-
Posts
8218 -
Joined
-
Last visited
-
Days Won
37
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
-
கம்பளிப் பூச்சிக்காக வீட்டை விட்டு வேறிடம் சென்றுள்ளனர் என்பது நம்பத் தகுந்ததாக இல்ல.
சீனாக்காரன் கொண்டுவந்திருப்பானோ??? உணவுக்காக
-
மலை என்னும் சொல்லுக்கு எதற்காக இத்தனை ஒத்த சொற்கள்??????
-
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது அது அவர்கள் விருப்பம். ஆனாலும் எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் சரி. ஆனால் இரு பெண்களாகட்டும் அல்லது ஆண்களாகட்டும் ஒரு பெற்றோரை இழந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசை கொள்ளலாம். ஆனால் இவர்கள் தமக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு அந்தக் குழந்தை தாய் அல்லது தந்தை இன்றி வளரும்போது அந்தப் பிள்ளையின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றுதான் நான் எண்ணிப் பார்க்கிறேன். ஓரினச் சேர்க்கையாளர்களை நான் எதிர்க்காவிட்டாலும் அவர்கள் தமக்கான குழந்தையை உருவாக்குவதை நான் கண்டிக்கிறேன்.
-
2
-
1
-
-
On 28/9/2021 at 16:44, Nathamuni said:
என்னெண்டா.....
…ஒண்டுமில்லை...
சொன்னாப்போல.... அய்யா, மோனோட வந்திட்டார் போலை கிடக்குது.....
லண்டனிலும் இப்ப மகன் அல்லது தொட்டாட்டு வேலைக்கு இன்னொருவரோடுதான் ஐயர் வாறது.
On 28/9/2021 at 17:07, valavan said:ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது?
சந்நியாசந்தான். வேறென்ன.???
-
1
-
-
On 14/9/2021 at 20:25, மோகன் said:
Rank ஆனது நிபந்தனைகள் பதிப்பு 4 வெளியிட்ட காலப்பகுதியில் இருக்கவில்லை. இது இவ்வருட நடுப்பகுதி அளவிலேயே இந்தக் களத்திற்குரிய Script உருவாக்கியவர்களால் இணைக்கப்பட்டது. அடுத்த விதிமுறைகள் பற்றிய விடயத்தில் இது பற்றிய விடயங்களைக் குறிப்பிடுகின்றோம்.
நீங்கள் நடைமுறையில் கொண்டுவந்த விடயம் பற்றி உங்களாலேயே தெளிவான பதிலைக் கூற முடியவில்லையா????? Script உருபாக்குபவர்கள் உங்கள் அனுமதியின்றி ஒன்றை உருவாக்குவார்களா???? இந்த ராங்க் விடயம் பற்றி தெளிவாகக் கூறினால் நன்று மோகன்.
-
On 29/9/2021 at 03:51, ஈழப்பிரியன் said:
அடுத்த வருடம் வரை பொறுக்க மாட்டியளோ?
அந்தப் பொறுமை இருந்தால் எங்கேயோ போயிருப்பனே.
20 hours ago, பெருமாள் said:பனி நிறைந்த நாட்டில் வீட்டுத்தோட்டம் செய்து அசத்தும் புலம்பெயர் தம்பதியினர் !
புலம்பெயர் தமிழ் மக்கள் நாட்டை ஏனைய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றாலும் தமது அடையாங்களையும் தமது பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காது என்றும் வாழ்ந்து வருகின்றனர்
அவ்வாறே பனிமலை கொண்ட கனடா நாட்டில் ரொறன்டோ நகரில் வாழும் குறித்த தம்பதியினர் அங்கு நமது ஊரைப்போன்றே வீட்டு தோட்டத்தில் பாகற்காய் செய்கையை செய்து பலரின் கவனித்தினை ஈர்த்ததுள்ளதுடன் இவர்களின் இந்த முயற்சி சமூக வலைதளங்களில் தற்போது பெரிதும் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது
கனடாவில் நிலமை வேறு. அங்கு குளிர் போன்றே வெப்பமும் அதிகம். எனவே எல்லாம் செழிப்பாக வருகின்றன. லண்டனில் இரண்டும் கெட்டான் நிலை.
