-
Posts
10836 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by மல்லையூரன்
-
-
சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் தமிழ்பெண்கள் பட்டதற்கு நிகர நீதி தேவதையும் பட்டுவிட்டா.
-
மகிந்தாவை இப்ப இப்ப வேறு முகத்தோடுதான் வரைகிறார்கள். இந்த முகம் கறுப்பர் மாதிரி காட்டுகிறது. தப்பிக்க வழி போல்.
-
http://epaper.dailymirror.lk/epaper/viewer.aspx
In the late sixties, citizens of this country woke up to read a strange Obituary in a newspaper which announced the tragic death of one Mr. D.E.M.O’Crazy, loving father of T. Ruth and beloved husband of Justicia who died under tragic circumstances, cortege leaving villa “Anduru Wela”.
சிறிமாவோ பதவிக்கு வந்த போது வெளிவிடபட்ட மரண அறிவித்தல். Daily News இதனால் பல கஸ்டங்களை சந்தித்தது. நாம் மட்டும் அல்ல சில சுய சிந்தனை உள்ள சிங்களவர்கள், தமிழர் மீது நடந்த அட்டூயங்களை கணக்கில் எடுக்கமலே, இலங்கை போகும் பாதையை துல்லிமாக கணித்திருந்தார்கள். இது அந்த மரண அறிவித்தலின் ஒரு பகுதியே. பிளெக் போன்ற சிலர், வெளியே இருந்து பார்த்துவிட்டு, இலங்கையை ஜனநாயக நாடாக வர்ணித்திருந்தார்கள்.இலங்கையில் இருந்த எமக்கு மட்டும் தான் இலங்கை எத்தனை ஆண்டுகளாக, எத்தனை காத தூரம் விழுந்துவிட்டது என்பது தெரியும்.
-
பக்கத்து வீட்டு அல்சேசன் நாய் குரைக்கிறதை கேட்டு எங்கவீட்டு பெட்டை நாயும் போட்டிக்கு குரைத்தது!
இதுதான் இலங்கையின் சர்வல்லமை படைத்த ஜனாதிபதிக்கும் பிரதம நீதியரசர் சிராணிக்கும் இடையில் நடக்கும் பலப் பரீடசை. மேற்கு நாடுகள் இலங்கையில் உள்ளே வர கதவை திறவென்றபோது அதை திறக்க முயன்று தோற்றிருக்கிறது உயர்நீதிமன்று.
சிராணி பதவிக்கு வந்த கதை வழமையான இலங்கையின் அரசியலில் ஒருபாகம்தான். அதில் அவர் "நான் ராஜபக்சா குடும்பத்தை விட படித்தானான்" என்ற மிடுக்கு நினைப்புக்கு இடமளித்தது தவறு. சிராணிக்கு ஒன்று தெளிவாக விளங்க வேண்டும்; "தான் மட்டும் அல்ல ,தேவையாய் இருந்தால் சட்டக் கல்லூரியில் சோதனை எழுதாமலே பாஸ் பண்ணிய நாமல் வரைக்கும் இலங்கையின் பிரதம நீதி அரசர் பதவில் வந்து அமரமுடியும்" என்பது. இந்த பதவிக்கு தேவையானது அறிவும், அனுபவமும் அல்ல. உயரத்தூக்கிப்பிடிக்க ஒரு அரசியல் பந்தமே. இதில் அவ தன்னை பெரிதாக காட்ட முயல்வது பேதமை. 1948க்கு பின்னர் அதை அலங்கரித்த வெள்ளையர், தமிழ்ர், பறங்கியர் வரைக்கும்தான் அதில் தரம் இருந்தது. அதன் பின்னர் உயர் நீதிமன்றக்கட்டிடம், பாராளுமன்ற மேளத்திற்கு காண்டியன் டாண்ஸ் நடக்கும் இன்னொரு தெருக்கூத்தாடிகளின் கொட்டகையாகிவிட்டது. நீதி அரசர் பதவியும் ceremonial post மட்டுமென்றாகிவிட்டது.
