-
Posts
8242 -
Joined
-
Days Won
37
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
-
On 31/3/2021 at 22:13, Kandiah57 said:
இவர் சட்டப்படி மனைவியுடன் வாழ்கிறார்.
எற்கனவே. மனைவியுடன். இருப்பவார்களும். குறிபபும். படமும். அனுப்பமுடியுமா?
மருதங்கேணியா ???? அப்ப எங்களுக்கு பொய்யா சொன்னவர்????
மனைவியுடன் இருப்பவரும் குறிப்பு அனுப்பலாம். ஆனால் மனைவியின் குறிப்பும் சேர்த்து அனுப்பவேணும் .🤣
-
1
-
-
வாழ்த்துக் கூறிய சுவி அண்ணா, கிருபன், ஈழப் பிரியன் அண்ணா,யாயினி, இணையவன், கந்தையா 57, குமாரசாமி, பெருமாள், புங்கை, நிலாமதி அக்கா, உடையார், ஜெகதா துரை ஆகிய உறவுகளுக்கு மிக்க நன்றி.
-
1 hour ago, Nathamuni said:
அருமையான தேங்காய்ப்பூ பிரீசர் பண்ணி வாறதாலை, இலங்கையில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடாகி, வேறு என்ன எண்ணெய் பாவிக்கலாம் எண்டு அரசு ஆய்வு செய்யுது.
நாடு விட்டு ஓடினால், மீனும், கிழங்குப் பொரியலும் அடிச்சுக் கொண்டு இருக்க வேண்டியது தானே.
எங்கட பறிக்கிளையோ கைய போடுறது எண்டு, புஞ்சி பண்டாவும், கந்தையரும், மொஹமட்டும் புறுபுறுக்கினம்.
அக்கா வேறை, சின்ன வெங்காயம் உரிச்சு வெட்ட வேணுமாம்.
சின்ன வெங்காயம் போட்டால் சுவையே தனிதானே
-
6 hours ago, விசுகு said:
இதில கொலரை தூக்கி விட ஒன்றுமில்லை
வீட்டுக்கு வீடு வாசற்படி.
வந்த புதிதில் குறிப்பிட்ட ஒரு மணித்தியாலத்தில் 100க்கு மேற்பட்டவர்களுக்கு சாப்பாடு கொடுக்க கூடிய சமையல்காரன் நான்.
ஆனால் அந்த வெறுப்போ என்னவோ குசினிப் பக்கம் போனதில்லை.
அதேபோல் துவைக்கும் மிசினை போடக்கூட தெரியாது.
அதற்கு காரணம் நான் இன்றும் 7 நாளும் குறைந்தது 15 மணித்தியாலங்கள் வெளியே வேலை செய்பவன்.
ஆனால் பிள்ளைகள் வளர்ந்து வரும் நிலையில் என்னால் முடிந்தவரை வீட்டு வேலைகளை செய்து வருகின்றேன்
காரணம் எனது இந்த பழக்கம் அவர்களை பற்றி விடக்கூடாது. ஏனெனில் அவர்களது வாழ்க்கை என் போன்று இருக்கப்போவதில்லை.
நல்ல காரியம் அண்ணா. குடும்பத்தில் உள்ளவர்களைப்பார்த்துப் பழக்குவதுதானே பிள்ளைகள் குணம்.
4 hours ago, பெருமாள் said:உங்களுக்கு தேங்காய் பால் டின்னில் இருக்குது தேங்காய் பூ ப்ரீசர் பண்ணி விக்கினம் என்பது தெரியாதா ?
யார் எப்பிடித் திருவி எப்பிடி பக் பண்ணுகிறார்களோ??? இருமுறை வாங்க்கிப் பார்த்தேன். எனக்குப் பிடிக்கவில்லை. அதன்பின் பத்துத் தேங்காயை வாங்கிவந்து மனிசன் துருவித் தருவார். பொலித்தீன் பையில் அளவாகப் போட்டுக் கட்டி வைப்பேன். tin கூட கெமிக்கல் என்று பவுடர் தான் கறிக்கும் அப்பத்துக்கும் பயன்படுத்துவது.
தேங்காய் திருவும் மிஷின் தான் தேடித் திரியிறன். எனக்காவது இருந்தால் கூறுங்கள்.
