-
Posts
8242 -
Joined
-
Days Won
37
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
-
15 hours ago, மோகன் said:
மெசொபொத்தேமியா சுமேரியர், விதிமுறைகளைப் படித்தீர்களா? உங்கள் கருத்தினைப் பார்க்கும் போது விதிமுறைகளைப் படிக்கவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.
விதி முறைகள் மாற்றக்கூடியதுதானே????
-
எனக்கு தாவரங்கள் மேல் அதீத நாட்டம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே. 2019 இல் கனடாவிலிருக்கும் என் ஒன்றுவிட்ட அண்ணா பாவல், புடோல் பந்தலில் கீழே நின்று படம் எடுத்துப் போட எனக்கும் என வளவில் இரண்டும் நட்டுக் கோடியில் படர விடவேணும் என்ற ஆசை எழுந்தது. ஊரில் உள்ள கணவனின் தங்கையிடம் உள்ள விதைகள் எல்லாம் அனுப்பும்படி கூற யாவரும் 1200 ரூபா கட்டி ஒரு சிறிய பார்சலை அனுப்பி வைக்க கோவிட் காலத்தில் என் கெடுகாலமும் சேர கஷ்டம்சில் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அனுமதி இல்லை என்ற விபரத்துடன் கீரை விதைகள் மட்டும் வந்து சேர்ந்தது. உடனே கனடாவுக்கு தொலைபேசி எடுத்து எனக்குக் கொஞ்ச விதைகள் அனுப்புங்கோ என்றதுக்கு நான் எப்படி அனுப்புறது. விதைகள் அனுப்பக் கூடாதே என்று அண்ணா பின்வாங்க, ஒரு வாழ்த்துமடலினுள் வைத்து அனுப்புமாறு ஆலோசனை கூறினேன். ஒரு வாரம் வரும் வரும் என்று பார்க்க இரு வாரங்களின் பின் வந்து சேர்ந்தது வாழ்த்துமடல். வாழ்த்து மடலை பார்த்தபோதே எனக்கு விளங்கீட்டுது அண்ணாவின் நப்பித்தனம். ஆறு பாகல் விதைகள், ஆறு புடோல். அதில் மூன்று கட்டைப் புடோல் மற்றையது நீளமானது என்றும் எழுதியிருக்க, சரி இதாவது வந்ததே என்று மகிழ்வோடு கடைக்காரரிடம் மரக்கறிகள் வரும் சிறிய regiform பெட்டிகளை வாங்கி வந்து அதற்குள் சிறிய சாடிக்களில் உரம் போட்டு விதைகளை நாட்டாச்சு.மேலே இன்னொரு மூடியால் மூடியும் ஆச்சு. ஒரு மாதமா ஒரு அசுமாத்தமும் இல்லை. மே மாதம் முளைத்து நான்கு இலைகள் தெரிய அதை எங்கே நடுவது, எப்பிடிப் பந்தல் போடுவது என்று ஒரே கற்பனை. வழமைபோல ஏற்கனவே தோட்டம் எல்லாம் காடாக் கிடக்கு. உது எதுக்கு என்று மனிசன் தொடங்கியாச்சு.
