-
Posts
1807 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by Sasi_varnam
-
இசைஞானி இளையராஜா இசையமைக்க வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே சாதி வர்க்க வேறுபாடு, பிராமண ஆதிக்கம் பற்றி பல பாடல்களில் தெளிவாக இசை / பாடல் மூலம் பதிவுசெய்துள்ளார். உதாரணம் - ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது, மாமே வூடு மச்சி வூடு, பாடறியேன் படிப்பறியேன் இன்னும் பல. இந்த கட்டுரையில் எழுதியிருக்கும் விடயங்கள் மிகவும் நுணுக்கமான சுராசியமான விடயங்கள். https://www.huffpost.com/archive/in/entry/to-appreciate-ilaiyaraaja-s-anti-caste-politics-you-have-to-listen-to-his-music_in_5eda5614c5b6817661649db5
-
ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து
Sasi_varnam replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
நேர்மையான யதார்த்தமான கருத்து உடான்ஸ் ஜீ... and I Like it. -
ராஜபக்சக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடித்த ரணிலுக்கே வெற்றி!_மனோகணேசன்!
Sasi_varnam replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
எந்த முடியாண்டி வந்தாலும் நாட்டுக்கோ நமக்கோ ஒன்னும் ஆகப்போவது இல்ல.. -
என்னய்யா.. மைத்திரிபால சிறிசேனாவை விட்டு விட்டீர்களே
- 51 replies
-
இயக்குநரும் நடிருமான பிரதாப் போத்தன் காலமானார்
Sasi_varnam replied to கிருபன்'s topic in வண்ணத் திரை
கண்ணீர் அஞ்சலிகள் பிரதாப் சார் ... மூடுபனியில் உங்கள் நடிப்பு இன்றைக்கு வரைக்கும் இதயத்தை பிழியும் -
இளையராஜா எம்.பி ஆகிறார் - சாதனை, சர்ச்சைகளுடன் 50 வருட திரைப்பயணம்
Sasi_varnam replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
உங்கள் பெயரை கேட்டால் மனதில் இசை அருவியாய் பாயும் .... இன்று எனோ வெறுமையாய் உணர்கிறேன் -
சொல்ல வந்ததை தெளிவாக சொல்லுங்களேன் அண்ணா... இது அவர் அவர் குடும்பம் சார்ந்து எடுக்கும் முடிவு அதனால் இந்த ஆடம்பரங்கள் சரி அல்லது பிறர் இதில் கருத்து கூற ஒன்றும் இல்லை என்று சொல்கிறீர்களா?
-
கவி ஐயா... மனசை ஆசுவாசப்படுத்திக்கொளுங்கள். இங்கே கனடாவில் சொற்ப நாட்களுக்கு முன்னம் ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயாவின் செத்த வீடு மெகா மெகா (மிக.. மிக.. இதைத்தான் இப்படி எழுதினேன்) நிகழ்ச்சியாக செய்திருந்தார்கள். செத்தவரின் பிள்ளைகள் இங்கே வீடுவிற்பனை துறையில் கை நிறைய காசு பார்த்த கோஷ்டியாம். சரி இவரின் மரணச்சடங்கு எப்படி இருந்தது தெரியுமா? இதை எழுத எனக்கு கை கூசும் அளவுக்கு விஷயங்கள் இருக்கு. வீடியோ கூட இருக்கும் அதை இங்கே எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. இந்தியாவில் அரசியல் பிரமுகர்களுக்கு வைக்கப்படும் ஆளுயர கட்வுட் செத்தவருக்கு செய்யப்பட்டு பெரும் தொகை