Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13561
  • Joined

  • Days Won

    74

Posts posted by புங்கையூரன்

  1. On 23/3/2022 at 03:24, நிலாமதி said:

    காலத்தோடு ஒட்டிய கவி வரிகள். பகிர்வுக்கு நன்றி 

     

    உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

    இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

    நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

     

    இன்றோடு இருபத்தாறு   நாட்களாகி விட்ட்ன 🙂.
     

    நன்றி...நிலாக்கா...! 

    கவிதை எழுத நினைச்ச போது....பத்து நாள் தான் முடிஞ்சிருந்தது...!😁

  2. On 23/3/2022 at 02:00, யாயினி said:

    மழை தூறினால் பன்னாடைகள் அவ்வளவாக உபயோகிக்க ஏலாது தானே.அது போல் தான் எல்லாம்.பகிர்வுக்கு மிகவும் நன்றியண்ண..✍️

    உண்மை தான் யாயினி...! வரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....!

    On 23/3/2022 at 02:10, ஈழப்பிரியன் said:

    பன்னாடையில் பிழையா?

    வடிப்பவனின் பிழையா?

    தோண்ட தோண்ட பிபி தான் ஏறுது.

    எனக்கும் அது தான் பிரச்சனை..! அதுக்காகத் தான் இப்பவெல்லாம் அடக்கி வாசிக்கிறது...!

    நன்றி....ஈழ்ப்பிரியன்...!

    On 23/3/2022 at 03:10, தமிழ் சிறி said:

    அருமையான கவிதை புங்கை. 👍🏽
    முதலில்… ஐ.நா. பன்னாடையை, காவோலை போட்டு… கொழுத்த வேணும்.

    பன்னாடையில் பிரச்சனை இல்லை, சிறியர்...! அதன் பார்வையின் தான் கோளாறு உள்ளது...!

    உக்ரெயினில் ஐ.நா.பன்னாடை செய்யவேண்டியதெல்லாம்....ஒழுங்காத் தானே செய்யுது...!

  3. அருமையான கவிதை, நிழலி…!

    ஒருவரது பார்வையைப் பொறுத்துக் கவிதையைப்வ்பல நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி ரசிக்கலாம் என்பது கவிதையின் தனிச் சிறப்பாகும்…! ஒரு விதமான பயத்தையும், இயலாமையையும், வெறுமையையும் கவிதை அழகாக விபரிக்கின்றது…! தொடர்ந்தும் இது போன்ற கவிதைகளைத் தாருங்கள்…! வாழ்த்துக்கள்…!

  4. On 22/3/2022 at 23:07, நிழலி said:

    நல்ல கவிதை புங்கை. நீண்ட காலத்தின் பின் உங்களின் சுய ஆக்கம் நல்ல கனமான ஒன்றைத் தாங்கி வந்துள்ளது.

    மேற்குலக ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, மேற்குலகில் வாழ்கின்றோம் என்பதற்காய் அதன் போர்களை நியாயப்படுத்துகின்றவர்கள் கூட இந்த பன்னாடையை போன்றவர்கள் தான். உலகமே ஒரு விதத்தில் இந்தப் பன்னாடை போன்றது தான் - நாம் உட்பட.

    நன்றி...  நிழலி...!

    நீங்கள் கூறிய படியே...நாமெல்லாம் கூட, எம்மையறியாமலே மூளைச் சலவை செய்யப் பட்டுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தான் உண்மை...! யாழ் களத்தில் இப்போது எழுதுவது, மிகவும் இலகுவாக உள்ளது...! தொடர்ந்து எழுதலாம் என உத்தேசித்துள்ளேன்!

    யாழுக்கு வெறும் வயது மட்டும் போகவில்லை..! அவள் தன்னைத் தானே, மேலும்...மேலும் மெருகூட்டிய படியே வளர்கின்றாள்..!

    இதற்கான பெருமை முழுவதும்...மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும், தினமும் வந்து போகின்ற கள உறுப்பினர்களுக்கும், அதன் அடித்தளமாக உள்ள வாசகர்களுக்கும் உரியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது...!

    • Like 2
  5. On 22/3/2022 at 23:01, உடையார் said:

    பன்னாடை விரைவில் பல துண்டுகளாக பிரியும்👍, அருமையான கவிதை

    பொறுத்திருந்து பார்ப்போமே....உடையார்...!

    அந்தக் காலத்தில் வாழக்கிடைத்தது ஒரு அரிய பாக்கியமே...!

    நன்றி, உடையார்....!

  6. On 22/3/2022 at 20:08, Sasi_varnam said:

    புங்கை அண்ணா, நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்திய நல்லதொரு கவிதை 🙏. போரின் வலி, இழப்பு எங்குமே, எல்லோருக்குமே ஒன்றுதான் நீங்கள் கூறிய பன்னாடைகள் போல் அல்லாமல் இருக்க தமிழர்கள் கடவர்கள். 

