Jump to content

யாழ்அன்பு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    5431
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by யாழ்அன்பு

  1. என்ன இழவுக்கு இதற்குள் புலியை இழுக்குறீர்கள்? உங்களுக்கு சாதி பிரச்னை புலிப் பிரச்சனை இழுக்காட்டி நித்திரை வராதோ£? நாங்கள் சாதிய மறந்தாலும் நீங்கள் அடிக்கடி நினவு படுத்துவீர்கள்.நாங்கள் எந்த விட்டுக் கொடுப்பை செய்தாலும் நீகள் வியாக்கியானமே பேசுவீர்கள் அப்புறம் எப்படி சாதி ஒழியும்???
  2. உண்மையில் இந்த பிரசுரம் காலம் காலமாக வாழும் கத்தொலிக்கரையொ புரட்டஷான் மக்களையோ சைவர்களில் இருந்து பிரிக்கும் நோக்கில் வெளியிடவில்லை. இது முற்று முழுதாக ஜொகொவா,பிலதெல்லியா, பெந்துக்கொஸ் போன்ற மதம் மாற்றும் பிரிவினரையே குறி வைத்து எழுதப்பட்டது. இதை வைத்து இங்கு ஒரு மதப் போறோ இல்லை என்றால் சில விசமிகள் விரும்பும் சாதிப் போரையோ யாரும் நடாத்தவேண்டாம்.
  3. இங்கு ஒரு மதம் நல்லதா கெட்டதா என்பதல்ல விவாதம். மதமாற்றுவது சரியா பிழையா என்பது தான் விவாதம். கட்டாய மதமாற்றல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதால் தான் அவர்கள் மேல் விமர்சனம் வைக்கிறோமே தவிர. இயேசு நல்லவரா கெட்டவரா என்று அவர்கள் மதத்தை பற்றி இங்கு நான் எதுவும் எழுதவில்லை. super thulasi
  4. a உண்மையில் இந்த பிரசுரம் காலம் காலமாக வாழும் கத்தொலிக்கரையொ புரட்டஷான் மக்களையோ சைவர்களில் இருந்து பிரிக்கும் நோக்கில் வெளியிடவில்லை. இது முற்று முழுதாக ஜொகொவா,பிலதெல்லியா, பெந்துக்கொஸ் போன்ற மதம் மாற்றும் பிரிவினரையே குறி வைத்து எழுதப்பட்டது. இதை வைத்து இங்கு ஒரு மதப் போறோ இல்லை என்றால் சில விசமிகள் விரும்பும் சாதிப் போரையோ யாரும் நடாத்தவேண்டாம். இஸ்லாத்தில் பேதம் இல்லாமலா சன்னி முஸ்லிம்கள் சியா முஸ்லிம்கள் என்று அடிபட்டு சாகுரார்கல் முஸ்லிம் நாடுகளில்? தென் ஆசியாவில் முஸ்லிம்களில் ஏழைகள் இல்லையா? ஆபிரிக்க நாடுகளில் முஸ்லிம் ஏழைகள் இல்லையா? சைவ ஆலயங்களில் தமிழ் பூசை என்ற கொள்கை தற்பொழுது எல்லா நலன் விரும்பிகளாலும் முன்னடுக்கப் படுகிறது. கத்தோலிக்க மதத்தில் கூட சில நூற்றாண்டுகலுக்கு முன்னர்தான் அவரவர் தாய் மொழியில் வழிபாடு நடாத்தலாம் என்று சட்டம் கொண்டுவரப் பட்டது. இதற்க்காக உழைத்தவர் யேர்மன் நாட்டை சேர்ந்த பாதிரியார். இவர் யேர்மன் மொழியில் பூசை செய்ய வேண்டும் என்று சொன்ன ஒரே காரனதிட்க்காக ஊரே திரண்டு தெவாலயிதில் இவரை தீ வைத்து கொலை செய்த கருப்பு வரலாறு உள்ளது. இதன் த்டர்சியெ முதலில் போலந்து நாட்டிலும் பின்னர் யேர்மன் நாட்டிலும் பின்னர் உலகமெல்லாம் தங்கள் தாய் மொழியில் வழிபாடு செய்யும் உரிமை கத்தோலிக்கருக்கு கொடுக்கப்பட்டது. இப்பொழுது தமிழர்கள் மீண்டு தங்கள் தாய் மொழியில் வழிபாடு என்று செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறாகள். சைவ சமயத்தில் இன்னும் பல சீர் திருத்தங்கள் பலரால் முன்னெடுக்கப் படுகிறது இது பற்றி வெகுவிரைவில் யாதிய முலாம் பூசும் வேசதாரிகள் அறிவார்கள். உண்மையில் எமது சைவத் தமிழர்கள் அன்னை வேளாங்கனி .மாடு மாதா,லூட்ச் மாதா, பசேல் மரியாச்டெஇன் போன்ற கத்தோலிக்க ஆலயங்களுக்கு அதிகம் சென்று வழிபாடு செய்பவர்கள். ஆனால் பிரச்னை ஏனைய மதம் மாற்றும் பிரிவுகளே . இந்த மதம் மாற்றும் என்னய்யா பிரிவுகளால் சைவர்கள்,இந்துக்கள் மட்டும் அல்ல கத்தோலிக்கரும் மிகவும் பாதிப்படையிறார்கள் என்பது தான் உண்மை. இங்கு சிலருக்கு புதியவகை நோய்கள் 2 பிடிச்சிருக்கு ஏதாவது செய்தி இணைத்தால் புளிவாந்தி எடுப்பது இல்லை என்றால் யாதிய வாந்தி எடுப்பது. இத இவர்களாக விடும் வரை சமூகம் திருந்தாது. இராமன் இராவணன் சண்டை தமிழ் இந்திய சண்டை இல்லை. சிவ பக்தனுக்கும் விஸ்ணு பக்தனுக்கும் (சைவ வைணவ சண்டை)நடத்த யுத்தம். இது ஐரோப்பாவில் நடந்த சிலுவைப் போர் (கத்தோலிக்க ,புரட்டஸ்தாந்து சண்டை போன்றது. அரபு,முஸ்லிம் நாடுகளில் இன்னமும் நடக்கும் சியா சன்னி முஸ்லிம் பிரிவினை போன்றது.
  5. a சைவ சமயம் http://ta.wikipedia.org/s/6jj கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. சைவ சமயம் இக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும். இறையியல்[காட்டு] பிரிவுகள்[காட்டு] இலக்கியம்[காட்டு] தலங்கள்[காட்டு] பிற[காட்டு] வலைவாசல்[மறை] சைவம் வலைவாசல் பா உ தொ சைவ சமயம் (சமக்கிருதம்: शैव पंथ, śaiva paṁtha; ) என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். சைவம் சிவனுடன் சம்பந்தமாவது என திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார்.[1] சிவ வழிபாட்டினை சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம்.[2] சைவசமயத்தினை சுருக்கமாக சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.[3] இச்சமயம் உலகில் தோன்றிய முதல் சமயமென என்று கூறப்பெறுகிறது.[4] இந்து சமயப் பிரிவுகளான வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் முதலிய பிற பிரிவுகளை தன்னுள் எடுத்துக் கொண்ட இச் சமயம் இந்து சமயப்பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்பெறுகிறது. இம்மதத்தினை இருநூற்று இருபது மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். பக்தி இலக்கிய காலத்தில் சைவம் தமிழுக்கு பெரும் சேவை செய்து சைவத்தமிழ் என்று பெயர் கொண்டது. இதற்கு நாயன்மார்களும், சமயக் குரவர்களும் பெரும் உதவி செய்தனர். 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்பது பொதுவாக வாழ்த்தப்படுவதாகும். வேதங்களும், ஆகமங்கள்முதலானவையும் சிவபிரானின் சதாசிவக் கோலத்தினால் அருளப்பட்டவை என்பர். பதினெண் புராணங்களுள்பத்து புராணங்கள் சிவன் பற்றியவை. இந்தியா, நேபாளம், இலங்கை, தென்கிழக்காசியா, ஐரோப்பா முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன. பொருளடக்கம் [மறை] 1 சைவ சமயத்தின் தோற்றம் 2 சிவ முழக்கங்கள் 3 சைவ சமய பிரிவுகள் 3.1 அடிப்படை வகைகள் 3.2 பிரிவுகள் 3.3 அகப்புறச் சமயம் 4 சைவ வழிபாட்டின் பண்புகள் 5 பாவ புண்ணியம் 5.1 பாவம் 5.2 புண்ணியம் 6 சைவ அடியவர்கள் 7 சைவ நெறி நூல்கள் 8 சைவ தொண்டு 9 இவற்றையும் காண்க 10 ஆதாரங்கள் 11 உசாத்துணை 12 வெளி இணைப்புகள் சைவ சமயத்தின் தோற்றம்[தொகு] பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார். மத்திய அமெரிக்காவின் மாயன் நாகரிகமும், கிழக்காசிய நாடுகளில் ஜாவா, பாலி முதலிய இடங்களில் காணப்படும் கோவில் இடிபாடுகளும் சிவ வழிபாடு உலகமெங்கும் இருந்துள்ளமையை காட்டுகின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆய்வு செய்து எழுதிய சர்.ஜான் மார்ஷல் என்பவர் உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது என கூறுகிறார்.[2] மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார். சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம்என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.[5] /*சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம்,எனது அறிவுக்கு அக்கருத்துகள்,வரலாற்று கூற்றுகள் தவறாகப்படுகின்றது. 'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வது. அதாவது ஆனமாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை சதாசிவ கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான். இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டது. அவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லை. கைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளது, மேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையின் மீது, மேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்} தில்லைக்கு தெற்கே இராவணவன்னஃ ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க பாடிய பாட்டில் முன்னே இட்ட தீ தென் இலங்கை'. அன்று வாழந்த உயிரினங்களில் மனிதர்கள், தேவர்கள், அரக்கர்கள் என்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள் (இன்று ஆராய்ச்சியாளர்களும் பூமியில் மூன்று விதமான மனிதர்களாக வாழந்து வந்தார்கள என்கிறார்கள்) அரக்கர்களும், தேவர்களும் தீரா பகையால் சண்டையிட்டு அழிந்து விட்டார்கள் என்கிறது தமிழ். ஆரியன் என்ற சொல் சதாசிவனையும், அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும். செத்து சம்பலாகவும், புழுக்களானவர்களை குறிக்காது. இன்றோ மடிந்து போன மனிதர்கள் உண்டாக்கிய மதங்கள் இப்பூமியை நரகமாக்கிறது. திருமந்திரத்தை படித்தால் நான் சொல்லியுள்ள கருத்துகள் உண்மை எனபதை உணர்வீர்கள்§ வெற்றிலிங்கம்=மும்பை/* சிவ முழக்கங்கள்[தொகு] நம பார்வதீபதயே - ஹர ஹர மஹாதேவா சித் சபேசா - சிவ சிதம்பரம் கார்த்திகேய நாம சங்கீர்த்தனம் - சிவ சுப்ரஹ்மண்யோம் வல்லீ காந்த ஸ்மரணம்-சிவ சுப்ரஹ்மண்யோம் தென்னாட்டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி இந்த முழக்கத்தில் "-" குறிக்கு முந்தையதை ஒருவர் முழங்க,"-" குறிக்கு பின்னையதை மற்ற சிவ பக்தர்கள் முழங்குகின்றார்கள். இவையில்லாமல் "சிவ சிவ" என்றும் கூறுவார்கள். “தென்னாடுடைய சிவனே போற்றி; என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்பதை மணிவாசகப் பெருந்தகை அருளினார். சைவ சமய பிரிவுகள்[தொகு] அடிப்படை வகைகள்[தொகு] ஊர்த்தசைவம், அனாதி சைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேத சைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபாதசைவம், சுத்தசைவம் என்று பதினாறுவகைப்பட்டதாய்ச் சிவனைப் பரதெய்வமாகக்கொண்டு வழிபடுஞ் சமயம், சைவம் ஆகும். [6] பிரிவுகள்[தொகு] காசுமீர சைவம் வீர சைவம் சிவாத்துவைதம் பாசுபதம் காபாலிகம் காளாமுகம் பைரவம் மாகேசுவரம் சிவபாகவதம் மகாவிரதம் காலானனம் பூர்வ சைவம் காணாபதம் கரலிங்கம் அவாந்தர சைவம் காருணிக சித்தாந்தம் காருக சித்தாந்தம் காதக சித்தாந்தம் பிராவார சைவம் அந்நிய சைவம் நையாயிகம் வைசேடிகம் என பல வகையான பிரிவுகள் இருக்கின்றது.