Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8472
  • Joined

  • Days Won

    41

Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. 5 hours ago, புங்கையூரன் said:

    கொஞ்சமும் எதிர்பாராத கதை முடிவு…!

    மனம் ஒரு குரங்கு என்று பெயர் வைத்திருக்கலாம்..! எனினும் ஒரு பெண்ணின் மனதில் இந்தக் கதையின் முடிவு உருவானதென்பது, உங்கள் விரிந்த மனதைப் பறை சாற்றுகின்றது என்றே கருதுகின்றேன்! வாழ்த்துக்கள், சுமே…!

    நன்றி கருத்துக்கும் வருகைக்கும் தலைப்புக்கும்

  2. 26 minutes ago, ரதி said:

    கதையை வாசித்து முடித்தேன்...உண்மைக் கதை போல் தெரிகிறது ...தலைப்புக்கும் ,கதைக்கும் சம்மந்தம் இல்லை ...தலைப்பு அந்த பெண்ணுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பது போல் உள்ளது ..."அலை பாயும் பேதை மனம் " அப்படி ஏதாவது தலைப்பு வைத்திருக்கலாம் 
     

    வருகைக்கும் கருத்துக்கும் தலைப்புக்கும் நன்றி ரதி.

  3. On 6/10/2023 at 06:15, தனிக்காட்டு ராஜா said:

    இந்த 6 மாத தலைப்பு முடிஞ்சுதாமா ஒருக்கா கேட்டுச்சொல்லுங்க

    அது முடிஞ்சு ஆறுமாதாமாகப் போகுது 😄

    On 6/10/2023 at 08:46, Kandiah57 said:

     

    தனிராசா...இந்தக்காலத்தில். சிறியோர் தொடங்கி பெரியோர்  வரை  செய் என்றால் செய்ய மாட்டார்கள் செய்யாத என்றால் செய்வார்கள்.🤣..எனவே   ஆறுதலாக எழுதட்டும்.  வீட்டில் அலுப்படையும்போது. எல்லாம்  இங்கே வந்து எழுதட்டும். ஏன் அவசரப்பட்டு  முடிக்க வேண்டும்??? 🤣🤣

    சரியாய் சொன்னீர்கள் 😂

    On 6/10/2023 at 13:19, nunavilan said:

    புத்தகம் ஏதோ எழுத வெளிகிட்டுள்ளார் போல. இல்லாவிட்டால் சும்மா கிறுக்கி விளையாடுவாவெல்லோ.🙂

    அதுக்கும்தான்

  4. On 4/10/2023 at 14:24, ஈழப்பிரியன் said:

    தயாளனை சந்தைக்குள் சந்தித்த போதே ஏதோ பொறிபறக்க போகுது என்று எண்ணினேன்.

    இப்போதுள்ள சந்ததிக்கு இவைபற்றி நிறையவே புரிந்துணர்வு உள்ளது.

    பழசுகள் தான் இன்னமும் ஊரையே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

    புலம்பெயர் நாட்டில் உள்ள சந்ததிக்கு நிறைய புரிந்துணர்வு வந்தாலும் அங்கிருந்து வரும்பளர் உள்ளபடியேதான் இருக்கின்றனர்.

    19 minutes ago, ஈழப்பிரியன் said:

    ரவி தயாளன் இல்லை என்றால் என்ன இன்னொண்டு மாட்டுப்படும்.

    அந்த அளவு போகமாட்டார்கள் 😀

  5. 37 minutes ago, Kavi arunasalam said:

    என்ன இப்படி சொல்லிட்டீங்கள். வாத்தியார் மகளை அப்படிச் சொல்வேனா? கதையின் நாயகியைத்தான் சொன்னேன். உங்கள் கதையின் நாயகி அப்படி ஒரு கரெக்டர். “சுயநலம்", “அவள் அப்படித்தான்” என்றெல்லாம் தலைப்பிடலாம் என்று யோசித்தேன். திடீரென “ஓடுகாலி” புகுந்து விட்டது.  

    நன்றி அண்ணா 😀

    10 hours ago, P.S.பிரபா said:

    “நானும் பெண்தான்.. “

    ரவியின் கொடுமைகளிலிருந்து பிரிந்தாலும் ஊராரின் ஏளனப் பார்வையிலிருந்து தப்பிக்கவும், தாயிடமோ அல்லது சகோதரரிடமோ  மனம் விட்டு பேசி எனது உணர்வுகளை விளங்கப்படுத்த முடியாலும், தயாளனின் கடந்த கால வாழ்க்கையினை அறிந்து ஏற்பட்ட அனுதாபத்தினாலும் எடுத்தது ஒரு முடிவு.. ஏனெனில் நானும் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் உடைய பெண்தான். 

    மகனின் போக்கும்..பின் குற்றவுணர்வாலும் தயாளனிடம் கதைத்து முடிவு எடுக்கத் தெரியாத நிலையும் உரிய ஆலோசனையை பெற முறையான உதவியை நாடாமல் வாழ்க்கையை இழந்தது.. இந்த மாதிரி நிலை ஒரு ஆணுக்கும் வரலாம். 

    உணர்வுகள் என்பது ஆண் பெண் இருவருக்குமே உள்ளது. பெண் என்பதற்காக தவறான முடிவுகளை எடுக்ககூடாது என எதிர்பார்க்க முடியுமா?? இல்லைத்தானே.. 

    “நானும் பெண்தான்” என்ற தலைப்புடன் கதை வந்தால் கட்டாயம் பெண்ணில் அனுதாபத்தை வரவழைக்கும் கதையாக அல்லது பெண் என்பவள் எப்பொழுதும் தவறே செய்யக்கூடாது என்ற எண்ணத்தை தரும் கதையாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பது எனது எண்ணம்.

    @மெசொபொத்தேமியா சுமேரியர்சுமோ அக்கா!! ஆகையால் நானும் பெண்தான் தலைப்பும் பிரச்சனையாக இல்லை. 

    மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    6 hours ago, கிருபன் said:

    ஒற்றைப் பார்வையில் எழுதப்பட்டதால் கதை திருகும் என்று நினைத்தேன்! அப்படித்தான் வந்திருக்கு!

    மாட்டை மட்டும் அவுக்காமல் கண்டுகளையும் சேர்த்து அவிட்டுக் கொண்டால் வரும் சிக்கலை கதை சொல்கின்றது! 