22 hours ago, vanangaamudi said:சூரிய வெளிச்சத்தில் இருந்து தாவரங்களுக்கு தேவையான ஒளியின் பகுதி மனித கண்ணுக்கு தெரியும் ஒளியின் பகுதிக்குள் தான் அடங்குகிறது. ஆனால் பல தாவரங்களுக்கு சூரிய வெளிச்சத்தில் உள்ள பச்சை நிறம் மட்டும் தேவையில்லை என்பதால் அதை வந்தவழியே(?) விட்டு விடுகிறது. அதனால்தான் தாவரங்கள் பார்வைக்கு பச்சையாக தெரிகின்றன.
கண்ணாடி வீட்டுக்குள் செல்லும்போது அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசினால் குளுகுளு கண்ணாடி அணிந்து கொள்ளவும். வீட்டு பாவனைக்கு தயாரிக்கப்பட்ட LED lights பயன்படுத்துவதால் மனிதருக்கு தாக்கமில்லை. கண்ணுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு புற ஊதாக்கதிர்களை வெளிப்படுத்தும் மின்விளக்குகளை வீட்டு பாவனைக்கு என விற்பனை செய்யப்படுவதில்லை.
தாவரங்கள் வளர்ப்பதற்கு மின் விளக்குகள் வாங்கும்போது சூரியவெளிச்சத்துக்கு ஒப்பானதான வெளிச்சம் அதிலிருந்து வருமா என்பதை நிச்சயப்படுத்திகொள்ளவும். பொதுவாக நிற வெப்பநிலை 6500K (கெல்வின்) கொண்ட குழாய் விளக்குகளை (tube lights) பயன்படுத்தி மரங்களை வளர்ந்த பின் அவை பூக்கும் பருவத்தில் 2000 K - 3000 K வெளிச்சம் தரும் வேறு குழாய் விளக்குகளுக்கு மாற்றிவிடலாம்.
கண்ணாடி வீட்டின் நிலப்பரப்பில் ஒவ்வொரு சதுர மீற்றருக்கும் ஒரு விளக்கு என்ற எண்ணிக்கையில் 36W வலுவுள்ள 6500 K குழாய் விளக்குகளை பயன்படுத்தவும். உதவிக்கு வேண்டுமானால் grow lights (LED tube lights) பயன்படுத்தவும். இவை தாவரங்களுக்கு முக்கிய தேவையான சிவப்பு (அலைநீளம் 650-670 nanometer ) மற்றும் நீலம் (அலைநீளம் 430-450 nanometer ) ஆகிய இரு நிறங்களை மட்டும் வெளிப்படுத்தும்.
பொதுவாக தோட்டத் தாவரங்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் ஆலோசனையும் உதவியும் பெற்றுக் கொள்ள முடியும்.
மிக்க நன்றி வணங்கா முடி. நான் வாங்கிய மின் விளக்குகள் சூரிய ஒளிக்கு ஒப்பானவை என்றுதான் போட்டிருந்தது. ஆனால் review வில் காண்பார்வைக்குச் சேதம் வரலாம் என்று போட்டிருந்தனர். அதுதான் .. .. ஒரே குழப்பம்.
-
7 hours ago, நிழலி said:
தெரியவில்லை அண்ணா. ஆனால் என் வீட்டில் இருந்த சாதாரண மின்குமிழ்கள் அனைத்தையும் LED இற்கு மாற்றிக் கொண்டு வருகின்றேன். இதில் LED soft white இல் இருந்து வரும் வெளிச்சம் கண்ணுக்கு மிகவும் இதமாகவும் மனசுக்கு ஆறுதலாகவும் இருக்கின்றது. அத்துடன் மின்சார சக்தியை பெருமளவு சேமிக்க உதவுவதால் அரசும் இதை ஊக்குவிக்கின்றது.
