Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1969
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Everything posted by Sasi_varnam

  1. அந்த லூசு மண்டையன் அருண் 'செத்தார்'த்தன் குழுவோடு சேர்ந்து கொண்டு நேரடியாக சொல்லுகிறான்... இதையே சிலர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியதைப்போல சொல்கிறார்கள் கபித்தான் .
  2. இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானதாக செய்தி !! 😥 செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது... இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றாராம் . இது உண்மையா தெரியவில்லை ...
  3. கந்தையா அண்ணா ... கவனம் பொடியனுவல் பக்கம் 9க்குள்ள உங்கள கொண்டு போக ட்ரை பண்ணுறாங்கள்!! 😂
  4. சமன் பிரசன்ன இவர் பாதாள கோஷ்டி நடத்துனர், தவிர ஒரு பெயர் தெரியாத சிங்கள அரசியல் கட்சியின் தலைவர் (அப்பே ஜன பல பக்க்ஷய) . சில வருடங்களுக்கு முன்னர் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியும் போட்டவர். ஒரு சில கொலை வழக்குகள் இன்னும் அப்படியே நிலுவையில் இருக்கிறது.
  5. ஆ... ஆ... ஆ.... அஸ்கு புஸ்கு அமால் டுமால்!! நீங்க 9ஆவது பக்கத்துக்கு ட்ரை பண்ணுறீங்க!!! இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை பாஸ். இதை கேட்டு சந்தோசமா இருப்போம் பாஸ்.
  6. 8 பக்கத்துக்கு நீட்டி, நீட்டி எழுதியதில் இருந்து சறுக்கி முதல் பக்கத்துக்கு வந்துள்ளீர்கள் . நல்ல மாற்றம்.
  7. 2009 இறுதி யுத்த முடிவின் பின், 15 வருட புலிகள் இல்லாத இந்த காலகட்டத்தில் போரை வென்ற, அடுத்தடுத்து பதவிக்கு வந்த "சிங்கள அரசியல்" இந்த நாட்டு சிங்கள மக்களுக்கு (தமிழர்களை விடுங்களன்) இன்றுவரைக்கும் செய்தது எதை? போராட்ட காலத்தில் வீட்டில் இருந்தவன் இப்போது ரோட்டில் பிச்சையெடுக்கிறான். தான் பதவிக்கதிரையில் அமர்வததற்கே 2019 இல், 263 பொது மக்களை தேவாலயம், நட்சத்திர ஹோட்டல், புனித நாள், பெருநாள் பார்க்காமல் குண்டு வைத்து தகர்த்து, சிதைத்த அரசியல் மாட்சி உள்ளவன், தமிழனுக்கு வெள்ளி தட்டில் வைத்து விடிவு, ஞாயம் வழங்கியதை போலவும் அதை எதோ நம்மவர்கள் புறங்கையால் தட்டி ஒதுக்கியதை போலவும் இங்கே கூவி கூவி 8 பக்க உரையாடலை நிகர்த்தியவர்களை நினைத்தேன். சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. புலிகளை விமர்சனம் செய்வதில் தவறு கிடையாது, ஆனால் அதில் நேர்மையாக இருக்க வேண்டும், அதற்கும் அப்பால் அந்த விமர்சனத்தின் நோக்கம் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
  8. விடுதலை புலிகளின் 40 வருட செயல் பாடுகளை தோல்வியில் முடிந்ததை போல திரைக்கதை வசனம் அமைக்கும் மாக்கள் கூட்டம் இதையும் தான் கொஞ்சம் கேட்கலாமே. தலைவர் கணிப்பின்படி ஒரு இளைய சமூகம் சரியாகவே சிந்திக்கிறது.
  9. வாங்கடா... வாங்கடா... வந்து வரிசையில வந்து அடிங்கடா... ஆனா ஒன்னு முடிவுல மாற்றமில்லை. SPB ஐயா , Y1, Charan, இப்படியானவர்கள் மேடைக்கு பின்னால் காட்டும் பந்தா நாங்கள் பார்க்காதாதா. நன்றி வணக்கம்!! 🤭
  10. இந்த பாட்டையெல்லாம் கேட்டதற்கு பின்பு, இப்போது வரும் எந்த பாட்டை கேட்டாலும் மனசில் ஒட்டவில்லை. காதோடு நுழைந்தது காதோடு போய்விடுகிறது !!! என்னுடைய இந்த மண்ணாங்கட்டி பிறப்புக்கு சிறப்பு சேர்த்த ஒருசில விடயங்கள் என நான் நினைப்பது. தமிழன் என்ற அடையாளம். ஈழ விடுதலை போராட்ட காலத்தில் உன்னதமான ஒரு தலைவனை, ஒப்பற்ற போராளிகளை சாட்சியமாய் பார்த்து வாழ்ந்தது. வள்ளுவன், பாரதி இப்படி சில படைப்புகளை நுனிப்புல் மெய்தது. இசைஞானி இளையராஜா, MSV ஐயா படைப்புகளில் கரைந்து போனது.
  11. இளையராஜா மிக கீழ்தரமான மனிதர். உங்கள் பார்வையில் "மேல்தரமான மனிதர்கள்" எப்படி எல்லாம் இருக்க வேண்டும்? எதாவது வரையறை, அளவுகோல் இருக்கிறதா? மேடை நிகழ்ச்சிகளில், டீவி ஊடகங்களில் மட்டும் "மேல்தரமாக" இருந்தால் போதுமா?