ஜெகதீஸ் அண்ணா என்று ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் பாவல் நட்டு ஒரே காய்தாய். அந்த வீடியோ பார்த்த நான் அவருடன் தொடர்புகொண்டு அவரின் கொடிகளைப் பற்றி நலம் விசாரித்துவிட்டு என் பாவல் புடோல் பற்றி விபரம் சொன்னேன். இப்போதைக்கு வெளியே வையாதை பிள்ளை. ஜூன் மாதம் வெயில் வந்தால் தான் மரம் எழும்பும் என்றார். எனக்கோ கொடிகள் வளர வளர எப்படி வீட்டுக்குள் வைப்பது என்று எண்ணி எனது conservetry உள் கொண்டுசென்று வைத்தேன். மே மாதக் கடைசியில் சாடையாய் வெயில் எறிக்க நல்ல பெரிய சாடிகளில் நல்ல உரம்போட்டு கன்றுகளை இடம் மாற்ற கிட்டத்தட்ட ஒரு மீற்றர் வரை கன்றுகள் வளர்ந்து புடோலிலும் பாகலிலும் பூக்களும் பூக்கத் தொடங்க எனக்கோ மட்டில்லா மகிழ்ச்சி. ஒரு வாரம் போக இழைகள் எல்லாம் சுருண்டு சுருண்டு என்ன என்று பார்த்தால் ஒரே எறும்புகள். இந்த ஆண்டுபோல் என தோட்டத்தில் எறும்புகள் வந்ததே இல்லை. பல இடங்களில் எறும்பு. எதற்கும் அந்த அண்ணாவிடமே கேட்போம் என்று போன் செய்ய அவர் ஒரு ஸ்பிறே ஒன்றைப் பரிந்துரைக்க கடைகளில் தேடினால் இல்லை. ஒருவாறு ஒன்லைனில் ஒன்றுக்கு மூன்றாய் எறும்புக்கு ஸ்பிறே ஓடர் செய்து அடுத்த நாள் வந்ததும் ஆசை தீர சாடிக்களின் மேலே கீழே இலைகளில் எல்லாம் நன்றாக அடித்து இனிமேல் இந்தப் பக்கம் எப்பிடித் தலை வைத்துப் படுக்கிறீர்கள் என்று எண்ணியபடி நல்ல நின்மதியான தூக்கம்.
அடுத்தநாள் காலை நல்ல வெயிலைக் கண்ட சந்தோசத்தில் தேனீரும் பருக்காமல் தோட்டத்துக்குப் போனால் நெஞ்செல்லாம் அடைச்சுப் போச்சு. அத்தனை கொடிகளும் எரிஞ்சுபோய்க் கிடக்கு. உடன அந்த அண்ணாவுக்கு போன் செய்தால், என்ன தங்கச்சி அடியில கொஞ்சம் அடிக்கிறதுக்கு இலைக்கு ஏன் அடிச்சியள் என்கிறார். அவரைத் திட்டவும் முடியாமல் மனிசனுக்கு போன் செய்து விடயத்தைச் சொல்ல, ஊரிலையே எரும்புக்கு பவுடர் தான் போடுறது. சரி இனி என்ன செய்யிறது. இண்டைக்கு வெயில் தானே தண்ணியை நல்லா விட்டுவிடு என்று சொல்ல..................... என்ன சொல்லி என்ன திரும்ப ஒரு குருத்துக் கூட வரேல்லை. இனி என்ன செய்யிறது. அடுத்த ஆண்டு பார்ப்பம் என்று எண்ணியிருக்க, முளைக்காமல் இருந்த ஒரு புடல் ஒரு சாடியில் இருந்து முளைத்துவர இன்னொரு சாடியில் ஒரு பாகலும் முளைக்க என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் இப்ப சீசன் தப்பி முளைத்து என்ன பயன். பிஞ்சுகள் எல்லாம் பழுத்துப் பழுத்து கொட்ட எனது கண்ணாடி அறையுள் அவர்களைக் கொண்டு வந்தாச்சு. சந்தோஷமா அவை படர்ந்தாலும், பிஞ்சு பெருக்குமா காய்க்குமா என்ற சந்தேகம் எனக்கு. LED lights வாங்கிப் போடலாமா என்று எண்ண, அது கூடாது. எமக்கு பார்வைக் கோளாறை உண்டாக்கும் என்கிறாள் மகள். யாராவது அதுபற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்கள்.
