Jump to content

Search the Community

Showing results for tags 'ஷோபாசக்தி'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 6 results

  1. கதையின் மொழி இசை போன்றிருக்க வேண்டும் March 28, 2023 ஷோபாசக்தி இச்சா, BOX, கொரில்லா உள்ளிட்ட முக்கிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் ஷோபாசக்தியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்தளத்திற்காக உரையாடினோம். அதிலிருந்து தொகுக்கப்பட்டது. உரையாடியவர்: வாசுகி ஜெயஶ்ரீ – இலங்கையில் உங்களது சொந்த ஊர் எது? இலங்கையின் வடதிசையில் ‘பாக்’ நீரிணையில் மிதக்கும் சின்னஞ்சிறிய தீவுகளில் ஒன்றான ‘லைடன்’ தீவில் அமைந்துள்ள ‘அல்லைப்பிட்டி’ கிராமம் ஒருகாலத்தில் என்னுடைய ஊராக இருந்தது. அங்கேதான் நான் பிறந்து வளர்ந்தேன். இப்போது என்னுடைய குடும்பத்தினர் யாரும் அங்கில்லை. எங்களுடைய குடிசை வீடும் இராணுவத்தால் எரிக்கப்பட்டுவிட்டது. வீடிருந்த காணியோ காடு பற்றிக் கிடக்கிறது. யுத்த காலத்தில் இராணுவத்தினராலும் துணைப்படைகளாலும் மூன்று கூட்டுப் படுகொலைகள் எனது கிராமத்தில் நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிக் கிராமவாசிகள் கொல்லப்பட்டார்கள். கிராமத்திலிருந்து ஒட்டுமொத்தமாக இடம் பெயர்ந்த சனங்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் ஊருக்குத் திரும்பவேயில்லை. கிராமத்தைச் சுற்றி இராணுவமும் கடற்படையும் நிலைகொண்டுள்ளன. மக்கள் இருந்தால்தானே அது ஊர். இப்போது அதுவொரு மிகப் பெரிய இடுகாடு. – உங்களது குழந்தைப் பருவம் குறித்து எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? என்னுடைய குழந்தைப் பருவம் அப்படியொன்றும் இனிய நினைவுகளைக் கொண்டதல்ல. பசியும் பட்டினியும் ஊரில் பொதுவாகப் பரவியிருந்த காலமது. சுட்ட பனம் பழத்தையும், அரசாங்கம் இலவசமாக வழங்கும் அரிசியையும், ‘திரிபோசா’ சத்து மாவையும் நம்பியே ஊரில் பல குடும்பங்கள் இருந்தன. கல்வியறிவு குறித்துக் கிராம மக்களிடையே விழிப்புணர்வில்லாத நாட்கள். ஆண் குழந்தைகளுக்குப் பத்து வயது வந்தாலே, கடைப் பையன்களாக சிங்கள நாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவிடுவார்கள். நானும் இத்தகைய குடும்பப் பின்னணியில் வந்தவன்தான். படிப்பில் நான் கெட்டிக்காரனாக இருந்ததால் என்னை வேலைக்கு அனுப்பாமல், தொடர்ந்தும் படிக்க அனுமதித்தார்கள். ஆனாலும், நாட்டில் பற்றி எரிந்துகொண்டிருந்த இனப் பிரச்சினை படிப்பிலே முழுமையாகக் கவனத்தைச் செலுத்த என்னை அனுமதிக்கவில்லை. மிகச் சிறிய வயதிலேயே தமிழ்த் தேசிய அரசியலால் ஈர்க்கப்பட்டுவிட்டேன். தமிழ் இளைஞர் பேரவையைச் சேர்ந்த இன்பமும் அவரது மைத்துனர் செல்வமும் காவல்துறையால் கொடூரமாகக் கொல்லப்பட்டு, என்னுடைய கிராமத்தின் வாயிலிலே அவர்களது சிதைந்த உடல்கள் வீசப்பட்ட போது எனக்குப் பத்து வயது. யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது எனக்குப் பதின்மூன்று வயது. ஓர் இலட்சம் நூல்களிலிருந்தும் ஓலைச் சுவடிகளிலிருந்தும் எழுந்த தீயை எனது கிராமத்துக் கடற்கரையில் நின்று நான் பார்த்திருக்கிறேன். நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்த போதுதான், 1983-இல் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய வன்செயல்களை இலங்கை அரசும், சிங்கள இனவெறியர்களும் நிகழ்த்தினார்கள். இந்தத் தொடர் போக்குகளின் விளைவாகவே, நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தேடிச் சென்று அவர்களோடு இணைந்துகொண்டேன். – அப்போது பல போராளி இயக்கங்கள் இருந்தபோதும், ஏன் விடுதலை புலிகள் இயக்கத்தைத் தேர்வு செய்தீர்கள்? எல்லாப் போராளி அமைப்புகளுமே வர்க்க ஒடுக்குமுறையற்ற, சாதியற்ற, சமதர்ம சோசலிஸத் தனித் தமிழீழம் என்ற பிரகடனத்தையே அப்போது முன்வைத்தார்கள். அதை அடையும் வழியாக ஆயுதப் போராட்ட வழிமுறையை முன்னிறுத்தினார்கள். ஆயுதச் செயற்பாடுகளிலும், அரச படைகளுக்கு எதிரான தாக்குதல்களிலும் புலிகள் இயக்கமே மற்றைய இயக்கங்களைக் காட்டிலும் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது. புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய இயக்கங்களை விட, உறுப்பினர்களின் எண்ணிக்கையளவில் புலிகள் சிறிய இயக்கமாக இருந்தால் கூட, ஒரு கெரில்லா அமைப்புக்குரிய எல்லாவிதக் கட்டமைப்புகளையும் புலிகள் அப்போதே உருவாக்கியிருந்தார்கள். ‘சோசலிஸ தமிழீழத்தை நோக்கி’, ‘சோசலிஸ சித்தாந்தமும் கெரில்லா யுத்தமும்’ என இரண்டு நூல்களைக்கூட புலிகள் வெளியிட்டிருந்தார்கள். இவைதான் என்னைப் புலிகள் அமைப்பில் இணையச் செய்தன. – தேடிச்சென்று சேர்ந்த புலிகள் இயக்கத்திலிருந்து நீங்கள் வெளியேறக் காரணம் என்ன? நான் ஏதோ உணர்ச்சி வேகத்தில் சென்று புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவன் அல்ல. கிடைத்த நூல்களையெல்லாம் வாசிக்கும் பழக்கமிருந்ததாலும், வயதில் பெரியவர்கள் பேசுவதை வாய் பார்க்கும் வழக்கமிருந்ததாலும் சோசலிஸம், தமிழ்த் தேசியம், வியட்நாம் போன்ற நாடுகளில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் குறித்தெல்லாம் சாடைமாடையாக அறிந்து வைத்திருந்தேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சோஸலிச முன்னோக்குடைய விடுதலை இயக்கம் என்ற நம்பிக்கையோடுதான் நான் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். என்னிடம் மிகத் தீவிரமான தமிழ்த் தேசியப் பற்று இருந்தாலும், அந்தத் தமிழ்த் தேசிய அரசியல் ஒருபோதும் தீவிலிருக்கும் பிற இன மக்களைப் பகைமையாகக் கருதக்கூடாது, இலங்கை இனவாத அரசும் அதன் ஏவல் படைகளுமே நம்முடைய எதிரிகள் என்பதுவே என்னுடைய எண்ணமாகயிருந்தது. அதேநேரத்தில் நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் உள்ளுறைந்திருக்கும் சாதியம், ஆணாதிக்கம் போன்ற தீமைகளுக்கு எதிராகப் போராடி அவற்றைத் தகர்ப்பதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் செயற்பாடே என்றுதான் கருதினேன். இயக்கமும் அப்படித்தான் சொல்லியது. அதுதான் தன்னுடைய கொள்கை என்றது. ஆனால், இயக்கத்தின் உண்மையான நடைமுறை அதுவல்ல என்பது எனக்குத் தீர்க்கமாகப் புரியத் தொடங்கியபோதுதான், என்னுடைய இயக்க விசுவாசத்தில் கீறல் விழத் தொடங்கியது. அப்பாவிச் சிங்கள மக்களைப் புலிகள் இயக்கம் கொலை செய்தது, தமிழ் மக்களுக்குள்ளிருந்து எழுந்த சனநாயகத்தைக் கோரிய விமர்சனக் குரல்களை இயக்கம் அழித்தொழித்தது, விளிம்புநிலை மக்களைத் திருடர்கள், விபச்சாரிகள் எனக் குற்றம்சாட்டி மின்கம்பங்களில் கட்டிச் சுட்டுக் கொன்றது. புலிகளின் இதுபோன்ற கொடுஞ்செயல்களால் என்னுடைய அதிருப்தி வளர்ந்துகொண்டே சென்றது. சகோதரப் போராளி இயக்கங்களைப் புலிகள் தாக்கி அழித்தபோது, அந்த அதிருப்தி உச்சத்திற்குச் சென்றது. நான் இருந்த புலிகளின் அணியொன்றைத் தலைமை தாங்கிய பொறுப்பாளர்களினது அடாவடியும், எதேச்சாதிகார நடவடிக்கைகளும் இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை எனக்கு உடனடியாக ஏற்படுத்தின. அடிமட்டப் போராளியான என்னுடைய எதிர்ப்பையோ, கருத்தையோ தெரிவிப்பதற்கான எந்தச் சனநாயக வெளியோ, வாய்ப்போ இயக்கத்திற்குள் கிடையாது. சனநாயகப் பண்பே இல்லாமல், தலைமை வழிப்பாட்டுடன் மேலிருந்து கீழாகக் கட்டப்பட்டிருந்த புலிகள் இயக்கம் மற்றைய போராளி இயக்கங்களையும், சாதியொழிப்புப் போராட்ட அமைப்புகளையும், பிற அரசியல் கட்சிகளையும், தொழிற்சங்கங்களையும் தடை செய்ததன் மூலமாகத் தமிழ்த் தேசிய அரசியலில் ஒற்றை இயக்கமாக, இறுக்கமான அதிகார மையமாக மாறிக்கொண்டிருந்த காலத்தில்தான் நான் இயக்கத்திலிருந்து வெளியேறினேன். – எந்தச் சூழ்நிலையில் இலங்கையிலிருந்து வெளியேறினீர்கள்? நான் இயக்கத்திலிருந்து வெளியேறி, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமலேயே இருந்தேன். எனக்கு இயக்கத்தின் நடைமுறைகளில் பிரச்சினை இருந்ததே தவிர, சிறுவயது முதல் என்னிடமிருந்த தமிழீழக் கனவை என்னால் கைவிட முடியவில்லை. ஆனால், ஒரு மாற்று அரசியலை முன்னெடுப்பதற்கான தொடர்புகளோ, அரசியல் தெளிவோ என்னிடமிருக்கவில்லை. எனினும், எக்காரணம் கொண்டும் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற உறுதியோடிருந்தேன். செயலூக்கமுள்ள புலிகள் இயக்கத்தின் தவறான அரசியல் நடவடிக்கைகளுக்கும் தமிழீழக் கனவுக்கும் இடையே என்னுடைய மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. என்னுடைய