-
Posts
85545 -
Joined
-
Last visited
-
Days Won
480
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by நவீனன்
-
-
சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி
அ-அ+சூடான சாதத்தில் மீன் குருமா சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
(வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்)
வாழை மீன் - 3
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 20
வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
புளிப்பு மாங்காய் - 1
கொத்தமல்லி - ஒரு கையளவு
செய்முறை :
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வாழை மீனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
தேங்காயுடன் சோம்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் மாங்காய், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் மீன் போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான மீன் குருமா ரெடி. -
-
-
சத்து மாவு - முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு
அ-அ+சத்து மாவு - முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. உடலுக்கு தேவையான பலத்தை தரவல்லது. இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சத்து மாவு - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
உப்பு - சிட்டிகை,
முளைக்கட்டிய பச்சைப்பயறு - கால் கப்,
நேந்திரன் பழத் துண்டுகள் - ஒரு கப்.
செய்முறை :
வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
வறுத்த மாவில் உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து உதிரியாக புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
அதனுடன் பயறு சேர்த்து கலக்கவும்.
கலந்த மாவை இட்லி தட்டில் பரத்தி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
அதனுடன் தேங்காய்த் துருவல், நேந்திரன் பழத்துண்டுகள் சேர்த்து கலக்கவும்.
கடலைக் கறியுடன் பரிமாறலாம். -
-
எடையைக் குறைக்கும் சிறுதானியங்கள்!
ஜெ.கலைவாணி - படங்கள்: தே.அசோக்குமார்
சிறுதானிய உணவே நம் பாரம்பர்ய உணவுமுறை. அது மட்டுமல்ல... சிறுதானியங்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் அளிக்கும். எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இனிமை சேர்க்கும். நல்லவை எல்லாம் அள்ளித்தரும்.
இனிவரும் காலம் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய சிறு தானியங்களுக்குப் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த அளவு மக்களிடத்தில் சிறுதானியங்களின் சிறப்பு பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. இந்த ஆர்வத்துக்குச் சுவை சேர்க்கும் அருமையான, துல்லியமான மில்லெட் ரெசிபிகள் நம் கைவசம் இருந்தால்தானே சமையலறை கமகமக்கும்? அதற்கான ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி. எளிமையாகச் செய்யக்கூடிய இந்த உணவுகளுக்கு ஏராளமான பலன் உண்டு.
தினை - பச்சைப்பயறு ஊத்தப்பம்
தேவையானவை:
தினை அரிசி - அரை கப்
முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
காய்ந்த மிளகாய் - நான்கு
இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது)
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
துருவிய கேரட் - அரை கப்
செய்முறை:
தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். முளைகட்டியப் பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை வார்க்கவும். தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும். சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை
தேவையானவை:
கேழ்வரகு சேமியா - ஒரு கப்
கொள்ளு மாவு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (நறுக்கியது)
செய்முறை:
கேழ்வரகு சேமியாவை மூன்று நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். கொள்ளுவை வறுத்து மாவாக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். ஊறிய முழுப் பருப்பை ஒரு டீஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலை மாவுடன் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொள்ளு மாவு ஊறிய கடலைப்பருப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் விட்டு வடை மாவுப் பதத்துக்குக் கலந்து கேழ்வரகு சேமியாவைச் சேர்த்து வடையாகத் தட்டி, வாணலியில் எண்ணெய்விட்டு வடையைப் போட்டு முறுகலாகப் பொன்னிறத்துடன் வறுத்து எடுக்க, சுவையான கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை ரெடி.
