Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8475
  • Joined

  • Days Won

    41

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. 32 minutes ago, நிலாமதி said:

    உங்கள் துணிவுக்கும் , தன்னம்பிக்கைக்கும் , மற்றவர்கள் பயன் பெறவேண்டுமென்ற ஆர்வத்துக்கும்  என் பாராட்டுக்களும் நன்றியும். தெரிவித்து கொள்கிறேன்.  

    நன்றி நிலாமதியக்கா

  2. எம்முடன் வேம்படியில் படித்த நிர்மலா என்ற பெண்ணும் அப்படக்கில் வெட்டிக் கொல்லப்பட்டதாக அறிந்தேன். உணக்களுக்கு அவளைத் தெரியுமா?

  3. 13 minutes ago, குமாரசாமி said:

    என்ன இது புதுக்கதையாய் கிடக்கு!!!!!  உங்களுக்கு எப்ப கொரோனா வந்தது? சொல்லவேயில்லை? :cool:

    இரண்டு மாதானக்கள் ஆகுது। அது பற்றியும் ஒரு வீடியோ போடுறன் 😀

    4 minutes ago, குமாரசாமி said:

    பெண்கள் கிட்டத்தட்ட அரசியல்வாதிகள் மாதிரி.😀
    எதை ஆயுதமாக எடுத்தால் வெற்றிநடை போடலாம் என்பதை தெரிந்து வைத்து அவ்வப்போது மேடையேற்றுவார்கள்.😂
    சாதி அரசியல்,இனவாத அரசியல்,மதவாத அரசியல்,நிறவாத அரசியல் என அரசியல்வாதிகள் ஒரு டையரி வைத்திருப்பார்கள். அது போல் மாண்புமிகு மதிப்புக்குரிய பெண்களும் பெண்ணடிமை எனும் ஒரு சொல்லை வைத்து காலத்தை ஓட்டுவார்கள்.😷

    நான் பெண்ணியவாதி அல்ல அல்ல 😂

  4. On 16/3/2021 at 22:56, குமாரசாமி said:
    புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?
    புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள்.
    புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள்.
    புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள்.
    புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள்.
    புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள். புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களின் அடையாளம்.
    புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். 
    புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே.
    புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள்.
    புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை.
    புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள். புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள்.
    புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை. புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள்.
    புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள். புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள்.
    புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள்.
    புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார்.
    புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள்.
    புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள். புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான்.
    புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள்.
    சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம். புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே.
    புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள்.
    புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள்.
    புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள். புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள்.
    புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள்.
    புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும்.
    புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி. புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள்.
    புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள்.
    புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு.
    புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள். புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள்.
    புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள். புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள்.
    புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள்.
    புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள். புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை…
    புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது… 
     

    உப்பிடிக்க சொல்லிச் சொல்லியே பெண்களை முட்டாள்களாக்கி தங்கள் காரியங்களைச் சாதிக்கும் ஆண்கள் புத்திசாலிகள் தான்.

    On 17/3/2021 at 20:30, கிருபன் said:

    ஓஹோ.. நீங்கள் குருதி உறைந்துவிடும் என்று பயந்த ஆட்கள்..! தடுப்பூசி சும்மா களைப்பை தருகிற மாதிரி இருக்கும். ஆனால் எல்லாம் இரண்டொரு நாளில் சரியாகிவிடும்.

    ஐரோப்பிய யூனியனில் இருக்கும் சில நாடுகள்  ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா குருதி உறைவில் பிரச்சினை தரும் என்று சொன்னதும் சிலர் பயந்து அதனைப் போடாமல் no show ஆகியதால் எனக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட வாய்ப்பு கிடைத்தது!

    போய்க் குத்திவிட்டு வந்தேன். அன்று ஏதும் செய்யவில்லை. 

    அவர்கள் தந்த பிரசுரத்தில் இருந்ததில் side effects இல் ஒன்றிரண்டு அடுத்தநாள் வந்தது.

    முதலில் உடல் சில்லென்று சில மணிநேரம் குளிர்ந்த மாதிரி இருந்தது. பின்னர் சாடையாக சூடாகவும் அடிச்சுப் போட்ட மாதிரியும் இருந்தது. ஊசி போட்ட இடத்தில் நோ இருந்தது. ஆனால் 24 மணி நேரத்திலேயே எல்லாம் நோமலாகிவிட்டது!😀

    எனக்கு மூன்று நாட்கள் குளிர் காய்ச்சலும் நான்காம் நாள் முதன் முதல் என் நினைவு தெரிந்து சூடான காய்ச்சலும் வந்து ஐந்தாம் நாள்த்தான் ஓக்கேயானது. கோவிட் தொற்று ஏற்பட்ட போது கூட  அத்தனை கடினமாக உணரவில்லை.

