-
Posts
1454 -
Joined
-
Last visited
-
Days Won
19
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by கவிதை
-
வலிகளைத் தாண்டி மீண்டு வரும்போது... அசாத்தியமான ஒரு தன்னம்பிகையும் மனோபலமும் கிடைப்பது சாத்தியமாகிறது.
-
சில நேரங்களில் வாழ்வதும் வீணோ எனத் தோன்றுகின்றது! எதையுமே சாதிக்காத வாழ்க்கை... சமாதியானாலும் நல்லதுதான்!
-
பொங்கிய தமிழ் அடங்கமுன், மடிந்தவர் மூச்சுக்காற்று நம்தேசக்காற்றிலிருந்து கரையமுன், ஏங்கித் தவித்து உலைப்பானையாய் கொதிக்கும் நெஞ்சங்களுக்காக கொஞ்சமேனும் எம் மனதிரங்கி... உலைப் பானையை அவர்கள் வீட்டிலும் கொஞ்சம் பொங்கவைப்போமே!!!
-
என் இனத்தை நினைத்து முன்பெல்லாம் பெருமைப்படுவேன்...! இப்பொழுது, அதன் நிலையை நினைத்து இரக்கப்படத்தான் முடிகிறது...!! ~ திட்டம்போட்டு ஏமாற்றுகிற கூட்டத்திடம் இஷ்டப்பட்டு ஏமாறுதே ~
-
எத்தனையோ பேர் தம்முடைய வாழ்க்கையை தியாகம்செய்தே, போராடியிருக்கிறார்கள்... உங்களுக்காக! உங்களுடைய வாழ்க்கைக்காக போராட... இப்பொழுதும் முடியாதா உங்களால்???
-
நான் நிம்மதியாய் உறங்கவென வந்த வேப்பமர நிழலும் என்னைத் துரத்துகின்றது. வேப்பங்கிளைத் தேன்கூடும் கல்லடிபடுகின்றது. இனிமேல் எங்குபோய் உறங்குவேன்?
-
தன் தவறினை உணர்ந்தவரை "மன்னித்தல்" என்பதனைவிட அவருக்கான அதியுச்ச தண்டனை வேறெதுவும் இருக்காது. மன்னிப்பதாலோ மன்னிப்பு கேட்பதாலோ நாம் தரன் குறைந்துவிடப்போவதில்லை.
-
தன் தவறினை உணர்ந்தவரை "மன்னித்தல்" என்பதனைவிட அவருக்கான அதியுச்ச தண்டனை வேறெதுவும் இருக்காது. மன்னிப்பதாலோ மன்னிப்பு கேட்பதாலோ நாம் தரம் குறைந்துவிடப்போவதில்லை.
-
ஹாட்லி அன்னையின் கல்வி நிழலில் அவதரித்து தமிழினத்துக்கென்றொரு வான்படையை உலக வரலாற்றில் முதன்முதலாய் உருவாக்கிய கேணல்.சங்கரின் நினைவுநாளும் இன்றுதான்! ஹாட்லியின் மைந்தர்களாய் பெருமைப்படுகின்றோம்!!! தியாக சீலன் திலீபன் அண்ணாவுக்கும் கேணல். சங்கர் அண்ணாவுக்கும் எம் வீரவணக்கங்கள்!!!
-
தற்காலிக வலிகளின் பின் நிரந்தர நிம்மதி, தற்காலிக சந்தோசங்களின் பின் நிரந்தர வலிகள் என்ற இரண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது வாழ்க்கைத் தத்துவம்! எது வேண்டுமென தேர்வு செய்வது, எம் எண்ணங்களின் கைகளில்...! நிம்மதி உங்கள் சொய்ஸ்!
-
ஒரு நாளின் உன்னதத்தினை உணர்த்திய .... யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றிகள்! தங்களின் அதியுச்ச மரியாதைகளின் முன்னால்....... வேறெந்த நிகழ்வுகளும் உன்னதமானதாகத் தெரியவில்லை!
-
ஒரு நாற்பது பேருக்குள்ள் ஒற்றுமையா நல்லபடி நடக்கத்தெரியாத நாங்கள்... நாலு நாடு பார்க்க... எதிரி முகம் வேர்க்க... ஐக்கியமான நாலுபேர் முன்னாடி, எங்கள் கொடி நாட்டப் போறமா?! ஒற்றுமை என்பது முதலில் எமக்குள் தேவை! உன் சுயநலன்களை மூட்டைகட்டி மூலையில் வை முதலில்!
-
நியாயம் என்பது இன்னும் கேள்விக்குறியாக தொடர்கின்றது! தவறினை சுட்டிக்காட்டுவது கூட தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? அணைக்கப்பட்ட திரிகளில் சுடர்விட்டெரிந்து கரியாகி சாம்பலாவது நியாயம் என்பதுதான்!!!!!
-
"நியாயம்" என்பது இன்னும் கேள்விக்குறியாக தொடர்கின்றது! தவறினை சுட்டிக்காட்டுவது கூட தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? அணைக்கப்பட்ட திரிகளில் சுடர்விட்டெரிந்து கரியாகி சாம்பலாவது "நியாயம்" என்பதும்தான்!!!!!
-
மன்னிப்புக் கேட்பதனாலோ அல்லது மன்னிப்புக் கொடுப்பதனாலோ...நாம் தாழ்ந்துவிடப் போவதில்லை. ஏனெனில், நற்பண்பின் உச்சங்கள் அவை!
-
ஒரேயொரு நிமிடம் நீ 'உண்மையான மனிதனாய்' வாழ்ந்து பார் மனிதா...! அது உனக்கு எவ்வளவு கஷ்டத்தினைக் கொடுத்திருந்தாலும்...அது உனக்கு பிடித்திருக்கும்!!