Jump to content

Search the Community

Showing results for tags 'தமிழீழம்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழீழ விடுதலைப்போரின் போது தமிழீழ விடுதைப்புலிகள் மற்றும் ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஆகிய இயக்கங்களில் போராளிகளாகயிருந்து வீரச்சாவினைத் தழுவி மாவீரராகிய முஸ்லிம்கள் 1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 --> படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. --> தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 2) வீரவேங்கை லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்) காத்தான்குடி, மட்டக்களப்பு. 16.11.1962 — 24.12.1986 --> மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 3) வீரவேங்கை நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 15.03.1963 — 30.12.1987 --> மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 4) வீரவேங்கை சாபீர் (சரிபுதீன் முகமது சாபீர்) தியாவெட்டுவான், மட்டக்களப்பு. 13.05.1988 --> நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு. 5) வீரவேங்கை ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 28.03.1968 — 05.08.1989 --> மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு. 6) வீரவேங்கை ஆதம் (எஸ்.எம். ஆதம்பாவா) சாய்ந்தமருது, அம்பாறை. 21.12.1967 — 03.01.1990 --> மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு. 7) வீரவேங்கை அலெக்ஸ் (அகமது றியாஸ்) மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. 23.01.1970 — 04.05.1990 --> அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 8 ) வீரவேங்கை கபூர் (முகமது அலியார் முகமது சலீம்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 11.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு. 9) வீரவேங்கை தாகீர் (முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலன்னறுவை. 29.04.1972 — 11.06.1990 --> மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 10) வீரவேங்கை அன்வர் 15.06.1990 --> அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 11) வீரவேங்கை தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 12. வீரவேங்கை ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 13) வீரவேங்கை அர்ச்சுன் ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 14.06.1990 --> திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 14) வீரவேங்கை ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்) ஏறாவூர், மட்டக்களப்பு. 01.09.1990 --> முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு. 15) வீரவேங்கை மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. 18.06.1990 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 16) வீரவேங்கை ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 20.10.1970 — 19.06.1990 --> அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 17) வீரவேங்கை தர்சன் (அப்துல்காதர் சம்சி) 13.06.1990 18) வீரவேங்கை நகுலன் (ஜுனைதீன்) அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. 26.06.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 19) வீரவேங்கை அகஸ்ரின் (சம்சுதீன் அபுல்கசன்) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.08.1971 — 27.10.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 20) வீரவேங்கை நசீர் (சம்சுதீன் நசீர்) ஒலுவில், அம்பாறை. 19.02.1960 — 17.02.1989 --> மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 21) வீரவேங்கை பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. 08.01.1973 — 22.06.1989 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 22) வீரவேங்கை அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை. 06.12.1989 --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாம்மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 23) வீரவேங்கை சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை. 18.08.1972 — 06.12.1989. --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் தேசவிரோத கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 24) வீரவேங்கை சந்தர் எ சுந்தர் (அகமது லெப்பை செப்லாதீன்) வேப்பானைச்சேனை, அம்பாறை. 25.02.1973 — 25.05.1990 --> அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 25) வீரவேங்கை ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 26) வீரவேங்கை இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. 16.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 27) வீரவேங்கை கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.07.1990 28) வீரவேங்கை கமால் மட்டக்களப்பு 07.06.1990 29) வீரவேங்கை கசன் (ஆதம்பாவா கசன்) மூதூர், திருகோணமலை. 05.11.1989 --> முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு. 30) வீரவேங்கை சலீம் 03.07.1987 --> அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 31) வீரவேங்கை ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. 08.04.1972 — 15.06.1990 --> திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 32) வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. 17.06.1990 --> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு. 33) வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 14.06.1990 --> (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 34) வீரவேங்கை டானியல் (கனீபா முகமது ராசீக்) திருகோணமலை. 23.06.1970 — 22.06.1990 --> திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 35) வீரவேங்கை நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை. 19.01.1972 — 27.07.1990 --> திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு. 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்) யாழ்ப்பாணம். 10.05.1966 — 25.08.1986 --> யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு. 37) வீரவேங்கை ரவீஸ் ராமநாதபுரம், கிளிநொச்சி. 08.08.2006 38)வீரவேங்கை குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 39) வீரவேங்கை பர்ஸாத் செட்டிக்குளம், வவுனியா 10.06.1990 40)வீரவேங்கை ரகுமான் 08.05.1986 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 41) வீரவேங்கை ரகீம் 08.05.1986 42) வீரவேங்கை கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் 19.03.2007 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 43) வீரவேங்கை தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 01.01.1983 - 19.10.2000 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு. 44) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம் 06.05.1978 - 26.06.1999 --> மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு. 45) வீரவேங்கை பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா 04.05.1969 - 15.06.1990 --> வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 46) வீரவேங்கை நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு. 47) வீரவேங்கை அருள் (மேலதிக விரிப்பு கிடைக்கப்பெறவில்லை) மன்னார் 48) வீரவேங்கை மருதீன் எ முகமது (சந்திரயோகு மருத்தீன்) உயிர்த்தராசன்குளம், மன்னார் 25.10.1965 - 15.10.1987 --> யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 49) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி காதம்பவா) அக்கரைப்பற்று, அம்பாறை. 16.10.1963 - 07.06.1987 50) வீரவேங்கை கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு. 51) வீரவேங்கை குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி. 26.11.1988 --> யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 52) வீரவேங்கை கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை. 27.04.1988 --> யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. 53) வீரவேங்கை அசீம் அஷாத் 54) 2ம் லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்) நிலாவெளி, திருகோணமலை. 17.05.1972 — 06.02.1990 --> திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு. 55) லெப். ஜெமில் (கரீம் முஸ்தபா) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 56) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா 15.09.1990 --> வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு. 57) லெப் அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா 14.05.1975 - 05.11.1995 --> யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு. 58) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்) ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு 01.10.1978 - 07.04.1998 --> கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு --> ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு. 59) கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) அக்கரைப்பற்று, அம்பாறை. 12.06.1959 — 07.01.1987 --> யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. 60) கப்டன் குட்டி எ தினேஸ் (முகமது அலிபா முகமது கசன்) பேராறு, கந்தளாய், திருகோணமலை. 28.04.1987 --> திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 61) கப்டன் நசீர் சாளம்பைக்குளம், வவுனியா 00.11.1990 62) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா) 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு. 19.06.2007 --> யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 63) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் (காதர்முகைதீன் நஜீம்கான்) முல்லைத்தீவு 29.09.2008 --> அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு. --> இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும். 64) லெப். கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு 02.04.2009 --> ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. --> இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் அண்ணன் என்றும் அறிந்தேன். சரியாகத் தெரியவில்லை. 65) ஈரோஸ் மாவீரர் நியாஸ் மன்னார் 11.07.1986 --> தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு 66) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம் (அப்துல் மானாஃப் முகம்மது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 67) ஈரோஸ் மாவீரர் கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 68) ஈரோஸ் மாவீரர் ரசிட் இயற்பெயர் அறியில்லை திருகோணமலை 26.08.1989 --> திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு 69) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின் இயற்பெயர் அறியில்லை அக்கரைப்பற்று, அம்பாறை 09.11.1989 ------------------------------------------------- தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் இசுலாமியர்கள் மாவீரராகினர் என்றும் அவர்களின் பெயர்க்குறிப்புகள் புலிகளால் மறைக்கப்பட்டது என்ற சோனக அரசியல்வாதிகளின் பொய்ப் பரப்புரையினை முறியடிப்பதற்காகவே இதை நான் தொகுத்துள்ளேன். ஒரு 5-10 விடுபட்டிருக்கும். அவையள் எல்லோரும் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த போராளிகள் ஆவர். இவர்களோடு ஓரிரு ஆதரவாளர்களும் பிடிபட்டு கொல்லப்பட்டதாக என்னால் அறியக்கூடியதாக உள்ளது. அதே நேரம் 1990ம் ஆண்டு பல ஆதரவாளர்கள் தென் தமிழீழத்தில் பிடித்துச் சாக்கொல்லப்பட்டனர். ஆனால் அன்னவர்களின் பெயர்களை என்னால் அறிய இயலாமல் உள்ளது. இதை தேடியெடுத்து என்பின் ஆவணப்படுத்துவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ------------------------------------------------ உசாத்துணை: மேற்கண்ட தகவல்கள் யாவும் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டவையாகும். http://eelamheroes.com/ http://veeravengaikal.com/ https://m.facebook.com/774278089313609/photos/a.774933562581395/1774614085946666/?type=3&source=57&__tn__=EH-R ஈழநாதம்: 17/09/1990 ஈழநாதம்: 17/06/1990 தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
  2. நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான். அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கும் யாழ்கள கருத்து நாகரீகத்துக்கும் உதவட்டும் என்ற நோக்கம் தான். தாயகத்தில் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான காணொளிகளையும் ஆய்வுகளையும் கருத்தாடல்களையும் இதில் இணைப்போம். ஆரோக்கியமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் விவாதிப்போம். மக்களுக்கு கொண்டுசேர்ப்போம். பிரதேசவாதமில்லாத சாதியவாதமில்லாத கருத்துகளும் காணொளிகளும் வரவேற்க்கபடுகின்றன. இது ஒரு பொறிதான். அணைவதும் எரிவதும் உங்கள் கையில். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
  3. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "இதுவரை ஈழத்தமிழர்கள் எவரும் சிரித்தது கிடையாது! நாம் அழுதிடும் பொழுது பெருகிய கண்ணீர் அளவுகள் கிடையாது! இனிமேல் அழுதிட விழியில்லை - படும் இழிவுகள் சொல்லிட மொழியில்லை! தனியே பிரிந்திட விடவில்லை - அட தமிழருக் கானதைத் தரவில்லை!" --> "விடுதலை எவரும் தருவதுமில்லை" பாடலிலிருந்து... "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  4. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(Hello)….. வணக்கம் தோழர்களே.. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உள்நாட்டில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களே பற்றியே... நீங்கள் எல்லோரும் இதற்கு முதலில் என்னால் ஏற்கனவே எழுதப்பட்ட விடுதலைப்புலிகளின் கடற்படையான கடற்புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு போரின் போது பயன்படுத்தப்பட்ட தரைப் கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் பற்றி வாசிக்கவில்லையெனில் அவற்றை வாசித்து விடுங்கள்.. கொழுவிகள்: கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் எல்லாம் மிகச் சொற்பமானவையே. அவர்களால் பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களைப் பற்றிய தகவல் எனக்கு பெரும்பாலும் கிடக்கவில்லை. அவற்றின் படங்கள் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளன.. கிடைத்த தகவல் எல்லாம் பல்வேறு இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். ஒருசிலது மொழியாக்கம் செய்யப்பட்டவையாகும். இயன்றளவு முயன்றும் திரட்டியிருக்கிறேன். வாசித்துப் பார்த்து கருத்துக் கூறுங்கள். சரி, வாருங்கள் கட்டுரைக்குள் போவோம்…….. கூடுதல் தகவல்கள்: https://yarl.com/forum3/topic/258290-புலிகளின்-உள்நாட்டு-உற்பத்தி-சேணேவிகள்artillery-மற்றும்-உந்துகணைகள்-ஆவணம்/ நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலகட்டம் அது. புலிகளிடம் ஏராளமான ஆய்த மானுறுத்தம்(manufacture) தொழிற்சாலைகளும் உலகளாவிய நாடுகளிடம் இருந்து ஆய்தங்களை கொள்வனவு செய்து படித்தறிந்து நிறைந்த அனுபவங்களை பெற்றிருந்த காலம். ஏற்கனவே 80 களின் இறுதியில் புலிகள் பசீலன் ஏன்னும் ஓர் ஆய்தத்தையும் விளைவித்திருந்தனர். எனவே தாயகத்திலையே பெரும்பாலான கருவிகளை விளைவிக்கும் பொருட்டு தொழிற்சாலைகளை உருவாக்கினர். 4ஆம் கட்ட போரில் புலிகளின் பெரும்பாலான கப்பல்கள் ஆய்தங்களை தரையிறக்குவதற்கு முன்னரே கடலில் வைத்து அழிக்கப்பட்டன. இவ்வளவு ஏன் தமிழீழக் கடல் எல்லை மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் நடமாடக்கூடிய உலகளாவிய கடற்பரப்பில் வைத்தே ஐநா விதிமுறைகளுக்கு எதிராக இந்திய அமெரிக்க வல்லரசுகளின் உதவியுடன் புலிகளின் பல கப்பல்கள் அழிக்கப்பட்டன. இதனால் தங்களுக்கு ஏற்பட்ட ஆய்த வெடிபொருள் பற்றாக்குறையைப் போக்க புலிகள் உள்நாட்டு ஆய்த மானுறுத்தத்தைப் பெருக்கினர். அதற்காக சிங்களம் தமிழரை அழிக்க வீசிய குண்டை சிங்களத்திற்கே வீச முடிவெடுத்தனர் புலிகள். மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் என்னும் தொடர் கட்டுரையிலிருந்து… ' வன்னி பிரதேசங்கள் எங்கும் சிறிலங்கா படையினரின் கிபீர், மிக் வானூர்திகள் நாளும் பல தடவைகள் வந்து குண்டுகளை வீசி செல்லும். சுமார் இரண்டு கிபீர் வானூர்திகள் ஒரு தடவை தாக்குதல் நடத்த வந்தால் சுமார் 250 கிலோ நிறையுடைய 8 குண்டுகளை எடுத்துவந்து வீசும், அல்லது பெரும் அழிவை ஒரே இடத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் 500 கிலோ நிறையுடைய 4 குண்டுகளை எடுத்துவந்து வீசும் .இவ்வாறு வீசும்போது ஒவ்வொரு தடவையும் குறைந்தது ஒரு குண்டாவது வெடிக்காமல் போகும் சாத்தியம் இருந்தது . அதன் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்தோ அல்லது அதன் முனை சரியாக விழுந்து மோதாமை போன்ற சில காரணங்களால் குண்டுகள் வெடிக்காமல் போவதுண்டு. இவ்வாறு குண்டுகள் வீசும்போது வீசிய குண்டுகளையும் வீசிய இடங்களையும் கணக்கு வைக்கும் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பிரிவினர் வெடிக்காத குண்டுகள் அறிந்து வீசப்பட்ட இடங்களுக்கு சென்று அவற்றை எடுத்துவந்து அவற்றில் இருக்கும் வெடிமருந்துகளையும் உலோகங்களையும் பிரித்தெடுத்து பட்டறைகளுக்கு அனுப்புவார்கள். சுமார் 500 கிலோ குண்டு வெடிக்காத பட்சத்தில் அதிலிருந்து பல இலக்கம் பெறுமதி வாய்ந்த வெடிமருந்தையும் உலோகங்களையும் எடுக்க முடியும்.இந்த மருந்துகள் உடனடியாக பட்டறைகளுக்கு எடுத்துசெல்லபட்டு எறிஅகணைகளாகவும் கைக்குண்டுகலாகவும் பல்வேறு வெடிபொருட்களாகவும் உருவாக்கப்படும். எனவே இவ்வாறு சிறிலங்கா வான்படை வீசுகின்ற குண்டுகளை கண்டெடுத்து அவற்றின் மருந்துகளை பிரித்தெடுத்து அவற்றை தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கும் படைபிரிவோன்று இதற்கென இயங்கிகொண்டு இருந்தது. இவ்வாறு வெடிக்காத குண்டுகள் முலம் அதிகளவில் அணியமாக்கப்பட்டது கைகுண்டுகள்தான். ' கைக்குண்டுகளோடு புலிகள் மேலும் பல வகைவகையான விதம்விதமான ஆய்தங்களையும் விளைவித்திருந்தனர். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கப்போகிறோம். மின்சார வெடியுடை 🔥(Electric Suicide vest)🔥 20 ஆம் நுற்றாண்டில் தமிழரின் புதுப்புனைவு(invention) இந்த உலகிலே முதன்முதலில் மின்சாரத்தில் இயங்கும் வெடியுடையினை புதுப்புனைந்தவர்கள் விடுதலைப் புலிகளே.. அவர்கள் இதனை தங்கள் விடுதலைப் போராட்டத்திற்காத்தான் மானுறுத்தியிருந்தார்கள்(manufacture). அவர்களிடம் இருந்துதான் உலகம் இதனைக் கற்றுகொண்டது. ஆனால் உலகின் ஏனைய இயக்கங்கள் இதனை அழிவிக்குப் பயன்படுத்தின! இது புலிகளின் தவறல்ல. அவற்றினை புதுப்புனைந்ததோடு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு வகைகளை விளைவித்து(produce) தங்களின் ஆட்சிக்காலத்தில் முடிசூடா மன்னர்களாய்த் திகழ்ந்தவர்களும் விடுதலைப் புலிகளே என்பது மறுக்க முடியாத உண்மை. தாங்கள் விளைவித்த இந்த ஆய்ததிற்கு அவர்கள் சூட்டிய பெயர் 'Charger - சாச்சர்' என்பதாகும். இதைக் கொண்ட உடையின் பெயர் 'வெடியுடை ' என்பதாகும். இவற்றை 'ரங்கன் ஜக்கட்' என்றும் அழைப்பர் (புலன கிட்டிப்பு:புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan. ஏன் என்பதற்கான விளக்கம் 'ரங்கன் தடைவெடி' பகுதியில் உண்டு). மேலும், இதை 'கிளைமோர்' என்றும் வடிவத்தின் அடிப்படையில் விளிப்பதுண்டு. சரி, இனி இவ்வெடியுடையின் பல்வேறு வடிவங்களைக் காண்போம்: முதலில், புலிகளின் வெடியுடையினை உடலில் எங்கெலாம் அணியலாம்? பெண்கள்: மார்பகம் இடை மரும பகுதி ஆண்கள்: நெஞ்சு இடை இவற்றில் இரு வகையுண்டு.. இலக்கினை அழிப்பதற்காக காவிச்செல்லும் சார்ச்சர் கொண்ட வெடியுடை. அடுத்து தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர். இது சதுர வடிவில் இருக்கும். ஆதாரம்: 'என் மகள் ஒரு பயங்கரவாதி(My daughter is a terrorist)' 'தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர்' கரும்புலிகள்/அதிரடிப்படைஞர் எதிரியின் படைத்தாவளத்தை தாக்க செல்லும்போது இதை 2 விதமாய் இயக்கி வெடிக்க வைப்பர். மாந்தனால் இயக்கப்பட்டு குறிப்பிட்ட நொடிகளில்(இடத்திற்கு ஏற்றாற்போல் நேரம் வேறுபடும்) வெடிக்குமாறு செய்யப்பட்டவை. அவை இயக்கப்பட்டதும் (இழுத்துவிடப்பட்டதும்), நேரக்கணிப்பி குறித்த நொடிகளுக்கு பின்னோக்கி ஓடும்; அப்போது அதன் எண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். '00' வந்ததும் ஒரு நீல நிற ஒளி ஒன்று இந்த சாச்சர் இழுக்கப்பட்ட இடத்தில் ஒளிரும். மறுகணமே வெடித்துவிடும். 'கருவேங்கை உடலில் நீல நிற ஒளியோடு '00' என்று தெரிவதை நோக்குக | படம்: எல்லாளன் திரைபப்டத்திலிருந்து' 'கரும்புலியின் நெஞ்சில் நேரக் கணிப்பியை காணவும்' ஓடி வெடிக்கும் சமநேரத்தில் அதை உடனடியாக வெடிக்க வைப்பதற்காக(இது ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிரி வந்தால் என்ன செய்ய?) மற்றொரு கட்டுப்படுத்தியும் இருக்கும். அது கையால் இயக்குவது. அண்ணளவாக ஒரு சாண் உயரத்தில் உருளை வடிவினதாக இருக்கும். அது சாச்சரோடு கம்பி மூலமாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பக்கத்தில் ஒரு ஆளி(switch) போன்ற 'அழுத்தி' இருக்கும். அது 'சொட்டுக்கோல்' போன்ற வடிவத்தில் இருக்கும். அதை பெருவிரலால்தான் அழுத்துவார்கள் - நான்கு விரலாள் அந்த உருளையை பற்றியபடி பெருவிரலால் அழுத்தியை அழுத்துவார்கள். அழுத்தினால் நேரம் முடியும் முன்னே சாச்சர் வெடித்துவிடும். இவர்களும் காற்றோடு கலந்துவிடுவர்! 'இதுதான் நான் மேற்கூறிய அழுத்தி' பல்வேறு வகையான வெடியுடைகள்: இந்தப் பெண் கை பிடித்திருக்கும் பகிதியில் தான் இவ்வெடியுடைக்கான விசைவில் உள்ளது. அதை பிடித்து இழுத்தால் டமார்!🌟 கரும்புலிகளின் பல்வேறு வகையான வெடியுடைகள்: 'படிமப்புரவு: Where global solutions are shaped for you' மேற்கண்ட படிமத்திற்கான விளக்கம்: இதிலந்த கறுப்பு, சிவப்பு நிறங்களில்(ஒவ்வொரு வெடியுடையிலும் இரு பக்கவோரங்களிலும் இருப்பவை) தெரியும் 'இழுவி' இனைப் பிடித்து இழுத்தால் போதும். எதிரியின் பக்கத்தினை நோக்கி கட்டப்பட்டிருக்கும் வெடிமருந்து கொண்ட பொதி வெடித்து விடும். எதிரியின் பக்கத்திற்கு எதிர்ப் பக்கத்தில்(புறப்பக்கம்) வருபவர்களுகு சிறியளவு பாதிப்பே ஏற்படும். 'படிமப்புரவு: indi samarajiiva - http://flickr.com' இந்த வெடியுடையானது ஒருவரின் இடையினைச் சுற்றிக் கட்டும் வகையில் விளைவிக்கப்பட்டிருந்தது. அதாவது 360 பாகையிலும் சிதறல்களை தெறிக்கவிடக் கூடியது. இது போன்ற வெடியுடைகள் அரிதானகவே பயன்படுத்தப்படுபவை :- 'இந்த நீல நிற பெட்டிதான் வெடிமருந்து கொண்ட பொதி.' பெண்களுக்கான 'pantie வெடியுடை:- தலைச்சீராவில் பொருத்தப்பட்டுள்ள விசைவில்: மாற்றியமைக்கபட்ட தாக்குதல் துமுக்கிகள் (modified assault rifles) 1) மாற்றியமைக்கபட்ட T-56 தாக்குதல் துமுக்கி: 2)மாற்றியமைக்கபட்ட பெயர் தெரியாத தாக்குதல் துமுக்கி: இதைப் பார்ப்பதற்கு Sterling L2A3 போன்று உள்ளது செம்மைப்படுத்தப்பட்ட துமுக்கி (Improvised Rifle) 1) செண்பகம் குறிசூட்டு துமுக்கி (Senpakam sniper rifle) அன்றைய காலக்கட்டங்களில்(2006s) விடுதலை புலிகளிடம் குறிசூட்டு துமுக்கிகள் (sniper rifles) பெருமளவில் இருக்கவில்லை . இதனால் அந்த தேவையை ஈடுசெய்ய AK-47 துப்பாக்கிகளுக்கு தொலை நோக்கிகளை பொருத்தி புதிய முறையிலான குறிசூட்டு துமுக்கிகள் உருவாக்கப்பட்டன. ஆதாவது குறுகிய துரத்தில் நின்றுகொண்டு எதிரியை குறிபார்த்து சுடும் வகையிலும் இலகுவாக கொண்டுசெல்ல கூடிய வகையிலும் AK-47 துமுக்கிகள் விடுதலை புலிகளால் வடிவமைக்கபட்டன. இந்த AK-47 இற்கு விடுதலை புலிகள் செண்பகம் என பெயரிட்டிருந்தனர். இதற்கான சன்னங்களாக கூட சாதாரண AK-47 இல் பயன்படுத்தப்படும் சன்னங்கள் இல்லாமல் கவசதுளைப்பி (Armour piercing) சன்னங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் பிடங்கு(butt) கூட விடுதலைப்புலிகளால் உள்நாட்டில்தான் விளைவிக்கப்பட்டது - திராகுனோவு குறிசூட்டு துமுக்கியின் தோற்றத்தில். செண்பகம் குறிசூட்டு துமுக்கி: செண்பகத்தின் அண்மையாக்கப்பட்ட(zoom in) நடுப்பகுதி: 'கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் முன்னேறிவரும் சிறீலங்காப் படைகளை நோக்கி செண்பகம் குறிசூட்டு துமுக்கியால் குறிவைக்கும் செண்பகம் குறிசூட்டுப் பிரிவு புலிவீரன் ஒருவன்' உள்நாட்டு பொருண்ம எதிர்ப்பு குறிசூட்டுத் துமுக்கி (Indigenous Anti material sniper rifle) 1) இது வகை 85 சுடுகலனின் சுடுகுழலை தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. அதாவது கவசத்துளைப்பி சன்னங்களைக் கொண்டிருந்திருக்கிறது. 2) இதுவும் ஒரு விதமான 12.7 மிமீ சுடுகலனின் சுடுகுழலையே தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ கவசத்துளைப்பி சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட பின்னுதைப்பற்ற சுடுகலன்(RL) - 1 (ஆதாரம்) இனந்தெரியா உள்நாட்டு விளைவிப்பு சுடுகலன் (Unidentified indegenously produced gun) 1) இதன் சுடுகுழல் மிகவும் நீட்டாக உள்ளது. அதன் மேல் தொலைநோக்கி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பிடங்கில் ஒரு மிதிவண்டி பெடல் உள்ளது. இதன் செயற்பாடு விளக்கமாக சிங்களப் படையினர் கூறுவது, அந்த மிதிவண்டி பெடலை காலால் அமுகினால் சுடும் என்று. இது நம்பும் படியாக இல்லையென்பதாலும் சரியான படிமம் கிடைக்காதபடியாலும் என்னால் சரியான விளக்கத்தை அடையமுடியவில்லை. துமுக்கி எறிகுண்டு (rifle grenade) 1) அருள்-89 துமுக்கி எறிகுண்டு (AruL -89 rifle grenade) வெடிமருந்து : TNT வெடிமருந்து நிறை: 100g உருவாக்கப்பட்ட ஆண்டு: 1987 விருத்து 1 நெடுக்கம் : 100 மீ அருள் என்ற பெயர் சூட்டப்பெற்ற ஆண்டு: 1988 மேம்படுத்தப்பட்ட ஆண்டு: 1989 விருத்து 2 தாக்கமான சூட்டு நெடுக்கம்: 150 மீ பெரும சூட்டு நெடுக்கம்: 300 மீ உண்டாக்கியவர்: கப்டன் அருள் மாஸ்டர் இது T-56, T-81 ஆகிய துமுக்கிகளில் பயன்படுத்தத்தக்கது. இக்குண்டானது 1989 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட பின்னர் ஏற்கனவே இருந்த அருள் என்ற பெயருடன் '89' (மேம்படுத்தப்பட்ட ஆண்டு) என்ற எண்ணும் சேர்க்கப்பட்டு 'அருள் 89' என்று பெயர் சூட்டப்பட்டது. அருள்-89 விதம்-I அருள்-89 விதம்-II அருள்-89 விதம்-III அருள்-89 விதம்-IV கைக்குண்டு (hand grenade) 1) குணா கைக்குண்டு (Kuna hand grenade) இது 1990 களின் இடைப்பகுதியில் பெருமளவில் புலிகளால் பயன்படுத்தப்படது. இது பயன்படுத்தப்பட்ட மீன் டின், பால் டின்னில் செய்யப்பட்டது ஆகும். 2) தமிழன் கைக்குண்டு (thamizan hand grenade) புதுப்புனைந்தவர்: சார்ளஸ் அன்ரனி (மாவீரர்) வெடிமருந்து: TNT வெடிமருந்து நிறை: 50–100g நிறம்: பச்சை & நீலம் இது தமிழரைக் கொன்று குவித்த சிங்களத்தை அழிக்க அதே தமிழினத்தின் பெயரால் சூட்டப்பெற்றது ஆகும். மற்றைய கைக்குண்டுகளைப்போல இழுவூசி(clip) பயன்படுத்தப்படவில்லை ஏனெனில் யுத்தகளத்தில் சிலசமயம் தானாகவே ஊசிகள் இழுபட்டு குண்டு தவறுதலாக வெடிக்கும் ஆபத்து இருந்தது அதனை தவிர்க்கவே இவ்வாறு விளைவிக்கப்பட்டது. தமிழன் கைக்குண்டில் முன்பகுதியில் இருக்கும் மூடி போன்ற அமைப்பை கைகளால் அழுத்தமாக அடித்துவிட்டு (குத்திவிட்டு) எறிந்தால் போதும் ; வெடித்து சிதறும். Can Charge - கான் சார்ச் தமிழில் கலன் வெடிகுண்டு எனலாம். இது விடுதலைப் புலிகளின் உள்நாட்டு மானுறுத்தம்(manufacture) ஆகும். இதற்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயர் 'Can Charge' என்பதாகும். இதை விடுதலைப் புலிகளின் அதிரடிப் படைஞர்கள் மட்டுமே பயன்படுத்துவர். இது குளிர்பான கலனின் தோற்றத்தில் இருக்கும். இதை எப்படி இயக்குவது என்று கீழே படங்களில் காட்டியிருக்கிறேன். 'கொச்சரையர்(கப்டன்) கருவேந்தன் வேடமேற்று நடித்த போராளியொருவர் Hanger-இன் உள்ளே 'கான் சார்ச்'-ஐ இயக்குகிறார் | படம்: எல்லாளன் திரைப்படத்திலிருந்து' இதன் மூடியைத் திறந்து விட்டு அந்த சிவப்பு நிற 'விசை' அழுத்தினால் மஞ்சள் நிற ஒளி எரிவதோடு 'நீக்' என்றொரு ஒலி வரும். அதன் பொருள் வெடிகுண்டு எழிவு(on) ஆகிவிட்டதென்று! பின்னர் இதை தூக்கி எறிந்தால் 10 நொடிகளுக்குள் வெடித்து விடும். (ஈரத்தீ, எல்லாளன் போன்ற படங்களில் கரும்புலிகள் இவற்றைப் பயன்படுதுவதை காணலாம்) உள்நாட்டு முச்சுடுகலன் (indigenous triple gun) இது ஒரு விதமான மூன்று T-56 வகை துமுக்கிகளை(rifle) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சப்பானியர்களின் T-96 25mm முச்சுடுகலன் போன்று உள்ளது. இவை ஒரே நேரத்தில் மூன்று சுடுகுழல்கள் வழியாக சன்னங்களை துப்பும். 1) முன்பக்கம்: பின்பக்கம்: 'இந்த ஆண் கையை பிடித்து அழுத்தும் இடத்தில்தான் இதற்கான விசைவில் உள்ளது. அவ்வாறு அழுத்தினால் இது சன்னத்தை வெளியேற்றும் (சுடும்)' 2. சமர்க்களத்தில் சன்னக்கூடு (mag) பொருத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட போது… உள்நாட்டு 30 மி.மீ சுடுகலன் (indigenous 30 mm gun) புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) இந்த சுடுகலங்களை விடுதலைப்புலிகளின் ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சுடுகலானாகும்.. இது 30 மிமீ கலீபர் சன்னங்களை எறியங்களாக(projectile) கொண்டது.. இதற்கான காவுவண்டிகளையும் புலிகள் உள்நாட்டிலேயே அணியமாக்கியுள்ளனர்.. இவை மூன்றையும் சீராக பயன்படுத்த முடியவில்லை, தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்களை இடர்களை தொடர்ந்து விளைவித்து வந்தது. அதனால் இவை பின்னர் பயன்பட்டில் இருந்து நீக்கப்பட்டது. புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்-I (Pulikkutti 30mm gun Mk-I) இதுதான் முதலில் மானுறுத்தப்பட்டது(manufacture).. இது கொடுத்த சிக்கல் என்னவெனில் அதிக சூடாகி இயங்குபொறி தடைப்பட்டது. எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி அடுத்த சுடுகலன் உருவாக்கப்பட்டது. பக்கவாட்டுத் தோற்றம்: 'இதுதான் இதற்கான சன்னக்கூட்டினை வைக்கும் பெட்டி' 2) புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்-II (Pulikkutti 30mm gun Mk - II) இதுதான் இரண்டாவதாக் மானுறுத்தப்பட்டது.. இதற்குச் சிக்கல் வந்தது சன்னங்களை தாணிக்கும்(load) உருவத்தில். எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி மூன்றாவது முறையாக ஒரு சுடுகலன் உருவாக்கப்பட்டது. 3) புலிக்குட்டி 30 மி.மீ சுடுகலன் விதம்- III (Pulikkutti 30mm gun Mk-III) இதுதான் மூன்றாவதாக மானுறுத்தப்பட்டது. இது மேற்கண்ட இரண்டு சிக்கல்களையும் சரி செய்து வெற்றி கண்டாலும் குறிசூட்டைத் தருவதில் வழுவானது. மேலும் இறுதிப் போரும் மிகவும் நெருங்கிவிட்டதால் இதன் மானுறுத்திகளும் மேம்படுத்தல்களும் நிறுத்தி வைக்கப்பட்டது... அத்துடன் போரும் முடிந்து த.வி.பு உம் ஆயுத மௌனிப்பினைச் செய்தனர். ஏவரி(torpedo) புலிகளிடம் ஒரு செலுத்தியும் அதற்கான 2 ஏவரிகளும் இருந்தன. இவற்றினை(ஏவரி) புலிகள் தாமே வடிவமைத்துள்ளனர். உலகின் பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளே கடலின் அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ஏவரிகளை உருவாக்குவதில் வல்லவர்கள். தொழில் நுட்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந்நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி இவ்வகையான ஏவரிகளை விளைவித்துள்ளனர் என்பது பெரும் வியப்பான விடையமாகும். குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவரியின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் கரும்புலிப்படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் ஏவரிகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் மானுறுத்தும் ஏவரிகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவரியை ஏவி அதன் பாதையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுட்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது. தமது வசதிகளுக்கு ஏற்ப, தொலையியக்கி (remote control) மூலம் இயக்கக்கூடிய ஏவரிகளை புலிகள் துல்லியமாக விளைவித்து வைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு நடவடிக்கை ஒன்றின் மூலம் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, ஏவரியைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுனது. 2009 ஆம் ஆண்டு புலிகள் அழியும் வரை உலகிலே இவ்வகையான பாரிய வலிமையான ஏவரிகளை உடைய ஒரே இயக்கம், புலிகள் மட்டுமே . அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான சுடுகல சன்னங்களைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற பாரிய ஆய்தங்களை மிக இலகுவாக மானுறுத்தக் கற்றுக்கொண்டனர் மலைப்பான குறிப்பிடத்தக்க விடையமாகும். இது சிங்கள தேசத்திற்கு வெட்கக்கேடான ஒரு செய்தியாகும். ஏவரி நீளம் : 26' அகலம் : 5.7' செலுத்தி நீளம் : 28' அகலம் : 5.10' செலுத்தி வகை: 533mm தூம்பு(tube) ஏவரி வகை: T-53 / T-56 செலுத்தி(launcher):→ இந்த செலுத்தியானது உருசியவின் செர்சன் வகுப்பு (shershan classs) Torpedo படகில் இருந்து கழற்றி எடுக்கப்பட்டதாகும். செலுத்தியின் மேற்பக்கம்: செலுத்தியின் உட்புறம்: செலுத்தியின் மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டி: ஏவரிகள் (torpedo):→ புலிகளிடம் 2 ஏவரிகள் இருந்தன. 1) பின்பகுதி: 2) பின்பகுதி: மேற்கண்ட இரண்டாவது ஏவரிக்கான வெடியுளை(warhead): செலுத்தியுடன் அதன் இரு ஏவரிகளும்: 'இரண்டு ஏவரிகளுக்கும் நடுவில் இருப்பது வெடியுளை' 'ஏவரி, அதன் தூம்பு, மற்றும் வெடியுளையின் பின்பக்கம்.. நின்று பார்ப்பவர்கள் சிங்களப் படைகள் ஆவர்' 4) இது என்னவென்று தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு மனித வலிமை(power) மூலம் இயங்கும் ஒரு ஏவரி போல உள்ளது. 1) என்னவென்று தெரியவில்லை... இது கடலில் மிதந்து வெடிக்கும் வகையில் அணியமாக்கப்பட்டுள்ளது(ready). இதன் இயக்கத்தைப் பற்றிய புலனங்கள் ஏதும் இல்லை. கண்ணிவெடி (Mine): இவையெல்லம் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும்! கடற் கண்ணிவெடி (naval mine) 1)நங்கூரமிடப்பட்ட தொடுகை கடற் கண்ணிவெடி ( moored contact sea mine) அ. பெயர்: கிட்டு 93 மொத்த எடை: 65.5kg ஆ. கீழ்வரும் கண்ணிவெடிகளில் ஒன்றனது பெயர் கொலின் கடற் கண்ணிவெடி என்பதாகும். அது கப்டன் கொலின்ஸ் அவர்களின் நினைவாக விடுதலைப் புலிகளால் சூட்டப்பட்டது ஆகும். இது 24.71992 இற்கு முன்னரே விடுதலைப் புலிகளிடம் பயன்பாட்டில் இருந்தது. 2) 3) 4) Limpet கடற் கண்ணிவெடி 5) நங்கூரமிடப்பட்ட தாக்க கடற் கண்ணிவெடி ( moored impact sea mine) கயிறு கட்டியுள்ள பக்கமே நங்கூரம் கட்டுப்பட்டிருக்கும். எதிர்ப்பக்கம் மேற்பரப்பில் மிதக்கும் . 6) மிதக்கும் தாக்க கடற் கண்ணிவெடி ( floating impact sea mine) 7)இது ஒரு வகையான கடற் கண்ணிவெடி இதன் பின்பகுதி: ஆளெதிர்ப்பு கண்ணிவெடி(anti-personal mine) : புலிகளின் இந்த மிதிவெடிகளில் எதிரி நோக்கி வெடிக்க வேண்டிய பகுதியில் எதிரியின் பக்கம் என்றும் வெடிக்க வைப்பவர் பக்கம் 'கொல்பவன் வெல்வான்' என்று மதிவெடியின் மேற்பகுதியிலும் 'தயாரிப்பு தமிழீழம்' என்று கீழ்ப்பகுதியிலும் எழுதப்பட்டிருக்கும். ஆளெதிர்ப்பு வெடிப்பு கண்ணிவெடி/ மிதிவெடி (anti-personal blast mine) 1) ஜொனி 95 (johny 95) புதுப்புனையபட்ட ஆண்டு: ஜூன் 1988 , இந்தியப் படைகளுக்கு எதிராக புதுப்புனைந்தவர்: மேதகு வே.பிரபாகரன் மொத்த நிறை : 250g வெடிமருந்து : TNT வெடிமருந்து நிறை : 30 g 'தாட்டும் போது இருக்கும் நிலை' 'வெடிக்கும் போது இருக்கும் நிலை' 'முன்பக்கத் தோற்றம்' 'பக்கவாட்டுத் தோற்றம்' இந்த ஓட்டைக்குள்தான் 2x 1.5V மின்கலங்கள் வைக்கப்படும். ஜொனி தகட்டில் எழுதபட்டு இருக்கும் வாசகம்: நீ ஒரு முட்டாள் . ஜொனி 95 மிதிவெடி இலங்கையில் விடுதலைப் புலிகளால் உருவாக்கபட்டுப் பயன்படுத்தப்பட்டது. இது மரப்பலகையில் மின்கலத்தை இணைப்பதன் மூலம் மிதிக்கும் போது மின் இணைப்பு குறுஞ்சுற்றாக்கப்படுவதன் மூலம் வெடித்தல் நிகழ்கிறது. இதில் மின்கலம் செயலிழந்தால் வெடித்தல் நிகழாது எனினும் வளவுகளைத் துப்பரவு செய்யும் போது எரித்தால் வெடித்தல் நிகழலாம், இதனாலே சேதனப் பசளையாக்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இது சுமாராக 50 கிராம் அளவிலான வெடிபொருளைக் கொண்டிருக்கும். இது அண்ணளவாக 8 cm நீளமும், 7 cm அகலமும் 5.5 - 6 cm உயரமும் உடையது. கூடுதலான உலோகத்தை உள்ளடக்கியபடியால் இலகுவாக மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க இயலும். செய்முறை: துருவி இணையத்தளத்தில் இருந்து…. 'பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது. பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது. இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தறையப்பட்டது. அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும். மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும். இதைச் சரி செய்ய மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர்.' 2) ஜொனி 99 (Johny 99) / ரங்கன் 99 (Rangkan 99) புதுப்புனையபட்ட ஆண்டு: 1999 வெடிமருந்து : 150g TNT உயரம்: 9cm அமுக்க நிறை (pressure weight): 6kg கொளுத்து அமைப்பு: விற்சுருள் மூலம் இயக்கப்பட்டு பந்துமூலம் கட்டுப்படுத்தப்படுகிறது (spring operated ball controled). இது பாக்கிஸ்தானிய P4 MK-1 மிதிவெடியைப் படி-எடுப்பதன் மூலம் உருவாக்கப்பட்டதாகக் சிலராற் கருதப்பட்டாலும் இது அதைவிட அளவிற் பெரியதுடன் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கையாள முயற்சிக்கும்போது வெடிக்க ஒரு ஊசல்(pendulum) உள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் கதிரைகள், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கியே இதன் வெளிப்பாகம் மானுறுத்தப்படுகிறது(manufactured).. இது பொதுவாக பிரவுன் மற்றும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். அடிப்பக்கமும் மேற்பக்கமும் தெரிகிறது: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்கள்: இதன் உட்பாகங்களில் ஒன்று. இப்பாகத்தைக் கழற்ற முயன்றால் இது வெடித்து அந்த மணிகள் உங்களைக் கொன்று விடும். 