    “பெண்மடி” என்று தலைப்பை வைக்கலாம்😃

     

    கருத்துக்கும் தலைப்புக்கும் நன்றி கிருபன்

  6. 10 hours ago, suvy said:

    நல்லா இருக்கு கதை......இரண்டு தோனியில் கால் வைத்து பயணம் செய்யலாம் என்று நினைத்திருக்க ஜஸ்ட் மிஸ்ஸாயிட்டுது.......!  😂

    வருகைக்கு நன்றி அண்ணா

    9 hours ago, Kavi arunasalam said:

    IMG-4647.jpg

    தலைப்பு நல்லாத்தான் இருக்கு அட்டைபடம் உட்பட. ஆனாலும் என்னை ஓடுகாலி எண்டு மறைமுகமா நீங்கள் திட்டுரமாதிரி இருக்கு😀

  7. 8 hours ago, குமாரசாமி said:

    கன நாளைக்கு பிறகு நல்ல கதையோட சந்திப்பதில் சந்தோசம்😎

    மிக்க நன்றி குமாரசாமி

    6 hours ago, நிலாமதி said:

    மதுமிதா , கட்டின புருஷன்  (ரவி) கஷ்ட படுத்துகிறார். பயந்துபயந்து வாழ்ந்தேன் என் கோபித்து டிவோர்ஸ் வரை போய்  டிவோஸும் கிடைத்தயிற்று.  தயாளனைக் கண்டு மயங்கி இரக்க பட்டு  மூன்றுபிள்ளைகளையும் முன்னேற்ற வேண்டுமென்று கனடாவுக்கும் வந்தாச்சு ..பின் ஏன் மீண்டும் ரவியை தேடுகிறார். முதல் காதல் முதல் கலியாணம்  என்று . அலைபாயும் மனம் கொண்டவர் . ரகசியமாய் கனடாவில் ரவியுடன் பேச்சு வார்த்தை . ஒரு வாறு பிள்ளைகளும்    வந்த பின் மூத்த மகன் பதினாறு வயது தயாளனுடன் ஒத்துப்போவதில்லை என்று  , ரவியைக் கூப்பிட வேண்டுமென்று தடுமாறுகிறார்.   ஒரு வேளை ரவி கனடாவுக்கு வர போடும் சதியா ? மதுமிதா மனம் நிலையில்லாது . சபலம்   /தடுமாற்றம் என தலைப்பு வைக்கலாம். இறுதியில் கட்டியவனும் இல்லை இடையில்
     வந்தவனும் இல்லை .என்று கஷட பட போகிற. ரவி இங்குவந்த பின் முருங்கை மரம் ஏறிய கதையானால் .....

    கருத்துக்கும் தலைப்புகளுக்கும் நன்றி அக்கா

  8. இந்தக் கதைக்கு "நானும் பெண்தான்" என்று தலைப்பு வைத்தாலும்  எனக்கு அதில் முழுத்திருப்தி இல்லை. நீங்கள் யாரும் உங்கள் மனதில் எழும் தலைப்பை இதில்  பதியுங்கள். 

  9.  

     

    என்ர மூத்தவனும் இப்ப கனடா வந்திட்டான். என் மனம் இப்ப எத்தனை நிம்மதியாய் இருக்கு என்று சொன்னால் உங்களுக்கு விளங்காது. பிள்ளைகள் மூவரையும்  கொலிச்சுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் கூட்டிக்கொண்டு போய்வரவே நேரம் சரியாக இருக்கு. பெரியவனுக்கு இப்ப பதினேழு வயது. கொஞ்சம் வளர்ந்தபடியாலும் தகப்பனோட இருந்ததாலும் தயாளனோடை சேருகிறானே இல்லை. இப்ப எனக்கு அதுதான் பெரிய தலையிடியாக் கிடக்கு. ரவி என்னத்தைச் சொல்லி அவன் மனதைக் கலைத்துவிட்டிருக்கிறாரோ தெரியேல்லை. வேற வீட்டை போவமென்று ஒரே கரைச்சல். சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுக்குப் போனால் எவ்வளவு செலவு என்று அவனுக்கு எவ்வளவு சொல்லியும் விளங்கிக் கொள்கிறான் இல்லை.

    தயாளன் எவ்வளவு காசைச் செலவழிச்சு அவனைக் கூப்பிட்டவர். என்  பிள்ளைகளில அவருக்கு அத்தனை அன்பு. அவர் கதைக்கப் போனாக்கூட அவரை அலட்சியம் செய்திட்டு போயிடுறான். இப்ப நினைச்சால் அவனைக் கூப்பிடாமலே விட்டிருக்கலாம் போல கிடக்கு. ஆனாலும் அவனை மட்டும் அங்கை விட்டிட்டு நான்மட்டும் எப்பிடி நிம்மதியாய் இங்க இருக்கமுடியும்? “சொறி தயாளன்” எண்டு நான் சொன்னதுக்கு அவன் சின்னப்பிள்ளை. அதை நான் பெரிசா எடுக்கேல்லை. நீர் கவலைப்படாதையும். போகப் போக மாறிடுவான் எண்டு எனக்கு ஆறுதல் சொல்லுறார்.

    இப்ப சில மாதங்களாகப் பெரியவன் ஒழுங்காப் படிக்கிறான் இல்லை. எனக்கு அவனோடை பெரிய தலையிடியாய் இருக்கு. கொலிச்சுக்கும் போகாமல் இடையிடையே கட் அடிச்சுக்கொண்டு பெடியளோடை திரியிறான் எண்டு கேள்விப்பட்ட நேரம் தொட்டு மனமெல்லாம் ஒரே சஞ்சலாமாய்க் கிடக்கு. ஊரிலை எண்டாலும் கொஞ்சம் அடக்கி வைக்கலாம். இங்க ஒண்டும் செய்ய ஏலாமல் இருக்கு. இவனை என்ன செய்யிறது எண்டுதான் எனக்கு விளங்குதே இல்லை.    

    நீர் முன்னை மாதிரி இல்லை. என்னோட கதைக்கவே உமக்கு நேரம் இருக்கிறேல்லை என்ற தயாளனின் குற்றச்சாட்டுக்கும் என்ன சொல்லி அவரை சமாதானம் செய்வது என்று தெரியாமல் எனக்கு தலையெல்லாம் வலிக்க நான் மனச் சோர்வுடன் யோசிக்க யோசிக்க எனக்கு விடை எதுவுமே கிடைக்குதில்லை. .