[7] இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம். இச்சைவம் இந்தியாவில் மட்டுமன்றி நேபாளம், இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது. அகப்புறச் சமயம்[தொகு] இவற்றில் பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் ஆகியவை அகப்புறச் சமயங்கள் (அகப்புறசமயம்) எனவும் அறியப்பெறுகின்றன.[8]பாசுபதம், மாவிரதம்,காபாலம்,வாமம்,வைரவம்,அபிக்கவாத சைவம் ஆகியவையும் அகப்புறச் சமயம் என்றும் கூறப்பெறுகின்றன.[9] சைவ வழிபாட்டின் பண்புகள்[தொகு] முதன்மைக் கட்டுரை: சைவ சித்தாந்தம் பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டுப் பண்பும், பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (பற்று) என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்டகால அனுபவத்தில் பாசத்தடையில் (பற்றிலிருந்து) இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும். சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் சிவாகமங்கள் இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான ஆலயமும் ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் கிரியைகள் யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் பூசை செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும். பாவ புண்ணியம்[தொகு] பாவம்[தொகு] கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல் போன்றவற்றினை சைவம் பாவம் என்கிறது. இதனை செய்பவர்கள் நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர் என்கிறது. புண்ணியம்[தொகு] புண்ணியம், பதிபுண்ணியம் பசுபுண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியம் சிவபுண்ணியம் எனவும்படும். பசு புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் படும். பதி புண்ணியம், சிவபெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுபுண்ணியம் ஆகும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப்பயன் சிவபெருமானால் அனுபவிக்கப்படாததால், அழிவதில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும். “பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும் இசைத்து வருவினையில் இன்பம்." சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம் முதல் அதிகரணத்தில் உள்ள வெண்பாவில் மெய்கண்டார் தெளிவுற அருளிச்செய்துள்ளார். இதன் பொருள் பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசு புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்புண்ட உணவின் பயன் அனுபவிக்கப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசு புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது. சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாகும், மேலும் 1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றனவும் புண்ணியத்தில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு புண்ணியங்களை செய்தவர்கள் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர் என்று சைவர்கள் நம்புகிறார்கள். [10] சைவ அடியவர்கள்[தொகு] சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். இவர்களை சைவசமயக் குரவர்கள் என்றும் அழைப்பர். சைவ அடியாளர்கள் உடலில் திருநீறு அணிய வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும்.திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும். தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும். சைவ நெறி நூல்கள்[தொகு] திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர் எழுதிய தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள் எழுதிய திருவாசகம் இரண்டும் தமிழ் மொழியில் உள்ள சைவ வேதம் ஆகும். சங்கற்ப நிராகரணம் உண்மை விளக்கம் உண்மை நெறி விளக்கம் நெஞ்சு விடு தூது கொடிக்கவி போற்றிப் பஃறொடை வினா வெண்பா திருவருட் பயன் சிவப் பிரகாசம் இருபா இருபஃது சிவஞான சித்தியார் - ஆசிரியர் : திருத்துறையூர் - அருணந்தி சிவாச்சாரியார் சிவஞான போதம் - ஆசிரியர் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் திருக்களிற்றுப் படியார் - ஆசிரியர் : உய்யவந்ததேவ நாயனார் திருவுந்தியார் - ஆசிரியர் உய்யவந்ததேவ நாயனார் சைவ தொண்டு[தொகு] சிவாலயத்துக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்தலை சைவம் சிவ தொண்டென அழைக்கிறது. இவ்வாறு செய்யும் தொண்டினால் பலன் பெற்று ஆத்மாக்கள் இறைவனை அடைகின்றன என்றும் நம்பப்படுகிறது. இவற்றையும் காண்க[தொகு] சைவ சமய மடங்கள் சைவ நெறி இலக்கியங்கள் சைவச் சிற்றிலக்கியங்கள் உலக சைவ மாநாடுகள் சைவக் கிரியை சைவ தத்துவங்கள் சைவத் திருமணச் சடங்கு சைவம் வலைவாசல் நாயன்மார் சமயக்குரவர் சந்தானகுரவர் ஆதாரங்கள்[தொகு] Jump up↑ திருமந்திரம் -1486 ↑ Jump up to:2.0 2.1 http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm Jump up↑ தமிழர் சமயம் - பாவாணர் Jump up↑ http://www.valaitamil.com/tamil-and-samayam_6859.html Jump up↑ வைதிக சைவம் - வேற்றுமையில் ஒற்றுமை Jump up↑ சென்னைப் பேரகரமுதலி - சைவ வகைகள் Jump up↑ அபிதான சிந்தாமணி : ப. 746 Jump up↑ http://218.248.16.19/slet/l5F31/l5F31s07.jsp?id=3640 Jump up↑ http://www.tamizhkavyathedal.com/letterSearch/?letter=%E0%AE%85 Jump up↑ சைவ சமயம் - வினாவிடை உசாத்துணை[தொகு] க. கணேசலிங்கம், சைவசித்தாந்த வினாவிடை, கொழும்பு, 2005 வெளி இணைப்புகள்[தொகு] சைவம்.ஒர்க் Myth of Divine Tamil - Article from Passions of the Tongue by Sumathi Ramaswamy சிவார்ச்சனா சந்திரிகை தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை [மறை] பா உ தொ சைவ சமயம் பட்டியல் • வலைவாசல் • வரலாறு சைவ சமயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் · பிரிவுகள் காஷ்மீர சைவம் · வீர சைவம் · சித்தாந்த சைவம் · கர்நாடக வீர சைவம் · பாசுபதம் · காபாலிகம் · மாவிரதம் · குறியீடுகள் திருநீறு · உருத்திராட்சம் · திருவைந்தெழுத்து · சூலாயுதம் · கடவுள்கள் சிவன் · ஆதிசக்தி · பார்வதி · விநாயகர் · முருகன் · நந்தி தேவர் · வீரபத்திரன் · காளி · பைரவர் · துர்கை · தாட்சாயினி · கங்கை · குபேரன் · கொற்றவை · தொண்டர்கள் நாயன்மார் · சமயகுரவர் · சந்தான குரவர்கள் · சிவஞான முனிவர் · ஆறுமுக நாவலர் · கமலை ஞானப்பிரகாசர் · குருஞான சம்பந்தர் · சொரூபானந்தர் · ஞானியார் அடிகள் · விரதங்கள் ஆனி உத்தரம் · உமாமகேசுவர விரதம் · சோமவார விரதம் · திருவாதிரை நோன்பு · திருவெம்பாவை நோன்பு · பங்குனி உத்தரம் · பிரதோச விரதம் ·மகா சிவராத்திரி · திருமடங்கள் மதுரை ஆதீனம் · ஆதீனங்கள் திருவாவடுதுறை ஆதீனம் · மயிலம் பொம்மபுர ஆதீனம் · விழாக்கள் ஆவணி மூலம் · கந்த சட்டி · கார்த்திகை விளக்கீடு · சித்திரா பௌர்ணமி · தைப்பூசம் · வைகாசி விசாகம் · பிரதோசம் · சிவராத்திரி · புராணங்கள் திருப்பூவணம் புராணம் · பஞ்சக புராணம் · தலங்கள் பஞ்சபூதத் தலங்கள் · பஞ்ச கேதார தலங்கள் · தேவாரத் திருத்தலங்கள் · திருவாசகத் திருத்தலங்கள் · தேவார வைப்புத் தலங்கள் ·திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள் · திருவிசைப்பாத் திருத்தலங்கள் · நாயன்மார் அவதாரத் தலங்கள் · கலைகள் திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள் · பட்டியல் • வலைவாசல் •