-
11 hours ago, பெருமாள் said:
அக்காவுக்கு தெரியாது அல்லது மறந்து விட்டா போல் உள்ளது ஆரம்பத்தில் வந்தவர்கள் சமையல் முறைவைத்து சமைத்தவர்கள் நாங்கள் அதே போல் கிழமையில் ஒரு நாள் வீடு கிளீனிங் நடக்கும் . இப்பகூட வீட்டில் நின்றால் பழைய நினைவுகளை மறக்காமல் உண்டன தூளை போட்டு பக்கத்து வீட்டு வெள்ளையை அழவைப்பது உண்டு .இங்கு என்ன ஊர் போல் புனல் வைத்து ஊதியா சமைப்பது ? தேங்காய் திருவும் வேலைகிடையாது சின்ன வெங்காயம் உடைக்க தேவையில்லை எல்லாம் பெரிய வெங்காயம் ஊரில் காலையில் 9 பத்துக்கே மதிய சமையல் தொடங்கிவிடும் பகிடி நாலைந்து பேர் ஊர்கதை உலககதை எல்லாம் கதைத்து ஒவ்வொரு நேரம் விதம் விதமாய் வாசம் வேறு வரும் இப்படி ஒரு பெரிய வேலையாய் செய்து முடிப்பார்கள் .
இங்கு அப்படியா ?ஒருமணிநேரத்தில் மூன்று கறி ரைஸ் ரெடியாகும் .இந்த நாட்டில் வந்து சமையல் கஷ்ட்டம் என்பவர்களை ஊரில் புனலுடன் மழை பட்ட விறகை கொடுத்து சமைக்க சொல்லணும் அப்ப தெரியும் .
சமையல் மட்டும்தான் வேலையா?? அப்பா நீங்கள் சமையலைத் தவிர ஒன்றும் செய்யவில்லைப் போல. கிளீனிங் என்றால் குளியலறை, குஷினி எல்லாம் செய்வதுண்டா ??? தேங்காய்ப் பூவும் பாவிப்பதில்லையோ ????
9 hours ago, Nathamuni said:அப்ப, படுக்கை.... ஒண்டோ.... தனித்தனியோ?🤭
அதுபற்றி இதில கேட்கக் கூடாது 🤫
4 hours ago, சாமானியன் said:சமையலைப் பற்றி கதைக்க கை துரு துறுக்குது…
நண்பனொருவன் கேட்டு விட்டான் இராச் சாப்பாடு தோசை என்கும் போது அது ரொட்டி இல்லை என்று நிச்சயம் தெரியுமா என்று ……….
அதற்கு பதில் தான் இது …….
ஆறு நாட்களுக்கு முன்னர் அரைத்து - இரவு முழுவதும்
23deg செல்ஷியஸில் பொங்க வைத்து
குளிர்ப்பெட்டியினுள் நுரை ததும்ப
காத்திருந்த தோசை மா ..
கேரட்டையும் வெங்காயத்தையும் பொடிசாக நறுக்கி
வீட்டு கடை கோடியில் ஆய்ந்த பிஞ்சு மிளகாய் தூவி
சற்றே சோயா Sauceம் கிங்ஸ் தூளும்
எள்ளுப்பன் நல்லெண்ணெயும் கலந்த மசாலா ..
இரண்டு ஊர் முட்டையை தட்டி விட்டு
ஒரு பின்ச் Mt Everest உப்பும் சேர்த்து
ஒரு கரண்டி நற் பசும் பாலும் கலந்து
நன்கு நுரை ததும்ப அடித்த முட்டை …
காஸ் அடுப்பில் அளவான சூட்டில் தோசை மா வார்த்து
மேலே நுரை பொங்கும் முட்டையை ஊற்றி
மசாலா கலவையை அடங்கலாக பரவி
மறுபக்கம் பிரட்டி போட வந்தது தான் இரா சாப்பாடு ..
துரையவர்கள் இன்று கேட்கிறார்
ரொட்டியா தோசையா என்று
வெங்காயம் உடைத்தீரா அல்லது மறு தோசை வார்க்க முன்னர்
தோசை தட்டில் தண்ணீர் தெளித்தீரா …
தப்பி விட்டீர்கள் துரை அவர்களே
கேட்டிருக்க வேண்டும் இந்த கேள்வியை நீங்கள் வேறிடத்தில்
வந்து பாருங்கள் துரை அவர்களே பிரிஸ்பேனுக்கு
உண்மை தோசை என்பது என்னவென்று அறிவீர்கள் நீங்கள் ..
முகநூலில் சுட்டதா????