    நண்பிகள் என்று கூட எனக்கு ஒருத்தரும் இல்லாதது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் இந்த நேரத்தில் என் உள்ளக் கிடக்கையைச் சொல்லி ஆற முடியாமலும் இருக்கு. அக்காவிடம்தான் ஒருக்காக் கதைக்கவேணும். அவ சிலநேரம் நல்ல ஆலோசனை சொல்லுவா என எண்ணியபடி அவவுக்கு போன் செய்கிறேன்.

    “உனக்கு நல்ல வாழ்க்கை ஒன்று கிடைச்சிருக்கு. தயாளன் உன்னை கனடாவுக்குக் கூப்பிடாட்டில் உன்ர நிலமை பிள்ளைகளின் நிலமை என்ன எண்டு யோசிச்சனியா? எத்தனை நாளைக்கு உனக்கு நாங்கள் காசு அனுப்பிக்கொண்டு இருக்கிறது. நாங்களும் எல்லாம் குடும்பக்காரர். கஷ்டப்பட்டுத்தானே வெளிநாடுகளில உழைக்கிறம். கடவுள் தந்த அதிட்டத்தை காப்பாற்றிக்கொள்ளப் பார். திரும்பவும் பாழும் கிணத்துக்குள்ள விளப்போறன் எண்டால் கடவுளாலகூட உன்னைக் காப்பாத்த ஏலாது”.  

    அக்கா சொல்வது அத்தனையும் சரிதான். ஆனாலும் இவ்வளவு கடுமையா அவ கதைச்சிருக்கத் தேவையில்லை. அக்கா எனக்கு ஆதரவா இருப்பா என்று பார்த்தால் இப்பிடி முகத்தில அடிச்சமாதிரிச் சொல்லி இருக்கத் தேவையில்லை. ரவியோடை கதைக்கிறனான் எண்டு சொன்ன உடனையே அக்காக்கு சரியான கோபம் வந்திட்டிது.

    அவரும் பாவம்தானே. என்னில அவருக்கு இன்னும் அன்பு நிறைய இருக்கு. எதை மறந்தாலும் முதல் காதல், முதல் கலியாணம் ஆருக்கும் மறக்குமே. கடவுளே ஏன் என்னை இப்பிடிச் சோதிக்கிறாய். என்னை இப்பிடி திக்குமுக்காட வச்சிட்டியே கடவுளே. என்ன முடிவை எடுக்கிறது எண்டு எனக்குத் தெரியேல்லையே. மூத்தவனோட திருப்ப ஒருக்காக் கதைச்சுப் பார்ப்பம் என்று எண்ணியதும் சிறிது நிம்மதி வருது எனக்கு.

     

     

    இப்ப கொஞ்ச நாளா வானமெங்கும் ஒரே மேகமூட்டம். திட்டுத்திட்டாய் கருமேகங்கள் சூழ்வதும் குளிர் காற்று அடிப்பதும் இத்தனை ஆண்டுகளாய் இல்லாமல் இதுதான் முதல் முறை. எத்தனையோ தடவைகள் குளிர் காலங்களில் புயல்க்காத்து வீசியிருக்குத்தான். இப்போது புதிதாய் இடிமுழக்கமும் மின்னலும் சேர்ந்து பயம் கொள்ள வைக்குது. முன்புபோல் தயாளனுடன் கதைக்கவும் முடியுதில்லை. அவர் பட்டும்படாமலும் என்னோடு வாழ்வதுபோல் எனக்குத் தோன்றுவது எனது கற்பனையா என்றுகூட என்னால் உறுதியாகக் கூற முடியுதில்லை. எல்லாம் இன்னும் ஒரு வாரம்தான். அதுக்குப் பிறகு என் முடிவை நான் தயாளனுக்குச் சொல்லத்தான் போறன். தேவையான தருணத்தில சரியான முடிவை எடுத்திடவேணும். மனச்சாட்சிக்குப் பயந்து செய்யிறதா வேண்டாமா எண்டு யோசிச்சு யோசிச்சு தலையிடிதான் மிச்சம். என்ன செய்யப் போறன் நான்.

     

    *********************************************************************************************************************************************************

     

    தயாளன் இரண்டு நாட்களாக பிந்தி வீட்டுக்கு வாறதுமில்லாமல் என்னோட பெரிதா முகம் குடுத்துக் கதைக்கிறார் இல்லை. இண்டைக்கு அவர் வேலையால வந்த உடன ஒருக்காக கதைச்சுப்போடவேணும். கொஞ்ச நாட்களா நானும் அவரைக் கவனியாமல் விட்டிட்டன். பாவம் அவர் எனக்காக எத்தனையைச் செய்திருக்கிறார். அவரை நான் ரவியைச் சந்திக்கிறதுக்கு முன்பே கண்டிருந்தால் என் வாழ்வு வேறு விதமாகப் போயிருக்கும். சரி இப்ப அதை நினைச்சு என்ன பயன். என் விதி இதுதான் என்று இருந்திருக்கு. சரி பிள்ளைகளை எடுக்கிற நேரமாப் போச்சு. ஆனால் என்றுமில்லாமல் மனம் ஏதோ சஞ்சலப்படுறமாதிரி ஏன் இருக்கு என்று விளங்குதில்லை. சுவாமி அறைக்குச் சென்று கண்மூடி நின்றுவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு கொலிச்சுக்குப் போகக் காரை எடுக்கிறேன்.

    என்ன இன்னும் தயாளன் வரேல்லை. நானும் நேரத்தைக் கவனிக்கேல்லை. இப்ப ஒரு கிழமையா பிந்தித்தான் வாறார். ஆனாலும் இண்டைக்கு இரவு பதினொன்று ஆகப்போகுது. இவ்வளவுநேரம் என்ன செய்யிறார். போனைக் கூட நிப்பாட்டி வச்சிருக்கிறாரே. எதுக்கும் காலைவரை பார்ப்பம். எனக்கும் களைப்பா இருக்கு. எதுக்கும் போய் படுப்பம்.

    நான் படுக்கையறைக்கு வந்து போர்வையை எடுக்க அவர் படுக்கிற பக்கம் என்வலப் ஒண்டு தெரியிது. என்ன அது என்று பார்க்க ஆவலாய் இருக்க போய் எடுக்கிறன். மதுமிதா என்று என் பெயர் இருக்க எனக்கு மனதில் ஏதோ செய்ய அதை உடைக்கிறேன்.