குறிப்பு:
இஞ்சி - பூண்டு விழுது சேர்த்தும் செய்யலாம்.வரகு - கம்பங்களி
தேவையானவை:
வரகரிசி - கால் கப்
கம்பு மாவு - 2 கப்
தண்ணீர், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வரகரிசியைத் தண்ணீரில் வேகவிடவும். முக்கால்வாசி வெந்து வரும்போது அதில் உப்பு மற்றும் கம்பு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளற வேண்டும். மாவு கட்டியாக ஆகாதவாறு கிளறி, தேவைப்பட்டால் சுடுநீர் சிறிது சேர்த்து, கரண்டியால் கிளறி பின் கைகளில் சுடச்சுட உருட்டினால், களி ரெடி. இதற்குக் காரக் குழம்பு, கீரைக் குழம்பு தொட்டுக்கொள்ள ஏற்றது. களியைப் பொறுத்தவரை சுடச்சுடச் சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய், வெங்காயப் பச்சடி மற்றும் மொச்சைக்குழம்புடன் சாப்பிட மிகவும் ஏற்றது. உடல் பலமடையும். வியாதிகள் அண்டாது.கம்பு - பீர்க்கங்காய்த் துவையல்
தேவையானவை:
கம்பு - கால் கப்
பீர்க்கங்காய்த் தோல் - ஒரு கப் (நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - ஐந்து
உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
புளி - பெரிய நெல்லி அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - இரண்டு துண்டுகள்
செய்முறை:
கம்பு தானியத்தை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் உளுத்தம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு பீர்க்கங்காய்த் தோல், காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய், உப்பு ஆகியவற்றை வறுத்து ஐந்து நிமிடங்கள் ஆறவைக்கவும். இத்துடன் புளியையும் சேர்த்து வறுத்து மொத்தமாக எடுத்து உப்புச் சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்க, சுவையான
கம்பு - பீர்க்கங்காய்த் துவையல் ரெடி.அப்பளக்கூட்டுக் கம்பு ஊறல்
தேவையானவை:
கம்பு மாவு - அரை கப்
சோள மாவு - அரை கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
தயிர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
பாத்திரத்தில் கம்பு மாவு, சோள மாவு, சமையல் சோடா, தயிர், உப்பு, கொத்துமல்லித்தழை சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து உருட்டி இரண்டு அளவாகப் பிரித்து இட்லித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின்பு இதை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். சிறு சிறு வட்டமாக நறுக்கி, தோசைக்கல்லில் எண்ணெய்விட்டுச் சிவக்க வைத்து எடுத்துக்கொள்ளவும். அல்லது வட்டமாக நறுக்கிய கம்பு கட்லெட்டை வாணலியில் எண்ணெய்விட்டுப் பொரித்தும் எடுத்துக்கொண்டு அப்பளக்கூட்டுடன் சாப்பிடலாம்.அப்பளக்கூட்டு செய்ய தேவையானவை:
கடலைப்பருப்பு - அரை கப்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - ஒரு கப்
சுட்ட அப்பளம் - 8
சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
குக்கரில் கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து, நான்கு விசில் விட்டு இறக்கவும். சோம்புத்தூள் சேர்த்து, தேவைக்கேற்ற அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவந்ததும் உப்பு சேர்க்கவும். கொத்துமல்லித்தழை தூவி, அதில் அப்பளத்தை உடைத்துப்போட்டுக் கிளறி, கம்பு வறுவலின் மீது வைத்துப் பரிமாறவும். கம்பு ஃப்ரை செய்யாமலும் அப்பளக்கூட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.குதிரைவாலி - பாசிப்பருப்புக் கஞ்சி
தேவையானவை:
குதிரைவாலி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று (தாளிக்க)
கறிவேப்பிலை - இரண்டு ஈர்க்கு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
மிளகு - ஒரு டீஸ்பூன் (பொடித்தது)
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
பாசிப்பருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வேகும்போது, குதிரைவாலி அரிசியைச் சேர்த்துக் குழைய வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கஞ்சியில் ஊற்றவும். ஊறுகாய் மற்றும் துவையலுடன் பரிமாறவும். பசி நேரத்துக்கு ஏற்ற சிறந்த கஞ்சி இது. காரத்துக்குக் காய்ந்த மிளகாயைத் தவிர்த்துவிட்டு, மிளகு ஒன்றிரண்டாகப் பொடித்துச் சேர்த்துக் கொள்ளலாம்.கம்பு - பச்சைப்பயறு - வெல்ல மசியல்
தேவையானவை:
கம்பு - அரை கப்
பச்சைப்பயறு - அரை கப்