  12. ஐயா இளையராஜா .. உங்கள் பாடல்களை கேட்கும் எனக்கே கொஞ்சம் கர்வம் வருகிறது. ஆகவே உங்கள் பன்முக திறமைக்கு நீங்கள் எவ்வளவு கர்வமாக இருந்தாலும் உங்கள் ரசிகர்களுக்கு கவலை இல்லை. ஏனெனில் நாங்கள் உங்களிடம் இருந்து ரசிப்பது உங்கள் மெட்டமைக்கும், இசை அமைக்கும் விந்தையை, அது காலங்கள் கடந்து எங்கள் மனதுக்குள் நீங்கா இடம் பெரும் விந்தையை!!!
  13. இவர் சொல்லும் கருத்துக்கள் சரியாக இருந்தாலும், நான் நினைக்கிறன், நிராஜ் சொல்லவரும் சங்கீதா அண்ணா கேணல் சங்கீதனாக 2009 இல் மாவீரராகிவிட்டார். இணைப்பை பார்வையிடவும் https://eelamhouse.com/?p=2701
  14. நான் இந்த 3 வருடங்களில் பார்த்து கலந்து கொண்டு அனுபவித்த ஒன்று, தமிழகத்து இளைஞர்கள் எங்களவர்களை விடவும் மிக ஆழமாக, உணர்வுபூர்வாமாக எங்கள் போராட்ட ஞாயங்கள், சம்பவங்கள், போராட்ட வரலாறுகளை கற்று தெளிந்து தேவையான அரசியல் பற்றி பேசுகிறார்கள். (இது "டிக்டோக்கில்" லைக் வாங்க மட்டும் பேசிவரும் கூட்டமில்லை") இதே போல அரக்கர்கூட்டம், ஊப்பீஸ், ஆயிரம் பூக்கள் என கூட்டமாக எமது போராட்டத்தை அசிங்கப்படுத்தும் கைக்கூலிகளிடம் விவாதம் செய்து எங்கள் போராட்ட ஞாயங்களையும், வீரகாவியமான விடுதலை போராளிகளையும் அவர்கள் வாழ்வியல் பற்றியும் உரத்து பேசுகிறார்கள்!!! புலிநீக்க அரசியல்செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு வேதனையாகவோ, விவகாரமாகவோத்தான் இருக்கும்
  15. நீங்கள் இன்று இருக்கும் வீடு கூட ஒரு நேரத்தில் காடாகத்தான் இருந்தது, நிறைய மான், மரை, முயல், குயில் எல்லாம் சந்தோசமா உலாவின இடங்கள் தான் ... என்ன செய்யலாம்?
  16. நன்னிச் சோழன் உங்கள் கருத்துக்களில் இப்போதெல்லாம் ஒருவித வன்ம, காழ்ப்பு பாணி இருப்பதை போல தெரிகிறது. நீங்கள் எதோ ஒரு ஆர்வத்தில் அப்படி பதிவிட்டாலும், உங்கள் தாயகம், தேச விடுதலை நோக்கிய செயல்பாடுகளுக்கு சற்றே நெருடலாக இருக்கிறதை போல நான் உணர்கிறேன். தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னிக்க.
  17. சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. ம்ம்ம் அந்த சப்பிளை அனைத்தையும் ஷாப்பிங் பேக்கில் போட்டு அதை சொறிலங்கா ராணுவ முகாமுக்கு தவணைமுறையில் அனுப்பி வைத்ததே எங்கட நெடுக்கர் தான். 🙊
  18. வணக்கம் கவி ஐயா இப்போது நீங்கள் இணைத்த படமும் கூட எதோ Thumb Nail படமாகத்தான் காட்டுகிறது. படத்தை பார்க்க முடியவில்லை.😧
  19. ஐயா கவி அருணாச்சலம் போடும் எந்த ஒரு கேலிச்சித்திரங்களையும் பார்க்க முடியாமல் இருக்கிறதே அது ஏன்?
  20. இப்படியான வீடியோக்களை மறக்காமல் பார்த்து அங்கே ரணிலின் முகத்திரையை கிழிப்பது போன்று கருத்துக்கள் பின்னூட்டங்கள் எழுதுவது சிறப்பு. நேற்றிலிருந்து இன்றுவரை சுமார் 102K வியூஸ் கிடைத்துள்ளது. பெரும்பாலான சிங்களவர்கள் ரணிலை திட்டி தீர்க்கிறார்கள்
  21. சிறப்பு !! தனிக்காட்டு ராஜா. ஆர்வத்தோடு வாசிக்கத்தூண்டும் விதத்தில் கதையை சொல்லி இருக்கிறீர்கள். யாழ்களத்துக்குள் இன்னும் ஒரு படைப்பாளி ♥️
  22. போராளி, தளபதி, லெப்டினன், கேர்ணல், மேஜர், அம்மான் போன்ற வார்த்தைகள் எவ்வளவு உயரிய மாண்பில் வரித்துக்கொண்ட சமூகம் இன்று இந்திய சாக்கடை அரசியல் பேச்சிலும் கூட சர்வ சாதாரணமாக பாவித்து விட்டு போவது மிகவும் கவலைக்குரியது. சீமானின் அரசியலை பேசும் களத்துக்கு தடைவித்தித்த யாழ் இந்த திரியை இவ்வளவு தூரம் வளர்த்து விடுவது என்ன ஞாயம். என்னை பொறுத்தவரை சீமானோ இல்லை அவர் ஜாமானோ இல்லை பல பொண்டாட்டிகலை வைத்திருந்த தி-ருத்த மு-டியாத க-ழுதைகளோ எல்லாமே நாறிப்போன கூவம் தான்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.