
சாமானியன்
கருத்துக்கள உறவுகள்-
Posts
472 -
Joined
-
Last visited
-
Days Won
1
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by சாமானியன்
-
வணக்கங்களும் அஞ்சலிகளும்…. அம்மாவையும் குடும்பத்தினரையும் ஓரளவு அறிவேன். பக்கத்து ஊர், மற்றும் எனது சகோதரனும் அம்மாவின் மகன்மாரில் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள்;ஒன்றாக பலகாலம் கடமை புரிந்தவர்கள். அம்மா உங்களினதும் உங்கள் குடும்பத்தினரதும் பங்களிப்புகளுக்கு சிரம் சாய்த்து நன்றி சொல்லிக் கொள்கின்றோம். படைப்பில் இருந்தவை எதுவுமே நிரந்தரமாக மறைவதில்லை என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான் . எதோ ஒரு நேரத்தில் எதோ ஒரு வடிவில் உங்கள் நினைவுகளின் நிஜங்களை காண்பீர்கள் அம்மா. அதுவரை எங்கிருந்தாலும் நலமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் அம்மா…
-
இந்த வருடம் 2022 மே 18 இல் மனதிற்கு இதமான விடயங்கள் பல சென்ற வருடம் முள்ளியில் வாழைத்தண்டில் மண்சட்டி வைத்து கற்பூரம் ஏத்தி அஞ்சலிக்கு ஆயத்தம் செய்ய சப்பாத்துக் காலால் தட்டி உடைத்தான் ஆமிக்காரன் இந்த வருடம் காலிமுகத் திடலில் காலிரண்டும் இல்லாத ஆமிக்காரனும் வந்திருந்து முள்ளிக் கஞ்சி வாங்கி அருந்தியது மனதை தொட்டு சென்றது 2009 இல் கஞ்சி இன்று போல் தடிப்பாக இருக்கவில்லை என்று முள்ளியில் தமிழர் பட்ட அவலத்தை சிங்கள சகோதர்கள் பகிர்ந்து கொண்டார்கள் காலிமுகத்திடலில்.. அவலங்களுக்கு பொறுப்பு கண்டடைதலும் வேண்டும் என்ற அவர்களின் கூற்று மண்ணின் கீழே துயில்வோரின் காதுகளில் வீழ்ந்திருக்கவும் கூடும் விளங்கா மொழியில் என்றாலுமே விளங்கியிருக்கக் கூடும் புத்தம் சரணம் கச்சாமி இயேசு இரட்சிப்பார் அல்லாஹ்வின் அருளால் அமைதி பெறட்டும் ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும் என்று இலங்கை மக்கள் அங்கே ஒன்றாக நின்றது வரப்போகும் நன்மைகளுக்கு கட்டியம் கூறுவதாக அமையட்டும் .. - மெல்பேணில் துண்டுப்பிரசுரம் கிழித்தெறிந்த சகோதரனுக்கு இது சமர்ப்பணம்
-
பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சாமானியன் replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
மே 18 நினைவேந்தல் நாளில் விடுதலை ... விடுதலை வேறு செய்திகள் எதனையாவது சுமந்து வருகிறதா ... -
இன்னுமொன்று- பிரசுர விநியோகிப்பிற்கு முன்னர் அவர்கள் அஞ்சலி செலுத்தி முள்ளி கஞ்சியும் குடித்திருப்பார்கள் என்பது அடிப்படை எடுகோளும் அனுமானமும் ஆகி நிற்கின்றது .... பெரும்பான்மை தமிழர் கோகோத்தாவை ஆதரிப்பது போல ...............
-
முள்ளி நினைவேந்தலில் காத்தான்குடி பிரசுரம் விநியோகிப்பது பற்றி எமது உண்மையான அபிப்பிராயங்கள் என்ன ?? சிந்தனையை தூண்டும் ஒரு பகுதி ...... பிரசுரம் தர வரும் போது முசுலிம் ஊர்காவலினர் அரங்கேற்றிய காட்டுமிராண்டித்ததனங்கள் பற்றிய விபரங்களையும் கூடவே கொண்டு வந்து விநியோகித்தால் , இரண்டு பிரசுரங்களையும் ஒன்றாகக் பெற்றுக்கொள்ளுதல் கொளகை அடிப்படையில் எனக்கு சம்மதமே ....
-
புதிய பிரதமராக... ரணில்? – இன்று அல்லது நாளை, பதவியேற்பு!
