Jump to content

கவிதை

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1454
  • Joined

  • Last visited

  • Days Won

    19

Posts posted by கவிதை

  1. எமது போராட்டம் தொடர்பான கொள்கை,கருத்து ரீதியாக கவிஞருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்... நான் மதிக்கும் ஒரு மனிதர்.

    அவர் ஒரு தமிழர் என்பதனால்தான் சந்தேகத்தின் அடிப்படையில் சிங்களத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    அதுவும் குறிப்பாக இந்த நவம்பர் மாதப்பகுதியில் அவர் இலங்கை சென்றது... சிங்களத்தின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.

     

    எங்களின் சக கள உறவு, ஒரு நல்ல படைப்பாளி, கவிஞர் விடுதலை பெற்று வரவேண்டும்.

    அவருக்கு எதுவும் ஆகாமல் விடுதலையாகி வெளிவரும் வல்லமை இருக்கென நம்புகின்றேன்.

  2. AFAPVCAWHSRHKCAV7KS0GCAUBVSE8CA2S5FOBCA5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா...!

    தங்களின் நல் எண்ணங்கள் இலட்சியங்கள் அனைத்தும் ஈடேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

    இறைவன் அருள் என்றும் துணையிருக்கட்டும்! வாழ்க வளர்க! :)

  3. தியாகங்கள் என்றைக்கும் வீண்போவதில்லை...! திலீபனின் தியாகம் விலைமதிப்பற்றது, காலத்தால் அழியாதது!!

    அவர்களின் தியாகங்களை மதித்து அவர்கள் ஆசைப்பட்டதை எம் மக்கள் ஒற்றுமையோடு எப்பொழுது செய்கின்றார்களோ... அன்றைக்குத்தான் எம் விடுதலை சாத்தியப்படும்!

     

     

  4. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புறவுகளுக்கும் மிக்க நன்றி.

    அத்துடன் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய.... அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். :)

  5. ஒருவர் எப்படிப்பட்ட கருத்தாளராக இருந்தாலும்...  சக கருத்தாளராக இருந்த அவர் இல்லாத இடத்தில் எல்லாவற்றையும் மறந்து அவரை நினைவுகூரும் உறவுகளின் நற்பண்பு பாராட்டப்படவேண்டிய விடயம்.

    அவரின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்வதில் ஆத்ம திருப்தியடைகின்றேன்.

    • Like 1
  6. வாழ்க்கையை தொலைத்துவிட்டுத் தேடுவதே பலரது வாழ்க்கையாகப் போய்விட்டது.

    வாழ்க்கை வாழென அழைக்கையில் வாழாமல்... காலங்கடந்து அதனை வாழ நினைக்கையில்

    அது எங்கோ தொலைந்து போயிருக்கும். அதேபோலத்தான்... அன்பையும் காட்டவும் பெறவும் தவறிவிடுகின்றோம்!

     

    வாழ்க்கை வாழ்வதற்கே... வீணாக்க இல்லை!

     

    அருமையான ஒரு விடயத்தை விளக்கிய குட்டிக் கதைக்கு மிக்க நன்றி :)

  7. இப்பிடியான நிலை எந்த ஒரு தம்பதியினருக்கும் வரக்கூடாது.

    கதையைப் படிக்கும்போது அதனாலான வலியை உணரக்கூடியதாய்   இருந்தது.
     

    இதேபோல ஒரு சம்பவம் எனது நண்பரின் குடும்பத்திலும் நடந்தது.

    ஆனால் அவர்கள் அந்தக் குழந்தையை பெற்று எடுத்து  காலப்போக்கில்  அந்தக் குழந்தையை குணப்படுத்தியும் விட்டார்கள். இப்பொழுது அந்தக் குழந்தை இந்தியாவில் மிக நன்றாக வளர்ந்து வருகிறது.


     

    நல்லதொரு  கதைக்கு   மிக்க நன்றி கோ. :)


     

                      

  8. என்னபா எலே கவிதே

    அலை அக்கா சொல்லி இருகாபா தெரியாடி கூகிலுகு போய் தேடபா என்டு crying.gif

    எவனோ ஒருவனுக்கு வாழ்த்துகள்

    (1/1)

    leomohan:

    எவனோ ஒருவன், வாழ்த்துகள் இரண்டு திரைப்படங்கள்.

