Jump to content

மல்லையூரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10836
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by மல்லையூரன்

  1. ஐரோப்பிய வழக்கத்தின் படி இந்து இந்திய மத்ததை பின்பற்றுபவன். வைதீக இந்து வேதங்களை பினபற்றுபவன். மனத்த்தால் இந்து இறைவனை வழிபடுபவன். அவனின் பிரச்சனை இறைவன் அல்லது கடவுள் யார் என்பதுவே. 

  2. http://tamizl.com/?p=61871

    இராவணன் தமிழ் மன்னன் என்கின்றார்கள். நீங்களோ இராவணனை சிங்களவர்களுடன் சம்மந்தப்படுத்தி இந்துத்தவா ராமனுடன் ஐக்கியமாகின்றீர்கள். இது ஏன்? இராவணன் எமது பரம்பரை சிவனை வழிபடுகின்றவன் என்று சொல்லவேண்டியதுதானே? அதில் ஏதேனும் கௌரவப்பிரச்சனை உண்டோ? கம்பன் கழக ஜெயராசு ஏதாவது சொன்னாரோ?

     

    இராவணன் தமிழ் மன்னனா இல்லையா என்பது தெரியாமல் எழுத வந்தது நகைச்சுவை. ஆனால் வடஇந்தியர் அவனை ஈழத்தமிழர் என்று அவனை அழைப்பதாக காட்ட முடியுமா? இந்துமத்த்தில்ல் அசுரர் தேவர் என்று இருவர் இருப்பதை தெரியாமல் இந்த வரைக்கும் சைவத்தை சீர்திருத்தியமைக்கு நன்றி. இதுவும் இன்னொரு வைரவர் சூலம். 

     

     

    அப்படியானால் இதுவரை காலமும் இந்திய சிங்கள பேரினவாதத்திற்கு உதவியதும் தமிழர்களை அழித்ததும் அழிக்க உற்றதுணையாய் நின்றதும் ராஜீவ் சோனியா செய்த தவறு மற்றபடி ஈழத்து இந்தூக்கள் மீது இந்திய இந்தூக்கள் அளவு கடந்த பாசத்துடன் இருக்கின்றார்கள்?

     

    கதையை இன்னொருதடவை திரிக்க வேண்டுமாயின் அளவு கடந்த அளவு கடந்த அளவு கடந்த பாசத்துடன்தான் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொளுங்களேன். அதன் பின்னர்?  தெரியாததை, அல்லது விட்ட பிழையை ஏற்க இந்தளவு கஸ்டமா? 

     

    .

    வடநாட்டவன் எவனோ அவனுக்கு தெரிந்த மொழியில் பூசையை செய்யட்டும் தமிழன் ஏன் தனக்குத் தெரியாத பாசையில் ஏன் பூசை செய்யவேணும்? இதைத்தானே நூறு வருடங்களுக்கு மேலா கேக்கிறாங்கள்.

    அதையேதான் தமிழர் அராபிக்கில் செய்கிறார்கள், சிங்களவர்கள் பாளியில் செய்கிறார்களாயிற்றே. இதில் எப்படி சாதித்துவம் வந்து இந்துக்களை மட்டும் கெடுத்தது?. அராபிக்கில் செய்யும் தமிழர் தமக்கு பாசை தேவை இல்லை, சிங்கள அடிமைத்தனம் காணும் என்கிறார்களே. அவர்கள் கெடுபடவில்லையா?

     

     

    என்ர தாய்மொழியில் பாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க அவன் யார்?

     

    தாய் மொழியே இல்லாதவர்களுடன் அவர் எவ்வளவு மேல்? எமது மதத்தை பற்றி கூறை கூற எந்த மரமண்டைகளுக்கு  உரித்திருக்கோ அந்த மரமண்டைகள் நேரம் ஒதுக்க முடியாதா? நாம் எனது மொழியில் தொழுவம், விடுவம். இதில் சிங்கள கோத்தாவின் கூத்தாடிகளின் அதிகாரம் என்ன? 

     

    உங்கட மதத்தில உள்ள சாதீயத்தை களைவதைப்பற்றி கதைக்கேக்க ஏன் அதைவிட்ட பௌத்தத்திலும் இஸ்லாத்திலும் சாதி இருக்கு என்று வேறு எங்கோ இழுத்துக்கொண்டு போகின்றீர்கள்? ஆக உங்கட மத்தில உள்ள கோளாறுகளை திருத்த முன்வர மாட்டீர்கள் அங்கயும் இருக்கு இங்கயும் இருக்க என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள்.

     

    நாங்களும் உங்களை மதத்தைபற்றித்தானே கேட்டோம். அதை புரியவில்லையா? மறுமொழி சொல்லமுடியாமல் சறுக்க வேண்டிய அளவுக்கு பௌத்துவம் நகேடு கெட்ட மதமானால்அதற்கு தமிழர் மாற வேண்டும் ஏன் அரட்டை அடிப்பான.  அவர்களை திருஞாசம்பந்தர் கழுவேற்றியதில் என்ன தவறு? எம்மை வேவு பார்த்து சிவியம் நடத்தியவர்கள் எம்ம்மை திருத்தவர இலகுவாகாது. 

     

    இதைத்தான் சுருக்கமாக சொல்லியாச்சு. நீங்கள் நாவலர் பிள்ளைமாரின் மிச்ச சொச்சம். உங்ளை திருத்த அந்த சிவனாலும் முடியாது. கடசியா நாலு தமிழன் மிச்சமிருந்து சிங்களவன் அவர்களைக் கொல்ல வரும்போதும் நான் அந்தச் சாதி நீ அந்தச் சாதி என்று கத்திக்கொண்டே சாவீர்கள்.

     

    நாவலர் ஆரம்பித்து வைத்த அன்நிய மத எதிர்ப்பைத்தான் எகிப்திய சித்தி லெப்பை பார்த்து கொப்பி அடித்தார்.  நாவலர் இறுக்கமான அன்நிய மத எதிர்ப்பாளன் என்பதை வெள்ளைக்காற பாதிரிகளுக்கு விவிலிய வேதத்தில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தியதில் தெரியும். அவர் பாணியில் நாமும் தொடருவோம்.  பின வாங்க வேண்டியதில்லை. நாவலர் தன் பிழைகளை பிற்காலம் திருத்தியது போலவும் செய்வோம். அதுவெல்லாம நம் விருப்பம். மற்றவர்கள்  எந்தவகை மரமண்டைகள் நமக்கு சொல்ல வர?

     

  3. திரிப்பதில் Phd ஸ்ய்தவர்கள் வசனம் வசனம் வசனமாக திரிக்கிறார்கள். 

     

     

    நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

     

    தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.

     

    முதலில் வைரவ சூலம் என்ன என்றது தெரியாமல் எழுதும் நகைச்சுவை இது. சூலாயுதம் தமிழர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு ஆயுதம். அது பின்னர் Zeos கைவரைக்கும் போனதொன்று. நாகர் சாமிகள் வைத்திருப்பது. இராமசாமிகள் அதிகம் விரும்பாதது. இதற்குள் இந்துவத்துவ கோமாளிதனம் ஒன்றும் கிடையாது. 

     

    ஒரு இந்தியப் பார்ப்பனனுக்கு இஸ்லாத்தின் மீதிருக்கும் வெறுப்பை விட ஈழத்தவர் மீதான வெறுப்பு அதிகம் என்பது இவர்கள் மண்டையில் என்றும் ஏறப்போவதில்லை.