3)ஜொனி மின்சார மிதிவெடி (johny electric APA) இறுதிப்போரின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டாலும் வைப்பவர்களுக்கே காயத்தை உண்டுபண்ணியமையால் பின்னர் கைவிடப்பட்டது. இதைக் கையாள முயன்றால் வெடிக்கும், எனவே ஜொனி மின்சார மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே வைத்து அழிக்கப்படும். இது அம்மா 2000 ஊர்தி எதிர்ப்பு கண்ணிவெடியில் வெடித்தலை ஆரம்பித்துவைப்பதற்கும் பயன்படுகிறது. 'ஜொனி 99 மிதிவெடியின் வெடித்தலை ஆரம்பித்து வைக்கும் detonator' . → கீழ்க்கண்ட செய்திகள் அனைத்தையும் எனக்கு வழங்கியவர்: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) 4)தாட்சாயினி மிதிவெடி (Thaatchaayini APM) இதற்குள் உலோகச்சன்னங்கள் மிகவும் குறைவு. இதன் தாக்கத்தால் எதிரியின் கால்களை சேதமடையும் உயிர்போகும் வாய்ப்பு குறைவு. 5) வான்நிலா மிதிவெடி (Vaannilaa APM) கோராவில் நான் சந்தித்த ஒரு தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர் இதன் பெயர் வான்நிலா என்று கூறினார். ஆனால் சிங்கள அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு இதன் பெயர் கோமது என்று கூறியுள்ளது. எது சரியென நானறியேன், அறியவும் இயலவில்லை. 6)தமிழன் மிதிவெடி (Thamizhan APM) புதுப்புனைந்தவர்: கேணல் சார்ளஸ் அன்ரனி (மாவீரர்) இதைத் தவிர வேறு படிமங்கள்(images) என்னிடம் இல்லை! 'படிமப்புரவு: எதிரி இணையம்' 7)டப்பி மிதிவெடி (Dappi APM) இது வெளிநாட்டில் உள்ள வகை-72 மிதிவெடிகளை போன்று தமிழீழத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். இதை டப்பி மைன்ஸ் என்றும் அழைப்பர். வகை - 1:- வகை - 2:- திசைசார் துணுக்க கண்ணிவெடி( directional fragmentation mine) அமுக்கவெடி (claymore) 1) செந்தூரன் 96 (senthuran 96) தாக்கும் ஆரை: 80 பாகை மொத்த நிறை : 10kg வெடிமருந்து : c4 இதுவே புலிகளால் விளைவிக்கப்பட்ட முதலாவது உயர்நுட்பக் அமுக்கவெடி. புலிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட அமுக்கவெடி இதுவே. பிற்பட்ட காலத்தில் தமது சிறப்புத் தேவைகளுக்காக உருவம், நிறை, தாக்கம், வெடிமருந்து என்பவற்றை மாற்றி மாற்றி பலவிதமான அமுக்கவெடிகளை பலபெயர்களில் புலிகள் விளைவித்துப் பயன்படுத்தினர். 2) பகலவன் (Pakalavan) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) மொத்த நிறை : 2.5 kg விடுதலைப்புலிகளின் கப்டன் முகிலன் நீண்டதூர விசேட வேவு அணியினர் காவிச் சென்று தாக்குதல் நடத்துவது. இதில் இரண்டுவகையும் உள்ளது. அதாவது, தொலையியக்கி மூலம் இயக்குவது; மின்கம்பி மூலம் இயக்குவது. இதற்கான தொலையியக்கிகள்: 3)இராகவன் (Irakavan) உயரம் : 100cm விட்டம் : 75cm மொத்த நிறை : 54kg தாக்கும் ஆரை: 360 பாகை வெடிமருந்து நிறை : 44kg (TNT) ஒரு வளையத்தின் நிறை : 6kg (மொத்தமாக 7 வளையங்கள் உண்டு) வெடிக்கவைக்கும் முறை : கட்டளைக் கம்பி (command wire)/ தொலையியக்கி (remote control) இது ஆடியிழையால்(Fiber glass) ஆனது ஆகும். இவ்வமுக்கவெடி ஐம்பதாயிரம் சிதறு துண்டுகளைக் கொண்டது. இது வழமையான அமுக்கவெடிகள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையுமே சிதறுதுண்டுகளைப் பாய்ச்சக்கூடியவாறு மானுறுத்தப்பட்டது ஆகும். இதைக் காவிக்கொண்டு எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும், நகர்வதும் இயலுமான காரியமன்று. உண்மையில் இது பதுங்கித்தாக்குதலுக்கான கண்ணிவெடியன்று! 4)பெயர் அறியா அமுக்கவெடி (Name unknown claymore) மொத்த நிறை: 25kg 5)தோழநம்பி 2000 (Thozanampi 2000) மொத்த நிறை: 15kg தொண்ணூறுகளின் தொடக்கத்தில் விளைவிக்கப்பட்ட அமுக்கவெடி. உருக்கு உருளைகள் பயன்படுத்தப்படவில்லை. இலக்கின் பக்கமாக இருக்கும் தடித்த உருக்குத் தகடு சிதறி இலக்கைத் தாக்கும். (100 ) மீற்றர் (200 ) மீற்றர் துரத்தில் இருந்துகொண்டே இயக்கி வெடிக்க வைக்கும் தொழில்நுட்பம் இவற்றில் பயன்படுத்த படுகிறது . 6) பவான் (ஐயா) - 99 (Pavaan (Aiyaa) - 99 ) மொத்த நிறை: 15.5 kg இது கப்டன் பவான் அ ஐயா என்னும் போராளியின் நினைவாக பெயர் சூட்டப்பெற்ற ஊர்தி தகர்ப்பு வெடிமருந்து ஆகும். 'இடது பக்கம் இருப்பதுவே இதுவாகும்' மின்சார துள்ளல் கண்ணிவெடி(Electronic Tilt Mine) 1)இளவழுதி (Ilavazuthi) மொத்த நிறை : 5kg தமிழீழ மானுறுத்தமான இது மின்சார துள்ளல் கண்ணிவெடி எனப்பொருள்படும் Electronic Tilt Mine இன் முதலெழுத்துக்களைக் கொண்டு ETM மதிவெடி என அழைக்கப்படுகிறது. இது விடுதலைப் புலிகளால் இளவழுதி என அழைக்கப்பட்டு அவ்வாறே மதிடிகளிற் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கண்ணிவெடி அகற்றுபவர்களாலும் கண்ணிவெடி அபாயக் கல்வி வழங்குபவர்களாலும் ETM என்றே அழைக்கப்படுகிறது. இவற்றில் உலோகப்பொருட்கள் கூடுதலாக இருப்பதால் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவி மூலம் அகற்றுவது இலகுவானதாகும். 'மேயர்(Major) இளவழுதி' என்பவர் மன்னாரில் வீரச்சாவடைந்த வேவுத்தாக்குதலணி மாவீரன். அவரது நினைவாக உருவாக்கப்பட்டது இதில் இரு விதம் இருந்தது: இளவழுதி 1 (ETM 01) இளவழுதி 2 (ETM 02) உகளும் துணுக்க கண்ணிவெடி (Bounding fragmentation mines) 1) கீர்த்தன் (Keerththan) இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். 1)சலாகை அமுக்கவெடி (salakai) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) காவலரண்களை தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. காவலரணின் வடிவமைப்பு, எதிரிகளின் எண்ணிக்கை போன்றவற்றிற்கு ஏற்ப பயன்படுத்தப்படும். கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(anti tank mine) 1) அம்மா 2000 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ammaa 2000 anti-tank mine) மொத்த நிறை: 11 +/- 2.2 வெடிமருந்து : TNT(45%), RDX(55%) உயரம்: 13 cm அம்மா 2000 விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கவசவூர்தி எதிர்ப்பு மதிவெடியாகும். இதில் வெடித்தலை ஆரம்பித்து வைப்பது மனிதர்களுக்கு எதிரான ஜொனி 99 மதிவெடி என்பதால் கவசவூர்திகள் மாத்திரம் இன்றி ஊர்தியோ, மனிதர்களோ அல்லது பசு போனால் கூட வெடிக்கக்கூடியது. இது பொதுவாக மண்ணிறத்தில் காணப்படும். இது லெப்.கேணல் அம்மா (அன்பு) என்னும் போராளியின் நினைவாக சூட்டப்பெற்றது ஆகும். அம்மா 2000 இன் பக்கவாட்டுத் தோற்றம்: . → கீழ்க்கண்ட செய்திகள் அனைத்தையும் எனக்கு வழங்கியவர்: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும். இதன் மூடியுடனான படிமத்தினை நான் ஒரு வழியாக இணையத்தளத்தில் தேடி கண்டுபிடித்து விட்டேன். கீழே இருக்கும் படிமத்தில் இரண்டாவதுதான் இதன் மூடி போட்டது ஆகும். மூன்றாவது மூடி போடாதது. முதலாவது(பச்சை) உள்ளூர் விளைவிப்புத்தான், ஆனால் என்னவென்று தெரியவில்லை. 2) பொன்னம்மான் 23 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 23 anti tank mine😞 லெப்.கேணல் பொன்னம்மான் நினைவாக பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவினரால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த ஊர்தி எதிர்ப்பு கண்ணிவெடி இதுவாகும். இதுவே அம்மான் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும். 3)பொன்னம்மான் 100 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 100 anti tank mine). 4) சங்கிலியன் கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Sangkiliyan anti tank mine). 5) தாரகை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Thaarakai anti tank mine). சிறியவகை ஊர்திகளுக்கான மதிவெடி. 6) சிறுத்தை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(Siruththai anti tank mine) சிறுத்தை என்று அழைக்கப்பட்ட இது கனவகை ஊர்திகளை அழிக்க பயன்படுத்திய மதிவெடி ஆகும். நீள வடிவமானது. 7)பெயர் தெரியவில்லை! 8)செந்தூரன் 2000 (Senthuuran 2000) ஒருமுனை கொண்ட ஊர்தி எதிர்ப்புக் கண்ணிவெடி... பார்ப்பதற்கு அம்மானின் வடிவம் கொண்டதாக இருக்கும். 9) இரண்டு அன்பு 2000 கண்ணிவெடிகளை ஒன்றாக சேர்த்து வைத்திருப்பது போன்ற வடிவம் உடையதாக உள்ளது. இதில் "கரும்புலி" என்ற பெயர் எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதன் வகைப் பெயர் தெரியவில்லை. தடைவெடி('Bangalore torpedo 'like torpedos' ) புலன கிட்டிப்பு: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) புலிகளால் உள்ளூரில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட தடைவெடிகள். இவை காவலரண் பாதுகாப்பு வேலிகளை தகர்த்து படையணி உள்நுழைய வழிசெய்யும். மின்கலங்கள் பொருத்தப்பட்டு ஆளிகளை (switch) முடுக்கிவிட்டு வெடிக்க வைக்கப்படும் வகைகள், தொலைதூர கட்டுப்படுத்திகள் மூலம் மின்கம்பி இணைப்புக்களால் வெடிக்க வைக்கப்படும் வகைகள் என்று களமுனையின் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தப்படும். தென்னவன் தடைவெடி(Thennavan torpedo) 2. தென்னவன் சப்பட்டை தடைவெடி (Thennavan sappattai torpedo) 3)குருவி தடைவெடி(Kuruvi torpedo) இதில் அதிக உலோக சன்னங்கள் இருக்கும், சுருள்வடிவ சிறிய கம்பிகளால்(barbed wires) ஆன பாதுகாப்பு வேலிகளை தகர்க்க பயன்படுத்தப்பட்டது. 4) மாயவன் தடைவெடி(Maayavan torpedo) சமாதனத்தின் பின்னர் 2006.08 மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கும் காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இராணுவம் தமது காவலரண்களை இரும்பு கம்பிகள் L வடிவ இரும்பு சட்டங்கள் மற்றும் சீமெந்து கொண்டு அமைத்து எதிர் தாக்குதல் நடத்தியது. அதனை வேவு புலிகள் கண்டறிந்து சமர்ப்பித்த அறிக்கையின் பின்னர் அவற்றை தகர்ப்பதற்கு ஏதுவான முறையில் வடிவமைக்கப்படவை இந்த வகையான தடைவெடிகள். 5)சாந்தகுமாரி தடைவெடி(Saanthakumaari torpedo) விடுதலைப்புலிகளின் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவில் மகளிர் அணியின் தளபதிகளில் ஒருவராக இருந்து களத்தில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சாந்த குமாரி நினைவாக உருவாக்கப்பட்டது.. இது அதிக உலோகச்சன்னங்களை கொண்டிருக்காது பதிலாக தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது. எரியக்கூடிய பொருட்களால் (காய்ந்த மரங்கள், பலகைகள், கடின இறப்பர் தகடுகள்) ஆனது. காவலரண்கள், பாதுகாப்பு வேலிகள் போன்றவற்றைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. 6) ரங்கன் தடைவெடி(Rangkan torpedo) ரங்கன் என்று மிதிவெடிகள் உருவாக்கப்படவில்லை. ரங்கன் தடைவெடிஆரம்பத்தில் இருந்தது பின்பு அது பயன்பாட்டில் இல்லை. 1995ல்கரும்புலி தாக்குதலின் போது இராணுவ முகாமின் பாதுகாப்பு தடையை உடைக்க முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் தன்னையே தடைவெடியாக்கி வெடித்து தடையுடைத்த மேஜர் ரங்கன் நினைவாக உருவாக்கப்பட்டது. அதன்பின்பு கரும்புலிகளுக்கான தற்காப்பு அங்கிகளுக்கு ரங்கன் ஜக்கட் என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டது. புலிகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட எனக்குப் பெயர் தெரியாத கண்ணிவெடிகள்: இவற்றைப் பற்றிய பெயர்க் குறிப்புகள் யாருக்கேனும் தெரிந்தால் தந்துதவி எம் வரலாற்றை எழுத உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கிறேன்! முன்பகுதி: பின்பகுதி: 2)நீள் உருள்கலன் வடிவத்தில் இருப்பது 3) & 4) 5) 6) காந்தக் குண்டு (magnet bomb) இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். இதற்கு சூடப்பட்ட பெயர் எனக்குத் தெரியாது. செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம் (Improvised Explosive Device) 1) பந்து வடிவ செ.வெ.வ. (ball shaped IED ) இதற்குப் புலிகள் வைத்த பெயர் தெரியவில்லை! 2) உருள்கலன் செ.வெ.வ. (barrel IED) வெடிமருந்து: TNT 3) 4) 5) 6) 7) 8 ) 9)கைப்பெட்டி வெடிபொருள்(suitcase explosive) 10)152மி.மீ தெறோச்சி எறிகணை செ.வெ.வ. (152 mm artillery shell IED) 11) அநுராதபுரத்தில் வானூர்திகளை தகர்க்க கரும்புலிகள் கொண்டு சென்ற செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம். வெடிக்க வைக்கப் பயன்படும் தொழில்நுட்பம்: இது பற்றி மேலும் அறிய: https://www.unog.ch/80256EDD006B8954/(httpAssets)/19F3DA0F78C6EDE8C1257B58007ECAE8/$file/Sri+Lanka_IEDs+2013.pdf சூழ்ச்சிப் பொறி (booby traps) 1) இது கைப்பற்றப்பட்டபோது தரையில் இருந்து ஒரு ஆளின் நெஞ்சளவு உயரதில் ஒரு மரத்தோடு சேர்ந்து பிணைக்கப்பட்டிருந்தது. இதன் தலைப்பகுதியில் தான் இழுவூசி உள்ளது. அதில் கொழுவப்பட்டிருந்த மெல்லிய கம்பியானது அருகில் உள்ள ஓர் மரத்தோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது. (நன்றாக் உத்துப் பார்த்தீர்கள் என்றால் வெள்ளி நிற இழுவூசி தெரியும்) 2) 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறி (81 mm mortar booby trap) 'பெருந்தொகையான 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறிகள்' 'ஆயத்தநிலையில் உள்ள சூழ்ச்சிப் பொறி' 3) HG-84 கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (HG-84 hand grenade booby trap) 4) குணா குண்டு சூழ்ச்சிப்பொறி (Kunaa hand grenade booby trap) புதர்கள் மற்றும் புல்லுகள் நிறைந்த வெளிப்பிரதேசங்களில் நகரும் இராணுவத்தினரை தடுக்க பயன்படும் பொறிவெடி. எல்லாப்பக்கமும் சிதறும் வகையில் ஈயம், சிறு இரும்பு துண்டுகள், துவிச்சக்கரவண்டிகளின் சங்கரங்களின் சுழல்பொறி உராய்வுநீக்கி உருண்டைகள் (சைக்கிள் போல்ஸ் என்று ஊர் பேச்சுவழக்கில் சொல்லுவோம்) போன்றவற்றையும்TNT வெடிமருந்து, ஆரம்பவெடிப்பி (ரிக்னேட்டர்) ஆகியனவோடு செய்யும் ஒரு பொறிவெடி. உருமறைக்கப்பட்ட நூல்கள் கம்பிகளை தாண்டும் போது இழுவிசை உந்தப்பட்டு வெடிக்கும். 5) கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (unknown hand grenade booby trap) 6) பன்றிக்கை - ஒரு வகையான சூழ்ச்சிப்பொறி. இது கறள் பிடித்த இரும்பால் ஆனது. இது தாக்கினால் சிங்களவன் உடனடியாகச் சாகாவிட்டாலும் பின்னாளில் ஏற்பாக்கி துன்பப்பட்டு இறப்பான். 7)பண்டிச்சக்கை - இது இந்திய அமைதிப்படைக் காலத்தில் அவர்களை அவர்களை விரட்டி அடிக்க பயன்படுத்தப்பட்டதாகும். தமது விளைவிப்பில் உருவாப கண்ணிவெடிகளை அதிகளவு வெடிமருந்தால் நிரப்பி தகரி எதிர்ப்பு கண்ணிவெடியாக மாற்றியிருந்தார்கள். இந்த கண்ணிவெடிகளில் சிக்கி இந்தியப்படையின் அன்றைய களமுன்னனி தகரியாக விளங்கிய T - 72 வகை தகரிகள் பல அழிந்துபோயின. வலிகாமம் மேற்கு சங்கானை சந்திக்கு அண்மையில் 1987 இல் நடைபெற்ற தாக்குதலில் T- 72 வகை தகரி 10 அடி துரத்திற்கு கூட தூக்கி வீசப்பட்ட்டது குறிப்பிடத் தக்கது. சரி, கடைசியாக உங்கள் எல்லோருக்கும் ஒரு துணுக்குச்செய்தி ஒன்றினைக் கூறிச்செல்ல விரும்புகிறேன். புலிகள் தங்களின் ஆய்தங்களுக்கு அவற்றிற்குரிய பெயர்களை பயன்படுத்துவதை விட தாங்களாகவே ஒரு குறியீட்டுப் பெயரினைச் சூட்டிப் பயன்படுத்துவது வழக்கம்.. இது அந்த ஆய்தங்களைக் குறிக்கும் சங்கீத சொல்லாக இருந்தது. அவ்வாறு புலிகளால் எந்தெந்த ஆய்தங்களுக்கு என்னென்ன பெயர்கள் வழங்கப்பட்டன என்பதைப் பற்றி இங்கு கூறி கட்டுரையினை முடித்துக்கொள்கிறேன்.. (இவை பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவையே) வில்லுகள் - படைக்கலங்கள்(Munition) தம்பிமுத்து - தரை-வான் ஏவுகணை-14 (SAM-14) அஞ்சிஞ்சி - 120mm கணையெக்கி (mortar) சாரை - ZPU-1 பூமா - 14.5mm ZPU-2 ஆலை - 14.5mm ZPU-4 அப்பாச்சி - ??? டொங்கான் - கைகுண்டு செலுத்தி (GL) மொங்கான் - பல்குழல் உந்துகணை செலுத்தி (MBRL) பப்பாகிலோ - என்னவென்று தெரியவில்லை கிபிர் - தரைக்கரும்புலியின் ஊர்தி ஆட்டுக்குட்டி - தகரி(Tank) (ஜெயசிக்குறு சண்டை நிகழ்படக் காட்சியொன்றில் கண்டுள்ளேன் ) 97 - M16 ஒலிகன் - Oerlikon 20mm Cannon வாழைப்பொத்திகள் - RPG உந்துகணை → இனி வருபவை அனைத்தும் புஸ்பகுமார் சற்குணநாதன் அவர்கள் அளித்த தகவல்கள்: XR2 - RPG 29 நாயகன் - M141 BDM 17 - FGM 172 Javelin & FGM 172B உசாத்துணை dossier on ltte weapons - pdf மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள்…! - தொடர் கட்டுரை மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013 The story of Thambimuththus (SAMs) (The story of Thambimuththus (SAMs)) (https://www.army.lk/news/troops-led-unearth-two-more-ltte-torpedoes-0) (தென்னாசியாவே பார்த்து நடுங்கிய விடுதலை புலிகளின் நீர்மூழ்கி ஏவுகணை!!) https://www.unog.ch/80256EDD006B8954/(httpAssets)/19F3DA0F78C6EDE8C1257B58007ECAE8/$file/Sri+Lanka_IEDs+2013.pdf இந்திய இராணுவத்தை தடுத்து நிறுத்திய ஜொனி - துருவி Type 53 torpedo - Wikipedia Shershen-class torpedo boat - Wikipedia Torpedo tube - Wikipedia கிளைமோர் - தமிழ் விக்கிப்பீடியா ரங்கன் 99 - தமிழ் விக்கிப்பீடியா அம்மான் 2000 - தமிழ் விக்கிப்பீடியா SLAF Recoveries in the Pudukuduirippu area yarl Tamileela seithikal. No . 40_0- August 1990 படிமப்புரவு * dossier on ltte weapons - pdf ruupabahini * https://www.cartagenasummit.org/fileadmin/APMBC-RC2/regional-conference/Bangkok_WS/Bangkok-ClearingMine-2April2009-SriLanka-SL.pdf கரிகாலன் garikaalan) Banner | National Mine Action Center, Sri Lanka) * Mapio.net (Mapio.net) * http://youtube.com/watch?v=2kKYXvVBG_Y * YouTube (YouTube) * CAT-UXO - Rangan 99 landmine (CAT-UXO - Rangan 99 landmine) * Asiri (Asiri (@AsiriFernandoLK) | Twitter) * Weapons, Ammo, Diesel & other LTTE Warlike Items Found * https://www.apminebanconvention.org/fileadmin/APMBC/clearing-mined-areas/2018-SriLanka-InitialArt7Report.pdf * Ceylon Today (Sri Lanka: Anti-personnel mine found ) * kumaran satha (kumaran satha) WordPress.com: Create a Free Website or Blog * LiveJournal (Простая тамильская баба.) * http://Flickr.com (http://Flickr.com) * Latest Sri Lankan News Updates (http://lankadailynews.com/) * Sri Lanka Army (Sri Lanka Army) * The Hindu Images * CAT-UXO * Sri Lankan Security Forces (Sri Lankan Security Forces) தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் * https://alt.army.lk/slsr/11slsr_2 (Sri Lanka Sinha Regiment) * https://steemit.com/photography/ (https://steemit.com/photography/) Troops Led to Unearth Two more LTTE Torpedoes * stuartddaniel (stuartddaniel) * Experiments with weapons- Part I (http://www.srilankaguardian.org/2008/04/experiments-with-weapons-part-i.html) * IBC Tamil * Jaffna News 15kg bomb found buried in Ukkulan Kulam Vavuniya. - Srilanka News | DSRmedias.com * Vanakkam London Emerging Out Of The Shadows Does recovery of arms from former LTTE cadres indicate revival of Tamil insurgency in Sri Lanka? Landmines, unexploded ordnance a barrier to return SLAF Trikonamadu recovers cache of weapons in Pudukuduirippu Alibaba தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்r