    மாதவன் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

    முதல் 15 நிமிடங்களிலேயே ஒரு வித்தயாசத்தை உணர்ந்தேன். கூர்ந்து கவனித்ததில் சகஜமாக நாம் வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருந்தார்கள்.

    hi, Good morning, thanks, building, gift, birthday, car, bus இன்னும் பல வார்த்தைகளை தமிழில் பேசியிருந்தார்கள்.

    எவனோ ஒருவன் ஒரு அழுத்தமான திரைப்படம். சராசரியான ஒரு மனிதன் நேர்மையாக வாழ முயற்சிக்கிறான், ஆனால் அவனால் அவனை சுற்றி நடக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் கையில் ஆயுசம் எடுக்கிறான். திரைக்கதையை இன்னும் நன்றாக அமைத்திருக்கலாம்.

    வாழ்த்துகள் ஒரு எளிய காதல் கதை. பெற்றோர்கள் விருப்பத்துடன் நடக்கும் திருமணம் சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.

    படத்தின் வணிக ரீதியான வெற்றியை பற்றி சொல்ல முடியாது-முடியவில்லை. ஆனால் சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி நடந்திருக்கிறது.

    அது இன்றைய தமிழ் படங்களில் வேற்று மொழிகளின் ஆளுகை தகர்த்தெரிந்திருக்கிறது. பழங்கால படங்களை போல முழுவதும் தமிழில் இருந்தாலும் கதையின் நடையோ நாயக நாயகியின் வசனங்களோ பாதிப்பில்லாமல் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

    இளைஞர்களிடம் எப்படி வரவேற்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

    இயக்குனர் சீமானின் முயற்சி என்றே நினைக்கிறேன். இதைப் பற்றி திரை விமர்சனங்களிலும் வேறு சஞ்சிகைகளிலும் செய்திகள் வந்துள்ளவா?

    என்ன இருந்தாலும் முழு தமிழ் திரைப்படம் என்னும் கனவில் முதல் படி எடுத்த சீமான் எனும் அந்த எவனோ ஒருவனுக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துகள்.

    பிகு - பலூன் என்று ஒரோ ஒரு ஆங்கில வார்த்தை மட்டுமே வாழ்த்துகள் படத்தில் கேட்க முடிந்தது.

    http://www.etheni.co...opic=480.0;wap2

    pointing-and-laughing.gif

    எங்கேயோ எல்லாம் போய்..... கடைசியில் தேனீயில தேடி கண்டுபிடித்து விட்டீர்கள்...! :rolleyes:வேலை முடிந்தது என்று அவசரப்படாதீர்கள். :lol: நான் "பலூன்" என்ற வார்த்தையைக் கவனிக்கவில்லை. :rolleyes:

    அதற்காக நன்றிகளும் பாராட்டுக்களும். :)

    நான் கவனித்தது இன்னொரு ஆங்கில வார்த்தையை.

    அதைக் கண்டிபிடித்துச் சொல்ல முடியுமா? மீண்டும் கொஞ்சம் மினக்கெட்டுத் தேடுங்கள்... அல்லது வாழ்த்துக்கள் படத்தினை வைத்தகண் வாங்காமல் ஒரு நாலைஞ்சு தடவை பாருங்கள். குண்டனால் முடியாதா என்ன? :lol:

    சிறி யவனாக இருந்தாலும் கில்லாடி ஆச்சே!

    "நவீன தமிழின் தந்தை" என்ற பட்டத்தினை கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள் கவனம் குண்டா! :o:lol:

    முன்கூட்டிய வாழ்த்துக்கள்!!! :)

  9. belly-laugh.gif

    யாரபா பகலவன்??????????????????????

    சொல்லுன்கண்ணா

    விஜாய் சார்

    கும்புடுறன்ணா :rolleyes:

    "பகலவன்" என்பது நடிகர் விஜய் நடிக்க இயக்குநர் சீமான் இயக்கவிருந்த திரைப்படத்தின் பெயர்.

