ஆகா...
நல்ல சொல்லாடல்... எங்கே பிடித்தீர்கள்?
அப்படி சொல்ல முடியாது அண்ணை.
இங்கே நமது (தமிழர்) வீடுகளுக்கு வரும் இந்தியர்கள் எமது கறிகளின் எண்ணிக்கையில் அதிர்ந்து விடுவார்கள்.
வாழைப் பொத்தி வறை, கத்தரிக்காய்ப் பால்கறி, கருவாட்டு, உருளை கிழங்குக் குழம்பு, முருங்கைக் கால் பால் கறி, மாசி சாம்பல்..... இன்னும் எத்தனை.
பாடகர் கரிகரன் சொன்னார்... கொழும்பில், யாழ் தமிழர் விருந்துபசாரத்தில் மேசையில் 25 மரக்கறி வகைகள் பார்த்து வியந்ததாக...
அவர்கள் எல்லா மரக்கறிகளும் சேர்த்த சாம்பார்.... ஒரு பச்சடி.... ஒரு கூட்டு... ஒரு பொரியல்... பப்படம்... அதோட இரண்டு பூரி...
காரணம் 500 வருட ஐரோப்பியர் செல்வாக்கு எங்களது. ( உதில பெருமை இல்லை... உணவு விடயத்தில் மட்டும்... போர்த்துக்கேயர் மிளகாய் உட்பட 130 மரக்கறி வகைகளை அறிமுகம் செய்தார்கள். தக்காளி, உருளை, பூசணி என்ற பறங்கிக் காய், பீட்ரூட் (தமிழ் சொல்லே இல்லை), பீன்ஸ் ... இன்னும் பல). ரோல்ஸ், கட்லட், மாலு பண், லாம்ப்ரைஸ், பிஷ் பிக்கள்.... வாட்ட்லாப்பம்....
அவர்களது வெறும் 160 வருட உணவில் நாடடமில்லா பிரிட்டிஷ் ஆட்சி.