  5. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" ----------------------------------------------------------------------------------------- "மீட்பர்களாய் நடந்தார்கள் புலிவீரர்கள் மீளமுடியாது பகை தோற்றோடினார்கள்" ----------------------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  6. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ அறிமுகவுரை இந்த ஆவணக்கட்டில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை முஸ்லீம்களால்; 1989ம் ஆண்டு இவர்களை 'முஸ்லிம்கள்' என்ற தனி இனக்குழுவாக விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர்; மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மாத்திரமே ஒருமுகப்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்படும். முஸ்லிம்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டதென்று (புலிகள் மறுத்துள்ள போதிலும்) அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவை குறித்து எதுவுமே பதிவிடப்படாது என்பதையும் முன்கூட்டிய பறைந்துகொள்கிறேன். இதைத் தொகுப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதும் தம்மால் எழுதப்படும் கட்டுரைகளிலிலும் புத்தகங்களிலும் தமது தரப்பால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் அனைத்தையும் வேண்டுமென்று மறைத்தே தமிழர் தரப்பு மீதான கொலைப் பழிகளை விரிப்பர். அவ்விரிப்புகளில் நல்லபிள்ளை வேடமிட்டு தாம் முதலில் தமிழரைத் தாக்கவில்லை என்பது போன்றும் தமிழரே சும்மா இருந்த தம்மைத் தாக்கினர் என்பதான தோற்றப்பாட்டையும் உண்டாக்கியிருப்பர். அதாவது மெய்மைக்கு மாறாக பொய்யான தோற்றப்பாட்டை உண்டாக்கியிருப்பர். மேலும், அதில் தமிழர் தரப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்ட கொலைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்த தம்மால் தமிழருக்கு ஏவல்செய்யப்பட்ட படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் எழுதியிரார். ஆகவே காலம் காலமாக இருந்துவந்த இந்த முஸ்லிம் பக்கம் மட்டும் நியாயம் கேட்பு என்பதற்கு மாறாக தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளையும் எடுத்துரைக்க இவ் ஆவணக்கட்டு முயலும். மேலும் தமிழர் தரப்பும் இதுநாள் வரை வீரியமாக சிங்களவரின் படுகொலைகளை ஆவணப்படுத்தியது போல் முஸ்லிம்களின் அட்டூழியங்களை ஆவணப்படுத்த சிரத்தை எடுத்ததில்லை என்பது எம்தரப்பின் வலுவீனமே. ஆகவே அக்குறையினை போக்கும் படியாகவும் தமிழர் தரப்பு அனுபவித்த கொடுமைகளை எடுத்துரைக்கவும் இவ்வாவணக்கட்டு எழுதப்படுகிறது. இதில் எனது சொந்த எழுத்தாக ஆதாரங்களின் துணையோடு எழுதியிருப்பது "முன்னுரை" மாத்திரமே. மேற்கொண்டு பதிவிட இருப்பவை எல்லாம், பல்வேறு நம்பகமான வலைத்தளங்கள், உதயன் & ஈழநாதம் நாளேடுகள் மற்றும் சில குறிப்பிட்ட பன்னாட்டு அமைப்புகள் ஆகியவற்றால் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், ஊர்காவல்படை, & காடையர்கள் பற்றியும் அவர்களால் ஈழப்போர் காலத்தில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் பற்றியும் வெளியிடப்பட்ட கட்டுரைகள், செய்திகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவையே ஆகும். சுருகங்கச் சொல்லின் ஒரு தொகுப்பாக இருக்கும். இவ் ஆவணக்கட்டானது தொடர்ந்து என்னால் இற்றைப்படுத்தப்பட்டு எமது தமிழ் தேசத்திற்கு இலங்கை முஸ்லிம்களின் இனவெறியால் ஏவல்செய்யப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பான ஒரு பாரிய வரலாற்றுப் பேழையாக, அடுத்தடுத்த தலைமுறைகளின் வரலாற்று அறிவுப்பெட்டகமாக பேணப்படும். *****
  7. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம். 'தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb' மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:- முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி - (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் மாமா முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்) அம்பாறை மாவட்டம் உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம். மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் துயிலுமில்லம். தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம். கண்டலடி மாவீரர் துயிலுமில்லம். மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம். திருகோணமலை மாவட்டம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம். தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம். வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம். உப்பாறு மாவீரர் துயிலுமில்லம். மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம். முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம். வவுனியா மாவட்டம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம். கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம். முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம். யாழ்ப்பாண மாவட்டம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் (தமிழீழத் தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் மணலாறு ஜீவன்முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் மணலாறு டடிமுகாம் எ புனிதபூமி எ கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம் இந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனை பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப்படுவதுண்டு; இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் 'முகையவிழ்த்தல்' என்று குறிப்பிடுவார்கள். நானும் அதையேதான் இவ்வாவணத்திலும் கையாண்டுள்ளேன். இவ்வொவ்வொரு கல்லறைகளினதும் குறிப்புகள் தாங்கிய அந்த அதன்(விதப்பான பெயர் தெரியவில்லை.. கட்டடக் கலையில் அவ்வளவு அறிவில்லை) பின்பக்கத்தின் மேற்புறத்தில் எண்கள் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் . இது அந்தத்தக் கல்லறைகளின் எண்ணாகும். இதை வைத்து கல்லறைகளை இலகுவாக அடையாளம் காண முடியும். அடுத்து, கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்களைப் பற்றி பார்க்கப்போவதோடு தென் தமிழீழ மாவீரர் துயிலுமில்ல வாயில்களையும் தோற்றங்களையும் உங்களிற்கு காட்டுகிறேன். வாருங்கள் தகவலிற்குள் தாவுவோம்…. 1983 - 20 பெப்ரவரி 2009 வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = அண்ணளவாக 24,000 (தவிபு அலுவல்சார் எண்ணிக்கை) 1982 - 2009 மே 18 நள்ளிரவு வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 25,500 - 26,500 தன்னிலாபத்திற்காக மாவீரர்கள் எண்ணிக்கை 50,000+ என்று கூவித்திரிவோரை நம்பவேண்டாம். சிங்களத்தின் இறுதிப் போர் பற்றிய ஒருதலைப் பக்கமான அறிக்கையிலும் 27,000+ என்றுதான் உள்ளதை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்(Humanitarian operation analysis) 1) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது. முகையவிழ்த்தது: ஏப்ரல் 7, 1991 முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல் 1995 ஆம் ஆண்டு சிங்களத்தால் அழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:- 2002 இற்குப் பின்னரான ஒலிமுகம்: 2) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: 1990 இடிக்கப்பட்டது: 1995 புனரமைக்கப்பட்டது: 2002 முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 290 நினைவுக்கற்கள் - 490 தியாகசீலம் - 24 'அதன் சுற்றுச்சுவர்' 2002 இலிருந்து இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்: 3) கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார். இருந்தவிடம்: இராசவீதி, கோப்பாய் முகையவிழ்த்தது: சூலை 14, 1991 முதல் வித்து: கப்டன் சோலை மொத்த பரப்பளவு: 12 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 654 நினைவுக்கற்கள் - 1199 2002 இலிருந்து இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்: 1991 இலிருந்து 1996 இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம், கல்லறைகள் & நினைவுக்கற்கள்: 4) முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 28, 1991 முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு (ஆ.க.வெ இல்) மொத்த பரப்பளவு: 15 ஏக்கர் இருந்தவிடம்: கிளிநொச்சியில் இருந்து 51 கி.மீ இலும் மன்னாரில் இருந்து 70கி.மீ தொலைவிலும் உள்ளது. 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 603 நினைவுக்கற்கள் - 348 'பின்னால் மங்கலாக ஒலிமுகமும் தெரிகிறது' 5)ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 18, 1998 முதல் வித்து: வீர. புரட்சிகா மொத்த பரப்பளவு: 10 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 533 நினைவுக்கற்கள் - 126 'ஆலங்குளத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்' 'ஆலங்குளம் ஒலிமுகம்' 6)கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: லெப். பரமசிவம் இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில் 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279 'ஒலிமுகம்' 7)தரவை மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: பெப்ரவரி 25, 1991 முதல் வித்து: லெப். விகடன் (கண்டலடி-கட்டுமுறிவு நோக்கிய சிங்களத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான எறிகணை வீச்சில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களில் முன்னவர் இவரே.) 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 2500+ 'தரவையில் பொதுச்சுடர் ஏற்றுமிடம் | 180 பாகைக் காட்சி' 'தரவை ஒலிமுகமும் உள்வீதியும் ' 8)மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம் 9)தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: (நிலை அறியில்லை) சுதா 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 487 கல்லறைகள் கட்டும் முன்:- கல்லறைகள் கட்டிய பின்:- 'ஒலிமுகம்' 10)ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சனவரி 19, 1991 முதல் வித்து: லெப். நிக்ஸன் & லெப். லவன் மொத்த பரப்பளவு: 5 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 391 நினைவுக்கற்கள் - 385 ஒலிமுகம்: 11)வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: வீர. வாசுகி 12)மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம் 13)மன்னாரில் இருந்த ஏனைய இரு துயிலுமில்லங்களில் ஒன்று எதுவெனத் தெரியவில்லை! 14)கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,213 நினைவுக்கற்கள் - 755 'இங்கு இரு விதத் தோற்றங் கொண்ட நினைவுக்கற்கள் இருந்தன.' 'இங்கு மூ விதத் தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' நான் மேலே கொடுத்துள்ள படிமங்களில், இடது பக்கம் இருக்கின்ற கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியனவே வலது பக்கம் இருக்கின்ற இரு கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களாக மேம்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆயினும் இது என்னுடைய கருதுகோளே அன்றி அறுதிப்படுத்தப்பட்டதன்று. ஒலிமுகம் (பழையது): ஒலிமுகம் (புதியது): எப்போது பழையதை இடித்துவிட்டு புதியதை கட்டினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழீழ தேசியப் பதக்கம் பெற்ற ஓவியர் புகழேந்தி அவர்கள் நிற்பதை வைத்து (அவர் வந்து சென்ற காலத்தை வைத்துப் பார்த்தால்) இது 2005இற்குப் பின்னரே இடித்துப் புதுப்பிக்கப்பட்டுள்ளதை அறியலாம். 15)முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் 2004 ஆம் ஆண்டில் இது தான் இரண்டாவது மிகப்பெரிய துயிலுமில்லமாகும். 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,670 நினைவுக்கற்கள் -905 'இங்கு இரு விதத் தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' 'ஒலிமுகம்' 2004 இற்குப் பின்னரான ஒலிமுகம்: 16)அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் இங்கு மூன்று வித தோற்றங்கொண்ட கல்லறைகள் இருந்தன. அறியில்லா குறிப்பிட்ட ஆண்டு வரை இங்கிருந்த மொத்த, கல்லறைகள் - 74 நினைவுக்கற்கள் - 73 நினைவுக்கல்: 17) உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே! விதம் 1: விதம் 2: 18) புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே. அக்கல்லறைகள் இரண்டு விதத்தில் இருந்தன. விதம் 1: விதம் 2: இவ்விதம் தான் முதன்முதலில் கட்டப்பட்டது ஆகும். பொதுச்சுடர் மேடை: 19) தேராவில் மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான கல்லறையும் ஒரு விதமான நினைவுக்கல்லுமே இருந்தது. இது விசுவமடுவில் அமைந்திருந்தது. ஒலிமுகம்: "வித்துடல்: லெப். கேணல் அர்ச்சுனனினது ஆகும்" 20) சாட்டி மாவீரர் துயிலுமில்லம் 2002 வரையிலான மொத்தக் கல்லறைகள்: 4 2002 வரையிலான மொத்த நினைவுக்கற்கள்: 150 'சாட்டி ஒலிமுகம்' 'நினைவுக்கற்கள்' 21) உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம் இங்கிருந்த கல்லறைகளும் நினைவுக்கற்களும் (தனியான படிமம் சேர்த்துள்ளேன்) தரவை மாவீரர் துயிலுமில்லததில் இருந்தவற்றைப் போன்றே இருந்துள்ளன என்பதை கீழக்கண்ட படிமத்தில் புலப்படுபவற்றை வைத்து அடையாளம் காணக்கூடியவாறு உள்ளது. ஒலிமுகம்: 22) ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான நினைவுக்கல்லும் அறியில்லா வடிவிலான கல்லறையும் இருந்தது. இதுவரையிலும் கிடைத்த படிமம் கல்லறை கல்லால் கட்டப்படும் முன் எடுக்கப்பட்டதாக உள்ளதால கல்லறையின் வடிவத்தை அறியமுடியவில்லை. இது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கோட்டத்தில் இருந்த ஆலங்குளம் என்ற ஊரில் அமைந்திருந்தது. இதை தலைநகரின் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம் கல்லறைகள்: நினைவுக்கற்கள்: 23)உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான நினைவுக்கல்லும் ஒரு கல்லறையும் இருந்தது. இதனது ஒலிமுக வடிவம் எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தினதைப் போலவே கட்டப்பட்டிருந்தது, ஆனால் மஞ்சள் நிறத்தில் (கனகபுரத்தினதை ஒத்த நிறம்) . கல்லறை & நினைவுக்கல்: ஏனைய 5 துயிலுமில்லங்கள் பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றைவிட பல்வேறு வடிவ கல்லறைகளின் படங்கள் இருப்பில் உள்ளன. இறுதிப்போர் காலத்தில் கிளிநொச்சி மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பரப்புகள்: --> தர்மபுரம் (காலம் அறியில்லை) இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பரப்புகள்: -->தேவிபுரம் 'ஆ' பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை) -->இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை) -->வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை) -->மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது. -->மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன. இவ்வாறு இறுதிநேரத்தில் விதைக்கப்பட்டவை கீழ்க்கண்டவாறு தோற்றமளித்தன: சனவரி 20 பிற்பாடில் இருந்து மே 12 வரை கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடத்தின் தோற்றம் உசாத்துணை: புலிகளால் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்படம்(video) சொந்த அறிவை வைத்து ஆராச்சிகள் மூலம் தேடியெடுத்து எழுதியவை ஈழநாதம்: 28/11/2004 படிமப்புரவு Vimeo sea tigers 85% screenshots only ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  8. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! ஓகஸ்ட் 29, 1995 அன்று 'ஐரிஸ் மோனா' பொறியில் சிக்கி புலிகளின் தகரிச் சூட்டில் தீப்பிடித்த டோறாவை அன்று காலையில் கைப்பற்றி கரைக்கு கட்டியிழுத்துவரும் கடற்புலிகளின் வோட்டர் ஜெட் படகு "... வல்வையில் முதன்முதல் எடித்தாராவை வல்லவர் கடற்புலி இடித்தார் இவை வண்டியில் போனது சக்கையடி, வந்த பகைப்படை புக்கையடி!" --> போர்க்கால இலக்கியப் பாடல் இவை தமிழீழத் தேசப்பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களால் கரும்புலிகள் பற்றிப் பாடப்பட்ட போரிலக்கியப் பாடலொன்றின் வரிகளின் நடுவிலுள்ள கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலையும் சிங்களக் கடற்படையின் கலமொன்று முதன்முதலில் சேதமானதையும் குறித்த வரிகளாகும். கடற்புலிகளால் 1990 ஆம் ஆண்டு தொட்டு சிங்களக் கடற்படையின் பல்வேறு கடற்கலங்கள் கைப்பற்றப்பட்டும் சேதமாக்கப்பட்டும் மூழ்கடிக்கப்பட்டும் வந்தன என்பது பலரும் அறிந்த ஒன்று. இத்திரட்டான ஆவணத்தில் தமிழீழ விடுதலைக்காக நடந்த ஈழப்போரின் காலத்தில் தமிழீழக் கடற்பரப்பிலும் சிறிலங்காக் கடற்பரப்பிலும் சிங்களக் கடற்படையுடன் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் மிண்டிய போது பகைவர் தரப்பில் சேதப்பட்ட, மூழ்கடிக்கப்பட்ட மற்றும் அவர்களிடமிருந்து கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள் பற்றியும் மோதல்களின் நிகழ்வு விரிப்பும் அதனால் இரு அடிபாட்டுக் கன்னைகளின் ஆளணியினரில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவற்றையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன், தமிழர் தரப்புத் தகவல்களாக. இவ்வாவணத்தில் 1991ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ம் நாள் வரை, அதாவது “கடற்புறா” அணி “விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்” என்ற பெயரோடு தமிழீழக் கடற்படையாகப் பரிணாமம் பெற்றது வரை (கடற்புலிகள் மகளிர் பிரிவு 1992.03.01 அன்று தோற்றம் பெற்றது), கடலில் நடைபெற்ற சமர்கள் எல்லாம் கடற்புறா என்ற பெயரின் கீழ் பதிவிடப்பட்டுள்ளன. 