1 hour ago, உடையார் said:சுமே இங்கு தூண்டில் போடுகின்றார் நாங்கள் வீட்டில் என்ன வேலை செய்கிறோமென தெரிந்து அத்தாருக்கு காட்டி, அத்தாரை படாத படுபடுத்த😎
அத்தார் சும்மா வீட்டில் வேலை வெட்டி இல்லாமல் இருந்திருந்தால் செத்தார். நல்ல காலம் ஒழுங்காக வேலை செய்கிறார்.
-
ஏன் நான் போட்ட இந்தப் படத்தை நிர்வாகம் நீங்கியது????
15 hours ago, குமாரசாமி said:என்ன கதை இது? கொத்தார் என்ன குறை வைச்சவர் எண்டு கேக்கிறன்? போன கிழமையும் பிரியாணி செய்து குடுத்தவர். பூ தொட்டி செய்து குடுத்தவர். கமராவிலை சமையல் படம் எடுக்க தடியிலை ஸ்ரான்ட் செய்து குடுத்தவர்.😂
மிச்ச வீட்டு வேலையும் கொத்தார் தான் செய்யிறார் எண்டு இஞ்சாலை ஒரு கதை கசியுது🤣
நான் என் அத்தாரைப் பற்றிச் சொல்லவில்லை. மற்றவையைத்தான் சொல்லுறன்,கேட்கிறன்.😎
14 hours ago, Kandiah57 said:நானும் பல வருடங்களுககுமுன் வெங்காயம் உரிந்துக்கொருத்தேன் ....நான் உரிந்தது சரியில்லையென மனிசி. ஒரு தோலை மேலதிகமாக உரிநது குப்பையில்போட்டார். . நானும் அப்படியே இன்னெரு தோலை உரிந்த
உரித்து குப்பையில் போட்டேன் ......இப்படியாக....முழு வெங்காயமும். குப்பையில் போட்டுது.....அதன்பின். தனித்தனி சமையல் தான்.
சிரித்து முடியவில்லை 😂🤣
12 hours ago, சாமானியன் said:காலையில ஒவ்வொரு நாளும் பெட் காஃபி போட்டுக் குடுத்தியளெண்டால் , மிச்ச வேலையெல்லாம் அப்பிடி சுண்டி சுண்டி நடக்கும் - 😀
ஆருக்கு எண்டு சொல்லவேயில்லை 😃
-
16 hours ago, குமாரசாமி said:
ஒவ்வொரு மங்கையருக்கும் வந்து வாய்க்கும் மன்னவர்கள் எப்படி எப்படி இருக்க வேண்டும்? எந்த விடயங்களில் உதவி ஒத்தாசையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? வேலைக்கு செல்லும் பெண்கள். வேலைக்கு செல்லாத பெண்கள். வேலைக்கு செல்லும் ஆண்கள். வேலைக்கு செல்லாத ஆண்கள் அல்லது இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.
ஒரு சிறு பட்டியல் இட முடியுமா? 😁
உது பெரிய வேலையே.
வேலைவெட்டிக்குப் போகாமல் இருக்கக் கூடாது.
நல்ல சம்பளத்துக்கு வேலை செய்யவேண்டும்.
பார்க்க நாலு பெண்கள் சைட் அடிக்கும்படி இருக்கக்கூடாது
அவரும் மற்றவரைப் பார்த்து லொள்ளு விடுபவராக இருக்கக் கூடாது.
சுவையான தேநீர் தயாரிக்கத் தெரியவேணும்.
கஞ்சப் பிசினாரியாக இல்லாமல் நாம் விரும்பும் எல்லாவற்றையும் வாங்கித் தராவிட்டாலும் வாங்க ஆசைப்பட்டதைத் தடுக்காது இருக்கவேண்டும்.
அதை உண்ணாதே இதை உண்ணாதே என்று கடுப்பைக் கிளப்பக் கூடாது.
வாரம் ஒருநாளாவது முழு வேலைகளையும் அவர் செய்யவேண்டும்.
சும்மா இருக்கிறாய் என்னும் வசனத்தை மறந்தும் பாவிக்கக் கூடாது.
வீட்டில இருந்து என்ன வெட்டி முறிக்கிறாய் என்று சொல்லவே கூடாது.
கணக்குவளக்கெல்லாம் ஒழுங்கக்காக காட்ட வேணும்.