  6. Pashupata Shaivism[edit] Pashupata Shaivism: The Pashupatas (Sanskrit: Pāśupatas) are the oldest named Shaivite group.[16] The Pashupatas were ascetics.[17] Noted areas of influence (clockwise) includeGujarat, Kashmir and Nepal.[citation needed] But there is plentiful evidence of the existence of Pāśupata groups in every area of the Indian subcontinent. In the far South, for example, a dramatic farce called the Mattavilāsanaprahasana ascribed to a seventh-century Pallava king centres around a Pāśupata ascetic in the city of Kāñcīpuram who mistakes a Buddhist mendicant's begging bowl for his own skull-bowl. Inscriptions of comparable date in various parts of South East Asia attest to the spread of Pāśupata forms of Śaivism before the arrival there of tantric schools such as the Shaiva Siddhanta.[18] Shaiva Siddhanta[edit] Shaiva Siddhanta: Considered normative tantric Saivism, Shaiva Siddhanta provides the normative rites, cosmology and theological categories of tantric Saivism.[19] There is a dualistic dimension to Shaivism, as expounded by Meykandar. The pure, or Shuddha Saivism,however, proclaimed by Rishi Thirumular and his paramparai (guru lineage), is strictly non-dualistic, and proclaims the soul to be at all times one with Shiva. [20] This tradition was once practiced all over India. For example the theologians Sadyojoti, Bhatta Nārāyanakantha and his son Bhatta Rāmakantha (ca. 950-1000 AD) developed a sophisticated Siddhanta theology in Kashmir.[21] However the Muslim subjugation of north India restricted Shaiva Siddhanta to the south,[22] where it merged with the Tamil Saiva cult expressed in the bhakti poetry of the Nayanars.[23] It is in this historical context that Shaiva Siddhanta is commonly considered a "southern" tradition, one that is still very much alive.[24] Kashmir Shaivism[edit] Kashmir Shaivism: Kashmir Saivism, a householder religion, was based on a strong monistic interpretation of the Bhairava Tantras (and its subcategory the Kaula Tantras), which were tantras written by the Kapalikas.[25] There was additionally a revelation of the Siva Sutras to Vasugupta.[26] Kashmir Saivism claimed to supersede the dualistic Shaiva Siddhanta.[27] Somananda, the first theologian of monistic Saivism, was the teacher of Utpaladeva, who was the grand-teacher ofAbhinavagupta, who in turn was the teacher of Ksemaraja.[28][29] The label Kashmir Shaivism, though unfortunately now widely adopted, is really a misnomer, for it is clear that the dualistic Shaiva Siddhanta was also in North India at one point in time. Siddha Siddhanta[edit] Natha Siddha Siddhanta: Founded by Matsyendranatha (ca 800–1000) and expounded by Rishi Gorakshanatha (ca 950), this monism is known as Bhedabheda, embracing both thetranscendent Shiva as well as the immanent Shiva. Shiva is efficient and material cause. The creation and final return of soul and cosmos to Shiva are likened to bubbles arising and returning to water. Influential in Nepal, Uttar Pradesh, Bihar and West Bengal. Lingayatism[edit] Lingayatism: Made popular by Basavanna (1105–1167), this version of qualified nondualism, Shakti Vishishtadvaita, accepts both difference and nondifference between soul and God, like rays are to the sun. Shiva and the cosmic force are one, yet Shiva is beyond His creation, which is real, not illusory. God is efficientand material cause. Influential primarily in Karnataka. Shiva Advaita[edit] Shiva Advaita: This monistic theism, formulated by Srikantha (ca 1050), is called Shiva Vishishtadvaita. The soul does not ultimately become perfectly one withBrahman, but shares with the Supreme all excellent qualities. Appaya Dikshita (1554–1626) attempted to resolve this union in favor of an absolute identity—Shuddhadvaita. Its area of origin and influence covers most of Karnataka state. Shaivism left a major imprint on the intellectual life of classical Cambodia, Champa in what is today southern Vietnam, Java and the Tamil lands. The wave of Shaivite devotionalism that swept through late classical and early medieval India redefined Karnataka and Tamil Nadu. Shaivite worship legitimized several ruling dynasties in pre-modern India, incluidng the Chola and the Rajputs. A similar trend was witnessed in early medieval Indonesia with the Majapahit empire and pre-Islamic Malaya.[30][31] Nepal is the only country in the world where Shaivism is the most popular form of Hinduism.
  7. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிழலிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  8. வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
  9. வாத்தியார்,துளசி,கவிதை,புங்கை அண்ணா,சுமோ அக்கா தங்கள் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் நன்றி
  10. தங்கள் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் நன்றி கள உறவுகள் . வைதேகிக்கும், சோழியன் குடும்பத்தினருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். புத்தன் அண்ணைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .!
  11. வரலாறு அவனை என்றுமே நினைவுபடுத்தும்(லெப்.கேணல்.விக்டரின் நினைவாக..) - ச.ச.முத்து யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர். அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை. யாழ். மண்ணில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித பயமுமின்றி தமது இதயத்துள் இருக்கும் விடுதலை வீரனுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியபடி இருந்தனர். இரவு பகலாக அந்த ஊர்தி யாழ். மண்ணின் அனைத்து இடங்களுக்கூடாகவும் நகர்ந்தது. எமது மண்ணில் இருந்து சிங்கள இராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட வேண்டும். எமது மக்கள் அச்சமின்றிய வாழ்வு ஒன்று வாழவேண்டும் என்ற கனவு கண்ட அந்த வீரன் அந்த பேழைக்குள் இருந்தபடியே அவற்றை பார்த்து உண்மையில் மனம் நிறைந்திருப்பான். யாழ். மண் விடுதலைப் போராளிகளின் கைகளுக்குள் வருவதற்காக ஓய்வற்ற உழைப்பும் திறனும் காட்டிய அந்த வீரன் லெப்.கேணல் விக்டரின் இறுதி ஊர்வலம்தான் அது. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி இருபத்திஏழு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. விக்டர், இவனை எப்படி அடையாளப்படுத்துவது. அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் என்றா? பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் என்றா? களங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி என்றா?....எப்படியும் அவனை அடையாளப்படுத்தலாம். அத்தனை ஆளுமைகளும் அவனிடத்தில் இருந்தன. எந்த விடுதலைப் போராட்டம் என்றாலும் புரட்சி அமைப்பு என்றாலும் அதில் இணைபவர்கள் இரண்டு வழிகளில் இணைவார்கள். அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் மெல்லியதாக முளைவிடும் பொழுதிலேயே அதனை நிராகரித்து அதனில் இருந்து விடுதலைபெற என்று ஆரம்பித்திலேயே அமைப்பில் இணையும் வழி ஒன்று. அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் உச்சமாகி கொடிய கொலைவெறியாட்டத்தினூடாக உணர்வுபெற்று விடுதலை அமைப்பில் இணையும் வழி அடுத்தது. 1983 கறுப்பு யூலை இனப்படுகொலைகளுக்கு பின்னர் விடுதலை அமைப்புகள் வீச்சுப் பெறவும்,வீக்கம் பெறவும் ஆரம்பிக்க முன்னரே 1983 க்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தவன் விக்டர். 1981ன் இறுதிப் பகுதியில் விக்டரின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்டரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயிற்சிகளை ஆரம்பிக்கிறார். பயிற்சி முகாமின் உணவுப்பிரிவில் மூத்த உறுப்பினர்களான கிட்டுவும், ரஞ்சன்லாலாவும் இருக்கின்றனர். உடற்பயிற்சியாளராக செல்லக்கிளி அம்மான் இருக்கிறார். (விடுதலைப்புலிகளின் புகைப்படங்களில் மிகவும் புகழ்பெற்றதான செல்லக்கிளி அம்மான் ஒரு மரத்தின் கொப்புகளுக்குள் உப இயந்திர துப்பாக்கியுடன் குறிபார்த்தபடி நிற்கும் படம் இந்த பயிற்சியின்போதுதான் எடுக்கப்பட்டது) இந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த அதிகமானவர்கள் உறுதியிலும், விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய தெளிவிலும் தமது இறுதிக்கணம் வரைக்கும் மலையை நிகர்த்த உருக்கு உறுதியுடன் நின்றதற்கு காரணம் தலைவரின் நேரடி பயிற்சி, பயிற்சியின் பின்னான மாலைப் பொழுதுகளில் அமைப்பின் மூத்த உறுப்பினர்களான செல்லக்கிளி அண்ணா, சீலன், கிட்டு, ரஞ்சன், புலேந்திரன் ஆகியோர் உட்பட மற்றும் சிலரும் இணைந்த அனுபவ பங்கீடுகள். இவைகளேதான் விக்டரையும் ஒரு உன்னதமான போராளியாக, மிகப்பெரும் வீரனாக வரித்தெடுத்த காரணிகளாகும். சக போராளிகள் அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும் காட்டும் ஒரு பெரிய குழந்தையாக அவன் இருந்தான். அதிலும் பயிற்சிக்கு