-
Posts
3086 -
Joined
-
Last visited
colomban's Achievements
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால், இது குறித்து, முஸ்லிம் தலைமைகள் கூடிய கவனம் எடுக்க வேணடும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால், முஸ்லிம்கள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து முஸ்லிம் தலைமைகள் விலகி நிற்கக்கூடாது என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து அண்மைக்காலமாக, இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது. புரையோடிப் போயுள்ள நாட்டின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா ஒதுங்கிவிடாது. இந்த வகையில்தான், இந்திய வௌியுறவு அமைச்சரின் வருகையும் அமைந்துள்ளது. வடக்கும் கிழக்கும் தமிழர்களின் மாகாணம். "இணைக்கப்பட்ட வட,கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கல், சமஷ்டிக்கு நிகரான தீர்வுக்கு வித்திடல்" போன்ற நிலைப்பாட்டிலே இந்தியாவுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடுகள், முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் அச்சம் குறித்து இந்திய அரசாங்கத்தை தௌிவுபடுத்துவது முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு. தமிழரின் தாயகம் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதா?அவ்வாறானால், இம்மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் காணிகளுக்கு உத்தரவாதம் என்ன?கடந்த காலங்களில் பறிபோன முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெறுவது எப்படி? இவற்றை மீள ஒப்படைப்பது யார்? மட்டக்களப்பு மாவட்டத்தில்,அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிளின் பலவந்தத்தால் பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீள ஒப்படைப்பது யார்? எல்லைகளைச் சுருக்கி ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் முஸ்லிம்களை முடக்கியுள்ள இன ஒடுக்குமுறைகள், இனியும் நடைபெறாது என்பதை எந்தத் தரப்பு உத்தரவாதப்படுத்துவது, விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவது எப்போது,அழிக்கப்ப ட்ட முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பரிகாரமாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் என்ன? தமிழ் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட காணிகளைப் பெறுவது எப்படி இதுபோன்ற சந்தேகங்களை களைந்தே,அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். தீர்வைக் குலைப்பதோ? அல்லது இழுத்தடிப்பதோ முஸ்லிம்களின் நோக்கம் இல்லை. கடந்த காலங்களில் இந்த ஒப்பந்தம் வடக்கு,கிழக்கு மாகாண முஸ்லிம்களை கைவிட்டிருந்ததுடன், ஓரங்கட்டியும் இருந்தது. முஸ்லிம்களுக்கு இந்த ஒப்பந்தத்தில்,சந்தேகம் ஏற்பட இதுவே காரணம். எனவே, நாட்டின் நிரந்தரத் தீர்வுக்கு 13 ஐ, முழுமையாக அமுல்படுத்துவதுதான் தீர்வாக அமைந்தால், அதையும் ஏற்க முஸ்லிம்கள் தயார்தான்.ஆனால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயந்தருவது, இதை அமுல்படுத்துகையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் தீங்குகளை நீக்குவது, மற்றும் தமிழ் மொழித் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்குவதா கக்கூறி,இடையில் காலைவாரும் சூழ்ச்சிகளை நிறுத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும். இது குறித்து இந்தியாவுக்குத் தௌிவுபடுத்த முஸ்லிம் தலைமைகள் முன்வருவது அவசியம். தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்க முனையும் தமிழ் தலைமைகள் இதுபற்றி மனந்திறந்து முஸ்லிம்களுடன் பேசாதுள்ளதுதான் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.எனவே,இந்தியாவோ அல்லது வேறெந்த தரப்பினரதோ முயற்சிகளால் கொண்டுவரப்படும் தீர்வுகள் முஸ்லிம்களை திருப்திப்படு த்தாது அமைந்தால்,அது நிரந்தரத் தீர்வாக அமையாதென்பதை உறுதியுடன் கூறுவதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். https://www.jaffnamuslim.com/2023/01/blog-post_474.html
-
யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக வீடியோ பதிவை தொடர்ச்சியாக செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்த இளம் ஜோடி, குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர். அப்போது யன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை ஒருவர் படம் பிடித்ததை அவதானித்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, விடுதியின் அனைத்து அறைகளிலும் திருட்டுத்தனமாக கமெராக்களை பொருத்தி அதன் மூலமாக வீடியோக்கள் பதிவு செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து இளம் ஜோடியைப் படம் பிடித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விடுதியில் கடமையாற்றிய ஊழியர்கள் சிலர் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://samugammedia.com/secret-cameras-hidden-under-the-walls-of-jaffna-hotels---people-pay-attention-1674110137
-
இதே பாம்புதானே ஏவளை ஏமாற்றி அவளை ஏதேன் தோட்டத்தில் விலக்கப்ட்ட கனியை புசிக்க வைத்தது.