    பகலவன் என்பதற்கு வேற்பல அர்த்தம் இருந்தாலும் நான் இதை இங்கு சொன்னதற்குரிய அர்த்தம் வேறு! :rolleyes::icon_idea:

    சரி குண்டன்... உங்களுக்கு ஒரு சவால்... :lol:

    இயக்குநர் சீமான் அவர்கள் "வாழ்த்துக்கள்" என்று ஒரு திரைப்படத்தினை இயக்கியிருந்தார். அதில் மாதவனும் பாவனாவும் நடித்திருந்தார்கள்.

    அந்த திரைப்படத்தில் தமிழ் தவிர்த்து.... ஆங்கில வார்த்தைகள் எதனையும் திரைக்கதை வசனத்தில் பாவிக்கவில்லையாம் என்றார்கள்! ஆனால்.... ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒரு ஆங்கில வார்த்தை வரும்! அது என்ன என்று கண்டுபிடித்து சொல்லமுடியுமா? :lol::rolleyes:

    (யாருட்டப் போய் என்ன கேள்வி கேட்டுப்புட்டாய் என்று என்னை யாரும் கேட்டுத் திட்டப் போறாங்களோ தெரியலையே!??!!! ) :lol: :lol: :lol:

  10. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாத்தியார்!

    என்றென்றும் தாங்களும் எம் தமிழும் மேன்மேலும் மேன்மையடைய மனதார வாழ்த்துகின்றோம்!

    வாழ்க! வளர்க!! :)

  11. நன்றி கவிதை காலத்திற்கு ஏற்ற மாதிரி எழுதி உள்ளீர்கள் ஆனால் மக்கள் புரட்சி என்பது எம் மக்களை பொறுத்த வரை சாத்தியமில்லை என்பது என் கருத்து

    இது பகிரப்பட்ட ஓர் ஆக்கம். ஏற்கனவே யாழிலும் 2009இல் வந்திருந்தது! இதனை எழுதியிருந்தவர் பருத்தியன். ஏனோ தெரியவில்லை தற்பொழுது அவர் எழுதுவதில்லை! :unsure:

  12. கவிதை சரியான சின்ன எழுத்தாக இருக்கிறது இதை எப்படி வாசிக்கிறது?...கண்ணாடி போட்டாலும் வாசிக்கேலாது

    சீரமைத்துள்ளேன்!இப்பொழுது நன்றாக வாசிக்கக் கூடியதாக இருக்கும் என நம்புகின்றேன்! :)

  13. தியாகத்தின் சிகரம் திலீபனைப் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆக்கம் (பருத்தியன்)! அதை தியாகசீலன் திலீபனின் நினைவுநாளில் இங்கு இணைத்து பகிர்கின்றேன்!

    இருபத்தியிரண்டு ஆண்டுகள் என்பது "இருபத்திநான்கு" என மாற்றப்பட்டுள்ளது.(நீல நிறத்தில் உள்ளவை) வேறெதுவும் மாற்றமில்லை.
    நன்றி பருத்தியன்




    தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்திநான்கு வருடங்களுக்கு முன்பு ...அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. "இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும்.
     

    ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச்செம்மல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது.
    அகிம்சைக்கே அடையாளமென கருதப்படும் காந்திஜி அவர்களின் தேசமான இந்தியாவே தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தினை காலடியில் போட்டுமிதித்தது. ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த திலீபனின் உடல்... வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு, நிலைகுலைந்து நினைவிழந்துபோய் அந்த உன்னத ஆன்மா அவன் உடலைவிட்டு பிரிந்த போதும்... மெளனமாய் இருந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் "காந்தியம்" என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தினை வெளிக்காட்டியது காந்திதேசம். அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஈழத்தின் மேல் இந்தியாவிற்கு அப்படி என்னதான் கோபம்??? காரணம் கேட்டால், இராஜீவ்காந்தி படுகொலை... இந்தியத் தேசியம்... பிராந்திய நலன்... என காரணமில்லாத காரணங்களை அடுக்குவார்கள் இந்த காந்தியவாதிகள். இந்த போலிக் காந்தியவாதிகளுக்குத்தான் புரியுமா எம் வலிகளும் வேதனைகளும்??? இவர்களுக்குத் தெரியுமா நம் இழப்புக்களும் அவலங்களும்???