சிராணி வந்த அதே அரசியல் கதவைவே திறந்து அரசு, அவவை வெளியே போ என்று சொன்ன போது போய் இருந்தால், குடும்பம், சொத்து, கௌரவம் நிம்மதி பலவற்றை சிராணி காப்பாற்றியிருக்கலாம். இனி அவற்றில் பல நடுத்தெருவில்தான். பிரதீப் காரியவாசத்தை காக்க சிராணி நீதிமன்றை பாவித்து திவி நெகும்ப சட்டமூடாக சவால் விடுத்தது தவறு. இதில் சிராணி தனக்கு பதவி போட்டுத்தந்தவர்களின் நலத்தை மறந்து, சுயநலம் காரணமாக, அவ ஆடியிருக்க வேண்டிய கண்டியன் டான்ஸை ஆடாமல், இடையில் வந்த மேற்கு நாடுகளின் தளத்திற்கு பலே டான்ஸ் ஆடியிருந்தா.
இலங்கையில் சமாதனத்தை காப்பாற்ற தவறிய தலைமைகளான D.S.சேனநாயக்கா, S.W.R.D. பண்டாராநாயக்கா போன்றோர் இலங்கையின் சுதந்திரத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி". அந்த வகையில் இலங்கையில் இந்தியா வந்திறங்கத்தக்கதாக, தலையால் அல்லாமல் வாயால் மட்டும், இலங்கை தலைவர்கள் தொடர்ந்து அரசியல் செய்தார்கள். அன்று அதை கண்டு பிடித்து அன்றே திருத்தாமல், சீனாவின் சீலைக்கு கீழ்ப் போய் ஒழிந்தர்கள். இதனால் இன்று சரவதேசமும் அரசியல் செய்யும் தனித்தீவாக இலங்கைத் தீவை மாற்றிவிட்டார்கள்.
மேற்கு நாடுகள் இலங்கை அரசியலில் புகுவதற்காக, சுதந்திரம் தேடிய புலிகளை தோற்கடித்தார்கள். அதில் பெரிய பலன் ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பொன்சேக்காவை தூண்டினார்கள். ஆனால் அந்த பந்தயத்தில் சறுக்கி விழுந்த பொன்சேக்காவை காப்பாற்ற அவர்களேதான் ஓடிவரவேண்டியிருந்தது. இன்று சிராணியையும், உச்ச நீதிமன்றத்தையும் தூண்டிவிட்டிருக்கிறார்கள். பொன்சேக்கா மாதிரியே கண்ணை மூடிக்கொண்டு மேற்கு நாடுகளின் இசைக்கு ஆடிய நீதி மன்றம், தெரிவுக்குழு விவகாரத்தில் என்ன பிழையை கண்டது என்பது தெரியவில்லை. ஒரு நாட்டு நீதி மன்றும், பராளுமன்றமும் பலப்பரிசையில் போவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அரசியல் அமைப்பு சட்டங்கள், அவை ஒன்றை ஒன்று, தேவையாயின், கண்டிக்கத்தக்க முறையில் தான் வழமையில் வரையப்படும். ஆனால் அதற்கென ஒரு விதி இல்லாமல், இலங்கை உச்சநீதிமன்றம், போட்டியில் இறங்கியதுதான் வீட்டுக்குலிருந்து பெட்டைநாய் குரைத்தது மாதிரி இருந்தது.
நீதிமன்றம் இலங்கை பாராளுமன்றத்தின் கீழ் இருக்க வேண்டும் என்றுதான் கோடிஸ்வரன் வழக்கின் பின்னர் இலங்கை குடியரசாக்கப்பட்டு அரசியல் அமைப்பு மாற்றி எழுதப்பட்டது. இன்று வரை அது இரண்டு அமைப்புக்களாலும் ஒற்றுமையாகவே பின் பற்றப்பட்டும் வந்தது. இதில் தனி ஒரு நீதி அரசர் தனது கணவருடன் அரசு முரணுகின்றது எனபதற்காக தான் நீதித்தீர்பை அரசுக்கு எதிராக வழங்கிவிடமுடியும் என்று நப்பாசை வைத்தது தவறு. சிராணி கொடுத்த திவி நிவிகும்ப சட்டத்திற்கெதிரான தீர்ப்புக்கு சிங்கள மக்களிடமிருந்து ஆதரவு வரப்போவதில்லை. இதை மீறி பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட தெரிவு குழுவை நீதிமன்றம் கட்டுப்படுத்த முயன்ற போது தனது கட்சி மீதான ஆணையை மதித்து எதிர் கட்சி தலைவரே நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க மறுத்துவிட்டார். மேற்கு நாடுகளின் தூண்டுதலால் ஆடும் நீதிமன்றம் பாரளுமன்றத்தை கட்டுப்படுத்த முயல்வதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
எந்த ஜனநாயக நாட்டிலிலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேல் வந்தால் சட்டத்தை மாற்ற முடியும். இது இலங்கையில் ஒவ்வொரு அடுத்த தேர்தலிலும் சிங்கள கட்சிகளுக்கு கிடைக்கிறது. பதவியை பிடிக்க வேண்டுமாயின் தமிழரை எதிர்த்து ஒரு மேடையில் பேச வேண்டியது மட்டும்தான் என்ற நிலை இலங்கையில் இருக்கிறது. இந்த யதார்த்தை மறந்த சிராணி தனது கணவரை காப்பாற்ற நீதிமன்ற பதவியை பாவித்து தமிழருக்கு ஆதரவான 13ம் திருத்தை எதிர்த்த திவி நிகும்ப சட்டத்தை கையில் எடுத்தார். அதில் ஆரம்பித்த நாடகம் மேற்கு நாடுகளின் தலையீட்டால் இன்றுஅவரையே காப்பாற வேண்டிய நிலைக்கு இட்டு சென்றுவிட்டது.