துருவிய வெல்லம் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பச்சைப்பயறையும் கம்பையும் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ளவும். மறுநாள் அதை குக்கரில் வைத்துக் குறைவாகத் தண்ணீர்விட்டு, நான்கு முதல் ஐந்து விசில் வரை அடி பிடிக்காமல் வேகவைக்கவும். பிறகு குக்கர் மூடியை ரிலீஸ் செய்துவிட்டுத் தண்ணீரை வடித்து, பருப்பை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, அதில் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மசித்துக்கொள்ளவும். இதை ஃபிரிட்ஜில் வைத்து தினமும் சாப்பிடலாம். நான்கு நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.பனிவரகு - மஷ்ரூம் - டொமேட்டோ சூப்
தேவையானவை:
பனிவரகு - கால் கப் (வேகவைத்தது)
கார்ன் மாவு - 2 டீஸ்பூன்
தக்காளிச் சாறு - ஒரு கப்
கொத்தமல்லி - அரை கப் (நறுக்கியது)
மஷ்ரூம் - 10 (நறுக்கியது)
பூண்டு - 10 பல்
நெய் - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - அரை டீஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
மஷ்ரூமைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். பூண்டுப் பல்லைத் தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். மிளகைப் பொடி செய்துகொள்ளவும். வாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும் பட்டை சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். சோயா சாஸ் விடவும். வேகவைத்த மஷ்ரூமை இதில் புரட்டி எடுக்கவும். தக்காளிச் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிடவும். பின், மூன்று கப் நீர் விட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வேகவைத்த பனிவரகைச் சேர்க்கவும். மஷ்ரூம் வெந்ததும் கார்ன் மாவை நீரில் கரைத்து ஊற்றவும். மிளகைத் தூவி ஒரு கொதிவிட்டுக் கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி எடுக்கவும். சுவையான சூப் தயார்.சோளம் - கோதுமை அல்வா
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்
சோள மாவு - அரை கப்
வெல்லம் - ஒரு கப்
முந்திரி, திராட்சை - தலா ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்
நெய் - கால் கப்
செய்முறை:
வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் கோதுமை மாவு, சோள மாவை நெய்விட்டு தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் இரண்டு மாவையும் ஒன்றாகச் சேர்த்து, கரைத்து வைத்த வெல்லத் தண்ணீரை மாவில் ஊற்றி, வேகமாகக் கிளறிக் கொண்டே இருக்கவும். நெய்விட்டு கிளற கிளற அல்வா பதத்தில் சுருண்டுவரும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி கிளறி இறக்கி வைத்துப் பரிமாறவும்.சாமை - பச்சைப்பயறு - நல்லெண்ணெய் சாதம்
தேவையானவை:
சாமை சாதம் - 2 கப்
பச்சைப்பயறு - கால் கிலோ
தக்காளி - 2 (அரைத்த ஜூஸ்)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், மராத்தி மொக்கு, கிராம்பு - தலா 2
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பச்சைப்பயறை வாணலியில் இட்டு, பொன்னிறமாக வறுத்து குக்கரில் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு நான்கு முதல் ஐந்து விசில் வரை நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிக்க வேண்டியதைச் சேர்த்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்துக் கிளறி, சோம்புத்தூள், மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். ஒரு கொதிவந்ததும், வேகவைத்த பயறை மட்டும் சேர்த்து கரண்டியால் மசித்துக் கிளறிவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறவும். வேகவைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். சாமையை 10 நிமிடம் ஊறவைத்து, பின் சாதமாக வடித்து ஆறவிடவும். இலையில் சாமை சாதத்தை வைத்துச் சூடான பச்சைப்பயறு மசாலாவைச் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடவும். -
நெத்தியிலே ஒரு குங்குமபொட்டு
நெற்றியிலே ஒரு குங்குமப்பொட்டு தேன் போலே கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே வெட்டிய மாம்பழக் கட்டியிலே செய்த பூப்போலே தொட்டதும் கையில் ஒட்டுது வண்ணம் பால் போலே கன்னிப் பருவம் துள்ளும் அழகே ஆனந்தம்
-
சத்து நிறைந்த முள்ளங்கி - பூசணி சப்பாத்தி
பொதுவாக காய்கறிகளை இப்படி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும் போது வயிறு நிரம்பி இருப்பதுடன் உடல் எடையும் குறையும்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்,
முள்ளங்கி துருவல் - கால் கப்,
பூசணி துருவல் - அரை கப்,
பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி விழுது - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை:
முள்ளங்கி துருவலை லேசாக பிழிந்து கொள்ளவும்.
பூசணி துருவலை நன்றாக பிழிந்து கொள்ளவும்.