முன்னரும் பயிற்சிக்கு பின்னரும் அவன் இருந்த இளவாலைப் பகுதியில் அமைந்திருந்த வீட்டில் அவனுடன் இருந்தோர் இன்றும்கூட அவனின் நினைவுகளையும் செயல்களையும் ஒருவகையான பெருமிதத்துடனும் ஈர்ப்புடனும் கண்களில் ஒளிபொங்க நினைவு கூருவதை பார்க்கலாம். விக்டரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும் அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும். மிகவும் செறிவான வாகனப் போக்குவரத்தும், சிங்கள காவல்துறை,சிங்கள இராணுவ நடமாட்டம் என்பன அடிக்கடி நிகழும் திருநெல்வேலி வீதியில் இரவில் வீதியை குழிதோண்டி அதில் சக்கையை வைத்து எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்டர். விக்டர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்டரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும். மன்னார் பொலிஸ்நிலையம் மீதான தாக்குதலில் விக்டருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும்கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக கையாண்டவன் விக்டர். வெறும் தாக்குதல்களை மட்டும் நடாத்திக் கொண்டிருக்காமல் சிங்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னார் பிரதேசத்தின் பகுதிகளில் மக்கள் அமைப்புகளை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் விடுதலைப் போராட்டம் பற்றி தெளிவையும், அரசியல் அறிவையும் ஊட்டுவதிலும் விக்டரின் செயற்பாடுகள் மிகவும் ஆழமாக அமைந்திருந்தன. அவன் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்டதற்கு பின்னால் மக்களுடனான அவனின் ஆத்மார்த்தமான தொடர்பே காரணமாகும். விடுவிக்கப்பட்ட மன்னார் நிலப்பகுதியில் விக்டர் பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை தாய்மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன்.விக்டர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காட்டிய உறுதியும், தலைமைப் பண்பும், வீரமும் மிகவிரைவாகவே அவனை விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் என்ற அதியுச்ச நிர்வாக மையத்துக்குள் உள்வாங்கி கொண்டது. சிங்கள தேசத்தின் இராணுவத்தினரை தமிழீழ மண்ணில் இருந்து துரத்தும் நடவடிக்கை தினமும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடப்பதும்,சிலவேளைகளில் முகாம்களை விட்டு சிறிய தொகையாக வெளிவரும் இராணுவத்தினரை உடனடியாக அந்த பகுதிக்கு விரையும் விடுதலைப்புலிப் போராளிகள் விரட்டியடிப்பதும் அன்றாட நிகழ்வுகள் அப்போது. அப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன்நகருக்குள் ராணுவம் நுழைந்துவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து கருக்காய்க்குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும்,நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்டரின் தலைமையில் நுழைந்து விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குலில் சிங்கள இராணுவத்துக்கு துணையாக கெலிகொப்படரும் வந்து தாக்குதலை ஆகாயத்தில் இருந்து நடாத்தியபோதும் வீரமுடன் போரிட்ட அந்த தளபதி எதிரியின் சன்னம் ஒன்று நெஞ்சுக்குள்ளாக புகுந்து சென்றுவிட வீரமரணமடைகிறான். ஒருமாமலையின் சரிவாக விக்டரின் மரணம் அமைப்பை உலுக்கியது அந்த பொழுதில். தலைமை கொடுக்கும் பணியை செயற்படுத்தும் திறனும், அதனை செயற்படுத்தியே தீரவேண்டும் என்ற இலட்சிய உணர்வும் உடைய ஒரு பெருவீரன் அவன். விக்டர் மரணித்த அந்த சண்டையில்தான் முதன்முதலாக பெண்கள் அணி தாக்குதலில் நேரடியாக இறக்கப்பட்டனர். நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் விக்டரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த சண்டையில்தான் முதன்முதலாக சிங்கள இராணுவத்தை செர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்படுகிறார்கள். 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோரே பிடிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினர். விக்டர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில்கூட அவன் இன்னொரு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும் இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான். சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர். சிங்கள தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும், சிங்கள தேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலி சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப்புலிகளான அருணாவையும், காமினியையும் விடுவித்தனர்.அதற்கு பரிமாற்றமாக அடம்பன் சண்டையில் பிடிக்கப்பட்டவர்களை கிட்டு விடுவித்தார். இப்போது பார்த்தால் இது சிறிய சம்பவமாக தெரியும். ஆனால் அன்றைய பொழுதில் இது ஏற்படுத்திய எழுச்சியும் மன உறுதி ஏற்றமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. இப்போது இருபத்திஏழு ஆண்டுகள்கடந்து விட்டது. விக்டர் என்ற என்ற அற்புதமான வீரனின் நினைவுகளும், மாசுமறுவற்ற அவனின் உன்னதமான இலட்சிய பற்றும் என்றென்றும் எமது மக்களால் இதயத்தின் ஆழத்திலிருந்து நினைவு கொள்ளப்படும். என்றாவது ஒருநாள் விடுதலைப்புலிகள் தலைமை விக்டரின் இதுவரை பதியப்படாத பக்கங்களையும்,அவற்றில் தலைமையின் கட்டளையை ஏற்று அவன் செய்ய வீரத்தையும் பதிவுசெய்யும் போது நிச்சயமாக ஒரு உன்னதத்திலும் உன்னதமான வீரனாக அவன் இன்னும் உயர்ந்து தெரிவான். http://www.pathivu.com/news/27482/57//d,article_full.aspx
  12. பிறந்த நாளைக் கொண்டாடும் விசுகு ஐயாவிற்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.
  13. தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார். ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்.. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வான்படையினை உருவாக்கி வரலாறு படைத்த கேணல் சங்கர் அண்ணா அவர்கள் 26.09.1998 அன்று சிறீலங்கா படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்து 15ஆம் ஆண்டு நினைவு நாட்களையம் இன்றைய நாளில் நினைவிற்கொள்கின்றோம்.. திலீபன் ஒருஈடுஇணையற்ற மகாத்தான தியாகத்தை புரிந்தான் அவனது மரணம் ஒருமாபெரும் வரலாற்று நிகழ்வு தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி. எனது அன்பார்ந்த மக்களே.. திலீபன் யாருக்கா இறந்தான் எதற்காக இறந்தான் அவனது இறப்பின் அர்த்தம் என்ன? அவனது இறப்பு ஏன்ஒரு மகத்தான நிகழ்சியாக மக்கள் எல்லோரையும் எழுச்சிகொள்ளசெய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்ததுதிலீபன் உங்களுக்காக இறந்தான் உங்கள் உரிமைக்கா இறந்தான் உங்கள் மண்ணுக்காக இறந்தான் உங்கள் பாதுகாப்பிற்காக சுதந்திரத்திற்கா கௌரவத்திற்காக இறந்தான் தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்கா ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தை செய்யமுடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான் ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம்.. என்றும் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஈகைச்சுடன் லெப்ரினன் கேணல் திலீபன் நினைவாக தெரிவித்துள்ளார். பாரதம் தான் எமது இனப்பிரச்சனையில் தலையிட்டது பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதம் அளித்தது.பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது பாரதம் தான் எமது ஆயதப்போராட்டத்தை நிறுத்திவைத்ததுஆகவே பாரத அரசிடம் தான் நாம் உரிமைகோரி போராடவேண்டும் எனவேதான் பாரதத்துடன் தர்மயுத்த அம்பை தொடுத்தான் திலீபன். அத்தோடு அகிம்சை வடிவத்தை ஆயதமாக எடுத்துக்கொண்டான் நீராகாரம் கூட அருந்தாது மரணநோன்பை திலீபன் தழுவிகொள்வதற்கு 24மணிநேரம் முன்பே இந்திய தூதர் டிக்சிற்கு முன்னறிவித்தல் கொடுத்தோம் ஆனால் எதுவும் நடைபெறவில்லை அதற்கு மாறாக திலீபனின் உண்ணாவிரதத்தை கேவலமாக கொச்சைப்படுத்தியது என்றும் தமிழீழ விடுதலை போராட்டத்தின் நீண்டகால நிகழ்வுகளை தலைவர் அவர்கள் அன்றே சொல்லியிருந்தார். http://www.sankathi24.com/news/33606/64//d,fullart.aspx
  14. மின்னல் முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மின்னல் படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 17.09.1991ம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின், 2ம் லெப். மில்ராஜ் ஆகிய மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படையினருடன் 17.09.2006 அன்று ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் விதுசன், லெப்.கேணல் கலைச்செல்வன் மற்றும் லெப்.கேணல் ஸ்ரிபன், லெப்.கேணல் லிங்கவேந்தன் உட்பட்ட கடற்புலிகளினதும் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். https://www.facebook.com/photo.php?fbid=234050963415604&set=pcb.576842549029674&type=1&theater
  15. கிருபன் அண்ணாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