இருபத்தைந்தாவது வயதிலே, நான் ‘புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்’ என்ற ட்ராட்ஸ்கிய அமைப்பை அய்ரோப்பாவில் சந்தித்து அவர்களோடு இணையும்வரை இந்த ஊசலாட்டம் எனக்குள் இருந்துகொண்டேயிருந்தது. நான் இயக்கத்திலிருந்து வெளியேறிய ஆறு மாதங்களில், இந்திய அமைதிப் படை இலங்கைக்கு வந்தது. அடுத்த மூன்று மாதங்களில் இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் இடையே போர் தொடங்கியது. போர் உக்கிரமான போது, என்னை மறுபடியும் இயக்கத்தில் இணையுமாறு என்னுடைய முன்னாள் சகாக்கள் கேட்டார்கள். யாழ்ப்பாணக் கோட்டைக்கு மிக அருகிலிருப்பதால் என்னுடைய கிராமமும் கடலும் இராணுவரீதியாக முக்கியமான பகுதிகள். கோட்டை இராணுவ முகாமிலிருந்து தீவுப்பகுதிக்குள் இராணுவம் நுழைவதைத் தடுப்பதற்காக பண்ணைப் பாலத்தின் முனையில், என்னுடைய கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் காவலரண் என்னுடைய பொறுப்பில்தான் நீண்டகாலமாக இருந்தது. எனவே என்னுடைய அனுபவ அறிவும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. நான் உறுதியாக மறுத்துவிட்டேன். இந்தியாவுடன் மோதுவது நமக்கு மிகப் பெரும் அழிவைக் கொண்டுவரும் என்று எனக்குத் தோன்றியது. இது ஏதோ என்னுடைய அரசியல் தீர்க்கதரிசனத்தால் தோன்றியதல்ல. ஒரு எளிய கிராமத்து மனிதரிடம் அப்போது இதைக் கேட்டிருந்தால் கூட அவரும் இதையேதான் சொல்லியிருப்பார். அமைதிப் படையினருடனான போர் மிகப் பெரும் அழிவுகளை எங்களுக்குக் கொண்டுவந்தது. அந்த யுத்தத்தில்தான் முள்ளிவாய்க்காலில் புலிகளின் இறுதித் தோல்விக்கான முதல் ஆணி அறையப்பட்டது. ‘ஸலாம் அலைக்’ நாவலில் அந்த இருண்ட காலங்களைக் குறித்து நான் விரிவாக எழுதியிருக்கிறேன். இந்திய அமைதிப் படையினர் காட்டுமிராண்டித்தனத்தை எங்களது மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டார்கள். எண்ணற்ற கொலைகளும், கொள்ளைகளும், பாலியல் வல்லாங்குகளும் அமைதிப் படையினரால் நிகழ்த்தப்பட்டன. சந்தேகப்பட்ட இளைஞர்களையெல்லாம் கைது செய்து சித்திரவதை செய்தார்கள். புலிகளை மட்டுமல்லாமல், முன்னாள் புலிகளையும் தேடித் தேடி அழித்தார்கள். இந்தச் சூழலில்தான் நான் யாழ்ப்பாணத்தை விட்டுக் கொழும்புக்குத் தப்பிச் சென்றேன். சில காலங்களுக்குப் பின்பாக, இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டேன். நான் சிறையிலிருந்து வெளியே வந்த 1990-ஆம் வருட நடுப்பகுதியில், போர் உச்சக்கட்டத்திலிருந்தது. கொழும்பிலிருந்த தமிழ் இளைஞர்களை அரச படையும் துணைப்படைகளும் வேட்டையாடிச் சுட்டு, உடல்களைத் தெருவிலே வீசிக்கொண்டிருந்தன. என்னால் யாழ்ப்பாணத்திற்கும் திரும்பிச் செல்ல முடியவில்லை. பாதைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. நான் எனது உறவினரான பயண முகவர் ஒருவரின் உதவியோடு, தாய்லாந்துக்குத் தப்பிச் சென்று, அங்கே அய்.நா. நிறுவனம் அகதிகளுக்கு மாதாமாதம் வழங்கும் உதவித் தொகையைப் பெற்று வாழ்ந்தேன். அங்கேயும் ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள். அகதிகளுடைய விசாவுக்கு அய்.நா. நிறுவனம் பொறுப்பெடுக்காது. பல தடவைகள் ‘பாங்கொக்’ குடிவரவுச் சிறையில் அடைக்கப்பட்டேன். 1993-இல் பிரான்ஸுக்கு அகதியாகச் சென்றேன். அப்போதைய உங்களது மனநிலை பற்றிச் சொல்ல முடியுமா? இரண்டு வருடங்களில் நாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடுதான் என்னுடைய புலப் பெயர்வுகள் ஒவ்வொரு தடவையும் நிகழ்ந்தன. தமிழீழக் கனவு என்னுள் உயிர்ப்போடு இருந்தது. ஆனால், நாட்டுக்குத் திரும்பிச் செல்ல நீண்ட நெடிய முப்பத்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அதுவும் அந்நியனாக, பிரஞ்சுக் குடிமகனாக சுற்றுலா விசாவில் சென்று திரும்பியிருக்கிறேன். – பிரான்ஸில் உங்களை தக்கவைத்து கொள்ள முதலில் பார்த்த வேலை பற்றி சொல்லுங்கள்? முதலில் செய்த வேலை சட்டவிரோதமானது. விளம்பர அட்டைகளை வீடுகளுக்குப் போடுவது. அதன் பின்பு பொருட்காட்சி மண்டபங்களில் தூய்மைப் பணி செய்தேன். வேலை செய்வதற்கான விசா எனக்குக் கிடைக்க ஒரு வருட காலமானது. பின்பு உணவகத்தில் சமையலறைப் பணிக்குச் சட்டப்படி சென்றேன். – எழுத வேண்டும் என்று எப்போது முடிவு செய்தீர்கள்? அதற்கான உந்துதல் எப்படி ஏற்பட்டது? வாசிப்பின் மீதும், தமிழ் சினிமா மீதும் எனக்கிருந்த இயல்பான ஆர்வமே என்னை எழுதுவதை நோக்கி இட்டுச் சென்றது. சிறுவனாக இருந்தபோதே கிராமத் திருவிழாக்களில் நடத்துவதற்காக நாடகங்களை எழுதி நடிக்கத் தொடங்கினேன். என்னுடைய பதினேழாவது வயதில் முதல் கவிதை ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வெளியானது. அந்தக் கவிதையின் தலைப்பு ‘விசாக்கள்’ என்றிருக்கும். வடபகுதித் தமிழ் மக்கள் வவுனியாவைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால், சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்றொரு சட்டம் அப்போது அரசால் போடப்பட்டிருந்தது. அதைக் குறித்தது அந்தக் கவிதை. – உங்களது BOX நாவலின் பாத்திரமான ரேமன் பக்ததாஸ் பின் நாட்களில் கிறிஸ்தவ ஊழியராக மாறியிருந்தார் என்றும், அவர் அங்கே இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்ததாகவும் எழுதியிருப்பீர்கள். கிறிஸ்துவ அமைப்புகள் தமிழ் மக்களுக்கு நிஜமாகவே உதவியிருக்கின்றனவா? கிறிஸ்துவ திருச்சபையும், கிறிஸ்துவ அமைப்புகளும் மக்களை முட்டாள்தனத்திலும் மூட நம்பிக்கைகளிலும் ஆழ்த்தி வைக்கவும், உழைப்பைச் சுரண்டவும் நுட்பமாகச் செயற்படுபவை. அதேவேளையில் மதம் பரப்பும் நோக்கத்தோடு கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் அவை சேவையும் செய்துள்ளன. எல்லா அமைப்புகளிலும் விதிவிலக்காகச் சில உண்மையான மக்கள் ஊழியர்கள் இருப்பார்கள். கிறிஸ்துவ அமைப்புகளிலும் அவ்வாறு சில பாதிரிகள் இருக்கிறார்கள். யுத்தகாலத்தில் பொதுமக்களைக் காக்கும் முயற்சியில் சில பாதிரிகள் தீவிரமாக இறங்கிச் செயற்பட்டிருக்கிறார்கள். இராணுவத்திடமிருந்து மட்டுமல்லாமல், புலிகளிடமிருந்தும் அவர்கள் மக்களைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த முயற்சிகளில் சில பாதிரிகள் உயிரிழந்திருக்கிறார்கள். மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் வெளியுலகம் அறிய அறிக்கையிட்டிருக்கிறார்கள். – கிறிஸ்துவத்தை பரப்புரை செய்ய வந்தவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பரவிக் கிடந்த சாதியத்தை உடைக்க முயற்சி செய்ததையும் அந்த நாவலில் சொல்லியிருக்கிறீர்கள்… இதை விரிவாகச் சொல்ல முடியுமா? கிறிஸ்துவ மதத்தில் ஏட்டளவில் சாதி கிடையாதுதான். ஆனால், கிறிஸ்துவர்களிடையே – குறிப்பாக யாழ்ப்பாணக் கிறிஸ்துவர்களிடையே- சாதியம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. காலனிய காலத்தில் இலங்கைக்கு வந்த வெள்ளையின கிறித்துவ மத போதகர்களுக்குச் சாதி கிடையாது. ஆனாலும், அவர்களில் பலர் இலங்கையிலிருந்த சாதிய முறைமையையும், தேச வழமைச் சட்டத்தையும் அனுசரித்துப் போனார்கள். அவர்களில் மிகச் சிலர், சாதிவெறி வெள்ளாளர்களின் எதிர்ப்பையும் மீறி, தங்களது மிஷன் கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதில் உறுதியாக நின்றார்கள். அப்படியான ஒரு பாதிரியாரைத்தான் நான் BOX நாவலில் குறிப்பிடுகிறேன். பிக்னல் என்ற பெயருடைய அந்தப் பாதிரியார் என்னுடைய கற்பனையல்ல. வரலாற்றில் வாழ்ந்த உண்மையான மனிதர். ஆனால், இன்றைக்கு ஈழத்திலிருக்கும் சுதேசிப் பாதிரிகளுக்கும், ஆயர்களுக்கும் சாதி இருக்கிறது. ‘உன்னை நீ நேசிப்பதைப் போலவே அயலானையும் அன்பு செய்’ என்பவர்கள் தேவாலயத்திற்குள்ளேயே ஊடுருவியிருக்கும் சாதியைக் களையும் செயல்களில் இறங்குவதில்லை. பக்தகோடிகளுக்குப் பல மணிநேரம் நன்னெறி வாழ்க்கைப் பிரசங்கங்களைச் செய்யும் இவர்கள் சாதிய அநீதிக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. ஈழத்தில் கிறிஸ்துவம் என்பது இந்துமதச் சடங்குகளையும் சாதியையும் ஆழமாக உள்வாங்கிக்கொண்ட இந்து பினாமி அமைப்புத்தான். சில மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஷர்தார் ஜமீல் நடத்தும் ‘கதைப்பமா’ என்ற You Tube தொடரில் கலந்து கொண்ட கத்தோலிக்கப் பாதிரியார் ஏ.