    “எனக்கு வாற கோபத்துக்கு உம்மை கொலை செய்திட்டு ஜெயிலுக்குப் போகலாம் போல இருந்ததுதான். ஆனால் என் நல்ல காலம் நானே என்  கோபத்தை அடக்கீட்டன். அதுக்குக் காரணம் உமது தவறுக்கு உமது பிள்ளைகளைத் தண்டிக்கக் கூடாது என்பதுதான்”

    ஐயோ ஏன் தயாளன் இப்பிடி எழுதியிருக்கிறார்.. நெஞ்சு பதற நான் கட்டிலில் அமர்ந்து மிகுதியை வாசிக்கிறன்.

    “நான் ஐந்து ஆண்டுகளாகப் பட்ட துன்பத்திற்கு கடவுள் எனக்குத் தந்த சிறந்த பரிசாத்தான் நான் உம்மை எண்ணினன். என் அடிமனதில உம்மேல் இருந்த காதலும் ஆசையும் நீர் கணவனை விட்டுப் பிரிந்து இருக்கிறீர் எண்டதும் மீண்டும் உயிர்த்திது. அதனால உமது பிள்ளைகளையும் என்  பிள்ளைக்களாய் எண்ணித்தான் இந்த ஐந்து ஆண்டுகளும் வாழ்ந்தனான். ஆனால் நீர் எனக்கு செய்ய நினைத்தது பெரிய துரோகம். அதைக்கூட மன்னிக்கலாம் நீர் என்னோட பேசி ஒரு தீர்மானம் எடுத்திருந்தால். ஆனால் நான் ஒருநாள் வெள்ளன வீட்டுக்கு வந்ததால உம்முடைய  சுயரூபம் தெரிஞ்சது. நான் வந்தது தெரியாமல் நீர் உம்மட முதல் கணவனோடை போனிலை கதைச்சதைக் கேட்க நேர்ந்தது என் அதிட்டம்.

    நீர் உமது கணவனை ஏஜெண்ட் மூலம் கூப்பிட ஒழுங்கு செய்த விடயம் பற்றி அவனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தீர். முக்கியமாய் ஒண்டு சொன்னீர் பாரும். அதைக் கேட்டு என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்திது. அவன் வந்த உடன அவனையும் இந்த வீட்டில கூட்டிக்கொண்டு வந்து வச்சிருக்கிறது எண்டதைக்கூட மன்னிக்கலாம். ஆனால் அவன் வந்ததும் கோபத்தில நானே வீட்டை விட்டுப் போயிடுவன் எண்டும் இல்லாட்டில் என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லி நீயே சொல்லுவாய் எண்டும் உன்ர முன்னாள் புரிசனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாய். நானாகப் போகாட்டில் என்னைக் கொடுமைப் படுத்திறார் என்று சொன்னால் அவங்களே என்னை வெளியேறச் சொல்வார்கள் என்று சொல்ல உன்ர புருஷன் ஒரு சிரிப்புச் சிரிச்சான் பார். அப்பதான் உனக்கு எந்த விதத்திலையாவது தண்டனை குடுக்கவேணும் என்று நான் தீர்மானிச்சது.

    நீயும் பிள்ளைகளும் என்னை வா என்று சும்மாதன்னும் கேட்காமல் இரண்டு நாட்கள் எங்கேயோ போனீர்கள் எல்லோ. அன்றுதான் நான் இந்த வீட்டைப் பார்க்க ஆட்களை ஒழுங்கு செய்தது. வீடு என் பேரில இருந்தாலும் உனக்குப் பாதிப் பங்கு இருக்கு. அதனால தயாளன் என்னை எழும்பச் சொல்லேலாது என்று தினாவெட்டா அவனுக்கு நீ சொல்லிக்கொண்டிருந்தது இப்பவும் என் காதில கேட்டுக்கொண்டே இருக்கடி.

    என் வீட்டை நான் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டேன். ஒரு வாரம் மட்டும்தான் நீங்கள் இங்க இருக்கலாம். அதுக்குப்பிறகு உரியவை வந்திடுவினம். உன்ர கையெழுத்து இல்லாமல் எப்பிடி விக்கலாம் எண்டு நீ யோசிக்கலாம். இரண்டு வாரத்துக்கு முந்தி வீட்டுக்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறன் என்று சொல்லி உன்னட்டை சில பேப்பரில கைஒப்பம் வாங்கினது நினைவிருக்கா?? என்னை இளிச்சவாயன் எண்டு எண்ணினதால நீ ஒண்டையும் வடிவாப் பாக்கேல்லை. இதுக்குப் பிறகும் நீ வழக்கு வைக்கலாம். வாதாடலாம். ஆனால் அதையெல்லாம் பார்க்க நான் இந்த நாட்டிலையே இருக்கமாட்டான். உன்ர புருஷன் இந்த நாட்டுக்குள்ள எப்பிடி வாறான் எண்டு நானும் பார்க்கிறன். எவ்வளவு நல்லவனாய் இருந்த என்னை இப்படி மாற்றினது உன்ர துரோகம் தான். அதை நான் என் உயிருள்ளவரை மறக்கவே மாட்டன்”

    பெயரே போடாமல் தட்டச்சுச் செய்யப்பட்ட கடிதம் என் கையை விட்டு தானாக கீழே விழுது. பனிப்பாறை ஒன்று என் தலைமேல் விழுந்ததுபோல் அதிர்ச்சியில் கண்களில் கண்ணீர் கட்டுமீறி வர நான் அழுத ஓலம் கேட்டு பிள்ளைகள் பதைப்புடன் எழுந்தோடி வந்து என்னம்மா நடந்தது என்று அருகில் வந்து கேட்க, எதுவும் சொல்லாமல் அழுதுகொண்டு இருக்கிறேன் நான்.           

     

     

    • Like 5
  10. On 5/10/2023 at 20:14, Kavi arunasalam said:

    ஏடாகூடமாக உங்களுக்கு ஏதும் நடக்காமல் இருந்தால் சரி

     

    நேரமில்லையா சுமேரியர்?

    காவாலித் திரியில இதை மறந்துபோன😀ன்.

    48 minutes ago, putthan said:

    அருமையான தொடர், தொடர்ந்து எழுதுங்கள்

    முடியுது 😀

    • Like 1
  11. 6 hours ago, goshan_che said:

    நன்றி.

    இதில் கடைசி சொல்லு தூஷணம் என நினைக்கிறேன்.

    பொதுப்படையாக அன்றி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் என்ன என அறிய ஆவல்.