     

    பாகிஸ்தான் காரனை, வங்காளத்தை  ஒரு கை பார்த்த பின்னர்தான் இந்திரா காந்தி தமிழருக்கு உதவ வந்தவ. சில மர மண்டைகளுக்குள் சரித்திரம் உடனேயே வழிந்தோடிவிடுகிறது. தனக்கும் நடந்து தெரியும் மாத்ரி சுத்துமாத்து விடுகிறார்கள். கள்ளகடத்தல் ராஜிவ் JR இடம் நன்றாக மாட்டி அசடு வழிந்தார். பிரேமதாச பின் வளத்தில் வடிவாக போட்டார். விஜித முனி முதுகில் போட்டார். சில நரிகள் எத்தனை முறை வாங்கியும் திருந்துவத்தில்லை. திரும்ப திரும்ப வந்து வாலாட்டும்.  வாஜ்பாய் ஒரு போதும் தமிழரை தாக்கவில்லை. பாசியம் கலந்த முசோலினி சோனியா மட்டும்தான் தமிழரைத்தாக்கினார். மர மணைகளுக்கு சிங்குகள் இலங்கை வந்ததே தமக்கும் இந்தியாவில் இந்துகள் செய்ததை திருப்பி கொடுக்க. புஸ் மிக கேலக்கெட்ட அமெரிக்க அதிபராகி போனது போல தமிழ்ரை அழித்துவிட்டு குடும்பி இந்தியாவின் கேவக்க்கெட்ட பிர்தமர் என்ற பெயருடன் போய்ச்சேருகிறது.   சுஸ்மா வந்து இலங்கை வந்து போன பின்னர்தான் காங்கிரஸ் பணிய நேர்ந்தது. இப்போது மோடி தமிழ்நாட்டை கைப்பற்ற தமிழருக்கு பல உதவிகள் செய்துதான் ஆவார். இதற்குள் இந்துவம் காண்போர் யானை தடவும் குருடுகள்.

     

    இலங்கைத் தமிழன் இராவண வம்சம் என்ற வெறுப்பில் பார்க்கும் வடநாட்டவர்களே அதிகம். இந்திய அதிகாரவர்க்கம் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட சூழ்ச்சிகளி்ல் இந்த உள்ளீடும் தாராளமாக இருக்கின்றது.

     

    ஈழத்தமிழர் இராவணர் என்று அவர்கள் சொல்வதில்லை. திரும்ப தெரியாத கதை ஒன்று போதிக்கப்படுகிறது. இலங்கையைத்தான் இராணவ ராஜ்ஜியம் என்பார்கள். அதில் சிங்களவர்கள்தான் அதிகம் என்பது அவர்களுக்கு தெரியும்.  இதனால்தான் இலங்கையில் இராவணபல சேனையை ஏற்படுத்தி இந்தியாவை சிங்களவர்கள் எதிர்க்கிறார்கள். முதலில் இலங்கையில் என்ன நடக்கிறது என்று ஆர்வம் காட்டினால் சரித்திரம் விளங்கும். வடகத்தவர்களின் கோபம், தங்கள் அரச குடும்பத்தை புலிகள் கொலை செய்தார்கள் என்பது. இந்திரா காந்திக்கு சீக்கியரை வாங்கின பழியை புலிகளுக்கு செய்தார்கள்.  இதற்குள் சோனியாவுக்கு பின்வளம் கழுவும் மரமண்டை மலையாளிகள் புகுந்து தங்களுக்கு தமிழ் நாடு மீது இருக்கும் குரோதத்தையும் காட்டினார்கள். குதர்க்கத்தால் சிலர் எதை எதையோ எல்லாம் திரிக்கிறார்கள். மலையாள மரமண்டைகள் வடநட்டவர் அல்ல. 12ம் நூற்றாண்டுவரை தமிழ் பேசிய ஒரு இனம். 

     

    இன்றுவரை இலங்கைப்படைகள் தமிழக மீனவர்களை கொன்றுதள்ளுகின்றது. இந்திய அதிகாரவர்க்கம் எந்த வகையிலும் இந்த விசயத்தில் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கியது கிடையாது. இந்திய இந்துத்துவத்தை பொறுத்தமட்டில் தமிழ மீனவனை விட இலங்கைப் பவுத்தர்களின் நட்பே மேலானது.

     

    இந்தியாவில் பவுத்ததரின் நட்பு மேலானது என்று எங்கும் சொல்லவில்லை. யாரும் அதை நிரூபிக்க முடியாது. அது வெறும் வெறுவாய் சப்பிக் கதை அளப்பு. கள்ளக்கடத்தலில் ஈடுபட்ட ரஜீவ், முசோலினி சோனியா, குடும்பிகளின் "பாதுகாப்புக் கொள்ளை" மட்டும்தான் அது.  தெரியாதவர்கள் அறிந்து கொள்ள " இந்தியாவில் இன்றும் காங்கிரசுக்கு இருக்கும் ஒரே ஒரு வாக்கு ஆதரவு அது மதம் சாராதது என்பதே.  மரமண்டை அல்ல,  இல்லை இலை, குழை மண்டை இருந்தால் கூட காங்கிரஸ் பௌத்ததை தூக்கி பிடியாது என்பது விளங்கும். அதனால்த்தான் அது தமிழர்கள் இந்துக்களாக இருந்த்தும் அவர்கள் பக்கம் சாரவில்லை என்று காட்டிகொள்ள முனைகிறது. சீக்கியர் இடித்த பல இந்துக் கோவில்களை ரஜீவ்காந்தி திரும்ப கட்டினார் என்பதை சம்மாந்துறை PhD களுக்கு தெரியாது. 

     

    இந்திய இந்துத்துவம் பற்றிய புரிதல் யாழ்பாணத்தில் தம்மை இந்து என்று பிதற்றுபவர்களிடம் சற்றும் கிடையாது. இந்திய இந்துத்துவம் என்பது இந்தியாவை சாதிவாரியாக கூறுபோட்டு மதவாரியாக பிளவுகளை ஏற்படுத்தி மக்களை சிதைத்து சூட்சும அரசியலூடாக வெறும் இரண்டு மூன்று வீத பார்ப்பான் இந்திய மைய அரசியலை ஆழ்வதற்கான உத்திதான் இந்துத்துவம். இந்துத்துவம் என்பது சூட்சும அரசியல் தவிர ஆன்மீகம் கிடையாது.

     

    யாழ்பாணத்தில் SJV தொடக்கம் எப்போதுமே கிறிஸ்தவர்கள்தான் உரிமை போராட்டத்தில் முன்னணி. பிரபாகரன் தனது மகனுக்கு சாள்ஸ் அன்ரனி என்று பெயர் வைத்ததிற்கும் காரணம் இருக்கு. எனவே இந்தியாவில் இந்துவம் என்ன செய்தும் நாம் கவலைபட வேண்டியதில்லை. கடத்தல்க்கார காங்கிரஸ் பதவி போய் BJP பதவிக்கு வந்த பின்னர் சம்மந்துறை இந்துதவ சரித்திரம் மாறிவிடும்.

     

    ஈழத்தவர்கள் தமது சைவத்தை அதன் குறைகளை கழைந்து தனித்துவத்துடன் நல்லதொரு ஆன்மீகமாக வளர்த்தெடுத்திருக்கலாம். ஆனால் தமது தலைகளை கொண்டுபோய் இந்துத்துவாக்களிடம் ஓட்டுவதில் குறியாய் உள்ளனர்.  இதற்கும் ஒரு காரணம் உண்டு அது இந்தியாவில் பார்ப்பான் சாதியில் மேலோங்கியிருப்பதைபோல் ஈழத்தில் இவர்கள் இந்துத்துவத்தை வைத்து சாதியின் மேன்மையில் உயர்வை காட்ட முற்படுவதே அதன் பிரதான காரணம்.