எமக்குத் தெரியாமல் தன் பேரில தனியா பணம் சேர்த்து வைக்கவே கூடாது.
வீணாச் செலவழிக்கிறாய் என்ற கதையே கதைக்கக்கூடாது.
மற்றப்படி ஓகே
16 hours ago, புங்கையூரன் said:அத்தாரை நினைக்கத் தான் எனக்கு அழுகை...அழுகையா வருகுது....!😆
ம் .. நல்லா அழுவியள். அழுகிற சாட்டில எழுதாமல் போகாமல் என்ன உதவி செய்யிறது எண்டு எழுதுங்கோ
-
17 hours ago, யாயினி said:
தடி வேண்டும் என்றால் பார்சலில் அனுப்பி விடுறன்..பூவரசு கிடையாது..😊🤭
மூங்கில் ஓகே
16 hours ago, suvy said:அப்ப மனைவிக்கு உதவுவது கேவலம் என்று எண்ணுகிறீர்கள் ???
18 hours ago, ஈழப்பிரியன் said:எப்படித் தான் கரணமடித்தாலும் பெண்களைப் போல வீட்டுவேலைகள் பொறுமையாக செய்ய முடியாது.
வெட்கப்பட்டுக் கதையை மாத்தாமல் வெட்டுறது உரிக்கிறதுகளைச் சொல்லுங்கோ அண்ணா
16 hours ago, சுவைப்பிரியன் said:இது பேசாப் பொருள் பகுதியில் வர வேண்டியது.😂
அப்ப அங்காலை மாத்தினால்த்தான் எழுதுவியளோ???
-
20 hours ago, Maruthankerny said:
போட்டு பாருங்க வாக்கை
அப்புறம் பாருங்க நாட்டைகட்டி தாருங்கள் ஒரு பெண்ணை
அப்புறம் பாருங்கள் லிஸ்டைஎதுக்கும் உங்கள் குறிப்பையும் ஒரு முழுப்படத்தையும் அனுப்பிவிடுங்கள்.
-
44 minutes ago, யாயினி said:
ஒரு வெங்காயம் வெட்டி சமைச்சு வீட்டு வேலை செய்யிறது பெரிய ஒரு உலக மகா அதிசயம் தான் பெண்களுக்கு..🤭😁இதை விட்டால் போண் அரட்டை சூம் மீற்றிங் வேறை............
வாறன் பொறுங்கோ பூவரசம் தடியோடை 😃
-
2 hours ago, Maruthankerny said:
போட்டு பாருங்க வாக்கை
அப்புறம் பாருங்க நாட்டைகட்டி தாருங்கள் ஒரு பெண்ணை
அப்புறம் பாருங்கள் லிஸ்டைஉது வேலைக்காகாது 😀
1 hour ago, Nathamuni said:ம்....ம்ம்ம்... க்..கும் ...
அத்தார்.... என்ன விளையாட்டு?
வெங்காயமாவது வெட்டிக் கொடுக்கலாம் தானே.
அக்கா, உங்கை சந்தில வந்து கத்துறா. துலைஞ்சியால் இண்டைக்கு...
கடவுளே.... பாவம் மனிசன்.
அத்தார் வெங்காயம் உள்ளி உரிச்சுத் தருவார். பிரியாணி கூட நல்லாத்தான் செய்வார். ஆனால் அவர் குசினிக்குள்ள வந்து சொல்லுற கதையளுக்கு ஆளை வெளியே கலைத்துவிட்டு நிண்டுதான் சமைச்சு முடிக்கலாம். கொஞ்சம் தூளைக் கூடப்போடு, அதைப் போட்டால் நல்லாய் இருக்கும் .. ........................................இப்பிடி 😂
1 hour ago, nunavilan said:எங்களை வைச்சு அந்தாளை போட்டு தாக்குற திட்டம் நல்லாயிருக்கு.🙃
அடடா இப்பிடியும் ஒரு வழியா ???? நான் அப்பாவி 😃
-
அதற்குக் காரணம் பெற்றோர் இப்போதெல்லாம் பிள்ளைகளை ஊர் பள்ளிகளில் விடாது கார் பிடித்து அல்லது ஓட்டோவில் இந்தியா போன்று பணம் செலவு செய்து நல்ல பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். பலபள்ளிகளுக்கு அரசாங்க உதவித் திட்டம் இருந்தாலும் அதை சரியாகப் பயன்படுத்தாது அதிபர்கள் அசட்டையாக இருக்கின்றனர்.