சாமானியன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஒரு நாளாவது இலங்கைத் தீவின் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற உந்த ஆளின் ஆசை நிறைவேறும் போல தான் இருக்கு. பக்சர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை பிரதமமந்திரி; பின் கொட்ட ராஜினாமா செய்ததும் சட்டப்படி ஜனதிபதி. முன்பு மைனாவிடம் இழந்த சொர்க்கத்தை அண்ணன் நந்தாவிடம் பெறப் போகுது போல ஆள் .... முழு இலங்கையிலும் ஆகக் கெட்ட பரதேசி எண்டால் உந்த ஆள் தான் ..... -
இப்ப கன ஆக்களை வயது வித்தியாசம் இல்லாமல் வாட்ஸாப் பேய் பிடிச்சிருக்கு. ( நான் உட்பட). கொரோனாப் பூச்சியோட தொடங்கினது இப்ப வேற லெவலுக்கு போய் நிக்குது . அண்டைக்கு ஒரு நாள் மொபைல் போனை மறந்து போய் விட்டிட்டு ஆஃபீஸ் போய் விட்டேன். அண்டைக்கு பின்னேரம் வீட்டை திரும்புவதற்கு முன்னர் ஆஃபீசில செய்த்து முடித்த வேலைகளை திரும்பி பார்க்க எனக்கே மலைப்பாக இருந்த்துது. ஒழிக வாட்ஸாப்!!! இனி கிழமைக்கு ஒரு நாளெண்டாலும் போனை வீட்டில மறந்து விட்டிட்டு வாறதெண்டு இருக்கிறன் …. (போன் லயிட் மின்னுது ஏதோ புது மெசேஜ் போலஇ பொறுங்கோ என்னெண்டு பாப்பம்…)...
-
யாழ். பல்கலைக்கு... அமெரிக்கத் தூதுவர், விஜயம்!
சாமானியன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அப்ப என்ன செய்ய வேணும் எண்டு சொல்லிறீங்கள் மக்காள் .. "கோ ஹோம் ஜூலி" எண்டு ஆர்ப்பாட்டம் செய்வமோ ..?? -
எங்களில் இருந்து மாறுபடும் புதிய தலைமுறை எண்ணங்கள்
சாமானியன் replied to பாலபத்ர ஓணாண்டி's topic in சமூகவலை உலகம்
83 வைகாசியில் பேராதனை பல்கலைக்கழகம் குழம்பி , ஒன்றாகக் படித்த சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை அடித்து கேவலப்படுத்திய நேரம் , பாதுகாப்பு இல்லை என்று நாங்கள் இடத்தை காலி பண்ணி வீடு போக ஆயத்தப்படுத்திய நேரம் , அங்கே வந்த எமது சிங்கள நண்பர்கள் எம்மை போக வேண்டாம் என்று தடுத்ததுடன் , எங்களுக்கு எதாவது நடந்தால் அது தங்களின் உயிரற்ற உடலங்கள் மேல் தான் சாத்தியமாகும் என்று சொல்லி , அதன் படியே நடந்து எங்களை தாக்க வந்தவர்களிடம் இருந்து எங்களை காத்து நின்றதும் நினைவகலா நிகழ்வுகள்….. -
கோட்டாபய தலைவர் கைகளால் செத்திருக்கலாம்!! சிங்கள நடிகர் அதிரடி!!
சாமானியன் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
இன்று தட்டுப்பாடும் பட்டினியும் அங்கே தலை விரித்து ஆடுது . வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர் பொருள் சேர்த்து வணங்காமுடியை வாடகைக்கு அமர்த்தி அங்கே இருக்கும் எல்லோருக்குமே உதவியாக அனுப்பி வைப்பதை பற்றி யோசிக்கலாமே… -
கோட்டாபய தலைவர் கைகளால் செத்திருக்கலாம்!! சிங்கள நடிகர் அதிரடி!!