-
ஆண்களுக்கு பெண்கள் மஸாஜ் பன்ன முடியாது என்ற சட்டத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார். ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து பெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். https://www.madawalaenews.com/2023/01/blog-post_62.html ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாது... ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் பணி செய்யலாம். இலங்கையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது . ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அதற்காக பல்வேறு வழிகளில் சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மசாஜ் நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியான நோய்கள் பரவலாக பரவி வருவதாலே இந்த சட்டம் இயற்றப்படுவதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.madawalaenews.com/2023/01/msg.html
-
யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார். இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர். அக்காதலியின் பரிசின் விவரங்கள் பின்வருமாறு : Samsug Galaxy S 22 22k Gold Chain 22k Gold Ring Cash 50000 Jack Daniels 03 Chocolate basket 21 letter Cake Heart Frames No France 12×15 frame Couple Frame Mug Magic pillow Protin basket 2 T. Shirts 4 Shirt 2 vesty set 03 Perfumes Citizen Men watch Teddy bear https://www.todayjaffna.com/320379
-
இப்ப நான் இந்த தலையங்கத்தை பார்த்துவிட்டு இன்று வருடக்டைசி நாள் என்பதால் பீட்சா வங்கியுள்ளார்கள் கீழே கிச்சனுக்கு போய் ஒருதுண்டு எடுத்துவிட்டு வந்து எழுதுவோம் என்று இருந்தேன் அதற்குள் நாதமுனி எழுதியிருக்கிறீர்கள். இவர் அமெரிக்க பங்குச்சந்தையில் மோசடியான insider formation முறையில் லாபமீட்டிய ஒரி கிறிமினல் அல்லவா? பின்பு ஏன் இப்படி தமிழ் பத்திரிக்கைகள் தலையங்கம் எழுதுகிறார்கள்?
-
இந்த ஆப்ப்ரிக்கா நாடுகள் எல்லாம் பிரான்ஸ்சின் கொலனி நாடுகள் அல்லவா?
-
(ஊடகப்பிரிவு) வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினையாகிவிடக்கூடாது. வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி கோரும் தரப்புக்கள், இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கு வழங்கும் அதிகாரம் என்ன? இதுபற்றி அவர்கள் மனம் திறப்பது அவசியம். சூழ்நிலையைச் சமாளிக்கும் அறிக்கைகள் விடாமல், முஸ்லிம்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பேசுவதே சிறந்தது. இதே நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உள்ளமை ஏற்புடையதல்ல. வடக்கு கிழக்கு இணைய வேண்டுமா? அல்லது வடக்கும் கிழக்கும் வெவ்வேறாக பிரிந்திருக்க வேண்டுமா? என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இணைய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஹக்கீம் இருப்பாரேயானால்,வடக்கு ,கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயங்கள் தொடர்பில், ஹக்கீமுக்கும், சுமந்திரனுக்கும் இதுவரை காலமும் இரகசியமாக நடாத்தப்பட்ட பேச்சுக்கள் வெளிக்கொணரப்படுவது அவசியம்.