  16. லெப்.சாள்ஸ்அன்ரனி (சீலன்) முப்பதாவது நினைவுதினம்! – ச.ச.முத்து தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதற்பிரிவு பொறுப்பாளனாக இருந்த லெப்.சாள்ஸ்அன்ரனி(சீலன்) முப்பதாவது நினைவுதினம் 15.07அன்று வருகின்றது. அவனின் நினைவு சுமந்த ஆக்கம் இது சிலவேளைகளில் மௌனத்தைப்போல ஆழமான மொழி வேறெதுவும் இல்லாமல் இருக்கும். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வை ஒருசில நிமிட மௌனம் உயிர்ப்பாக வெளிப்படுத்திவிடும். இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் 1983ம்ஆண்டின் இதே யூலை மாதத்து 15ம் நாளில் நீர்வேலியில் ஒருஆசிரியரின் வீட்டில் அமைந்திருந்த தங்குமிடம் ஒன்றின் அறையில் அமர்ந்திருந்த தேசிய தலைவருக்கும் சில போராளிகளுக்கும் முன்னால் இரத்தம் வடியும் கை காயத்துடன் நின்றபடி ‘அருணா’ சொன்னதைக் கேட்டதும் சோகம் இழப்பு பிரிவு கவலை என்பவற்றைவிட நீண்ட மௌனமே நிலவியது. உயிரை உலுக்கும் மௌனமாக அது இருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தாக்குதல் பிரிவுத் தளபதி ‘சீலன் வீரமரணம்’. எல்லோருடனும் அன்பாக நட்புடன் பழகும் சீலனின் மரணத்தை கேள்விப்பட்ட அந்தக் கணத்தினதும் அதன்பின் நீண்ட நிமிடங்களான மௌனமுமே அவனின் மரணத்தின் வலியை காட்டிநின்றது. சீலன்.பார்க்கும் முதல்க்கணத்திலேயே மனதுக்கு அண்மித்து வரக்கூடிய பேச்சும் பழக்கமும் தோற்றமும் அவனுக்கு. எழுபதுகளின் இறுதியில் திருமலையில் இருந்து இயக்கத்துக்கு வந்தவன். ஆனால் சீலன் இயக்கத்துக்கு வர முன்னரேயே அவனின் சிங்களதேசக்கொடி எரிப்பு பற்றிய நுணுக்கமான திட்டமிடலும்இ வீரமும் அமைப்புக்குள் அதிகமாக பேசப்பட்டதாக இருந்தது. ஆதலால் சீலன் இயக்கத்துக்கு வரும்போதே அதிகம் அறியப்பட்டவனாகவே வந்து சேர்ந்தான். திருமலை பாடசாலையில் ஏற்றப்பட்ட சிங்களதேசகொடிக்குள் ‘பொசுபரசை’ எப்படி வைத்தான்’ என்பதே அவனை முதலில் பார்த்து பழகும் இயக்க உறுப்பினர்கள் கேட்கும் கேள்வியாக இருந்தது. அவனும் சலிப்பு இல்லாமல் எல்லோருக்கும் அழகாக சொல்லியும் காட்டுவான்.சீலனின் உடல்மொழி மிகவும் அற்புதமானது.அதுவே ஆயிரம் கதை சொல்லும். இயல்பாகவே சீலனுக்குள் உறுதியான இலட்சியப்பற்றும் மக்கள் மீதான புரிதலும் நிறைந்தே காணப்பட்டது. அவன் தனது பாதைபற்றியும் அதனிடையேயான பெரும் வலிகள் பற்றியும் மிகத்தெளிவாக புரிந்தவனாகவே இருந்தான். இதைவிட வேறு பாதை எதுவும் இல்லை என்பதிலும் அவன் குழப்பமின்றியே இருந்தான். அவன் எந்தப்பொழுதிலும் அறைக்குள் சுருண்டு கிடந்ததையோ விரக்தியுடன் பேசாமல் இருந்ததையோ எவருமே பார்த்திருக்க முடியாது. செயல் மட்டுமே அறிந்த ஒரு மறவன் அவன். அதிகாலை எழுந்து முதல் இரவு படுக்கபோகும் வரைக்கும் விடுதலைக்கான ஏதாவது ஒரு வேலைத்திட்டம் சம்பந்தமாக அசைந்துகொண்டே இருந்தவன். ஒன்றில் தாக்குதலுக்கான தரவுகள் எடுக்கும் பணியில் அலைவான். இல்லையென்றால் தாக்குதலில் எடுத்த ஆயுதத்தை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக வைப்பதில் திரிவான். அதுவும் இல்லையென்றால் யாராவது ஒருவருடன் விடுதலைப்போராட்டத்தின் அவசியம் பற்றி பேசிக்கொண்டு நிற்பான். அவனின் பேச்சும் முழுமூச்சும் தாயக விடுதலையே என்று இருந்தது. இரண்டு முறை பெரிய காயங்களை அவன் போராட்ட வாழ்வில் பெற்று சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த காலத்தைத் தவிர்ந்த அனைத்து தாக்குதல்களிலும் தலைமையாளனாக நின்றவன் சீலன். விடுதலைப் போராட்டத்தின் வளைவுகளில் இருந்து வேகம் பெறவும் தடைகளை நீக்கவும் பின்னர் வந்த காலங்களில் தலைவரால் அறிமுகம் செய்யப்பட்ட ‘தற்கொடை’ முறையை முதலில் அமைப்புக்குள் ஒரு திட்டமாக வெளிப்படுத்தியவன் லெப்.சீலன் ஆகும். 1982ம் ஆண்டில் சென்னையில் தலைவருக்கும் உமாமகேஸ்வரனுக்குமான பாண்டிபஜார் துப்பாக்கி மோதலில் தலைவர் கைதுசெய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விடுதலைப்புலிகளின் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டது அறிந்து அந்நேரத்து சிங்கள சனாதிபதி ஜெயவர்த்தனா தனது சகோதரனை இந்தியாவுக்கு அனுப்பி போராளிகளை சிறீலங்காவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை முன்வைத்தார். இந்தியாவும் அதை பரிசீலிப்பதாக சொல்லி இருந்தநேரம் அது. அந்த நேரம் மதுரையில் இருந்த சீலன் சிறையில் இருந்த தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினான். ‘தலைவரை சிறீலங்காவுக்கு அனுப்பும் முடிவை இந்தியா எடுத்தால் அதை எதிர்த்து கடிதங்களையும்இ துண்டுப் பிரசுரங்களையும் எடுத்துச்சென்று சென்னையின் மிக உயர்ந்த கட்டிடமான ‘எல்.ஐ.சி’ க்கு மேல் இருந்து குதிக்ப்போவதாக அதில் குறிப்பிட்டு இருந்தான். போராட்டத்தை தேக்கநிலையில் இருந்து மேல் தள்ளும் கரும்புலிகளின் போர்முறை போலவே முதலில் இது சீலனால் வெளிப்பட்டது. தமிழர்கள் பலமற்று இருப்பதால்தான் எதிரி எம்மீது கொடும் வெறியாட்டத்தை ஏவிவிடுகிறான். பலமான இனமாக எமது இனம் மாறவேண்டுமானால் ஆயுதங்களை எதிரியிடம் இருந்து பறிக்கவேண்டும் என்று பாடுபட்டவன். பொன்னாலை பாலத்தில் கடற்படை வாகன அணிமீதான தாக்குதல் முயற்சி நெல்லியடி சந்தியில் சிறீலங்காகாவல்துறை வாகனம்மீது தாக்குதல் சாவகச்சேரிகாவல் நிலையம் மீதான தாக்குதலும் தகர்ப்பும் முதன் முதலில் சிங்கள ராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதல் கந்தர்மடம் வாக்குசாவடி மீதான தாக்குதலும் ராணுவ அழிப்பும்… என்று மிகநீளமானது அவனின் களவரிசை. தாக்குதலுக்கான அனைத்து வளங்களையும் அவனே முன்னின்று செயற்படுத்துவான். தாக்குதலுக்கான நாள் முடிவானது முதல் நித்திரை இல்லாமலும் ஓய்வு இல்லாமலும் சீலனும் அவனின் சைக்கிளும் இயங்கிக்கொண்டே இருக்கும். எல்லா நடவடிக்கைகளிலும் ஒப்புவமை இல்லாத வீரத்தையும் நுண்அறிவையும் வேகத்தையும் காட்டிவன் சீலன். எமது மக்கள் அனைவருக்கும் போராட்டத்தின் அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்படவேண்டும் என்பதில் மிகவும் விடாப்பிடியாக செயற்பட்டவன். சிங்களபடைகளால் மிகவும் தேடப்பட்டவனாக அவன் விளங்கிய காலத்தில்கூட தினமும் பல்கலைகழகத்தினுள் சென்று அங்கும் யாருனாவது போராட்ட நடைமுறை பற்றியும் நகர்வு பற்றியும் கதைத்துக்கொண்டிருந்தவன் சீலன். அவன் மரணிப்பதற்கு ஆறு ஏழு மாதங்களுக்கு முன்னர் தலைவருக்கு இந்தியாவுக்கு எழுதிய கடிதத்தில் ‘போராளிகளை பார்த்து ஒதுங்கிய மக்கள் எல்லோரும் இப்போது போராளிகளாக மாறிவருகின்றனர்’ என்று எழுதிய கடிதத்தில் எமது மக்களின் தெளிவுபற்றிய அவனின் பார்வை புலப்படுகின்றது. அவனின் போராட்ட வாழ்வில் அவன் மிகவும் அலைக்கழிந்தது அறைகள் எடுப்பதற்காகத்தான். தேடப்படும் போராளிகள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏதாவது தங்குமிடம் தேவை. வீடுகளை வாடகைக்கு எடுக்க முடியாத பொருளாதார நிலை அமைப்புக்கு அப்போது. அறைகள்தான் எடுக்க முடியும். அதுவும் பல்கலைக்கழகத்தில் படிப்பதுபோன்றுஇ அல்லது வேறு படிப்பு படிப்பது போன்றுதான் எடுக்கக்கூடிய நிலை. எடுக்கும் அறையில் எந்த நேரமும் இருந்தால் வீட்டு உரிமையாளனுக்கு சந்தேகம் வரும். வேறு யாரும் அடிக்கடி வந்து போனாலும் பிரச்சனைதான். இதனால் எந்த இடத்திலும் தொடர்ச்சியாக நீண்டகாலம் தங்கி இருக்க முடிந்ததில்லை. அப்பையா அண்ணை இயக்கத்துக்கு வந்த பின்னர் அவரை ‘சித்தப்பா’ பெரியப்பா என்று உறவுசொல்லி அறைகளை வாடைக்கு எடுக்க முடிந்தது. இப்படித்தான் ஒருமுறை தேங்காய் வியாபாரம் செய்பவர்கள் என்று சொல்லி அரியாலைப்பகுதியில் ஒரு வீட்டின் அறைகளை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். ஒரு சிறிய பச்சைநிற வாகனத்தில் தேங்காய்களை வாங்கி உரித்து சந்தையில் விற்பவர்கள்போல சீலனும் அப்பையா அண்ணையும் சங்கரும் வேறும் ஓரிரண்டு போராளிகளும் அங்கு இருந்தார்கள்.சீமேந்துதொழிற்சாலையில் வேலைசெய்பவர்கள்போல பாடசாலைஆசிரியர்போல பல்கலைகழகமாணவன்போல என்று எத்தனை எத்தனை முகங்களுடன் இந்த விடுதலைப்போராட்டகளத்தில் கரந்துறைந்து திரிந்தான் சீலனின் தனித்த இயல்புகளில் மிகச்சிறப்பானது என்னவென்றால் எதையும் ஆழமாக முழு ஈடுபாட்டுடன் செய்வது ஆகும். இதனை அவன் தனது தாக்குதல்களின்போது மட்டும் இல்லாமல் எல்லாவிடங்களிலும் வெளிப்படுத்தியவன். ஒருமுறை தாக்குதல் ஒன்றின் போது மக்களுக்கு கொடுப்பட இருந்த துண்டுப்பிரசுரத்தை வடிவமைக்கவும் அதில்வரும் வசனங்களை தெரிவுசெய்வதிலும் மிக நீண்டபொழுதுகளை செலவழித்தவன். சிங்கள ராணுவவீரனுக்கு ஒரு விடுதலைப்புலி வீரனின் கடிதம் துண்டுப்பிரசுரம் முதன்முதலில் எம்மால் வடிவமைக்கப்பட்டபோது அந்த துண்’டுபிரசுரத்தின் அநேகமான வசனங்கள் சீலனின் தெரிவாகவே இருந்தன.