Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8475
  • Joined

  • Days Won

    41

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. 11 hours ago, ராசவன்னியன் said:

    போயே போச்சே; போயிந்தே; இட்ஸ் கான்..!

    எனது அனுபவங்களை எழுதலாம் என்றால் தனி திரி தொடங்க இயலவில்லை. 🤔

    நிர்வாகத்திடம் கூறினால் அவர்கள் சரிசெய்வார்கள் தானே அண்ணா. கட்டாயம் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் அண்ணா.

  2. On 8/5/2021 at 22:40, MEERA said:

    😂😂😂 ஆகா 🙋‍♂️

    உதுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.🤔😃

    On 8/5/2021 at 22:45, குமாரசாமி said:

    ஏன் வாற வருசமும் போகலாம் தானே?😷

    அங்க நிறைய வேலையள் இருக்கு.😀

    On 8/5/2021 at 22:55, விளங்க நினைப்பவன் said:

    🤔

    உங்களுக்கு கோவிட் வந்து எத்தனை மாதங்களுக்கு பின்பு தடுப்பூசி போடப்பட்டது?

    இரண்டு மாதங்களின் பின்னர் போட்டோம்.

  3. Just now, பெருமாள் said:

    உங்களுக்கு அலர்ஜி ஏதாவது இருந்ததா ?

    குடும்ப வைத்தியரை அணுகவும் .

    எனக்கு ஒவ்வாமை ஒன்றும் இல்லை. வைத்தியர் NHS இன் படிவம் ஒன்று இருக்காம். அதை நிறப்பி அனுப்பும்படி கூறியுள்ளார். ஊசி போட்டவர்களுக்கு என்ன என்ன ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன என்று அறியவாம். என்னத்தைச்  சொல்லுறது.  இலங்கைக்குப் போகலாம் என்னும் ஆசையில்  போட்டோம். 

  4. On 20/4/2021 at 23:07, விளங்க நினைப்பவன் said:

    பொழிப்புரை :-

    ஏற்கெனவே கொரோனா வத்தவர்கள் சக்தி கொண்ட கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மாதிரி என்று மருத்தவ கட்டுரை ஒன்று தெரிவித்தது

    எனக்குக் கோவிட் வந்தபோது ஏற்படாத விளைவுகளெல்லாம் இப்ப ஊசி போட்ட பின்னர் ஏற்படுகின்றது. சிலருக்கு அப்படித்தான் என்கின்றார் மருத்துவர். நான் Pfizer போட்டேன். என கணவருக்கு Astrazeneca போட்டார்கள் அவர் இயல்பாக இருக்கிறார். என்ன கறுமமோ ஒன்றும் புரியவில்லை.

    On 23/4/2021 at 18:35, தனிக்காட்டு ராஜா said:

    மீண்டும் முடக்கம் வரும் நிலை போல தென்படுகிறது பார்க்கலாம் 

    கவனமாக இருங்கள்

  5. 4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

    சிறந்தததோர் அனுபவ பகிர்வு அக்கா 

    இங்கெல்லாம் அதோடு விளையாடி பழகிட்டம் என்றால் பாருங்கோவன் எவரும் தற்காப்பை கவனிப்பதில்லை  எல்லா இடங்களும் சுமூகமாக இயங்குகிறது அரசு சொல்கிறது கொரோனா தொற்று இருக்கிறது என மக்கள் சொல்கிறார்கள் இல்லையென

    எனக்குக் கூட சிலநேரம் சந்தேகம் வாறதுதான். அரசாணக்கம் ஏதோ காரணத்துக்காக மிகைப்படுத்துகிறதோ என்று. இங்கும் பலர் முகக்கவசம் இன்றியே அலைகின்றனர்.

    • Like 1
  6. On 6/4/2021 at 21:46, வாத்தியார் said:

    கொரோனா அனுபவத்தைப் பகிர்வது என்பது எல்லோராலும் முடியாது

    தற்போது கொரோனா வைரஸுடன் வாழப்பழகுவதை விட வேறு வழி இல்லை
    தடுப்பூசிகள் மெருகூட்டப்படும் வரை
    எல்லோருமே கவனத்துடன் இருப்பது தான் சிறந்த வழி
    பகிர்விற்கு நன்றி

    நோய் வருமுன் இருந்த பயம் இப்ப இல்லை.