    தமிழீழம் என்ற கோரிக்கையையும் அதற்கான தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் தொடர்வதையும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு எப்போதுமே ஆதரிக்கப்போவதில்லை என்ற கசப்பான உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். இது உண்மையென்பதைத்தான் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் விடுத்த அறிக்கையும் தெளிவுபடுத்துகின்றது. அதனைப் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்தும் இந்தியா மனம்மாறும் என நம்பியிருப்போமானால், அன்று திலீபனை நாம் இழந்ததைப்போல் எதிர்காலத்தில் எம் இலட்சியங்களையும், நம் தாய் மண்ணையும் இழந்து நிரந்தரமான அகதிகளாகவே வாழ வேண்டிய இழிநிலைக்கு ஆளாவோம்.

    இந்தியாவின் ஆதரவு தமிழர்களிற்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் தற்போதைக்கு இல்லையென்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழர்கள் தமக்கு ஆதரவளிக்கக் கூடிய பிறநாடுகளின் ஆதரவினைத் திரட்டவேண்டியது அவசியமாகிறது. இந்தவகையில், இவ்வளவு காலமாக தமிழர் விடயத்தில் பாராமுகமாக இருந்துவந்த அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமிழர்களுக்கு சார்பாக ஆதரவளிக்கக்கூடியதாக மாறிவரும் சர்வதேச நிலைமாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். இதனைச் சாதகமாக கையாளுவதன்மூலம், தமிழர்கள் தமது தாயக விடுதலைக்கான போராட்டப் படிமுறைகளை வெற்றியை நோக்கி முன்னகர்த்தக்கூடிய சாத்தியம் வலுப்பெறும்.

    சிங்கள அரசோடு கூட்டுச்சேர்ந்துநிற்கும் இந்தியா,சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளைத் தவிர பெரும்பாலான சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் இலங்கையரசிற்கு எதிராக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு சாதகமான புறச்சூழ்நிலை உருவாகுவதற்கு, புலம்பெயர் தமிழர்கள் கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்களும், மக்களின் அவலங்கள் சர்வதேசத்தின்முன் வெளிக்கொணரப்பட்டமையுமே பெரிதும் உதவின. அத்துடன் சிங்கள அரசின் எதேச்சைத்தனமான அதிகாரப்போக்கும், வல்லரசுத் தோரணையிலான அறிக்கைகளும் கூட சர்வதேச நாடுகளுக்கு இலங்கையரசின் மீது சினத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.