சாமானியன் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
பெரியவர் இப்பிடி எழுத்திறதிற்கு மன்னிக்க வேணும். எங்களுக்கு முட்டையில் மயிர் புடுங்கிறதே வேலையாய் போச்சு . தலைவரின் கையால் இவன் செத்திருக்கலாம் எண்டு அவன் சொன்னது ஓரளவிற்கேனும் முழுமையான அங்கீகரிப்பின் ஒரு பகுதியாக தென்படவில்லையா. பல்கலையில் எங்கள் Batch இல் 250 பேர் , சரி அரைவாசி தமிழும் சிங்களமும் (1979 நடப்பு இது) . Whatsapp குரூப் வைச்சிருக்கிறம். ஒரு 75% ஆன ஆக்கள் இருக்கினம். அதில Putin Hague war Crime Tribunal க்கு போக வேண்டி வரும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவன் பதிவிட , ராஜபக்ச சகோதரர்களையும் அதில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும் என்று முதல் தடவையாக ஒரு சிங்கள நண்பன் பதிவிட்டிருக்கிறான் . 2009 இல் கதவைத் தட்டிய சந்தர்ப்பம் , மீண்டும் ஒரு முறை கதவைத் தட்டி நிற்பதாக உணர்கிறேன். எங்களுக்கு என்ன வந்தது என்ற அலட்சிய மனோபாவத்தைத் துறந்து, பக்கத்து வீட்டுக் காரனுடன் நட்பை மீண்டும் கட்டி எழுப்பி, எமது பிள்ளைகள் எமது நாட்டில் நிம்மதியாகக் வாழ்வதற்கான வழிவகைகளை அமைப்பதில் எமக்கு இருக்கக் கூடிய தார்மீகப் பொறுப்புகளை பற்றி சீரியஸாக யோசிப்போமா…. -
தீவிரமடைந்தது போராட்டம்! கண்ணீர் புகைக்கும் கலையாத கூட்டம்!
சாமானியன் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
எனக்கொரு சந்தேகம் .. இப்பத்திய நிலைமை முடிவுக்கு வரும்போது யார் கிரிபத் காய்ச்சுவினம் யார் கீழே இறங்கி பூமியை முத்தமிடுவினம் .... -
முதல் இருந்த / இருக்கிற ஆசாமி தீபாவளிக்கு தீபாவளி வெடி விட்டுக் ஒருமாதிரி காலத்தை கடத்தி விட்டு இப்ப பாடை கட்டுறதுக்கு நல்ல / ( கெட்ட?) நாள் பார்த்து கொண்டிருக்கு . இப்ப இந்த ஆளுக்கு இருக்கிற தெரிவு கிரிஸ்மஸுக்கு கிரிஸ்மஸ் வெடி விடுறது . தீபாவளி வெடி வாங்கின சனம் கிரிஸ்மஸ் வெடி எண்டால் சிலவேளை குழம்பியிடும் அது தான் அண்ணாத்தை வேறு உத்திகள் கையாளுறார்.. விடுங்கப்பா பிழைச்சுப் போகட்டும் இதுவும் கடந்து போகும் எண்டு ஆறிக் கொள்ளுவம்..
-
250 பேரைக் கொண்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழக எமது 79-83 வருட கற்கை நெறியில் 50 % தமிழர் 50% சிங்ககளவர். எல்லோரும் கொண்ட வாட்ஸாப் குரூப் வைத்திருக்கிறோம் . ரஷ்யா உக்ரேன் போர் பற்றிய சமகால பதிவுகளில் தமிழ் நண்பர்கள் மனோரீதியாக உக்ரேன் பக்கம் நிற்பதும் சிங்களர் ரஷ்யா பக்கம் நிற்பதும் ஊடாடி செல்லும். வெளிப்படையாக இராது ....