ஏ. நவரட்ணம் நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்த போது, கிறிஸ்தவர்களிடையே சாதியம் கடைப்பிடிக்கப்படுவதைக் குறித்து நான் அவரிடம் கேள்வி எழுப்பினேன். கிறிஸ்துவர்களிடையே சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை அவர் ஏற்றுக்கொள்ளவே செய்தார். சாதியத்தைக் கடைப்பிடிப்பவன் ஒருபோதும் கிறிஸ்துவனாக இருக்கவே முடியாது என்று பதிலளித்தார். பாதிரியார் சொல்வதுபடி பார்த்தால், ஈழத்தில் கிறிஸ்துவனை மலத்தில் அரிசியைப் பொறுக்குவதைப் போலத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். – BOX நாவலின் மையக் கதாபாத்திரம் வாய் பேசத் தெரியாத சிறுவன். முதலில் அவனைப் பார்க்க பிரபாகரன் மகன் போல் உள்ளார் என்று கூறி கதையை நகர்த்திவிட்டு, இறுதியாக அவனை இளம் புத்த துறவி என்று காண்பித்து நாவலை நிறைவு செய்யக் காரணம் என்ன? அந்த நாவலை, நான் பாலச்சந்திரனுக்குத்தான் சமர்ப்பணம் செய்துள்ளேன். நாவலின் போக்கில் குழந்தைத் துறவியில் பாலச்சந்திரனைப் பொருத்திப் பார்க்க முயன்றேன். இந்த இருவேறு இனக் குழந்தைகளையும் வேறு வேறாகத்தானே அதிகார சக்திகள் பார்க்கின்றன. தீர்ப்பிடுகின்றன. இனவெறுப்பும் இனப்பகைமையும் அற்ற உலகத்தைக் குழந்தைகளது உலகில் மட்டுமே என்னால் சித்திரிக்க முடிந்தது. – இலங்கையில் பாலியல் விடுதிகளில் பெண் புலிகள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டார்கள் என்றும் அந்த நாவலில் வருகிறதே… இது கதையின் போக்கில் வலுகட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை. சரணடைந்த போராளிகளில் ஒரு பகுதியினர் எவ்விதம் நடத்தப்பட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அது குறித்துப் பல்வேறு சாட்சியங்களும் காணொளிகளும் வெளியாகியிருக்கின்றன. இயக்கத்தோடு எந்தத் தொடர்புமில்லாத சாதாரணமான பெண்களுக்கும் ஆண்களுக்கும் கூட இராணுவத்தினரால் அவமானங்களும், சித்திரவதைகளும் நிகழ்ந்தன. இலங்கை அரசினதும், சிங்கள இனவெறியர்களதும் அருவருக்கத்தக்க வெற்றிக் கொண்டாட்ட மனநிலையைச் சித்திரிக்கவே நாவலில் அந்தப் பகுதி எழுதப்பட்டது. ‘வீரதீரமான பெண்புலிகள் விடுதியில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என இவர்கள் பொய் சொல்லி வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள், உண்மையில் அங்கே வைக்கப்பட்டிருந்தவர்கள் சாதாரண ஏழைப் பெண்களே என்றுதான் நாவலில் தெளிவாக எழுதியுள்ளேன். ஆனால், இதைக் கூடப் பொறுமையாகப் படித்துப் புரிந்துகொள்ள இயலாமல், பெண் புலிகளை நான் கொச்சைப்படுத்திவிட்டதாக அ.இரவி போன்ற சிலர் விமர்சித்தார்கள். ஆனால், உண்மையில் பெண் புலிகளை – குறிப்பாக பெண் புலிகளின் தலைவி மறைந்த தமிழினியை- பாலியல் கொச்சைப்படுத்திக் கேவலமான ஆபாசச் சிறுகதையை ‘சாகாள்’ என்று எழுதிய, தமிழ்நாட்டுக்கான சுத்தசைவ இலக்கியத் தூதுவரான அகரமுதல்வனையோ, ‘திருமதி செல்வி’ என்று கதையெழுதி, இப்போது அய்ரோப்பாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னாள் பெண் போராளியைக் கதைத் தூஷணம் செய்த சாத்திரி என்ற வதந்தி மன்னனையோ கபட விமர்சகர்கள் நைஸாகக் கடந்து சென்றார்கள். நானோ தமிழினிக்கும் செல்விக்கும் இவர்கள் இழைத்த அநீதியைக் கடுமையாகச் சாடி எழுதிக்கொண்டிருந்தேன். – பாக்ஸ் நாவலில் கம்யூனிஸ்டுகளையும் விமர்சிக்கிறீர்கள். இலங்கை இனப்பிரச்சினையை இலங்கைக் கம்யூனிஸ்டுகளால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? அவர்களால் கம்யூனிஸத்தையே புரிந்துகொள்ள முடியவில்லையே. ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்காதவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்கவே முடியாது. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய இனப் பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை எடுத்திருந்தால், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை அவர்களே முன்னெடுத்துச் சென்றிருப்பார்கள். அவர்கள் இழைத்த தவறுகளாலும், சந்தர்ப்பவாத அரசியல் கூட்டுகளாலும் அதிருப்தியுற்ற செயலூக்கமுள்ள சிங்கள இளைஞர்கள் ஜே.வி.பி. என்ற இடது முகமூடியணிந்த சிங்கள இனவாத அமைப்பிலும், தமிழ் இளைஞர்கள் தமிழ்த் தேசியவாத இயக்கங்களிலும் தஞ்சமடைந்தார்கள். ஒருகாலத்தில் இலங்கை வரலாற்றில் மக்களிடையே மிகப் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இவ்வாறுதான் தங்களைச் சிதைத்துக்கொண்டு இலங்கை இனவாத அரசின் தொங்குசதையானார்கள். அதேவேளையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஆதரித்தும், சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்தும் பேசும் சின்னஞ்சிறிய, மக்கள் ஆதரவற்ற இடதுசாரிக் குழுக்களும் இலங்கையில் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. – பாக்ஸ் நாவலில் சாதியக் கொடுமைகளைக் குறித்து எழுதியுள்ளீர்கள். சாதிய அமைப்பைப் பொறுத்தவரை ஈழத்தை இந்தியாவுடன் ஒப்பிடலாமா? ஒப்பிட முடியாது. இந்தியாவில் சாதிய அமைப்புமுறைக்கு எதிராக, காலத்துக்குக் காலம் எத்தனையோ மகான்களும் சீர்திருத்தவாதிகளும் தத்துவவாதிகளும் தோன்றியுள்ளார்கள். புத்தர், சித்தர்கள், ஜோதிபா பூலே, நாராயணகுரு, அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் என ஒரு நீண்ட வரலாற்று வரிசையுண்டு. ஈழத் தமிழர்களிடையே இப்படி எந்த முதன்மைச் சிந்தனையாளரும் சீர்திருத்தவாதியும் தோன்றவேயில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் சாதியொழிப்பில் அக்கறை காட்டியிருந்தால் கூட, சாதி ஒழிப்பல்ல அவர்களது முதன்மையான இலக்கு. வர்க்கப் பார்வையுடனும், சாதி என்பது நிலப்பிரபுத்துவப் பண்பு என்ற மூடுண்ட கருத்துடனும்தான் அவர்கள் சாதியை அணுகினார்கள். சாதி ஒழிப்புக் குறித்து எந்த அரசியல் வேலைத்திட்டமும் அவர்களிடமில்லை. இந்து மதத்திற்கும் சாதிக்குமுள்ள வலுவான அடிப்படைத் தொடர்பு குறித்தெல்லாம் அவர்கள் பேசவேயில்லை. இலங்கையில் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடுகள் கிடையாது. சமூகநீதியிலான அதிகாரப் பகிர்வு குறித்தெல்லாம் இடதுசாரிகள் உட்பட எந்த அரசியல் கட்சியும் பேசியதில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஈழத்தில் சாதியத்திற்கு எதிரான உரையாடல்களும் சில மெல்லிய செயற்பாடுகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன. காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களால் தொடக்கப்பட்ட ‘யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்’ சமபந்தி போசனம் போன்ற சில செயற்பாடுகளை முன்னெடுத்தது. காந்தியாரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்து, தீண்டாமைக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களை நடத்தியது. இதற்குப் பின்பாக ஜோவல் போல், ஜேக்கப் காந்தி போன்றவர்களால் தலித்துகளுக்கான விடுதலை அமைப்பாக ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ உருவாக்கப்பட்டு, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனாலும், இவர்களது போராட்டங்கள் பெரிய வெற்றிகளைச் சாதிக்கவில்லை. 1960-களில் இடதுசாரிகள் தீண்டாமை ஒழிப்பில் அக்கறை காட்டினார்கள். இவர்களது வழிகாட்டுதலோடு தொடக்கப்பட்ட ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ தீவிரமாகச் செயற்பட்டு ஆலய நுழைவு, தேநீர்கடை நுழைவு போன்ற சில வெற்றிகளைச் சாதித்தது. 