     

    சமயம் வளர்பதற்கில்லை. சம்மாந்துறை இந்துத்வம்தான் வளர்க்கப்படுவது.  இந்த சைவ சித்தாந்த பாடலுக்கு பொருள் சைவத்திற்க்கும் இந்து சமயத்துக்கும் இடையில் தான் பெரிய ஆப்பாக இறுக்கிவிட்டத்தாக நினைத்து  சைவத்தை வளர்க்கும் திருகுதாளக் கதை விடமாட்டர்கள்.  இதுதான் சைவ சித்தாந்ததின் அடிப்படை "ஓராதே ஒன்றையும் முற்றுன்னாதே நீ முந்தி பாராதே பார்த்தனை பார்" சைவம் வளர்பதற்கல்ல, அதில் பிராத்தனை கூட செய்ய வேண்டியதில்லை. 

     

    சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யவேண்டும் கங்கணம் கட்டுபவர்கள் இவர்கள். தமிழ்நாட்டுப் பிள்ளை மார்களும் ஆதீனங்களும் பபார்ப்பனனுக்க செம்பு தூக்கி சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இவர்களுக்கு பக்கபலமாய் கடிதங்களும் ஆலோசனை ஆதரவுகளும் வழங்குவதில் காலகாலமாக யாழ்ப்பாண பிள்ளைமார்கள் பின்நிற்பதில்லை. பின்னர் வெட்கமே இல்லாமல் தமிழும் சைவமும் இரு கண்கள் என்பார்கள். இந்த கூறுகெட்ட தனத்தை என்னவென்று சொல்வது!!

    http://eswaramoorthy.webs.com/naadumnaveenarum.html

     

    சமஸ்கிருதம் வடநாட்டவரின் மொழிகளின் தாய் மொழி. அவர்கள் ஏன் அதில் பூஜை செய்யக்கூடாது? யாரும் சொல்லாமலே சம்மாந்துறை காவடிகள் அங்கே வீதிகளுக்கு கூட அரபிக்கில் பெயர் சூட்டிவிட்டுவந்து ஆப்பிறுக்கள் செய்கிரார்கள்.  தமிழரின் பூசை மந்திரங்கள் பௌத்தர்களை கழுவேற்றிக்கொலை செய்த்துவிட்டு நாயனார் பட்டம் பெற்ற்வர்களின் தேவாரங்கள் மட்டும்தான். தி மு.க ஆட்சியில் அது விரிவு படுத்தபட்டது. அறியாதவர்களுக்கு இதுவும் ஒன்று யாழ்ப்பாணத்து கோவில்களில் அரபிக்கில் தொழுவதில்லை யாழ்பாணத்தில் எல்லா கோவில்களிலும் தமிழில் தேவாரம் பிரதானமாக பாடப்படும். மேலும் ஐயர் தான் பூசை முடியவும், தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, ஊஞ்சல் பா, திருவெம்பாவை, திருப்பாவை  என்றெல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கி கொடுப்பர். யாழ்பாணத்தில் சம்மாந்துறைவிட அலுவல்கள் கொஞ்சம் வித்தியாசம். அங்கு கழுவேற்றும் நாயன் மார்களின் தேவாரங்கள் முக்கிய இடம் பெறும்

     

    இந்தப் புத்தகத்தில் சைவருக்கும் நவீன சைவருக்கும் இடையிலான வாக்குவாதம் உள்ளது. நவீன சைவம் என்பது சோமசுந்தர நாயக்கர் தொட்டு வள்ளலார் மறைமலலையடிகள் என தொடர்ந்து சைவத்தை சீரமைக்கவும் தமிழ் மொழியை முதன்மையாக்கி தமிழ்த்தேசீயத்துக்கு அடிகோலவும் வழிவகுத்த ஒரு தரப்பு. எங்கே சாதி ஒழிந்துவிடுமோ என்று இது அத்தனைக்கும் முரணாக இருந்தது அடுத்த தரப்பு. சீர்திருத்தத்திற்கு முற்றுமுழுதாக எதிர்ப்பாளர்களாக இருந்ததில் நாவலரின் தலையாய பங்கில் இருந்து ஏராளமான யாழ்ப்பாண பிள்ளைமார்களின் பங்களிப்பு இருந்தது. தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

     

    ஒருவரின் புத்தகம் இந்துமதம் அல்ல. குரான் பாணி இந்துமத்தில் எடுபடுமாயின் அது சனாதன மார்க்கமாக இருக்க முடியாது. வேதாசலம் கிறிஸ்தவனாக இருந்து தமது பெயரை மறைமலை என மாற்றிவர். அவரை விட பெரியார் இந்துமதம் இல்லை என்றும் வாதிட்டவர். முடிவு நூல் எதுவும் இந்து மதத்தில் இல்லை. கீதை, வேதங்கள், கூட முடிவு நூல்கள் அல்ல. இந்த புத்தாகம் இன்னொரு ஆராச்சி மட்டுமே. யாரும் ஏற்கலாம் தள்ளி வைக்கலாம். ஆனால் இந்துமதம் சீர்த்திருத்த என்றதற்கு அப்பால் பட்டது.  அதை சைவ சித்தாந்த நூல்கள் தெளிவாக சொல்லி செல்கின்றன. அதுதான் தமிழரின் அடிப்படை ம்தம்.

     

    இங்கே சிலர் இருக்கின்றர்கள் தடாலென தந்தை பெரியாரை தாக்குவதில் குறியாய் இருப்பவர்கள். இந்த நவீன சைவத்தின் அடுத்த கட்ட வடிவம் தான் பெரியாரின் எழுச்சி என்பது இவர்களுக்குப் புரியாது. இந்த சைவப் பிள்ளைமார்களை திருத்தவே முடியாத என்ற நூற்றாண்டுக்குமேற்பட்ட முயற்சியின் தோல்வியே கடவுளே இல்லை என்ற முடிவு நோக்கித் தள்ளியது.

     

    தூயவன் பெரியாரை ஏற்பதில்லை. பெரியாரை சமூக சீர்திருத்தவாதியாக மட்டும் நான் ஏற்கிறேன். பெரியாரின் சீடனான அண்ணாவே பிற்காலம் சமய ஈடுபாடு கட்டினார். பெரியார் யாரையும் திருத்த முடியாமல் கடவுள் இல்லை என்றால் அவரும் கொள்கை இல்லாத கோமாளியாக்கபடுவார். ஆனால் பெரியாரை விளங்காதவர்கள் சொல்லும் மனிதன் அல்ல பெரியார்.  இந்து மதத்தில் ஒருபாகம் நாத்திகம். அத்துவைதம் மனிதன் மட்டும்தான் இருக்கிறான் என்கிறது.  அதாவது கடவுள், மனிதன் என்று இரண்டு நிலை இல்லை என்கிறது. பெரியாரின் சமூக சீர்த்திருத்தங்களால் தான் தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் மட்டும் ஆட்சியில் இருக்கின்றன. காங்கிரஸ் அங்கே வால் கூட ஆட்டமுடியாமல் இருப்பது பெரியாரின் வெற்றியே. அவர் தோல்வி காணவில்லை. தோல்வியால் அவர் நாதிகனானார் என்பது, கதை எல்லாம் முடிந்து போன பின்னர் எழுதும் வங்கு ரோத்து முடிவுரை. 