இது நாடகத்தின் முடிவு மாதிரி தெரியவில்லை. ஏன் எனில் மேற்குநாடு தமக்கு இலங்கையில் கிடைக்க வேண்டிய பங்குக்கு ராஜபக்சா கதவை திறப்பார் என்றுதான் அவர்கள் அவருக்காக புலிகளை தோற்கடித்தார்கள். ஆனால் அவர் உடனே கதை மூடிவிட்டதுமல்ல, இருக்கத்தக்க பின்கதவுகளான பொன்சேக்கா, சிராணி போன்றவற்றையும் தாள்ப்பாள் போட்டு மூடிவிடுகிறார். எக்கொனொமிஸ்ட் எழுதிருந்த கட்டுரையை படித்தால் வேறு எதாவது யன்னல்களாவது திறந்திருக்கா என்றுதான் மேற்கு நாடுகள் தேடுவது போல இருக்கு. இது மேற்குநாடுகளும் ராஜபக்சாவும் இடையிலான கள்ளன் பொலிஸ் விளையாட்டின் ஆரம்பம் போலத்தான் படுகிறது.
- 1
-
கென்ன
என்ன இந்த பாவாடைக் கூட்டத்தை பார்க்க பயங்கர காடைக்கூட்டம் மாதிரியல்லவா இருக்கிறது.
2009 மே 19திலும் இப்படித்தான் வெடி கொழுத்தி கொண்டாடியவர்கள்.
சிலாபம் கோவில் திருவிழாவை குழப்பியவர் ஏற்கனவே குழம்பிப்போய் இருக்கிறார்.
இராமநாதனின் வெற்றியை, தங்கள் வெற்றியாக மதித்து வண்டிலில் பூட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு வண்டிய தங்கள் இழுத்து தங்கள் மனத்தின் பெருந்தனமையை காட்டிய சிங்கள மக்களை, டி.எஸ். சேனநாயக்கவினதும் பண்டாரநாய்க்காவினதும், வகுப்புவாத வெறி நெறிப்படுதல் ஒருவனின் வேதனையை இன்னொருவன் கொண்டாடுவதுதான் இன்றைய கீழ்த்தரமான சிங்கள-பௌத்த கலாச்சாரமென்றாக்கிவிட்டது.
-
எக்னமிஸ்ட் தமிழர்கள் இதை எதிர்த்து முழுமனதாக போராடவில்லை என்பது போல எழுதியிருந்தது. அதை மேற்கு நாட்டு அரசுகளின் விருப்பமாக கணிக்கலாம். இப்படி உசுப்பேத்து எதற்கும் பலன் படாது.
மேற்குநாடுகள் இலங்கையில் தமது அஜெண்டாவைத்தான் முன் வைக்கிறார்கள். இலங்கையின் எந்த நியாயமான பிரச்சனையிலும் தலையிடத் தயார் இல்லை. இது தொடர்ந்து சீனாவுக்குதான் லக்குகாக இருக்கும்.