  7. நான் நடக்கும் போது உங்களைபற்றி எண்ணுவதுண்டு. ஏனெனில் நான் ஒடுவோமா என்று இரண்டு தடவைகள் முயன்று மூச்சுவாங்கியதால் விட்டுவிட்டேன். நான் வைத்தியாரிடம் ஸ்ப்ரே கேட்டு வாங்கி அடித்துவிட்டு ஓவடிப் பார்ப்போமா என்று எண்ணியதுண்டு. நீ  சாதாரணமாகத் தானே இருக்கிறாய். தேவையில்லாமல் ஏன் ஸ்பிரே கேட்கிறாய் என்று மனிசன் திட்டியதில் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இந்தப் பதிவைப் பார்க்க ஓடிப் பார்க்கலாம் என்னும் ஆசை எழுகின்றது. ஆனாலும் உடற்கூறுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றல்லவே. பார்ப்போம்.

    • Like 1
  8. On 31/3/2021 at 19:34, nige said:

    என் நண்பியின் கணவருக்கு மூன்று வாரங்களிற்கு முதல் கொறோனா தொற்று ஏற்பட்டது. கடுமையான காய்சல் 10 நாட்களாக தொடர்ந்தது.ஆனாலும் அவர் பயத்தில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.ஆவி பிடிப்பது, ரசம் குடிப்பது என பல தமிழ் வைத்திய முறைகளை விடாமல் செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவருக்கு மூச்சு விடிவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. அவர்களிற்கு 1 வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது அந்த குழந்தையை பரிசோதிப்பதற்காக வந்த nurse தற்செயலாக நண்பியின் கணவரின் நாடித் துடிப்பை பரிசீலித்துள்ளார்.அப்போது அவரின் நாடித்துடிப்பு மிக குறைவாக இருந்ததால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவரது ஙரையீரல் 90% பாதிக்கப்பட்டிருந்தது.மிக கடுமையான நிலையில் அவர் உடல்நிலை காணப்பட்டது.தப்புவது கடினம் என வைத்தியர்களால் கூறப்பட்டது.எனினும் வைத்தியர்களின் கடுமையான ஒரு கிழமை போராட்டத்தில் அவர் இப்போது அபாய கட்டத்தை இப்போது தாண்டிவிட்டார். அவர் வைத்தியசாலை செல்லாமல் இருந்திருந்தால் இப்போது அவரை பார்த்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒவ்வொரு உடலுக்கேற்ப இந்த கொறோனா தன் இயல்பை மாற்றிக்கொள்கிறது.யாராக இருந்தாலும் ஒரு வைத்தியரின் ஆலோசனையை பெறுவது பாதுகாப்பானது..

    பத்து நாட்களாகக் காய்ச்சல் என்றால் அவர்கள் முதலே வைத்திய ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். 90 வீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது மற்றும் இதயத் துடிப்பு குறைந்து இருந்தது என்றால் அவரால் எழுந்துநடமாடவே முடியாதும் இருந்திருக்கலாம். நான் கூறியது என அனுபவம். நீங்கள் கூறியது உங்கள் நண்பி கூறியதை. எனக்குத் தெரிந்த பலர் இரண்டாவதுதடவை  வந்தும் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. ஒருமாதத்தின் பின் கூடக்  குணமாகியுள்ளனர். வைத்தியசாலைக்குச் சென்ற பலர் உயிரிழந்துதானிருக்கின்றனர்.

  9. வாழ்த்துக் கூறிய சுவி அண்ணா, கிருபன், ஈழப் பிரியன் அண்ணா,யாயினி, இணையவன், கந்தையா 57, குமாரசாமி, பெருமாள், புங்கை, நிலாமதி அக்கா, உடையார், ஜெகதா துரை ஆகிய   உறவுகளுக்கு மிக்க நன்றி.

  10. On 29/3/2021 at 03:19, nunavilan said:

    அனுபவ பகிர்வுக்கு நன்றி. நீங்கள் சிலரை போல அதிஸ்டசாலி(கள்). பெரிதாக வாட்டி எடுக்கவில்லை. எனக்கு தெரிந்த ஒருவருக்கு கொரனா வந்தது 2000 பங்குனியில்.  சில மாதங்கள் வேலைக்கு செல்லவில்லை நோயின் தீவிரம் காரணமாக வரவில்லை. மருத்துவரிடம் கடிதம் எடுத்து வேலைக்கு செல்லவில்லை. இந்த வருடம் (2021ல்) வேறு வழியின்றி வேலைக்கு வந்துள்ளார்.  அவர் சொல்கிறார் தான் நோயில் இருந்து முற்று முழுதாக விடுபடவில்லை என. அவர் மூச்சு விடும் போது ஏற்படும் சத்தத்தை(wheezing) இப்போதும் கேட்க முடிகிறது. உடலளவில் மிகவும் பலவீனமாக உள்ளார். 