எதனையும் தெளிவாக இலகுவில் புரியக்கூடியதாக சொல்லவோ எழுதவோ வேண்டும் என்பதே சீலனின் முக்கிய கருத்தாகும். மக்களை தெளிவானவர்கள் ஆக்கவேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பான். நிறைய புத்தகங்களை வாசித்தான். அவனின் இருப்பிடம் எப்போதும் புத்தகங்களால் நிறைந்தே காணப்பட்டன. சில வேளைகளில் ஆயுத நடவடிக்கைகளின்போதும் தாக்குதல் நடவடிக்கைகளின் போதும்கூட சீலன் அங்கு நிற்கும் பொதுமக்களுக்கு போராட்ட நோக்கம் பற்றியும் விடுதலைப்புலிகள் பற்றியும் உரத்தகுரலில் கூறத்தொடங்கிவிடுவான். ஒரு கையில் இயந்திரத் துப்பாக்கியுடன் நின்றுகொண்டு அவன் சொல்லும்போது மக்களும் ஆர்வமாக கேட்டார்கள். ஒருமுறை பருத்தித்துறையில் 1983ம் ஆண்டுப்பகுதியில் சிங்களகட்சி ஒன்றின் பொறுப்பாளர் மீதான நடவடிக்கையின்போது அருகில் இருந்த பொதுமகன் ஒருவரும் தவறுதலாக காயமடைந்தபோது நடுத்தெருவில் வீழ்ந்துகிடந்த அந்த பொதுமகனிடம் பல நூறு மக்கள் பார்த்துநிற்க சீலன் மன்னிப்புக்கேட்டதுடன் தனக்கும் போராட்டத்தின்போது இப்படியாக தவறுதலான வெடிக்காயங்கள் ஏற்பட்டன என்று தனது காயம்பட்ட நெஞ்சை திறந்துகாட்டி விளக்கமும் சொன்னான். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒவ்வொரு சிறிய அசைவையும் வளர்ச்சியையும் அவன் மிக அவதானமாக திட்டமிட்டு செயற்படுத்தினான். தலைவருக்கு அடுத்தபடியாக இந்த அமைப்பின் வளர்ச்சியை செப்படினிட்டவன் சீலன் ஆகும். அந்த இறுதி நேரத்திலும் தமிழினத்தின் விடுதலைக்கான ஆயுதம் எதிரியின் கையில் வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக ‘தன்னை சுட்டுவிட்டு ஆயுதத்துடன் தப்பும்படி’ அருணாவுக்கு உத்தரவிட்டு வீரமரணத்தை மிகத்தெளிவுடன் ஏற்றுக்கொண்டவன். இன்றைய பொழுதும் அப்போது சீலன் போராடியகாலத்தைப் போன்றே எதிரியால் முழுதுமாக சூழப்பட்டு உள்ளது. அன்றையபொழுதைவிட குழப்பமானதாக இன்றையநிலை இருக்கின்றது. ஆனாலும் சீலன் இப்போது இருந்தால் அன்றைய நாட்களைப் போலவே அதே உறுதியுடனும் தெளிவுடனும் எல்லோருக்கும் வழிகாட்டி முன்னுக்கு சென்றுகொண்டிருப்பான். இன்றுவரை சீலனின் ஏதாவதுஒரு நினைவு இந்த போராட்டத்தின் ஏதாவது ஒரு அசைவில் இருந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் அவன் மிக ஆழமாகவும் உண்மையாகவும் இந்த தாயக விடுதலையை நேசித்தவன். அவனுடைய விடுதலை மீதான விருப்புத்தான் அவனை ஓய்வில்லாமல் போராடவைத்தது. அவனுக்கு நாங்கள் ஆயிரம் ஞாபகக்குறிப்புகளை பெரும் புத்தகங்களாக எழுதலாம். அதைவிடசெறிவான கவிதைகளை வடித்து அவனின் தியாகத்தை போற்றலாம். இவை எல்லாவற்றையும்விட தேசியத் தலைவர் தனது முதன் முதலான பத்திரிகைப் பேட்டியான ‘SUNDAY’ க்கு 1984ம் ஆண்டில் கொடுத்த பேட்டியில் 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் சிங்களராணுவ அணி மீது தொடுக்கப்பட்ட தாக்குலானது சீலனது மரணத்துக்கு பதிலடியா? என்று கேட்கப்பட்டபோது மிகத்தெளிவாக தலைவர் கூறுகிறார். ‘எங்களைப் பொறுத்தவரையில் சார்ல்ஸ் அன்ரனி (சீலன்) போன்ற உன்னதப் புரட்சிவாதியின் விடுதலை வீரனின் உயிருக்கு ஒருபோதும் பன்னிரண்டு ராணுவ வீரர்களின் உயிர்கள் ஒருபோதும் ஈடாகாது’ என்று. எக்காலத்திலும் ஈடும் இணையும் இல்லா பெரும் போராளியாகவே சீலன் திகழுவான். எங்களின் மக்களுக்கு சுதந்திரவாழ்வை பெற்றுத்தரப் போராடிய அந்த வீரன் தனது பெருவிருப்ப பாடலாக எந்நேரமும் பாடிய பாடலைப்போன்றே அவனும்.. ‘அதோ அந்த பறவை போல… திருமலையின் ஒரு வறிய குடும்பத்தில் இருந்து சிறகுவிரித்து தாயகவிடுதலைக்காக களமாடி மீசாலை-கச்சாய் வெளியில் மரணித்த அந்த விடுதலைப் பறவையின் சிறகசைப்புகள் இன்றும் ஏதோ ஒரு வடிவில் அதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தாயகம் மீட்கப்படும்வரை அந்த பறவை ஓயாது. அதோ அந்தப் பறவைபோல பாடவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்’ ச.ச.முத்து www.irruppu.com
  17. "கடற்கரும்புலி கப்டன் வினோத்" மிழீழ முகநூல் தமிழர்களின் குரல் "கடற்கரும்புலி கப்டன் வினோத்" ============= 1988ம் ஆண்டுக் காலப்பகுதி…. வினோத்தின் வீட்டை இந்தியப் படைகள் அடிக்கடி சுற்றி வளைத்தனர். அவனைத் தேடி இந்திய சிப்பாய்கள் அங்கு பாய்வதும் வழமை யாகிவிட்டது. அந்த ஆபத்தான பொழுதுகளில் , வீட்டுக் கூரைக்குள் ஏற்றி பெற்றோரால் அவன் மறைத்துக் காக்கப்படுவான். மேலேயிருந்து – ” சயனைட் ” குப்பியைப் பற்களுக்கிடையில் செருகிக்கொண்டு எதனையும் எதிர்பார்த்து நொடிகளை எண்ணிக்கொண்டிருப்பான் வினோத். வினோத்தின் அக்கா சொல்கிறாள் …. ” அந்த நேரத்தில் சின்னச் சின்ன ‘ கானு ‘ களுக்குள்ள ( கொள்கலன் ) என்னவோ கொண்டு வந்து , வீட்டு மூலையளுக்குள்ள வைப்பான். ‘ என்னடா இது ‘ என்று கேட்டால் , ‘ அதுக்குள்ளே தண்ணீர் அக்கா… ‘ என்றுவிட்டு போயிடுவான். அவன் போனதுக்குப் பிறகு தூக்கிப் பார்த்தா , அது தண்ணீர் இல்லை – இறுக்கமாக , பாரமாகக் கணக்கும் …. எங்களுக்கும் அது என்னென்று தெரியவில்லை. ” யாரும் எதிர்பாராத ஓர் அதிகாலைப் பொழுதில் – திடீரென வீட்டிற்குள் நூலைந்த இந்தியர்களிடம் , வினோத் சர்ந்தப்பவசமாகச் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. வீட்டில் எல்லோரும் பார்த்து நிற்க துவைத்து எடுத்துவிட்டு , அவர்கள் அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். வினோத்தின் அப்பா சொல்கிறார் …. ” அவனொரு பயங்கரச் சுழியனடா தம்பி…. அவனை இந்தியன் புடிச்சுக் கொண்டு போய காம்பில் வைத்திருக்கேக்க ஒரு நாள்…. வீட்டு விராந்தையில் கிடந்த வாங்கில படுத்திருந்தான் – தற்செயலா லேனைப்பார்த்தேன் , சுவரோட சேர்த்துப் பூட்டியிருக்கிற லைற்றின்ர கோப்பைக்கு மேலால , சாதுவா , கறுப்பா என்னவோ தெரிஞ்சுது. கதிரையைக் கொண்டுபோய் வைத்திட்டு ஏறி எடுத்தனடா மோனை – அது ஒரு கிறனைட். அப்படியே நிண்டு எட்டிப் பாத்தன் , பக்கத்த பக்கத்தை இருக்குற நாலு லைற்றுக்கையும் கிறனைட் வைத்திட்டு போயிருக்கிறான். இயல்பாகவே மற்றவர்களோடு நெருங்கிப் பழகி - அவர்களை மகிழ்வில் ஆழ்த்தக்கூடிய சுபாவம் கொண்டிருந்த வினோத்தின் அப்பா தன பிள்ளை பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ” இந்தியனிடம் பிடிபட்டு காங்கேசன்துறை காம்பில இருக்கேக்க - நாங்கள் அவனைப் பார்க்கப் போறனாங்கள். அங்கபோற நேரமெல்லாம் , வீட்டில தான் வைத்துவிட்டுப்போன சாமான்களைப் பற்றித்தான் தம்பி சொல்லுவான்…. எங்களைப் பற்றி இல்லை. அதுகளைப் பத்திரமா எடுத்துப் பெடியளிட்டை குடுத்து விடோணும் என்கிறதிலதான் அவன்ர கவனமெல்லாம் இருக்கும். ” இந்தியப்படை இங்கிருந்து வெளியேற்றப்பட்ட போது , ஏனையவர்களுடன் வினோத்தும் விடுவிக்கப்பட்டான். ‘ தமிபி வந்திட்டான் ‘ என எல்லோரும் மகிழ்ட்சியடைந்திருந்த போது , 22ம் நாள் வினோத் திரும்பவும் காணாமல் போய்விட்டான். அதன் பின் அவன் இடைக்கிடை வீட்டுக்கு வந்து போவான். திரும்பவும் சிங்களப் படையினருடன் சண்டை ஆரம்பித்து சில நாட்களே நகர்ந்திருந்தன…. ஒரு நாள் வினோத் வீட்டிற்கு வந்தான். வரிப்புலிச் சீருடையில் , ” மிலிற்றறி ” சப்பாத்துப் போட்டு ஒரு கையில் துப்பாக்கியுடன் , மறுகையில் புகைப்படக் கருவி ஒன்றையும் கொண்டு வந்தான். வீடில் எல்லோருடனும் சேர்ந்து படம் எடுத்தான். அக்காமாரைக் கட்டிப்பிடித்தபடி…. அக்காமாரின் குழந்தைகளைத் தோளில் வைத்தபடி … ஆச்சியோடு நின்று… எல்லாவிதமாகவும் படமெடுத்தான். ” என்னடா புதினமாக இன்றைக்கு எல்லோரையும் படம் எடுக்கிறாய்…? “ அக்கா கேட்டாள். ” ஒன்றுமில்லை அக்கா …. நானொரு வேலையாகத் தூர இடத்திற்குப் போறான்… திரும்பி வரமாட்டன்… “ சிரித்துக்கொண்டு சொன்னான். அண்ணனின் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு , ” உன்ர சித்தப்பா இனி வரமாட்டான்…. இறுக்கிக் கொஞ்சிவிடு…. என்று சொல்லிக் கொஞ்சினான். ” ‘… எங்களுக்கு அது அப்போது அவ்வளவு விளங்கேல்லை..’ வல்வெட்டித்துறையில் கடற்கரையோரமாக அவர்களுடைய வீடு இருந்தது. அங்கு பீரங்கிக் கப்பல்களின் தொடர்சியான தாக்குதல்கள் நிகழும். இதன் காரணமாக , கொடிகாமம் சென்று அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அம்மாவையும் , அப்பாவையும் வினோத் சென்று பார்த்தான். கட்டி அனைத்துக் கொண்டு படம் எடுத்த்தான். அம்மா கேட்டபோது – அக்காவுக்குச் சொன்ன அதே காரணத்தை இங்கேயும் சொன்னான். அவர்களாலும் வித்தியாசமாக எதனையும் உணர முடியவில்லை. ” நேவி அடிக்கிறான்னேன்று அலைந்து திரியாதீங்கள் அம்மா…. ஊரிலே போய் இருங்கோ…. ஒரு நாளைக்கு…. எங்களின் கடல் எங்களிடம் வரும் “ என்று சொல்லிவிட்டுப் போனான். அதன் பிறகு ஒரு நாள் கூடத் தங்களுடைய செல்வத்தை அவர்கள் காணவில்லை. இனிமேல் காணவுமாட்டார்கள். இப்போதும் வினோத்தின் அம்மா அவனைத் துயரத்தோடு நினைவு கூறுகிறார். ” சின்னவனாய் இருக்கேக்க , என்னை வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அண்ணை , அக்காமார் எல்லோரும் கலியாணம் செய்து போனதுக்குப் பிறகு , அம்மாவையும் அப்பாவையும் நான்தான் பார்ப்பன் …… என்று சொல்லுவானடா தம்பி. ”