கோதுமை மாவுடன் முள்ளங்கி துருவல், பூசணி துருவல், பச்சைமிளகாய் விழுது, கொத்தமல்லி விழுது, இஞ்சி விழுது,சீரகத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இந்த மாவை சிறிது எடுத்து சிறிய சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போடவும்.
மிதமான தீயில் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும்.
சூப்பரான முள்ளங்கி - பூசணி சப்பாத்தி ரெடி.
இதற்கு தால் அல்லது தயிர் பச்சடியைத் தொட்டுக் கொள்ளலாம். -
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
-
Ahasthiyan, நுணா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
-
-
-
-
-
-
சுண்டியிழுக்கும் சுவையில் கமகம ரசம்!
கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள், வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்
தயாரிக்கும்போதே அற்புதமான மணம் பரவி, நாசியில் நுழைந்து, நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி, பசியாற வரவேற்கும் உணவு வகைகளில் ரசத்துக்கு முக்கிய இடமுண்டு. சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடும்போது பசி தணிக்கும் ரசம், அப்படியே சாப்பிட்டாலும் அசத்தும். `தென்னாட்டு சூப்’ என்ற செல்லப் பெயர்கொண்ட ரசத்தில் பல வகைகள் உண்டு. ரசம் தயாரிப்பதில் ரசப்பொடி ஒரு முக்கிய அங்கம்வகிக்கிறது. சில ரசப்பொடிகள் செய்யும் விதம், ரசம் செய்யும் முறை இங்கே...
ரசம் செய்யும் முறை...
முதலில் புளியைக் கரைத்து, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பொடியாக நறுக்கிய தக்காளியை நன்கு பிழிந்து, மசித்துச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பருப்பு சேர்ப்பதாக இருந்தால், பருப்பைத் தண்ணீரில் கரைத்துச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்த பின் ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்து நுரைத்து வந்தவுடன் உப்பு சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். பிறகு கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைச் சேர்த்து மூடி வைக்கவும்.
விதம்விதமாக ரசப்பொடி தயாரிக்க...
தேவையானவை:செய்முறை: வாணலியில், ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் மிளகாயை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் இதர பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மிதமான சூட்டில் கறுகாமல் வறுக்கவும். ஆறியபின் கொரகொரப்பாகப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து உபயோகப்படுத்தவும்.
(அல்லது)
எல்லாப் பொருள்களையும் வெயிலில் நன்கு காயவைத்துக் கொரகொரப்பாகப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து உபயோகப்படுத்தவும்.ஸ்பெஷல் ரசப்பொடி வகைகள்
மைசூர் ரசப்பொடி
தேவையானவை:
* காஷ்மீரி மிளகாய் - 15 (அ) 20
* தனியா (மல்லி) - அரை கப்
* மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கொப்பரைத் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கொப்பரைத் துருவல் ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். மைசூர் ரசம் செய்யும்போது இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: ஃப்ரிட்ஜில் வைத்து, கைப்படாமல் உபயோகித்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.உடுப்பி ரசப்பொடி
தேவையானவை:
* காஷ்மீர் மிளகாய் - இரண்டரை கப்
* தனியா (மல்லி) - ஒரு கப்
* சீரகம் - கால் கப்
* வெந்தயம் - 3 டேபிள்ஸ்பூன்
* கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 ஆர்க்கு
* தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, மிளகாயைச் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டுச் சூடாக்கி தனியா, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும் (தனியா, கறிவேப்பிலையை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்). ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். உடுப்பி ரசப்பொடி தயார். இந்தப் பொடி ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.ஆந்திரா ரசப்பொடி
தேவையானவை:
* காய்ந்த மிளகாய் - 2 கப்
* தனியா (மல்லி) - ஒரு கப்
* சீரகம் - அரை கப்
* வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்
* மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
* கட்டிப் பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். ஆந்திரா ரசப்பொடி தயார். -
-
-
சத்தான பருப்பு ரெசிப்பிகள்
தால் சாண்ட்விச்
தேவை: கோதுமை பிரெட் - 8 ஸ்லைஸ் வேகவைத்த பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு கலவை – 100 கிராம் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய், உப்பு – தேவையான அளவு.செய்முறை: வேகவைத்த பருப்புக் கலவையுடன் மிளகுத்தூள், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசையவும். இதை பிரெட் ஸ்லைஸ்களின் மீது தடவவும். ஒரு பிரெட்டின் மீது மற்றொரு பிரெட்டை வைத்து அழுத்தவும். (பருப்புக் கலவை நடுவில் வர வேண்டும்). தவாவில் பிரெட் ஸ்லைஸ்களை அடுக்கி, சுற்றிலும் நெய் (அ) வெண்ணெய் சேர்த்து இருபுறமும் மொறுமொறுப்பாக டோஸ்ட் செய்து எடுக்கவும். மேலே நறுக்கிய வெங்காயம் தூவிப் பரிமாறவும்.