  5. On 16/3/2021 at 08:37, suvy said:

    நல்ல கருத்துக்கள் உடைய கவிதை சகோதரி.......!

    நீங்கள் தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களைப்  பிரித்துப் பார்க்கின்றீர்கள். ஆண்கள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை.நீங்கள் இவ்வளவு சுதந்திரமாக எழுதுவதற்கும் ஒரு ஆண்தானே துணையாக இருக்கின்றார் என்பதை மறுக்க முடியுமா. நாங்கள் ஒருபோதும் பெண்களை பிரித்துப் பார்ப்பதில்லை. நாங்களே விரும்பாவிடினும் அவர்கள் காலால் இட்ட வேலையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கின்றோம்.எங்களது உயிரையே அவர்களிடம் தந்து விட்டு அந்த பாவத்திற்காக ஆயுள் முழுதும் விலங்கில்லாத  அடிமையாய்  வாழ்ந்து சாகிறோம்.நாங்கள் ரொம்ப பாவம் தாயே, கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்........ !  😎

    நல்ல ஆண்களைப் போற்றியும் ஒரு கவிதை எழுதிவிடுகிறேன் 😀

    நன்றி அண்ணா கருத்துக்கு

    On 16/3/2021 at 10:04, nunavilan said:

    அடி எடுத்து தந்தால் அடியையொற்றி போக வேண்டும். stop complaining🤣

    எல்லோரும் ஒரே வழியே எப்படிப் போவது? ஒவ்வொருவரின் இயல்புகள், தேவைகள் வே றுவேறானவையல்லவா 

    எனக்கு Pfizer ஊசி போட்டதுக்குப் பிறகு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. அனைத்து  உறவுகளின் பதிவுக்கும் மூன்று நாட்கள் செல்ல வந்து கருத்தை எழுதுகிறேன். குறை நினைக்க வேண்டாம்.

     

    முக்கியமாய் இதில் குமாரசாமி எழுதியதை பார்த்தே களை தொட்டுட்டுது.🤣

  6. 12 hours ago, கிருபன் said:

    ராணித் தேனீக்கு உதவியாக ஆண் தேனீக்கள் இருப்பதுபோல மனிதரும் இருந்திருக்கலாம். 😀

     

    கன காலத்திற்குப் பின்னர் கவிதாநிகழ்வு ஒன்றுக்குப் போன உணர்வு!

    ஆசான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்!!

    பெண்ணுக்கு எல்லாமே வேண்டும். ஆண் முரடனாகவும் இருக்கவேண்டும்; சொன்னபேச்சும் கேட்கவேண்டும். கல்வியும் வேண்டும்; செல்வமும் வேண்டும்; புகழும் வேண்டும். ஒன்று குறைந்தாலும் மனக்குறைதான்”

    வசிட்டரின் வாயால் வாழ்த்து. நன்றி 😀

    பெண்கள் அப்படி ஆசைப்பட்டதனால்த்தான் ஆண்கள் இந்தளவாவது முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

    11 hours ago, nunavilan said:

    Swati Mohan - Wikipedia

    இலட்சத்தில் ஒருவரை வைத்து பெண்ணினத்தின் சுதந்திரத்தை வரையறுக்க முடியாது நுணா

    10 hours ago, புங்கையூரன் said:

    பூவாக இருக்கும் வரை தான், அவள் ஒரு பெண்ணாக இருப்பாள்...!
    புயலாக மாறும் போது, பெண்மை அவளிடமிருந்து விடை பெற்று விடும்...!

    அர்த்த நாரீஸ்வரம்.....அது தான் முழு உலகத்துக்கும் நல்லது!

    அது சரி....அமெரிக்க உப ஜனாதிபதி கமலா Harris அவர்களின் காரியாலயத்தில் ஒரு ஆண்  கூட இல்லையாமே? இது செருக்கு இல்லையா?

    இது ஒரு ஆணின் காரியாலத்தில்,நடந்திருந்தால் அவர் என்ன பாடு படுத்தப் பட்டிருப்பார்?

    இருந்தாலும்...ஆண்கள் மனது பெரிய மனது தான்...!

    கவிதை....அழகு..!