1970-களில் தமிழ்த் தேசிய ஆயுதப் போராட்டப் பேரலை எழுந்தபோது, இடதுசாரிக் கட்சிகளும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமும் அந்த அலையில் சிதறிப் போயின. தமிழ் அரசியல் புலத்தில் போராளி இயக்கங்கள் தீர்மானகரமான சக்திகளாக தங்களை நிறுவிக்கொண்டார்கள்.. தமிழீழ விடுதலைப் போராட்டம் சாதிய இரும்புக் கோட்டையில் சில ஓட்டைகளைப் போட்டது. போராளி இயக்கங்களுக்குள் எல்லாச் சாதி இளைஞர்களும் உள்வாங்கப்பட்டார்கள். ஒருசில சம்பவங்களைத் தவிர போராளி இயக்கங்கள் சாதியை மீறியே செயற்பட்டன. ஆனால், இவர்களிடமும் சாதியை ஒழிப்பதற்கு எந்த அரசியல் வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை. ‘தமிழீழம் அமைந்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும்’ என்று வெறுமனே சொல்லிக்கொண்டிருந்தார்கள். சாதி ஒழிப்பைக் கொள்கைரீதியாக இயக்கங்கள் ஏற்றுக்கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் ஆதிக்க சாதியான வெள்ளாளர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற இரட்டை நிலைப்பாடு இவர்களிடம் இருந்தது. சாதிய முரண்களை இப்போது ஆழமாகப் பேசுவது விடுதலைப் போராட்டத்துக்குக் கேடாகலாம் என்ற சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிலேயே இவர்கள் இயங்கினர்கள். எனினும் கூட, சாதிய ஒடுக்குமுறைகள் நிகழ்ந்த பல சம்பவங்களில் போராளிகள் சாதியத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். அதுபோலவே யாழ்ப்பாண நூலகத் திறப்பு போன்ற சாதிய முரண் சம்பவங்களில் நழுவியும் போயிருக்கிறார்கள். இந்த நழுவல் போக்கு ஆதிக்க சாதியினருக்கே சாதகமாக முடிந்தது. நேரடியான சாதி ஒடுக்குமுறைகள் முன்பைவிட இப்போது குறைந்துள்ளன. இன்றைய தலித் இளைஞர்கள் முப்பது வருடப் போருக்குள்ளால் உருவாகி வந்தவர்கள். அவர்கள் நேரடிச் சாதிய ஒடுக்குமுறைகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அரசியல் அதிகாரம், கல்வி, நீதி, பொருளாதாரம், ஊடகம், மதநிறுவனங்கள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் இன்னும் வெள்ளாளரின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. இந்த அதிகாரங்களின் ஊடாக மிக நுட்பமாகவும் மறைவாகவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிலை நிறுத்தப்படுகின்றன. புறக்கணிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. – உங்களது மெய்யெழுத்து சிறுகதையில் “பஞ்சமும், தீயும், வெடி முழக்கமும், அழுகுரல்களும், இரத்தமும், சாவும் எல்லோரையுமே பைத்தியங்களாக்கிக்கொண்டிருந்தன” என்ற வரிகள் வரும். போரினால் ஏற்படும் உளவியல் சிக்கலைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா? இதற்கு ஒரு பொதுவான பதிலை நான் சொல்லிவிட முடியாது. யுத்தத்திற்குள் சிக்குண்ட ஒவ்வொரு தனிமனிதரின் தன்நிலையையும், சமூக நிலையும் வெவ்வேறுவிதமாக உளவியல் சிக்கல்களை அவர்களில் ஏற்படுத்தும். யுத்தம் பொதுச் சமூகத்தில் உண்மை, சத்தியம், தோழமை, சகோதரத்துவம், அஞ்சாமை போன்ற மானிட உயர் பண்புகளையே முதலில் கொல்கிறது. அதன் பின்பே மனிதர்களைக் கொல்கிறது. – பொருளாதாரரீதியாக உயர்மட்டத்தில் இருந்தவர்களுக்கு போரின் தாக்கம் குறைவாக இருந்ததா? அடிமட்டத் தமிழ் மக்களைத்தான் போர் அதிகம் பாதித்ததா? ஆம். பொருளாதாரத்தில் வசதி, வாய்ப்புள்ளவர்கள் பெருந்தொகையாக வெளிநாடுகளுக்கும், போர் நடக்காத கொழும்பு போன்ற நகரங்களுக்கும் புலம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். வறியவர்களும் எளியவர்களும்தான் போரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதிக்கட்டப் போரில் வன்னிக்குள் சிக்கயிருந்த மக்களில் கணிசமான தொகையினர், வன்னியில் குடியேறிய வறிய மலையக மக்களாக இருந்தார்கள். – சிங்கள பவுத்த அடிப்படைவாதம்தான் தமிழின அழிப்பின் மையக்காரணம். இதுபோன்ற ஒரு நிலை இந்தியாவில் உள்ள சிறுபான்மை மதத்தினருக்கும் இந்து மத வெறியால் ஏற்படுமா? மத அடிப்படைவாதம் எந்த எல்லைக்கும் செல்லும். பவுத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என்ற எந்த அடிப்படைவாதமானாலும் அது பாஸிசத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை இலங்கையில் மட்டுமல்லாமல், உலக வரலாறு முழுவதுமே கண்டுள்ளோம். மத அடிப்படைவாத அரசியல் நவீன சனநாயக அரசியலிலிருந்து விலக்கப்பட்டே ஆகவேண்டும். இந்து அடிப்படைவாத அரசியல் இப்போது இந்திய சனநாயகம் எதிர்கொள்ளும் முதன்மை ஆபத்து மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையிலும் அது அபாயங்களை விளைவிக்கிறது. குஜராத் வன்செயல்கள், குடியேற்றச் சட்டத்திருத்தங்கள், மாட்டுக் கறிக்குத் தடை, மதச்சார்பற்ற அரசியலாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் சிறை, எழுத்தாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, கலாசாரக் கண்காணிப்பு என்று அபாயம் விரிந்தே செல்கிறது. இதை எதிர்கொள்ள இன்னொரு மத அடிப்படைவாதத்தைப் பற்றிப்பிடிப்பது நிலைமையை மேலும் அபாயமாக்கும். நவீன இந்தியாவுக்கு காந்தியார், அம்பேத்கர் போன்றவர்கள் அளித்த மதச்சார்பாற்ற பெருமைமிகு முகம் இருக்கிறது. அதைக் காப்பாற்றியே தீர வேண்டும். – பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்னுடைய அறிவுக்கு எட்டியவரை இல்லை. விடுதலைப் புலிகள் போரில் தோல்வியைத் தழுவப் போகிறார்கள் என்று பல வருடங்களுக்கு முன்பே நான் அனுமானித்திருந்தேன். அதைப் பல கட்டுரைகளிலும் நேர்காணல்களிலும் குறிப்பிடவும் செய்தேன். புலிகள் வெற்றி பெறுவார்கள் எனக் கோஷம் போட்டுக்கொண்டிருந்தவர்களைக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தேன். ஏனெனில் அவர்கள் மக்களிடம் உண்மையை மறைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், புலிகளின் தலைவரின் உடல் இலங்கைப் படையினரின் கையில் சிக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அது எப்படி நிகழ்ந்தது என எனக்கு இன்றுவரை புரியவேயில்லை. புலிகளின் தலைவர் நினைத்திருந்தால் தன்னுடைய உடலை முழுமையாக அழிப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். யோசித்துப் பார்த்தால், போரின் இறுதி நாட்கள் நாம் நினைப்பதைவிடக் கடுமையாகவும் மர்மமாகவும் இருந்திருக்கின்றன என்பதே உண்மை. – இந்த முறை பழ. நெடுமாறனை இயக்கியது பா.ஜ.க. என்று பேசப்படுகிறதே? பழ. நெடுமாறன் ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என அறிவித்தபோது, அவரருகே இருந்தவர் காசி. ஆனந்தன் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். புலிகளின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரிடம் ஒரு முழுமூட நம்பிக்கையுண்டு. பா.ஜ.க. ஈழத் தமிழர்களின் நட்புசக்தி, இந்து என்ற அடிப்படையில் பா.ஜ.க இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் என அவர்கள் நம்புகிறார்கள். வன்னி இறுதிப் போரின் போது, பா.ஜ.க தேர்தலில் வென்றால் போர் நிறுத்தப்படும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றெல்லாம் அறியாமைக் குரல்கள் எழுந்தன. ராஜீவ் காந்திக்குப் பின்னான இந்திய அரசியலில், இந்திய ஒன்றிய அரசு எப்போதுமே மிக வெளிப்படையாக இலங்கை அரசுக்குச் சார்பாகவே உள்ளது. இலங்கை அரசைத் தனது கைக்குள் வைத்திருப்பதன் மூலம், இலங்கையில் இந்தியாவின் அதிகாரத்தையும் முதலீடுகளையும் நிலைநிறுத்துவதே இந்திய ஒன்றிய அரசின் கொள்கை முடிவு. எனவே இந்து என்ற கதையாடலின் அடிப்படையில் ஈழத்தை வென்றுவிடலாம் என நினைப்பது அடி முட்டாள்தனமும் மிகத் தவறான அரசியலுமாகும். இதை வேறுமாதிரியும் விளக்கலாம். இந்தியாவில் பட்டியல் சாதியினரில் பெரும்பாலானோர் இந்துக்கள் தானே. இந்துக்கள் என்ற அடிப்படையில் பா.ஜ.க. அவர்களிடம் கரிசனை கொள்கிறதா என்ன? சநாதனத்தையும் சாதியத்தையும் சாஸ்திரங்களையும் பேணி வளர்ப்பதிலும், இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை அழித்து ஒழிப்பதிலும்தானே பா.ஜ.க. கரிசனை காட்டுகிறது. – இலங்கை தமிழர்கள் பற்றியும், பிரபாகரனைப் பற்றியும் உணர்ச்சி பொங்க சீமான் பேசுகிறார். சீமானின் அரசியல் செயல்பாடுகளால் ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது பயனுண்டா? சீமானால் எங்களுக்கு இதுவரை எந்தவொரு பயனும் கிடைத்ததில்லை. ஆனால், ஈழத் தமிழர்களிடமிருந்து சீமானுக்குக் கட்சிக் கொடி, இலச்சினை உட்பட ஏராளமான பயன்கள் கிடைத்துள்ளன. ஈழத் தமிழர்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்து ‘நாம் தமிழர் கட்சி’க்குப் பணம் அனுப்புகிறார்கள். சீமான் ஈழத்துக்கு வந்திருந்தபோது, போரால் கடுமையான உணவுப் பஞ்சம் அங்கே நிலவியபோதும் சீமானுக்கு மூன்றுவேளையும் உணவளித்துத் தடபுடலாக விருந்தோம்பியிருக்கிறோம். துப்பாக்கி சுடுவதற்கு, கப்பலைக் கடத்துவதற்கு எல்லாம் கற்றுக்கொடுத்துள்ளோம். இவற்றுக்கு நன்றி செலுத்தும் வகையில் இனித்தான் சீமான் ஏதாவது எங்களுக்குச் செய்ய வேண்டும். – இப்போது ஈழத் தமிழர்கள் சந்திக்கும் முதன்மைச் சிக்கலாக எதை பார்க்கிறீர்கள்? ஒற்றுமையின்மைதான் முதன்மைச் சிக்கல். சிங்களப் பேரினவாதிகள் மிகுந்த ஒற்றுமையுடன் முழு இலங்கையையும் சிங்களப் பவுத்தமயமாக்குவது என்ற தூரநோக்கோடு பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களோ இதை எதிர்கொள்ளத் திராணியற்று தங்களுக்குள் கட்சிகளாகவும் சாதிகளாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். ஆளையாள் மாறி மாறித் துரோகிப் பட்டம் கட்டிப் புறம்தள்ளுகிறார்கள். ஈழத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அய்.