இவ்விரு மாகாணங்களும் பிரிந்திருக்க வேண்டுமென ஹக்கீம் கூறினால்,அந்தந்த மாகாணங்களில் அபகரிக்கப்பட்ட, கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சிறுபான்மைச் சமூகங்கள் என்ற பொது அடையாளத்துக்குள் முஸ்லிம்களையும் உள்ளீர்க்கவே முயற்சிக்கப்படுகிறது. இப்பொது அடையாளத்துக்குள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே ,13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுவது கள நிலவரங்களுக்குப் பொருந்தாது. இது,அவரது தனிப்பட்ட விருப்பமே தவிர,வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷை இல்லை. எனவே, தீர்வு தொடர்பில் எவரும், எழுமாந்தமாகப் பேசக்கூடாது. வடக்கும், கிழக்கும் பிரிந்த மாகாணங்களாகவே இருப்பதானால், குறிப்பாக கிழக்கில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை, முஸ்லிம் பிரதேச செயலகங்களிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ ஒப்படைப்பது அவசியம். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன.அவற்றில் 04 முஸ்லிம் பிரதேச செயலங்களில் 27 வீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 1.3 வீதமான காணிகளே உள்ளன. அதிகாரக் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களாலே இவர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன, கபடத்தனமாக பறிக்கப்பட்டன. மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர், அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படுவது அவசியம். மட்டுமல்ல காணிகளின் எல்லைப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே வட,கிழக்கில் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகினர். கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டன. மட்டக்களப்பில், முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டன. இதனால்தான்,13 ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இவ்விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனமும் கலைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். https://www.madawalaenews.com/2022/12/i_45.html
-
மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகராகிய நாமும்.
colomban replied to colomban's topic in அரசியல் அலசல்
இப்படித்தான் ஒர் நாடு வெற்றி பெற்றால் அதை மதத்துடன் கலப்பார்கள் -
மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகராகிய நாமும். இலங்கை முஸ்லிம்களின் இன உருவாக்கத்தின் சிக்கலான வரலாற்றுப் பின்னணியை சமூக கலாச்சார மற்றும் அரசியல் அம்சங்களுடன் விரிவாக விளங்கிக்கொள்தல் எமக்கும் மொரோக்கோவிற்கும் போர்த்துக்கலுக்குமான தொடர்பை ஓரளவு விபரிக்கும் என நம்பலாம். மூர் என்ற பெயரின் சொற்பிறப்பியல் தோற்றம் உலகளவில் அறியப்படுகிறது. இது லத்தீன் மூலமான மவுரியிலிருந்து வந்தது. இன்றைய மேற்கு அல்ஜீரியா மற்றும் வடகிழக்கு மொராக்கோவை உள்ளடக்கிய ரோமானிய மாகாணமான மவுரேட்டானியாவில் வசிப்பவர்களின் சந்ததியினரே உலகெங்கும் மூர் என முதலில் அழைக்கப்பட்டனர். இலங்கையைப் பற்றிய போர்த்துகீசிய வரலாற்றாசிரியர், ஃபெர்னாவோ டி குய்ரோஸ்(Portuguese historian Fernao De Queyroz) இலங்கை முஸ்லிம்கள் "முரிட்டானியாவைச் சேர்ந்தவர்கள்" என்பதால் 'மௌரோஸ்' என்று அழைக்கப்பட்டதாகக் கூறினார். இறுதியில் 'மௌரோஸ்' பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 'மூர்ஸ்' ஆனது. இலங்கையின் முதல் பிரதம நீதியரசர் சேர் அலெக்ஸாந்தர் ஜொன்ஸ்டனும் (Sri Alexander Johnston) இலங்கை சோனகர்கள் முரிட்டானியாவைச் (Mauretania) சேர்ந்த அறபுக்களின் வழித் தோன்றல்கள் என்பதாகக் கூறுகின்றார். வேறு சில