'கடற்புலிகள்' என்ற பிடாரச்சொல்லானது 1986 நவம்பரிற்கு முன்னரே பாவனையிலிருந்தது குறிப்பிடத்தக்கது (நவம்பர், குரல் 11, விடுதலைப்புலிகள் இதழ்).. சிறிலங்காவின் வான்படையிடமிருந்த மூன்று அவ்ரோ வழங்கல் வானூர்திகளில் இரண்டு 1995 ஆம் ஆண்டு ஏப்பிரல் 28 மற்றும் 29ம் திகதிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால் யாழில் வன்வளைப்பிற்காக நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்துறைக்கு வான்வழி வழங்கல் செய்யும் திறன் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த அடியால் யாழிற்கு வான்வழி வழங்கல் இனிமேல் நடைபெறாது என்று அப்போதைய சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசு அறிவிப்பு வெளியிட்டது. இவ்வான்வழி வழங்கல் பாதை நிறுத்தப்பட்டதன் விளைவாக யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்காவின் வழங்கல் பாதையானது கடல் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடலில் மக்களின் பயன்பாட்டிற்கும் இடருதவிப் பொருட்களைக் கொணர்வதற்குமென யாழ் மாவட்ட அரச அதிபரால் அமர்த்தப்பட்ட கப்பல்கள் எல்லாம் படையினரால் கையகப்படுத்தப்பட்டு அவற்றில் இடருதவிப்பொருட்கள் என்ற பெயரில் படைக்கலன்களும் போர்த்தளவாடங்களும் யாழிற்கு கொணர்ப்படுவது வாடிக்கையானது (உதயன்: 24/10/1995). ஆகையால் 1996 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான லோரன்ஸ் திலகர் அவர்கள், சிறிலங்கா படைத்துறையின் வழங்கல் பாதையை சிறிலங்காவின் நிலப்பரப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் புலிகள் குறிவைப்பார்கள் என்று பறைந்தார் (தமிழ்நெற்: Tigers target sea bridge, 11/07/1997). மேலும், "தமிழ் ஆட்புல கடற்பரப்பில் - வெளிநாட்டிற்குச் சொந்தமான அல்லது மறுவளமானது - சிறிலங்கா படைத்துறையுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் மிண்டும் எந்தவொரு கடற்கலமும் முறையான படைத்துறை இலக்குகளாக கருதப்படும் என புலிகள் ஏற்கனவே எழுதருகையிட்டுள்ளனர்." என்றார். எனவே யாழிற்கான கடல்வழி வழங்கலை அறவே துண்டிப்பதற்காக 1997 ஜூலை 15 அன்று விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் முறையான படைய இலக்குகளாகக் கருதப்படும் என்று அறிவித்ததோடு “மக்களுக்கான உணவு மற்றும் தேவைகளை வழங்குகிறோம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு போர்த் தளவாடங்களை சிறிலங்கா படைத்துறை அனுப்புகிறது” - உதயன்: 17/07/1997 என்றும் குற்றம் சாட்டினர். எவ்வாறெயினும் 1996 ஆம் ஆண்டு முதலே புலிகள் வழங்கல் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கிவிட்டனர். மேலும், 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் திகதி முதல் சிங்கள அரசால் மூடப்பட்ட ஏ9 வீதி வழியே முன்னர் யாழிற்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுப்பொருட்கள் பின்னர் கடல் வழியாக எடுத்துச் செல்லப்படுமென்று - 12 ஆயிரம் தொன் உணவுப்பொருட்களாம் - சிறிலாங்கா அரசு பரப்புரை செய்தது. இவ்வீதி மூடப்பட்டதற்கான காரணமாக சிங்கள அரசு கூறிய சாட்டுகளில் ஒன்று புலிகளின் யாழ் மீதான (விடுவிப்புப்) படையெடுப்பு தொடங்கியதால் - ஓகஸ்ட் 11ம் திகதி - என்பதாகும். ஆனால் அது தொடங்கிய கையோடு அதையே சாட்டாக வைத்து மூடிவிட்டு படையெடுப்பு கைவிடப்பட்ட பின்னரும் - ஓகஸ்ட் 19ம் திகதி மட்டில் - மூடல் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடல்வழியே உணவுப்பொருட்களும் மக்களின் கடல் போக்குவரவும் என்ற போர்வையின் கீழ் சில பொதுமக்களோடு கப்பல்களில் சிங்களப் படைகளுக்கான படைக்கலன்கள், போர்த்தளவாடங்கள் மற்றும் படையினரே திருமலையிலிருந்து யாழிற்கும் யாழிலிருந்து திருமலைக்குமென மெய்யில் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று பொதுமக்கள் வழங்கிய நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தனர் (உதயன்: 21/02/2007) என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு 1996 அம் ஆண்டு முதல் உண்மைக்குப் புறம்பான போர்வையின் கீழ் பயணித்த போது கடற்புலிகளால் குறிவைக்கப்பட்ட மற்றும் அதனால் அழிபட்ட சில கப்பல்களையும் கைப்பற்றப்பட்டு பின்னர் ஒப்படைக்கப்பட்டவற்றையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளேன். ஆவணத்தை வாசகர் வாசிக்கத் தொடங்கு முன்னர் இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக ஈழப்போர்க் காலத்தில் பாதுகாப்புச் சிக்கலாலும் தமது ஆளணி எண்ணிக்கையினை பகைவர் எடைபோடக்கூடும் என்பதாலும் தவிபு எந்தவொரு சமரிலும் தம் தரப்பில் காயப்பட்டோரின் எண்ணிக்கையினை அறிவித்ததில்லை. ஆகையால் கடற்சமர்களிலும் கடற்புலிகள் தரப்பில் காயப்பட்ட போராளிகளின் விரிப்பானது அறியப்பெறவில்லை. இதே போன்று கடற்சமர்களில் கடற்புலிகளின் படகுகள் (வழங்கல் வண்டிகளாயினும் சரி, சண்டைவண்டிகளாயினும் சரி) ஏதேனும் மூழ்கடிக்கப்பட்டால் அது தொடர்பான தமிழர் தரப்பின் தகவல்கள் எங்கேனும் பெறக்கூடியவாறு உள்ளது. அவ்வாறு 1995 ஆம் ஆண்டின் இறுதிவரை மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் படகுகள் பற்றிய தகவல் முற்றாக எடுத்துவிட்டேன். ஆனால் அதற்குப் பிந்தைய காலத்தியவையில் சிலதே கிடைக்கப்பெற்றுள்ளன. அதிலும் தமிழரின் கட்டளையாளர்களோ அல்லது முக்கியமானவர்களோ வீரச்சாவடைந்திருந்தால் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. வீரச்சாவுகள் நிகழாமல் மூழ்கடிக்கப்பட்ட எந்தவிதமான படகுகள் பற்றிய செய்தியும் கிடைக்கப்பெறவில்லை. சிறு குறிப்புக்கூட இல்லை. கடற்கரும்புலிகள் பயன்படுத்தப்பட்ட கடற்சமர்களின் போது கடற்புலிகளின் வண்டிகள் (கடற்புலிகளின் படகுகள் வண்டிகள் என்றே அழைக்கப்படும்) ஏதேனும் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான தகவல் ‘உயிராயுதம்’ நிகழ்படங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது; அதாவது கடற்புலிகளே தம் இழப்பினை அறிவித்துள்ளனர். ஆனால் அவ்வாறான கடற்சமர்களின் போதுகூட சேதப்பட்ட படகுகளின் விரிப்பு அங்குகூட அறிவிக்கப்பட்டதில்லை. தமிழர் தரப்பில் சேதப்பட்ட அ மூழ்கடிக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கையை சிங்களப் படைத்தரப்புச் செய்திகள் யாவும் நம்பவியலாத அளவிற்கு அள்ளுகொள்ளையாக ஏற்றிக் காட்டியுள்ளன, குறிப்பாக 2006ம் ஆண்டில் பல தடவைகள்; 14 படகுகளை தாம் ஒரே கடற்சமரில் மூழ்கடித்ததாக சிறிலங்கா தேசிய ஊடகமொன்று 10/11/2006 (உதயன் வழியாக) அன்று செய்திவெளியிட்டது இவற்றில் குறிப்பிடத்தக்கது ஆகும். இதுபோன்ற சிங்களப் படைத்துறையின் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட அனைத்துத் தகவலைப் பற்றி பரவலறியான சிங்களச் சார்புக் கொழும்புப் படையப் பகுப்பாய்வாளர் திரு. இக்பால் அத்தாஸ் அவர்கள் பம்பலாகப் பின்வருமாறு கூறியிருந்தார். "கடந்த காலத்தில், பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமையகம் அதிகமான பகை இழப்புகளை வெளியிட்டதாக அறியப்படுகிறது. இந்தப் புள்ளி விரிப்புகளைச் சேர்த்தால், பிரிவினைவாதப் போரின் முழுக் காலத்திலுமானதை, அது புலிகளின் ஆளணி வலுவை விட அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியையும் கொண்டிருக்கும் என்ற கருத்துக்குறிப்புகளுக்கு அடியெடுத்துக் கொடுத்தது." - சன்டே ரைம்ஸ், மார்ச் 30, 1997 (Navy's moment of glory in Mullaitivu seas) ஆகவே சிங்களக் கடற்படைக்கு இழப்புக்கள் ஏற்பட்ட கடற்சமர்களின் போது மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் வண்டிகள் பற்றிய தகவலை - என்னால் உறுதிப்படுத்தப்பட்டவை - மட்டுமே இவ்வாவணத்தில் வெளியிட்டுள்ளேன். எதிர்காலத்தில் மேலும் கிடக்குமாயின் இவ்வாவணத்தில் இற்றைப்படுத்துகிறேன் (update). இல்லையேல் அதை தனியான ஒரு ஆவணமாக வெளியிட முயற்சிக்கிறேன். ******
  9. புத்தாண்டின் குருதி தோய்ந்த விடியல்: காரைதீவு 1985 மூலம்: https://tamilnation.org/tamileelam/muslims/0310karativu.htm வெளியிடப்பட்ட ஆண்டு: அக்டோபர்/நவம்பர் 2003 மூல எழுத்தாளர்: கே.என்.தர்மலிங்கம் - நோர்த் ஈஸ்ரேன் ஹெரால்ட் முதன் முதலில் வெளியிடப்பட்ட இதழ்: 'பியொன்ட் த வால்' இதழ், மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் 1985 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஐ.தே.க அரசாங்கமானது தமிழரின் ஊர்கள் மீது முறைமையான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு கிழக்கில் ‘பயங்கரவாதத்தை’ கைதுசெய்ய முயன்றது. அதன் போது அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் இடம்பெற்ற கொலைகளையும் சூறையாடல்களையும் வரலாற்றறிக்கைப் படுத்துகிறது, இக்கட்டுரை. இக்கட்டுரையானது முதன்முதலில் 'பியொன்ட் த வால்' (த: மதிலுக்கு அப்பால்) என்ற கொழும்பில் உள்ள மனிதவுரிமைகள் இல்லத்தின் காலாண்டு இதழில் வெளிவந்ததாகும். "ஒரு சமூகத்தை அதிகாரத்திலிருந்து விலக்குவது நீண்ட காலத்திற்கு அதிகாரத்தின் நலன்களிலிருந்து அவர்களை விலக்கிவிடும்." கிராமர் ஒஃவ் பொலிரிக்ஸ் (த: அரசியலின் இலக்கணம்) - ஹரோல்ட் லாஸ்கி “அமைதியானது திடீரென வானத்திலிருந்து கீழிறங்க முடியாது, கரைச்சல்களின் மூலகாரணம் அகற்றப்படும் போது தான் அது வரும். போர் என்பது கூர்ந்துகவனிப்பதற்கு இதமான பாடப்பொருளல்ல. இது ஒரு கேவலமான பொருள்… கோடிக்கணக்கான இளைஞர்களை அவர்களின் ஆரம்ப காலத்திலேயே துடைத்தழித்துவிட்டது." கிளிம்ஸெஸ் ஒஃவ் வேர்ள்ட் ஹிஸ்றி (த: உலக வரலாற்றின் கண்ணோட்டம்) - ஜவஹர்லால் நேரு. இஸ்லாமிய வரலாற்று ஆய்வில் ஒரு முன்னணி அதிகாரியான அர்னால்டின் கூற்றுப்படி, "இதுகாறும் துட்டுவமான (கருத்தில் கொள்ளும் அளவிற்கு முக்கியமற்றது) பாலைவன இனத்தின் இந்த வியப்பான விரிவாக்கமானது பணக்காரர்களாக இருந்த அயலவர்களின் நிலங்களையும் பொருட்களையும் தம் சொந்தமாக்கிக்கொள்ளும் விருப்பத்தின் காரணமாக எழுந்ததே அன்றி புதிதாகப் பிறந்த அவர்களின் மதத்தின் பால் ஏற்பட்ட வெறியால் அன்று." என்றார். “சிந்துவின் பிராமண அரசனுக்கு எதிராக முகமது-பின்-குவாசிம் போர் தொடுத்த போது, தெகப்பான போர் மூண்டதோடு அரசனும் சமரில் கொல்லப்பட்டான். அனைத்து ஆண்களும், ஆறாயிரம் பேர், பின்-குவாசிமால் படுகொலை செய்யப்பட்டனர். அரசியும் கோட்டாரத்தில் இருந்த மற்றப் பெண்களும் அவமானத்திலிருந்து தப்பிக்க தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டனர், மேலும் இஸ்லாத்தைத் தழுவ மறுத்த பதினேழு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டன, கோயில்களில் இருந்த தங்கம், விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் பிற செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டன." இந்தியன் ஹிஸ்றி (த: இந்திய வரலாறு) - சிங் மற்றும் பானர்ஜி மேலே மேற்கோள் காட்டப்பட்ட பத்திகள் 1985 ஏப்ரல் 12 முதல் காரைதீவில் நடந்த சம்பவங்களுக்கும், 1980களில் தமிழர்களை முறைமையாக அழிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருந்த போது, அவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வெறுப்புக்கும் வன்மத்துக்குமான சூழலுக்கும் பொருத்தமானது ஆகும். கிழக்கில் உள்ள மூன்று ஆளுகை மாவட்டங்களில் ஒன்று அம்பாறையாகும். இது இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வறண்ட பசுமைமாறா இரண்டாம்-நிலை காட்டுப் பரப்பில் பரவியுள்ள மிகப் பெரியதும் அதிக மக்கள்தொகை கொண்டதுமான மாவட்டமாகும். இங்கு தமிழ் சிறுபான்மையினர் சிங்களவர்களுடனும் முஸ்லிம்களுடனும் இணக்கமாக வாழ்ந்து தங்கள் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரவாகு–நிந்தவூர் பற்றில் உள்ள செழிப்பான நகரமான காரைதீவானது வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் முறையே சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய முஸ்லிம் நகரங்களால் சூழப்பட்ட ஒரு தமிழர் வேற்றுச்சூழாகும். கிழக்கில் உள்ள தமிழ் ஊர்கள் அவற்றின் பெயர்களை பல்வேறு மூலங்களில் இருந்து பெற்றுள்ளன. அருகில் இருக்கும் குன்றுகள், ஆறுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற புவியியல் சிறப்பியல்புகளோடு வரலாற்று நிகழ்வுகள் என அனைத்தும் ஊர்களுக்குப் பெயரிட பங்களித்துள்ளன. அம்பாறை என்ற பெயர் நிர்வாக மாவட்டத்தையும் நகரத்தையும் என இரண்டையும் குறிக்கும் ஒரு தூய தமிழ்ச்சொல் - அம்-பாறை - தமிழர்களின் பண்டைய குடியேற்றத்தின் மையத்தில் இருந்த 'அழகிய பாறை' என்று பொருள்படும். அதேபோன்று காரைதீவு, கருங்கொட்டித்தீவு, சாய்ந்தமருது, நிந்தவூர், திருக்கோவில், தம்பிலுவில் ஆகிய தமிழ் ஊர்கள் ஒவ்வொன்றையும் வருணிக்க ஒரு வரலாறு உண்டு. காரைதீவு மக்கள் முற்றிலும் தமிழர்களாவர், மதப்படி இந்துக்கள் அல்லது கிறிஸ்தவர்கள் ஆவர். கி.பி 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் பத்தினி தேவியின் மிகவும் பழமையான கோவில் அங்குள்ளது, இது யாத்திரையர்களால் மிகவும் மடங்கப்படுகிறது. இப்பகுதியில் மேலும் 10 இந்துக் கோவில்களும் ஒரு தேவாலயமும் உள்ளன. புத்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு விகாரையும் உள்ளது, அங்கு ஆயுதப்படைகள் காரைதீவை வன்வளைத்து அதைக் கைப்பற்றும் வரை இந்து வழிபாட்டாளர்கள் வழிபாடு செய்துள்ளனர். மனித குலத்திற்கு (சிற்சிறு தடைகள் முற்றொழிந்த மனித இனத்திற்கு) சிறப்புத்தகுதியோடு சேவை செய்த பல கோமகன்களை விளைவித்த தனித்த பெருமை காரைதீவுக்கு உண்டு. அவர்களில் சீர்வளர் இராமகிருஷ்ணா இயக்கத்தின் இரண்டு அறிவார்ந்த துறவிகளும் அடங்குவர். ஒருவர் பெரு வண. சீர்வளர் சீர் சுவாமி விபுலானந்த அடிகள் ஆவார். இவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, தற்போதைய அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடசாலைகள் பலவற்றைக் கட்டினார். சுவாமிகள் சிலோன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட போது பேராசிரியர் பதவியை வகிக்க அழைக்கப்பட்ட அரிய சிறப்புத்தகுதியைப் பெற்றிருந்தார். அங்கீகாரம் பெற்ற மற்றொரு துறவி, புனித சீர்வளர் சீர் சுவாமி நடராஜானந்தா அடிகள் ஆவார். அவர் அனைத்து உதவி பாடசாலைகளையும் அரசு கையகப்படுத்தும் வரை இராமகிருஷ்ணா இயக்கத்தால் ஆளுகைப்படும் அனைத்து பாடசாலைகளின் பொது மேலாளராக தொழிற்பட்டார். பல நூல்களை எழுதிய க.கணபதிப்பிள்ளை, 'பெரிய' கணபதிப்பிள்ளை, 'சின்ன' கணபதிப்பிள்ளை, ஆறுமுகம், தங்கராசா, இராசையா, வேலுப்பிள்ளை, மகாதேவன், விநாயகமூர்த்தி, கிருஷ்ணப்பிள்ளை போன்ற சிறந்த புலமை பெற்ற ஆசிரியர்கள் தாராளமயக் கல்வி பரவுவதற்குப் பங்களித்தவர்களில் சிலராவர். அவர்களின் கற்பித்தலானது "பயனுள்ள அனைத்தையும் சொல்லிக்கொடுத்தல்" இல் மையமாக இருந்ததோடு மாணாக்கரின் ஒவ்வொரு கூறிற்கும் வல்லிதம் (ஏதோ ஒன்றிற்கு கொடுக்கப்பட்ட சிறப்பு முக்கியத்துவம் அல்லது மதிப்பு) அளித்து, திறமையை வளர்த்துக்கொள்ளவும், விழிப்புடனும் உணர்திறனுடனும் இருப்பதற்கு மனதை வளர்க்கவும் வாய்ப்பளித்தது. அவர்கள் இறை நம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவினர். அவர்களின் மாணவர்கள் ஒழுங்குமுறைமையிற்கு குறிப்பிடத்தக்கவர்களாக திகழ்ந்தனர். காரைதீவானது அரச ஊழியர்கள், மருத்துவர்கள், பொறிஞர்கள், வைப்பகர்கள் மற்றும் ஈடேற்றிய எழுதுவினைஞர்கள் மற்றும் கவிஞர்களை விளைவித்துள்ளது. காரைதீவு மக்கள் அறிவையும் செல்வத்தையும் கொண்டிருந்தனர், அது அவர்களுக்கு மற்ற சமூகத்தினரிடமிருந்து மரியாதையைப் பெற்றளித்தது. அவர்கள் சுதந்திரமான, மனவொடுக்கம் நிறைந்த, எளிதான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தனர். 1977 பொதுத் தேர்தலின் பின்னர் அவர்கள் அரசியல் சாராக ஐக்கிய தேசியக் கட்சியுடன் அடையாளப்படுத்தப்பட்டனர். காரைதீவைச் சேர்ந்த கல்விமான் இ.விநாயகமூர்த்தி 1981 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மாவட்ட மேம்பாட்டுச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1982 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் காரைதீவு முழுவதுமாக அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவிற்காக தமிழ் வேட்பாளர் குமார் பொன்னம்பலத்திற்கு விருப்பத்தேர்வாக வாக்களித்தது. இதனால் காரைதீவு ஐக்கிய தேசியக் கட்சியின் அரணிருக்கையாக (ஒரு குறிப்பிட்ட காரணம் அல்லது நம்பிக்கை வலுவாக வலுவெதிர்க்கப்படும் அல்லது ஆதரிக்கப்படும் இடம்) விளங்கியது. சுமார் 1981 ஆம் ஆண்டு முதல் அம்பாறைக்கு அருகில் உள்ள சிங்களப் பரப்புகளில் இருந்து உருவான பல இன மோதல்களானவை தமிழர்கள் ஐ.தே.க.வை ஆதரிப்பதைத் தடுத்திருக்கவில்லை. 1984ல் மார்ச்சில் தேசிய பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்ட பிறகும், 1985ல் தமிழர்கள் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர். 1981 ஆம் ஆண்டு கல்முனையில் உருவாக்கப்பட்ட ஒரு கோட்ட அரசியல் கட்சியானது 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற முற்றுத்தெறுவிற்குப் (Holocaust; பேரளவிலான அழிவு அல்லது காதம்) பின்னர் அரசின் சார்ந்தொழுகுகையையும் ஆதரவையும் அனுபவிக்கத் தொடங்கியது. அப்போது, முஸ்லிம்களை தமிழர்களை விட்டு ஒதுக்கி வைப்பதற்கு அதனது அங்கத்துவத்தை ஆப்புக்கட்டையாகப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் சீராட்டுவது புலப்பட்டது. தமிழர்களை இழப்புறுகையாலும் (ஒரு சமூகத்தில் அடிப்படைத் தேவைகளாகக் கருதப்படும் பொருண்ம நலன்களின் பற்றாக்குறை அ தீங்கு செய்தல்) அச்சுறுத்தலாலும் கீழ்நிலைப்பட வைக்கும் திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தத் தொடங்கியது. அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைகள் மற்றும் வேண்டுமென்று தீமூட்டுதல் ஆகிய அச்சுறுத்தல்களானவை தமிழர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இடப்பெயரச் செய்து, உடைமையற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்டவையாகும். புதிய அரசியல் கட்சி அரசாங்கத்திற்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கியது, மேலும் காரைதீவில் தமிழர்கள் மீதான தாக்குதலானது மொசாட், ஜிகாத் மற்றும் அரசாங்கப் படைகளின் கடினக் கூட்டு முயற்சியால் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. அம்பாறையில் காரைதீவு, மீனோடைக்கட்டு, ஒலுவில், அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் உள்ள தமிழர்களை அவர்களது தாயகங்களில் இருந்து விரட்டியடிப்பதற்கு பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்துவதுதான் தரும விதியின் கீழ் அரசாங்கத்தின் கமுக்கத் திட்டங்களாகும், இது 1984 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மணலாற்றில் நடந்ததைப் போன்றதாகும். 1983 இல் தமிழர்களுக்கெதிரான வன்முறையின் பின்விளைவுகளால் நிலைகுலைந்த அதிபர் ஜெயவர்த்தனா, ‘தருமம்’ ஆட்சியுடன் ஒத்திணங்கிவராத தமிழ்க் கோரிக்கைகளை எதிர்கொண்டு அவர்களுக்கு எதிராகப் புதிய உத்திகளை நாடுவது கண்கூடானது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வாடகைக் குண்டர்கள் தமிழர்களைத் தாக்கி, கொன்று, அங்கவீனமாக்கி, பின்னர் அவர்களின் சொத்துக்களைச் சூறையாடி அழித்து, தமிழர்களும் முஸ்லிம்களும் பிளவுபடும் அரசியல் சூழலை உருவாக்குவதே புதிய உத்தியாகும். ஜும்மாவில் தொழுகைக்குப் பிறகு காரைதீவு, அக்கரைப்பற்று, மீனோடைக்கட்டு, ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் தமிழர்கள் மீதான தூண்டப்படாத கொடுகிய (பிறருக்கு ஈவிரக்கம் காட்டாமை) தாக்குதல்கள் ஆரம்பமானது. காவல்துறை ஆதரவு நல்கிய போது மொசாட் பயிற்சியளித்த சிறப்பு அதிரடிப்படையும் ஜிஹாத்தும் தாக்கியதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காரைதீவில் தமிழர்கள் மீதான முதலாவது தாக்குதல் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி காலை 6.00 மணிக்குத் தொடங்கியது. தாக்குதலில் உலங்குவானூர்திகள் கூடப் பாவிக்கப்பட்டன. மறுநாள் அதிகாலையில் வரவிருந்த தமிழ்-சிங்களப் புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்த தமிழர்களுக்கு இது கணிசமான சமய முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். காரைதீவு தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக கல்முனையில் உள்ள அதிகரித்த நகர்ப்புற சந்தை நகரத்திற்கு செல்வது விந்தையாக இருந்தது. விடைபெறும் ஆண்டின் கடைசி நாளில், அவர்களின் வாடிக்கையான வணிகர்களான சோனகர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன. கல்முனையில் கொள்வனவு செய்யும் வழக்கத்தை கடைப்பிடித்து, சிலர் ஏப்ரல் 12 அதிகாலையில் காரைதீவிலிருந்து புறப்பட்டனர். மாளிகைக்காடு என்பது காரைதீவுக்கும் சாய்ந்தமருதுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய சோனகக் குடியேற்றமாகும். காரைதீவில் இருந்து கல்முனைக்கு செல்வோர் மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது ஊடாக பொத்துவில்-கல்முனை வீதி எனப்படும் முதன்மை கேந்திர நெடுஞ்சாலையூடாக பயணிக்க வேண்டும். 