நாவையும் அமெரிக்காவையும் இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தையும் நம்புவர்கள் சக தமிழரை நம்புவதற்கு மறுக்கிறார்கள். இணைந்து வேலை செய்யப் பின்னடிக்கிறார்கள். உண்மையில் இன்றைய ஈழத் தமிழ்க் கட்சிகளிடம் கொள்கை அடிப்படையில் பெரிய வேறுபாடுகளில்லை. அதிகாரப் போட்டியாலும், தேர்தல் அரசியலாலுமே இவர்கள் பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகள் என்ற அடிப்படையில் இவர்கள் ஒரணியாகத் திரளாவிட்டால், முழு இலங்கையும் மிக விரைவிலேயே சிங்கள பவுத்தமயமாவதை யாராலும் தடுக்க முடியாது. – உங்களது புத்தகங்கள் உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களால் வாசிக்கப்படுகின்றன. இதை மனதில் வைத்துக்கொண்டுதான் ஒரு கதைக்கான மொழியைத் தெரிவு செய்வீர்களா? சில கதைகள் ஈழ வட்டார மொழி வழக்கில் இருக்கின்றன, அதைப் படிப்பதில் வாசகர்களுக்குச் சிக்கல் ஏற்படாதா? சிக்கல் இருக்கக் கூடும். அந்தச் சிக்கைச் சிரத்தையுள்ள இலக்கிய வாசகர் சற்றே சிரமப்பட்டாவது அவிழ்த்துவிடுவார். அப்படி அவிழ்த்துத்தான் ஈழத்தவர்களான நாங்கள் தமிழக வட்டார வழக்கு இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருக்கிறோம். வட்டார மொழி வழக்கு என்பது ஓசைகளால் மட்டும் வேறுபடுவது அல்ல. அது வேறொரு பண்பாட்டையும் நிலத்தின் வாசனையையும் நம்மிடம் எடுத்து வருகிறது. அதன் தனித்துவத்தையும் அழகையும் அனுபவிக்கச் சோம்பல்பட்டால் எப்படி? அதனால்தான் நான் புனைகதைகளின் அடியில் சொல் விளக்கமோ, வழக்குச் சொல் அகராதியோ கொடுப்பதில்லை. சிங்களத்தில், பிரஞ்சில் கூட என்னுடைய கதைகளில் சில வரிகள் ஆங்காங்கே இடம் பெறுவதுண்டு. அவற்றுக்கும் நான் அகராதி கொடுப்பதில்லை. கதையின் சித்திரிப்பிலேயே அவற்றை வாசகர்களுக்குப் புரியப்பண்ணவே நான் முயற்சிக்கிறேன். ‘டப்பிங்’ இலக்கியத்திற்கு ஆகாது. கதைக்கான மொழியைத் தெரிவு செய்வதில் என்னிடம் தெளிவான விதிகள் ஏதுமில்லை. புனைகதையின் மொழி இசையைப் போன்றிருக்க வேண்டும் என்பது எனது அவா. எப்படி இசை சித்திக்கிறது எனக் கேட்டால் இளையராஜா மேலே கையைக் காட்டுகிறார். உள்ளுணர்வின் உந்துதலால் ஏற்படும் மன எழுச்சியையும் கற்பனையையும் படைப்பு நுட்பத்தையுமே அவர் கடவுள் எனக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு கதைக்கான மொழியும் அவ்வாறுதான் தேர்ந்த படைப்பாளியிடம் உருவாகிறது என்றே நான் நினைக்கிறேன். – உங்கள் படைப்புகளில் பெரும்பாலும் இலங்கை யுத்தமும், அதன் பாதிப்பும் வெளிப்படுகிறது. இவற்றைத் தவிர்த்து வேறு வகையான கதை மற்றும் நாவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா? நேற்று, புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய கதைகள் ரஷ்யாவைப் பின்னணியாகக்கொண்டு, ரஷ்யப் பாத்திரங்களை வைத்தே எழுதப்படும். மிக்கயீல் நிக்கொலேவிச்சுகளும், அன்னா நடேஷாக்களும் அவரது கதைகளில் தாராளமாக உறைபனியில் நடமாடுவார்கள். எனவே அவரிடம் ‘ஈழத்தை மையமாக வைத்து ஏன் நீங்கள் கதைகளை எழுதுவதில்லை?’ என்று கேட்டேன். அவரோ ‘ஈழப் பிரச்சினையைத் தொட்டால் பிரச்சினையில் சிக்குப்பட வேண்டிவரும்… எதை எழுதினாலும் புலி ஆதரவாளர்களோ, புலி எதிர்ப்பாளர்களே என்னைப் பிய்த்துத் தின்றுவிடுவார்கள்’ என்று வெள்ளந்தியாகச் சொன்னார். எனவே ரஷ்யக் கதைகளையும், பிரெஞ்சுக் கதைகளையும், வேறு வகையான கதைகளையும் அவரைப் போன்ற எழுத்தாளர்கள் எழுதட்டும். இலங்கையில் நிகழ்ந்த கொடிய யுத்தத்தை பக்கம் சாராமலும், சுயதணிக்கைகள் இல்லாமலும் எழுத என்னைப் போல சில எழுத்தாளர்களே இருக்கிறோம். நாங்கள் இது குறித்து எழுத வேண்டியவை இன்னும் ஏராளமாக உள்ளன. நாடுகாண் பயணியான மார்க்கோ போலோ தனது மரணப்படுக்கையில் இருந்த போது ‘நான் பார்த்தவற்றில் பாதியைத்தான் இதுவரை சொல்லியிருக்கிறேன்’ என்றாராம். அதுபோன்று நான் பார்த்தவற்றிலும் கேட்டவற்றிலும் கால்வாசியைக் கூட நான் இன்னும் எழுதி முடிக்கவில்லை. (இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்தளத்தில் மூன்று பகுதிகளாக 2023 மார்ச் 25, 26, 27-ம் தேதிகளில் வெளியானது) https://www.shobasakthi.com/shobasakthi/2023/03/28/கதையின்-மொழி-இசை-போன்றிர/?fbclid=IwAR2YFpf07IGJpOMyfcLY4I-cM4nlk1tH6KE2WMBVuMjmFL3jzlT3jPG_Sc0
  2. யுத்தம் கதைகளை உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது March 2, 2023 ஷோபாசக்தி படைப்பு தகவு பிப்ரவரி -2023 இதழில் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ள நேர்காணலின் முழுமையான வடிவம் இங்கே. நேர்கண்டவர் :அம்மு ராகவ் -சினிமா, இலக்கியம், போராளி இவற்றில் எந்தவொன்றில் ஷோபாசக்தி நிறைவு பெறுகிறார்? முதலில், நான் போராளி இல்லை என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பதின்ம வயதுகளில் நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற உறுப்பினனாக இருந்தேன். ஆனால், சனநாயக மத்தியத்துவமற்ற, இறுக்கமான அந்த அமைப்பில் தலைமையின் எண்ணங்களையும் கட்டளைகளையும் நிறைவேற்றும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன் மட்டுமே. விசுவாசத்தாலும் இயக்கக் கட்டுப்பாடு என்ற காரணத்திற்காகவும் இயக்கத்தின் எல்லாவித நடவடிக்கைகளையும் தவறுகளையும் கூட நியாயப்படுத்திப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தேன். இயக்கத்திலிருந்து வெளியேறும்போது கூட ஓர் உட்கட்சிப் போராட்டத்தை முன்னெடுக்க எனக்குக் கருத்துப்பலமோ வலுவோ இருக்கவில்லை. உதிரியாகவே வெளியே வந்தேன். அதன் பின்னராக, அய்ரோப்பாவில் ‘ட்ராட்ஸ்கி’ய இடதுசாரி அமைப்பில் செயற்பட்ட காலத்தில், கம்யூனிஸத்தின் மீது கொண்ட தீவிரமான பற்றால் அந்த அமைப்பில் நான் இயங்கினேன். கட்சித் தோழர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் என்றாலும், அந்தச் சோர்வான அமைப்பின் வேலைத்திட்டங்கள் குறித்து எப்போதுமே கேள்விகளை முன்வைக்கும் ஒரு சந்தேகப் புத்திக்காரனாகவே அங்கே நான் இருந்தேன். என்னுடைய சந்தேகங்களை; குறிப்பாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, தலித் அரசியலின் முக்கியத்துவம் போன்ற நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்று, வறட்டுவாத சிந்தாந்தத்திற்குள் அந்தக் கட்சியின் தலைமை மூழ்கியிருந்தது. அந்த அமைப்பிலிருந்து நான் தொடர்புகளை முறித்துக்கொண்டபோது ‘விட்டது சனி’ என்று அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். இப்போது பிரான்ஸில் தேர்தல் கட்சியாக இருக்கும் Lutte ouvrière (தொழிலாளர் போராட்டம்) என்ற மிகச் சிறிய கட்சிக்கு ஆதரவாளனாக இருக்கிறேன். அவ்வப்போது நேரமிருக்கும்போது, அவர்களது ஆர்ப்பாட்டங்களிலும் மேதின ஊர்வலங்களிலும் கலந்துகொள்வதோடு என்னுடைய போராட்டமெல்லாம் முடிந்துவிடுகிறது. எனவே போராளி என்ற அரும் வார்த்தையால் நீங்கள் என்னை அடையாளப்படுத்தக் கூடாது. கட்சியில் இல்லாத ஒருவர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ஒருபோதும் கம்யூனிஸ்டாக இருக்கவே முடியாது என்பார் லெனின். அதுபோலவே போராட்டம் என்பது எப்போதுமே கூட்டுச் செயற்பாடு. ஒரு போராளி என்பவர் தன்னுடைய இலட்சியத்திற்காக இழப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு ஏராளமானோர் இப்போதும் இந்த உலகமெங்கும் போராட்ட வாழ்க்கையில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தியிருக்கிறார்கள், கொலையுண்டிருக்கிறார்கள், சிறைகளில் கிடக்கிறார்கள். நான் அவர்களில் ஒருவன் கிடையாது. நான் இப்போது வெறும் எழுத்தாளன் மட்டுமே. என்னுடைய எழுத்துக் காரணமாக எனக்கு அதிகார சக்திகளால் ஏதாவது தொல்லை ஏற்பட்டால், அதை எழுத்தாளன் மீதான அச்சுறுத்தலாக எடுத்துக்கொள்வேனே தவிர, போராளியின் மீதான அடக்குமுறை என வெற்றுப் பகட்டோடு சொல்லிக்கொள்ள மாட்டேன். என்மீது போராளி விம்பத்தை ஏற்றிக்கொள்ள முன்னொரு காலத்தில் எனக்கும் ஓர் அரிப்பு இருந்திருக்கலாம். அது என்னுடைய பேச்சுகளில் கூட எங்காவது வெளிப்பட்டிருக்கலாம். ஆனால், இன்றைய நிலையில் அந்தத் தவறை நான் செய்யமாட்டேன். அப்படிச் செய்தால் அது உண்மையான போராளிகளை அவமதிப்பதாகும். சினிமாவும் இலக்கியமும் வேறு வேறல்ல என்றே நான் கருதுகிறேன். அடிப்படையில் இரண்டுமே படைப்புச் செயற்பாடுகள்தானே. நான் சினிமாவுக்குள் நுழைந்தபோதே, இலக்கிய எழுத்தாளன் என்ற உறுதியான அடையாளத்துடனேயே நுழைந்தேன். நான் நடிக்கும் எல்லாத் திரைப்படங்களிலும் என்னுடைய பாத்திரத்தின் உருவாக்கத்திலும், வசனங்களிலும் என்னுடைய