வரலாற்றாசிரியர்களின் கருத்தும் இதை உறுதிப்படுத்துகிறது. வட ஆப்பிரிக்காவின் அல்ஜீரியா, மாரிட்டானியா,லிபியா மற்றும் மொராக்கோ பகுதிகளை உள்ளடக்கிய மக்ரெப் பிராந்தியத்தில் இருந்த வணிக குழுவினருக்கும் மத்திய தரைக்கடல் மற்றும் அரபு வணிகர்களுக்குமான வியாபாரத்தொடர்புகளை பற்றிய கிபி 11ம் நூற்றாண்டின் அரபு புவியியலாளரான அல் பக்ரியின் பதிவுகள், அதேபோல கிபி 8ம் நூற்றாண்டில் சோனிங்கே மக்களின் வணிகத்தொடர்புகள் குறித்து அரபு புவியியலாளர் முஹம்மது இப்னு இப்ராஹிம் அல் ஃபஸாரி என்பவரின் பதிவுகள் இவர்களின் வணிக நோக்கத்திற்கான மரக்கலத்திலான இலங்கை நோக்கிய பயணம், திமிலரிடமிருந்து முக்குவர்களை பாதுகாப்பதில் பட்டாணியர், துலுக்கர் அல்லது சோனகர் என தமிழர்களாலும் மரக்கல மினிசு என சிங்களவர்களாலும் அறியப்பட்ட இவர்களின் தமிழ் பெண்களின் திருமண பந்தத்தால் உருவான இலங்கை சோனக முஸ்லீம்கள் ( Ceylon Moors) பற்றிய விரிவான ஆராய்ச்சி என்பன நமக்கும் மொரோக்கோவிற்குமான தொடர்பை விரிவாக எடுத்தியம்புகிறது. எனவே இலங்கை முஸ்லீம்களை குறிக்கும் சொற்களான மூர், சோனகர் அல்லது மரக்கல மினிசு என்கிற சொற்களின் அடிப்படை நம்முள் ஆப்பிரிக்க வணிகர்களின் குறிப்பாக மரிட்டானிய மற்றும் மொரோக்கோ இனக்கலப்பினை காட்டுவதாக உள்ளது. இதனால் நாமும் மொரோக்கோவின் வெற்றியை கொண்டாடலாம். . -கியாஸ் சம்சுடீன் - https://www.facebook.com/Kalmunai-today-news Kalmunai today news
-
நூருல் ஹுதா உமர்- சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் சமஸ்டி தீர்வுத்திட்டத்தை கிழக்கின் கேடயம் எதிர்க்கும். அதன் பாதகங்களை மக்கள் மயப்படுத்துவோம். வரவு செலவு வாக்கெடுப்புக்கு பின் வருகின்ற சுதந்திர தினத்துக்கு முன்னர் சிறுபான்மை மக்களில் பிரச்சினைகளுக்கு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி கூறியிருப்பதனை வைத்து தமிழ்த்தரப்பு கட்சிகள் சமஸ்டி முறையிலான தீர்வுத்திட்டத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இன்று (05) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்பது நியாயமானதே. ஆனால் முஸ்லிம் மக்களை நசுக்கத்துடிக்கும் சமஸ்டி முறைக்கு நாங்கள் ஒத்து ஊதுகுழல் ஊத முடியாது. அதிகாரப்பகிர்வு என்பது மத்திய அரசு அளவோடு பகிர்ந்தளிக்கும் அதிகாரங்களை தேவை ஏற்படின் பாராளுமன்றத்தின் 3/2 பெரும்பான்மையுடன் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சமஸ்டி என்பது மாநில அரசாங்கம் நினைத்தால் மாத்திரமே மத்திய அரசாங்கத்தினால் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் அதாவது ஒருநாட்டுக்குள் தனிநாடு போன்றதாகும். அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்ட இணைந்திருந்த வடகிழக்கிற்குள் முஸ்லிம்களை நீங்கள் நசுக்கியதையும் எங்களுக்கு கழிவுகளை கொடுத்து கழிவிரக்கம் காட்டியதையும் நாங்கள் மறந்துவிடவில்லை. இதனால்தான் முஸ்லிம் கட்சிகள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நமக்கு தேவையான தீர்வுத்திட்டத்தினை வரைவதற்கும் எமது மக்கள் தொடர்பான பிரச்சினைகளை பட்டியலிட்டு தீர்வினை உருவாக்கவும் அழைப்பு விடுத்தோம். அவைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே அரசியல் கட்சிளின் தலைவர்களுக்கு இருந்தது மக்களும் அவ்வாறு இருந்துவிட முடியாது ஏனென்றால் இது உங்கள் குழந்தைகளின் எதிர்காலமாகும் என்றார் https://www.madawalaenews.com/2022/12/blog-post_34.html