    இதுதானே முதற் தடவை ஆண்கள் இல்லாத காரியாலயம் .. ............செருக்கும் இல்லை என்றால் பெண்ணை என்ன பாடு படுத்துவார்கள்.

     

  7. 19 hours ago, உடையார் said:

    என்னவொரு உணர்ச்சிமிகு & ஆவேச கவிதை, பாராட்டுக்கள், நன்றி பகிர்வுக்கு,

    யார் குனிந்து நிற்பது நாம் தான்😢, இதை தட்டி கேட்கவொரு ஆணினமில்லையா, கல்யாணமென்ற மாயையில் எம்மை வீழ்த்தி கட்டில் ஆட்சி புரிபது யார் யார் யார்???

    அத்தனைக்கும் ஆண்கள் வீக் என்றுதானே அர்த்தம் 😂

    19 hours ago, ஈழப்பிரியன் said:

    ஆவதும் பெண்ணாலே

    அழிவதும் பெண்ணாலே.

    அதற்கும் ஆண்தானே காரணம் அண்ணா. அதிக இடம் கொடுப்பது. கேட்கவேண்டிய நேரம் வாய் மூடி இருப்பது என்று.. ... 

    13 hours ago, நிலாமதி said:

    நியாயமான ஆக்ரோஷமான வார்த்தைகள் . ஆனாலும் முன்பை விட சில அடக்குமுறைகள் விளங்க வைக்க பட்டு பல தடைகளை  விலக்கி இவற்றையெல்லாம் கடந்தும்  வாழ்கிறார்கள் 

    இருந்தாலும் இன்னும் கிராமங்களில் மட்டுமன்றி மேற்குலக நாடுகளில் கூடப் பெண்கள் பல அடக்குமுறைக்குள் தான் இருக்கின்றனர்.

  8.  

    சிறக்குதனை விரித்து நாம் பறப்பதெப்போ

    சுதந்திரமாய் நாமெம்மை உணர்வதெப்போ

    சிந்தனைச் சிறகை ஒடித்து வைத்து

    அடக்குமுறைக்குள் எமைச் சிறைப்பிடித்து

    அழகாய்ப் பூட்டி வைத்துவிட்டார் ஆண்கள்

     

    பெண்கள் இன்றி பேரண்டமும் இல்லை

    உலகில் மனிதப் பெருக்கமும் இல்லை

    மகிழ்வு கொள்ளவும் எதுவுமே இல்லை

    மானிட வாழ்வில் பெருமையும் இல்லை   

     

    உணர்வுக் குவியலின் உன்னதமும் அவள்

    உறவைப் பிணைத்திடும் ஊக்கியும் அவளே

    உயிர் காத்திடும் மருந்தும் அவளே

    உலக மாந்தரின் உயிர்ப்பும் அவளே   

     

    உணர்வுகள் தந்து உறவுகள் காக்க

    தன்னைக் கரைத்து தவறுகள் மறந்து

    சொந்தம் காக்க சொற்கள் குறைத்து

    பந்தம் போற்றப் பலதும் துறந்து

    உதிரம் தந்துயிர் தந்திடுவாள்

     

    பெற்றவர்க்காகப் பெருமை துறந்து

    மற்றவர்க்காக மனதைப் புதைத்து

    கற்றிருந்தாலும் கலைகள் மறந்து

    பற்றியிருக்கும் பணிகள் நிறைந்து

    பார்த்திருக்கும் கண்கள் நிறைக்க

    பாரங்கள் பலவும் சுமந்திடுவாள்

     

    குடும்பங் காக்கும் இயந்திரமாய் அவள்  

    தன்னிகரில்லா பெண்ணின் தாய்மை

    தயங்காது  உழைத்திடும் அவளின் மேன்மை

    திடமாய்க் கொண்டிடும் அவளின் வாய்மை

    தேசங்கள் எங்கிலும் தெரிந்த உண்மை

    ஆயினும் அவள் இன்றும் ஆணின் அடிமை

     

    கனவுகளும் கற்பனைகளும் காட்சிகளாய் விரிவது பெண்மனம்

    காரணங்கள் தேடி அலைவதும் கட்டுடைத்துப்  போவதும்

    கொண்டாடி மகிழ்வதும் கொதித்து எழுவதும் அவளே

    கண்டங்கள் தாண்டிய கற்பனைகளில் விரிவதும்

    காட்சிகள் கொண்டு கனவாய் இசைபவளும் அவளே

    திண்ணிய மனதுடன் திடமாய் இருப்பவள்

    மற்றவர்களுக்காய் மயங்கியே மானமிழந்தே வாழ்கின்றாள்

     

