகி மறைத்து விடுவார்களாம்.

    ஆங்கிலேயர்... மதம்  மாற்றி விடுவார்கள் என்ற பயமோ, 
    அல்லது தண்டனை கொடுப்பார்கள் என்றோ மறைத்திருக்கலாம் என நினைக்கின்றேன். 

    போர்த்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில்...
    விரதம் இருந்து... வாழை இலையை, ஒழிக்கத்  தெரியாத சைவர்கள்தான் 
    ஆங்கிலேயரால் மதம் மாற்றப் பட்டவர்கள் என நினைக்கின்றேன். 😂
     @நிலாமதி அக்கா... கோவிக்காதேங்கோ  பகிடிக்கு எழுதியது. 😂

    👆 மேலே இறுதியாக உள்ள  படத்தில்... வேலி மிக உயரமாக கட்டி உள்ளதை பார்க்க...
    "குமர்ப் பிள்ளைகள்" இருக்கின்ற வீடு போல் தெரிகின்றது. 🤣

    மிகவும் முக்கியமான சாமான் திருக்கை வாலை விட்டிட்டியள் தமிழ் சிறி…! நாய்க்கு எட்டாத உயரத்திலை வைக்க வேணும்…!

  10. 1 hour ago, குமாரசாமி said:

    எங்கடை கிணத்தடி வேலியை சூறாவளியாலையும் அசைக்கேலாது.காத்துக்கூட உள்ளுடாது.கருங்கல்லு மதில் மாதிரி இருக்கும். இருந்தாலும் அதையும் எட்டிப்பாக்கிற அளவுக்கு அப்பனுக்கு அப்பனான ஆக்கள் இருக்கினம். :rolling_on_the_floor_laughing:

    காவோலை வேலி தாண்டிய அனுபவமுள்ளவர்கள் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள்!

    பொட்டுக்குள்ளால பூந்து போனவர்களும் மேடைக்கு வரலாம்!😆

  11. ஏக்கங்களைச் சுமந்து வருகின்றது உங்கள் கவிதை...!

    எங்கள் அனைவரது அங்கலாய்ப்பும் இப்போது இது தான்..!

    கவிதைக்கு நன்றிகள்....!

    • Like 1
  12. 3 hours ago, குமாரசாமி said:

    ஊண் என்றால் இறைச்சி.... ஊணம் என்றால் இறந்த உடலிலிருந்து வடியும் திரவத்தை குறிப்பிடுவார்கள் என நினைக்கின்றேன்.  
    ஆணம் என்றால் கறி குழம்பு கறிகளை குறிப்பிடுவார்கள்.

    அண்ணை…!

    அது ஊணமில்லை!

    ஊனம்..!

    ஆணம் என்பதை மொக்கன் கடையிலும், முஸ்லிம் கடைகளிலும் உபயோகிப்பதைக் கண்டிருக்கிறேன்.

     

  13. மடஹாஸ்கார், ஹலப்பாஹஸ், ரஸ்மானியா, அவுஸ்திரேலியா போன்ற தீவுகள் தனித்துவமானவை. அங்கு இயல்வாக்கமடைந்த உயிரினங்களும் வித்தியாசமானவை. அதிசயங்கள் நிறைந்தது எமது பூமிப்பந்து..!

    தொடருங்கள்.  நில்மினி…!

    • Thanks 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.