1967 ஏப்ரலில் முஸ்லிம் பிரிவை அண்டிய தமிழ் பிரிவுக்குள் வல்லோச்சாளர்கள் (முதலில் பிறரைத் தாக்குபவர்கள்) புயலெனப்புகுந்து வீடுகளுக்கு தீ வைத்தும் சொத்துக்களை அழித்ததாலும் பல நூற்றாண்டுகளாக சாய்ந்தமருதில் நிரந்தர மக்கள்தொகையாக இருந்த தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதன் பின்னர், முஸ்லிம் பிரிவு மற்றும் தமிழ்ப் பிரிவு என இரு பிரிவுகளைக் கொண்டிருந்த சாய்ந்தமருது, தனித்த முஸ்லிம் பிரிவாக மாறியது. அது ஒரு முஸ்லிம் கோட்டமாக மாறியது. தமிழர்களை வலுக்கட்டாயமாக விரட்டியடித்து, அவர்களின் இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டு, கோவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் ஆட்டையப்போடப்பட்டு இன்னும் உசாவப்படாமல், இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளன. சாய்ந்தமருது மற்றும் பிற இடங்களில் தமிழர்கள் மீதான தாக்குதலானது மிகவும் பழங்காலத்திலிருந்தே பதிவுசெய்யப்பட்ட சாய்ந்தமருதில் இந்து-தமிழ் அடையாளத்தின் அனைத்து குறியீடுகளையும் தடயங்களையும் முற்றழித்து பூண்டோடகற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும். கடந்த 12ஆம் திகதி காலை காரைதீவில் இருந்து மாளிகைக்காடு ஊடாக கல்முனை நோக்கி பயணித்த மக்கள் ஜிஹாத் உறுப்பினர்கள் மற்றும் மொசாட் பயிற்சியளித்த சிறப்பு பணிக்கடப் படையினரால் (STF) தாக்கப்பட்டு கடுமையாக அடிக்கப்பட்டனர். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வலுத்த காயமடைந்தனர். எனினும், அவர்கள் சாவிலிருந்து தப்பியிருந்தனர். தாக்குதலுக்குள்ளான ஒருவர் பின்வருமாறு விரிக்கிறார்: “புத்தாண்டின் விருந்துகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பொருட்களை வாங்குவதற்கு நாங்கள் அதிக பணத்தை எடுத்துச் சென்றிருந்தோம். நாங்கள் மாளிகைக்காடு சந்திப்பை நெருங்கிய போது, வீதியின் ஓரத்தில் காவல்துறை ஊர்திகள் சில நிறுத்தப்பட்டிருப்பதையும், சில காவலருடன் படைய உருமறைப்பு அணிந்த ஆட்கள் நிற்பதையும் கண்டோம். காவலர்களுக்கு சற்றுத் தொலைவில் ஏராளமான ஆண்கள் நின்றிருந்தனர், அனைவரும் அப்பரப்புக்கு வேற்றிடத்தவர். நாங்கள் அவர்களின் அருகில் சென்ற போது, அவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் என்பதைக் கண்டுபிடித்தோம், அவர்களின் உடை மற்றும் தாடியால் அடையாளம் காணப்பட்டனர். இளைஞர்கள் மீறத்துடிப்போடு (குறிப்பாக பொறுமையின்மை, மனக்குறை அல்லது சலிப்பு காரணமாக அசைவில்லாமலும் அமைதியாகவும் இருக்க முடியாமல் கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் நிலை) காணப்பட்டனர்." சாட்சி மேலும் தெரிவிக்கையில், “காவல்துறையினர், அதிரடிப்படையினர் (களுவாஞ்சிக்குடி) மற்றும் மாளிகைக்காட்டில் வேற்றிடத்தவரின் இருப்பால் எங்களின் மனதில் எந்தவித ஏந்தின்மையோ (அமைதி குலைவாக, கவலையாக அல்லது சங்கடமாக உணர்தல்.) பதட்டமோ ஏற்படவில்லை. முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் பிறருக்கும் இடையே ஏற்படக்கூடிய அமைதிக் குலைப்பைத் தடுப்பதற்காகவே காவல்துறையினர் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். மாளிகைக்காட்டில் எமக்கு அயல் முஸ்லிம்களுடன் எந்தவித முரண்பாடும் இல்லாததால் நாங்கள் ஓம்பமாக (safe) உணர்ந்தோம். எங்கள் பயணமும் தொடர்ந்தது. நாங்கள் சந்தியை அடைந்த போது, பல இளைஞர்கள் அச்சுறுத்தும் தோற்றத்துடன் எங்களை நோக்கி விரைந்து வந்து கொட்டன்களால் தாக்கத் தொடங்கினர். தாக்குதல் நடத்தியவர்களைத் தவிர, கொல்லக்கூடிய ஆயுதங்கள் ஏந்தியவர்களும் இருந்தனர். இருப்பினும் அவர்கள் தாக்குதலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். “எதிர்பாராத தாக்குதலால் எங்கள் உணர்வுகள் அச்சத்துடனேயே ஓடின. நாங்கள் எங்கள் பணத்தை இழந்து காயத்தையும் மன வேதனையையும் அனுபவித்தோம். இளைஞர்களின் வெறுக்கத்தக்க நடத்தை இதுவாகும். சட்ட நிறைவாக்க அதிகாரி முன்னிலையில் நெடுஞ்சாலையின் சட்டப்படியான வாணிபத்தைப் பயன்படுத்துபவர்கள் மீது தாக்குதல் நடந்தது அருவருப்பான அட்டூழியமாகும். “தாக்கப்பட்ட போது, தாக்குதல் நடந்த இடத்திற்கு மிக அருகில் இருந்த காவல்துறையினரின் கவனத்தை ஈர்க்க நாங்கள் கதறினோம். காவல்துறையினரோ அதிரடிப்படையினரோ கண்டுகொள்ளவில்லை. இந்தப் பகுதியினூடாகப் பின்னாளில் பயணித்த பல தமிழர்கள் காணாமல் போனதால், அன்று அந்த ஆட்கள் எங்களைக் கடத்தாமல் போனது எங்களின் நல்லகாலமே. தனது சொந்த குடிமக்களுடன் உள்ள சிக்கலுக்கு நியாயமான தீர்வைக் காண முடியாத அரசு, சமூகங்களுக்கு இடையே வன்முறையை ஊக்குவிப்பதில் ஈடுபட்டது என்பது மெய்யுண்மையாகும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள பூர்விக தமிழர்களை தாக்குவதற்காக வேறு இடங்களில் இருந்து குண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.” கல்மேல் எழுதியது போல அதிகாலையில் நடந்த தாக்குதலானது தொடர்ந்து வரப்போகின்ற கசப்பான விடயங்களை காட்டும் ஒரு மோசமான செய்தியை அனுப்பியது. அது தமிழர்களுக்கு பேரிடர் வரப்போகிறது என்பதைச் சுட்டிக்காட்டியது. அதிகாரத்தில் இருப்பவர்களின் தீய அறிவினால் மனித உரிமைகளுக்கான மரியாதை குலைக்கப்பட்டது. ஹெர்பேர்ட் ஸ்பென்சர் (1903) என்பவர் தனது 'பிரின்சிப்பல்ஸ் ஒஃவ் குட் கவர்னென்ஸ்' (த: நல்ல ஆளுகையின் கொள்கைகள்) என்ற நூலில், “ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உரிமைகளை மீறுவதைத் தடுக்கவே நல்ல அரசாங்கம் உள்ளது.” என்று கூறி எந்த ஒரு நல்ல அரசாங்கத்திற்கும் ஒரேயொரு கடமையை ஒதுக்கினார். 'சப்ஸ்ரன்ஸ் ஒஃவ் பொலிரிக்ஸ்' (த. அரசியலின் சாரப்பொருள்). அனைத்துத் தரநிலைகளின் படியும், அன்றைய அரசாங்கம் இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப நிற்கத் தவறிவிட்டது. மொசாட் பயிற்சி பெற்ற தரைப்படை மற்றும் தொலைவான இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வாடகைக் குண்டர்கள் மூலம் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்க அரசு தனது படைகளை ஊக்குவித்து வலுப்படுத்தி வருகிறது என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் உறுதிப்படுத்தின. யாழ்.பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டதாரியான கந்தவனம் தேவமனோகரன், 20 வயது, 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எவ்வித சினமூட்டலையும் செய்யாமலேயே முஸ்லிம் தாக்குதலாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவர் கொல்லப்பட்ட போது படலைக்கு அருகே நின்று கொண்டிருந்தார். கொலையாளிகளை காவலர்கள் பிடித்தாத்துடரவில்லை (தேடிப்பிடித்துத் தண்டித்தல்/கொல்லுதல்). காரைதீவு தமிழ் அகதிகள் குமுகத்தால் (எ. விநாயகமூர்த்தி) தெரிவிக்கப்பட்டவை: “அப்போது சுமார் பகல் 2.00 மணி. 1985ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, சுடுகலன்கள், பெற்றோல் குண்டுகள், எரிபொருள் கலன்கள் மற்றும் பிற கொல்லக்கூடிய ஆயுதங்களுடன் சுமார் 800 முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட கும்பல் ஒன்று - அனைவரும் வேற்றிடத்தவர் - காரைதீவுக்குள் புகுந்தது. அவர்களை யாராலும் தடுக்கவியலாமல் இருந்ததோடு முதன்மை வீதியில் இருந்த வீடுகளையும் வணிக நிலையங்களையும் தாக்கினர். இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். "முதலில், தாக்குதலாளிகள் வீடுகளையும் கடைகளையும் சூறையாடினர், பின்னர் கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர். மிகவும் பழமையான பத்தினி கோவில் (கண்ணகி அம்மன் கோவில்) கூட விடப்படவில்லை (முஸ்லிம்கள், நோய் அல்லது கெடுவேளைகளால் தாக்கப்பட்டால், இக்கோவில் தேவியை சாந்தப்படுத்த பல்வேறு பொருட்களை வழங்கினர் என்பது தெரிந்த மெய்யுண்மையாகும்.). கோவிலின் ஒரு பகுதியை எரித்த கும்பல், அதைச் சுற்றியுள்ள மதிலை இடித்தது. கட்டிடங்கள் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டு எரிக்கப்பட்டன. "வெறுப்பின் வெறியில் முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை, வேண்டுமென்று தீமூட்டுதல் மற்றும் கடைகள், வீடுகள் மற்றும் இந்து மத வழிபாட்டுத் தலங்களைச் சூறையாடுதல் போன்ற கொடூரங்களில் ஈடுபட்டனர். வெடிகுண்டுகளால் ஏற்பட்ட அழிவின் தடங்களை விட்டுவிட்டு அவர்கள் நகர்ந்த போது, காரைதீவு சாம்பலாக்கப்பட்டிருந்தது. "பலர் கும்பலால் கொல்லப்பட்டனர். அன்றைய நாள் கொல்லப்பட்டவர்களில் 58 வயதான நல்லரத்தினம் தேவவிரதன் ஒரு ஓய்வூதியம் பெற்றவர் ஆவார். அவர் தனது குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டு தனது வீட்டிலேயே இருந்தார். அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் சூறையாடிய கும்பல், பின்னர் அந்த ஆளையும் தாக்கியது. கீழே விழுந்து கிடந்த அவரை பெற்றோல் ஊற்றி உயிருடன் எரித்ததாகக் கூறப்படுகிறது. "அதேபோன்று கொல்லப்பட்ட நடுத்தர வயதுடைய க.சின்னத்தம்பியின் மீதான மற்றொரு கொலை வழக்கு. சின்னத்தம்பி ஒரு கமக்காரர் என்பதோடு ஒரு வணிகரும் ஆவார். அவர் கமம் மற்றும் வணிகம் இரண்டிலும் வளப்பட்டிருந்தார். குண்டர்கள் முதலில் அவரது கடையை சூறையாடினர், பின்னர் அவரது கடையை தீவைத்து எரித்தனர். அவரது மகிழுந்து, உழுபொறி, இழுபெட்டி ஆகியவையும் தீ வைத்து எரிக்கப்பட்டன. "அனைத்தும் தீப்பிடித்து எரிந்ததும், சின்னத்தம்பியை அவரது கடைகளுக்கு எதிரே உள்ள நெடுஞ்சாலைக்கு இழுத்துச் சென்ற குண்டர்கள், அவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்தனர். அந்த நபர் உயிருடன் எரிக்கப்பட்டார்." மனித உரிமை ஆர்வலர் ஒருவர் பின்வரும் தகவலை வழங்கினார். தமிழ் ஊர்கள் மீதான தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர், பயிர்களைக் காப்பதற்காகவும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும் உரிமம் பெற்ற சுடுகலன்களை வைத்திருந்த அனைத்து ஆட்களையும் பிடித்து ஆயுதங்களை தம்மிடம் சரணடையச் செய்தனர், காவல்துறையினர். வன்முறை வெடிப்பதற்கு முன்னர் சட்ட நிறைவாக்க அதிகாரிகளால் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்பது தமிழர்களை ஆயுதமற்றவர்களாக அட்டூழியங்களுக்குப் புலப்படுத்துவதற்கான முன்கூட்டியே திட்டமிடப்பட்ட உத்தியாக விளங்கிக்கொள்ளப்படுகிறது. தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் போது அவர்கள் மீது ஜிஹாத் மற்றும் சிறப்பு அதிரடிப்படை தாக்குதல் நடத்துவது என்பது ஒரு நுண்ணியமான சூழ்ச்சித்திட்டமாகும். இது 1967 இல் கல்முனையில் தமிழர்கள் தம்மைத் தாக்க வந்த ஒரு கும்பல் மீது சுட்டு தமது உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றியது போலல்லாமல் அதற்கு முரணாக்குவதாகும். 1985 ஆம் ஆண்டு புத்தாண்டு பண்டிகைக்கு முன்னாளில் காரைதீவில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தனர். இதுவரை அனுபவித்திராத அச்சங்களுடனும் துயரங்களுடனும் புத்தாண்டு உதயமானது. அரசாங்கத்தை வில்லன் என்று குற்றம் சாட்டும் விரலும் நீட்டப்பட்டது. வீடிழந்த குடும்பங்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களிடம் உணவோ உடையோ எதுவும் இருக்கவில்லை. தமிழர்களின் தனியாள் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை இன்மையாலும் குமுகாயங்களுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவதில் காட்டிய அப்பட்டமான அவமரியாதையாலும் மனித உரிமைகளுக்கான உலகளாவிய சாற்றாணையின் (UDHR) பிரிவு 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை அரசாங்கம் மீறுவது புலப்பட்டது. அப்பாவிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறிய போது, தமிழர்களின் வாழ்வுரிமை, விடுதலை, பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குறியாக இருந்தன. இரவைச் சாவு அச்சத்தில் மக்கள் கழித்தனர். அவர்களுக்கு இரவு நெடியதாக இருந்ததோடு, விடிந்ததும் புத்தாண்டு நாளானது! பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இரவைக் கழித்த பாடசாலைகளை விட்டு வெளியேறுவதற்கு முன் காலை 8 மணி வரை காத்திருந்தனர். அவர்கள் சூறையாட்டத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவை உண்ணோட்டமிட கவலை கலந்த ஏக்கமுடன் இருந்தனர். ஏப்ரல் 13 ஆம் திகதி பாடசாலைகளை விட்டு வெளியேறத் தயாராகிக்கொண்டிருந்த மக்கள் கேட்ட சுடுகல வேட்டொலிகள், முன்னை நாள் மாலையில் குண்டர்களால் தாக்க முடியாத காரைதீவின் ஏனைய பரப்புகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி நாசமாக்க அவர்கள் திரும்பி வந்துள்ளதைப் பறைந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் பதகளித்துப் போயினர். அன்றைய நாள் ஊரின் மீதான தாக்குதலில் 500 இளைஞர்கள் கலந்து கொண்டதாக காரைதீவு புனர்வாழ்வுக் குமுகம் தெரிவித்துள்ளது. அரசாங்க அதிபருக்கு அவர்கள் அளித்த அறிக்கையில், “ஊர் (காரைதீவு) மீதான தாக்குதல் குறைந்தபட்சம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஒரு மணி நேரத்திலேயே தொடங்கிவிட்டது. ஏறக்குறைய 500 பேர் கொண்ட கும்பல் மூன்று திசைகளிலிருந்தும் காரைதீவு எல்லைக்குள் நுழைந்தது. “கல்முனை – பொத்துவில் … டிரங்க் வீதியோரமாக வடக்கு நுழைவாயிலின் ஊடாக முதல் குழு வந்து வழியெங்கிலும் உள்ள சொத்துக்களை அழித்தது. “இந்த நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் குழுவானது பூசாரி தவிர மற்ற அனைவரும் நுழைவது தவிர்க்கப்பட்ட புனிதமான இடமான பத்தினி தேவியின் தங்க உருவம் பதிவிடப்பட்ட உள்ளறையான கோவில் கருவறைக்குள் நுழைந்தது. நுழைந்தவர்கள் அங்கிருந்த தங்க உருவத்தை அகற்றியதோடு சுற்றுவட்டாரத்தில் இருந்த பிள்ளையார், முருகன் மற்றும் பிற தெய்வங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட கோயில்களின் கோபுரத்தில் உள்ள சிலைகளையும் உடைத்தனர். குண்டர்கள் எந்த வீட்டையோ கடையையோ விட்டுவைக்கவில்லை. முன்னைய நாள் போலவே வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. அவர்கள் சூறையாடிய பொருட்கள் பாரவூர்திகளில் கொண்டு செல்லப்பட்டன. “ஜிஹாத்களின் இரண்டாவது குழு, சித்தனைக்குட்டி சுவாமி கோவில் இருக்கும் வடகிழக்கு திசை வழியாக காரைதீவுக்குள் நுழைந்தது. சற்று எழுதருகையோடு செயற்பட்ட அவர்கள் அருகில் தமிழ்ப் போராளிகள் இல்லை என்பதை உறுதி செய்யும் வரை எந்தத் தாக்குதலிலும் ஈடுபட தயக்கம் காட்டினர். தமிழ்ப் போராளிகளிடமிருந்து எதிர்த்தாக்குதலை அவர்கள் எதிர்நோக்கியதாகத் தெரிகிறது. அவர்கள் தாக்குதலைத் தொடங்க சிறிது நேரம் எடுத்துக்கொண்டனர். தமிழ்ப் போராளிகள் யாரும் இல்லை என்று உறுதியளித்தவுடன், அவர்கள் காட்டு ஆர்வத்துடன் களத்தில் இறங்கினர். “அவர்கள் கோவில்களுக்குக் குண்டு வீசியதோடு மதிப்புமிக்க பொருட்களையும் அகற்றினர். இதையடுத்து, கடைகளையும் வீடுகளையும் தாக்கினர். அவற்றின் கதவுகளை உடைத்து, தங்கள் கைகளால் எடுக்க இயன்ற அனைத்தையும் எடுத்துக்கொண்டனர். “இவர்களின் தாக்குதலின் போது, செங்கல் மற்றும் சீமெந்து கொண்டு கட்டப்பட்டிருந்த அனைத்தும் இடிந்து தரைமட்டமானது. வீடுகளை மட்டுமல்ல, வீடுகளின் சுவர்களையும் கோயில்களையும் கூட அடித்து நொறுக்கினார்கள். சுமார் 2.00 மணியளவில் அப்பரப்பை விட்டு வெளியேறினர். அவர்கள் சென்றபின் அப்பரப்பு முழுவதும் புகை மண்டலமாகவே காட்சியளித்தது. “மூன்றாவது குழு ரி.மயில்வாகனம் தெருவுக்கு வந்து கொள்ளையடிக்கத் தொடங்கியது. முதலில், தங்கள் வருகையை அறிவிக்க கையெறிகுண்டை வெடிக்கச் செய்தனர். முன்னைய நாள் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் ... தாக்குதல் நடத்தியவர்களுக்கு வீடுகளையும் கடைகளையும் உடைத்துத் திறப்பதில் சிரமம் ஏதுமிருக்கவில்லை. தாக்குதலாளிகளின் சூறையாடல் குழு வீடுகளையும் கடைகளையும் கொள்ளையடித்த பிறகு கட்டிடங்களுக்குத் தீ வைத்தது. ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கையளிக்கப்பட்ட மதிப்புமிக்க உடைமைகள் சில நிமிடங்களிலேயே அழிந்துபோயின. “மஹா காலத்துப் பயிரில் அறுவடை செய்யப்பட்ட 450,000 புசல் நெல் தீக்கிரையாக்கப்பட்டது. 1,50,000 மூடைகளையும் எடுத்துச் செல்ல முடியாததால், சேமித்து வைக்கப்பட்ட நெற் களஞ்சியத்தை எரிக்கும் தெரிவை எடுத்திருந்தனர். “வீடுகளில் தங்கியிருந்த என்.அருளானந்தம், த.பேரின்பமூர்த்தி, வி.தங்கவடிவேல், கே.காசிதுரை ஆகிய 4 பேர் சாக்கொல்லப்பட்டனர். அவர்களின் சாவு குறித்து உசாவல் நடத்தப்படவில்லை. கொலையாளிகள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டனர்.” தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், மக்கள் நிகராளிகள், மாவட்ட மேம்பாட்டுச் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஜிஹாத் இயக்கம் பெரிய அளவிலான கொள்ளை, வேண்டுமென்று தீமூட்டுதல், வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துதல் மற்றும் அப்பாவித் தமிழர்களைக் கொல்லுதல் போன்றவற்றில் ஈடுபட்டதாக அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும், நடந்தவை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1983க்குப் பின்னரான காலப்பகுதியில் இப்படியான ஒரு நிலைமைக்குத் தான் தமிழர்கள் இறக்கப்பட்டிருந்தனர். 14 ஏப்ரல் 1985 - ஒரு ஞாயிற்றுக்கிழமையாகும். கடந்த இரு நாட்களில் காரைதீவு மீதான அடுத்தடுத்த தாக்குதல்களின் இன்னாமையான அனுபவங்களை அனுபவித்து மிகவும் வேதனையான இயல்புடைய ஒரு மனவடுவினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் பொதுமக்கள், தாக்குதலாளிகள் மீண்டும் தோன்றமாட்டார்கள் என்றே நினைத்திருந்தனர். ஆனால் மூன்றாவது தாக்குதலை காரைதீவு சந்திக்க வேண்டும் என்பது விதி போலும். அது ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமையின் காலை 8 மணி. மூன்றாவது நாளில் ஜிஹாத்களின் வருகையை கையெறிகுண்டுகளின் வெடிப்புகள் அறிவித்தன. இதே வேளை காவல்துறையினர் காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கதாகும். பாடசாலைகளில் மக்கள் தஞ்சமடைந்தனர். தங்கள் உயிரையும் உறுப்புகளையும் ஓம்பிட (save) இதுவொரு தற்காலிக நடவடிக்கை என்று நினைத்திருந்தனர். பன்னாட்டு குமுகாயம், கத்தோலிக்க திருச்சபை, இளைஞர்கள் கிறிஸ்தவ சங்கம், சிறி இராமகிருஷ்ணா இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், லயன்ஸ் கிளப் மற்றும் பலவற்றின் ஆதரவுடன் தங்கள் வீடுகள் மீளக்கட்டப்படும் வரை, தாம் பாடசாலைகளில் தான் சில காலத்திற்குத் தங்கியிருக்கப்போவதை அவர்கள் யாரும் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. வடக்கு, கிழக்கு என இரு திசைகளிலிருந்தும் கைக்குண்டு வெடியோசைகள் கேட்டன. கைக்குண்டு வெடித்ததைத் தொடர்ந்து வேட்டொலியும் கேட்டது, கடல் உவர்க்கத்தில் (beach) நடந்ததாக நம்பப்படுகிறது. இந்த மோசமானதின் அச்சத்தால் அருண்டு மக்கள் விழிப்படைந்தனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் மலைத்துப்போயினர். அரசியல்வாதிகளின் ‘தமிழர் சிக்கலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான’ வடிவமைப்புகள், நோக்கங்கள், உள்நோக்கங்கள் மற்றும் சூழ்சித்திட்டங்களுக்காக மட்டுமே தாக்குதலாளிகள் சேவை செய்கின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழர்களின் உரிமைகளை முறைமையாக மீறுவதன் மூலம் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டது. இத்தருணத்தில், காரைதீவு மீதான தாக்குதல் நடாத்தப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரான 1984 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு எமது சிந்தனைகளை எடுத்துச் செல்வது பயனுள்ளதாகும். மணலாறு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பரப்புகளில் இருந்து சுமார் 300 தமிழ்க் குடும்பங்களை வன்முறை மூலம் விரட்டியடிப்பதற்கு தரைப்படையையும் வான்படையை அரசு பாவித்ததை நினைவுகூர வேண்டியுள்ளது. இது அறியப்பட்ட அனைத்து நீதிப் பொதுவிதிகளையும் தெளிவாக மீறுவதாகும். ஜிஹாதிகளையும் மொசாட் பயிற்சி பெற்ற ஆயுததாரிகளையும் அறிமுகப்படுத்தியதன் மூலம் இங்கும் சிறிய மாறுபாடுகளுடன் அதே முறைகளை அரசு கையாண்டது. மற்ற மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தியது போல் தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறிவதே தாக்குதலாளிகளின் நோக்கமாக இருந்தது. ஐநா மனித உரிமைகள் சாற்றாணையின் 17வது பிரிவு, "யாரும் தன்னிச்சையாக ஒருவரது சொத்துக்களை இல்லாமலாக்கேலாது." என்று கூறுகிறது. ஆனால், சிறிலங்காவில், அரசு தன்னால் கட்டளையிடக்கூடிய அனைத்து வழிகளையும் பாவித்ததன் மூலம் இது வெட்கக்கேடான முறையில் மீறப்பட்டது. தமிழர்களின் மனித உரிமைகளை அவமதிப்பதும், எல்லா வகையான காட்டுமிராண்டித்தனத்தை அனுமதிப்பதும் போராளிகளை வலுப்படுத்த உதவியது. பெற்றோருடன் தங்கியிருந்த சிறுவர்கள் மெய்யுண்மைகளை அறிய மரங்களின் உச்சியில் ஏறினர். அப்போது அவர்கள் கடலை நோக்கிப் பார்த்ததில் தாக்குதலாளிகள் கிழக்கிலிருந்து தங்கள் தாக்குதலைத் தொடங்குவதற்காக மீன்பிடிக் கடற்கலங்களில் வந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். தாக்குதலாளிகள், உவர்க்கத்தில் தரையிறங்குவதற்கு முன், அவர்கள் அங்கு தரையிறங்குவது ஓம்பலானதா (safe) என்பதை உறுதிசெய்யும் முன்னெச்சரிக்கையை எடுத்தனர். அவர்களை எதிர்ப்பதற்கும் எதிர்த்தாக்குதலைத் தொடங்குவதற்கும் அருகில் தமிழ்ப் போராளிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பியதால் கடற்கலத்தில் இருந்தபடி சுடுகலனால் சுட்டனர். எந்த ஊறும் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் தங்கள் வெடிமருந்துகளுடன் கரைக்குக் குதித்தனர். தாக்குதலாளிகள் கரடித்தோட்டம் பிரிவை நோக்கிச் சென்று வீடுகளையும் கடைகளையும் சூறையாடத் தொடங்கினர். அவர்கள் வெதுப்பகங்கள், மருந்தகங்கள், விலங்குகள் உள்ள கால்நடை கொட்டகைகள், அரிசி ஆலைகள், அரைவை ஆலைகள், அஞ்சல் அலுவலகம், மாவட்ட மேம்பாட்டுச் சபையின் அலுவலகம் மற்றும் கமநல சேவைகள் மையம், கமப் பயிற்றுனர் அலுவலகம் மற்றும் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் போன்ற அனைத்து அரசு நிறுவகங்களையும் தாக்கினர். வீடுகளும் கடைகளும் விரைவில் தீக்கிரையாக்கப்பட்டதால் புகை மேகங்கள் காற்றில் பரவின. பதினெட்டு மீன்பிடிக் கடற்கலங்கள், மீன்பிடி ஏந்தனங்கள் (equipments) மற்றும் ஐந்து மீனவர்களின் குடிசைகள் கூட எரிக்கப்பட்டன. விநாயகர், வீரபத்திரர், அம்பராயன் கோவில், ஆனைக்குட்டி கோவில்களை சேதப்படுத்தினர். தாக்கப்பட்ட கோவில்களின் உடைந்த சுவர்களில் “அல்லாஹு அக்பர்” என்ற வாசகங்களை வரைந்தனர். இரண்டு அரசுப் பாடசாலைகளும் ஒரு பாலர் பாடசாலையும் எரிக்கப்பட்டன. அவர்களின் தாக்குதல் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் நீடித்தது. மக்களுக்கு உணவோ தண்ணீரோ இல்லாததோடு அச்சத்தின் விளைவாக உயிருடன் இருப்பதை விட 'இறந்தவர்கள்' ஆயினர். காரைதீவில் பொதுமக்கள் மீதும் அவர்களது சொத்துக்கள் மீதும் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காணாமல் போயுள்ளதோடு ஏராளமானோரும் காயமடைந்துள்ளனர். ஆதரவற்றுப்போன 84 சிறார்களுக்கு கிராமத் தலைவர்கள் தங்குமிடம் தேடினர். மொத்தம் ஆறு இந்துக் கோவில்கள் தீயாலும் சூறையாடலாலும் சேதப்பட்டன, 802 வீடுகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன; 210 கால்நடைகள், 332 ஆடுகள் மற்றும் 3500 கோழிகள் காதப்பட்டன (பொதுவாக அதிக எண்ணிக்கையில் மக்கள் அல்லது விலங்குகளை ஒரு கொடூரமான அல்லது வன்முறையான வழியில் கொல்வது). ஒரு அரசு மருத்துவமனையும் மருத்துவப் பயிற்சியாளர்களால் நடத்தப்படும் இரண்டு மருந்தகங்களும் முற்றிலும் சேதமடைந்தன, 84 கடைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன; 17 மகிழுந்துகள், இரண்டு உழுபொறிகள், இழுபெட்டிகள், இரண்டு உந்துருளிகள், 22 இரட்டை-மாடு வண்டிகள், 987 மிதிவண்டிகள் என்பன எரிந்து நாசமாகின. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் குண்டர்களுடன் காவல்துறையினர் பாதியாகவா முழுதாகவா உடந்தையாக இருக்கிறார்கள் என்பது மனித உரிமை ஆர்வலர்களை குழப்பியிருந்தது. ஏப்ரல் மாதத்தில் வரும் "சித்திரை ஆண்டுப் பிறப்பு" அல்லது இந்துப் புத்தாண்டுப் பிறப்பு என்பது தமிழர்களுக்கு கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். அதை அளப்பரு பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட ஒன்றாக கருதுகின்றனர், இந்துக்கள். சோதிடசாராக, வசந்த காலத்தில், நல்லவேளையாக, செழிப்பையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் 'வசந்த ருது' காலத்தில் சூரியன் மேஷ இராசியில் நுழையும் போது, இம்மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் கோள்களின் தீய விளைவுகளிலிருந்து விடுபட மத வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். புத்தாண்டானது கோள்களால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கையில் இனிமையான ஆச்சரியங்களையும் களிப்பான தருணங்களையும் தருகிறது என்று நம்பப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து, மொட்டுகளை மலர்விக்கத் தொடங்குவதோடு சுற்றிலும் இனிமையான நறுமணத்தைப் பரப்புவதால் இயற்கையானது அழகையும் கவர்ச்சியையும் சேர்த்துக்கொள்கிறது. கமக்காரர் தனது கடின உழைப்பிற்கு வெகுமதியாக மஹா பயிரில் இருந்து மிகைப்படியான அறுவடையைப் பெறுவார். புத்தாண்டைக் கொண்டாடும் நேரத்தில், வீட்டில் தானியங்களைச் சேமித்து வைத்துவிட்டு மகிழ்ச்சியாக இருப்பார். வீடுகளுக்கு வெள்ளையடித்து, பழைய பாத்திரங்கள் தூக்கி எறியப்பட்டு, புதியவை வாங்கப்படுகின்றன. காரைதீவு மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் ஏவல்செய்யப்பட்ட போது தமிழர்கள் எந்த மனநிலையில் இருந்தார்கள் என்பதை புரிந்து கொள்வது முக்கியமானதாகும். இந்தச் சமயத்தில் வரும் இந்தக் கொண்டாட்டமானது (புத்தாண்டு) சோதிடத்திலும் நேர-கால முக்கியத்துவத்திலும் மூழ்கியிருக்கும் இந்த எளிய, ஊர்ப்புற குமுகாயங்களின் நம்பிக்கை முறைமையிலும், அவர்கள் செய்த எல்லாவற்றிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காரைதீவைச் சுற்றியுள்ள முஸ்லிம் சமுதாயமானது தமிழர்களுடன் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பல ஆண்டுகளாக நிலையான நம்பிக்கையையும் நட்பையும் கட்டியெழுப்பியதோடு, அவர்களைத் தாக்க எந்த காரணத்தையும் கொண்டவர்களாக இருந்ததில்லை. "கடவுள் இரக்கமும் கருணையும் கொண்டவர்" என்று இஸ்லாம் போதிக்கிறது. முஸ்லிம்கள் விருந்தோம்பலையும் தொண்டுகளையும் கடைப்பிடித்ததோடு முயஸினின் கூவலின் பேரில் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் சென்றும் நடுத்தர வழியைப் பின்பற்றினர். நண்பகலில் வழிபாட்டிற்கு அழைக்கப்படும் தமிழர்களுக்கும் தொழுகைக்கு அழைக்கப்படும் முஸ்லிம்களுக்கும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு மத முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஒரு வெள்ளிக்கிழமையில் தான் ஜும்மா தொழுகைக்குப் பிறகு காரைதீவில் அரச வன்முறைகள் ஆரம்பமாகியதோடு தாக்குதலில் சுமார் 800 பேர் இணைந்தனர் என்பதை சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வீடற்ற நிலையில் நின்றவர்கள் மீது உலங்குவானூர்திகளிலிருந்து சுட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் எரிக்கப்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையிலிருந்து தாக்குதலில் ஈடுபட்ட சிலரின் அடையாளம், தாக்குதலுக்குப் பிறகு, உடனடியாக நிறுவப்பட்டது. பங்கேற்பாளர்கள் கொழும்பு வாசிகள் என்றும், 'ஜிஹாத்'தோடு நெருக்கமாக சேர்ந்தியங்குபவர்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 1977 முதற்கொண்டு இலங்கையில் காணப்படுபவற்றிலிருந்து முடிபை எடுப்பதற்கு ஒருவர் மிகையான புத்திசாலித்தனத்தை கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தேவை இல்லை. 1977 ஆகஸ்ட் முதல் அரச படைகளிடமிருந்து தமிழ் குமுகாயம் நையப் புடைப்பைப் பெற்றுவருகிறது. 1977, 1981, 1983 மற்றும் 1984-85 ஆண்டுகளில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், தமிழர்களை அவர்களின் பாரம்பரிய தாயகத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கும் அவர்களை வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் எந்த விலையும் கொடுக்க முனைந்திருப்பதை சுட்டிக்காட்டியது. 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற காரைதீவு மீதான தாக்குதலிலும் இதே முறையை கடைப்பிடித்த போது, நாட்டில் உள்ள தமிழர்களை வேரோடு பிடுங்குவதற்கு அரசு கையாண்ட மிருகத்தனத்தை மறக்க முடியாது போனது. அரசாங்கம் மடைத்தனமாக காரைதீவு மீதான தாக்குதல் ஒரு தனிமைப்பட்ட, தன்னியல்பான தாக்குதல் என்று காட்ட முயற்சித்ததோடு அதை முஸ்லிம்களால் நடத்தப்பட்ட "புனிதப் போர்" என்றும் முத்திரை குத்தியது. போர்கள் சில நேரங்களில் புனிதப் போர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அந்த புனிதப் போர்கள் முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்திற்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன, அவை ஜிஹாத் என்று அழைக்கப்பட்டன. உருவ வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக நபி றசூல் (ஸல்) அவர்கள் இத்தகைய போர்களைப் போதித்ததாகக் கோரப்படுகிறது. காரைதீவு மீதான போர் தமிழர்களை அழிப்பதற்காகவே தவிர மதமாற்றம் செய்வது நோக்கமல்ல! 1985ல் காரைதீவை அழிக்கத் திட்டமிட்டவர்களின் செல்திசையின் இயல்திறத்தை புரிந்துகொள்ள ஜிஹாத் பற்றிய ஒரு சிறு விளக்கம் பொருத்தமானதாக இருக்கும். “ஜிஹாத் என்பது முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக வாள் ஏந்திப் போரிடும் கருத்தாக்கம்” என்று என்ஸைக்ளோபீடியா விளக்குகிறது. இஸ்லாம் என்பது "தார்-அல்-இஸ்லாம்" (இஸ்லாத்தின் இருப்பிடம்) மற்றும் டார்-அல்-பார்ப், (போரின் உறைவிடம்) ஆகியவற்றைக் குறிக்கிறது. ‘பகைவர்களான’ அதாவது முஸ்லிமல்லாத அயலவருக்கு எதிராக, ஜிஹாத் என்று குறிப்பிடப்படும் ஆகாததில் வயது வந்த ஆண்களும், உடல் திறன் கொண்ட ஆண்களும் பங்கேற்க வேண்டும் என்று புனித நூல் வேண்டுகிறது. பகைவர்கள் "காஜி" (இஸ்லாத்தை நம்பாதவர்கள்) மற்றும் 'அக்ல்-அல்-வியரல்' (புத்தகங்களின் மக்கள்) என வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். புத்த சமயத்தவரும் இந்துக்களும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் ஆவர். பகைவர்களுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று இஸ்லாத்தை தழுவுவது மற்றொன்று சாவொறுப்பை எதிர்கொள்வது என்பன அவையாகும். காரைதீவில் தாக்குதல் நடத்தியதில் ஜிஹாத் தவிர்ந்து பாதுகாப்புப் படையினரும் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் புத்த சமயத்தை சேர்ந்தவர்களாகயிருந்தனர். புத்த சமயத்தவரை இரக்கம் மற்றும் மனக்கசிவின் பாதை என்ற வேறுபட்ட பாதையைப் பின்பற்றுமாறு பொரவழைக்கப்பட்டுள்ளனர். உயிரை மதிக்கவும், விலங்குகளிடம் கூட இரக்கம் காட்டவும் புத்த மதம் அதன் பின்பற்றுநர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது. பௌத்தத்தின் மெய்ப்பொருளாயும் அதன் ஒழுக்க நிலைகளை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட எட்டுக் கட்டளைகளில் மூன்றுமான இவை ஒவ்வொரு முறையும் வழிபாட்டின் போது மீளச் சொல்லப்படுகின்றன: "உயிர் எடுப்பதைத் தவிர்ப்பது; திருடுவதையும், சூறையாடுவதையும் தவிர்ப்பது மற்றும் பொய்யுரைப்பதைத் தவிர்ப்பது” என்பன காரைதீவை அழித்தவர்களிடத்தில் இருக்கவில்லை. காரைதீவு என்ற ஊரை சிறப்பு அதிரடிப்படை அழித்ததாகவும் 23 தமிழ் இளைஞர்களை நற்பிட்டிமுனையில் இருந்து கடத்திச் சென்று அனைவரையும் தம்பிலுவிலில் வைத்துக் கொன்றதாகவும் குற்றஞ்சாட்டி கள்ளக் கூற்றுரைகளை வெளியிட்டு அவசரகால சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தார் என்று கல்முனை குடிமக்கள் குழுவின் தலைவர் பால் நல்லநாயகத்தை எதிர்த்து அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 'குடிமை உரிமைகள் இயக்கம்' மற்றும் 'மனித உரிமைகளுக்கான இல்லம்' என்பன அவர்களின் முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணி அணியினரான N. நடேசன், Q.C., J.C.D. கொத்தலாவெல, I.F. சேவியர், சூரிய விக்கிரமசிங்கே, M. அழகராஜா, A. சமரஜீவா மற்றும் N. பெர்னாண்டோ ஆகியோரைப் போட்டு பால் நல்லநாயகம் சார்பாக வாதாடிய போது காரைதீவின் அழிவு கொழும்பு உயர் நீதிமன்றச் சுவர்களுக்குள் எதிரொலித்தது. காரைதீவு மீதான தாக்குதலில் ‘தர்மிஸ்த’ அரசின் கைகளான தேசியப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறையினரின் கைவரிசை காணப்பட்டது. இதில் விந்தை என்னவென்றால், இறந்தவர்களுக்கான உசாவல்கள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தமையே. குற்றவாளிகளை தண்டிக்க அரசு தவறியதே ஊரின் அழிவுக்கு அரசு உடந்தையாக இருந்ததற்கு போதுமான சான்றாகும். காரைதீவை அழிப்பதற்காக பல பாரவூர்திகளில் குண்டர்களை கொழும்பில் இருந்து கொண்டு வந்ததாக பகிரங்க குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராகப் போராடினார்கள் என்று கூறி முஸ்லிம் சமூகத்தைக் காட்சிக்கு இழுக்க அரசாங்கம் முயற்சித்தது. அம்பாறை மாவட்டத்தில் 1977 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட அச்சுறுத்தலைத் தொடர்ந்து பொருளாதார சாராக நலிவடைந்த தமிழர்கள், இன்றைய பண்பாட்டுச் சூழலுக்குப் பொருந்தாத பழங்காலத் தத்துவங்களைக் கொண்டுள்ளனர். தமிழர்கள் நடுவணில் பரவலறியான தலைவராக இருந்த ஒருவர் இரு பத்தாண்டுகளுக்கு முன்னர் என்னிடம் கூறினார், “ 'அவரைப்' பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள் காலமற்ற பொருள், துய்ய* ஆன்மா, ‘ஓம் சத் சித் ஆனந்தம்’. எம்மூலத்திலிருந்து பிறந்தோம்? எவ்விடம் செல்லப்போகிறோம்? இன்பங்களும் துன்பங்களும், உலகின் செல்வமும் வலுவும் அனைத்தும் நிலையற்றது.” இது தான் தவிர்க்கவியலாததை ஏற்கும் மெய்மை. அவரின் இந்தச் சொற்கள், “பரலோக அரசை அடைய, உங்களிடம் இருப்பதை கூட கொடுத்து விடுங்கள்” என இயேசு நாதர் தன் மக்களுக்கு கூறியதை எனக்கு நினைவூட்டியது. கிறீஸ்தவர்கள் தங்கள் மன்றாட்டின் போது “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்” என மட்டும் கேட்கிறார்கள் அல்லவா? அதே போல் வேதாகமமும் “பூமியிலே உங்களுக்கு பொக்கிஷத்தை தேடி வைக்காதீர்கள்” என அவர்களுக்கு கட்டளை இடுகிறதல்லவா? 1956 ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் குமுகாயத்தை அழிக்க முற்பட்டன. காரைதீவின் அழிவு என்பது காரைதீவில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான தடூக (maneuver) முயற்சியாகும். கலாநிதி என்.டி. விஜேசேகராவை மேற்கோள் காட்டுவது பயனுள்ளதாக கருதப்படுகிறது, அவர் தனது ‘பீப்பிள் ஒஃவ் சிலோன்’ (த. சிலோனின் மக்கள்) என்ற நூலில் (1945) பின்வருமாறு பதிவு செய்கிறார்: "இன்றைய தமிழ் மக்கள் தொகையானது தீவு முழுவதும் பரவி வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் செறிவுடன் உள்ளது" அநுராதபுரம், குருநாகல், பொலன்னறுவை, கலாவெவ, தம்புத்தேகம, எப்பாவெல, மன்னம்பிட்டி ஆகிய இடங்களில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் ஒன்று அழிக்கப்பட்டுவிட்டது அல்லது உள்வாங்கப்பட்டுள்ளது. இதே போன்று முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அரசாங்கத்திற்கு வெற்றியளித்துள்ளன. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக பின்பற்ற வேண்டிய திசை தெரியவில்லை. பரவலறியான பாரசீகக் கவிஞரான உமர் கையும் அவர்கள் ரூபையாத்தில் கூறியதை மட்டுமே நாம் அவர்களுக்கு நினைவுபடுத்த முடியும். “முட்டாள்களே, உங்கள் தலைவிதியாக நீங்காப்பழியைக் கொண்டு, நரகத்தின் நித்திய நெருப்பிற்கான எரிபொருளாகும் ஒறுப்புப் பெற்றீர். "நைகரப்படாமல்* அனைத்துப் பேராசையையும் பொறாமையையும் தவிர்க்கவும், வரிசைமாற்றம்* மூலம், ஊத்தைகள் வெல்வது நியாயமானது: முழு காட்சியும் விரைவில் கண்டிப்பாக மறைவுறும்.” (நைகரப்படாமல்* - unperturbed, வரிசைமாற்றம் - permutation, துய்ய - supreme)
  10. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ நிழலரசின்(de-facto-state of Tamil Eelam) கீழ் இயங்கிய தமிழீழக் காவல்துறையின் சீருடைகள் மற்றும் அவர்களால் அணியப்பட்ட அணிகலன்கள் பற்றியே! இதுவே நான் கோராவில் எழுதும் ஈழப்போர் பற்றிய கடைசிக்கு முந்தைய ஆவணமாகும். இன்னும் ஒன்று மட்டுமே எஞ்சியுள்ளது, அது புலிகளின் படைத்துறைச் சீருடை பற்றியது. அதை அடுத்த வாரத்திற்குள் வெளியிடுகிறேன். சரி இவ்வாவணத்தை அவர்களின் சீருடையில் இருந்து ஒவ்வொன்றாகத் தொடங்குவோம்….. சீருடை (Uniform):- தமிழீழக் காவல்துறையின் அதிரடிப்படை தவிர்ந்த ஏனைய பிரிவுகளின் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான நிறம் கொண்ட ஆடையினையே உடுத்தியிருந்தனர். ஆண்:- முழுக் காற்சட்டை (full pant)- கடுநீலம் முழுக்கை & அரைக்கைச் சட்டை - இளநீலம் பெண்:- முழுக் காற்சட்டை - கடுநீலம் முழுக்கை & அரைக்கைச் சட்டை - இளநீலம் → தமிழீழக் காவல்துறையில் யார் முழுக்கைச் சட்டை அணிவார்கள்? யார் அரைக்கைச் சட்டை அணிவார்கள்? என்று எனக்குத் தெரியாது. ← → ஆண்களும் பெண்களும் மேற்சட்டையில் மூன்று தெறிகள்(button) மட்டுமே வெளியில் தெரியுமாறு மேற்சட்டை அணிந்திருந்தனர். → பெண்களினது மேற்சட்டையில் 4 பக்குகள்(pocket) இருந்தன; ஆண்களினது மேற்சட்டையில் 2 பக்குகள் இருந்தன. அவற்றின் நடுவிலே பூட்டுவதற்கு ஒரு தெறி(button) இருந்தது. ->ஆண்களினது முழுக் காற்சட்டையின் பின்பக்கத்தின் பிட்டத்தில் இரு பக்குகள் இருந்தன. அவற்றினைப் பூட்டுவதற்கு பக்கின் மூடியின் கீழ் இரு மூலையிலும் தலா ஒரு தெறி இருந்தது. இவ்விடத்தில் இன்னுமொரு விடையத்தைக் குறிப்பிட விடுர்ம்புகிறேன். அனைத்துக் காவலரும் விசிலினை வைத்திருந்தனர். அதை திரிக்கப்பட்ட கயிற்றில் கட்டி அதை தமது வலது கை தோள்மூட்டில் சுற்றிக் கொளுவியிருந்தனர் (ஏனைய தெற்காசிய நாட்டுக் காவல்துறையினர் போன்று). அக்கயிறு கடுநீல நிறத்தில் (நீளக் காற்சட்டையின் நிறம்) இருந்தது. வெண்கலத்தால் ஆனது விசில். தமிழீழக் காவல்துறையின் ஆண் & பெண் காவலர்கள் அனைவரும் 1996 வரை இருவேறு விதமான தொப்பிகளை(cap) அணிந்திருந்தார்கள். அவை ஆவன ஒரு பக்கக் தொப்பி(one side cap) - பெண்கள் ஆனால் அக்காலத்தில் இவர்களின் உயர் அலுவலர்கள்(higher officers) யாவரும் சுற்றுக்காவல் தொப்பியினையே அணிந்திருந்தனர். முழுக்கை:- 'யாழில் படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள பெண் காவலர்' அரைக்கை:- 'யாழில் SLR கொண்டு படைத்தகையில் ஈடுபட்டுள்ள பெண் காவலர் | வலது பக்க ஓரத்தில் நன்கு உத்துப் பாருங்கள், அரைக்கைச் சட்டையும் குணகு மகுடக்கவியும் அணிந்த இரண்டு ஆண் காவலர்களும் தெரிகின்றனர்' இதன் பக்கவாட்டு நடுப்பகுதி சரியரைவாசியாக பிரிக்கப்பட்டு அதில் ஓர் வில்லை(badge) தைக்கப்பட்டிருக்கும். அது இரு பகுதியாக்கப்பட்டு ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் அதில் பூசப்பட்டிருக்கும். சிவப்பு மேற்பக்கத்திற்கும் மஞ்சள் கீழ்ப்பக்கத்திற்கும் பூசப்பட்டிருக்கும். குணகு மகுடக்கவி(Slouch hat) - ஆண்கள் ஆனால், அக்காலத்தில் இவர்களின் உயர் அலுவலர்கள் யாவரும் சுற்றுக்காவல் தொப்பியினையே அணிந்திருந்தனர். ஆனால், அக்காலத்தில் இவர்கள் அணிந்திருந்த இடைவாரின் நிறம் கறுப்பு ஆகும். முழுக்கை:- 'யாழில் SLR கொண்டு படைத்தகையில் ஈடுபட்டுள்ள ஆண் காவலர்' அரைக்கை:- 'யாழில் SLR கொண்டு படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள ஆண் காவலர்களை உண்ணோட்டமிடும்(inspection) புலித் தலைவர் வே. பிரபாகரன், காவல்துறை பொறுப்பாளர் ப.