     

     

    எனவே, சைவத்தையே அதன் சாதீய வர்க்க அடிப்படைகளில் இருந்து சீர்திருத்த முடியாதபோது அதுவே இப்போது இந்துத்துவவா என்று பலிபீடத்தில் கொண்டுபோய் தலையை வைக்கும் போது அதையா திருத்த முடியும்?

     

    திருத்த முடியாத இந்தக் குப்பையை தலைமுழுகுவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்பது எப்போதோ எடுக்கப்பட்ட முடிவு.

     

    ஆன்மீகத்துக்கு மதம் தேவையில்லை.

     

    சைவசித்தாந்ததில் சாதியம் இருக்கு என்று ஊளை இட்டு யாரும் அதை கேடக்கபோவதில்லை.  ஆன்மீகத்துக்கு மதம் தேவை இல்லை. அதனால் மதம் இருக்க கூடாது என்றும் இல்லை. முகமது, புத்தர், ஜேசு எல்லோரும் தங்கள் மதங்களைத்தான் ஆக்கினார்கள். இதனால் மட்டும்தான் மதங்கள் உண்டாகின.  சமூக பிரச்சனையான சாதியை மத்திற்குள் இணைதவர்கள் ஆரியர்கள். அதாவது ஆளும் அதிகாரத்தை கொண்டிருந்த ஆரியகள் தங்களை மத்த தலைவர்கள் ஆகினார்கள். இது சரியாக மகாநாமாவின் புத்தம் இலங்கை எங்கும் பரவவேண்டும் என்றது போன்றதே. அதை வைத்து இன்று காசாக்க முயல்பவர்கள் பாசியர்கள்.  தமிழரின் சைவசித்தாந்ததில் சாதியம் இருக்கு என்று ஊளை இட்டு யாரும் அதை கேடக்கப் போவதில்லை. வடமாகாண சபைக்கு அதன் அதிகாரத்தை தந்தால் தங்களைதாங்கள் கவனிக்க முடியும் என்பது அவர்களின் வாக்களிப்பின் தெரிவு. ஆனால் அவருக்கு ஆப்பிறுக்கல்களும் போதனைகளும் தான் கொடுக்க முடியும் என்பது கோத்தாவின் மரமண்டையின் தீர்மானம். 

     

    நானும் நீயும் இந்து ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்ற இந்துமத நிலை உலகின் எந்த மூலையிலும் கிடையாது. எவன் எந்த மதத்துக்கு போனால் என்ன விட்டால் என்ன. மனிதாபிமானத்தை மனிதநேயத்தை விரும்புகின்றவன் இந்த மதத்தில் இருந்துகொண்டே அதை கருவறுக்க வேண்டும்.

     

    மகாநாவின் புத்தத்தை அறியாதவர்கள் எழுதுவது இது. அங்கிருக்கும் ச்சதியம் எங்கும் இல்லை. இதுவேதான் சுன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களுக்கு குண்டுவைக்கும் காரணமும்.  பாகிஸ்தானிய பாசிகள் வங்காள திராவிடர்களை தீண்டாதவர்களாக ஆக்கி வைத்திருந்த போது இந்துக்கள்தான் விடுவித்தார்கள். "மனிதாபிமானத்தை மனிதநேயத்தை விரும்புகின்றவன் இந்த மதத்தில் இருந்துகொண்டே அதை கருவறுக்க வேண்டும்." மனித நேய கோத்தாவின், மகிந்தாவின்  போருக்கு ஒற்ற்வர் வேலை செய்ய  போனவர்களின் மனித நேயதத்துவம் இது .

     

  4. உனது மதம் சதி பேதங்களற்று நன்னெறியுடனும் மனிதாபிமானத்துடனும் இருந்தால் ஏன் அடுத்த மதத்திற்கு போகப்போகின்றார்க்கள்? நீங்களே சமண பௌத்த மதங்களில் இருந்து சைவத்துக்கும் சைவத்தில் இருந்த இந்துவுக்கு மதம் மாறியவர்கள்தான். உங்களுக்கே நீங்கள் யார் என்ற அடிப்படைக்கு அர்த்தம் தெரியாதநிலையில் மத மாற்றத்திற்கு குய்யோ முறையோ என்று கூச்சலிடுகின்றீர்கள்

     

    தங்கள் மதம் சரியில்லை என்றதை தெரிந்தவர்கள் தங்கள் மதத்தினருடன் திருமணம் செய்யும் போது அதற்கு மாறவேண்டும் என்று நிர்ப்பந்திப்பார்கள். மணமக்களின் முடிவாக இருக்க விட மாட்டார்கள். சாப்பாட்டுக்கு உழைக்க போக நேரம் இல்லாவிட்டாலும் தமது மதத்தை வெறித்தனமாக ஐந்துநேரம் தொழாவிட்டால் கல்லால் எறிந்து கொல்வார்கள். இந்த நடத்தைகள் மதத்தில் இருக்கும் பிர்ரசனையை எடுத்துக்காட்டுவது. அதே நேரம் ஆப்பிறுக்கல்களை கேட்டு கக்கீம், அஸ்வார், அசாத சாலி மாதிரி தாளம் போடுவோர் புலிகள் 20,000 முஸ்லீம்களை கொண்டுவிட்டார்கள் என்றகணக்குடன் மகிந்தா காலில் விழவேண்டியதுதான்.

  5. திருமண விவகாரத்தில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் முடிவு அவர்களுக்கானது. ஆனால் இலங்கையில் இருக்கும் மகாவம்சத்தில் சொல்லியிருக்கும் கொலைகளை அறியாமல் தமிழ் நாட்டு சரித்திரத்தை பொய் பிரட்டாக எழுதும் கோமாளித்தனத்தை என்ன என்பது. மகாவம்சத்தில் விஜயன் செய்த்த அநியாயங்களின் தோசத்தை போக்க முத்துமாரி அம்மன் கோவிலில் சிங்களவர்கள் இராணி குவேனிக்கு கோவில் கட்டி சிலை எடுத்திருக்கிறார்கள். இந்த கோத்தாவின் கூத்தாடிகள் தமிழ் நாட்டு சரித்திரத்தை திருப்பி எழுத முதல் இந்த செய்திகளை படித்திருக்கலாமே.  அதன் பின்னர் விக்கினேஸ்வரன் கேட்டது போல இலங்கை சரித்திரத்தை திருப்பி எழுதலாமே.

  6. இலங்கையில் தமிழரை அழிக்க இரவு பகலாக தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் ஆப்பிறுக்களில் இறங்கி முஸ்லீம்களை வெற்றிகரமாக ஒதுங்க வைத்தவர்கள் இலங்கையில் இந்து மதம் அழிக்கபடும் போது அதை காக்க இந்திய மதவெறியர்கள் வருவார்களா என்று கேட்கிறார்கள். கொமேடிதான். ஒநாய் ஒன்று ஆட்டுக்காக அழுததைவிட கண்ணிர் மலகத்தக்க துன்பியல் கதை.