    ஓடுகாலி என்றால் வீட்டில் தங்காதவர்கள். விடுகாலி?

     

    எம் மூரில் வங்கோலை  அறுத்த கள்ளன் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அது தூஷண வார்த்தை அல்ல

  12. 17 hours ago, Kavi arunasalam said:

    நீங்களே அந்தச் சொல் தவறு என்று சொல்கிறீர்கள். அந்தச் சொல் ஒருவருக்கு முன்னாலோ பின்னாலோ சொன்னாலும் தவறுதான்.  தவிர்த்திருக்கலாம்

    அதைத் தானே நானும் சொல்லியுள்ளேன். நீங்களும் கோஷானும் என்னைக் குழப்புகிறீர்களே

    19 hours ago, நிலாமதி said:

     

    19 hours ago, நிலாமதி said:


    நீங்கள் கதை எழுதியது தமிழ் மக்களுக்கு தெரிவிக்க , உங்களை விழாது   தடுத்தவனை விபரிக்க "காப்பிலி "என எழுதினீர்கள். இதை கதையின் சுவாரசியம் கருதி நம்மின மக்களுக்கு இலகுவில் விளக்கம் தர இவ்வாறு  எழுதியது சரியே ...குற்றம் காண நினைப்பவர்கள் கதையை ரசிக்காமல்  குறை காண்பார்கள்.  

    நன்றி அக்கா

    23 hours ago, vasee said:

    தவறு என்பது தெரிந்தே செய்வது, தெரியாமல் செய்வது தவறாகாது.

    தெரியாமல் செய்த தவறை உணர்ந்து அதற்காக வருந்துபவரை மேலும் மேலும் கஸ்டப்படுத்தாமல் விடுவதுதான் சரி.

    இதில் வருத்துவதற்கோ வருந்துவதற்கோ ஒன்றும் இல்லை.😀

  13. 23 hours ago, கிருபன் said:

    இதை 

    “விழ இருந்த என்னை ஒரு கறுப்பன் இழுத்து நிறுத்துகிறான்.” 

    என்று எழுதியிருக்கலாம்.

    காப்பிலி என்பது கறுப்பர்களை இழிவாக அருவருப்புடன் குறிக்கவே தமிழர்கள் பாவிக்கின்றவர்கள். கறுப்பர்களுடன் அடிமட்ட வேலை பார்த்த எனக்கு அவர்களுடன் அன்னியோன்யமாகப் பழக நன்றாகவே தெரியும். ஆனால் பல தமிழர்கள் முதல் பார்வையிலேயே கறுப்பர்களை சந்தேகத்துடனும், பயத்துடனும் பார்ப்பார்கள். அந்த அருவருப்புப் பார்வை போலவே காப்பிலி என்ற வார்த்தைப் பிரயோகமும்.

    அமெரிக்காவில் ஒரு காலத்தில் நீக்ரோ என்று கறுப்பர்களைச் சுட்டியவர்கள் இப்போது பிளாக், ஆபிரிக்க அமெரிக்கன் என்று சொல்லுவது போல தமிழர்களும் காப்பிரி, காப்பிலி என்று சுட்டுவதைக் கைவிட்டு கறுப்பர் என்று நாகரீகமாக வெளியே அழைக்கலாம்; எழுதலாம் (உள்ளே காப்பிலி என்றே நினைக்கலாம்!)

     

    ஆசான் வெண்முரசு நாவல் தொடரில் வரும் கிராதம் நாவலில் இப்படி எழுதியிருக்கின்றார்.

    “யவனநாட்டிலிருந்து  திரும்பி வந்துகொண்டிருந்த காப்பிரிநாட்டு வணிகக்குழுவினர் பாலைநிலத்தில் வெற்றுடலுடன் சடைக்கற்றைசூடி சிரித்தும் நடனமிட்டும் சென்றுகொண்டிருந்த பித்தனை கண்டார்கள். அவனை அவர்கள் தங்கள் அத்திரிகள் ஒன்றின்மேல் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களின் காப்பிரிநாட்டு துறைநகர் ஒன்றுக்கு கொண்டுசென்றார்கள்.”

    ஆபிரிக்காவை காப்பிரிநாடு என்றும் சீனாவை பீதர்நாடு என்றும் ஆசான் சொல்லுவதனால் காப்பிரி என்பது இன்றைய வழக்கில் நாகரீகமான வார்த்தை என்று சொல்லமுடியாது.

     

     

    எனக்கும் ஆபிரிக்க நண்பர்கள் சிலர் இருக்கின்றனர். காப்பிலி என்ற சொல்லை அருவருப்புடன் தான் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது எனக்குப் புதிது. கறுப்பன் இழுத்து நிறுத்துகிறான் என்று  எழுதியிருந்தால் மட்டும் சரி என்று ஏற்றிருபிபார்களென்று நான் நினைக்கவில்லை.  

  14. 23 hours ago, goshan_che said:

    இந்த வாதம் சரியே.

    ஆனால் அதன் பின் நீங்கள் சொன்ன “அவர்கள் பார்க்கும்/ கேட்கும் போது சொல்வதில்லை” என்ற கருத்து - இந்த வாதத்தை (அதாவது இது இழி சொல் இல்லை) சுக்கலாக்கி விட்டதே அன்ரி? அதைதான் சுட்டினேன்.

    நான் எங்கே எழுதினேன் ???

  15. 6 minutes ago, goshan_che said:

    இந்த வாதம் சரியே.

    ஆனால் அதன் பின் நீங்கள் சொன்ன “அவர்கள் பார்க்கும்/ கேட்கும் போது சொல்வதில்லை” என்ற கருத்து - இந்த வாதத்தை (அதாவது இது இழி சொல் இல்லை) சுக்கலாக்கி விட்டதே அன்ரி? அதைதான் சுட்டினேன்.

    எனக்குப் புரியவில்லை நீங்கள் எழுதி இருப்பது? எனக்கு வேலைக் களை😀. யாருக்கு எழுதியது என்று சொல்லுங்கள் 

    6 minutes ago, island said:

    காப்பிலி என்ற வார்ததை இலங்கையில் ஒரு வசவு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது இலங்கை மக்களுக்கு தெரிந்த உண்மை. ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது ஊரில் சர்வ சதாரணம். இதுவும் ஒரு உதாரணம் தான். 