    புலம்பெயர் தேசத்தில் தமிழர்களால் தொடரப்பட்ட போராட்டங்கள் சர்வதேச மட்டத்தில் பல விடயங்களை சாதித்திருக்கின்றன என்பது தற்பொழுது மெல்ல மெல்ல சாதகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாடுகளிலிருந்து தெரிகின்றது. ஈழத்தமிழர் விடயத்தில் உலகில் செல்வாக்கு மிக்க நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தற்பொழுது கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகள் சிங்கள அரசிற்கு பெரும் அச்சத்தினைக் கொடுத்திருக்கின்றது. ஆனாலும் இந்தியாவும் சீனாவும் தனக்கு பக்கத்துணையாக இருக்கின்றது என்ற அசட்டுத் தைரியத்தில் சிங்களம் நிம்மதியடைகின்றது என்பதுவே உண்மை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பனிப்போர் என்றைக்கு உச்சநிலையை அடைகின்றதோ; அன்றைக்கு இலங்கை இவற்றின் பூரண ஆதரவினை இழக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகும். இவைதான் தனது பக்கபலம் என்று நினைத்து திமிருடன் ஏனைய உலகநாடுகளை பகைத்துக்கொள்ளும் சிங்களம் இவற்றின் ஆதரவையும் இழந்து அநாதையாய் அந்தரிக்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    ஈழவிடுதலைப் போராட்டமானது தமிழ்மக்களின் கைகளிலேயே கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை பிரதானமாக கொண்டு நடத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழ் மக்களையே சார்ந்திருக்கின்றது. மூன்று தசாப்த காலமாக புலிகள் தமது ஆயுதரீதியிலான போராட்டத்தினை முன்னெடுத்த நிலையில், அவர்கள் இராணுவ வெற்றிகளைவிட தமிழர்கள் மத்தியில் விடுதலை தொடர்பாக புரட்சிகரமான எழுச்சியையே மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எங்களின் விடுதலைக்காக போராடியவர்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஆகக்குறைந்த எதிர்பார்ப்பைக்கூட நிறைவேற்றாதவர்களாக நாங்கள் இருந்தோம். அன்று திலீபன் மக்களிடம் வேண்டிக்கொண்டதும் அதைத்தான். "மக்கள் புரட்சி" என்ற நிலையை அன்றே நாம் அடைந்திருப்போமானால், இன்று நாம் விடுதலை பெற்று பல வருடங்கள் ஆகியிருந்திருக்கும். அப்படியில்லாவிட்டாலும்...ஆகக்குறைந்தது, தமிழினத்தின் அழிவையாவது தடுத்திருந்திருக்கலாம்.

    நடந்தவை நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் நடக்கப்போவதைப் பற்றி சிந்திப்போம். எமது விடுதலையென்பது எம்மிலேயே தங்கியுள்ளது. இவ்வளவுகாலமாய் அதை புலிகள் பெற்றுத்தருவார்கள் என்று சொல்லிச்சொல்லியே அனைத்துப் பொறுப்பையுமே அவர்களின் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். பணத்தினை அள்ளி அள்ளி கொடுத்த நாங்கள் அவர்கள் எதிர்பார்த்த பக்கபலத்தினைக் கொடுக்கத் தவறிவிட்டோம். புலிகளை சர்வதேசம் தடை செய்தபோது, அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற வகையில் அமைதியாக விலகியிருந்தோம். புலிகளையும் தமிழ்மக்களையும் சர்வதேசம் வேறுபடுத்திப் பார்த்ததற்கும் அவர்களது போராட்டத்தினை பயங்கரவாதம் என முத்திரை குத்தியதற்கும் நாமே வழியமைத்தோம். அன்று நாங்கள் இழைத்த இந்தத் தவறுதான், இன்றைய அத்தனை அவலங்களுக்கும் காரணம். எங்கெல்லாம் மக்கள் புரட்சி ஏற்படவேண்டிய தேவை இருந்ததோ, அப்போதெல்லாம் நாம் அமைதியாக இருந்ததன் விளைவை வன்னி அவலங்களாய் அனுபவித்தோம்.

    இனிவரும் காலங்களிலும் இப்படியான தவறுகளை இழைக்கப் போகின்றோமா??? நாங்கள் இதுவரை காலமும் இழைத்த தவறுகள் தான் எம்மை இந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இனிவரும் காலங்களில்... நம் விடுதலைக்காய் நாமே போராடுவோம்.

    "மக்கள் "புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும். "எமக்கு விடுதலை வேண்டும், அதை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை" என்ற புரட்சிகரமான எண்ணத்தினை நாம் ஒவ்வொருவரும் நம் மனதில் விதைத்துக்கொள்ள வேண்டும். அதுவே மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற தியாகசீலனின் வேண்டுதலை சிரமேற்கொண்டு நம் தேசத்தின் விடுதலைக்காக நாம் போராடுவோம். நமது புரட்சிதான் நாளை நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தரும்.

    "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக சீலன் திலீபன் சுமந்த விடுதலைத் தாகத்தினை நிறைவேற்றுவோம்! வென்று நம் தேசத்தில் கொடியேற்றுவோம்!
    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
     

    - பருத்தியன் -
    http://paruththiyan....0&max-results=6

    post-8737-0-92578500-1316978614_thumb.jp

    • Like 2
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.