பங்கும் தலையீடும் இருந்தேயாகும். இன்றைய இயக்குநர்கள் அதை அனுமதிப்பது மட்டுமல்லாமல், என்னுடைய கருத்தை அறிந்துகொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். நான் நாடகங்களில் நடிக்கும்போதும் அப்படித்தான். ஆனால், சினிமாவும் நாடகமும் கூட்டுச் செயற்பாடுகள் என்பதால் என்னுடைய கருத்துப் பிடிவாதத்திலிருந்து நான் சற்றுச் சறுக்கவும் விட்டுக்கொடுக்கவும் நேரிடும். இலக்கிய எழுத்து அப்படியல்ல. அது எனக்கு முழுமையான சுதந்திரத்தை அளிப்பது. என்னுடைய சிறுகதையையோ நாவலையோ எழுதிவிட்டு, பிரதி அச்சுக்குப் போவதற்கு முன்பாக இன்னொருவரிடம் படிக்கக் கொடுத்து இலக்கிய அபிப்பிராயமோ, பிரதியைச் செம்மை செய்யவோ கேட்கும் வழக்கம் கூட எனக்குக் கிடையாது. வரலாற்றுத் தகவல்களைச் சரி பார்ப்பதற்காக மட்டுமே சில சமயங்களில் ஓரிரு நண்பர்களிடம் காண்பித்துச் சரி பார்ப்பேன். எனவே எனக்கு முழுமையான சுதந்திரத்தை அளிப்பது மட்டுமல்லாமல், முழுப் பொறுப்பையும் சுமக்க வைக்கும் ஊடகமாகவும் இலக்கியம் இருக்கிறது. அதே வேளையில் நானொரு தீவிரமான சினிமாப் பார்வையாளன் அல்ல. இன்றைக்கு முக்கியமாக் கருதப்படும் பல உலகச் சினிமாக்களை நான் பார்த்தது கூடக் கிடையாது. ஆனால், தேடித் தேடிப் படிக்கும் தீவிரமான இலக்கிய வாசகன். எனவே எனக்கு இயல்பாகவே மிக நெருக்கமானதும் அந்தரங்கப் பிணைப்புள்ளதும் இலக்கியமே. -1997 முதல் 2023 வரையிலான 25 ஆண்டுகளுக்கு மேலான இலக்கியப் பயணம் உங்களுடையது. எழுத நினைத்த எல்லாவற்றையும் எழுத முடிந்ததா? இல்லை எழுத முடியாமல் உள்ளுக்குள் அழுத்திக்கொண்டிருக்கும் ஏதாவது இருக்கிறதா? நான் எண்பதுகளிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். ஆனால், அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்த பின்பாகத்தான் எனக்கு எழுத்துச் சுதந்திரம் முழுமையாக வாய்த்தது. இப்போது நான் எழுத நினைக்கும் எதையும் எழுத எனக்குத் தைரியமும் சுதந்திரமும் வெளியீட்டு வாய்ப்பும் இருக்கின்றன. நான் எதையாவது எழுத நினைத்து எழுதாமல் இருக்கிறேன் என்றால் அந்தக் கதையைச் சொல்வதற்கான வடிவத்தையும் இலக்கிய மொழியையும் நான் இன்னும் கண்டடையவில்லை என்றே பொருள். அவ்வாறு மனதிற்குள் கிடந்து என்னை அலைக்கழிக்கும் பல கதைகள் உள்ளன. -தமிழ் இலக்கியத்தில் உங்களை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் யார்? சமீபத்தில் வாசித்த முக்கியமான புத்தகங்கள் எவை? தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதும் என்னைக் கவர்ந்த ஏராளமான இலக்கிய ஆசிரியர்கள் உள்ளனர். ஒரேயொருவரின் பெயரை மட்டும்தான் சொல்ல வேண்டுமெனில் அது எஸ்.பொன்னுத்துரை என்றே சொல்வேன். நான் என்னுடைய சிறிய வயதிலிருந்தே அவருடைய இலக்கிய எழுத்தை மிகவும் நேசித்தவன். அவரை எனது மானசீகக் குருவாகக் கருதி அவரது இலக்கிய ஊழியத்தைப் பின்தொடர்ந்தவன். அவரோ என்னை வெறுத்தவர். அதைப் பதிவும் செய்திருக்கிறார். ‘சனதருமபோதினி’ என்ற இலக்கியத் தொகுப்புக்காக அவரை நான் கண்ட நேர்காணலில், அவரது கண்மண் தெரியாத தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டுக்காக நான் அவரைக் கடுமையாகத் தாக்கி கலாட்டா செய்துள்ளேன். அந்த நேர்காணல் குறித்து ‘நான் பன்றியின் முன்னே முத்துகளை எறிந்தேன்’ என்று அவர் எரிச்சலுடன் தன்னுடைய வாழ்க்கை வரவாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆனால், இந்த அரசியல் முரண்கள் எதுவுமே அவரை என்னுடைய இலக்கிய ஆசிரியர் என்ற பீடத்திலிருந்து இறக்க வல்லமையற்றவை. யாழ்ப்பாணத்தின் மிக ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்தும், பின்புலத்திலிருந்தும் எழுந்துவந்து, தன்னுடைய கூர்மையும் நுட்பமும் அங்கதமுமான இலக்கிய எழுத்தாற்றலால் நிமிர்ந்து நின்றவர் எஸ்.பொ. அவர் எங்கள் நிலத்தின் இலக்கிய சாட்சி. எங்கள் வாழ்வின் ஆவணப் பெட்டகம். சாதி, பாலியல் ஒழுக்கங்கள், நிறுவப்பட்ட கலாசாரங்கள், கடவுள்கள் எல்லாவற்றையும் தன்னுடைய கதைகளால் கவிழ்த்துப் போட்ட மகா கலகக்காரர். சமீபத்தில் வாசித்தவற்றில் யதார்த்தனுடைய ‘நகுலாத்தை’ நாவலையும் மாஜிதாவின் ‘பர்தா’ நாவலையும் முக்கியமானவைகளாகக் கருதுகிறேன். சமகால அரசியலைக் கதைகளில் எழுதக்கூடாது என்றொரு போதனை பரவலாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் நேரடியாகவும் உறுதியாகவும் சமகால அரசியல் – பண்பாட்டுப் பிரச்சினைகளை முன்னிறுத்தி எழுதப்பட்ட பிரதிகள் இவை. இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் குறித்து எழுதப்பட்ட பிரதிகளில் ‘நகுலாத்தை’ மிக முக்கியமான பிரதி. தொன்மத்தையும் சமகாலத்தையும் ஊடும் பாவுமாக நெய்து எங்களின் வாதையையும் வலிகளையும் சொல்லும் இலக்கியப் பிரதி. போரை எழுதுகிறேன் என்ற கொக்கரிப்போடு புலிகளை வழிபாடு செய்யும் பிரதிகளுண்டு. இன்னொரு புறத்தில் புலிகளை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் தமிழ் மக்களது விடுதலை அரசியலையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தும், தனிநபர்கள் மீதான அவதூறுகளை அள்ளித்தெளிக்கும் பிரதிகளுண்டு. இவற்றை வாசிப்பது சித்திரவதைக்கு ஒப்பானது. ஆனால், யதார்த்தன் மிகுந்த நடுநிலையோடும் உண்மைத்தன்மையோடும் ஒரு காலத்தைச் சித்திரித்துக் காட்டியிருக்கிறார். நாவலின் மொழி கொஞ்சம் சிதறலாக இருந்தால் கூட, யதார்த்தனது தனித்தன்மையும் தேடலும் மொழியில் வெளிப்பட்டிருக்கிறது. அவருக்கான மொழியை முதல் நாவலிலேயே அவர் கண்டடைந்திருக்கிறார். மாஜிதாவின் ‘பர்தா’ நம்முடைய இலக்கிய வரலாற்றிலே முக்கியமான நிகழ்வு. இன்று உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகிறது. இன்னொருபுறத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இஸ்லாமிய மக்கள், குறிப்பாகப் பெண்கள் பல்வேறு அழுத்தங்களுக்குள்ளும் கட்டுப்பாடுகளுக்குள்ளும் தண்டனைகளுக்குள்ளும் நெரித்துத் தள்ளப்படுகிறார்கள். இவை இரண்டுக்கும் நடுவேயிருந்து ஒலிக்கும் தனிக்குரல் மாஜிதாவுடையது. அவர் சமூகச் செயற்பாட்டாளராவும் இருப்பதால் மேலும் விரிந்த பார்வை அவருக்கு நாவலில் சாத்தியமாகியுள்ளது. மொழியைத் திருகி வாசகர்களைத் துன்புறுத்தாமல் எழுதப்பட்டிருக்கும் எளிமையான ஆனால், ஆழமான பிரச்சினைகளைப் பேசும் நாவல் பர்தா. கிழக்கு இலங்கை முஸ்லிம்களிடையே எண்பதுகளின் தொடக்கத்திலே நிகழத் தொடங்கிய ஈரான் சார்பான மத அடிப்படைவாதிகளின் கடும்போக்கும், பின்னால் உருவாகிய சவூதி அரேபியா சார்பான மத அடிப்படைவாதிகளின் கடும்போக்குகளும் எவ்வாறு அந்தச் சமூகத்தை மீள முடியாதிருக்கும் பண்பாட்டு அடிமைத்தனத்திற்குள் சிக்கவைத்திருக்கிறது என்பதை சுரையா என்ற பெண்ணின் கதை வழியாக மாஜிதா சொல்லிச் செல்கிறார். நாவலைக் கருத்தூன்றி வாசிக்கும் போது, இது Autofiction எனப்படும் தற்புனைவு நாவலே என்பதை ஊகித்துவிடலாம். அதனாலேயே மிகுந்த நம்பகத்தன்மை பிரதியில் மிளிர்கிறது. பர்தா, ஹபாயா போன்றவை எவ்வாறு பெண்கள் மீது கட்டாயப்படுத்தித் திணிக்கப்பட்டது, அவர்களது பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களான குலவையிடல், கபுர் தரிசனம் போன்றவை கட்டாயமாகத் தடுக்கப்பட்டது போன்றவற்றை முஸ்லிம் பெண்களின் தரப்பிலிருந்து சித்திரிக்கும் குறுக்குவெட்டு ஆவணம் இந்த நாவல். உள்ளிருந்த எழும் தீர்க்கமான எதிர்க் குரல். -‘ஸலாம் அலைக்’ நாவல் பழையன கழிதலோடு ஸ்தம்பிக்கிறதே? நீங்கள் அப்படி கருதுகிறீர்களா? எது பழையது? போரா? அகதி வாழ்வா? மனித குலம் எப்போது உபரிச் செல்வத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியதோ அன்றிலிருந்து இன்றுவரை மாறாதவையல்லவா இவை! காலங்களும் வெளிகளுமே வேறு வேறு. ‘ஸலாம் அலைக்’ நாவலில் நான் எழுதியிருப்பது சமகாலத்தில் அய்ரோப்பாவில் அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். முன்னெப்போதையும் விட இப்போது இந்தப் பிரச்சினை உச்சத்தில் உள்ளது. அய்ரோப்பிய நாடுகள் தங்களது கதவுகளை அகதிகளுக்கு மூடிக்கொண்டுள்ளன. குறிப்பாக ஈழ அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்ற முடிவுக்கு இப்போது இந்த நாடுகள் வந்துள்ளன. ஆனால், இலங்கையிலிருந்து இன்றுவரை அகதிகள் புறப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் முடிவுற்றாலும், அங்கே இன்னும் சிறுபான்மை மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் உள்ளன. ஊடகச் சுதந்திரமும், அரசியல் சுதந்திரமும் இறுக்கமான