  18. சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் சிறப்புத்தளபதி லெப் கேணல் வீரமணி அவர்களின் 7 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று 24-05-13 சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு. சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்லவேண்டியதாய் காலம் சபித்துவிட்டது.கேடுகெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் சாவுகொள்ள முடியாமல் வெட்கம்கெட்ட தனமாய் கடற்கரையில் சாவுகொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவுவரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடுபோடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்துநிற்க. பிள்ளையார் தன் கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியதுபோன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன் குறிப்புப் புத்தகத்தில் வேவுத்தகவல் வரைந்துகொண்டு வருவான். எதையென்று சொல்வது. மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் சொல்கிறார், புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான் என்று. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றில் மறக்கமுடியாத கதையொன்று. சத்ஜெய படை நடவடிக்கையின்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் படையினரின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல்வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. படையினரின் அவதானிப்பு நிலையங்கள், தொடர் சுற்றுக்காவல்கள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக்கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் படையச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டுபிடிப்பதே கடினமான பணியாயிருந்தது. நெருங்கவிடாது வெளியே செயற்பட்டுக்கொண்டிருந்த படையினர் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலமையில் படைத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள்நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்விகண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி உள்ளே அனுப்ப முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளேபோக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான். உள்ளே வெற்றிகரமாகச் சென்றுவிட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு அடிவாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. வெளியே வேவுக்கு அனுப்பிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை. செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவுவீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடிவாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டுசென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு படையினரைப் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் மயங்கிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்தபோது அந்த படையினர் என்பது எங்கள் வீரமணியும் சக வேவுவீரனும் என்பது தெரியவந்தது. கிளிநொச்சியில் உள்நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் வெளிவந்த வீரமணி பெறுமதிவாய்ந்த தகவல்களோடும் சகிக்கமுடியாத வாழ்வனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக்கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று. செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான. அவனைப் பெற்றவள் அறியக்கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இருநாளும் தளத்தைச் சுற்றிப்பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாம். ஓவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித்துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும் தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டுவந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான். சிறிலங்காவின் 50வது விடுதலை நாளிலில் கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பேரூந்து விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை – 02இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத போர்க்களமும் இல்லை, இவன் வேவுபார்க்காத படைத்தளமும் இல்லை. ஒரு போராளி சொன்னான். ”என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லிவிட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப்போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு ‘அத்த உசப்பாங்’ என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்கவைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கிடையில என்னையும் இழுத்துக்கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான்.” இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்தபோது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் படைகள் அவனைச் சல்லடைபோட்டுத் தேடின. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒரு பற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்கமாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடைபோட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான். “மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சுபோய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தம். ஆமி றோட்டால ‘ரக்ரரில’ போனவங்கள், நிப்பாட்டிப்போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சுகொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப்பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் ‘அறுவார் நித்திரைகொள்ளவும் விடாங்கள்போல கிடக்கு’. எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந் தடியள இழுத்துக்கொண்டுபோய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்.” “வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப்போட்டுத்தான் சாவான்.” சொல்லிப்போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் ”ச்சா வீணா இழந்திட்டம்.” வீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக்கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போர்க்களத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும். வேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க்கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்றுவிட்டோம். இராணுவத்தின் தடைக்குள்போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத்தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போகவேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டுவிட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டுவிட்டு சுற்றிவளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டுவிட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணி சுற்றிவளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒரு மார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண “ஓடுங்கடா தடைக்குள்ள” என்றுவிட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம்போய் இருந்துகொண்டோம். சுற்றிவளைத்த இராணுவ அணி எங்களைத் தேடியது. நாம் எப்படி மறைந்தோமென்று அவனுக்குத் திகைப்பு. இப்படியும் ஒரு உத்தியிருப்பதை அன்று வீரமணியண்ணையிடம் படித்தேன். சுற்றிவளைத்த அணி தளம் திரும்புமுன் நாங்கள் காவலரண்களைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டோம்.” எதிரியால் இதை கற்பனை செய்யவும் முடியாது. வீரவணக்க குறிப்பேட்டில் நினைவுக்குறிப்பு எழுதுகிறார் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ். “ஒரு தடவை, ஆனையிறவு முகாமை வேவு பார்க்கவென எதிரியின் காவலரணை ஊடறுத்துச் செல்ல ஆறு தடைகளைக் கடந்த வீரமணி இறுதியாக மண் அணையைக் கடக்க முயன்றபோது ஆமி துவக்கை நீட்டினான். உடனே வீரமணி சிங்களத்தில் ஏதோசொல்லி வெருட்ட அவன் சுடுவதை நிறுத்துகிறான். எதிரியின் குகைக்குள்ளேயே நின்று எதிரியைச் சுடவேண்டாமெனக் கட்டளையிட்டு எதிரியின் பிரதேசத்தை வேவு பார்க்கச் சென்றவன் வீரமணி.” இப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் சொன்னார், “வீரமணியினுடைய தலைமையில் வேவுபார்க்கச் சென்றோம். திரும்பிச் சுட்டதீவால் வந்துகொண்டிருந்தபோது தண்ணிக்குள்ளால் நீரேரியைக் கடந்துதான் போகவேணுமெண்டு வீரமணி சொன்னான். நடக்கக்கூடிய காரியமா? மிகச் சுலபமா ஆமி காணுவான். பிரச்சினை என்னெண்டா தண்ணீன்ர நடுவுக்குள்ள குத்தி நட்டு பரண் கட்டி ஆமீன்ர அவதானிப்பு நிலையமொன்று இருந்தது. அதில இருந்து பார்த்தா தண்ணிக்குள்ள மீன் துள்ளினாலும் தெரியும். கரையில எலி ஓடினாலும் தெரியும். என்னெண்டு போறது உதுக்குள்ளால எண்டு கேட்டன். “வா. அவன் ஒண்டும் செய்யான்” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான். நேர ஆமீன்ர பரணைநோக்கி நடந்து பரணுக்குக் கீழயும் வந்திட்டம். நடுக்கமாயிருந்திது. நாங்கள் கீழ வரவும் ஆமி பரண்கால் குத்தியில தட்டினான். நின்றுவிட்டு வீரமணி ஏணியால ஏறி “கௌத” என்றான். பின் ஆமியோட சிங்களத்தில ஏதோ சொல்லிவிட்டு இறங்கிவந்தான். எங்களுக்கு நெஞ்சுக் குழிக்குள் நீர் வற்றிப்போயிற்று. ரெண்டுபேர் கிடக்கிறாங்கள் ஒருத்தன் இருக்கிறான் என்று சொன்னான். தளம் திரும்பியதும் அவனிடம் கேட்டோம் வீரமணி சொன்னவை மிகப்பெரும் வேவுப் பாடநெறிகள். ”எங்களுக்கு ஆபத்து வருமென்றால் அதை எதிரியின் காலுக்குள்ளபோய் நின்று ஆபத்தை பெருப்பித்துக் கொண்டால் ஆபத்தேயில்லை. இது மிகக் குழப்பமாக இருந்தாலும் வீரமணி சொல்லித்தந்த