-
8
-
1
-
-
இந்தத் திரியில் இத்தனை பேர் வந்து கருத்து வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எனக்கு யாழ் இணையத்திடம் கோபம் அல்ல.ஆனால் மிகுந்த மனவருத்தம் உண்டு. தவறைத் தவறு என்று கூறுவதற்கு சிலருக்கு மட்டுமே துணிவு உண்டு என்பதும் தெரிகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் ஏதோ காரணத்தால் வெளியே சிலகாலம் செல்கிறார். அவர் திரும்பி வரும்போது உடனடியாக உள்ளே வர முடியவில்லை. வீட்டின் திறப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அழைப்பு மணியை விருந்தாளி போல அடித்து உள்ளே வந்தவருக்கு தாய் வரவேற்பறையின் ஓரத்தில் ஓர் இடத்தைக் காட்டுகிறார். சில நாட்கள் இங்கேயே தங்கியிரு. நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்று பார்த்துவிட்டே உன்னை மேலே உள்ள உன் அறையில் சென்று தங்கலாம் என்று கூறுகிறார். எல்லோரும் உண்ணும் போது மற்றவர்கள் எல்லோரும் ஒரே நிறத் தட்டில் உண்ண, இவருக்கு வேறு நிறத் தட்டுக் கொடுக்கிறார் அம்மா. இவர் எப்படி அதைத் தான் வீடு என்று உணர முடியும் ????
இப்ப நீங்கள் செய்திருப்பதும் அதுதான் மோகன். சிங்களவர்கள் செய்வது போலத்தான் எனக்கு இருக்கிறது. விருப்பம் என்றால் யாழுக்கு வந்து எழுதலாம். ஓடி ஓடி எழுதுபவர்களுக்கே இங்கு முதல் வாங்கு. இல்லாதவர்களுக்கு பின்வாங்குதான் என்று அந்தக் காலத்து ஆசிரியர்கள் செய்வது போலவே இருக்கிறது.
நீங்களே எமக்குள் பிரிவினையை ஏன் ஏற்படுத்துகிறீர்கள். இத்தனை காலம் பல பெயர்களில் வந்து எழுதுபவர்களை அடையாளம் காணாமலா வைத்திருந்தீர்கள்???? ரதி கூறியதுபோல் பச்சை எதுக்கு???? அர்ப்ப பச்சைக்காகத்தான் வேறு பெயர்களில் வந்து லைக் செய்கின்றனர் என்றால் அவர்களைத் தடை செய்ய என்ன வழி என்று பார்க்காது இத்தனை காலம் எத்தனையை நேற காலம் பாராது எழுதிய எம்மை நிறப்பாகுபாடு, ராங்க் என்று ஏதேதோ செய்து வரவிடாமற் செய்கிறீர்கள். எல்லாமே உங்களால் உருவாக்கப்பட்டதுதானே. பலருக்கு என்னைப் போன்ற மனநிலை இருந்தாலும் பயத்தினால் அவர்கள் பேசாமல் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. என வீட்டில் நான் சுதந்திரமாக முடிந்தால் மட்டுமே அது என் வீடாக முடியும்.
மிக்க நன்றி அனைவருக்கும்
-
நீங்கள் கொடுத்திருக்கும் Rank பற்றிய விபரம் எதுவும் நீங்கள் போட்ட லிங்கில் இல்லையே
-
ஐந்து நிர்வாக உறுப்பினர்கள் இருந்தும் யாருமே 10 மணித்தியலங்களுக்கு முன்னர் போட்ட பதிவுக்குப் பதில் போடவில்லை. சரி நான் இனிமேல் பார்வையாளராக மட்டும் இருந்துகொள்கிறேன். நன்றி
-
வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு,
நான் சில மாதங்கள் யாழுக்கு வரவில்லை. அதற்கு உடல், உள காரணங்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது என்னால் யாருக்கும் கருத்து எழுத முடியவில்லை. எரிச்சல் தாங்க முடியாது நிப்பாட்டிப் போட்டுப் போய்விட்டேன். இரு கள உறவுகள் என்னிடம் கேட்டபோது நான் காரணத்தைக் கூறிவிட்டு வராமல் எங்கே போவது வருவேன் என்றேன். நேற்று வந்து ஒரு பதிவுக்குக் கருத்து எழுதும்போது கவனிக்கவில்லை. இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிருந்து தூக்கிவிடுவீர்களா ?????? நாம் என்ன சின்னப் பிள்ளைகளா ??? நீ குழப்படி செய்தால் நான் சொக்ளற் தரமாட்டேன் என்று சிறுவர்களுக்குக் கூறுவது போலல்லாவா இது இருக்கு. இதை நான் யாழ் இணையத்திடம் எதிர்பார்க்கவில்லை. வரவர உங்கள் செயல்கள் பலரை இங்கு வரவிடாது செய்யுமேயன்றி வேறொன்றுமில்லை.