நாங்களும் வீட்டில் எல்லாம் LED தான். அதன் வெப்பம் கன்றுகளுக்கு அதிகம். அதனால் பாதிப்பு இல்லை என்றே கூறுகின்றனர்.
21 hours ago, பெருமாள் said:போனவருடம் கறி வேப்பிலை இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ ஒரு பிழை நடந்து இருக்கு .
நீங்கள் வாங்கியது பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நான் கீழே உள்ளதை ஓடர் செய்து இன்றுதான் வந்திருக்கு.
-
21 hours ago, நிழலி said:
சுமே,
LED grow lights for plants என்று amazon இல் தேடிப்பாருங்கள். என்னுடன் வேலை செய்கின்ற குஜராத்தை சேர்ந்தவர் இந்த லைட் வெளிச்சத்தில் துளசிச் செடிகள் வளர்க்கின்றார். அவையும் வளர்கின்றன.
வளர்க்கின்றதுதான். ஆனால் அவை மனிதர்களைப் பாதிப்பதாகவும் கூறுகிறார்கள்.
21 hours ago, பெருமாள் said:போனவருடம் கறி வேப்பிலை இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ ஒரு பிழை நடந்து இருக்கு .
சிலவேளை நீங்கள் வாங்கியது கறிவேப்பிலை போல இருக்கும் மற்ற மரமோ ???
21 hours ago, குமாரசாமி said:இந்த ஒளிகளால் மனிதருக்கு பின் விளைவுகள் ஏதாவது இருக்குமா? ஏனென்றால் பின் விளைவுகள் காரணமாக பல மின் விளக்குகளை ஐரோப்பாவில் தடை செய்து விட்டார்கள்.
கண்களுக்கும் தோலுக்கும் ஒவ்வாமை ஏற்படும் என்று இணையத்தில் இருக்கு.
15 hours ago, புங்கையூரன் said:ஆனால், கஞ்சா செடி நல்ல வாசத்தோட இஞ்ச வளர்க்கினமே?
அவை எந்த லைட் பாவிக்கினம் எண்டு கேட்டுப் பாருங்கோ
9 hours ago, Paanch said:வெயில் நாடுகளில் வளர்ப்பது வேறு இங்கு வேறு.
-
15 hours ago, மோகன் said:
மெசொபொத்தேமியா சுமேரியர், விதிமுறைகளைப் படித்தீர்களா? உங்கள் கருத்தினைப் பார்க்கும் போது விதிமுறைகளைப் படிக்கவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.
விதி முறைகள் மாற்றக்கூடியதுதானே????
-
எனக்கு தாவரங்கள் மேல் அதீத நாட்டம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே. 2019 இல் கனடாவிலிருக்கும் என் ஒன்றுவிட்ட அண்ணா பாவல், புடோல் பந்தலில் கீழே நின்று படம் எடுத்துப் போட எனக்கும் என வளவில் இரண்டும் நட்டுக் கோடியில் படர விடவேணும் என்ற ஆசை எழுந்தது. ஊரில் உள்ள கணவனின் தங்கையிடம் உள்ள விதைகள் எல்லாம் அனுப்பும்படி கூற யாவரும் 1200 ரூபா கட்டி ஒரு சிறிய பார்சலை அனுப்பி வைக்க கோவிட் காலத்தில் என் கெடுகாலமும் சேர கஷ்டம்சில் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அனுமதி இல்லை என்ற விபரத்துடன் கீரை விதைகள் மட்டும் வந்து