நடேசன், படைத்துறை கட்டளையாளர்களான அதியரையர்(Brig) ஜெயம்(வ) & அதியரையர்(Brig.) சொர்ணம்(இ) மற்றும் காவல்துறை உயர் அலுவலர்(ஈ)* ' *ஈ- ஈற்று இக்குணகு மகுடக்கவியின் சுண்டிற்கு(bill) அண்டவாக ஓர் வில்லை தைக்கப்பட்டிருக்கும். அது இரு பகுதியாக்கப்பட்டு ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் அதில் பூசப்பட்டிருக்கும். சிவப்பு மேற்பக்கத்திற்கும் மஞ்சள் கீழ்ப்பக்கத்திற்கும் பூசப்பட்டிருக்கும். கடுநீல சுற்றுக்காவல் தொப்பி(patrol cap) 96 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலத்தில் ஆண்காவலரும் பெண்காவலரும் சுற்றுக்காவல் தொப்பிகளையே அணிந்திருந்தார்கள். இவை புலிகளிற்கே உரித்தான தொப்பிகளாகும்(caps) முன் பக்கப் பார்வை: பக்கவாட்டுப் பார்வை 'படத்தில் கொஞ்சம் நிறம் மாறியுள்ளது, தவறாக நினைக்க வேண்டாம். நல்ல படம் கிடைக்கவில்லை' இந்த தொப்பியின் பக்கவாடுகளில் இரு கண்ணிகள் (eyelets) இருக்கும். இவர்களுடைய தொப்பியின் [வரைகவி(Barret) நீங்கலாக] சுண்டிற்கு(bill) நெருக்கமான மேற்புறத்தில் வில்லை ஒன்று சுற்றிவரக் தைக்கப்பட்டிருக்கும். அது மூன்று பகுதியாக்கப்பட்டு மேலும் கீழும் சிவப்பாகவும் நடுவில் ஒக்க வெளிறிய மஞ்சளாகவும் இருந்தது. இந்நிறங்கள் குறித்து நிற்கும் பொருள் பற்றி நான் அறியேன்(unknown). இவை சில வேளை ஈழத்தமிழரின் மஞ்சள் சிவப்பு நிறங்களை குறித்தனவாக இருக்கலாம் என்பது என் துணிபு. இதை தொப்பியின் இரு பக்கவாட்டிலும் இருந்து தொடங்கி பிற்பகுதி முழுதும் மூடிமறைக்கும் விதமாக, தேவைப்பட்ட இடத்தின் அடிப்பகுதியில் இருந்து மேனோக்கி தொப்பியில் 33% கொள்ளும் வகையில் ஓர் துணியானது தைக்கப்பட்டு அது மேன்னோக்கி மடிக்கப்பட்டு தொப்பியூசி(அதான் தொப்பி ஊசி) கொண்டு இருபக்கத்திலும் குத்தப்பட்டிருக்கும். குத்தப்பட்ட இடம் சொண்டு(bill) தொடங்கும் இடமாகும். இதன் சொண்டானது புலிகளின் படைத்துறை சுற்றுக்கவல் தொப்பி(military patrol cap) போல நன்கு தட்டையாகவும் உலகளாவிய சுற்றுக்கவல் தொப்பி போன்றல்லாமல் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கிறது. இதன் பலகம்(panel) மிகவும் விறைத்தது(stiff) ஆகும். கடுநீல வரைகவி(beret) இவ்வகைத் தொப்பியானது கொலுவிருத்தங்களின் போது மட்டும் அணியப்படுவதாகும். இதை காவல்துறை இசைக்குழுவினரும் அணிவர். இவ் வரைகவியில் வில்லையில்லை. வில்லையானது இடது நெற்றிற்கு மேல் இருந்தது. 'கிளி. காவல்துறை நடுவப்பணியகத் திறப்பு விழாவில் கடுநீல 'வரைகவி ' அணிந்து T-56 கொண்டு சீராக நிற்கும் காவலர்' '7- 9- 2003 அன்று தமிழீழக் காவல் துறை நடுவப்பணியக திறப்பு விழாவின் போது காவல்துறை இசுக்குழுவினரும் இவ்வரைகவியை தலையில் அணிந்திருப்பதைக் காணலாம்' வில்லை - Badge பொதுவாக அனைத்துக் தொப்பிகளின் முன்பக்கத்திலும் இந்தப் வில்லையின் மையத்தின் மேற்பகுதியில் கொஞ்சமாக தொடும்படியாக காவல்துறை வில்லையினைக் (badge) குத்தியிருப்பார்கள். அது வெள்ளியால் ஆனது ஆகும். தலைச்சீரா - Helmet போக்குவரத்துக் காவலர்கள் இரு விதமான தலைச்சீராவினை அணிந்திருந்தனர். விதம் - 1 \ விதம் - 2 இந்த வித தலைச்சீராவில் இரு வெவ்வேறு தோற்றமுடைய இலச்சினைகள் பொறிக்கப்பட்டிருந்தன. 1) இந்த தலைச்சீராவின் முன்பகுதியில் 'Police' என்று ஆங்கிலத்தில் கடுநீல நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். அதற்கு மேலே, இதன் தலை முன்பகுதியில் சிவப்பு நிறத்திலான வட்டத்திற்குள் முக்கோணம் இருப்பது போன்ற தோற்றத்திலான ஒரு இலச்சினை உள்ளது. அது குறித்துநிற்கும் பொருள் அறியில்லை. 'இப்படிமத்தில் நீங்கள் காணும் காவலரின் இடுப்புப்பட்டி போன்றே அனைத்துக் காவலரும் கடுநீல நிற இடுப்புப்பட்டி (அண்ணும் பெண்ணும்) அணிந்திருந்தனர்.' 2) இத தலைச்சீராவின் நெற்றிப்பக்கத்தில் கிடைமட்டமான நீளவட்டத்தினுள் மூன்று சுருக்க ஆங்கில எழுத்துக்கள் (U.P.Co) - உபாலி பெரேரா கொம்பனி - எழுதப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்துக்களுடனான வேறு சில காவலர்கள் அணிந்துள்ள தலைச்சீராவில், இந்த ஆங்கில எழுத்துக்களுக்குக்(U.P.Co) கீழே 'Police' என்று கடுநீல நிறத்தில் எழுதப்பட்டுள்ளது. அலகு வில்லை - Unit Badge இருபாலரும் இருபுயத்திலும் அணிந்திருந்தனர். எண் தகடு இதை, →பெண்கள் தங்களின் இடது & வலது தோள்மூட்டில் உள்ள தோள் மணையில் இதைக் குத்தியிருப்பர். →ஆண்கள் வலது மார்பில் பக்கிற்கு(pocket) மேலே குத்தியிருப்பர். ஆண்கள் பெண்களைப் போலல்லாமல் வெறும் எண்களை மட்டுமே குத்தியிருந்தனர். 'பெண்கள் குத்துவது' பதவிக்குறி - Chevrons பதவிக்குறிகளை தமது இடது கையில் குத்திய காவலர்கள் இருக்கும் இரண்டு படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சிலர் இரண்டு பதவிக்கோடுகளையும் வேறுசிலர் மூன்று பதவிக்கோடுகளையும் குத்தியிருந்ததை காணக்கூடியவாறு உள்ளது. அவை இடது கையில் புயவில்லைக்கு கீழே கீழ்நோக்கி பார்த்தப்படியாக குத்தப்பட்டிருந்தன. அவ்வாறு குத்தப்பட்டிருந்த வில்லைகள் பால் வான்னீல நிறத்தில் இருந்தன. இவற்றை குத்திய காவலர்களின் படங்கள் வேறு கிடைக்காமையால் இது பற்றிய வேறு எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. காவல்துறை சீக்காயி - Police whistle இருபாலரும் இடது பக்கத் தோளில் காவல்துறைக்கே உரித்தான கயிறுமூலம் அதை கட்டி இடது பக்க பக்கிற்குள்(pocket) வைத்திருப்பர். தோள் மணை - Shoulder board பெண் அலுவலர்கள் தோளில் கடுநீல நிற தோள் மணை அணிந்திருப்பர். ஆண் அலுவலர்கள் ஏதும் அணியார் மேல் அலுவலர்களில்(Superior officers) இருபாலரும் தோள் மணை அணியார். ஆனால் தோள் மணை இருக்கும் இடத்தில் உள்ள துண்டத்தின்(piece of cloth) மேல் ஒன்று, இரண்டு, மூன்று என்று பதவிக்கேற்ப அறுமுக தாரகைகள் குத்தியிருந்தனர். அத்தாரகையின் நடுவே தட்டையான கூம்பு ஒன்று இருந்தது. 'இம் மேல் அலுவலர்களின் தோள் துண்டத்தின் மேல் அறுமுக தாரகைகள் இருப்பதை கவனி. ஒவ்வொருவரின் தோளிலும் அவரவர் பதவிக்கேற்ப அறுமுக தாரகைகளின் எண்ணிக்கை கூடிக்குறைந்திருப்பதை நோக்குக.' கைத்துப்பு தடறு - Pistol Holster இதை உயர் & மேல் அலுவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மட்டுமே அணிந்திருந்தனர். இதை இவர்கள் இடுப்பில் கட்டுவார்கள். இதற்காக ஒரு வார் ஒன்றினை வலது பக்கத் தோளின் துண்டத்தில் இருந்து நெஞ்சிற்குக் குறுக்காக கைச்சுடுகலனின் பிடங்கோடு இணைத்திருப்பர். இடைவார் - Belt 96 வரை: ஆண்கள் - கறுப்பு நிறம் இவர்களின் இடைவாரினை உள்ளுடுத்துவதற்கு குதைகளிற்கு(loop) பகரமாக தெறிகள்(buttons) கொண்ட ஓர் சிறிய துண்டம்(piece of cloth) முழுக் காற்சட்டையின் இடைவார்ப் பகுதியில் தைக்கப்பட்டிருக்கும். அந்த இடைவாரில் இரு கவர்கள்(prong) இருந்தன. அதைத் திறந்து மூடலாம். இவ்வாறுதான் படைத்துறைக்கும் தைக்கப்பட்டிருந்தது. இது புலிகளின் பாணி! பெண்கள் - வெள்ளை நிறம் ஆண்களிற்குத் தைக்கப்பட்டிருந்ததைப் போன்ற துண்டங்கள், பெண்களிற்குத் தைக்கப்படவில்லை, மாறாக குதைகள்(loops) தைக்கப்பட்டிருந்தன. அது பலவாக இல்லாமல் மேற்சட்டையின் இருபக்க சள்ளையிலுமாக(இறைக்கு மேலிருக்கும் பக்கவாட்டு தசை மிகு பகுதி) மொத்தம் இரண்டு தைக்கப்பட்டிருந்தது. இது இடைவாரினை கீழிறங்காமல் உரிய இடத்தில் வைத்திருக்க உதவியது. அந்த இடைவாரில் இரு கவர்கள் இருந்தன. 'யாழில் SLR கொண்டு படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை உண்ணோட்டமிடும்(inspection) புலித் தலைவர் வே. பிரபாகரன், காவல்துறை பொறுப்பாளர் ப.நடேசன்(இ), படைத்துறை கட்டளையாளரான(Military Commander) சொர்ணம் (வ) மற்றும் காவல்துறை உயர் அலுவலர்(பி) ' 96 இல் இருந்து: ஆண்கள் - கடுநீல நிறம் இவர்களின் இடைவாரினை உள்ளுடுத்துவதற்கு குதைகளிற்கு(loop) பகரமாக தெறிகள்(buttons) கொண்ட ஓர் சிறிய துண்டம்(piece of cloth) முழுக் காற்சட்டையின் இடைவார்ப் பகுதியில் தைக்கப்பட்டிருக்கும். அந்த இடைவாரில் இரு கவர் இருந்தது. அதைத் திறந்து மூடலாம். இவ்வாறுதான் படைத்துறைக்கும் தைக்கப்பட்டிருந்தது. 'போக்குவரத்துக் காவலர் கதுவீ சுடுகலன் (RADAR Gun) கொண்டு வேகத்தை அளவிடும் காட்சி | ' பெண்கள் - வெள்ளை நிறம் & கடுநீல நிறம் →அலுவலர் - வெள்ளை நிறம் →உயர் அலுவலர்(Higher officers) - கடுநீல நிறம் ஆண்களிற்குத் தைக்கப்பட்டிருந்ததைப் போன்ற துண்டங்கள், பெண்களிற்குத் தைக்கப்படவில்லை, மாறாக குதைகள்(loops) தைக்கப்பட்டிருந்தன. அது பலவாக இல்லாமல் மேற்சட்டையின் இருபக்க சள்ளையிலுமாக(இறைக்கு மேலிருக்கும் பக்கவாட்டு தசை மிகு பகுதி) மொத்தம் இரண்டு தைக்கப்பட்டிருந்தது. இது இடைவாரினை கீழிறங்காமல் உரிய இடத்தில் வைத்திருக்க உதவியது. அந்த இடைவாரில் இரு கவர்கள்(prong) இருந்தது. 'பணிக்குச் செல்ல முன் உறுதியேற்கும் பெண் காவலர். இது தமிழீழ காவல்துறை வழக்கம்' உயர் கட்புலன் பாதுகாப்பு கஞ்சுகம் - HIgh Visibility safety vest இது செம்மஞ்சள் நிறத்தில் வீதி போகுவரத்துக் காவலர்களால் அணியப்பட்டது. சப்பாத்து(Shoe): படைத்துறையினைச் சார்ந்தவர்கள் அணியும் சண்டைச் சப்பாத்திற்கு(combat shoe) மாற்றாக சாதாரண சப்பாத்தினை அணிந்திருந்தார்கள். பெண்கைளின் தலைமயிர்: இவர்கள் புலிகளின் படைத்துறையில் இருந்த பெண்களைப் போலல்லாமல் தங்கள் தலைமயிரை வேறுபட்ட விதத்தில் இதோ இப்படித் தூக்கிக் கட்டியிருந்தனர்: ஆண்களின் தலைமயிர்: இவர்களும் புலிகளுக்கே உரித்தான விதத்தில் படைத்துறையில் பணியாற்ற்றும் ஆண்களைப் போலவே மயிர் வெட்டியிருந்தனர். உந்துருளி - Motor bike இவர்கள் வெள்ளை நிற 'கீரோ கொண்டா பாசன்(Hero Honda passion)' உந்துருளியினைப் பயன்படுத்தினர். அவற்றில் காற்றுத்தட்டியும் பொருத்தப்பட்டிருந்தது. 'முகப்பு விளக்கிற்கு மேலே 'தமிழீழ காவல்துறை' என நீல நிறத்தில் எழுதப்பட்டுளதைக் கவனிக்குக | 2006' ''முகப்பு விளக்கிற்கு மேலே 'தமிழீழ காவல்துறை' என நீல நிறத்தில் எழுதப்பட்டுளதைக் கவனிக்குக | 2002'' 'தமிழீழக் காவல்துறை உந்துருளியின் பக்கவாட்டுப் பார்வை | பின் இருக்கைக்கு கீழே ''Police" என நீல நிறத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதைக் கவனிக்குக' ஊர்திகள்: அவை பிக்அப், பஜரோ, கண்டர் என்று பற்பல விதமானவை. இவற்றின் நிறங்கள் வெள்ளை அல்லது கடு நீலத்தில் இருந்தன. போக்குவரத்துக் காவலரின் கைமேசு(Gloves of the TE Traffic Police):- வெள்ளை நிறத்தில் இருந்தது.அதன் உள்ளங்கைப் பகுடியில் ஒரு சிவப்பு நிறத்திலான வட்டம் இருந்தது. புறங்கையில் சத்தாருக்கு இரு பட்டை போன்ற கோடுகள் இருந்தன. கைச்சுடுகலன் (Pistol) உயர் அலுவலர்கள் அனைவரும் கைச்சுடுகலனை வைத்திருந்தனர். வலது கை தோள்மூட்டு தோள்மணையோடு ஒரு இறப்பர் நாடா மூலம் அது பிணைக்கப்பட்டிருந்தது, யாரும் பறித்திடா வண்ணம் பாதுகாக்க. கைச்சுடுகலனை தடறினுள் இட்டு இடது பக்க இடுப்பில் இடுப்புப்பட்டி கொண்டு கட்டியிருந்தனர். 'இக்காவல் அதிகாரி வைத்திருப்பதைக் காண்க' அணிநடையின்போது (During Marchpast) காவல்துறை சிறப்பு அதிரடிப்படை (Police Special Commando) இவர்கள் கீழ்க்கண்ட நிறத்திலான உடையினை அணிந்திருந்தனர் 'படிமப்புரவு: வேசுபுக்கு' 'காவல்துறை சிறப்பு அதிரடிப்படை' 'காவல்துறை சிறப்பு அதிரடிப்படை' காவல்துறை படையணி இப்படையணி 2006ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் இதில் பணியாற்றியுள்ளனர். இவர்கள் பற்றிய மேலதிக குறிப்புகள் ஏதும் என்னிடம் இல்லை. இவர்கள் தமது பயிற்சித் தொடக்கத்தின் போது ஒரு விதமான கடுஞ்சாம்பல் & பச்சை ஆகிய இரு நிறங்களிலான சீருடை அணிந்திருந்தனர். அதே நிறத்திலான சுற்றுக்காவல் தொப்பியும் அணிந்திருந்தனர். சுற்றுக்காவல் தொப்பியில் ஏதோ ஒருவிதமான சதுர அவ்டிவ வில்லையினைப் பொறித்துள்ளனர், ஆனால் அதில் உள்ள சின்னத்தை என்னால் தெளிவாகக் காண இயலவில்லை. பச்சை - ???????? கடுஞ்சாம்பல் போன்ற நிறம் - ????????????? 'பயிற்சித் தொடக்கத்தின் போது எடுக்கப்பட்ட படிமம்.' 'பயிற்சித் தொடக்கத்தின் போது எடுக்கப்பட்ட படிமம்.' ஆனால் நான்காம் ஈழப்போரின் போது (பயிற்சி முடிந்து பணியின் போது) இவர்கள் கடும்பச்சை நிறத்திலான படையணிச் சீருடை ஒன்றை அணிந்திருந்தனர். அதைக் கீழ்க்காணும் 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட படிமத்தில் நீங்கள் காணலாம். இவர்களின் தொப்பியாக புலிகளின்ச் எந்தரப்படுத்தப்பட்ட தொப்பியே பாவிக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் நீட்டுவரிக்காரர் இருவருக்கு நடுவில் நிற்கும் தமிழீழ காவல்துறை படையணிப் போராளியை காணுங்கள் (நான் அவருடைய தொப்பியில் உள்ள வில்லையையும் (badge) அவர் அணிந்துள்ள சீருடையையும் வைத்தே இன்னாரென கண்டுபிடித்தேன்). உசாத்துணை: படங்களை வைத்து சொந்தமாக எழுதியது. அவற்றில் காவல்துறை சிறப்புப்படைக்கான ஆதாரமாக இந்த ஒரு படத்தினை தருகிறேன்: https://www.sundaytimes.lk/020609/columns/sitrep1.html செ.சொ.பே.மு. படிமப்புரவு JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn Stock Photos, Stock Images & Vectors அருச்சுனா புகைப்படக் கலையகம் YouTube http://Thaaraakam.com Log In or Sign Up ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  11. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இவ் ஆவணத் திரட்டில், மார்ச் 26, 2007 அன்று தமிழீழ வான்படையான "விடுதலைப்புலிகளின் வான்புலிகள்" - இன் முதலாவது அலுவல்சார் வான்தாக்குதல் பறப்பிற்கு முன்னர் அவர்கள் வானில் பறந்த போதும் குறித்த திகதிக்குப் பின்னர் அலுவல்சாரல்லாமல் பறந்த போதும் மனிதக் கண்கள் மற்றும் கதுவீகளில் (RADAR) தென்பட்ட மற்றும் கிடைத்த படிமங்கள் மூலம் என்னால் அறியப்பட்ட பறப்புகள் தொடர்பான தகவலைத் திரட்டி காலக்கோட்டின் அடிப்படையில் பதிவிட்டுள்ளேன். முதன் முதலாக சிறிலங்கா வான்படையின் அனுமதியின்றி சமர்ப் பரப்பில் அடையாளம் தெரியாத கன்னைக்குச் சொந்தமான ஓர் மரும வானூர்தி பறந்தது பதிவாகியிருப்பது 1994ம் ஆண்டிலே ஆகும். பலாலி கூட்டுப்படைத்தளத்திற்கு மேலாக வடக்கு நோக்கி சிறிலங்கா படைத்துறையின் அனுமதியின்றி ஒரு மரும வானூர்தி பறந்து சென்றதாகவும் அந்த வானூர்தியை பலாலி வான்கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிங்கள அதிகாரிகள் தொடர்புகொள்வதற்காக குறிகைகள் (ஸிக்னல்) அனுப்பி முயற்சித்த போது வானூர்தியிலிருந்து பகர குறிகைகள் எதுவும் அனுப்பாததால் அவ் வானூர்தி குறித்து உசாவல் செய்யுமாறு வான்படை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்ததாக 'திவயின' என்ற சிங்கள இனவாத நாளேடு செய்தி வெளியிட்டிருந்ததாக 'உதயன்' நாளேடு 19/09/1994 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உசாவலின் முடிவுகள் எதுவும் வெளியிடப்பட்டதாக என்னால் அறியமுடியவில்லை. ஈழத்தீவை விட்டு 'இந்திய அமைதி காக்கும் படை' என்ற பெயரில் வந்த இந்தியப் படையினர் வெளியேறிய பின்னர், ஈழப்போர் வரலாற்றில், சிங்கள அரசின் அனுமதியின்றி சிங்கள வான்படை தவிர்ந்த வானூர்தி ஒன்று சமர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த பரப்பின் மேல் பறந்து சென்ற முதன் நிகழ்வு இதுவேயாகும். இது இவ்வாறு இருக்க, இச்செய்தி வெளியாகி சில மாதங்களுக்குப் பின்னர், அதாவது 1994 நவம்பர் 21ம் திகதி, உதயன் நாளேடு பூரிப்புச் செய்தியொன்றை தமிழீழ மக்களுக்கு வெளியிட்டது. வான்புலிகள் என்ற படைத்துறைக் கிளையை தொடங்கப் புலிகள் ஆயத்தமாகிவிட்டனர் என்றும் சுமார் 20 வானோடிகள் மேற்கத்திய நாடுகளில் அடிபாட்டு வானூர்திகளை ஓட்டப் பயிற்சி எடுத்துவிட்டதோடு புலிகள் ஐந்து வானூர்திகளை தருவித்துள்ளனர் அல்லது அது அவர்களுக்கு கிடைக்கப்பெறும் சூழ்நிலை எழுந்துள்ளது என்று சிங்களச் சார்பு நாளேடான 'சன்டே ஐலண்ட்' செய்தி வெளியிட்டிருக்கிறது என்பதுவே அதுவாகும். இதுவே முதன் முதலாக பெரும்பாலான தமிழீழ மக்கள் "வான்புலிகள்" என்ற பிடாரச்சொல்லைக் கேள்விப்பட்ட தருணம். இதிலிருந்து நான் ஊகிப்பது என்னவெனில், "வான்புலிகள்" என்ற கிளையானது புலிப் போராளிகள் சிலரது நடுவணில் தவிபு ஆல் அலுவல்சாராக நவம்பர் மாத மட்டில் அறிவிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் பொதுமக்கள் நடுவணிலன்று, என்பதாகும். அடுத்தடுத்த இரு மறுமொழிப்பெட்டிகளுக்கும் புலிகளின் அலுவல்சாரல்லாத வான்பறப்புகள் தொடர்பான காலக்கோட்டினைக் காணலாம். *****
  12. நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் இழுவை தெறோச்சிகளின்(Towed Howitzer) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். விடுதலைப் புலிகளிடம் இருந்த தெறோச்சிகள் இழுவை தெறோச்சிகள்(Towed Howitzer) ஆகும்; அவர்களிடம் தானே-பிலிறுந்திய தெறோச்சிகள்(Self-Propelled Howitzer) இருந்திருக்கவில்லை. ஏன் எம் பகையான சிங்களபப்டைகளிடத்தில் கூட அவை இருந்திருக்கவில்லை. புலிகளின் இத்தெறோச்சிகளை இயக்கிய படையணி 'கிட்டு பீரங்கிப் படையணி' ஆகும். இது முற்றுமுழுதாக தெறோச்சிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட படையணியாகும். இப்படையணியில் ஆண்பெண் என இருபால் போராளிகளும் பணிபுரிந்தனர். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" கிட்டு பீரங்கிப் படையணியின் இலச்சினை | Logo of Kittu Artillery Brigade வரலாற்றில் மறைபட்டது! எனக்கு கிடைக்கப்பெற்ற இயக்கத்தின் எந்தவொரு ஆவணத்திலோ இல்லை அவர்களின் புத்தகங்களிலோ இந்த படையணியின் இலச்சினை இடம்பெறவில்லை. விடுதலைப் புலிகள் இந்தப் படையணியின் இலச்சினையினை படையணி பற்றிய கமுக்கத்தினை பேணுவதற்காக மறைத்தார்களா இல்லை வேறு ஏதேனும் காரணங்களால் மறைத்தார்களா என்பது பற்றி நானறியேன். ஆனால் இப்படையணியின் இலச்சினை சிதைவுற்ற ஒரு திரைப்பிடிப்பும் தெளிவாகத் தெரியாத அதேநேரம் சிதைந்த நிலையிலான படிமத்தையே நான் தேடியெடுத்துள்ளேன். அவற்றை வாசகரின் கனிவான வாசிப்பிற்காக இங்கே பதிவிடுகிறேன். 'இதுதான் கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்' சின்னத்தின் மேற்பக்கத்தில் வளைவாகத் தெரிவதில்தான் கிட்டு பீரங்கிப் படையணிக்கான முழக்கம் எழுதப்பட்டிருந்தது. 'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..' இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது. இவை மட்டுமே இப்படையணியின் இலச்சினை பற்றிய தகவல்கள் கொண்ட படங்கள் ஆகும். இப்படையணி போராளிகளை அறிந்தோர் அவர்களிடம் இதனது இலச்சினையினை வேண்டி வரைந்து எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  13. கடற்கோள் கொண்ட நினைவுநாளில் கவியோடு வந்திருக்கும் நான்கொண்ட தலைப்பு "திரும்பியது வேரறுந்த வாழ்வு!" திரும்பியது வேரறுந்த வாழ்வு! "அலைவந்து தாலாட்டும் சிறுதீவு" யென்றான் தேசியக்கவியன்று - அந்த அலையேவந்து ஆழிப்பேரலையானதோ அடயன்று! அன்றாடங்காய்ச்சிகள் முதல் அன்னைமண் காத்தோர் வரை உன்னிலுதிக்கும் ஞாயிற்றின் நாளில் - அவன் உதித்திட முன்னரே காவுகொண்டாய்! புத்தனை வணங்கிய பேய்கள் ஓய்ந்தனவென்றிருக்க, புதுப்பேயாய், நாம் வணங்கிய தாயே நீ வந்ததேனோ? தூங்கும் பாயே பாடையாகிட - பனைவட்டிடையே தொங்கி மிதந்தனர் தமிழீழ மாந்தரன்று - என்ன? ஓமோம்! (தூங்கும்) அவர் நடந்த கரையோரம், திரைதொட்ட காலம் மலையேறிட, அவர் கிடக்கக் கரையெங்கும், திரைதொட்ட காலமானதன்று! நாம் நத்தார் நாளில் திழைத்திருக்க, நம் வீதிபோட வந்தவை எம்மைத் தூக்க, உலையேற்றக்கூட வழியின்றி திரும்பியது வேரறுந்த வாழ்வு! --> நன்னிச் சோழன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.