Jump to content

NERDO

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7
  • Joined

  • Last visited

About NERDO

  • Birthday 04/04/1980

Contact Methods

  • Website URL
    http://tamil.nerdolanka.org/

Profile Information

  • Gender
    Male
  • Location
    SRILANKA
  • Interests
    நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! என்றது சங்க இலக்கியம்

Recent Profile Visitors

846 profile views

NERDO's Achievements

Rookie

Rookie (2/14)

  • Conversation Starter
  • First Post
  • Week One Done
  • One Month Later
  • One Year In

Recent Badges

0

Reputation

About Me

நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! என்றது சங்க இலக்கியம். ஆம்! எங்கள் மண்ணிலே சிதறிக் கிடக்கும் சிறார்களை எல்லாம் பொறுக்கி எடுத்துத் துலக்கி ஒளிர வைக்க உதயமாகி இருக்கிறது அன்பு இல்லம்!

dsc00861.jpg

அன்புக்கு அரசியல் கிடையாது! அன்புக்கு மொழி கிடையாது! அதற்குச் சாதியும் கிடையாது! அன்பு எப்போதும் உருகிய இரும்பு போன்றது! அதிலே மாசுகள் படிவதில்லை! அது இறுகிவிட்டால் அதன் உறுதியையும் யாரும் எதுவும் செய்துவிட முடியாது!

அந்த அன்பின் பேராலே அமைந்து எங்கள் திக்கற்ற சிறுவர்களுக்கு திசைகாட்ட முற்படும் அனைத்து உள்ளங்களையும் நாம் நெஞ்சார வாழ்த்துகிறோம்! வயிற்றுக்குச் சோறு மடடுமல்ல வாழ்க்கைக்குக் கல்வி அறிவையும் அன்பு இல்லம் வழங்கிட வேண்டும்!

அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து ஆதரவு காட்டாமல் அனாதைகளாகி அல்லற்படும் அனைத்துச் சிறார்களைபும் அன்பு இல்லம் அரவணைக்க வேண்டும்! அதற்கான உதவிகளை செய்வதில் அனைவருமே பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆதரவற்று தெருவில் நிற்கும் குழந்தைகளை விட எந்த ஆதாரமும் அற்ற கையறு நிலையில் இருக்கும் முதியோர்களின் மடியில் உறங்கும் ஏழைக் குழந்தைகளே இன்று அதிகமாக காணப்படுகிறார்கள். அவர்களையும் அன்பு இல்லம் கூவி அழைத்து அரவணைக்க வேண்டும்!

சிறந்து வாழ்ந்த எங்களைச் சுனாமி அழித்தது. போர் சிதைத்தது! அந்த துன்பமான காலமெல்லாம் எஞ்சிய குழந்தைகளுக்கு வேண்டாம் என்று இறைவனை வேண்டிக் கொண்டு அன்பு இல்லம் தன் பணிகளைத் தொடரட்டும்! அதனை உலகம் ஆதரிக்கட்டும்! வாழ்த்துக்கள்!!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.