சேர்ந்தது. உடனே கனடாவுக்கு தொலைபேசி எடுத்து எனக்குக் கொஞ்ச விதைகள் அனுப்புங்கோ என்றதுக்கு நான் எப்படி அனுப்புறது. விதைகள் அனுப்பக் கூடாதே என்று அண்ணா பின்வாங்க, ஒரு வாழ்த்துமடலினுள் வைத்து அனுப்புமாறு ஆலோசனை கூறினேன். ஒரு வாரம் வரும் வரும் என்று பார்க்க இரு வாரங்களின் பின் வந்து சேர்ந்தது வாழ்த்துமடல். வாழ்த்து மடலை பார்த்தபோதே எனக்கு விளங்கீட்டுது அண்ணாவின் நப்பித்தனம். ஆறு பாகல் விதைகள், ஆறு புடோல். அதில் மூன்று கட்டைப் புடோல் மற்றையது நீளமானது என்றும் எழுதியிருக்க, சரி இதாவது வந்ததே என்று மகிழ்வோடு கடைக்காரரிடம் மரக்கறிகள் வரும் சிறிய regiform பெட்டிகளை வாங்கி வந்து அதற்குள் சிறிய சாடிக்களில் உரம் போட்டு விதைகளை நாட்டாச்சு.மேலே இன்னொரு மூடியால் மூடியும் ஆச்சு. ஒரு மாதமா ஒரு அசுமாத்தமும் இல்லை. மே மாதம் முளைத்து நான்கு இலைகள் தெரிய அதை எங்கே நடுவது, எப்பிடிப் பந்தல் போடுவது என்று ஒரே கற்பனை. வழமைபோல ஏற்கனவே தோட்டம் எல்லாம் காடாக் கிடக்கு. உது எதுக்கு என்று மனிசன் தொடங்கியாச்சு.
ஜெகதீஸ் அண்ணா என்று ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் பாவல் நட்டு ஒரே காய்தாய். அந்த வீடியோ பார்த்த நான் அவருடன் தொடர்புகொண்டு அவரின் கொடிகளைப் பற்றி நலம் விசாரித்துவிட்டு என் பாவல் புடோல் பற்றி விபரம் சொன்னேன். இப்போதைக்கு வெளியே வையாதை பிள்ளை. ஜூன் மாதம் வெயில் வந்தால் தான் மரம் எழும்பும் என்றார். எனக்கோ கொடிகள் வளர வளர எப்படி வீட்டுக்குள் வைப்பது என்று எண்ணி எனது conservetry உள் கொண்டுசென்று வைத்தேன். மே மாதக் கடைசியில் சாடையாய் வெயில் எறிக்க நல்ல பெரிய சாடிகளில் நல்ல உரம்போட்டு கன்றுகளை இடம் மாற்ற கிட்டத்தட்ட ஒரு மீற்றர் வரை கன்றுகள் வளர்ந்து புடோலிலும் பாகலிலும் பூக்களும் பூக்கத் தொடங்க எனக்கோ மட்டில்லா மகிழ்ச்சி. ஒரு வாரம் போக இழைகள் எல்லாம் சுருண்டு சுருண்டு என்ன என்று பார்த்தால் ஒரே எறும்புகள். இந்த ஆண்டுபோல் என தோட்டத்தில் எறும்புகள் வந்ததே இல்லை. பல இடங்களில் எறும்பு. எதற்கும் அந்த அண்ணாவிடமே கேட்போம் என்று போன் செய்ய அவர் ஒரு ஸ்பிறே ஒன்றைப் பரிந்துரைக்க கடைகளில் தேடினால் இல்லை. ஒருவாறு ஒன்லைனில் ஒன்றுக்கு மூன்றாய் எறும்புக்கு ஸ்பிறே ஓடர் செய்து அடுத்த நாள் வந்ததும் ஆசை தீர சாடிக்களின் மேலே கீழே இலைகளில் எல்லாம் நன்றாக அடித்து இனிமேல் இந்தப் பக்கம் எப்பிடித் தலை வைத்துப் படுக்கிறீர்கள் என்று எண்ணியபடி நல்ல நின்மதியான தூக்கம்.