    வேலையின் HR அனுமதியுடன் நாளுக்கு  4 மணித்தியாலங்கள் மட்டும் வேலை செய்கிறார்.

    உண்மைதான் நுணா ஆனாலும் எனக்கும் மகளுக்கும் அடிக்கடி ஒரு தலைவலி புதிதாக வருகிறது. திடீரென உடற்சோர்வு ஏற்படுகின்றது. ஆனாலும் நீங்கள் கூறியவர் பாவம்.

    எனது நண்பி ஒருவரின் கணவர் இங்கு போலீசாக இருந்தவர். அவருக்கு கொரவனா வந்து ஒரு மாதம் எடுத்தது எழுந்து நடக்க. இரண்டு மாதங்களின் பின்னர் முழங்கால் நோ ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் சென்றவரை கொறோனா என்று மறித்து மனைவியையோ மகனையோ பார்க்கவிடாது ஒரு தனி அறையில் கொண்டுபோய் போட்டுவிட்டனர். அவர் தாதிமாரை அழை க்கும் அழுத்தியை அமத்தியும் யாரும் வரவில்லையாம். பின்னர் அவருக்குத் தெரிந்த ஒரு வைத்தியாரின் துணையுடன் எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள். அவரை விடும்போது தவறுதலாகக் கூறிவிட்டோம். அவருக்குக் கொறோனா இல்லை என்று கூறினார்களாம். அவருக்கே அந்த நிலை என்றால். .. .. இன்னும் பல ஆட்களை வேறு வேறு அறைகளில் வைத்திருக்கின்றனர். ஏதும் பரிசோதனை செய்து பார்க்கப் போகின்றனரோ என்றார்.

  11. On 28/3/2021 at 23:56, குமாரசாமி said:

    காப்பு கை மருத்துவத்திற்கு கேரளாவும் சிறிலங்காவும் சிறந்ததாம்.😎

    உதுகள் எல்லாம் விலாவாரியாத் தெரிஞ்சிடும்😃

    • Haha 1
  12. On 24/3/2021 at 23:26, nige said:

    கருத்து பகிர்வுக்கு நன்றி சுமே.. நீங்கள் எல்லோரும் நலமாக இருப்தில் மிக சந்தோசம். உங்கள் எல்லோருக்கும் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் மனதில் தைரியமும் இருப்பதால்தான் இது சாத்தியமானது. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமானதா என்பது கேள்விக்குறிதான்.வைத்தியசாலை சென்றதால் கடைசி நேரத்தில் தப்பி பிழைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.அதானால் வீட்டில் இருந்தால் கொறோனா மாறிவிடும் என்பதுதான் சிறு உறுத்தல். ஆனால் உங்கள் அனுபவத்தில் அது சாத்தியமானதில் சந்தோசம்.

    எமக்குப் பக்கத்து நகரத்தில் வசிக்கும் ஒரு வைத்தியர் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு காணொளி வெளியீட்டிருந்தார். அதில் கூட அவர் கூறுகிறார். நீங்கள் வைத்தியசாலைக்கு வராமல் இருக்கப் பாருங்கள் என்று. நான் வெளிப்படையாக எதையும் கூற முடியாதுள்ளது என.

    On 28/3/2021 at 09:54, Kandiah57 said:

    நல்ல பதிவு நன்றி  ..இந்த சந்தர்ப்பத்தில் ஜேர்மனியை விடடுப்போனாது பற்றி கவலைப்படவில்லையா?(மருத்துவ வசதி)

    நான் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் என் அம்மாவை நாம் இழந்தது யேர்மன் மருத்துவத்துறையின் கவனமின்மையால். யேர்மனியிலும் இப்போது வைத்தியசாலைகளை அமெரிக்கத் தனியார் நிறுவனங்களே நடத்துகின்றனவாம். எங்கும் எல்லாம் இப்போ பணம் மட்டுமே குறிக்கோள்.