     

    புத்தமதம் இலங்கையில் பரவேண்டும் என்ற இந்த கூட்டம் யாழில் வாதிட்ட போது ஆங்கில பத்திரிகைக்களில் இலங்கையின் மகாநாம புத்தத்தால்தான் அழிவு; அதை சிங்கள மக்கள் கைவிட வேண்டும் எறு விவாத்திதார்கள். (இலங்கையில் சிங்கத்தை புணர்ந்ததால் தமக்கு தொடர்ந்து இரத்தம் வேண்டும் என்று மகா வம்சத்தில் எழுதி வைத்துக்கொண்டு தமிழ நாட்டு சரித்திரம் தெரியாமல் கதை எழுதுகிறார்கள். இலங்கையின் மகாவம்சத்தை தன்னும் படித்திருந்தால் பண்டியனின் அரன்மனையில் திருஞான சம்பந்தருக்கு நடந்தது தெரிந்திருக்க வேண்டியதேவை இல்லை. மாகாவம்சத்தில் புத்தர் இலங்கையை புத்தமத நாடாக்க வேண்டும் என்று கேட்டதற்காக இலங்கையை புத்தமாக்கும் போது கக்கீமும் அசாத்சாலியும் பிளாடிக் சேஜறிக்குத்தான் போக வேண்டும்  ) இதை வட மாகாண முதல்வரே பார்த்துவிட்டு படித்த சிங்களவர்கள் சொலவது போல  இங்கையின் சரித்திரம் மதவெறியர்களால் அல்லாமல் அறிஞர்களால் திருமப எழுத பட வேண்டும் என்று கோரிக்கை விட்டார். அதற்கு கூடத்தான் படித்தவர்களிடம் வரவேற்பு கிடைத்தது.

     

    அழியப் போவது இந்துமதம் அல்ல. இப்போது அவலப்படுவது தமிழரல்ல. கோத்தாவின் கூத்துக்கள் தமக்கு போக இடம் கிடையாமல் போக போகிறதே என்ற்தை உணர்ந்து பலதடவைகள் தங்கள் தமிழ் மக்களுக்கிடயிலான ஆப்பிறுகளை திசை மாற்றுகிறார்கள். ஈழத்தமிழரின் தாலித்துக்கள், இந்த ஆப்பிறுக்கல்களின் கதை கேட்டு ஏமாந்து கூட்டமைப்பிடம் கொழுவிகொண்ட மு.கா மாதிரி இல்லாமல் விக்கிலேஸ்வரனுக்கு 95% தொடக்கம் 100 % வாகுக்களையும் போட்டுவிட்டு வடமாகாண அதிகாரத்தை கைப்பற்றி வந்து தமக்கு நீதி பெற்றுத்தரட்டும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின் தேர்தல் சரித்திரத்தில் என்றுமே குலம் குறைந்த மக்கள் ஆபிறுக்கல்களை கேட்டு தமிழரசுக்கட்சியையோ கூட்டணியையோ, கூட்டமைப்ப்யோ விட்டு பிரிந்து போனது கிடையாது. ஆப்பிறுகல்களை கேட்டு அதன் படி ஒழுகிய முஸ்லீம் தலைமைகள் இன்று காலில் விழ பொதுபல சேனா கூட இல்லாமல் தவிக்கிறார்கள்.

     

    பௌசி என்ற கோமாளி மத்தியகிழக்கில் பிச்சைக்கு போய் நிற்கிறது. கக்கீம் என்ற தறுதலை "மகிந்தாவை விழுத்த மட்டும்தான் போர்க்குற்ற விசாரணை அமெரிக்கா கேட்கிறது" என்று ரஸ்சிய வெளிவிவகார ராஜதந்திரிக்கு சொல்கிறது. (இது எந்த ஆங்கில செய்தியிலும் வந்ததையும் நான் காணவில்லை.) அவமானகரமாக அசாத் சாலி மகிந்தாவிடம் காலில் விழாத குறையாக 20,000 முஸ்லீம்களை கொன்றிருக்கிறார்கள் புலிகள்; எங்களுக்கு நீதி வேண்டும் என்று புலம்பியிருக்கிருக்கிறார்.(இதை தமிழில் காணவில்லை). இந்த கக்கீம் தான் சாதி திமிர் பிடித்த இராமாயன கதையை தமிழருக்கு படிப்பிக்க கனடா வர முயன்றார் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். இருந்த எதிர்ப்பால் தான் அங்கேயே நின்றார்.

     

    1915 ல் முதலாம் உலகமாக யுத்ததில் தன் உயிரை பணயம் வைத்து இராமநாதன் இங்கிலாந்து சென்றது சிங்கள் மக்கள காப்பாற்ற என்றில்லை. முஸ்லீம்கள் இலகுவில் ஆப்பிறுக்கல் சங்கீதங்களுக்கு காவடி ஆடுபவர்கள் என்பதாலேயே. அன்று அவர்கள் வெள்ளைகளுடன் சேர்ந்து சிங்கள்வர்களை அடித்தார்கள். இராமநாதன்தான் உயிரை பணயம் வைத்து தலையிட்டு இன ஐக்கியத்தை கொண்டுவந்தார். ஆனால் அவர் தலையிடாமல், முஸ்லீம்கள் வெள்ளைகளின் அனுசரனையுடன் தொடர்ந்து சிங்களவர்களை தாக்கியிருந்திருந்தால், சுதந்திரம் கிடத்தவுடன் முஸ்லீம்கள் ஓடிப்போய் பாய இந்து சமுத்திரத்தை கூட சிங்களவர்கள் மிச்சம் விட்டிருந்திருக்க மாட்டார்கள். ஆனால் அன்று இன ஐக்கியத்துக்கு இராமநாதன் பாடுபட்டதால், முஸ்லீம்களின் இருப்பை வரும் மார்சு வரையும் அவர் உறுதி செய்தார். அதன் பிறகு அவர்களை காக்க யாரும் இருக்கப் போவதில்லை.  தனியத்தான் சிங்களவர்களிடம் அலகில் வாங்குவார்கள். 


    "இந்துக்களின்" இடங்களில் விகாரைகள் கட்டப்படுவது பற்றி இந்தத் துண்டுப்பிரசுரம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? தங்களின் வீரத்தை அங்கே காட்டலாமே?!

    அவர்தான் எழுப்ப வேண்டுமா? அப்படி எழுப்புவது சரியாயின் நீங்கள் அதை செய்தால் உங்களுக்கு தோசமா? 

    • Like 1
  7. இளங்கோவும் வள்ளுவனும் ஆதியிலே இந்து மதத்தவர்கள் என்பதற்கும் மதம் மாறி பின்னர் இந்து மதத்துக்குப் திரும்பி வந்தனர் என்பதற்கும் தக்க சான்றுகள் தங்களால் காண்பிக்க முடியுமா?

     

    இளங்கோவும் வள்ளுவனும் சமண சமயத்தவரே. திருநாவுக்கரசர் இவ்விருவருக்கும் காலத்தால் பெரிதும் பிந்தியவர். கி.பி 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் காலத்தில் தமிழகத்தில் ஆரியம் வேரூண்டி விட்டிருந்தது.

     

    கேட்டால் இளங்கோவும், வள்ளுவனும் வாழ்ந்ததற்கே கொடுக்க சான்றுகள் இல்லை.