அடுத்தநாள் காலை நல்ல வெயிலைக் கண்ட சந்தோசத்தில் தேனீரும் பருக்காமல் தோட்டத்துக்குப் போனால் நெஞ்செல்லாம் அடைச்சுப் போச்சு. அத்தனை கொடிகளும் எரிஞ்சுபோய்க் கிடக்கு. உடன அந்த அண்ணாவுக்கு போன் செய்தால், என்ன தங்கச்சி அடியில கொஞ்சம் அடிக்கிறதுக்கு இலைக்கு ஏன் அடிச்சியள் என்கிறார். அவரைத் திட்டவும் முடியாமல் மனிசனுக்கு போன் செய்து விடயத்தைச் சொல்ல, ஊரிலையே எரும்புக்கு பவுடர் தான் போடுறது. சரி இனி என்ன செய்யிறது. இண்டைக்கு வெயில் தானே தண்ணியை நல்லா விட்டுவிடு என்று சொல்ல..................... என்ன சொல்லி என்ன திரும்ப ஒரு குருத்துக் கூட வரேல்லை. இனி என்ன செய்யிறது. அடுத்த ஆண்டு பார்ப்பம் என்று எண்ணியிருக்க, முளைக்காமல் இருந்த ஒரு புடல் ஒரு சாடியில் இருந்து முளைத்துவர இன்னொரு சாடியில் ஒரு பாகலும் முளைக்க என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் இப்ப சீசன் தப்பி முளைத்து என்ன பயன். பிஞ்சுகள் எல்லாம் பழுத்துப் பழுத்து கொட்ட எனது கண்ணாடி அறையுள் அவர்களைக் கொண்டு வந்தாச்சு. சந்தோஷமா அவை படர்ந்தாலும், பிஞ்சு பெருக்குமா காய்க்குமா என்ற சந்தேகம் எனக்கு. LED lights வாங்கிப் போடலாமா என்று எண்ண, அது கூடாது. எமக்கு பார்வைக் கோளாறை உண்டாக்கும் என்கிறாள் மகள். யாராவது அதுபற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்கள்.
-
8
-
1
-
-
இந்தத் திரியில் இத்தனை பேர் வந்து கருத்து வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எனக்கு யாழ் இணையத்திடம் கோபம் அல்ல.ஆனால் மிகுந்த மனவருத்தம் உண்டு. தவறைத் தவறு என்று கூறுவதற்கு சிலருக்கு மட்டுமே துணிவு உண்டு என்பதும் தெரிகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் ஏதோ காரணத்தால் வெளியே சிலகாலம் செல்கிறார். அவர் திரும்பி வரும்போது உடனடியாக உள்ளே வர முடியவில்லை. வீட்டின் திறப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அழைப்பு மணியை விருந்தாளி போல அடித்து உள்ளே வந்தவருக்கு தாய் வரவேற்பறையின் ஓரத்தில் ஓர் இடத்தைக் காட்டுகிறார். சில நாட்கள் இங்கேயே தங்கியிரு. நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்று பார்த்துவிட்டே உன்னை மேலே உள்ள உன் அறையில் சென்று தங்கலாம் என்று கூறுகிறார். எல்லோரும் உண்ணும் போது மற்றவர்கள் எல்லோரும் ஒரே நிறத் தட்டில் உண்ண, இவருக்கு வேறு நிறத் தட்டுக் கொடுக்கிறார் அம்மா. இவர் எப்படி அதைத் தான் வீடு என்று உணர முடியும் ????
இப்ப நீங்கள் செய்திருப்பதும் அதுதான் மோகன். சிங்களவர்கள் செய்வது போலத்தான் எனக்கு இருக்கிறது. விருப்பம் என்றால் யாழுக்கு வந்து எழுதலாம். ஓடி ஓடி எழுதுபவர்களுக்கே இங்கு முதல் வாங்கு. இல்லாதவர்களுக்கு பின்வாங்குதான் என்று அந்தக் காலத்து ஆசிரியர்கள் செய்வது போலவே இருக்கிறது.