-
உடலுறவில் உச்சகட்டம் அடைந்தால்தான் பெண்கள் கருவுற முடியுமா? - உடல்நலம்
சாமானியன் replied to ஏராளன்'s topic in பேசாப் பொருள்
அதீதமான புறநடைகள்(Extreme outliers) என்பதனை முகாமைத்துவம் செய்வது எப்பவுமே சவால் மிக்க விடயம் தான். போதியளவு மனோ ரீதியான ஆயத்தப்படுத்துகை , எதிர்பார்ப்புகளை தூண்டி விடும் செயற்பாடுகள் , செயற்கை சாதனங்களின் உதவி என்பனவற்றுடன் உடல் தொடர்பாடலை சரியான முறையில் கலந்தெடுத்துப் பாருங்கள் , 100% உத்தரவாதம் இல்லை , சரி வரக் கூடும் .. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் மாயமான்கள் துள்ளித் திரியும் அதுவோர் மர்ம தேசம் …… -
உடலுறவில் உச்சகட்டம் அடைந்தால்தான் பெண்கள் கருவுற முடியுமா? - உடல்நலம்
சாமானியன் replied to ஏராளன்'s topic in பேசாப் பொருள்
ஆணோ, பெண்ணோ பெளதீக ரீதியான , அளவான அழுத்தத்துடன், உரிய இடத்தில், போதிய நேரம் "கவனித்தால்" , உச்சக்கட்டம் தன்ர பாட்டுக்கு வந்திட்டு போய் கொண்டே இருக்கும் என்பது இங்கே பழம் திண்டு கொட்டை போட்ட பெரிசுகளுக்கு தெரியாமலா இருக்கும். கொஞ்சம் சொல்லிக் குடுங்கப்பா ...... -
ராமநாதபுரம் நாட்டுப்படகு - விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மோதல்
சாமானியன் replied to பிழம்பு's topic in தமிழகச் செய்திகள்
உள் வுட்டுக்கே இன்னா மாரி கேப்மாரித் தனம் பண்ணுற பய புள்ள நம்மல எல்லாம் என்ன விட்டு வைக்கவா போறான் -
எங்கள் சிந்தனைகளில் சில அடிப்படை மாற்றங்கள் தேவையோ தெரியவில்லை. எமது தமிழ் மக்களில் அதிகம் பேருக்கு சிங்கள மொழியில் பாண்டித்தியம் இருந்திருந்தால் இந்த பிரச்சினைகள் எல்லாம் எப்பவோ தீர்ந்திருக்குமோ. பிரச்சினை தருபவனின் மொழியில் அவனுடன் தொடர்பு கொள்வது அரைவாசிப் பிரச்சினையை அங்கேயே தீர்த்துவிடும். இல்லாவிடில் அவனுடைய கோட்டைக்கு போய் தான் தீர்வு காண வேணுமெண்டாலும் அவனின் மொழியில் பாண்டித்தியம் அவசியம் ஆகின்றது . சாத்திரியின் " அட இவன்தானா" கதையும் ஞாபகத்தில் வந்து செல்கிறது ...
-
அபாயா ஆடையால் திருகோணமலை இந்து கல்லூரியில் சர்ச்சை
சாமானியன் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
காலையும் மாலையும் கடவுளை வணங்கு என்று சிறுவயத்தில் அறிந்ததை இன்றளவும் கைக்கொள்கிறேன். காலை வணக்கம் செலுத்தி அணியும் திருநீறு அலுவலகத்திலும் தொடர்ந்திருக்கும் தானாக மறையும் வரை- ஒருவரும் ஒன்றும் செல்வதில்லை.. இதே இது, இப்ப நான் ஒரு கருப்பு Over all ஐ தலை இலிருந்து கால் வரை போட்டு கண்கள் இருக்கும் இடத்தில் இரண்டு ஓட்டை மாத்திரம் விட்டு அலுவலகம் போனேன் என்றால், உடுப்பு தெரிவு எனது உரிமை என்றும் பினாத்தினேன் என்றால், அடுத்தநாள் சீட்டு அநேகம் கிழியும். உனது கைத்தடியை சுழற்ற உனக்கு உரிமை இருக்கு ஆனால் நன்றாக கவனித்துக் கொள் - அது மற்றவரின் மூக்குக்கு அருகே போகக் கூடாது .. தடியை வூட்டில வெச்சி என்ன பலாய்க்கும் சொழட்டிக்கோ ஆனா ஏன்யா, ஏம்மா, சண்முகாவிலே வந்து தான் சுழட்டுவேன் அப்பிடீன்னு அடம்ஸ் பொடிச்சுக்கிறே … எங்க மக்காள் சேர்த்து வச்ச அறிவெல்லாம் பொய்த்து - சொம்மா பெனாத்திட்டிருக்கீங்க…. -
அபாயா ஆடையால் திருகோணமலை இந்து கல்லூரியில் சர்ச்சை
சாமானியன் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
சினிமாவில் நாயகியை சீனிமாவாய் ருசிப்பது போல் எனை ரசிக்க வேண்டுமென்று எண்ணுகிறாயா எனக் கேட்பாள் அடுத்த இன ஆடை பற்றி எடுத்தெறிந்து ஏச மாட்டாள் உடுத்திருக்கும் தன் உடையை தடுத்தவரை தான் எதிர்ப்பாள் அடுத்த இன ஆடை பற்றி எடுத்தெறிந்து ஏச மாட்டாள்