Jump to content

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3245
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. நூறு கதை நூறு படம் 80 கிட்ஸாக கதை புரியா விட்டாலும் பார்த்து ரசித்த அருமையான படங்கள் ஜானி, தில்லுமுல்லு,பில்லா,மூடுபனி,அந்த ஏழு நாட்கள்,வறுமையின் நிறம் சிவப்பு,ஆறிலிருந்து அறுபது வரை,உதிரிப்பூக்கள் அருமையான திரி தொடருங்கள்
  2. 80 கிட்ஸாக சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி ரசித்த அருமையான காலங்கள்
  3. இந்த படம் ஒரு பயங்கர த்ரில்லர் படம். ஒருநாள் மதியம் சாப்பிட்டபின்பு சக்தி டீவியில் பார்த்த ஞாபகம்
  4. ஆம் இது உண்மை, ஆனால் ஜபெல் அலி சுதந்திர வர்த்தக வலயத்தில் அப்படி அல்ல என நினக்கின்றேன். 100% வெளிநாட்டவரை கொண்டு உருவாக்கலாம்
  5. இங்கிருந்தால் கட்டாயமாக நானும் வருவேன். (அடுத்த வருடம் சிலகாலம் நண்பனுடன் டோக்கியோ, ஜப்பானில் வேலை செய்ய நினத்துள்ளேன். செலவுகள் / வாழ்க்கைதரம் எப்படியோ தெரியாது)
  6. ஆம் இப்பகுதிக்கு நான் வந்துள்ளேன். இது கில்ஃபொர்ட், சரே என்ன்னும் ஏரியாவில் உள்ளது என நினக்கின்றேன். அழகிய பெரிய வீடுகள். விதி விலக்கு உண்டு. உதரணமாக யூசுப் அலி‍ ‍மலயாளி ‍ லூலூ குழும அதிபர் மிகவும் மத வெறியும்/ இனவெறியும் உடைய மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் நாடுகள் இவை. ஏன் இரண்டு மில்லியன்? இதிவிட குறைவாக பல்வேறு நாடுகளில் குடியுரிமமை இலகுவாக வங்கலாம். உதாரணம் போர்த்துகல், பனாமா அல்லது தென்னம‌ரிக்க நாடுகள்.
  7. ரோட்டில் அல்லது தார் நிலத்தில் ஓடுவது நல்லதா? அல்லது புற்கள் உள்ள இடத்தில் ஓடுவது நல்லதா?
  8. ஏன் நடிகைகளிடம் மட்டும் அந்த கேள்வியை கேட்கிறார்கள்?... ஆத்திரம் வருகிறது - காஜல் கோபம் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை. திருமணம் அவரவர் சொந்த வாழ்க்கை. சினிமாவில் நடிப்பது எனது தொழில். கடந்த வருடம் எனக்கு திருமணம் ஆனதில் இருந்து தொடர்ந்து கைவசம் படங்கள் இருக்கிறது. திருமணம் ஆன பிறகு எல்லா பெண்களும் அவரவர் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டது. வேலைக்கு ஏன் வந்தீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை. ஆனால் திருமணமான நடிகைகள் மீண்டும் நடித்தால் மட்டும் திருமணம் முடிந்துவிட்டதே இன்னும் நடித்துக்கொண்டே இருக்கிறீர்களே? என்று கேள்வி கேட்கிறார்கள். திருமணமானால் நடிப்பது தவறா? இந்த ஆண்டு நான் நடித்த 4 படங்கள் திரைக்கு வர உள்ளன. அதை சொல்லியாவது அவர்கள் வாயை மூட வேண்டும் என்று எனக்கு ஆத்திரம் வருகிறது.'' இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார். https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2021/02/16083011/2363557/Tamil-cinema-Kajal-aggarwal-latest-interview.vpf
  9. இந்த பத்திரிக்கை சிறுவயதில் வாசிப்பேன். அப்பொழுது பல விடயங்கள் புரியாது. இதனோடு ராணீ கமிக்ஸ் என்னும் இம்மொரு வெளீயிடும் வரும்.
  10. பாக்கியராஜ். ஒரு சிறந்த பன்முக‌/ஜனரஞ்சக நடிகர்‌. இவர் நடித்த பல படங்கள் சொல்லி வேலை இல்லை. குறிப்பாக அந்த ஏழு நாட்கள், ஒருகை ஓசை,புதிய வார்ப்புகள் டார்லிங், டார்லிங், டார்லிங், மற்றும் முந்தானை முடிச்சு. இதேவேளை இவர் ஒரு சிறந்த இசையமைப்பளரும் கூட ஆனால் இவர் ஏனோ மிக சில படங்களுக்கே இசையமத்துள்ளார். அவற்றில் ஒன்று. கர்னாடக‌ இசையயும் வெஸ்ரன் இசையும் கலந்த ஒரு பாடல் இது. படம் இது நம்ம ஆளு. இசை பாக்கியராஜ்.
  11. வாழ்வே மாயம். இந்த படத்தை யாரும் மறந்திருக்க மாட்ட்டார்கள். அந்த காலத்து இளைஞர்கள் தாடி வளர்த்தால் அதற்கு பின்னால் ஒர் சோக கதை இருக்கும். இப்போ கொரானா நிமித்தமாக சலூன் எல்லாம் முடிய படியால் எல்லரும் தாடி வளர்கின்றார்கள். கங்கை அமரனின் இசையில் மழைகாலங்களில் 10 வயது சிறுவனக இருந்த போது ரசித்த ஒரு பாட்டு.