-
1
-
-
பல ஆண்கள் இன்னுமே மனைவியின் சுமைகளைச் சுமக்க மறுப்பவர்களாக, புரிந்துகொள்ள மறுப்பவர்களாக இருந்துவிட்டு ஒருநாள் செய்யும் உதவியை பெரிதாகப் பீற்றிக்கொண்டு பெண்களுக்கு உதவுவதைக் கேவலமாக எண்ணிக்கொண்டுமே இருக்கின்றனர். யாழ் இணையத்து ஆண்களும் நாங்கள் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் அல்ல என்று கூறுகிறார்கள் தான். ஆனாலும் யாராவது ஒருவராவது ஒரு வாரம் உங்கள் மனைவியை எந்த வேலையும் செய்யவிடாது ஓய்வு கொடுத்துவிட்டு நீங்கள் அவர்கள் செய்யும் வேலைகள் எல்லாவற்றையும் செய்துள்ளீர்களா ??
வேலைக்குச் செல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறாள் என்று சுகமாகச் சொல்லிவிடுவார்கள். ஒரு பெண் எதுவுமே செய்யாமல் படுத்துக் கிடந்தால் குடும்பத்துக்கே இருண்டு போகும். பெண்கள் குடும்ப மெசின்கள் என்று பெருமையாகவேறு இணையத்தில் போட்டுள்ளார். உண்மையாகவே நீங்கள் உதவுபவராக இருந்தால் துணிவாக வந்து வெட்கப்படாமல் நிரையாகச் சொல்லுங்கள் பார்ப்போம்.
-
2
-
1
-
1
-
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.
-
1
-
-
On 29/3/2021 at 03:19, nunavilan said:
அனுபவ பகிர்வுக்கு நன்றி. நீங்கள் சிலரை போல அதிஸ்டசாலி(கள்). பெரிதாக வாட்டி எடுக்கவில்லை. எனக்கு தெரிந்த ஒருவருக்கு கொரனா வந்தது 2000 பங்குனியில். சில மாதங்கள் வேலைக்கு செல்லவில்லை நோயின் தீவிரம் காரணமாக வரவில்லை. மருத்துவரிடம் கடிதம் எடுத்து வேலைக்கு செல்லவில்லை. இந்த வருடம் (2021ல்) வேறு வழியின்றி வேலைக்கு வந்துள்ளார். அவர் சொல்கிறார் தான் நோயில் இருந்து முற்று முழுதாக விடுபடவில்லை என. அவர் மூச்சு விடும் போது ஏற்படும் சத்தத்தை(wheezing) இப்போதும் கேட்க முடிகிறது. உடலளவில் மிகவும் பலவீனமாக உள்ளார்.
வேலையின் HR அனுமதியுடன் நாளுக்கு 4 மணித்தியாலங்கள் மட்டும் வேலை செய்கிறார்.
உண்மைதான் நுணா ஆனாலும் எனக்கும் மகளுக்கும் அடிக்கடி ஒரு தலைவலி புதிதாக வருகிறது. திடீரென உடற்சோர்வு ஏற்படுகின்றது. ஆனாலும் நீங்கள் கூறியவர் பாவம்.
எனது நண்பி ஒருவரின் கணவர் இங்கு போலீசாக இருந்தவர். அவருக்கு கொரவனா வந்து ஒரு மாதம் எடுத்தது எழுந்து நடக்க. இரண்டு மாதங்களின் பின்னர் முழங்கால் நோ ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் சென்றவரை கொறோனா என்று மறித்து மனைவியையோ மகனையோ பார்க்கவிடாது ஒரு தனி அறையில் கொண்டுபோய் போட்டுவிட்டனர். அவர் தாதிமாரை அழை க்கும் அழுத்தியை அமத்தியும் யாரும் வரவில்லையாம். பின்னர் அவருக்குத் தெரிந்த ஒரு வைத்தியாரின் துணையுடன் எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள். அவரை விடும்போது தவறுதலாகக் கூறிவிட்டோம். அவருக்குக் கொறோனா இல்லை என்று கூறினார்களாம். அவருக்கே அந்த நிலை என்றால். .. .. இன்னும் பல ஆட்களை வேறு வேறு அறைகளில் வைத்திருக்கின்றனர். ஏதும் பரிசோதனை செய்து பார்க்கப் போகின்றனரோ என்றார்.