-
3
-
4
-
-
23 hours ago, நிலாமதி said:
மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி . நீண்ட நாட்கள் காணோம்.?
இரண்டாவது வக்சின் போட்டபின் உடல்நிலை மனநிலை இரண்டிலும் மாற்றங்கள். 😀
19 hours ago, ஈழப்பிரியன் said:குளிர் தொடங்கி வீட்டு தோட்டம் முடிய வருவா.
உடனே விளங்கீற்றுது உங்களுக்கு. இரு மாதங்களாகக் கணனியைத் திறக்கவே இல்லை.😀
-
On 8/9/2021 at 18:39, ரதி said:
ஊரில் அரிசிமாவில் புட்டு சாப்பிட என்ன வாசம் ...வெறும் தேங்காப்பூவும் ,புட்டும் சும்மா சாப்பிடலாம் ...ஏன் அந்த வாசம் இங்கு புட்டு அவிக்கும் போது வருதுதில்லை
அரிசி மா கடையில் வாங்காது நீங்களே ஊறவிட்டு அரைத்துப் பிட்டு அவித்துப் பாருங்கள். அதே பழைய வாசனைவரும் ரதி.
-
11 hours ago, ராசவன்னியன் said:
போயே போச்சே; போயிந்தே; இட்ஸ் கான்..!
எனது அனுபவங்களை எழுதலாம் என்றால் தனி திரி தொடங்க இயலவில்லை. 🤔
நிர்வாகத்திடம் கூறினால் அவர்கள் சரிசெய்வார்கள் தானே அண்ணா. கட்டாயம் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் அண்ணா.
-
-
Udon Noodiles - உடோன் நூடில்ஸ்
-
2
-
-
On 8/5/2021 at 22:40, MEERA said:
😂😂😂 ஆகா 🙋♂️
உதுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு.🤔😃
On 8/5/2021 at 22:45, குமாரசாமி said:ஏன் வாற வருசமும் போகலாம் தானே?😷
அங்க நிறைய வேலையள் இருக்கு.😀
On 8/5/2021 at 22:55, விளங்க நினைப்பவன் said:🤔
உங்களுக்கு கோவிட் வந்து எத்தனை மாதங்களுக்கு பின்பு தடுப்பூசி போடப்பட்டது?
இரண்டு மாதங்களின் பின்னர் போட்டோம்.
-
Just now, பெருமாள் said:
உங்களுக்கு அலர்ஜி ஏதாவது இருந்ததா ?
குடும்ப வைத்தியரை அணுகவும் .
எனக்கு ஒவ்வாமை ஒன்றும் இல்லை. வைத்தியர் NHS இன் படிவம் ஒன்று இருக்காம். அதை நிறப்பி அனுப்பும்படி கூறியுள்ளார். ஊசி போட்டவர்களுக்கு என்ன என்ன ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன என்று அறியவாம். என்னத்தைச் சொல்லுறது. இலங்கைக்குப் போகலாம் என்னும் ஆசையில் போட்டோம்.
