-
Posts
533 -
Joined
-
Last visited
-
Days Won
8
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by போக்குவரத்து
-
சைக்கிளில்(துவிச்சக்கரவண்டி) ஓடுபவர்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிவிலக்கு இல்லை. அவர்கள் ஒரு வழிப்பாதையில் எதிர்ப்புறமாக (opposite direction of oneway street) சென்றால் HTA, சரத்து 153இன் படி $85 குற்றப்பணம் செலுத்த வேண்டும்.
-
வாகனம் ஓடும் போது கவன குறைவுடன் வளைவுகளில் திரும்புதல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். வளைவுகள் ஊடாக வாகனம் ஓடும் போது கடினமாக பிரேக் அடிப்பது, gas pedal ஐ கடினமாக மிதிப்பது இரண்டுமே ஆபத்தானவை.
-
வீதி திருத்த வேலைகள் நடைபெறும் இடங்களில் ஆட்கள் வேலை செய்யும்போது போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரியின் பணிப்புரைகளிற்கு கட்டுப்படாவிட்டால் தண்டனை : $500 அபராதம் அத்துடன் மூன்று Demerit புள்ளிகள்.
-
அவசரகால நேரத்தில் Emergency வாகனங்கள் நிறுத்தி நிற்கும்போது அவற்றை விலத்தி செல்லாவிட்டால் (Move Over Law) தண்டனை $2000 குற்றப்பணம் + 3 demerit புள்ளிகள். தொடர்ந்தும் அதே தவறை செய்தால் தண்டனை $4000 குற்றப்பணம் + 06 மாதங்கள் சிறைத்தண்டனை + 02 வருடங்கள் சாரதி அனுமதி பத்திரம் இரத்து.
-
சிவப்பு விளக்கு எரியும்போது வலது பக்கம் திரும்புவதாக இருந்தால் திரும்பும் அதே ஒழுங்கையில் வேறு வாகனங்கள் வராவிட்டாலும் உங்கள் வாகனத்தை சந்தியில் முழுமையான நிறுத்தத்திற்கு கொண்டுவந்த பின்னரே பாதுகாப்பாக வலது திருப்பத்தை செய்ய வேண்டும்.
-
முறையான காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அகப்பட்டால் அதிகூடிய அபராதம் கிடைப்பதோடு எதிர்காலத்தில் காப்புறுதி கட்டணம் அதிகளவு உயரலாம்.
-
எவ்வளவு தூரம் பார்க்கமுடியும், எவ்வளவு தெளிவாக பார்க்க முடியும் என்பவை நீங்கள் அறியாமலேயே உங்கள் கண்களில் மாறலாம். எனவே, கிரமமாக உங்கள் கண்களை நீங்கள் பரிசோதனை செய்வது அவசியம் ஆகும்.
-
வாகனத்தை நீங்கள் வேகமாக ஓடுவதால் சேமிக்ககூடிய நேரத்தை விட, வாகனத்தின் வேகத்தை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய வாகன விபத்தின் பாதிப்பு மிக கடுமையானது.
-
துவிச்சக்கர வண்டி/சைக்கிளும் ஒரு வாகனமே. சைக்கிள் ஓடுபவர்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் வீதி போக்குவரத்து குற்ற செயல்களுக்கான தண்டனையை/அபராதத்தை பெறவேண்டும்.
-
ரிவர்ஸ் செய்யும்போது யாராவது உதவியானால் ஒழிய டிரக், பேருந்து இவற்றின் சாரதியால் முழுமையாக பின்னால் தெளிவாக பார்க்க முடியாது. ரிவர்ஸ் செய்யும் இந்த வாகனங்களுக்கு அருகில் இல்லாமல் தள்ளி நில்லுங்கள்.
-
நாட்டுப்புற சாலைகளில் (country roads) வழமையில் நிர்ணயிக்கப்பட்ட வேகம் அதிகமாக இருப்பதாலும், ஒழுங்கை மாறும் போது எதிர்ப்புறமாக வரும் வாகனங்களின் ஒழுங்கையை பகிர்ந்துகொள்ள வேண்டி நேருவதாலும் (if unmarked) ஒழுங்கை மாற்றம் செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை.
-
வாகனத்தில் திருட்டினால் பாதிக்கப்படாமலிருக்க எல்லா யன்னல் கண்ணாடிகளையும் முழுவதுமாக மூடுங்கள், பெறுமதியான பொருட்களை வாகனத்தினுள் வெளியார் பார்வைக்கு தெரியும்படி வைக்காதீர்கள், வாகனத்தின் கதவுகளை lock செய்யுங்கள்.
-
அதிக பாரம் (ஆட்கள்/பொருட்கள்) ஏற்றப்பட்ட வானில் புவியீர்ப்பு மையம் மேலே உயர்வதால் வேகமாக ஓடும் சமயத்தில் அவசரமாக நிறுத்தம் செய்ய முற்படும் போது வாகனம் உருண்டு கவிழ்வதற்கான சாத்தியம் அதிகரிக்கின்றது.
-
புகையிரதம் முந்திப்பிந்தி வரலாம். புகையிரத கடவையை ஒவ்வொரு தடவையும் கடக்கும்போது எச்சரிக்கை தேவை. புகையிரதம் வரும் சமயத்தில் பொறுமை இல்லாமல் வேகமாக நீங்கள் கடக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது.
-
விபத்து ஏற்படும் போது வாகனத்தில் காற்றுப்பை (airbag) மணிக்கு 200 தொடக்கம் 300 மைல் வேகத்தில் விரிகின்றது. காற்றுபையுக்கு அருகாக இருந்தால் அல்லது பாதுகாப்பு பட்டியை அணியாவிட்டால் காற்றுப்பை தாக்கி சிறுவரிற்கு பாரதூரமான காயம் ஏற்படலாம்.
-
தெரு உங்களுக்கு மட்டுமானது அல்ல. ஹைவேயில் மற்ற வாகனங்கள் நுழைவதற்கு இடம் விட்டுக் கொடுங்கள். மற்றைய வாகனங்களை வெட்டி மறித்து ஓடாதீர்கள்.
-
திட்டமிட்ட காப்புறுதி, விபத்து மோசடிகள் வாகனத்தை ஓடுகின்ற அனைவரையும் பாதிக்கின்றன. Crime Stoppers 1-800-222-TIPS
-
நீண்ட பயணங்களில் உங்கள் வாகனத்தின் ரயர் அழுத்தம், திரவம்/fluid அளவு, விளக்குகள், சிக்னல், இதர பழுது/குறைபாடுகள் இவற்றை பயணத்தின் முன்பே சரி/சோதனை செய்வது அவசியம்.
-
வாகனத்தை ஓடாமல் எஞ்சினை மட்டும் சும்மா வேலை செய்ய விடுவதால் (Idling) எஞ்சினின் ஆயுள் குறையும், எரிபொருள் வீணாகும், சூழல் மாசுபடும், பணமும் விரயமாகும்.
-
பாடசாலை பேருந்து சிவப்பு Flashஉடன் நிற்கும்போது இரண்டு திசைகளிலும் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை: $400 தொடக்கம் $4000 வரை அபராதம் அத்துடன் ஆறு demerit புள்ளிகள்.
-
சிறுவர்களை ஒருபோதும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்லாதீர்கள். வீட்டு கராச்சில், பாதையில் உள்ள உங்கள் வாகனங்களை சிறுவர்கள் நுழைய முடியாதவாறு பூட்டி வையுங்கள்.