விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்துடிப்பு ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜன்..!!
விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்தில் வலிப்பெடுக்கின்ற உணர்வுத் துடிப்புக்களை தன்னின மக்களின் செனநயக, சுயநிர்ணய அரசியல் அபிலாசைகளை இயங்கியல் நிலையில் கருப் பொருளாகக் கொண்டு பேனா எடுத்து யதார்த களமுனையில் சிங்கள பேரினவாத கருத்தியலுக்கு எதிராக தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பிய உன்னத ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜனின் 6வது நினைவுதினம் இன்றாகும்.
இவன் மரணிக்கவும் இல்லை, மண்ணாகவும் இல்லை ஈழவிடுதலைப் போராட்டவியலில் தன்னை முழுமையாக அர்பணித்து தன்னின மக்களின் விடியல்களுக்காக எத்தனை இரவுகள் கண்விழித்திருக்கின்றான்.
ஒரு பேனாப்போராளி அடக்கி ஒடுக்கப்பட்டு எந்தவித உரிமைகளும் கொடுக்கப்படாமல் துன்புறுத்தப் பட்டுக் கொண்டு இருக்கும் தன்னின மக்களின் நியாயப்பாடுகளை உலக அரங்கில் ஆற்றுகைப்படுத்த முனைகின்றான்.
சிங்கள வல்லாதிக்க சத்திகளில் திட்டமிட்ட இனப் படுகொலைகளையும், அவர்களின் அரசியல் அசிங்கங்களையும் வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தி மனித குலமீட்புக்காக அயராது போராடுகின்றான்.
ஊடகவியலாளன் நிமலராஜன் சத்தியத்தின் வேள்ளியில் சரித்திர நாயகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான். இவன் கடந்து வந்த பாதைகளின் சுவடுகளை மீட்டுப் பார்போமானல்… செம்மணிகளில் எங்கள் பிஞ்சுகள் சிங்கள காட்டுமிராண்டிகளினால் கதற கதறக் கற்பலிக்கப்பட்டு குற்றுயிராய் புதைகுழிக்குள் புதைக்கப்பட்ட துன்பியல் நிகழ்வினை சர்வதேசத்திற்கு வெளிச்சமிட்டுக்காட்டியவன்.
சிங்கள கூலிப்படைகளின் ஈவிரக்கமற்ற செம்மணிப் படுகொலைகளையும் பலமனிதப் புதைகுழிகளையும், தோண்டி எடுக்கப்பட்ட சடலங்களையும் நீதியின் முன் நிறுத்திய பெருமை இவனையே சாரும்.
விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்த காலத்தில் இடம் பெற்ற போராட்டங்களையும், களமுனை வீரசாதனைகளையும் தமிழ்மக்களின் உள்ளக்கிடக்கைகளையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டினான்.
அத்தோடு நின்றுவிடாமல் எமது போராட்டத்தின் நியாயங்களை தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற எம் இன உறவுகளுக்கு உறவுப்பாலமாக திகழ்ந்தான்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள ஆக்கிரமிப்பு படைகளினால் அரங்கேற்றப்பட்ட வன்முறைகளையும், கொலை வெறியாட்டங்களையும் நிமல் மும் மொழிகளில் புலமை சார்ந்தவனாக இருந்ததினால் பி.பி.சி ஊடகத்தினுடாக சர்வதேச அரங்குகளில் ஓங்கி ஒலிக்கச் செய்தான்.
மானிட இருப்பிற்கான தேடல்கள் முற்றாக முடக்கப்பட்டு மனித நேயத்தையும், மாண்பினையும் சிதைத்து தமிழர்களின் பிணத்தின் மேல் ஆட்சிசெய்து கொண்டிருக்கும் இரத்த வெறிபிடித்த சிங்களப் பேரினவாதத்தின் இரத்த களைபிடித்த பற்களை பிடுங்கி எடுத்தான்.
தமிழ் சமூகத்தை அதனுள் இயல்பாகக் காணப்படும் முரண்பாடுகளை கூர்மை அடையச் செய்வதன் மூலம் அடக்கி ஆளலாம் என நவீன சிங்களப் பேரினவாதிகள் நம்புகின்றார்கள்.
தமிழ் மக்களை பட்டி தொட்டியெங்கும் இன்று அரசியல் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எம்முன் உள்ள மாபெரும் வரலாற்றுக் கடமையாகும்.