-
On 20/4/2021 at 23:07, விளங்க நினைப்பவன் said:
பொழிப்புரை :-
ஏற்கெனவே கொரோனா வத்தவர்கள் சக்தி கொண்ட கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மாதிரி என்று மருத்தவ கட்டுரை ஒன்று தெரிவித்தது
எனக்குக் கோவிட் வந்தபோது ஏற்படாத விளைவுகளெல்லாம் இப்ப ஊசி போட்ட பின்னர் ஏற்படுகின்றது. சிலருக்கு அப்படித்தான் என்கின்றார் மருத்துவர். நான் Pfizer போட்டேன். என கணவருக்கு Astrazeneca போட்டார்கள் அவர் இயல்பாக இருக்கிறார். என்ன கறுமமோ ஒன்றும் புரியவில்லை.
On 23/4/2021 at 18:35, தனிக்காட்டு ராஜா said:மீண்டும் முடக்கம் வரும் நிலை போல தென்படுகிறது பார்க்கலாம்
கவனமாக இருங்கள்
-
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:
சிறந்தததோர் அனுபவ பகிர்வு அக்கா
இங்கெல்லாம் அதோடு விளையாடி பழகிட்டம் என்றால் பாருங்கோவன் எவரும் தற்காப்பை கவனிப்பதில்லை எல்லா இடங்களும் சுமூகமாக இயங்குகிறது அரசு சொல்கிறது கொரோனா தொற்று இருக்கிறது என மக்கள் சொல்கிறார்கள் இல்லையென
எனக்குக் கூட சிலநேரம் சந்தேகம் வாறதுதான். அரசாணக்கம் ஏதோ காரணத்துக்காக மிகைப்படுத்துகிறதோ என்று. இங்கும் பலர் முகக்கவசம் இன்றியே அலைகின்றனர்.
-
1
-
-
On 6/4/2021 at 21:46, வாத்தியார் said:
கொரோனா அனுபவத்தைப் பகிர்வது என்பது எல்லோராலும் முடியாது
தற்போது கொரோனா வைரஸுடன் வாழப்பழகுவதை விட வேறு வழி இல்லை
தடுப்பூசிகள் மெருகூட்டப்படும் வரை
எல்லோருமே கவனத்துடன் இருப்பது தான் சிறந்த வழி
பகிர்விற்கு நன்றிநோய் வருமுன் இருந்த பயம் இப்ப இல்லை.
-
Just now, ஏராளன் said:
அக்கா இது அப்பட்டமான ஆணாதிக்கம், வீட்டிலயே சமையல் கட்டுபக்கம் போகாத போராட்டம் ஏதும் பண்ணலாமே?!✌️
அப்பிடி ஒட்டுமொத்தமா ஆணாதிக்கம் என்றும் சொல்லிவிடமுடியாது. சிலநேரம் தானே சுவையான பிரியாணி செய்தும் தாறவர்தான் 😀
நானே பசிக்கிடக்க மாட்டன். பிறகு நானும்தான் பட்டினிக்கிடக்க வேணும் 😂
-
2
-
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்
-
On 8/4/2021 at 14:57, suvy said:
இந்த உவமானம் தப்பு தாயே.......! இராமன் ஒருநாளும் குசினிப்பக்கம் தலைகாட்டியதில்லை... இராவணனுக்கு நவகிரகங்கள் முதற்கொண்டு எல்லோரும் சேவகம் செய்தபடியால் புஷ்பகவிமானம் கூட குசினிக்கு மேலால் பறந்ததில்லை.....அதேபோல் சீதையும் மண்டோதரியும் அரசியராகவே பிறந்து அரசர்களுக்கே வாழ்க்கைப்பட்ட படியால் டைனிங் டேபிளுக்கு வந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு தட்டையும் கழுவாமல் எழுந்து போன ஆட்கள் .....! 😂