டொமேட்டோ பப்பு
தேவை: முப்பருப்புக் கலவை (துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து) – 100 கிராம் தக்காளி – 5 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை பூண்டு - 2 பல் (தட்டவும்) உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: குக்கரில் நெய்விட்டுச் சூடாக்கி, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு பருப்புக் கலவை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 (அ) 4 விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு நன்கு மசித்துப் பரிமாறவும்.லெமன் தால்
தேவை: பாசிப்பருப்பு – 100 கிராம் தோல் சீவி துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2.
செய்முறை: பாசிப்பருப்புடன் இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு மசிக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துப் பருப்புடன் கலக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்த லெமன் தால் எல்லோருக்கும் ஏற்றது.முப்பருப்பு மசாலா போண்டா
தேவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம் பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - 2 டீஸ்பூன் நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் கலவை - அரை கப் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்) சமையல் சோடா - ஒரு சிட்டிகை சோம்பு - சிறிதளவு எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு நெய் - 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி ஊறவைத்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சமையல் சோடா, உப்பு, நெய், புதினா கலவை, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சோம்பு, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய உருண்டைகளாக எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.மிளகு - பூண்டு பருப்புப் பொடி
தேவை: துவரம்பருப்பு – 100 கிராம் மிளகு - 2 டீஸ்பூன் பூண்டு - 4 பல் (தட்டவும்) கறிவேப்பிலை – சிறிதளவு பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாகச் சேர்த்து, வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பொடியாக அரைத்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும். இரும்புச் சத்துமிக்க இந்தப் பொடியைச் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டுக் கலந்து சாப்பிடலாம்.துவரம்பருப்புச் சுண்டல்
தேவை: குழையாமல் வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப் கடுகு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – ஒன்று வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
மல்டி தால் சூப்
தேவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 100 கிராம் சர்க்கரை – ஒரு சிட்டிகை பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று மிளகுத்தூள், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் பருப்புகளுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், தேவையான நீர் சேர்த்துக் குழைய வேகவிட்டு இறக்கவும். ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து, இரண்டு பங்கு நீர் சேர்த்துச் சூடாக்கி, நன்கு நுரைத்து வரும்போது இறக்கவும். இதை டம்ளர் / சூப் கப்பில் ஊற்றி மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து, சிறிதளவு நெய்விட்டுப் பரிமாறவும்.தால் மக்னி
தேவை: தோலுடன் கூடிய கறுப்பு உளுத்தம்பருப்பு – 200 கிராம் (8 மணி நேரம் ஊறவிடவும்) பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்) தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) அரைத்த தக்காளி விழுது - ஒரு கப் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை நறுக்கிய வெங்காயம் - அரை கப் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - தலா அரை டீஸ்பூன் பிரியாணி இலை - 2 வெண்ணெய் – 100 கிராம் ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப் நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உளுந்துடன் பிரியாணி இலை சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும். வாணலியில் 75 கிராம் வெண்ணெய்விட்டு உருக்கி இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி விழுது, கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அரை கப் தண்ணீர், வேகவைத்த உளுந்து சேர்த்து 10-20 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். மற்றொரு வாணலியில் மீதமுள்ள வெண்ணெய்விட்டு உருக்கி, பூண்டு சேர்த்துப் பொரித்து எடுத்துச் சேர்க்கவும். மேலே ஃப்ரெஷ் க்ரீம், கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.மசூர் தால் - டேட்ஸ் லட்டு
தேவை: மசூர் தால் – 100 கிராம் பொடித்த வெல்லம் – 150 கிராம் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை நெய்யில் வறுத்த பேரீச்சைத் துண்டுகள் - கால் கப் உருக்கிய நெய் - கால் கப்.