    வணக்கம் சசி..! தமிழர்கள் போரின் வலியை நன்றாக உணர்ந்தவர்கள்...!

    இருப்பினும் வலிக்குக் காரணமானவர்களை இலகுவாக மறந்து விட மாட்டார்கள்!

    நிச்சயம் மன்னிப்பார்கள் எனினும் மறந்து விட மாட்டார்கள்! ஏனெனில் அவர்களும் மனிதர்கள்...!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

     

     

    On 22/3/2022 at 20:45, குமாரசாமி said:

    மேற்குலகின் மேட்டுக்குடி தனத்தை தோலுரித்துக் காட்டும் கவிதை.
    நன்றி புங்கையர் 👍

    நன்றி, குமாரசாமி அண்ணா...!

    மேட்டுக்குடித் தனம் என்பது பொருத்தமான வார்த்தை தான்..!

    On 22/3/2022 at 21:28, Paanch said:

    அருமையான கவிதை புங்கையூரன் அவர்களே! ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆண்ட, ஆளும் நாடுகளில் இந்தப் பன்னாடையானது, அந்த ஐரோப்பியரை மட்டும் வடித்தெடுத்துப் பாதுகாத்து வருவது கண்கூடு.🧐

    உண்மை தான், பாஞ்ச்...! அண்மையில் ஒரு காணொலி பார்த்தேன்! அதை இங்கு இணைத்தால் பொருத்தமாக இருக்கும்!

    ஆனால் அதில் வரும் சில வார்த்தைகள் யாழ் கள விதிகளை மீறுவதாக உள்ளன!

    மிக்க நன்றி, பாஞ்ச்....!

  7. 23 hours ago, suvy said:

    உண்மைதான் புங்கை, இந்தப் பன்னாடைகளின் நகர்வு காலவோட்டத்தில்  பாரதத்தையும் பங்கு போடும்போல் இருக்கின்றது.......!

    இவைபோன்ற கவிதைகள் சிறப்பு......!  👍

    உண்மை தான், சுவியர்…!

    பாரதமும் எமது பழியைத் தேவையில்லாமல் தேடிக்கொண்டது…! வரவுக்கு நன்றி…!

    22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

    அருமையான கவிதை.. மனிதாபிமானம் பேசும் உலகின் இரட்டைவேடத்தை தோலுரிக்கும் கவிதை..

    நன்றி, ஓணாண்டியார்…!

    நீங்கள் பதிந்த பிராமணன் மச்சம் சாப்பிட்ட கதை இன்னும் தலைக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றது..! 

    22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    அருமையான பகிர்விற்கு நன்றிகள் தோழர்..💐

    வருகைக்கும் , ஊக்குவித்தலுக்கும் நன்றி, தோழர்….!

  8. வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...!

    அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...!

    இது கொஞ்சம் வித்தியாசமானது...!

     

    மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...!

    மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...!

     

    மண்டலாவை வடித்த போது...,

    கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..!

    மகாத்மாவை வடித்த போது,

    கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...!

    அரேபிய அகதிகளுக்கு...,

    அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,!

    பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்...,

    தன் காதுகளை முழுதாக மூடியது...!

     

    முள்ளி வாய்க்காலில்...,

    முகத்தையே மூடியது..!

    பன்னாடைக்கு என்ன நடந்தது...?

    எல்லோரும் தேடினார்கள்...!

    மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...!

    ஒன்று...இரண்டல்ல...,

    பத்து வருடங்கள்..!

    வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..!

    போர்க் குற்றமா..?

    எங்கே நடந்தது...?

    புதினம் கேட்டது, பன்னாடை..!

     

    உக்ரெயினில் யுத்தமாம்..!

    ஓடோடி வந்தது...பன்னாடை..!

    தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....!

    அங்கத்தின் நிறமோ, வெள்ளை...!

    கண்களின் நிறமோ....மரகதம்..!

    கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...!

     

    உக்ரெயின் யுத்தம் தொடங்கி...,

    இன்னும் பத்து நாள் ஆகவில்லை...!

    நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...!

    ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..!

    எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..!

     

    அகதி முகாமில் பிறந்த குழந்தயை...,

    ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...!

    அந்தக் குழந்தயை....,

    பன்னாடை வடிகட்டாது...!

    ஏனெனில்..,

    அவள் ஒரு ஈழத்து அகதி...!

     

     

     

     

     

     

    • Like 18
    • Thanks 2
  9. 28 minutes ago, ஈழப்பிரியன் said:

    அந்தப்புறம் என்பது இதைத் தானோ?

    அந்தப் புரம் என்பது ஒரு ஆணும் பல பெண்களும்…!

    கண்டியில் நடப்பது ஒரு பெண்ணும் பல ஆண்களும்..!🥸

  10. 6 minutes ago, Kadancha said:

    இது ஒன்றும் வினோதம் இல்லை.