    On 28/3/2021 at 10:48, Kandiah57 said:

    யு.கே இல வாழும் ஒர் ஆங்கிலேயார் முதுகுத்தண்டுப்பிரச்சனையால் பல ஆண்டுகள்

    அங்கே மருந்து செய்ய முயறசசிசெய்தும் முடியாமால்  ஜேரமனி பற்றிக்கேளவிபபடட்டு  இங்கே வநது மருத்துவம் செய்து  சுகம்வந்து இருப்பதாய் அவர் அளித்த பேட்டி படித்தேன் 

    எலும்பு தொடர்பான நோய்களுக்கு இன்னும் யேர்மனியில் நல்ல வைத்தியம் தான். அதற்காக எடுத்ததுக்கெல்லாம் அங்கு ஓட முடியுமா???

    • Thanks 1
  13. On 23/3/2021 at 19:38, கிருபன் said:

    கொரோனா அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சுமே ஆன்ரி. பலருக்கு mild symptoms ஆகத்தான் வரும். எனினும் ஆபத்தாகவும் சிலருக்கு வந்து சேரும் என்பதால் லொட்டரி மாதிரி நினைக்கவேண்டும்.

    எனக்குத் தெரிந்து பலருக்கு வந்து முறிச்சு எடுத்தது. கொரோனா வந்து சில மாதங்களில் 30 வீதமானோர் மீண்டும் வைத்தியசாலை போனதாக தரவுகள் சொல்லுகின்றன. எனவே சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் வந்தால் வைத்தியரை நாடவேண்டும்.

    NHS guidelines படி Oxymeter 95 க்குள்  கீழே வந்தால் உடனடியாக வைத்தியரை தொடர்புகொள்ளவேண்டும். 92 க்குப் போனால் அவசர சேவையை தொடர்புகொள்ளவேண்டும். 85 மட்டும் பிரச்சினை இல்லை என்பது சரியல்ல. அத்துடன் வைத்தியசாலைக்கு போவதா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்கக்கூடாது. அதனை வைத்தியர்கள்/ NHS சொல்லவேண்டும். 

    கடந்த வருடம் எனக்குத் தெரிந்த ஒருவர் கொரோனா வந்திருக்கலாம் என்று வீட்டில் தனது அறையில் தனிமையாக இருக்கும்போது சிலநாட்களில் ஸ்ரோக் வந்து மரணமடைந்தார். அவருக்கு கொரோனா வந்திருக்கவில்லை. எனவே, மனதைரியம் மிகவும் முக்கியம். அத்துடன் வைத்தியர்களின் தகுந்த ஆலோசனைகளும் முக்கியம்.

     

     

    என அனுபவத்தைத் தானே கூறினேன். நான் வைத்தியாரிடம் கேட்டபோது அவர் கூறியதைத்தான் சொன்னேன். மற்றது என மக்களுக்கு 83 கூட ஒருதடவை காட்டியது. உடனே 111 இக்கு போன் செய்யும்படி கூறினேன். அது பிரச்சனை இல்லை அம்மா என்றுவிட்டாள். மறுமுறை பார்த்தபோது 90 இல் இருந்தது. சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் கவனமாயிருக்க வேண்டியது அவசியம் தான்.

    19 hours ago, உடையார் said:

    அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமே

    வரவுக்குநன்றி

    13 hours ago, புங்கையூரன் said:

    நல்ல ஒரு அனுபவப் பகிர்வு, சுமே!

    ஒவ்வொருவரது உடல்களும் வெவ்வேறு வகையானவை!

    அவர்கள் தான் ...நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும்! 

    உங்கள் வீடியோ பதிவில் ஒரு 'பொறுப்புத் துறத்தல்" எச்சரிக்கை ஒன்றைப் போட்டால் நல்லது என்று நினைக்கின்றேன்!

    இந்தப் பதிவால்...நாளைக்கு ஒரு பிரச்சனை வரக்கூடாதெல்லோ? 😃

    அதுதான் என அனுபவம் என்று போட்டாச்சே🤣

    12 hours ago, கறுப்பி said:

    நல்லதொரு அனுபவ பகிர்வு. நன்றி 

     

    வருகைக்கு நன்றி

  14. 50 minutes ago, பெருமாள் said:

    உங்களின் அனுபவப் பகிர்வுசிறப்பு .....மனத்தைரியம்தான் உங்களின் குடுப்பத்தையும் மீட்டிருக்கு......பாராட்டுக்கள் .......சுமே அக்கா .