     

    ஆதி என்ற புலைச்சி  சிறுமி தான் உண்டுகொண்டிருந்த போது எட்டி பார்த்து தனது சப்பாட்டை கண்டாதால் கோபம் கொண்ட பிரமணான பகவன் புலைச்சியை தன் கையிலிருந்த அகப்பையால் அடித்தார் என்றும் அவள் தலை பிளந்து சிறுமி துடிதுடித்தாள் என்றும், பின்னர் அந்த புலைச்சி வேறு ஓரிடம்  சென்று வளர்ந்து அழகிய குமரியான போது அவளை அறியாமல் பகவன் அவள் மீது காதலில் விழுந்தான் என்றும், திருமண சடங்கில் ஆதியின் தலையில் பால் வைக்கும் போது கண்ட பாரிய தழும்பை பற்றி பகவன் விசாரித்த போது கள்ளமில்லாமல் அந்த குமரி தனது காதலனுக்கு தனக்கு சிறு வயதில் நடந்த கொடூரத்தை பற்றி சொன்னாள் என்றும், அவளை புலைச்சியாக அடையாளம் கண்ட பவகந் திருமணத்துக்கு மறுக்க அவள் அவன் காலில் விழுந்து வேண்டி தனக்கு பிறக்கும் பிள்ளைகளை பிறந்த இடத்தில் விடுவத்ற்கு சம்மதித்து திருமணத்தை முடித்தாள் என்றும், முதல் பிள்ளையாக சூரியனையும் மிஞ்சும் ஒளியுடன் பிறந்த  பிள்ளையான வள்ளுவனை அவள் விட்டு பிரிய மனம் இல்லாமல் அந்த இடத்தில் அழுது வேதனைப்பட வள்ளுவன் வாய் திறந்து, "அம்மா நீ கொடுத்த வாக்கை காப்பாற்று, நானும் எனக்கு பிறகு பிறக்க போகும் சகோதரர்களும் எங்களை காப்பாற்றிக்கொள்வோம், நீ இந்த இடத்தை விட்டு போ" என்று கூறினான் என்றும் ஒரு கர்ணபரம்பரைக கதை  உண்டு. இதனால் வள்ளுவன், ஔவை, அதிகமான் போன்ற எழுவரும் பிறந்த இடத்தில் விடப்பட்ட அனாதைகள். இதில் வள்ளுவளின் மதம் பற்றிய அடிபாடுகள் இன்று உண்டு; மற்றய அறுவரும் பிரச்சனை இல்லாத இந்துக்கள். எனவே வள்ளுவனையும் இந்துவாகவே கொள்வார்கள். இந்த கரண்பரமபரை கதையை விட வள்ளுவரின் குறள்கள் எல்லாம் நாலடியார் போன்ற சமண மத நீதி நூல்களை ஒத்திருப்பத்தால் அவர் சமணத்தை அறிந்திருந்தார் என்பது தெளிவு. அந்தணரையும், இந்திரன், தேவர்களையும் பற்றி பேசுவதால் பிற்காலம் இந்துவாக இருந்தார் என்பதும் தெளிவு. எனவே இடைக்காலத்தில் சமண மத பள்ளியில் படித்திருந்தார் என்பது தேற்றம்.

     

    இங்கோ தனது தமையான சேரன் செங்குடுவனின் அரண்மையில் முதல்மந்திரி போன்ற தானத்தில் இருந்தார். கண்ணகிக்கு சிலை எடுக்க போரை எற்று விவாத்தித்தார் என்பது சிலப்பதிகாரத்தால் அறியக்கிடக்கிறது. கர்ணபரம்பரை கதைப்படி அரசிக்கு மிகவும் நம்பிக்கையான சோதிடர் சேரர் பரம்பரையில் நடககாத குழப்பம் செங்குட்டுவனுக்கும், இயங்கோவுக்கும் இடையில் ஏற்படலாம் ஏன்று கூறினாராம். இளங்கோவின் கிர நிலைகள் செங்குட்டுவனினதை விட புகழ் ஏணியில் ஏற்றும் வல்லமை உள்ளதால் இளங்கோ செங்குட்டுவனை ஆளவிடமாட்டான் என்று சோதிடம் கூறினார். செங்குட்டுவன் வெகுண்டெழுந்து வாளை உருவிக்கொண்டு கோளையும் நசியலுமானா உன்னால் முடியுமானால் இப்போதே போருக்கு வா என்று அழைத்தானாம். இளங்கோ தன் வாளை உறையோடு கழற்றி தமையனிடம் கொடுத்துவிட்டு, "அரசு உனதே, என் உயிர் உள்ள்வரைக்கும் வேறு எதுவும் நடக்காது" என்று கூறிவிட்டு அரண்மனையை விட்டு சென்றுவிட்டான். 

     

    அரச இலட்சணங்களுக்கும் மேலாக ஒளி சுடர் விட்டு பிரகாசிக்கும் சிறுவன் தலை நகர் வீதில் அழுக்கான உடைகளுடன் பசிக்களையுடன் அலைவதைக்கண்ட சமணத்துறவிகள் அவனை அணுகி அவன் கதையை கேட்டனர். சிறுவனின் பேச்சில் அவனின் கல்வியின், கலைகளின் ஆழத்தைகண்ட அவர்கள் அவனை அரண்மனைகு திரும்ப விடாமல் தங்கள் பள்ளிக்கு எடுத்து சென்று ஒழித்து விட்டார்கள். பிற்காலம் வளர்ந்து தான் அரசனான பின்னர் தன் தம்பியை தேடி அலைந்த செங்குட்டுவன் இறுதில் பள்ளி ஒன்றில் துறவியாக கண்டான். அவனை வற்புறுத்தி அழைத்து வந்து அரசில் பாதியை கொடுக்க துறவியான இளங்கோ ஏற்றுக்கொள்ளவில்ல. ஆனால் செங்க்குட்டுவன் அதன் பின்னர் இளங்கோவை பள்ளி செல்ல அனுமதிக்க வில்லை. இதனால் அண்ணனின் அரண்மனையில் இளங்கோ முதன் மந்திரியாக அரண்மனையை நடத்தும் பொறுப்பை நிர்வகித்தார். 

     

    சிலபதிகாரம் முழுவதிலும் வைத்து இளங்கோவின் தலைமறைவான கால வாழ்க்கையின் சுவடுகள் அறியப்பட்டிருக்கின்றன. 

     

    திருநாவுக்கரசர் 7 ம் நூற்றாண்டு என்பது சிலரின் விவாதம் ஆனால் அவர் பல்லவர்களின் காலத்தவர். நிச்சயமாக 7 ம் நூற்றாண்டுக்கு எவ்வளவோ முன்னராக இவரதுகாலம் போடப்பட வேண்டும். களபிரயர் முடிய பல்லவர் எழுச்சி அடைந்துவிட்டார்கள்.  இவரின் சக காலத்தில் திருஞான சம்பந்தர் எழுச்சி அடைந்து வந்து கொண்டிருந்த பாண்டியருடன் தொடர்புகள் வைத்திருந்தார். 

     

    அந்தணர் தங்களை உயர்வானவர்களாகவும், தேடி மட்டும் திருமணம் செய்வதும் சிந்து வெளியில் இருந்து வருகிறது. ஆனால் சாதியம் என்ற இன்றைய பாகு பாடு இருக்கவில்லை. நான் படித்த ஒரு அமெரிக்கரின் சிந்து வெளி குயவரின் கட்டுரைப்படி இவர்கள் தான் சிந்து வெளியின் மொழியை களிமண் தட்டுக்களிலும், முத்திரைகளிலும் எழுதியவர்கள். எனவே இவர்கள்தான் பலர் அந்த நேரத்தில் பிராமணர் என்ற தரம் பெற்றவர்கள். ஆரியம் ஆரிய மதங்களான சமணம், புத்தம் போன்ற்வற்றுடன்தான்முதன் முதல் தமிழ் நாட்டுக்கு வரத்தொடங்கியது.  பாளியையையும், சமஸ்கிருத்த்தையும் இவர்கள்தான் களப்பிரயர் காலத்தில் தமிழ் நாட்டில் திணித்தவர்கள். 

  8. விவசாயி:

     

    சைவசித்தாந்தம் முழுவதும் தமிழ் நூல்கள்தான். தனிய சங்கரர் மட்டும்தான் சமஸ்கிருதத்தில் சைவசித்தாந்த கருத்துக்களை எழுதினார்.  பெரும்பாலான பிரமணருக்கும் சைவ சித்தாந்த நூல்களில் சொல்லப்படும் தத்துவங்கள் தெரியாது. அவர்கள் வேதங்களை உருப் போட்டவர்களே. 