சரியாய்ச் சொன்னீர்கள் அண்ணா 😃. தேநீர் குடுக்கிறது ஒருபுறம் இருக்க காலையில் நான் எழும்பிய பிறகும் " நான் படுத்திருக்கப் போறன். தேத்தண்ணியை மேலே கொண்டுவந்து தா என்று சொல்லுற மனிசன், தான் நித்திரையால் விழிச்சால் என்னைத் தூங்கவிடாமல் எழும்பு எழும்பு எண்டு எழுப்பிப்போட்டுத்தான் மற்ற அலுவல் பார்ப்பார். அட அவள் எழும்புறநேரம் எழும்பட்டும் எண்டு விட்டதுமில்லை.😀
-
6 hours ago, Maruthankerny said:
காதல் திருமணம்தான் ... காதல் என்றாலும் காதல் அப்படியொரு காதல்
லண்டனில் இருந்தால் சும்மா அரச வேஷம் போட்டுகொண்டு பம்மாத்து காட்டிக்கொண்டு
இருக்கவேண்டும் என்று எலிசபெத் இளவயதிலேயே காதல்வயப்பட்ட பிலிப்சுடன் தென் ஆப்ரிக்கா ஓடிவிட்டார்
அவர் அங்கு இருக்கும்போது .. அவரது தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துபோனார்
தென்னாபிரிக்காவில் இருந்தே ராணியாகி இங்கிலாந்து வந்தார்.மிகுந்த கெட்டிகாரி எலிசபெத்
மார்கிரெட் தச்சருக்கு செக் வைத்து அவரை கட்டுப்பாடில் வைத்திருந்த அறிவுச்சுடர்
இல்லாவிட்டார் மார்கிரெட் இன்னமும் ஆடியிருப்பார்
அதுமட்டுமல்ல பல அரசியலை வெட்டியாடியவர்
தந்தை இறந்த பின்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் அரச குடும்பத்து குத்துவிளக்கை
அணையாமல் பார்த்துக்கொண்ட பெருமை ராணியையே சாரும்
மற்றவர்கள் எல்லோரும் சும்மா பித்தலாட்டம்தான் பிலிப்சுக்கும் சில கள்ள தொடர்புகள் உண்டு
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இங்கிலாந்து பத்திரிக்கை துறையை கிசு கிசுக்களை
வெட்டியாடியவர் அவரது தங்கை மார்க்ரெட் குடும்ப மானத்தை அப்ப அப்ப கப்பல் ஏத்தியவர்
குடி செக்ஸ் கள்ள தொடர்பு என்று திரிந்தவர்ராணி எலிசபெத் இறந்ததும் இவர்கள் வம்சமும் கொஞ்சம் ஊடல் ஆடும் என்றே எண்ணுகிறேன்
மார்கிரெட் தச்சருக்கு செக் வைக்குமளவு அரச குடும்பத்தில் யாருக்குமே அதிகாரம் கிடையாது. அரசகுடும்பம் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் குழுவுக்குத்தான் அங்கு அதிக அதிகாரம். இதை இளவரசர் கரியே ஒரு பேட்டியில கூறியிருக்கிறார்.
-
13 hours ago, nige said:
உண்மைதான் விதிவிலக்காக சிலர் இருப்பது தவிர்க்கமுடியாதது.இராமன் வாழ்ந்த இடத்தில்தான் இராவணனும் வாழ்ந்தான். அதேபோல சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஒரு சிலர் செய்யும் தப்பிற்காக எல்லோரையும் அப்படி நினைத்துவிட முடியாது. உங்கள் கணவருக்கு நீங்கள் கொடுப்பது காலைத் தேநீர் அல்ல அன்றைய பொழுதுக்கான அன்பு, காதல்..
அடடா விட்டால் என்னையே மாத்திப்போடுவியள் போல இருக்கே.
🤣😀
12 hours ago, nedukkalapoovan said:வெளிநாடுகளில்.. தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையே தவறு. பிள்ளை தம் சொல் கேளாமல் போயிடுமோ என்ற பயத்தில்.. பிள்ளைக்கு சேவகம் செய்யும் பெற்றோராக.. பயந்து நடுங்கும் பெற்றோராகவே அநேக வீடுகளில் தமிழர்கள் உள்ளனர்.