என்ற நிலைப்பாட்டினை கொண்டு இருந்தான் நிமலராஜன். பல்துறைசார்தவர்களுடன் தனது நட்பினை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் கருத்தியல்களை செவிமடுத்து தமிழின விடுதலை பற்றி சிந்திக்கதலைப்பட்டான்.
காலத்தின் தேவைகருதி எதிர்காலக் கனவுகளை மறந்து ஒட்டுமொத்த தமிழ் இனத்தினுடைய எதிர்பார்ப்புக்களை தன் கண்முன் நிறுத்தினான்.
நிமலுடைய தேசியப்பற்றும், புலமைசார்ந்த ஆழமான அரசியல் அறிவையும், ஊடகப்பலத்தையும் சிதைப்பதன் மூலம் தமிழ் மக்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்கிவிடலாம் என்ற திட்டம் சிங்கள புலனாய்வாரள்களின் மூளையின் நரம்புகளில் தட்டுப்பட்டது.
சிங்களப் பலனாய்வாரள்கள் தமிழ் தேசியத்தின் இருப்பிற்கு சவால் விடத் தொடங்கினார்கள்.
இதற்கான திட்டதை நடைமுறைப்படுத்துவதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பி.டி.பி) தெரிந்து எடுத்தது அவர்களிடம் தமிழ் தேசிய குரல் வலையை அறித்து எறியும் படி சொல்லப்பட்டது.
குறுகிய அரசியல் நலன்களுக்காக விலைபோகும் நயவஞ்சகர்களின் நாசகார கொடூர வெறியாட்டம் 2000.10.19அன்று அதிகாலைப் பொழுது யாழ்ப்பாணம் ஊரடங்கினால் முழ்கியிருந்த சமயத்தில் இயந்திரத் துப்பாக்கியுடன் நிமலின் வீட்டுக்குள் நுளைந்து நிமலை நோக்கி சமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டது நிமல் இரத்தம் தேய்ந்த உயிரற்ற உடலாய் தரையில் விழுந்து கிடந்தான்.
செய்தியே சுவாசமாய் வாழ்ந்தவன் சுவாசம் இன்றி கிடந்தான்.
இவன் மனைவியின் கண்கள் குவலை மலர்கள் இல்லை குங்குமம் கரைந்ததால் குமுறிய கண்ணீர் தடாகங்கள், தாலி இழந்த கழுத்துக்கள், பூவை மறந்த கூந்தல்கள் காதோரம் பாடும் மௌமொளிகள் ஆயிரமாயிரம்…
நிமலின் இரத்தத்தில் குளிர்காய்ந்த சிங்கள தேசம் இவனைத் தொடர்து பலதேசிய உணர்வாரள்களையும், ஊடகவியலாளர்களையும் அழிக்கத் தொடங்கியது ஜி.நடேசன், டி.சிவராம் (தராக்கி), ச.சுகிதராஜ் , சி.சிவமகாராஜா எனத்தொடர்ந்து கொண்டே போகின்றதைக் காணக்கூடியாதக இருக்கின்றது.
சிங்கள மேலாண்மைவாதிகளின் கருத்துப்படி தமிழின உணர்வாளர்களின் கருத்தியல்களில் கத்தி வைப்பதன் மூலம் அவர்களுக்கிடையிலான கூட்டுணர்வைத் தகர்க முடியும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டு இருக்கின்றார்கள்.
இலங்கையின் கருத்தியல் வலுச் சமநிலை தமக்குச் சார்பாக இருக்கின்றது என சிறிலங்கா அரசும் அதன் பின்னிற்கும் சிங்கள பௌத்த மேலாண்மையாளரும் திடமாக நம்புவார்களேயானால் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை காண பின்னடிப்பார்கள் என்ற உண்மை தெளிவாகின்றது.
நிமல்ராஜன் பாடுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.
இச்செயற்பாடனது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திடையேயும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்த செய்யப்படவேண்டும் குற்றவாளிகளுக்கான தண்டணை வழங்குவதன் மூலம் இனியும் இவ்வாறான பாடுகொலைக்கலாச்சாரத்தை தடுக்கமுடியும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்பாகக இருக்கிறது.
ஜெ . டானியல் ( யாழ்ப்பாணம் ) கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை.
http://www.nerudal.com/content/view/3061/38/