     

    சைவ சிந்தாந்த நூல்கள் வெளிவர முன்னரே வேற்று தாயிடம் பால் குடித்ததற்கு தந்தையிடம் அடிவாங்கிய பிராமண சிறுவனின் வசனம்தான் "வேதம் நான்கிலும் மெய்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே" - (ஒரே ஒரு தமிழ் மந்திரம்) என்றது. அந்தக்காலத்தில் பிராமணர்கள் கூட பூசையையும், வேத மந்திரங்களையும் சைவ சித்தாந்த கோட்பாடுகளில் திணிக்க முயவில்லை என்பதுதான் அதன் கருத்து. 

     

     

  9. 33 கோடி தேவர்கள் இருப்பதாக கூறப்படும் இந்து-சைவ மதத்திலிருந்து பிரிந்து சென்று இன்னொரு கடவுளை வழிபட ஆன்மீக தேவை எழுவதற்கிடமில்லை. இது 33 கோடி + 1 ஒன்றாக் அமைந்தாலும், சனாதன மதமான இந்து மதத்தில் அந்த தத்துவமும் உள்ளடங்கியிருக்கு. சகல மத தத்துவங்களை மட்டும் அல்ல மதமில்லா தத்துவங்களையும் நாஸ்திகஸ்தையும் உள்ளடக்கியது இந்துமதம். நம்பிக்கைதான் மதம் என்பதால் கடவுள் இல்லை என்று நம்புவானின் நமபிக்கையையும் ஏற்று அவனையும் இந்துவாக வைத்துக் கணித்துக்கொள்வது இந்துமதம் மட்டுமே. மற்ற எந்த மதத்திலும் நாஸ்திகன் ஒரு பாகமாக இருக்க முடியது. 

     

    இளங்கோ, வள்ளுவன், திருநாவுக்கரசர், ஜே.கிருஸ்ணமூர்த்தி, தமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவ்லர், விபுலானந்தர் போன்று இளமையில் மதம் மாற்றப்பட்டு பின்னர் திரும்பி வந்தோர் மற்றையைய மதங்களை தெரிந்துதான் திரும்பி வந்தனர். இவர்களின் அகன்ற கண்களில் கண்டது, எல்லோருக்கும் அவர் அவர் மதங்களை பின்பற்ற அரசியல் உரிமை இருக்க வேண்டும் என்ற வறட்டு சட்டவிவாதம் மட்டும் அல்ல, எந்த மதத்தில் இருப்பவனுக்கும் எல்லா மதத்தையும் பின் பற்றவும் உரிமை வேண்டும் என்ற தனி மதம்னித உரிமையையை போதிக்கும் சனாதனதர்ம மான இந்து மதமே.

     

    பரம் கம்சர் சில் காலங்களில் பெண்களை போல உடுத்துவார். அன்னை சாராதவை மத்தியில் நிறுத்தி பூசை செய்வார். பாதிரிகள் போல நடந்து கொள்வார். குல்லா கூட போடுவார். தான் முகமதியத்தை,கிறிஸ்தவத்தை பின்பற்றி அந்த அந்த கடவுள்களை கண்டத்தாக சீஸ்சர்களுக்கு கூறின்னர். (இன்று ஆராச்சிகளால் கூறப்படும், வெள்ளையான, மூக்கு நீண்ட, நேர்த்தலைமயிர் உருவம் யேசுபிரானது அல்ல என்றதை பரம கம்சர் தான் கண்ட ஜேசு, சுருள்தலையரும், சப்பை மூக்கும் உள்ளவர் என்று-சரியான ஜேசு காலத்து மத்திய கிழக்காரின் உருவம்-சொன்னத்தை மகாநாத குப்த்தா 100 வருடங்களுக்கு முன்னர் தனது வரலாற்றில் காட்டியுள்ளார்).எந்த கடவுளையும் இந்து மதத்திலிருந்தே இராமகிருஸ்னர் தேடிக்காண்பித்திருக்க மதம் மாறிக் கடவுளை தேடுவதென்பது இராமகிருஸ்னரை விட ஆன்மிகதேவை உள்ளவராக தன்னைத்தான் காட்டும் முயற்சி.

     

    இந்து மதத்திற்குள் சாதியை திணித்தவர்கள் ஆரிய மேற்கத்தியர் பின்பற்றும் மதங்களும், ஆரியருமே. அது அவவாறு இருக்க இந்து மதத்திலிருந்து மதம் மாறி ஆன்மிகத்தை காண்போம் என்று கூறுவோரின் கதை குடிசை வீட்டில் ரோச்சை தொலைத்த கிழவியின் கதை போன்றது. வீட்டுக்காறி இரவில் குழந்தைகளின் தேவைக்காக ரோச்சை எப்போதும் ஒரே இடத்தில் வைப்பாள். கிழவிக்கு பகலிலும் சரியாக கண் தெரியாது. இரவு எங்கோவோ ரோச்சை எடுத்து சென்ற கிழவி தடுமாற்றத்தால் ரோச்சை விட்டு விட்டு வந்து விட்டது. மறுநாள் பகல் ரோச்சை வைத்த இடத்தில் இடத்தில் காணாததால் வீட்டுக்காறி கிழவி மீது பாய்ந்தாள். கிழவி "இப்போது வெளிச்சமாக இருக்கிறது, எனக்கு கண் தெரியாது, இரவு வந்தால் நான் அந்த இடத்துக்கு நேராக போய் எடுத்து வந்துவிடுவேன் என்றதாம். ஆனால் தான் ஏன் ரோச்சை எடுத்து சென்றது என்ற சின்ன விளக்கம் கிழவிக்கு இல்லை. அதாவது இந்து மத்த்தில் இருந்த போதே குருடர்களாக வாழ்ந்து இந்து மதத்தை தெரிந்து கொள்ளாத முட்டாள்கள் மற்றைய மதத்தையும் அறிந்து ஒப்புவமைகண்டு விட்டதாக துள்ளிக்குதிப்பது கோணங்கித்தனம். இருட்டின் போது வெளிசசத்திற்காக ரோச்சை எடுத்து சென்று தொலைத்த தடுமாற்றம் பிடித்த கிழவி இருட்டுவந்தால் ரோச்சை கண்டு பிடித்துவிடலாம் என்று போதிப்பது நகைச்சுவை. , 

     

    இந்து மதத்தில் இருந்து மதம் மாறுவது தமது சட்டப்படியான உரிமை என்றதை நிர்ணயம் செய்துகொள்ள மாறுகிறார்களாயின் அது வேறு. சாதிப் பாகுபாடு இருப்பதால் இந்து மதத்தில் கடவுள் இல்லை என்று விதண்டவாதம் வைக்க முயல்வது வேறு. அதிலும் சாதிப்பகுபாட்டு ஏற்பட காரணமாக் இருந்த மதத்தினர் அதை வைப்பது துரோகம். முகமதிய, கிறிஸ்துவ, யூத மதங்களை பின்பற்றும் ஆரியரால் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருக்குள் திணிக்கப்பட்டது தான் சாதியம். அதை அறியாதவர்கள் போல அந்த இருட்டுக்குள் திரும்ப சென்றால் தொலைத்த ரோச்சை கண்டுவிடுவோம் என்று தடுமாற்றக்கார கிழவி மாதிரி பேசுவது ஏமாற்றுத்தந்திரம்.