    பொதுவாக இப்பொது மெனிக்கே எனும் பெயரில் சிங்கள உயர் குடியில் இருப்பவர்கள், இப்படியாக பிறந்த பெண்ணின் வழியில் தோன்றியவர்கள்.

    அதாவது, அந்த நேரத்தில், அந்த பெண் குழந்தைகள் மெனிக்கே (தமிழ் மாணிக்கம் என்பதின் சிங்கள மயப்படுத்தியது) என்று அழைக்கப்பட்டனர்.

    அனால், யாழ்ப்பாண இராச்சியத்திலும் இப்படி நடக்கவில்லை என்று உறுதியாக கூறமுடியாது.

    அப்போ உடரட்ட மெனிக்கேயும் அப்ப்டித் தானோ? 🥱

  11. வழக்கம் போல நல்ல ஒரு கதை…! தொடரும் என்றே நம்புகின்றேன்! நான் என்றால் ‘கிருஸ்ணா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்றால் பேசாமல் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வேன்! சிவனை அவனிடம் புகுத்த முயற்சித்து இருக்க மாட்டேன்! எமது மதத்தின் அழகே, மற்றவரிடம் தன்னைத் திணிக்காமல் இருப்பது தான்…! இதனால் தான் இஸ்லாமியர்களையும்,கிறிஸ்துவர்களையும் எனக்குப்  பிடிப்பதில்லை! இதைப் பற்றி உங்கள் கருத்தையும் அறிய ஆவல்…!

    • Like 2
  12. மிக்க நன்றி, நீர்வேலியான்…!

    ஆங்கிலேயர்களிலும் பார்க்க ஸ்பானியர்களின் காலனித்துவம் இலாபத்தையும், மதம் பரப்பலையும் நோக்கமாகக் கொண்டது..!அவர்களின் அக்கிரமங்கள் அதிகமாக இருந்தாலும், அடிமகளை ஓரளவுக்கு மனிதராக மதித்தார்கள் என்று தான் கூற வேண்டும்! ஆங்கிலேயர் அடிமைகளை savages ஆகத் தான் கருதினார்கள்.இதுநாள் அடிமைகள் ஆங்கிலேயர்களை விடவும் ஸ்பானியர்களை விரும்பினார்கள்!

    • Like 3
  13. 1 hour ago, தமிழ் சிறி said:

    ஈழப்பிரியன்…. இந்தியன் என்றால்,
    நம்ம அயல்நாட்டு, ஹிந்தி பேசும் இந்தியன் என நினைக்கப் போகிறார்கள். 😜
    செவ் இந்தியன் என்று… குறிப்பிடுங்கள். 🤣

    இந்தியாக்காரனை  ‘ஹிந்தியன்’ என்று எல்லோ அழைப்பார்கள்!😂

    • Thanks 1
    • Haha 1
  14. தொடருங்கள், ஈழப்பிரியன்…!

    இடங்களின் பெயர்கள் சான் என்று தொடங்குகின்றன. இவை ஸ்பானிஸ் பெயர்களா? ஏன் என்று அறிந்து சொல்லுங்கள்….!

    • Like 2
  15. நிலாக்கா, உங்கள் கதையை வாசித்த போது...ஒரு சினிமாப் பாடல் தான் நினைவுக்கு வந்தது...!

    மனிதன் நினைப்பதுண்டு...வாழ்வு நிலைக்கும் என்று....!

    இறைவன் நினைப்பதுண்டு...பாவம் மனிதனென்று....!

     

    கூட்டைத் திறந்து விட்டால்....குருவி பறந்து விடும்...!

     

    நல்ல ஒரு படிப்பினைக் கதை...!

    • Like 2
  16. நீண்ட நாட்களின் பின்னர் அடுத்த பகுதி எப்போது வரும் என ஆவலுடன் ஏங்க வைத்த்ச் ஒரு தொடர் கதை…! அரங்கனின் மார்பில் தவளும் ஆண்டாளின் மாலையாக….! வரிகளை ரசித்தேன்…! வைர முத்துவுக்குக் கேட்டுவிடப் போகின்றது..பரவாயில்லை…!

    சங்கிகள் காதில் விழுந்தால் தான் பிரச்சனை…!

    • Like 2
  17. பணமும், குணமும் ஒன்றாகப் பயணிப்பது மிகவும் அரிது...!

    பணம் எனும் அச்சாணியைச் சுற்றித் தான் வாழ்க்கை எனும் சக்கரம் சுழலுகின்றது போலும்...!

    சாமினாதன் மிகவும் பொறுமைசாலி போல உள்ளது! வெளி நாட்டு வாழ்க்கை முதலில் பழக்குவது பொறுமையைத் தான்...!

    அதனால் படிப்புக்கும் செய்யும் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை....!

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.