ஆடம்பர வாகன அணி ஒன்றில் அவை பொருத்தப்பட்டு வீதிகளை சுற்றிவர, அந்த வாகன அணியில் ரோல்ஸ் ராய்ஸ், 5ம் மேட்பட்ட லம்போர்கினி, மற்றும் விலைமதிக்கமுடியாத உயர் ரக வாகனங்கள், பிரிட்டிஷ் மகாராணி போவதை போன்ற 2 வெள்ளை குதிரை பொருத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை சரியட் வண்டி, ஆயிரக்கணக்கான பலநிறங்கொண்ட பிரெஷ் (நிஜப் பூக்கள்) அலங்காரம் செய்யப்பட்ட யாழ்ப்பாணத்து ஸ்டைல் பாடை, பாதைக்கு முன்னே கயானாக்காரர்களின் (இந்துக்களின்) பறைக்கு ஒத்த பாரம்பரிய இசை, வெள்ளை நிற ஆடை அணிந்த ஆண்கள் பெண்களின் அணிவகுப்பு.. இப்படியெல்லாம் நடக்க.. கடைசியில் இன்னும் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள் பாருங்கள் நமக்கு BP எகிறிட்டது!! 2 கூடைகள் நிறைய வெள்ளை புறாக்களை அந்த இத்துப்போன... ஸாரி... ஸாரி செத்துப்போன ஐயாவின் பிள்ளைகள் பறக்கவிட்டார்கள்... இன்னும் என்ன என்ன அசிங்கங்களை செய்தார்களோ ஆனால் ஒன்று செத்தவரை வைத்து "நன்றாக செய்தார்கள்". இன்னும் ஒரு கொசுறு தகவல் .. ஒரு வருசத்துக்கு முன்னம் கோவிட் காலத்தில் இதே செத்துப்போன ஐயாவின் பிறந்தானாலோ, கல்யாண நினைவு நாளோ எதோ ஒரு நிகழ்வுக்கு இப்படியான படாடோபமான ஒரு வீடியோ ரிலீஸ் செய்திருந்தார்கள். ஐயாவுக்காக இலங்கையில் இருந்து ஆட்டோ (முச்சக்கர வண்டி) தருவிக்கப்பட்டு, ஐயா ரஜினி ஸ்டைலில் "நான் ஆட்டோ காரன் ஆட்டோ காரன்" பாட்டுக்கு ஆட்டோ ஓட்டி, பிறகு ஒரு ஜீப் வண்டிக்கு தாவி, அங்கிருந்து இன்னும் ஒரு பாடல் பின்னணியோடு ஜீப்பை ஓட்டி சென்று, மூன்றாவதாக ஒரு ஆரேஞ் நிற லம்போகினி வண்டிக்கு தாவி அதை முடுக்கி ஓட்ட (பின்னணி இசை ஞாபகம் இல்லை) கடைசியாக பொன் கம்பளம் "ரெட் கார்ப்பட்" விரிக்கப்பட்ட ஒரு இடத்தில லம்போகினியை பார்க்கிங்க் செய்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரத்தியேக "பிரைவேட்" ஜெட் வண்டி ஒன்றில் அங்கே ஏற்கனவே அய்யாவின் வருகைக்கு காத்திருந்த அம்மாவோடு (இன்னும் ஒரு சினிமா பின்னணி இசையோடு) கைகோர்த்து அன்னநடை நடந்து இவர்களுக்காக கம்பீரமாக காத்திருந்த பளபளப்பான "பிரைவேட் ஜெட்" வண்டியின் படிகளில் ஏறி ஒரு பன்நெடும் அரசியல்வாதியை போல கைகாட்டி விடைபெறுவார். இந்த வீடியோ கண்ராவியெல்லாம் இன்னும் இணைய தளத்தில் இருக்கும். தேடி முடிந்தால் ஒட்டுகின்றேன். ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா ( அதுவும் கூட நிரந்தரம் அல்ல)
-
மரியோபுல் முற்றாக ரஷ்சியா வசம் வீழ்ந்தது.
Sasi_varnam replied to nedukkalapoovan's topic in உலக நடப்பு
உண்மைதான் ஐலண்ட், யாழ்களத்தில் நீண்ட வருடங்கள் பயணிக்கும் கருத்தாளர்கள் இருசிலரின் இப்படியான கருத்துக்கள் மிகவும் வன்மத்தன்மையோடும், அரசியல் தொலைநோக்கு அற்றதாகவே படுகின்றது. பார்க்க சகிக்கவில்லை. -
மரியோபுல் முற்றாக ரஷ்சியா வசம் வீழ்ந்தது.