    நான் இதுவரை இலங்கையில் இப்படிக் கூறுவதாகக் கேள்விப்பட்டதில்லை. எந்த ஊரில் ஒழுங்காக தல் சீவாமல் உடை உடுத்தாமல், குளிக்காமல் இருக்கும் ஒரு மகனைப் பார்தது  காப்பிலி மாதிரி இருக்காமல் ஒழுங்கு மரியாதயா இரு என்று தகப்பன்  கூறுவது??? எங்கள் ஊரில் கோழிகளுக்கே சொல்வார்கள்.

  16. 1 hour ago, ரதி said:

    நாங்கள் கறுப்பினத்தவர் என்று தான் சொல்கிறது அண்ணா...அவர்களுக்கு நாங்கள் கதைப்பது தெரியாது என்பதற்காக அவர்களை பற்றி பிழையாய் கதைக்க கூடாது அல்லவா! 
     

    இது கதைப்பது பற்றியது இல்லை ரதி. உங்கள் வீட்டிலிருந்து மூன்றாம் வீட்டில் ஒரு கறுப்பு இனத்தவர் இருந்தால் அவர்கள் பற்றிய விபரம் ஒன்றுமே தெரியாது ஒரு விடயத்தை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் எப்படிக் கூறுவீர்கள் ???? அவர்கள் வீடுக்குச் சென்று பெயரை விசாரித்துவிட்டா விடயத்தைக் கூறுவீர்கள் ???

  17. 2 hours ago, goshan_che said:

    அவர்களுக்கு தெரியாமல் எழுதினால் பரவாயில்லை என்ற கருத்தின் மூலம் - கருத்தாடலின் போக்கையே அன்ரி மாத்திப்போட்டா🤣.

    ஆனால் ஒரு இலக்கிய படைப்பில் that black man helped me என்பதை ஒரு தமிழ் கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்திடம் “அந்த கறுப்பின இளைஞன் எனக்கு உதவினான்” என்று சொல்வதாக எழுதினால் அது எவ்வளவு செயற்கைத்தனமாக இருக்கும்?

    இதில் எனக்கு நிலைப்பாடு என்று இல்லை. கேள்விகள் மட்டுமே.

    ஆதாரம்?

    ஏன் கேட்கிறேன் என்றால் எனது யூகேயில் பிறந்த நண்பி ஒருவர் ஒரு முறை “that black bag” என்பதை “அந்த காப்பிலி பாக்” என சொல்லி - எல்லாரும் சிரித்தோம்.

    உண்மையில் பெரும்பாலானா தமிழர்கள் இதை ஒரு இழிசொல்லாக கருதி பாவித்தால் - அது தவறான சொல்தான்.

    ஆனால் இப்படி கருத ஆதாரம் ஏதும் இருக்க வேண்டும்.

    நான் எழுதியதில் அவனைத் தரகுறைவாகக் கூறவில்லையே. எளிய காப்பிலி என்றோ மொக்குக் காப்பிலி என்றோ எழுதி இருந்தால் தவறு என்று கூறலாம்.  என்னை விழாமல் நிறுத்தினான் என்று கூறும்போது அது ஏயன் இழிசொல்லாக்கப் பார்க்கவேண்டும்.

  18. 5 hours ago, நிழலி said:

    யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு. 

    காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள், பெயர் வரக் காரணங்கள் என்று பல இருந்தாலும், எம்மவர்களால் இச் சொல் கறுப்பு இனத்தவரை நோக்கி சொல்லப்படுவதன் காரணம், தம்மை உயர்வாகவும் அவர்களை தமக்கு கீழாகவும் கருதும் 'உயர்சாதி' மன நிலையில் தான். 

    மேலும் எம்மவர்கள் கறுப்பு இனத்தவர்களை 'கறுவல்' என்றும், சீனர்களை 'சப்பட்டைகள்' என்றும், அல்ஜீரியர்களை 'அடை' என்றும் அழைப்பது அவர்களை இழிவுபடுத்துவதற்காகவே அன்றி வேறு எந்தக் காரணங்களாலும் இல்லை. சொந்த இனத்துக்குள்ளேயே சாதி பார்க்கும் இழி மனநிலையின் தொடர்ச்சி தான் இந்த பழக்கம்.

    ஏற்கனவே சொல்லியது போல, இந்தச் சொல் தவிர்க்கப்பட வேண்டியது. யாழில் கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டிய, விதி மீறலுக்குரிய சொல்.

    நன்றி


     

    நீங்கள் கூறிய எதுவுமே இதில் இல்லை நிழலி. கறுவல் என்று சொல்லும்போது  மற்றவர்களால் அவர்களை அடையாளம் காண்பது இலகுவாக்கிறது. காப்பிலிக் கோழி என்று கூறுவதும் தலைமுடிபோன்று இருப்பதானாலத்தான். தமிழர்கள் யாரும் தம்முள் கதைக்கும்போது அவர்களைத் தரம் தாழ்த்துவதற்காகக் கதைப்பதாக நான் எண்ணவில்லை. ஒரு விடயத்தை இலகுவாகக் கூறுவதற்காக அப்படியான சொற்களைப் பயன்படுத்துவதை நீங்கள் சாதீயத்துடன்  வேண்டுமென்றே முடிகிறீர்கள். ஒரு தமிழ் நூலில் வரும் காப்பிலி என்னும் சொல் எப்படி மற்றவரைப் பாதிக்கும் என்று எனக்கு ஒருக்கா விளக்குங்கோ??? ஏனெனில் என சிற்றறிவுக்கு எட்டவில்லை.  

    4 hours ago, island said:

    மிக தெளிவான பார்வை. இதை விட தெளிவாக கூறமுடியாது. அருமையான கருத்து நிழலி. அண்மையில் திண்ணை உரையாடல்  ஒன்றில் கூட லண்டன் மேயரை குறிப்பிடும் போது ஒரு நகர முதல்வர் என்ற அடிப்படை நாகரீகம் கூட இன்றி  அவர்முஸ்லீம் என்பதால்  “காக்கா” என்ற வார்ததை பயன்படுத்தப்பட்டது.  நீங்கள் குறிப்பிட்டது போல சொந்த இனத்துக்குள்ளேயே மற்றயவர்களை தாழ்த்தும் இழி மனநிலையின் வெளிப்பாடு தான் இது. 

    நான் எழுதியிருப்பதை வடிவா வாசியுங்கோ. விளங்காட்டில் திருப்பவும் வாசிச்சால் விளங்கும்  

    3 hours ago, ஈழப்பிரியன் said:

    இங்கு எம்மை இந்தியோஸ் என்கிறார்கள்.