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு மசூர் தால் சேர்த்துச் சிவக்க வறுத்தெடுத்து நைஸாக பொடிக்கவும். வெல்லத்துடன் பேரீச்சை சேர்த்துக் கையால் நன்கு பிசையவும். பிறகு அதனுடன் ஏலக்காய்த்தூள், அரைத்த பருப்பு, சூடான நெய் சேர்த்து, கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். இந்த லட்டு, புரதம் மற்றும் இரும்புச் சத்து மிக்கது.பாசிப்பருப்பு உக்காரை
தேவை: பாசிப்பருப்பு – 200 கிராம் (வறுத்து ரவையாக உடைக்கவும்) வெல்லம் – 250 கிராம் நெய் – 50 கிராம் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை நெய்யில் வறுத்த முந்திரி - திராட்சை கலவை – 50 கிராம்.
செய்முறை: பாசிப்பருப்பு ரவையுடன் சுடுநீர் சேர்த்து நன்கு பிசைந்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பிறகு உதிர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, இதைக் கொதிக்கவிட்டு ஏலக்காய்த்தூள், நெய், உதிர்த்த பாசிப்பருப்பு கலவை சேர்த்து நன்கு கிளறி இறக்கி மூடி வைக்கவும். அரை மணி கழித்து எடுத்தால், பொலபொலவென்று இருக்கும். இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து பரிமாறவும். இது இரண்டு நாள்கள் வரை நன்றாக இருக்கும்.கீரை - தால் கொழுக்கட்டை
தேவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம் காய்ந்த மிளகாய் - 6 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய அரைக்கீரை, அகத்திக்கீரை, பருப்புக்கீரை கலவை - ஒரு கப் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு வகைகளுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு, கீரை வகைகள், வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்துப் பிசையவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து, பருப்புக் கலவையுடன் கலக்கவும். பிறகு, சிறிய உருண்டைகளாக்கி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கீரை வகைகளில் இரும்புச் சத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.தால் ஃபிங்கர் ஃப்ரை
தேவை: துவரம்பருப்பு - 50 கிராம் அரிசி - ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு – 4 (தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும்) எண்ணெய் - 250 கிராம் பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்புடன் காய்ந்த மிளகாய், அரிசி சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துப் புரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டுச் சிவக்க பொரித்தெடுக்கவும்.தால் ஸ்டஃப்டு பராத்தா
தேவை: கடலைப்பருப்பு – 100 கிராம் (வேகவிடவும்) பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.
மேல் மாவுக்கு: கோதுமை மாவு – 200 கிராம் நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசையவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம்.
பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.ஸ்வீட் அண்டு சோர் பாசிப்பருப்பு சாலட்
தேவை: பாசிப்பருப்பு – 100 கிராம் (ஊறவிடவும்) தேங்காய்த் துருவல் - கால் கப் நறுக்கிய கொத்தமல்லித்தழை பச்சை மிளகாய் - சிறிதளவு குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் - கால் கப் எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன் சர்க்கரை - ஒரு சிட்டிகை தேன் - ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் குடமிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும். பிறகு, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, ஸ்வீட் கார்ன் முத்துகள், சர்க்கரை, தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.பாலக் தால்
தேவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 200 கிராம் பாலக்கீரை - ஒரு கட்டு (நறுக்கவும்) சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு பூண்டு – 2 (பொடியாக நறுக்கவும்) சீரகம் - கால் டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு நெய் - ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளைக் குழைய வேகவிடவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி சீரகம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பாலக்கீரை, உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, வேகவைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். அபரிமிதமான இரும்புச் சத்துள்ள இந்த பாலக் தால் அனைவருக்கும் ஏற்றது.பாசிப்பருப்பு பக்கோடா
தேவை: பாசிப்பருப்பு – 200 கிராம் பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்) தோல் சீவி துருவிய இஞ்சி - சிறிதளவு வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்) எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பைக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுப் பருப்புக் கலவையைச் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
இதை டீயுடன் சாப்பிடலாம் அல்லது மோர்க்குழம்பில் போட்டு ஊறவிட்டுப் பரிமாறலாம்.மல்டி தால் வெஜ் மிக்ஸ்
தேவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, மசூர் பருப்பு தலா - 25 கிராம் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு கலவை - ஒரு கப் வேகவைத்த பச்சைப் பட்டாணி – சிறிதளவு மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: குக்கரில் பருப்பு வகைகளுடன் நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி சேர்த்துக் குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், வேகவைத்த கலவை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். காய்கறிகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்துகொடுப்பது நல்ல பலன் தரும்.தால் கிச்சடி
தேவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா 50 கிராம் அரிசி – 150 கிராம் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்) நெய் – 100 கிராம் உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: பட்டை, லவங்கம், மராத்தி மொக்கு, ஏலக்காய் - தலா 2 சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு வகைகளுடன் அரிசி சேர்த்துக் களையவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் நெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அரிசி - பருப்பு கலவை, மூன்று பங்கு தண்ணீர்விட்டு மூடி, 4 - 5 விசில்விட்டு இறக்கவும். சற்று ஆறியபின் திறந்து கிளறி, சூடாகப் பரிமாறவும்.மிக்ஸ்டு தால் பிளெய்ன் கறி
தேவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 100 கிராம் காய்ந்த மிளகாய் - 4 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவிட்டுக் களைந்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் அரைத்த பருப்புக் கலவை, மஞ்சள்தூள் சேர்த்து உதிர் உதிராகக் கிளறி இறக்கவும்.பாசிப்பருப்பு - கடலைப்பருப்பு பண்டிகை பாயசம்
தேவை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம் வெல்லம் - 200 கிராம் தேங்காய்ப்பால், காய்ச்சிய பால் - தலா அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை – சிறிதளவு.
செய்முறை: பருப்பு வகைகளைக் களைந்து குழைய வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலைக் கொதிக்கவிட்டு வேகவைத்த பருப்புக் கலவை, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். அத்துடன் முந்திரி, திராட்சை, பால், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.உடனடி உளுத்தம்பருப்பு பச்சடி
தேவை: உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் தயிர் - கால் கப் பெருங்காயம் – சிறிதளவு உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: நெய் - அரை டீஸ்பூன் கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி ஊறவைத்து உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், தயிர் சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து அரைத்த கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.நியூட்ரி தால் இட்லி
தேவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம் பச்சரிசி – 50 கிராம் துருவிய கேரட், கோஸ் கலவை - கால் கப் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்) நெய் - 2 டீஸ்பூன் மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியுடன் பருப்பு வகைகளைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதனுடன் கேரட், கோஸ், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு - சீரகத்தூள், நெய் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.துவரம்பருப்பு - கறிவேப்பிலை துவையல்
தேவை: துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2 கறிவேப்பிலை - 2 ஆர்க்கு தேங்காய்த் துருவல் - கால் கப் புளி - நெல்லிக்காய் அளவு பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கடலை எண்ணெய் – சிறிதளவு உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துச் சிவக்க வறுத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டுத் துவையலாக அரைத்து எடுக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்தத் துவையலை அடிக்கடி பயன்படுத்துவது அனைவரின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.தால் பேஸ்கட்
தேவை: கடலைப்பருப்பு, பச்சரிசி - தலா 100 கிராம் துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன் சீரகம் - கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு எண்ணெய் - கால் கிலோ.
செய்முறை: கடலைப்பருப்பு, பச்சரிசி, துவரம்பருப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் உப்பு, சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். மீதமுள்ள எண்ணெயைக் கடாயில் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு குழிக்கரண்டியில் எண்ணெய் தடவி, எலுமிச்சை அளவு மாவு எடுத்து, கரண்டியின் உட்புறமாகக் கூடைபோல பரப்பி, அப்படியே கரண்டியுடன் சூடான எண்ணெயில் விடவும். சிறிது நேரத்தில் கரண்டி, கூடை இரண்டும் தனித்தனியே பிரிந்து வரும். சற்றே சிவந்தவுடன் எடுத்துவிடவும்.