Sasi_varnam replied to nedukkalapoovan's topic in உலக நடப்பு
கிருபன் யாழ்களத்து ஒரு சொச்ச கருத்தாளர்களின் அரசியல் தெளிவில்லாத, சல்லித்தனத்தை இதை விட மேலதிகமாக விமர்சிக்க முடியாது. நன்றி . -
பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Sasi_varnam replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
பல காரணங்களுக்காக கண்ணை மூடிக்கொண்டு, கையை கழுவிட்டு இருந்த தி.மு.க இப்போது எதுக்கு இந்த விடுதலைக்கான உரிமை கோரும் பேடித்தனத்தில் இறங்கியுள்ளார்கள்?? இவர்களது விடுதலை குறித்து நெடுமாறன் ஐயா, வைகோ போன்றவர்கள் செய்த கோரிக்கைகள், மேடை முழக்கங்கள் ஓய்ந்த நிலையில், சீமான் மேடை மேடையாக பேசி இந்த விவகாரத்தை வெகுஜன பேசுபொருளாக மாற்றியவர் என்பது மறுப்பதற்கு இல்லை. அதே நேரம் இதை நான் தான் செய்தேன் என்று சீமானும் உரிமை கோரவில்லை. பேரறிவாளன், அற்புதம் அம்மா அவர்களின் விடா முயற்சி முதல் காரணமாக இருந்தாலும், தோழர் செங்கொடி போன்றவர்களின் போராட்டமும் அ .தி.மு.கா வின் தொடர் கோரிக்கைகள் இவையும் காரணம். -
சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டதாகவும், உணர்ச்சிபூர்வமாக அஞ்சலி செலுத்தியதாகவும் கூட செய்திகள் வந்தன உண்மையா?
-
நாதம் அதில் இருக்கும் "Read 132 replies" இணைப்பை சொடுக்க ட்விட்டர் கணக்கு இல்லாதவர்களும் அதில் பதிந்துள்ள பின்னூட்டங்களை வாசிக்கலாம்.
-
என்னுடைய கருத்தையும் பதிவிடுகிறேன்: ஒட்டு மொத்தமாக "சிங்கள இனத்தவரை" நம்பி அவர்கள் மூலம் தமிழர் எமக்கு தேனும், பாலும் ஓடும்.. ஒழுகும் என்று எந்த ஒரு தமிழனும் எப்போதும் நினைக்கும் நிலையில் இல்லை. ஆனாலும் சில யதார்த்தங்களும் உண்டு. இன்றும் கூட சில மூத்த சிங்கள பத்திரிகையாளர்கள், சமூக செயட்பாட்டாளர்கள், மாணவர்கள் என்று பல தரப்பில் இருந்து தமிழர்களின் உரிமை பறிப்பு, அவர்களின் அழிவுகள் குறித்த ஆழமான பார்வையும், அதற்கான நீதிக்கான செயல்பாடுகளும் இன்றுவரை இருக்கத்தான் செய்கின்றன. இந்த மெல்போர்ன் நிகழ்ச்சிகூட எமக்கு ஒருவகையில் சாதகம் தான். இதன்மூலம் மீண்டும் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கருத்துக்கள், நியாயங்கள் பக்கம் பக்கமாக இங்கே எழுதுவதைவிட சொல்லப்பட வேண்டிய இடத்தில் சொல்லப்பட்டால் வெண்டும். மேலே உள்ள மெல்போர்ன் தொடர்பான செய்தியில் உள்ள பின்னூட்டங்களையும் பாருங்கள், அதில் கருத்திடும் சிங்களவர்கள் அந்த செயலை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் பாருங்கள். என்னை பொறுத்தவரை இதுகூட தேவைதான். கடமையை செய்... பலனை எதிர்பாராதே.
- 38 replies
-
- 10
-
-