    பத்து மாதங்கள் பத்திரமாய்ப் பிள்ளைகளைச் சுமந்திடுவாள்

    பாசத்துடன் வேடமேற்றுப் போற்றியும் வளர்த்திடுவாள்

    பருவம் கடந்தபின்னும் பிறந்த குழந்தையாய்ப் பார்த்திடுவாள்

    பேரன் பேர்த்தி கண்ட பின்னும் பிள்ளைகள் நலனை புறம் தள்ளி

    சும்மா இருந்து சுகம் காண என்றும் அவளால் முடிவதில்லை

     

     

    கொடிய விலங்குகள் சூழ நின்றிட அச்சம் இன்றியே 

    கூட்டத்தின் தலைவியாய் குடும்பம் காத்தாள் அன்று  

    கட்டியே போட்ட குடும்ப அமைப்பில் அத்தனை பேரிடம்

    குட்டுகள் வாங்கியே குனிந்த தன் தலையை

    நிமிர்த்தவும் அஞ்சிக் குனிந்தே வாழ்கின்றாள் இன்றும்

     

    பெண்ணுக்காய் அவளின்றி மேன்மை கொண்டிட

    அத்தனை பேருக்கும் அவள் வேண்டும் எனினும்

    பொத்திப் பொத்தியே வீட்டினுள் வளர்க்கும் பெற்றோர்  

    ஆணவம் கொண்டு அவளை அடக்கிடும் அறிவற்ற கணவன்

    ஆதிக்கம் கொண்டே அவளை ஏய்த்திடும் பிள்ளைகள்

    ஆராதிப்பதாய்ப் பூட்டி வைக்கும் உறவுகள் இப்படி

    உலகம் முழுதும் பெண்ணை அடக்கிட நடிப்பவர் அதிகம்

     

    உன்னால் முடியும் உணர்ந்துகொள் எல்லாம் முடியும் எழுந்து நில்

    பெண்ணே உன் பலம் தெரியவிடாது உறவுகள் உன்னைச் சூழந்திடும்

    மண்ணில் உன்னை மேன்மை கொள்ள விடாது உன்னைக் காத்திடும்

    மாயப் பிம்பம் பலதும் காட்டி மயக்கம் கொள்ள வைத்திடும்

    தேடித் தேடிக் கதைகள் சொல்லி தெரியாதவளாய் ஆக்கிடும்

    கூடிக் கூடிக் கதைத்தே உன்னைக் குற்றுயிராயும் ஆக்கிடும்

    பேதை என்று பேடியர் கூடப் பிதற்றித்திரிய வைத்திடும்

    காமம் கொண்ட கண்கள் பலதும் முன்னும் பின்னும் பார்த்திடும்

    பொறாமை கொண்டு பொருமியபடியே மண்ணில் புதைக்கக் காத்திடும்

     

    ஆதலால் உன்னை திமிராய் நீ உணர்ந்து கொள் பெண்ணே

    ஊனம் எதுவும் உன்னிடம் இல்லை உயிர்ப்புடன் நீ எழுந்திடு

    எத்தனை பேரின் எள்ளல் கண்டும் ஏக்கம் துறந்து மீண்டிடு

    உறவுகள் எல்லாம் உடன் வரமாட்டா உண்மை அதை உணர்ந்திடு

    உயிர் வாழும் காலம் கொஞ்சம் உன்னை நீயும் அறிந்திடு

    துணிவு கொண்டு துயர் கடந்து தூக்கம் கலைந்து எழுந்திடு

    காலம் கடந்து எண்ணுவதெல்லாம் கானல் நீராய் ஆகிவிடும்

    கவலை கொண்டே நீயும் இருந்தால் உன் கோலம் கூட மாறிவிடும்

    கட்டிப்போட்ட கயிறுகள் அனைத்தும் நீயே அறுத்திட வேண்டுமடி

    காலம் தானாய்க் கனிந்திடாது காத்திருப்பும் மீண்டிடாது   

     

    காற்றாய் நீயும் மாறிவிடு கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகி

    துயரங்கள் எல்லாம் தூசாய் மாற உன் நினைவுகள் மட்டும் போதாது

    மனம் என்னும் மாயக் குதிரையின் மகுடியில் நீயும் மயங்காது

    அறிவின் ஆழம் தனைக் கடைந்து துணிவின் தூரம் தொட்டுவிட

    சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை

    பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு

     

     

    • Like 15
  9. தமிழர்கள் நாங்களும் கட்டாயம் குடும்பப் பெயர் ஒன்றைப் பின்பற்றி வந்திருந்தோமாலால் எம் மூதாதையர் பற்றிய தெளிவும் எமக்கு இருந்திருக்கும். எப்படி நாம் எம் வரலாறுகளை எழுதிய மறந்தோமோ அதுபோலவே குடும்பப் பெயர் இல்லாது பரம்பரையை அறிய முடியாதவர்கள் ஆகிவிட்டோம். என் மகள் இதைப் பெரும் குறையாகக் கூறுவாள். நான் என தந்தையின் பெயரை முதற்பெயராகவும் கணவனின் பெயரைக் குடும்பப்பெயராகவும் பயன்படுத்துகிறேன்.

