சிட்டு, இவரை 90களின் நடுப்பகுதியில் மட்டுவிலில் சந்தித்தேன் .மணலாறில் இருந்து அரசியல் கல்விக்காக வந்த்திருந்தார் .தமிழீழத்தின் அணைத்து பகுதியில் இருந்ததும் ஆண் .பெண் போராளிகள் 600 பேர்வரை ஒன்றுகூடினோம் .சுமார் ஆறு மாதங்கள் அரசியல் பயிற்சி நடந்தது.இப்பயிற்சிக்காலத்தில் ஒவ்வொரு ஞாயிறும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் .இதில் சிட்டுவின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும் .பக்த்திப்பாடல்கள் எல்லாம் போராட்டப்பாடல்களாக சிட்டுவினால் மாற்றப்பட்டு பாடப்படும் .பயிற்சி முடிவுக்காலத்தில் இவர் கலைபண்பாட்ட்டுக் கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டார் .
சிட்டுவுக்கும் இவருடன் வீரச்சாவடைந்த அணைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள் .