-
On 28/3/2021 at 23:56, குமாரசாமி said:
காப்பு கை மருத்துவத்திற்கு கேரளாவும் சிறிலங்காவும் சிறந்ததாம்.😎
உதுகள் எல்லாம் விலாவாரியாத் தெரிஞ்சிடும்😃
-
1
-
-
On 24/3/2021 at 23:26, nige said:
கருத்து பகிர்வுக்கு நன்றி சுமே.. நீங்கள் எல்லோரும் நலமாக இருப்தில் மிக சந்தோசம். உங்கள் எல்லோருக்கும் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் மனதில் தைரியமும் இருப்பதால்தான் இது சாத்தியமானது. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமானதா என்பது கேள்விக்குறிதான்.வைத்தியசாலை சென்றதால் கடைசி நேரத்தில் தப்பி பிழைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.அதானால் வீட்டில் இருந்தால் கொறோனா மாறிவிடும் என்பதுதான் சிறு உறுத்தல். ஆனால் உங்கள் அனுபவத்தில் அது சாத்தியமானதில் சந்தோசம்.
எமக்குப் பக்கத்து நகரத்தில் வசிக்கும் ஒரு வைத்தியர் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு காணொளி வெளியீட்டிருந்தார். அதில் கூட அவர் கூறுகிறார். நீங்கள் வைத்தியசாலைக்கு வராமல் இருக்கப் பாருங்கள் என்று. நான் வெளிப்படையாக எதையும் கூற முடியாதுள்ளது என.
On 28/3/2021 at 09:54, Kandiah57 said:நல்ல பதிவு நன்றி ..இந்த சந்தர்ப்பத்தில் ஜேர்மனியை விடடுப்போனாது பற்றி கவலைப்படவில்லையா?(மருத்துவ வசதி)
நான் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் என் அம்மாவை நாம் இழந்தது யேர்மன் மருத்துவத்துறையின் கவனமின்மையால். யேர்மனியிலும் இப்போது வைத்தியசாலைகளை அமெரிக்கத் தனியார் நிறுவனங்களே நடத்துகின்றனவாம். எங்கும் எல்லாம் இப்போ பணம் மட்டுமே குறிக்கோள்.
On 28/3/2021 at 10:48, Kandiah57 said:யு.கே இல வாழும் ஒர் ஆங்கிலேயார் முதுகுத்தண்டுப்பிரச்சனையால் பல ஆண்டுகள்
அங்கே மருந்து செய்ய முயறசசிசெய்தும் முடியாமால் ஜேரமனி பற்றிக்கேளவிபபடட்டு இங்கே வநது மருத்துவம் செய்து சுகம்வந்து இருப்பதாய் அவர் அளித்த பேட்டி படித்தேன்
எலும்பு தொடர்பான நோய்களுக்கு இன்னும் யேர்மனியில் நல்ல வைத்தியம் தான். அதற்காக எடுத்ததுக்கெல்லாம் அங்கு ஓட முடியுமா???
-
1
-
-
On 23/3/2021 at 19:38, கிருபன் said:
கொரோனா அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சுமே ஆன்ரி. பலருக்கு mild symptoms ஆகத்தான் வரும். எனினும் ஆபத்தாகவும் சிலருக்கு வந்து சேரும் என்பதால் லொட்டரி மாதிரி நினைக்கவேண்டும்.
எனக்குத் தெரிந்து பலருக்கு வந்து முறிச்சு எடுத்தது. கொரோனா வந்து சில மாதங்களில் 30 வீதமானோர் மீண்டும் வைத்தியசாலை போனதாக தரவுகள் சொல்லுகின்றன. எனவே சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் வந்தால் வைத்தியரை நாடவேண்டும்.
NHS guidelines படி Oxymeter 95 க்குள் கீழே வந்தால் உடனடியாக வைத்தியரை தொடர்புகொள்ளவேண்டும். 92 க்குப் போனால் அவசர சேவையை தொடர்புகொள்ளவேண்டும். 85 மட்டும் பிரச்சினை இல்லை என்பது சரியல்ல. அத்துடன் வைத்தியசாலைக்கு போவதா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்கக்கூடாது. அதனை வைத்தியர்கள்/ NHS சொல்லவேண்டும்.