    ஆனால் நீக்கல் எல்லாம் சொல்வதுபோல் பெயர்களை உச்சரிக்க மேலை நாட்டவர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எம்மவர்கள் மற்றவர்களுக்காகவே எதையும் மாற்றிப் பழக்கிவிட்டனர். இது எம்மவரிடையே உள்ள ஒருவித தாளவுச் சிக்கல் என்றே நான் எண்ணுகிறேன்.

    • Like 1
  10.  

    128174241_10215757921254598_445111583299

     

     

    எங்களுக்காக  உங்களை உதிர்த்து

    எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து

    உயிர் என்னும் கொடை தந்து

    உங்கள் உணர்வுகள் துறந்து நின்றீர்

     

    தாய் மண்ணின் தடையகற்றிட

    தணியா மனதின் துணிவு கொண்டு 

    மகிழ்வாய் மனதின் ஆசை அடக்கி

    அத்தனை ஓசையும் தாண்டி வந்தீர்

     

    பதின்ம வயதில் பாசம் அடக்கினீர்

    பருவவயதில் புலன்கள் அடக்கினீர்

    பசியது கொண்டும் புசிப்பது நிறுத்தி

    எதிரி அடக்கும் ஆசைதான் கொண்டீர்

     

    எங்கள் நிலத்தை எமதேயாக்க

    உங்கள் நிலங்கள் தான் துறந்தீர்

    சுற்றம் துறந்து சுகங்களும் துறந்து

    காடுமேடெல்லாம் கால் பதித்தீர்

     

    ஏறுபோல் எழுந்து எதிகளை வீழ்த்தி

    வீறுநடை போட்டு வெற்றிகள் கொய்தீர்

    தமிழர் பெயரை தரணியே போற்றிட 

    தானைத் தலைவனின் தலைமை ஏற்றீர்

     

    அத்தனையும் எத்தர்களாற் அழிந்துபோனதே

    எதிரிகள் கைபட்டுக் குலைந்துபோனதே

    காட்டிக் கொடுக்கும் கயவர் கொடுமையால்

    கட்டிய கூடும் சிதைந்தே போனதே

     

    அத்தனை உயிர்களும் அவலம் தாங்கி

    எத்தனை ஈனமாய் எருக்களாய் ஆகிட

    நித்தமும் நாம் நிமிர்வுடன் நின்றது

    இத்தனை தாண்டியும் இல்லாமற் போனதே

     

    ஆண்டுகள் பலவாய் அடுக்கிக் கட்டிய

    ஆசைகளெல்லாம் நூர்ந்து போனதே

    ஓசை கொண்டு ஒலித்த குரல்கள்

    ஒட்டுமொத்தமாய் ஓய்ந்துபோனதே

     

    ஆயினும் உங்கள் அளவிடமுடியா அகத்தீயில்

    கார்முகில் கரையொதுங்க காவலரே உங்கள்

    கனவு நிறைவேறும் கணப்பொழுது வந்திடும்

    போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும்

     

    அந்தநாள் வரும்வரை அடங்கிடோம் நாம்

    எத்தனை தடைகள் எங்கு தாண்டியும்

    அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும்

    ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம்

     

    தோல்வி கண்டு துவண்டோமாயினும்

    தோள்கள் துடிக்க திருக்களமாடிய

    திண்ணிய வீரராய்ப் போர்க்களம் கண்ட

    துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம்

     

    மண்ணை இழந்து மறுகினோமாயினும்

    ஊரை இழந்து உருகினோம் ஆயினும் 

    மாண்டவர் மாண்பைக் காக்க மறந்திடோம்

    மானம் காத்திட்ட மறவரை மறந்திடோம்

     

    வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன்

    வேங்கையானவர் வீரம் மறந்திடோம்

    கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய

    உங்களின் வீரம் என்றும் மறந்திடோம்

    படை நடத்திப் பகைவரை விரட்டித்  

    துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம்

    கார்த்திகை தோறும் காவலிருக்கிறோம்

    மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே

     

    • Like 4
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.