எங்க வீட்டில்... எனக்கு அறிவு வந்த காலத்தில் இருந்து.. நான் உண்ணும் உணவுக் கோப்பையில் இருந்து எல்லாவற்றையும் நானே தான் கழுவி வைப்பேன். நித்தம் குளியறை சென்றதும்.. அதனை விட்டு வெளியேறும் முன் உடனடி சுத்தம் செய்ய வேண்டும்.. அது தான் வீட்டில் பணிப்பு. எனது உடைகளை நானே தான் துவைப்பேன். எனது பாடப்புத்தகங்களை நானே தான் ஒழுங்கமைப்பேன். எனது உடைகளை நானே தான் மடித்து வைப்பேன். சிறிய வயதில் அயன் பண்ணுவதை தவிர.. வளர்ந்த பின் அயனும் நானே தான் செய்வேன். இப்படிப்பல.
ஆனால்.. புலம்பெயர் நாடுகளில்.. மாடு மாதிரி வளர்ந்த பிள்ளைகளுக்கு வாசிங் மிசினில் உடுப்புப் போடுவது கூட அம்மாமார். சாப்பிடுற கோப்பை கழுவிறது அம்மாமார். அறை துப்புரவு செய்வது அம்மாமார். ஏன் பாடசாலை உபகரணங்களை தேடிக் கொடுத்து.. பாடசாலைக்கு கொண்டு போய் விடுவது வரை அம்மாமார். இப்படித்தான்.. புலம்பெயர் நாடுகளில்.. அதிக ஓவரா பிள்ளை வளர்க்கினம். இறுதியில்.. அந்தப் பிள்ளைகள் ஒரு வேலையில் கூட ஒழுங்கா தாக்குப்பிடிக்க முடியாமல்.. தவிப்பதை பார்க்கிறோம். காரணம்... பெற்றோர் பிள்ளைகளின் சுயத்தை அவர்களுக்கான சுய வாழ்க்கை ஒழுங்கை தீர்மானிக்கும் வகைக்கு வழிநடத்தாமையே.
கோழி கூட ஒரு காலத்துக்கு தான் குஞ்சுக்கு உணவூட்டும். அதன் பின்.. குஞ்சே தான் கிளறி.... உணவு தேடிச் சாப்பிட்டாகனும். ஆனால் நம்மவர்கள்.. ஏதோ காணாததை கண்ட கணக்கு.
இது தான் இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமே தவிர...
வேலைப் பகிர்வு என்பது.. இயல்பானதாக அமைய வேண்டுமே தவிர.. மனைவிக்கு செய்யுறன்.. கணவனுக்கு செய்யுறன் என்ற பாகுபாட்டு அடிப்படையில் அமைவது ஆரோக்கியமான குடும்ப நிலைக்கான அறிகுறியல்ல.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அதுவும் ஆண் பிள்ளைகள் பலரை குட்டிச் சுவாராக்கி வைத்துள்ளனர். பண்பும் பழக்கவழக்கங்களும் சிறுவயதில் இருந்தே பழக்கப்படுகத்தவேண்டும்.
12 hours ago, Kandiah57 said:ஒம் நான் கூறினேன். அது மேலேயுள்ள பகுதிக்கானா பதில் (குசினியில் கணவன் உதவினாலும் பலர். பாராட்டுவதில்லை. ..)பாராட்டினால். தான். பரிந்தது தெரியும்..
நான் கணவர் செய்தால் பாராட்டியுள்ளேன். என் கணவரிடம் காசு கொடுத்தும் பாராட்டை வாங்க முடியாது.