    எம்மை லண்டனில் பாக்கி என்கிறார்கள்

    அதே மாதிரி கறுப்பினத்தவரை காப்பிலி என்பதில் தப்பில்லை

    ஆனால் கட்டுரை கதைகள் என்று வரும்போது இப்படி எழுதலாமோ என்று சிந்திக்க வேண்டி உள்ளது.

    நன்றி அண்ணா கருத்துக்கு. இப்படி நான் எழுதியதால் யாருக்குப் பாதிப்பு என்று எண்ணுகிறீர்கள். 

    2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

     

     

    நேரடியாக கூறுவது என்றால் ஒரு எழுத்தாளர், சமூகத்தில் அறியப்பட்டவர் எனும் வகையில் உங்களை நோக்கும்போது நீங்கள் இனிமேல் இப்படி காப்பிலி என எழுதுவதை, பேசுவதை தவிர்த்தால் நல்லது. ஏற்கனவே எழுதியது, பேசியதற்கு ஒன்றும் செய்யமுடியாது. 

     

     

    பட்டும்படாமலும் பதில் கூறுவது என்பது இதுதான்

  19. 5 hours ago, Justin said:

    😂தவறேயில்லை!

    இப்படி நிறைய விடயங்கள் தவறில்லை. உதாரணமாக, உரிமையாளனுக்குத் தெரியாத வரையில் அவனிடமிருந்து எதையாவது "லவட்டி" விடுவதும் தவறல்ல, கண்டால் மட்டும் தான் தவறு! காவல் துறை அக்கப் பக்கம் இல்லாவிட்டால் போக்குவரத்து விதிகளை மீறுவது தவறேயில்லை, காவல்துறை கண்டால் தான் தவறு அல்லது குற்றம்!

    இது போன்ற ஒரு உரையாடல் சில மாதங்கள் முன்பும் யாழில், நாற்சந்தியில் நடந்திருக்கிறது. இதே போல கறுப்பின மக்களைக் குறித்த ஒரு தமிழ் பதம் அவர்களுக்குத் தெரிந்தால் மட்டும் தான் தவறு, இல்லையேல் அது nothing என்று!

    உங்களுக்கு ஊர் சொலவடையொன்று தெரிந்திருக்கும்: "கண்டால் கட்டாடி, காணாட்டி **** (சாதிப் பெயர் சுய தணிக்கை)". இதையெல்லாம் அபிப்பிராயம் கேட்டு தீர்மானிக்க வேண்டிய நிலையிலா இருக்கிறீர்கள் சுமே?

    வேறு ஒருவருடன் இதுபற்றிக் கதைத்தபோது என்னைக் கடுமையாக வார்த்தைகளால் தாக்கினார். எனக்கே என் எழுத்தில் சந்தேகம் வந்துவிட இருக்கவே இருக்கு யாழ் இணையம் என்று இங்கக்கு வந்து எழுதினேன்.  ஏனெனில் முகமூடியில் இருப்பவர்கள் துணிவாகத் தம் கருத்தைக் கூறுவார்கள் என எண்ணினேன். ஆனாலும் பலரிடமிருந்து சரியான விடை கிடைக்கவில்லை.

    1 hour ago, island said:

    கறுப்பின என்று கூறாமல் ஆபிரிக்க இளைஞர் என்று கூறலாம் தானே!  ( எம்மை ஆசியர் (Asien)  என்று கூறுவது போல,  அல்லது அவரின் நாடு தெரிந்தால் அவரது நாட்டை அடையாளமாக கூறலாமே! 

    நான் எழுதியது ஒரு சம்பவம். அதில் அவனை நிறுத்திவைத்து எந்த நாடு என்றா கேட்க முடியும் 😂

  20. 17 minutes ago, யாயினி said:

    உங்களோடு பேசிப் பிரியோசனம் ஒன்றும் இல்லை...ஆனாலும்  யார் தப்பு செய்தாலும் அதை அடுத்த முறையும் தொடராதவாறு நடந்து கொள்ள வேணும்...நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விடையத்தை பார்த்து விட்டுத் தான் முன்னர் இவை பற்றி  எழுதிய பகுதியும் படித்த நினைவு இருந்த படியால் இங்கு இணைத்தேன்.நீங்கள் என்ன மன நிலையிலிருந்து எழுதினீர்களோ நமக்கு தெரியாது தானே.எது எப்படியாயினும் வீடுகளில் அசாதரணமாக கதைப்பதற்கும் பொதுப்படையாக பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறதல்லவா..குறைந்த பட்ச  நாகரீகத்தையாவது கடைப்பிடிக்க கற்றுக் கொள்ள வேணும்.சொல்லப் போனால் மிக கூடுதலான முதியோர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் எம்மவர்களின் மல:சலங்களை துப்பரவு செய்பவர்கள் நாம் அடையாளப்படுத்தும் இந்த மக்கள் தான்..அதுவும் பெண்கள் குடும்பஸ்தர்கள்..இன்றும் நான் என் கண்ணால் கண்டேன்..பிள்ளைகளுக்கு நல் வழிகாட்டியாக இருக்கும் நீங்களே விதண்டா வாதம் செய்யக் கூடாது.ஆண் பெண் யாரை சொன்னாலும் சொல் ஒன்று தான்..அதை நினைவில் கொள்ளவும்.நன்றி.✍️

    உங்களுக்கு நான் எழுதியது விளங்கவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  21. 10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

    ஏதிலிகள்: ஏதும் இல்லாதவர்கள்

    காப்பிலிகள்: காப்பு (பாதுகாப்பு இல்லாதவர்கள்)

    நாங்கள் காப்பிலிகள். 

    ஞாபக மறதி உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகள் போடலாமா? 😇

    போட்டிருக்கிறேனே. ஆனால் நீங்கள்தான் நேரடியாகப் பதிலைக் கூறாமல் திசை திருப்புகிறீர்கள் 😀

    3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

    முடிஞ்சால் வந்து இலங்கையில வம்பு இழுத்து பாருங்க பின்ன  தெரியும் எத்தனை சாதி எத்தனை வசை சொல் வந்து காதில் பாயுமென

    சாதியும் இதுவும் ஒன்றல்ல என்று கூறியும் நீங்கள் வாசிக்காது கருத்து வைக்கிறீர்கள்.