நீங்களே எமக்குள் பிரிவினையை ஏன் ஏற்படுத்துகிறீர்கள். இத்தனை காலம் பல பெயர்களில் வந்து எழுதுபவர்களை அடையாளம் காணாமலா வைத்திருந்தீர்கள்???? ரதி கூறியதுபோல் பச்சை எதுக்கு???? அர்ப்ப பச்சைக்காகத்தான் வேறு பெயர்களில் வந்து லைக் செய்கின்றனர் என்றால் அவர்களைத் தடை செய்ய என்ன வழி என்று பார்க்காது இத்தனை காலம் எத்தனையை நேற காலம் பாராது எழுதிய எம்மை நிறப்பாகுபாடு, ராங்க் என்று ஏதேதோ செய்து வரவிடாமற் செய்கிறீர்கள். எல்லாமே உங்களால் உருவாக்கப்பட்டதுதானே. பலருக்கு என்னைப் போன்ற மனநிலை இருந்தாலும் பயத்தினால் அவர்கள் பேசாமல் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. என வீட்டில் நான் சுதந்திரமாக முடிந்தால் மட்டுமே அது என் வீடாக முடியும்.
மிக்க நன்றி அனைவருக்கும்
-
நீங்கள் கொடுத்திருக்கும் Rank பற்றிய விபரம் எதுவும் நீங்கள் போட்ட லிங்கில் இல்லையே
-
ஐந்து நிர்வாக உறுப்பினர்கள் இருந்தும் யாருமே 10 மணித்தியலங்களுக்கு முன்னர் போட்ட பதிவுக்குப் பதில் போடவில்லை. சரி நான் இனிமேல் பார்வையாளராக மட்டும் இருந்துகொள்கிறேன். நன்றி
-
வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு,
நான் சில மாதங்கள் யாழுக்கு வரவில்லை. அதற்கு உடல், உள காரணங்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது என்னால் யாருக்கும் கருத்து எழுத முடியவில்லை. எரிச்சல் தாங்க முடியாது நிப்பாட்டிப் போட்டுப் போய்விட்டேன். இரு கள உறவுகள் என்னிடம் கேட்டபோது நான் காரணத்தைக் கூறிவிட்டு வராமல் எங்கே போவது வருவேன் என்றேன். நேற்று வந்து ஒரு பதிவுக்குக் கருத்து எழுதும்போது கவனிக்கவில்லை. இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிருந்து தூக்கிவிடுவீர்களா ?????? நாம் என்ன சின்னப் பிள்ளைகளா ??? நீ குழப்படி செய்தால் நான் சொக்ளற் தரமாட்டேன் என்று சிறுவர்களுக்குக் கூறுவது போலல்லாவா இது இருக்கு. இதை நான் யாழ் இணையத்திடம் எதிர்பார்க்கவில்லை. வரவர உங்கள் செயல்கள் பலரை இங்கு வரவிடாது செய்யுமேயன்றி வேறொன்றுமில்லை.
-
3
-
4
-
-
23 hours ago, நிலாமதி said:
மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி . நீண்ட நாட்கள் காணோம்.?
இரண்டாவது வக்சின் போட்டபின் உடல்நிலை மனநிலை இரண்டிலும் மாற்றங்கள்.
19 hours ago, ஈழப்பிரியன் said:குளிர் தொடங்கி வீட்டு தோட்டம் முடிய வருவா.
உடனே விளங்கீற்றுது உங்களுக்கு. இரு மாதங்களாகக் கணனியைத் திறக்கவே இல்லை.
-
On 8/9/2021 at 18:39, ரதி said:
ஊரில் அரிசிமாவில் புட்டு சாப்பிட என்ன வாசம் ...வெறும் தேங்காப்பூவும் ,புட்டும் சும்மா சாப்பிடலாம் ...ஏன் அந்த வாசம் இங்கு புட்டு அவிக்கும் போது வருதுதில்லை
அரிசி மா கடையில் வாங்காது நீங்களே ஊறவிட்டு அரைத்துப் பிட்டு அவித்துப் பாருங்கள். அதே பழைய வாசனைவரும் ரதி.
-
11 hours ago, ராசவன்னியன் said:
போயே போச்சே; போயிந்தே; இட்ஸ் கான்..!
எனது அனுபவங்களை எழுதலாம் என்றால் தனி திரி தொடங்க இயலவில்லை.