-
1 minute ago, Kandiah57 said:
மன்னிக்கவும். சுமே. நீங்கள். பிழையாக விளக்கிவிடடீர்கள்....இங்கே. njge. .தனது கணவரைப் பாராட்டிகிறார்...(கணவன் குசினியில் உதவியதை)
நீங்கள் தானே பலருக்கூம்புரிவதில்லை என்றீர்கள் 🤔😀
-
நான் நடக்கும் போது உங்களைபற்றி எண்ணுவதுண்டு. ஏனெனில் நான் ஒடுவோமா என்று இரண்டு தடவைகள் முயன்று மூச்சுவாங்கியதால் விட்டுவிட்டேன். நான் வைத்தியாரிடம் ஸ்ப்ரே கேட்டு வாங்கி அடித்துவிட்டு ஓவடிப் பார்ப்போமா என்று எண்ணியதுண்டு. நீ சாதாரணமாகத் தானே இருக்கிறாய். தேவையில்லாமல் ஏன் ஸ்பிரே கேட்கிறாய் என்று மனிசன் திட்டியதில் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இந்தப் பதிவைப் பார்க்க ஓடிப் பார்க்கலாம் என்னும் ஆசை எழுகின்றது. ஆனாலும் உடற்கூறுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றல்லவே. பார்ப்போம்.
-
1
-
-
On 31/3/2021 at 19:34, nige said:
என் நண்பியின் கணவருக்கு மூன்று வாரங்களிற்கு முதல் கொறோனா தொற்று ஏற்பட்டது. கடுமையான காய்சல் 10 நாட்களாக தொடர்ந்தது.ஆனாலும் அவர் பயத்தில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.ஆவி பிடிப்பது, ரசம் குடிப்பது என பல தமிழ் வைத்திய முறைகளை விடாமல் செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவருக்கு மூச்சு விடிவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. அவர்களிற்கு 1 வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது அந்த குழந்தையை பரிசோதிப்பதற்காக வந்த nurse தற்செயலாக நண்பியின் கணவரின் நாடித் துடிப்பை பரிசீலித்துள்ளார்.அப்போது அவரின் நாடித்துடிப்பு மிக குறைவாக இருந்ததால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவரது ஙரையீரல் 90% பாதிக்கப்பட்டிருந்தது.மிக கடுமையான நிலையில் அவர் உடல்நிலை காணப்பட்டது.தப்புவது கடினம் என வைத்தியர்களால் கூறப்பட்டது.எனினும் வைத்தியர்களின் கடுமையான ஒரு கிழமை போராட்டத்தில் அவர் இப்போது அபாய கட்டத்தை இப்போது தாண்டிவிட்டார். அவர் வைத்தியசாலை செல்லாமல் இருந்திருந்தால் இப்போது அவரை பார்த்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒவ்வொரு உடலுக்கேற்ப இந்த கொறோனா தன் இயல்பை மாற்றிக்கொள்கிறது.யாராக இருந்தாலும் ஒரு வைத்தியரின் ஆலோசனையை பெறுவது பாதுகாப்பானது..
பத்து நாட்களாகக் காய்ச்சல் என்றால் அவர்கள் முதலே வைத்திய ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். 90 வீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது மற்றும் இதயத் துடிப்பு குறைந்து இருந்தது என்றால் அவரால் எழுந்துநடமாடவே முடியாதும் இருந்திருக்கலாம். நான் கூறியது என அனுபவம். நீங்கள் கூறியது உங்கள் நண்பி கூறியதை. எனக்குத் தெரிந்த பலர் இரண்டாவதுதடவை வந்தும் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. ஒருமாதத்தின் பின் கூடக் குணமாகியுள்ளனர். வைத்தியசாலைக்குச் சென்ற பலர் உயிரிழந்துதானிருக்கின்றனர்.
பாவற்கொடியும் நானும்
in வாழும் புலம்
Posted
வளர்க்கின்றதுதான். ஆனால் அவை மனிதர்களைப் பாதிப்பதாகவும் கூறுகிறார்கள்.
சிலவேளை நீங்கள் வாங்கியது கறிவேப்பிலை போல இருக்கும் மற்ற மரமோ ???
கண்களுக்கும் தோலுக்கும் ஒவ்வாமை ஏற்படும் என்று இணையத்தில் இருக்கு.
அவை எந்த லைட் பாவிக்கினம் எண்டு கேட்டுப் பாருங்கோ😀
வெயில் நாடுகளில் வளர்ப்பது வேறு இங்கு வேறு.