    அப்படியும் சொல்ல முடியாது. ஏதோ எமக்கு அப்படி விதிக்கப்பட்டிருக்கு 😀

  15. ஆமாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இங்கு இப்போதெல்லாம்  பெரிதாகக் கவனம் எடுப்பதில்லை வயதுபோனவர்களுக்கு மட்டுமல்ல. வெளிநாட்டினருக்கு.

  16. 4 minutes ago, நிழலி said:

    இங்கும் அப்படித்தான் எல்லா மருத்துவர்களும் சொல்கின்றார்கள். ஒட்சிசன் அளவு குறைந்தால் அல்லது மூச்சு விட மிகவும் சிரமப்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல சொல்கின்றனர். ஒரு நாளைக்கு 1500 பேருக்கு வந்தால் அதில் 100 பேர் வரைக்கும் தான் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதில் 98 பேராவது பிழைத்துக் கொள்கின்றார்கள்.

     

     

    இரண்டாம் தடவை வருவது மிகவும் அபூர்வம் அல்லவா? 

    இங்கு சிலருக்கு இரண்டாவது தடவையும் வந்திருக்கு. கோவிட் தொற்று ஏற்பட்டால் ஒருவாரமோ இரு வாரமோ உடலை அலட்டிக்கொள்ளாது இருக்கவேண்டும் என்கின்றனர். சிலர் வேலையை விட முடியாதவர்கள், விசா இல்லாதவர்கள் அல்லது காசு ஆசை கொண்டவர்கள் சும்மா உடல் வலிதானே என்று தெரிந்தும் வேலைக்குச் சென்று பின் நோய் முற்றி இறந்தும் போயுள்ளனர்.

    13 minutes ago, ஈழப்பிரியன் said:

    அனுபவப் பகிர்வுக்கு நன்றி.

    சிலருக்கு என்ன தான் நடந்தாலும் ஆங்கில சிகிச்சைகளில்த் தான் நம்பிக்கை.

    அதுதான் தவறு. எனக்குததேறிய வைத்தியசாலைக்குச் சென்ற பலர் இறந்துள்ளவர்.

  17. 23 minutes ago, நிழலி said:

    அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமே.

    ஆனால் கொரனா வந்தால் எக்காரணம் கொண்டும் மருத்துவமனைக்கு போகக் கூடாது என்று சொல்வது சரியல்ல. ஒருவருக்கு ஒட்சிசன் அளவு குறைந்து கொண்டு சென்றால், கண்டிப்பாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் பிழைத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. இல்லாவிடின் மிகவும் ஆபத்தாக போய்விடும்.

    வீடியோவின் ஆரம்பத்தில் குடும்பத்தில் 3 பேருக்கு வந்தது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மூன்றவதாக யாருக்கு வந்தது?

    என் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் பெற்றோருக்கும் கடந்த ஆண்டு ஒருதடவையும் இந்தத் தையில் இரண்டாவது தடவையும் கோவிட் தொற்று ஏறப்பட்டு முதற் தடவை ஐந்தாறு நாட்களும் இரண்டாவது தடவை 28 நாட்களுக்குக் கிட்ட எழுந்து நடக்கவே முடியாமல் படுத்தே கிடந்தனர். ஒரு தடவை வைத்தியசாலைக்கு வரும்படி கேட்டும் அவர்கள் செல்லவில்லை. குடிநீர் இரசம் வெடிகு பிடித்தல் என்றும் இரண்டு நாட்கள் வேப்பம் பட்டை அவித்தும் குடிகததாகக் கூறினார்கள்.  உடலின் ஒட்சியன் அளவு குறைந்தால் மட்டும் வைத்தியசாலைக்குப் போங்கள் என்று பல தமிழ் வைத்தியர்களே சொல்கின்றனர். 

    தகப்பனைத் தொட்டு விளையாடித் தனக்கு வராது என்ற மகளுக்குத்தான் வந்தது. 😀

    2 minutes ago, suvy said:

    உங்களின் அனுபவப் பகிர்வுசிறப்பு சகோதரி.....மனத்தைரியம்தான் உங்களின் குடுப்பத்தையும் மீட்டிருக்கு......பாராட்டுக்கள் ........!

    நன்றி அண்ணா

    16 minutes ago, ஜெகதா துரை said:

    பகிர்வுக்கு நன்றி  சுமே.  உங்கள் அனுபவம் நிச்சயம்  மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். 

    நன்றி ஜெகதா

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.