     

    அமெரிக்காவில் படித்தவர்கள் மதம் சாரா அரசியல் அமைப்பை உலகத்திற்கு ஆக்கி காட்டி சாதனை ஏற்படுத்தியது, அவர்கள் கிறிஸ்த்தவ மதம் ஆட்சி பீடம் ஏறாமல் இருக்க செய்த மாபெரும் சாதனையே அது.   அமெரிக்க கிறிஸ்தவத்தில் கறுப்பர்கள், செவ்விந்தியர்கள் அடிமைகளாக காணபட்டமையாலேயே அவர்கள் அதை செய்தார்கள். இந்தியாவில் மட்டு மல்ல முகமதியர் ஆண்ட இடமெங்கும் இஸ்லாமியர் வரி கொடுக்காதிருக்கும் போது ஆளப்படும் மதங்கள் மட்டும் வரி கொடுக்க வேண்டும் என்று தண்டம் இறுத்தமைதான் இஸ்லாமியரின் சரித்திரம். மதத்தை திருத்த முடியாவிட்டாலும்  மேற்கு நாட்டு கிறிஸ்த்தவர்கள் ஜனநாயக முறைகளை ஆட்சி முறையில் ஏற்றுக்கொண்டுவிட்டதால் பணம், இருப்பிடம், வேலை கொடுத்து மதம் மாற்றுவதுதான் அவர்களின் நடத்தை. ஆனால் மத்திய கிழக்கில் இந்து பெண் மொட்டாக்கு போடாமல் பொட்டு வைத்து செல்ல முடியாது. அந்த மத்தை பின்பற்றுவோர் இந்து மத்தை பற்றி பேசும் பேசுவது தடுமாற்ற கிழவின் பேச்சை விட நகைப்பானது. 

     

    சுத்த மத வெறியர்கள் சனாதன மத்தினரான இந்துக்களின் அடிப்படை சைவ சித்தாங்கள் என்ன மாதிரியான மதமொன்றை பற்றி சொல்கின்றான என்ற எள்ளவும் தெரியாத தங்களை அறிவை காட்டுவதுதான் இந்துக்களில் ஏர்ஹு ஒருவைகை இனம் காணமுடியாத ஒரு வெறி இருப்பதாக காட்ட முயலும் குதர்க்க கதை. அப்படி இனம் காண முடியாத உண்மை வெறி இங்கே என்ன என்றால் மதம் மாறாவிட்டால் பெண் கொடுக்க மறுக்கும் மதம் மீது குற்றம் காண முடியாமல் பொய் சொல்லி தன் மதத்தை இழிவு படுத்துவோரை ஏற்கமறுப்போறை வெறியகளாக காட்ட முயலும், தனினத்தை தூற்றும் ஒரு துரோகத்தன வெறிதான் அவர்களால் தங்களுக்குள் இனம் காண முடியாமல் இருக்கிறது.   

     

     

    • Like 2
  10. 1794578_654153267956203_1877687122_n.jpg

     

    பறவையை கண்டான் படகினை படைத்தான், 

    பாயும் நீரில் அருளினைக் கண்டான் 

    தியாகத்தீயில் தாய்மையைத்தெரிந்தான்

    மனிதன் மாறவில்லை மனதை மறைக்கவில்லை!

     

    ஓ கொ கோ ஓ கொ கொ ஓ 

  11. அவமானம். எந்த தரத்து கலைஞர்களானும் அவர்கள் பார்வையாளர்களை பார்க்கவில்லை. அர்ப்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள். 

     

    தயவு செய்து இதை நகைச்சுயுடன் இணைக்காமல் முகநூல் எங்கும் பரப்பிவிடுங்கள். 

  12. 148592_10202873381013609_2059753492_n.jp

    அவைகள் சண்டை பிடிக்க காத்திருக்கவுமில்லை,

     

    தம்மைத்தான் அதற்காக வளர்த்துக்கொள்ளவுமில்லை.

     

    அவற்றின் சந்தோசமான, இயற்கையான வாழ்க்கையைக்கெடுத்து, அதை செய்வது மனித சுயநலவாதிகளே.

     

    இது போன்றதேதான் தமிழ் ஈழத்திலும், யாழிலும் அரச சுயநலவாதிகள் தமிழரை பிரித்துவைக்க செய்யும் கைங்கரியங்களும் அமைகின்றன. 

  13. மரண அறிவித்தல்களின் ஹிட்ஸ் இணை அதிகரிக்க, கருத்துகளத்தில் துயர்பகிர்வோம் பகுதியில், ஒரு உப தலைப்பாக இணைத்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.  

    மேலும் முக நூல் உள்ளவர்கள் அதை தங்கள் பக்கத்தில் இணைத்தால் யாழுடாக செல்பவர்கள் தொகை மேலும்  அதிகரிக்கும். 

  14. 1601181_726724164012503_1617059018_n.jpg

    1.என்னடி தனிய? அப்பா அம்மா வெளியிலை போட்டினமோ?வாறியேடி ஒரு படத்துக்கு போவம்.

    2. வெளியிலை பொல்லாத குளிர். இதுக்கை என்ன படம். வேணுமெண்டால் அப்பா, அம்மா, வரக்கு முதல்  உள்ளுக்கை வாங்கோ கொஞ்ச நேரம் கதைப்பம். 

    • Like 2
  15. உங்கள் பக்கத்திலிருந்துதான் அதை திருத்த முடியும்.

     

    Just Items I follow என்பதும்,  Items I participated in  என்பதும் தெரியப்பட்டிருக்கிறது. அவற்றில் இரண்டையுமே அல்லது ஒன்றைத்தன்னும் நீக்காவிட்டால் எதையும் பார்ப்பது கஸ்டமாகலாம். 


    Sign out செய்தால் இந்த நிபந்தனைகள்(Just Items I follow என்பதும்,  Items I participated in என்பதும்) பிரயோசனமற்ற்வையாகுவதால் உங்களால் பார்க்க முடிகிறது 

    • Like 1
  16. 1. தலைமயிர் புதிதாக இருக்கிறது.

    2.வயிறு வலிந்து உள்ளே இழுக்கப்பட்டது மாதிரியாக இருக்கு. முழுமையாக பசி பட்டினியால் வாடியது மாதிரி தெரியவில்லை. அதாவது படம் ஒரு யோகப்பியாச நேரம் எடுக்கபட்டதாக இருக்கலாம். 

    3.தோலின் நிறம் பிரகாசமான வெள்ளையாக இருக்கிறது. வாடிய உடம்பில், பிரகாசமான வெள்ளை, கறுப்பு, மண்ணிற நிறங்கள் இருக்காது. 

    4.நிலத்தின் சரிவுடன் இருப்பின் கோணம் ஒத்துவரவில்லை. இவர் இருந்து படம் எடுத்த நிலம் சரிவில்லாத நிலம்.

     

    படத்தில் சில மூலகங்கள் பொய்யாக இருக்கலாம். ஆனால் இவர் பொய்யா தெரியாது.

     

    Kaulantak_Peethadheeshwar_Maha_Yogi_Saty

     

    http://www.kaulantakpeeth.org/kaulantak-peethadheeshwar-mahayogi-satyendar-naath-ji-maharaj-ishaputra-himalaya

    • Like 1
  17. cartoon-2(89).jpg

    ஓ கோ கோ கோ.

     

    யார் திருடன் யார் சாந்த என்ற்தை புரியும் நிலையில் மோடாயாக்கள் இல்லாத்தால் யார் புகை போக்கிகுள்ளாள் இறங்கினாலும் அவர்களுக்கு அது சந்தோசமே. அவர்கள் வருந்தி தேடிக்கொண்டுவிட்ட வாழ்க்கை அது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.