இலங்கையில் சர்வாதிகாரம் தலைதூக்க இனப்பிரச்சனைதான் காரணம் என்பதை அவர்கள் ஒத்துக்கொள்ளத்தயாராக இல்லை. இலங்கையை குடியரசாக்கும் சட்டமூலம் கொண்டுவந்ததே பிறிவு கவுன்சில் அரைகுறையாக கோடீஸ்வரன் வழக்கில் நீதி தீர்த்தமையால் ஆகும். அன்று மேற்கு நாடுகள் இலங்கை குடியரசாவதை 100%மும் ஏற்றார்கள். சிற்றினத்துக்கான சோல்பரி பாதுகாப்பு அரசியல் அமைப்பிலிருந்து நீக்கப்ப்ட்டது.
இன்று சிராணி திவிநிகும எதிர்ப்புக்கு அரைகுறையாக நீதி தீர்த்தா. இதனால் அவர் பதவி நீக்கப்படுகிறார். அன்று இங்கிலாந்து நீதியரசர்களை பதவி நீக்க முடிய வில்லை. ஆனால் அரசியல் அமைப்பு திரும்ப எழுதப்பட்டது.
திவிநிகுமவுடன் முரணும் 13ம் திருத்தம் இனி நீக்கப்படாவிட்டாலும் அதில் ஒரு பலனும் இல்லை.
-
ஆளுங்கட்சி எம்.பி.யான ரஜீவ விஜேசிங்க வாக்களிக்கவில்லை - நியமன எம்.பி என்பதால்தான் அப்படி. தேர்தலில் நின்றிருந்தால் சிங்கள மக்களுக்கு வேண்டியது என்ன என்பது புரிந்திருக்கும்.
-
6 லட்சம் சிங்களவரும் முஸ்லீம்களும் சவுதியில் தொழில் செய்கிறார்கள். கக்கீமோ அல்லது மகிந்தாவோ சவுதிக்கு முன் வாயே திறக்க மாட்டார்கள்.
- 1
-
தரையில் விழுந்து தலையை மோதிக்கொண்ட கில்லரி கிளின்ரன் வேலைக்கு திரும்ப, நகைச்சுவையாக, வேண்டு மென்று தலைக்கவசம் பரிசளிக்கப்பட்டார். சிரித்துகொண்டு பெற்றுக்கொண்டாராம்
-
மாற்றுக்கருத்துகளுக்கு பஞ்சமில்லை?
-
WISH YOU A HAPPY NEW YEAR!
WISH YOU A HAPPY NEW YEAR!
WISH YOU A HAPPY NEW YEAR!
இதுவும் கருத்து படத்திலா?
(இது வரையும் தொடந்து கருத்துப்படங்களை தரும் தமிழரசுக்கு நன்றி )
-
குற்றவாளி சொன்னதால் கடற்கரையை தோண்டிய போலீசார் :
குண்டுமணி தங்கம் கூட கிடைக்காததால் ஏமாற்றம்
அவங்கள் ஒருத்தரும் ஒன்றும் சொல்ல போகவில்லை. இது D.B.S. ஜெயராஜ் பேட்டி எடுத்து அரசுக்கு கொடுக்கும் தகவல்கள் போன்றதொரு நிகழ்வு. அவற்றை வைத்து புதையல் கிண்டும்போது அவை சில சமையங்களில் பேட்டி கொடுத்த்தவருக்கு அடிவாங்கி கொடுத்துவிடுகிறது. அரசு ஏமாந்தாலும், என்ன செய்ய. ஜெயராஜ்யுக்கு, பணம் கிடைத்துவிடுகிறதே.
- 1
-
அசீம் திரிவேதி அடிக்கடி இந்திய அரசியல் கோமாளிகளை இப்படி சுட்டுவிடுகிறார். அதனால்தான் அவரை உள்ளே போட முயல்கிறார்கள்.
-
அருமை!
சேவேசையே பதற வைத்த மேர்வின்?
-
முன்னர் மன்மோகன் சிங்கையும் ஜெயலலிதாவயும் படம் போட்டவர்களுக்கு இவ்வளவு இந்தி எதிர்ப்பு மி சாதாரணமானது. ஆனாலும் இதை முடிந்தவர்கள் முன்னர் மாதிரியே முகநூலில் போட்டு வையுங்கள். சோனியவுக்கு இதுவும் சுவையாகப்படலாம்.