பாடம் அதுதான். வேவுக்காரர்களைப் பொறுத்தவரை எங்களைச் சுட்டால் தானும் சாகவேண்டுமென்ற நிலையை எதிரிக்குத் தோற்றுவித்தால் அவன் தன்னைக் காப்பாற்ற முடிவெடுப்பானே தவிர எங்களைக் கொல்லவல்ல. தூரத்தே நாங்கள் நகர்ந்தால் அவன் அணிகளை ஒருங்கிணைத்து எங்களைத் தாக்க முயற்சிப்பான். எந்தப் போர்வீரனும் தான் சாகாமல் எதிரியைக் கொல்லத்தான் விரும்புவான். தனது சாவும் நிச்சயம் எங்களுடைய சாவும் நிச்சயமென்றால் இந்தச் சிங்கள ஆமி சுடான்.” வீரமணியுடன் இருந்தாலே போரில் எத்தனையோ நுட்பங்களையும் நூதனங்களையும் படித்துக்கொள்ளலாம். அவன்தான் இல்லையே. வீரமணியின் பலம் என்னவென்றால் அவனுக்கு ஆமியைத் தெரியும் என்பதுதான். ஆமி எப்பொழுது என்ன செய்வான், என்ன செய்யமாட்டான், பலமென்ன, பலவீனம் என்ன, எந்தநேரம் என்ன தீர்மானம் எடுப்பான் என்பது வீரமணிக்கு நன்றாகத்தெரியும். ஏனென்றால் அவன் எதிரித் தளங்களுக்குள் வாழ்ந்தகாலம் அதிகம். ஆமிக்காரனின் அந்தரங்கமான “கசமுசா”க்களையும் வப்புக் கதையாக்கி எப்பொழுதும் தன்னைச்சுற்றிச் சிரிக்கும் கூட்டத்தை வைத்திருப்பான். இவனது வேவுத்திறமையும் சண்டையில் தன் அணியினரைத் துணிச்சலும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வழிநடத்தும் ஆளுமையையும் பார்த்த மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் இவனை ஒரு போர்முனைத் தளபதியாகத் தலைவருக்கு அறிமுகம் செய்தார். ஓயாத அலை – 03 ஒட்டுசுட்டானில் தொடங்கியபோது தன் அணிப் போராளிகளுடன் புறப்படு தளத்தில் வைத்து வீரமணி கதைத்தான் “பெடியள்! நான் ஒன்றச் சொல்லித்தாறன் ஞாபகம் வைச்சிருங்கோ. தடையள உடைச்சுக்கொண்டு ஆமீன்ர காப்பரணுக்க குதிச்ச உடன “அத்த உசப்பாங்” என்று பலத்துக் கத்துங்கோ. ஆமி கையைத் தூக்கேலையென்றால் குண்டை எறிஞ்சிட்டுச் சுட்டுப் பொசுக்குங்கோ. ஞாபகம் வைச்சிருங்கோ ஆமிய சரணடையச் சொல்லுறத்துக்கு “அத்த உசப்பாங்” என்று சொல்லவேண்ணும்” இப்படி சண்டை தொடங்கமுன் பொதுவாக போராளிகளிடம் இருக்கக்கூடிய இனம்புரியாத பதட்டம் அழுத்தம் என்பவற்றிற்குப் பதிலாக ஆர்வத்தையும் துணிச்சலையும் தூண்டிவிடும் உளநுட்பம் வீரமணிக்குத்தான் கைகூடிவரும். ஓயாத அலை – 03 இல் ஆனையிறவுத் தளத்தைத் தாக்கியழிக்க முடிவு செய்தபோது மையப்பகுதியைத் தனிமைப் படுத்துவதற்காக முதல்கட்டத்தில் பரந்தன் உமையாள்புரத்தையும் பக்கவாட்டாக வெற்றிலைக்கேணியையும் கைப்பற்ற தலைவர் திட்டமிட்டார். ஆனால் வெற்றிலைகேணி புல்லாவெளி கைப்பற்றப்பட பரந்தன் தாக்குதலோ வெற்றியளிக்கவில்லை. பின்னர் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் தலைமையில் பரந்தன் மீது தாக்குதல் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது. பகலில் சமரைத் தொடங்கத் தலைவருடன் ஆலோசித்து வந்த பிரிகேடியர் தீபன் அத்தகைய ஓரு அபாயமான சமரைத் தொடங்க வீரமணியை அழைத்தார். ஆட்லறி, ராங்கிகளை வழிநடத்தும் ஒரு மரபுப்படைக்கு அதுவும் தற்காப்புப்போரில் மிக வசதியாக இருக்கும். ஆனாலும் பகலில் சமரை எதிர்பார்க்காத எதிரி மீது முதல்முறையாகச் செய்யப்படும் பகல்பொழுதுத் தாக்குதல் வெற்றியளிக்க வாய்ப்புள்ளது என தளபதி தீர்மானித்தார். ஓயாத அலைகள் இரண்டில் எதிரியின் முறியடிப்பை மீள முறியடிக்க ஒரு எத்தனிப்பைச் செய்து வெற்றி காணப்பட்டது. அதில் ஒரு அணித் தளபதியாக களமிறங்கியவன் வீரமணி. இப்போது பகலில் தொடங்கப்படும் சமரிற்கு வீரமணியை ஒரு பகுதித் தலைவனாக நியமித்தார் தளபதி தீபன். வீரமணி சென்றான் வென்றான். கட்டளைத் தளபதி தீபன் சொல்கிறார். “அந்தத் தாக்குதலின் ஒரு கட்டத்தில் வீரமணி பிடித்த காவலரண்களை எதிரியின் ராங்கியணி வந்து சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் வீரமணிக்குள்ள தெரிவு, அணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு பின்வாங்கவேண்டும் அல்லது காப்பகழிகளிலிருந்து வெளியேறி ராங்கிகளை எதிர்கொள்ள வேண்டும். வீரமணி தன் சிறிய அணியை வைத்து அந்த ராங்கி அணியை முறியடித்தான். அதுதான் வெற்றியை எங்களுக்குத் தந்தது. ஒரு பகல் பொழுதில் பரந்தன் எங்கள் வசமாயிற்று.” ஓயாத அலைகள் மூன்றில் தென்மராட்சிக்குள்ளால் நுழைந்த புலிகள் யாழ். அரியாலை வரை முன்னேறியிருந்தனர். யாழ். அரியாலையில் வீரமணி தன் அணிகளுடன் நிலைகொண்டிருந்த போது புதிதாக யாழ். தளபதியாக நியமனம் பெற்ற சரத் பொன்சேகா “கினிகிர” என்ற ஒரு படை நடவடிக்கையை அரியாலை ஊடாகத் தொடக்கினார். வீரமணி தன் அணிகளோடு அதற்கு எதிராகச் சண்டையிட்டான். தகவல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதிக்குக் கிடைத்தது. அவர் விரைந்து அங்கே போகவும் அதற்கிடையில் அந்த நடவடிக்கையை வீரமணி முடிக்கவும் சரியாக இருந்தது. நூற்றுவரையில் இராணுவ உடல்களும் பலநூறு காயமடைந்த படையினரும் கொழும்பிற்குப் போக தலைமையகத்தின் உத்தரவின்றித் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட நடவடிக்கையின் தோல்விக்காக சரத் பொன்சேகா யாழ். தளபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வீரமணியை, அவனது தனித் திறமையைத் தலைவர் பாராட்டினார். வீரமணி புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியானான். பின்னர் அப்படையணியின் சிறப்புத் தளபதியுமானான். 1990ஆம் ஆண்டு மாங்குளத் தாக்குதலில் காவும் குழுவாக முதற் பங்கேற்றவன் 2001இல் தீச்சுவாலையில் சிறப்புத் தளபதியாக தன் ஐம்பதாவது களத்தைக் கண்டான். தன்னுடலில் எட்டுத்தடைவை காயமுற்றான். இறுதியாக நாகர்கோவில் களமுனைக்கு பகுதித் தளபதியாக இருந்தபோது போராளிகளைப் பார்க்க பலகாரம் கொண்டுசெல்லும் மக்கள்முன் வீரமணி பேசினான். “சரத் பொன்சேகாவின் யாழ். தளபதிப் பதவியை முதல் பறிச்சது நான்தான். இப்ப படைத் தளபதிப் பதவியில் இருந்து சண்டைக்குத் திமிறுறார். சண்டையைத் தொடக்கினால் இவரை இராணுவத்தை விட்டே கலைக்கவைப்பன்.” வெயில் சரியாக சாய்ந்திராத ஒரு பின்னேரப்பொழுது. மக்களும் போராளிகளும் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் திரண்டிருக்க, வீரமணியைப் பேழையில் படுத்தியவாறு தூக்கிவந்தார்கள். மனைவி வீரமணியைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஆங்காங்கே விம்மல்கள் வெடிக்கின்றன. விடுதலைப்போரில் ஐம்பது போர்க்களங்கள் கண்ட ஒரு அசகாய வீரன் அமைதியாய் படுத்திருப்பது எங்களை என்னவோ செய்தது. மூத்த தளபதி பரிகேடியர் பால்ராஜ் நினைவுரையாற்றினார். “கடலில் மீனுக்குக் குண்டடித்து வீரமணிக்குக் காயம் என்றார்கள். அதிர்ந்துபோனேன். சரி காயம்தானே என்றுவிட்டிருக்கக் கையில்லையாம் என்றார்கள். கையில்லாவிட்டாலும் பரவாயில்லை வரட்டும் என்றிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். உயிர்தப்பினாலே போதுமென்று ஏக்கமாக இருந்தது. இறுதியாய் வீரமணி செத்துவிட்டான் என்று செய்தி சொன்னார்கள்.” சாவுக்குத்தான் மனிதர்கள் அஞ்சுவார்கள். சாவு வீரமணிக்கு அஞ்சி கோழைத்தனமாய் அவனைக் கொன்றுவிட்டது. எந்த இரக்கமும் தர்மமுமில்லாமல் மகத்தான ஒரு போர்வீரனைக் கடற்கரையில் வைத்து வீழ்த்திவிட்டது. நடமாடும் ஒரு வேவுக்கல்லூரி சத்தமில்லாமல் நொருக்கப்பட்டுவிட்டது. புதைகுழிக்கு மண்போட்டு எல்லாம் முடிந்தது. இனி வீரமணி வரமாட்டான் என்றது மனதில் திரும்பவும் உறைக்கின்றது. வீட்டில் அந்தியேட்டிக்காகப் போயிருந்தோம். “தொப்” பென்று சத்தம் கேட்க உள்ளே என்ன நடந்தது என்று பார்த்தோம். வீரமணியின் படம் விழுந்து கண்ணாடி உடைந்துவிட்டது என்றார்கள். பக்கத்தில் இருந்தவர் சொன்னார். “படத்துக்கு அஞ்சலி செலுத்தேக்க படத்தில அவன் உயிரோட இருந்ததைக் கண்டனான். அவன் வெளியே வர எத்தனிச்சுத்தான் கண்ணாடி உடைஞ்சிருக்கவேணும்.” திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். முகம் குலைந்து துயரத்தில் தொங்கியிருந்தது. எல்லோருக்கும் அதுதான் நப்பாசை. வீரமணி திரும்பி வந்தாலென்ன? ஆனால் வன்னிக்களத்தில் நின்ற சிங்கள படையினரைப் பொறுத்தவரை இரவில் தங்கள் தளங்களில் அலைந்துதிரியும் மெல்லிசும், ஓரல் முகமும் இளைய வயதும் மினுங்கும் கண்களும் கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லும் கொண்ட மாயப்பிசாசு – சுட எத்தனித்தால் “அத்த உசப்பாங்” என்று கீச்சிடக் கத்திவிட்டு மாயமாய்க் குண்டை வெடிக்கவைத்து மறைந்துபோகும் மர்மப் பிசாசு செத்துப்போய்விட்டது. பிசாசுக்காகப் பிக்குவிடம் மந்திரித்துக் கழுத்தில் கட்டிய தாயத்து இனித் தேவையில்லை என்றும் அவர்கள் ஆறுதலடையக்கூடும். http://www.pathivu.com/news/25010/57/7-24-05-13/d,article_full.aspx
  19. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரத்தளபதிக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  20. என்றும் எம் நினைவை விட்டு அகலாத கேணல் ரமணன் அண்ணாவிற்கு வீர வணக்ககள் கேணல் ரமணனின் வீரவணக்க நிகழ்வில் தளபதிகள் - போராளிகள் . கேணல் ரமணனின் வீரவணக்க நிகழ்வில் அவரின் மனைவி .... கேணல் ரமணனின் வீரவணக்க நிகழ்வில் போராளிகளின் அணிவகுப்பு ....
  21. கேணல் ரமணன் அவர்களுக்கு நினைவு வீரவணக்கம்..!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.