நிர்வாகத்திடம் கூறினால் அவர்கள் சரிசெய்வார்கள் தானே அண்ணா. கட்டாயம் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் அண்ணா.
-
-
Udon Noodiles - உடோன் நூடில்ஸ்
-
2
-
-
On 8/5/2021 at 22:40, MEERA said:
ஆகா
உதுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.
On 8/5/2021 at 22:45, குமாரசாமி said:ஏன் வாற வருசமும் போகலாம் தானே?
அங்க நிறைய வேலையள் இருக்கு.
On 8/5/2021 at 22:55, விளங்க நினைப்பவன் said:உங்களுக்கு கோவிட் வந்து எத்தனை மாதங்களுக்கு பின்பு தடுப்பூசி போடப்பட்டது?
இரண்டு மாதங்களின் பின்னர் போட்டோம்.
-
Just now, பெருமாள் said:
உங்களுக்கு அலர்ஜி ஏதாவது இருந்ததா ?
குடும்ப வைத்தியரை அணுகவும் .
எனக்கு ஒவ்வாமை ஒன்றும் இல்லை. வைத்தியர் NHS இன் படிவம் ஒன்று இருக்காம். அதை நிறப்பி அனுப்பும்படி கூறியுள்ளார். ஊசி போட்டவர்களுக்கு என்ன என்ன ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன என்று அறியவாம். என்னத்தைச் சொல்லுறது. இலங்கைக்குப் போகலாம் என்னும் ஆசையில் போட்டோம்.
-
On 20/4/2021 at 23:07, விளங்க நினைப்பவன் said:
பொழிப்புரை :-
ஏற்கெனவே கொரோனா வத்தவர்கள் சக்தி கொண்ட கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மாதிரி என்று மருத்தவ கட்டுரை ஒன்று தெரிவித்தது
எனக்குக் கோவிட் வந்தபோது ஏற்படாத விளைவுகளெல்லாம் இப்ப ஊசி போட்ட பின்னர் ஏற்படுகின்றது. சிலருக்கு அப்படித்தான் என்கின்றார் மருத்துவர். நான் Pfizer போட்டேன். என கணவருக்கு Astrazeneca போட்டார்கள் அவர் இயல்பாக இருக்கிறார். என்ன கறுமமோ ஒன்றும் புரியவில்லை.
On 23/4/2021 at 18:35, தனிக்காட்டு ராஜா said:மீண்டும் முடக்கம் வரும் நிலை போல தென்படுகிறது பார்க்கலாம்
கவனமாக இருங்கள்
-
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:
சிறந்தததோர் அனுபவ பகிர்வு அக்கா
இங்கெல்லாம் அதோடு விளையாடி பழகிட்டம் என்றால் பாருங்கோவன் எவரும் தற்காப்பை கவனிப்பதில்லை எல்லா இடங்களும் சுமூகமாக இயங்குகிறது அரசு சொல்கிறது கொரோனா தொற்று இருக்கிறது என மக்கள் சொல்கிறார்கள் இல்லையென
எனக்குக் கூட சிலநேரம் சந்தேகம் வாறதுதான். அரசாணக்கம் ஏதோ காரணத்துக்காக மிகைப்படுத்துகிறதோ என்று. இங்கும் பலர் முகக்கவசம் இன்றியே அலைகின்றனர்.
-
1
-
-
On 6/4/2021 at 21:46, வாத்தியார் said:
கொரோனா அனுபவத்தைப் பகிர்வது என்பது எல்லோராலும் முடியாது
தற்போது கொரோனா வைரஸுடன் வாழப்பழகுவதை விட வேறு வழி இல்லை
தடுப்பூசிகள் மெருகூட்டப்படும் வரை
எல்லோருமே கவனத்துடன் இருப்பது தான் சிறந்த வழி
பகிர்விற்கு நன்றிநோய் வருமுன் இருந்த பயம் இப்ப இல்லை.
மலை என்ற சொல்லுக்கு சரியான ஒத்தசொற்கள்
in தமிழும் நயமும்
Posted
என்றுதான் கூகிள் சேர்ச் இல் சொல்லுது.