-
UNனின் அறிக்கை, அங்கத்தவ நாடுகள் தாம் விரும்பியவற்றையே அறிக்கையாக கேட்டுப்பெற்றன என்றும், இணைத்தலைமை நாடுகள் தன்னை ஒதுக்கிவைத்துவிட்டு போரை முன் கொண்டு சென்றன என்றும் சொல்லியிருக்கு. அறிக்கையில், ஐ.நா, தன்னை அங்கத்துவ நாடுகள் முடக்கிவிட்டன என்று குறை கூறினால், அதை செய்திருக்கக்கூடிய நாடுகள், போரில் ஈடுபட்ட சீனா, ரூசிய, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளாக மட்டுமே இருக்கலாம். நோர்வே, யப்பான், பாகிஸ்த்தான், ஈரான், ஸ்ரேல் போன்ற நாடுகளாக இருக்க முடியாது. அதாவது இணை தலைமையில் இருந்துகொண்டு இதை செய்திருக்க கூடிய ஒரு நாடு அமெரிக்கா மட்டுமே. அறிக்கையின் எல்லா இடங்களும் பெயரைச் சொல்வதை தவிர்த்திருப்பதால், இதிலும் அறிக்கை தான் குறை கூறும் அங்கத்துவ நாடுகளின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால், மேற்காட்டியப,டி அறிக்கை அமெரிக்காவைத்தான் சுட்டுகிறது போலப்படுகிறது. அது சரியாயின், அந்த நேரம் இலங்கை சம்பந்தமாக அமெரிக்காவின் எல்லா வகை கொள்கைகளையும் இயக்கிய ரொபேட் பிளெக், தான் முன் வந்து, ஐ.நா. அறிக்கை பற்றி கருத்து சொல்லவில்லை. ஆனல் கொம்ஸின் பெயர் தவிர்க்கப்பட்டிருந்தாலும் கொழுப்பின் ஐ.நா தலமையதிகாரியாகக் கடமை ஆற்றிய கொம்ஸ் தனது பாகத்தை மறுக்கும் விதமாக எதிர்ப்பறிக்கை விட்டுவிட்டார்.
-
பத்தாயிரம் மக்கள் கூடினால் இப்படி இருக்கும். முருகதாசன் திடலில் 15,000 என்பது அவர்களின் சுயவிளம்பரம் போலத்தான் தெரிகிறது.
-
தம்மினம் வாழ என்று இன்னுயிரை ஈய்ந்து,
நாமினிது வாழ்வதால் மட்டும் நம்மினம் வாழாதென்ற
செம்மதி சொல்லினை நமக்குபதேசித்த மழலைகள்
உம்பாதையை நாம் பற்றி உம்கனவிற்குழைத்து
எம்மின விடுதலையை வரவேற்கச்சபதமெடுத்தோமின்னாள்.
விடுதலைக்குழைத்த வீரர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்
-
-
காலம் கனிந்து வரும் கார்த்திகையை மூட வந்த கார் மேகங்கள் விலகும்.
பல மதங்கள் கொண்டாடும் இந்த ஒளிமாதம் முழுவதும் ஒரு நாள் ஒரு தனி திருநாளாக மலரும்.
அன்று வரை ஒரே நோக்காக, ஒரே இனமாக போராடி தமிழீழம் அமைப்போம்.
-
வெளிவரும் உற்பத்தி பொருள்களில் அதிகம் சுவராசியம் இல்லை. இதை இலங்கை மாதிரி சில பின்னல் போகும் நாடுகளும் செய்கின்றனதான். ஆனால் வெளிவரும் கழிவு பொருள்கள் நிச்சயமாக சுவாரசியமானதாக இருக்கிறது. இதுதான் மோடய அரசியலின் முடிவு.
-
விமல் ஐ.நா அறிக்கைக்காக ஓடினார் என்று சொல்வதிலும் பார்க்க சிராணி போய் முடியட்டும் என்று பொறுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் கருத்து, பொன்சேக்காவை காப்பாறியது போன்று சிராணியையும் யாராவது காப்பாற்றிவிடலாம் என்று விமல் வரைக்கும் சந்தேகம் போகிறது. ஆனால் சிராணி இதில் பதவி காப்பாற்றபட்டாரானல், இது அவ்வளவு இலகுவில் போய்முடியாது. மலக்கா சில்வா அடித்ததாக கூறிய இராணுவ அதிகாரி சிறை போகிறார். அடியை வங்கிய பின்னர் மூச்சு கட்டாமல் வெளியே வர மறுத்த மஞ்சுள திலகரத்தினாவின் பாலியல் வன்புணர்வு முயற்சியும், அதில் தோல்வி அடைந்தால் தன்னை ஏமாற்றிய பெண்ணை கூடாத இடத்திற்கு சட்டத்திற்கு எதிராக மாற்றிய வழக்கும் மகிந்தாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நீதி மன்றம் போனால் மஞ்சுளா திலகரத்தினா 20-25 வருடம் வாங்கலாம்.