இது 15 நாள்களுக்கு நன்றாக இருக்கும். விருப்பப்பட்டால், தால் பேஸ்கட்டில் சுண்டல், வறுத்த வேர்க்கடலை போட்டுப் பரிமாறலாம்.உளுத்தம்பருப்பு - கீரை வடை
தேவை: உளுத்தம்பருப்பு – 100 கிராம் நறுக்கிய கீரை - 2 கைப்பிடியளவு சோம்பு - சிறிதளவு பச்சை மிளகாய் – 3 (நசுக்கவும்) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை 15 நிமிடங்கள் ஊறவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி, ஊறிய உளுத்தம்பருப்பைக் களைந்து சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அதனுடன் உப்பு, சோம்பு சேர்க்கவும். பிறகு வெங்காயம், கீரை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். மாவை வடைகளாகத் தட்டி நடுவே துளையிட்டு சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்த கீரை வடை, அனைவரும் விரும்பி உண்ணும் வடையாகவும் அமையும்.`பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது பழமொழி. கல்யாண விருந்தில் மட்டுமல்லாமல், அன்றாட வீட்டுச் சமையலிலும் பருப்பு இன்றியமையாத பொருளாக அங்கம்வகிக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாகப் பருப்பு மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல் இயக்கத்துக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து, சைவ உணவு உண்பவர்களுக்குப் பருப்பிலிருந்தே பெருமளவுக்குக் கிடைக்கிறது. மேலும், பருப்பு வகைகளிலிருந்து வைட்டமின், இரும்புச் சத்து, நார்ச் சத்து, கால்சியம், பொட்டாசியம், ஃபோலிக் ஆசிட் போன்றவற்றையும் பெறலாம்.
பொதுவாக, பருப்பில் சாம்பார், ரசம், வடை, துவையல், பாயசம், சுண்டல் போன்றவற்றைச் செய்வது வழக்கம். இந்த இணைப்பிதழில் பருப்பை வைத்து, வழக்கமான ரெசிப்பிகளுடன் சூப், சாண்ட்விச், சாலட், ஃபிங்கர் ஃப்ரை, தால் பாஸ்கெட் என்று கலந்துகட்டி உணவு வகைகள் தயாரித்து அளித்து அசத்துகிறார் சமையல் கலைஞர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன். இவற்றை யெல்லாம் செய்து பரிமாறி... குடும்பம், உறவு, நட்பு வட்டத்தில் நீங்கள் `சமையல் சக்கரவர்த்தினி’யாக வலம்வர வாழ்த்துகள்! -
-
காலிஃபிளவர் பிரை செய்வது எப்படி
சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள காலிஃபிளவர் பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த பிரையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிஃபிளவர் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - அரை டீஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்புன்
சில்லி சிக்கன் மசாலா பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
காலிஃபிளவரை கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து சீரகம், சோம்பு போட்டு தாளித்த பின்னர் காலிஃபிளவரை போட்டு வதக்கவும்.
காலிஃபிளவர் லேசாக வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மூடி போட்டு வேகவிடவும்.
காலிஃபிளவர் முக்கால்பாகம் வெந்ததும் சில்லி சிக்கன் மசாலா பொ, கறிவேப்பிலையச் சேர்த்து கிளறவும்.
காலிஃபிளவர் நன்றாக வெந்து மசாலா வாடை அடங்கியதும் இறக்கி பரிமாறவும். -
-
சூப்பரான முருங்கைப்பூ முட்டை பொரியல்
முருங்கைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முருங்கைப்பூ, முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :முருங்கைப்பூ - 2 கைப்பிடி அளவுசீரகம் - கால் தேக்கரண்டிமுட்டை - ஒன்றுகறிவேப்பிலை - 5சின்ன வெங்காயம் - 15பூண்டு - 5 பல்பச்சை மிளகாய் - 2மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுசெய்முறை :முதலில் முருங்கைப்பூவில் காம்பை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அலசி வைக்கவேண்டும்.ப.மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரியவிட்டு, பூண்டுச் சேர்த்து வதக்கவேண்டும்.பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவேண்டும்.பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவேண்டும்.வெங்காயம் சற்று வதங்கியதும் முருங்கைப்பூவைச் சேர்த்து வதக்கவும்.அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவேண்டும்.இப்பொழுது முருங்கைப்பூ வெந்து, சிறிது தண்ணீருடன் இருக்கும் போதே முருங்கைப்பூவை பரவலாக்கிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றவேண்டும்நன்றாக கிளறிவிட்டு முட்டை வெந்து உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும்.சுவையான முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார்.
கருத்து படங்கள்
in நிகழ்வும் அகழ்வும்
Posted