  22. 13 hours ago, nedukkalapoovan said:

    காப்பிலி தமிழில் உரையாடுபவர்கள் பாவிப்பத்தால்.. அதன் தாக்கம் சரியாக அந்த நிறத்தவரால் விளங்கிக் கொள்ளப்படவில்லை.

    ஆனால்.. நீக்குரோ என்பது எப்படி இனரீதியான அவமானச் சொல்லாகப் பார்க்கப்படுகிறதோ.. அதே காப்பிலிக்கும் இருக்கிறது எனலாம். 

    அந்த நிறத்தவர் முன்னாலோ அன்றி அவர் வாசிக்கக் கூடிய ஆங்கிலத்திலோ நான் இந்தக் கதையை எழுதவில்லை. அப்படியிருக்க எப்படி தவறாகும்???அப்படிப் பார்க்கப் போனால்  கருப்பு இனத்தவர்கள் எனறு பல இடங்களில் பயன்படுத்துகின்றனரே?

    11 hours ago, goshan_che said:

    நானறிந்த வரை:

    காப்பிலி என்பது அரபிச்சொல்லான காபிர் இன் திரிபு.

    ஆசியாவில் இருந்து வட ஆபிரிக்கா நோக்கி நகர்ந்த அரபிகள், நம்பிக்கையற்றவன் என்ற பொருளில் காபிர் என அப்போ முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்த கறுப்பின மக்களை அழைத்தனர்.

    அதுவே பின்னர் திரிபடைந்து காப்பிரி, காபிரிஸ், தமிழில் காப்பிலி என வழங்கப்படுகிறது.

    தமிழில் காப்பிலி என்பது நிகர், பக்கி, போன்ற ஒரு வசைபு சொல்லா? அல்லது பிளக், வையிட் போன்ற ஒரு அடையாளச்சொல்லா?

    என்னை பொறுத்தவரை இது ஒரு அடையாளச்சொல் என்றே கருதுகிறேன். ஆனால் slang எனப்படும் வழக்குத்தொடர். Formal எழுத்தில் கறுப்பினத்தவர் என்பதை பாவிக்கலாம். ஆனால் கதைகளில் பேச்சு வழக்காக எழுதும் போது காப்பிலி என எழுதலாம் என்றே நினைக்கிறேன்.

    தொட்டதை எல்லாம் தடை செய்யும் cancel culture இன் ஒரு நீட்சியாக இந்த சொல்லையும் தடை செய்வதாகவே எனக்குப்படுகிறது.

    ————

    இது சம்பந்தமான கட்டுரை ஒன்று

    ———————

     

    மிக்க நன்றி கோஷான் உங்கள் கருத்துக்கு. நீங்கள் போட்டுள்ள கட்டுரையை இன்று வாசிக்க நேரம் இல்லை. வாசித்தபின் கூறுகிறேன். 

    10 hours ago, புலவர் said:

    மேற்கு நாட்டவர் குறிப்பாக இங்கிலாந்தில் கறுப்பு இனத்தவர் என்று பொருள்படblack என்ற சொல்லைபாவிக்கிறார்கள் . ஆனால் நீக்கிரோ என்ற சொல்லைப் பாவிப்பதை இனத்துவேசத்தில் பார்க்கிறார்கள்.
    தமிழில் ஆபிரிக்க இனத்தவர் என்ற பொருளில் காப்பிலி என்று பாவிக்கிறார்கள் இனத்துவேசத்துடன் அதைப்பாவிப்பதாகத் தெரியவில்லை.ஆனால்கறுப்பர்கள் என்று பாவிப்பதை இங்கு பிறந்த பிள்ளைகள் விருமபவில்லை என்று உணர முடிகிறது.

    நான் எழுதியதற்கான பதில் உங்களிடம் இல்லையே ???

  23. 13 hours ago, நிழலி said:

    வணக்கம் சுமே,

    ஆம் இது மிகவும் தவறான அவச் சொல் தான். கருப்பின மக்களை தரம் தாழ்த்த எம்மவர்களால் பயப்படுத்தப்படும் நிறவெறி கொண்ட ஒரு சொல்.

    யாழ் விதிகளின் படி, இச் சொல்லை யாழில் எங்கும் பயன்படுத்தவும் முடியாது - தலைப்பில் உட்பட.

    நன்றி

    எம்மவர்கள் வாக்குக்கண், பல் மிதப்பு என்றும் வெள்ளைச்சி என்றும் பயன்படுத்துவதுதானே ??? அச்சொற்களை அந்த நபர்களுக்கு முண் அல்லது அவர்கள் காதுபடக் கூறுவதுதான் தவறு.

    13 hours ago, நன்னிச் சோழன் said:

    இந்தக் காப்பிலி என்ற சொல்லானது அவர்களது தலைமையிரை வைத்து குறிப்பிடும் ஒரு சொல் என்பது என்னுடைய கருத்து.

    இச்சொல் இன்றளவும் என்னுடைய வீட்டில் எனது/ என் போன்ற இளையோர்/ஆண்கள் தலைமையிர் ஒழுங்கீனமாக இருந்தால் அதைக் குறிப்பிட என்னுடைய உறவினர்களால் பாவிக்கப்படுகிறது.

    ஆபிரிக்க இனத்தவரின் தலைமுடியைக் குறிக்கும் சொல்தான் அது. உங்கள் கருத்தை நேரடியாகக் கூறவில்லை. அப்படி நான் குறிப்பிட்டது தவறா???

    12 hours ago, நிலாமதி said:

      பாது காப்பு இல்லாதவன்    காப்பு +இலி (இல் )  காப்பிலி .

    இப்படியும் சொல்லலாம்.   

    அதுவல்ல என்  பதிவின் நோக்கம். நான் எழுதியது சரியா ??? தவறா /// என்பதுதான்

  24. 10 hours ago, suvy said:

    சிறப்பான கருத்துக்கள் கோஷான்-சே ...........எனக்குத் தெரிந்ததெல்லாம் முன்பு ஆச்சிமார் பிள்ளைகளை வெருட்ட அந்தச் சொல்லைப் பாவிப்பார்கள்.......!  👍

    இதில் நீங்கக்கள் எந்தக் கருத்தையும் வைக்கவில்லையே நான் எழுதியது தொடர்பாக????

    11 hours ago, யாயினி said:

     

    நான் எழுதியிருப்பது இதல்ல. நான் எழுதியது தொடர்பான உங்கள் கருத்தை முன்வையுங்கள்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.