எது நடந்தாலும் பிரதீப் காரிய வாசம் இனி சூரிய வெளிச்சம் காண முடியாது. எனவே சிராணி இரண்டு விடயங்கள் உடனே செய்ய வேண்டும். 1.) தானாக விமலை அழைத்து 13ம் திருத்தத்தை கோட்டுக்கு எடுத்து 13ம் திருத்தத்தை சட்ட பூர்வம் இல்லாததாக்குவது. 2.) அதை செய்து முடித்த கையோடு மகிந்தாவிடம் சென்று மன்னிப்பு கேட்டு, பதவியை திரும்ப தரும்படி கேட்பது. பதவி விலக முயல்வது நல்லதல்ல. இது யான்ஸ் மாதிரி நாட்டை விட்டு ஓடவைக்கும். அது சொத்து பத்து குறந்த ஜான்ஸ் செய்ய முடியும். சிராணிக்கு முடியாது.
இந்த விசையத்தில் விமல் தோற்கவில்லை. காடூன் சரியாகப்படவில்லை.
-
1500 ரூபா தான் பொதுமகனுக்கு சம்பள உயர்வு. இது விலைவாசி சுட்டெண்ணுக்கு கீழே என்றது JVP. ஆனால் மகிந்த குடும்ப செலவுக்கு 750 கோடி கொடுக்கபட்டிருப்பதாக கணக்கு கொடுக்கிறது. பட்ஜெட்டில் 75% க்கு மேல், அண்ணன் தம்பி, மகன் கைகளுக்குள்ளல்த்தான் போகிறது. குரங்கிடம் அப்பம் பங்கிட கொடுத்த சிங்களவரும், தமிழரும், முஸ்லீம்களும் மேசையின் கீழ் இருந்து மகிந்தரின் வாயைப் பார்க்கட்டும். மகிந்தர் தனக்கு தான் Serve பண்ணிக்கொள்கிறார்.
-
இனப்படி(உயிரியல்) அவர்கள் ஆரிய வெள்ளையர். ஆனால் அமெரிக்கா, கனடாவில் வெள்ளையர் எனப்படுவோர் பிருத்தானியர், யேர்மனியர், பிரெஞ்சுக்காரர் இத்தாலியர், நெதர்லாந்த்தவர் மட்டுமே. கிரேக்கரும் போத்துகல் நாடுகளும் இரண்டாம் தரங்கள். யூஸ் மூன்றாம் தரம். தென் அமெரிக்கர் நாலம் தரம். கருப்பர் ஐந்தாம் தரம். சீனர், தென் கிழக்காசியர் ஆறம் தரம்.
பிரச்சனையான இனம் கிழக்கு ஐரோப்பியர். இவர்களை இடத்துக்கிடம் வேறு இடங்களில் போடுவார்கள். ஆனால் கிழக்கு ஐரோப்பிய யூதர் யூதருக்கு கீழே. இதில் பகிடி என்ன வென்றால் கிந்தியர் தமது சாப்பாடு கடைகளில் தென் நாட்டவர்களுக்கு சாப்பாடு போட விரும்ப மாட்டார்கள். ஈழத்வர் தென் நாட்டார்.
தமிழீழத்தமிழரோ தம்மிடம் தாயகத்து சாதியையையும் கொண்டு வந்திருக்கிறார்களாம்.
வாழ்க உலக இன சாதிப்பாகு பாடு.
கருத்து படங்கள்
in நிகழ்வும் அகழ்வும்
Posted
மார்சுக்கு பிறகு அரசியல் யாப்பில் திருத்தம் செய்யும் போது ஆமிக்கு தெற்கிலும் தேவை வரும். ரணிலோ, JVP யோ இனி வாய் திறக்க போவதில்லை. இதை எக்கொனோமிஸ்ட் அவதானித்து எழுதிவிட்டது. ஆனல் சில புத்த பிக்குகள்
போராடவருவார்கள். அதற்கு முதல் வரிசைப் பாதுகாப்பாக கக்கீம் என்ற எலும்புத்துண்டை அரசு விட்டெறியும். அவர்கள் கக்கீமை எளிதில் மென்றுவிட்டு மேலும் உள்ளே வந்தால் ஆமி தேவைப்படும்.