கடந்த வருடம் எனக்குத் தெரிந்த ஒருவர் கொரோனா வந்திருக்கலாம் என்று வீட்டில் தனது அறையில் தனிமையாக இருக்கும்போது சிலநாட்களில் ஸ்ரோக் வந்து மரணமடைந்தார். அவருக்கு கொரோனா வந்திருக்கவில்லை. எனவே, மனதைரியம் மிகவும் முக்கியம். அத்துடன் வைத்தியர்களின் தகுந்த ஆலோசனைகளும் முக்கியம்.
என அனுபவத்தைத் தானே கூறினேன். நான் வைத்தியாரிடம் கேட்டபோது அவர் கூறியதைத்தான் சொன்னேன். மற்றது என மக்களுக்கு 83 கூட ஒருதடவை காட்டியது. உடனே 111 இக்கு போன் செய்யும்படி கூறினேன். அது பிரச்சனை இல்லை அம்மா என்றுவிட்டாள். மறுமுறை பார்த்தபோது 90 இல் இருந்தது. சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் கவனமாயிருக்க வேண்டியது அவசியம் தான்.
19 hours ago, உடையார் said:அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமே
வரவுக்குநன்றி
13 hours ago, புங்கையூரன் said:நல்ல ஒரு அனுபவப் பகிர்வு, சுமே!
ஒவ்வொருவரது உடல்களும் வெவ்வேறு வகையானவை!
அவர்கள் தான் ...நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும்!
உங்கள் வீடியோ பதிவில் ஒரு 'பொறுப்புத் துறத்தல்" எச்சரிக்கை ஒன்றைப் போட்டால் நல்லது என்று நினைக்கின்றேன்!
இந்தப் பதிவால்...நாளைக்கு ஒரு பிரச்சனை வரக்கூடாதெல்லோ? 😃
அதுதான் என அனுபவம் என்று போட்டாச்சே🤣
12 hours ago, கறுப்பி said:நல்லதொரு அனுபவ பகிர்வு. நன்றி
வருகைக்கு நன்றி
-
50 minutes ago, பெருமாள் said:
உங்களின் அனுபவப் பகிர்வுசிறப்பு .....மனத்தைரியம்தான் உங்களின் குடுப்பத்தையும் மீட்டிருக்கு......பாராட்டுக்கள் .......சுமே அக்கா .
அப்படியும் சொல்ல முடியாது. ஏதோ எமக்கு அப்படி விதிக்கப்பட்டிருக்கு 😀
-
கஷ்டப்பட்டு உழைக்கும் மனிதா அதை அனுபவிக்காது மிச்சம் பிடித்துச் சேர்த்து என்ன பயன்????
😂😀
-
1
-
-
உங்கள் நகைச்சுவை உணர்வு என்றும் மாறாது
-
1
-
-
ஆகா அழகிய ஊர் வாசம் மனதை நிறைக்கிறதே
-
1
-
-
வரவர இவருக்கு வயது மறந்துபோய் குசும்பு கூடிப்போச்சு. 😀😂 இருந்தாலும் நல்லாய் இருக்கு கவிதை
-
அந்த இடத்தில் நான் இல்லாமல் போயிட்டனே யாயினி 😂
என்னவெல்லாம் செய்வீர்கள் உங்கள் மனைவிக்கு
in சமூகச் சாளரம்
Posted
என் கணவர் புரியாணி, மீன் பொரியல் மட்டும் நன்றாகச் செய்வார். மற்றப்படி வீட்டில் பல வேலைகளுக்கும் உதவுவார். ஆனால் தேநீர் மட்டும் கட்டாயம் நான்தான் ஊற்றிக் கொடுக்க வேண்டும் காலையில். எல்லா ஆண்களும் பெண்களை மதிக்கத் தெரிந்தவர்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை நிகே.
நீங்கக்கள் கூறுவ தைப் பார்த்தால் எல்லா ஆண்களும் வாய்விட்டுப் பாராட்டுபவர்கள் என்பதுபோல் இருக்கே. பலரும் கடமைக்கு இன்னுமே வாழந்துகொண்டிருக்கிறார்கள்.
எல்லோரும் மேலோட்டம்மாக நானும் செய்கிறேன் என்கிறீர்கள். மனைவி செய்யும் வேலையையும் நீங்கள் செய்யும் வேலையையும் பட்டியலிட்டீர்கள் என்றால் உங்களுக்குப் புரியும். பல்கிப் பெருக்கிக் குடும்பம் பெரிதாக்கி பிள்ளைகள் வளரவளர வேலைகளும் அதிகரிக்கும் பெண்களுக்கு.