  12. 1987ம் ஆண்டு வந்த பருவராகம் படத்தில் ஹம்சலேகவின் இசையில் வந்த அருமயான பாடல். பாடசாலை பதிமவயல் இந்த பாடல் ஒரு மயக்கத்தை கொடுத்தது. https://youtu.be/SSM6jB3FKO0?list=PLS81opyHN8yElqzlGu9aWUIeMt2OA_tdH
  13. இப்பத்தான் இந்த பாட்டை சூரியன் F M இல் கேட்டேன் இப்பத்தான் இந்த பாட்டை சூரியன் இல் கேட்டேன்
  14. மிஷ்கின். இவரின் ஒவ்வொறு படமும் / கதையும் அற்புதமானது. ராஜேஷ் என்ன ஒரு அருமையான நடிகர். இவரும் லக்ஷ்மியும் நடித்த சிறை என்னும் படம் இன்னும் இந்த விமர்சனத்தில் வராவில்லை.
  15. ஐயோ மருது உங்கள் காஜலிச கவிதைகளை வாசித்து எனக்கு இப்போ டக்கென்று ஓர்கானிசம் ஆகி விட்டது
  16. வருங்கால கணவரின் மடியில் உட்கார்ந்த படி நடிகை காஜல் அகர்வால் எடுத்த புகைப்படம்- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒருபக்கம் தங்களது ஆசை நாயகி சிங்கிளாக இருக்கிறார் என்று நினைத்தாலும் அவர்களுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது. இந்த நேரத்தில் தான் தனது திருமண தேதியையே முடிவு செய்து அந்த தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். அவருக்கும் கௌதம் என்கிற தொழிலதிபருக்கும் வரும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க இருக்கிறதாம். அவர்களது குடும்பத்தில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளார்களாம். தற்போது காஜல் அகர்வால் அவரது வருங்கால கணவரின் மடி மேல் உட்கார்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதோ முதன்முறையாக வெளியான புகைப்படம், https://www.cineulagam.com/actresses/06/185631?ref=home-latest
  17. இதைதான் சிங்களவன் துகட துங் காஹாக‌ன்ட என்று சொல்வான்‌
  18. நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 2004 ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால்., 4 ஆண்டுகள் கழித்து 2008ல் நடிகர் பரத் நடித்த ‘பழனி’ படத்தில் தமிழில் முதன்முறையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்தாலும், 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மஹதீரா’ படம் அவருக்கு அனைத்து ரசிகர்களிடத்திலும் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். தற்போது பாரீஸ்-பாரீஸ் படத்திலும், கமலுடன் இந்தியன்-2 படத்திலும் அவர் நடித்து வருகிறார். இவரது தங்கை நிஷா அகர்வாலும் தமிழில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலுடன் திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்ததோடு, அதன் பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளார். மேலும் திருமணத்தை மிகச் சிறிய அளவில் ஏற்பாடு செய்துள்ளதாகவும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காஜலுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களடு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். https://www.malaimurasu.in/2020/10/06/kajal-agarwal-get-married-to-bussiness-man/
  19. கோசான் இத்துப்போன ஜாதி ஆள் வா நீங்கள்... நான் ஈக்கேன் வா.. சேக்மாருவட வூட்டுக்கு கூட்டிபோரன்வா ஒரே கூஜால் வா. வாறிஙகளாவா...ஒட்டக எறச்சியேட சாப்படுவா...ஹபீபீ....
  20. இன்றுதான் இந்த திரியயை பார்த்தேன் உடையார். இவை எனக்கு 80 களில் இலங்கை வானொலியில் வெள்ளிக்கிழமைகளில் போடப்படும் பாடல்கள் போல் உள்ளது. இதில் இன்னும் காலத்தினால் அழிக்கவே முடியாத சில கிறிஸ்தவ பாடல்கள் உள்ளன. அவற்றில் ஜிக்கி அவர்களது பாடல்களை மறக்க முடியாது. தேனினிமயிலும் யேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே, தாசரே இத்தரணியில் அன்பாய் ஏசுவிக்கே சொந்தமாக்குவோம், எல்லாம் யேசுவே எனக்கெல்லாம் ஏசுவே போன்ற பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்பபடும். அதே போல் சூலமங்களம் ராசலஷ்மி, பெஙக்ளூர் ரமணியம்மள் போன்றவர்களின் பாடல்கள் மறக்கமுடியாது
  21. இலங்கையைப் பாராட்டினார் பிரிட்டன் பிரஜை கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்கு, பிரட்டனை விட இலங்கை நன்றாகத் திட்டமிட்டுள்ளது என, இலங்கைக்கு சுற்றுலா வந்த பின்னர் பிரிட்டனுக்குத் திரும்பிய சுற்றுலாப் பயணியொருவர், அங்குள்ள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். பிரட்டனுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் ஏற்பாடுகள் நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த சுற்றுலாப்பயணி, மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்தார் என்றும் இரண்டு வாரங்கள் இலங்கையில் தங்கியிருந்துள்ளார் என்றும் தெரியவருகின்றது. அவர் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வரும்போதே, விமானத்துக்குள் வைத்து, தங்களைப் பற்றிய விவரங்களை நிரப்புமாறு ஒரு படிவம் வழங்கப்பட்டது என்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும்போது, அங்கிருந்த விமானநிலைய அதிகாரிகள், தங்களைப் பற்றிய அனைத்துத் தரவுகளையும் அறிந்து வைத்திருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், விமான நிலையத்தில் இருந்து தங்களுடைய ஹோட்டலுக்குச் செல்வதற்கு முன்னர், பல இயந்திரங்கள் பல பரிசோதனைகள் தனக்கு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையைப்-பாராட்டினார்-பிரிட்டன்-பிரஜை/175-247601
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.