கண்காணிப்புக்கு உள்ளேயே இருக்கின்றன. இலங்கையில் மட்டுமல்லாமல், உலகளவில் அகதிகள் எவ்வாறு உருவாகக் கூடும் என்பதையும் நாவலில் சித்திரித்துள்ளேன். போரை மறுபடியும் மறுபடியும் நான் எழுதுகிறேன் என நீங்கள் கருதக்கூடும். என் ஆயுள் முழுவதும் எழுதினாலும் சொல்லித் தீராத கதைகளை யுத்தம் உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது. அவற்றை இனித்தான் கண்டடைய வேண்டும். எழுத வேண்டும். இந்த நாவலை எழுதும்போதே, அய்ரோப்பிய மொழி வாசகர்களையும் மனதில் வைத்தே எழுதினேன். அகதிகள் என்றால் யாரென்பதை வெள்ளைக்காரர்களின் செவிகள் கிழியக் கத்திச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லாவிட்டால் ‘Problemski Hotel’ போன்ற தட்டையான, இன வெறுப்பு உறைந்துள்ள நாவல்களின் வழியேதான் அவர்கள் அகதிகளை அறிந்துகொள்கிறார்கள். ‘பிராப்ளம்ஸ்கி விடுதி’ என்ற பெயரில் தமிழ் உட்படப் பல்வேறு மொழிகளில் அந்த நாவல் வெளிவந்திருக்கிறது. நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பெல்ஜிய எழுத்தாளரான டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் பெல்ஜியத்திலுள்ள அகதி முகாமொன்றில் பார்வையாளராகச் சில நாட்கள் தங்கிச் சேகரித்த அரைகுறைத் தகவல்களைத் தன்னுடைய அய்ரோப்பிய மேட்டிமைவாதப் பார்வையில் நாவலாக்கியிருக்கிறார். அகதிகளை முழு மடையர்களாகவும், வீணான சண்டைக்காரர்களாகவும், வேசிகளாகவும் சித்திரிக்கும் நாவலது. இன்னும் சொல்லப் போனால் பெல்ஜியம் நாட்டில் காலனிய காலத்தில் ‘மனிதக் காட்சிச்சாலைகள்’ அமைக்கப்பட்டு, ஆபிரிக்க மனிதர்கள் காட்சிப் பண்டங்களாக்கப்பட்டதைப் போன்றதே ‘பிராப்ளம்ஸ்கி விடுதி’ நாவல். நாவலில் கையாளப்பட்டிருக்கும் மொழி இனவெறுப்பிலும், பெண் வெறுப்பிலும் அருவருப்பாகப் புளித்துப்போயிருக்கிறது. அகதி முகாமின் கௌரவப் பார்வையாளர்களான, அகதிகள் ஆராய்ச்சியாளர்களான டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் போன்றோர் எழுதியிருக்கும் இத்தகைய கதைகளுக்கு எதிராக, முப்பது வருடங்களாக அகதி வாழ்வை வாழ்ந்த நான் அகதிகள் தரப்பின் குரலை ஒலிக்க வேண்டியிருக்கிறது. ‘ஸலாம் அலைக்’ நாவலை பிரஞ்சு மொழியில் வெளியிட பிரான்ஸின் பதிப்பகங்களில் ஒன்றான ZULMA என்னோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது. ‘ஸலாம் அலைக்’ நாவல் அய்ரோப்பிய மொழிகளில் வெளிவரும்போது, என்னால் உறுதியாக டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் போன்ற மேட்டிமைச் சக்திகளைச் சவால் செய்ய முடியும். -புலிகளுக்கு எதிரான நிலைதான் பெரும்பாலும் உங்கள் எழுத்தில் இருந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது ‘பாக்ஸ்’ நாவலில் வருவது போன்ற ஒரு கிராமத்தை உருவாக்கிய காரணம் என்ன? அப்படி புனைவுக்காக உருவாக்கும் போது உங்கள் எழுத்தின் மீதான நம்பகத்தன்மையும் உண்மைத்தன்மையும் போய்விடும் தானே எத்தனை நேர்காணல்களில்தான் நான் இந்தக் கேள்விக்குத் திரும்பத் திரும்பப் பதிலளிப்பது? புலிகளுக்கு எதிரான நிலைதான் என்னுடைய எழுத்தில் பெரும்பாலும் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் என்ன நியாயம்? இலங்கை அரசின் மீதான விமர்சனங்களை என்னுடைய கதைகளில் தொடர்ச்சியாக வைத்திருக்கிறேன். அவற்றோடு ஒப்பிட்டால் புலிகள் மீது நான் வைத்திருக்கும் விமர்சனங்கள் பாதியளவும் இருக்காது. இலக்கியத் தளத்தில் புலிகள் மீதான விமர்சனத்தைப் புலிகள் இருந்த காலத்திலேயே முன்வைத்த மிகச் சிலரில் நானும் ஒருவன் என்பதால் ஒருவேளை இந்தத் தோற்றம் உங்களுக்கு ஏற்படுகிறதோ தெரியவில்லை. நான் புலிகள் இயக்கத்தின் மீது மட்டுமல்லாமல், இந்தப் போரை நடத்திய, போருக்கு ஆதரவளித்த அனைத்துச் சக்திகளுக்கும் எதிரானவன். இதொன்றும் இந்த நேர்காணலுக்கான வெறும் வாய் வார்த்தையில்லை. இதற்கான ஆதாரங்கள் எழுத்துகளாகவும், உரைகளாகவும், விவாதங்களாகவும் என்னுடைய இணையத்தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ‘பொக்ஸ்’ நாவலின் ‘பெரிய பள்ளன்குளம்’ கிராமம் மட்டுமல்லாமல், ‘இச்சா’ நாவலில் வரும் ‘இலுப்பங்கேணி’ கிராமம், ‘ம்’ நாவலில் வரும் ‘பனைத்தீவு’ எல்லாமே நான் கற்பனையில் உருவாக்கிய கிராமங்களே. இன்னும் சொல்லப்போனால் ‘இச்சா’ நாவலில் கற்பனையாக ஒரு துருவ நாட்டையும், கற்பனையாக உரோவன் என்ற மொழியையும் உருவாக்கியுள்ளேன். இலக்கியப் பிரதிக்கு மிக அடிப்படையானது தூலமான உண்மைத்தன்மை என நீங்கள் சொல்லக்கூடும். கற்பனையிலும் இருண்மையிலும் உண்மையை மட்டுமல்லாமல் வரலாற்றையும் கண்டறிய முடியும் என்பதுதான் மகத்தான இலக்கியவாதிகளின் கட்சி. இதற்கான எடுத்துக்காட்டுகளை நீங்கள் மிகெல் டி செர்வாண்டிஸ் முதல் போர்ஹேஸ் வரை கண்டுகொள்ளலாம். பப்லோ பிக்காஸோ இப்படிச் சொல்வார்: Art is a lie that makes us realize truth, at least the truth that is given us to understand. -உலகமயமாக்கத்தைக் கொள்கையாகக் கொண்ட மேற்கத்திய நாடுகளில் இருந்துகொண்டு அந்தக் கொள்கைகளுக்கு நேரெதிரான சிந்தனைக் களத்தில் எப்படி உங்களால் தீவிரமாக இயங்க முடிகிறது? மேற்கு நாடுகள் மட்டுமல்ல சீனா, கியூபா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளின் அரசுகளும் இப்போது உலகமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன. முதலாளியத்தின் அபரிதமான, வீக்கமான உற்பத்தியின் அடுத்த கட்ட நிலை இந்த உலகமயமாக்கல். அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் வீழ்ச்சி இந்த உலகமயமாக்கல். இன்று இலங்கையின் பொருளாதாரம் சிதைவுற்று அதல பாதாளத்தில் வீழ்ந்ததற்கும் இந்த உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையே மூல காரணம். நீங்கள் சொல்வது போல நான் இந்த உலகமயமாக்கலுக்கு எதிராகத் தீவிரமாக எல்லாம் போராடவில்லை. உலகமயமாக்கலைக் கண்டித்து ஏதோ இரண்டு கட்டுரைகளை எழுதுவேன் அல்லது ஒன்றுபாதி நேர்காணல்களில் இப்படியொரு பதிலைச் சொல்லிக் கடந்து போகிறேன். அல்லது பிரான்ஸில் உலகமயாக்கலுக்கு எதிராக நடக்கும் ஏதாவதொரு ஆர்ப்பாட்டத்தில் போய் ஓரமாக நின்றிருப்பேன். அதேவேளையில், நீங்கள் குறிப்பிடும் மேற்கு நாடுகளிலும் உலகமயமாக்கலுக்கு எதிராக இடதுசாரிகளும், விவசாயிகளும், அனார்க்கிஸ்டுகளும் கடுமையாகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசாங்கமும் அவர்களை ஒடுக்கிக்கொண்டுதான் இருக்கிறது. உண்மையில் இப்போது உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்டிருப்பது தலைமை நெருக்கடி. உலக அளவில் அவர்களை இணைப்பதற்கு ஓர் அமைப்பு இல்லாதது வருந்தத்தக்கது. நம்முடைய வரலாற்றில் கடந்த காலங்களில் இயங்கிய கம்யூனிஸ அகிலங்களை மனது ஏக்கத்துடன் நினைவுகொள்கிறது. -எழுத்தின் நோக்கமான சுதந்திரம் அடைந்துவிட்டாலும் எழுத்தின் போர் ஓயாதுதானே? உங்களது கேள்வி எனக்குப் புரியவில்லை. ஆனாலும், எழுத்தில் கூட வீணான, வீம்பான போர் கூடவே கூடாது என்பதைச் சொல்லி வைக்கிறேன். -அடிப்படைவாத படைப்பாளிகள் /உணர்வாளர்கள் உங்களின் எழுத்தினை கொண்டாடினால், உங்களுக்குள் தன்னிச்சையாக ஓர் எச்சரிக்கை உணர்வு ஏற்படும் விதமாக உங்களைப் பழக்கியிருக்கிறீர்கள்தானே? நான் எதற்காக எச்சரிக்கை அடைய வேண்டும்? எனது எழுத்துகளால் அடிப்படைவாதிகள்தான் எச்சரிக்கை அடைய வேண்டும். நானோ என்னுடைய எழுத்தோ ஒருபோதும் இன, மத, பால் அடிப்படைவாதிகளின் பக்கம் சாயாது என்ற தன்னம்பிக்கையும் அரசியல் தெளிவும் எனக்குண்டு. ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும்… பிற்போக்குச் சக்திகளிடையே மட்டுமல்லாமல், முற்போக்குச் சக்திகளிடமும் தங்களது இறுக்கமான அமைப்பு விசுவாசம் காரணமாக இந்த அடிப்படைவாதம் தொற்றியிருக்கிறது. அதனால் தான் முகநூல் முழுவதும் சிவப்புச் சங்கி, நீலச் சங்கி, பச்சைச் சங்கி எனப் பல உருட்டல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆவேசமான ஆயிரமாயிரம் முகநூல் உருட்டல்களை விட, ஒரேயொரு நிதானமான உரையாடல் சாலச் சிறந்தது. -வாழ்வு முழுக்க நீளும் இத்தனை அலைக்கழிப்புகளுக்கு மத்தியிலும் அந்தப் பகடி நிறைந்த கொண்டாட்டமான மனதை எழுத்தில் எப்படி தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடிகிறது? என்னுடைய எழுத்திலுள்ள பகடியை நீங்கள் கொண்டாட்ட மனநிலையாக அடையாளம் காணத் தேவையில்லை. அது கையறு நிலையில் வெளிப்படும் கசப்பான எதிர்வினை. அதிகார சக்திகளை எதிர்த்துப் பேசும் சாமான்யனுக்கு எள்ளலும் கிண்டலும் ஆயுதங்கள். இந்த அம்சத்தை பேராசிரியர் ராஜ் கௌதமன் ‘தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு’ எனும் நூலில் மிக விரிவாக ஆய்வு செய்து பேசியுள்ளார். -யாழ்ப்பாண நூலகத்தினை உலகின் ஏதாவதொரு மூலையில் அதே மாதிரி கட்டமைக்க முடியுமா? யாழ் நூலகத்தோடு சேர்த்து எரியூட்டப்பட்ட பழைமை வாய்ந்த நூல்களும், சுவடிகளும் நமக்கு இனிக் கிடைக்கப் போவதில்லை. யாழ்ப்பாண நூலகம் மீளக் கட்டியெழுப்பப்பட்டு, இப்போது அதே இடத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை மேலும் விரிவுபடுத்துவதைப் பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும். -யாவரும் விரும்பிய ஈழம் அமைவதற்கான சாத்தியங்கள் இன்னும் இருக்கிறதுதானே? இன்றுள்ள அரசியல் சூழலில் சாத்தியங்கள் தென்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் மாறப்போகும் சர்வதேச அரசியல் சூழல்களில் ஈழம் அமைவதற்கான சாத்தியங்கள் தோன்றவும் கூடும். சர்வதேச வல்லாதிக்க அரசுகளின் சூழ்ச்சிகளையும் திட்டங்களையும் நாம் முன்கூட்டியே அனுமானித்துவிட முடியாது என்பது ஈழப் போராட்டம் நமக்குக் கற்றுத் தந்த பாடங்களில் தலையாய பாடம். இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. அது என்னவெனில் இன்றைக்கும் ஈழத் தமிழர்கள் தனி ஈழக் கோரிக்கையை ஆதரிக்கிறார்களா என்பதே. இதற்கு ஈழத்தில் வாழும் மக்களும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுமே பதில் சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்து ஈழத்தில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் அறிவுஜீவிகளோ, முன்னாள் போராளிகளின் அமைப்போ தனி ஈழக் கோரிக்கையை இப்போது முன்வைப்பதில்லை. -படைப்பாளி என்பதால் எல்லாவற்றிற்கும் மாற்றுக்கருத்து பேசுகிறீர்களா? நான் அவநம்பிக்கையாளன் அல்ல. மாறாக நான் எப்போதுமே நன்நம்பிக்கைவாதி. அதேவேளையில் நம்மைச் சூழ்ந்துள்ள அரசியல் நிலைமைகளையும், மக்களின் எண்ணங்களையும் நிதானமாகவும் சரியாகவும் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற வேண்டுமென்று கருதுபவன். உணர்ச்சிவயப்பட்டோ, சமூக வலைத்தளங்களால் தூண்டப்பெற்றோ வார்த்தைகளைச் சிந்திவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் இருக்கிறேன். அதேவேளையில் சரியான தருணத்திலும், இடத்திலும் என்னுடைய மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதில் நான் தயக்கம் காட்டுவதுமில்லை. சில நாட்களுக்கு முன்பு பழ. நெடுமாறன் ‘விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ எனத் தெரிவித்த கருத்தின்மீது பலர் எதிர்க் கருத்து வைப்பதையும், நெடுமாறனை இந்திய உளவுத்துறை ஏஜெண்ட் என்பது போலக் கரித்துக்கொட்டுவதையும், நெடுமாறனை மறுத்து சீமானும், தொல். திருமாவளவனும், வைகோவும் ‘பிரபாகரன் உயிரோடு இல்லை’ எனச் சொல்வதையும் பார்த்தவாறு இருக்கிறேன். மொத்தக் குற்றத்தையும் பழ. நெடுமாறன் மீது சுமத்துவதை என்னால் உண்மையில் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. பொறுமையாக என்னுடைய கருத்தை உங்களிடம் தெரிவித்துவிடுகிறேன். புலிகளின் தலைவர் இறுதி யுத்தத்தில், மே 2009- இல் இறந்துவிட்டார் என்பதில் எனக்கு எந்த அய்யமும் கிடையாது. 2009 யூலை மாதம் நான் தீராநதி இதழில் ‘பிரபாகரன் ஜீவிக்கிறார்’ என்றொரு கட்டுரையை எழுதினேன். வன்னியின் போர்க்களத்தில் மடிந்த தங்களது தலைவரின் மரணத்தை ஒப்புக்கொள்ளவும் அறிவிக்கவும் எஞ்சியிருக்கும் புலிகளும், புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளும், புலிகளின் ஆதரவாளர்களும் மறுப்பதைக் கடுமையாக அக்கட்டுரையில் சாடியிருந்தேன். அப்போது புலிகளின் அமைப்புகள் மட்டுமல்லாது நெடுமாறனும், வைகோவும், சீமானும், தொல். திருமாவளவனும் பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களில் எவர் ஒருவரும் இன்றுவரை பிரபாகரனுக்கு ஓர் அஞ்சலி நிகழ்வை நடத்தியதில்லை. அவரது படத்திற்கு ஒற்றை மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றி வைக்கவில்லை. வருடா வருடம் தவறாமல் நவம்பர் மாதங்களில், பெரும் எடுப்பில் புலம் பெயர்ந்த நாடுகளில் நடத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வுகள் எதிலும் இன்றுவரை எவருமே பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த ஒற்றை வார்த்தையைச் சொன்னதில்லை. சென்ற வருடம், அதாவது 2022-இல் நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லியில் நடத்திய ‘மாபெரும் இன எழுச்சிப் பொதுக் கூட்டம்’ என்ற நிகழ்வில் ‘வருவாண்டா பிரபாகரன் மறுபடியும் அவன் வரும்போது சிங்களவன் கதை முடியும்’ என்ற பாடல் மேடையில் பாடப்பட்டதையும், அதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் களிப்போடு நடனமாடியதையும் இப்போதும் நீங்கள் You Tube-ல் காணலாம். பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது சீமானுக்கு சென்ற வருடம்வரை தெரியாதா என்ன? ஆக ஒரு பெரும் கூட்டமே பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற மாயையை இதுவரை கட்டிக்காத்து வந்திருக்கிறது. அதன் விளைவுதான் நெடுமாறனின் இப்போதைய ‘உயிரோடு இருக்கிறார்’ அறிக்கை. கவனமாகப் பாருங்கள்! இப்போதுவரை புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் இயங்கிக்கொண்டும், மக்களிடம் பணம் சேகரித்தவாறுமே உள்ளன. அந்தக் கிளைகளில் ஒரு கிளை கூட இதுவரை பழ.நெடுமாறனை மறுக்கவில்லை. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற மாயையை அவர்கள் நீடித்து வைத்திருக்கவே விரும்புகிறார்கள். புலிகளின் வெளிநாட்டு அமைப்புகளே இப்படித் திருகுதாளம் செய்யும் போது, நெடுமாறனை நொந்து என்ன பயன்? நெடுமாறனை மறுக்கும் சீமானோ, திருமாவளவனோ, அல்லது தீபச்செல்வன் போன்றவர்களோ அடுத்த மாவீரர் தினத்தில் பிரபாகரனுக்குப் பகிரங்கமாக அஞ்சலி செலுத்தத் தயாரா? இல்லையெனில் நெடுமாறனைக் குற்றம் சொல்லாதீர்கள். நீங்கள் அமுக்கமான வாய்! நெடுமாறன் ஓட்டைவாய்! அவ்வளவுதான் வித்தியாசம். உண்மையில், புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட போதே, அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு இன்னொரு தலைமையை வெளிநாடுகளில் வாழ்ந்திருந்த புலிகளிடையே அந்த அமைப்புத் தேர்ந்தெடுத்திருந்தால் இன்றுவரை புலிகள் அமைப்பு ஆகக் குறைந்தது புலம்பெயர்ந்த நாடுகளிலாவது பலத்துடன் இருந்திருக்கும். நாடு கடந்த அரசாங்கம் என்பது இப்போது போலக் கேலிக்கூத்து ஆகாமல், ஒரு தீவிரமான அரசியல் செயற்பாடாக அமைந்திருக்கும். தலைவர் மரணித்த உண்மையை மறைத்ததால் இப்போது அந்த அமைப்பே மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது. புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் வெறுமனே வணிக நிறுவனங்களை நடத்தி லாபம் சம்பாதிக்கும் பிரைவேட் கம்பனிகளாக மாறிவிட்டன. இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் நெடுமாறன் மீது சாபம் விடுவது மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் வேலையே. இன்னும் பல காலங்களுக்கு பழ. நெடுமாறன் போன்றவர்கள் ‘பிரபாகரன் ஜீவிக்கிறார்’ என்று பல்வேறு ரூபங்களில் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். உண்மையிலேயே கணிசமான மக்கள் இந்தப் பொய்யை நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நெடுமாறனின் அறிக்கையைத் தொடர்ந்து, சமூகவலைத்தளங்களில் எழுதப்பட்ட எண்ணற்ற உற்சாகமான பதிவுகளைக் கவனித்தாலே இது உங்களுக்குப் புரிந்துவிடும். இத்தகைய வீண் நம்பிக்கை அந்த மக்களை அரசியல் செயலின்மையில் தள்ளிவிடும். இன்று பேசப்படும் 13-வது திருத்தச் சட்டம், முழுமையான மாகாண சுயாட்சி போன்ற தீர்வுத் திட்டங்களை அவர்கள் இயல்பாகவே நிராகரித்துவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் பிரபாகரனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் உயிரோடு இல்லை என்பது இலங்கை அரசுக்கும் தெரியும். ஆனால், பிரபாகரனின் வழியை ஆதரிக்க இன்னும் கணிசமான ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்கிறார்கள். தமிழ் நிலங்களில் தங்களது கண்காணிப்பையும் இராணுவ முற்றுகையையும் மேலும் பலப்படுத்துகிறார்கள். -இராசபக்சேகளுக்கு எதிரான மக்கள் போராட்டத்தைப் புலம்பெயர் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? பெரிய மகிழ்ச்சி எதுவும் வெளிப்பட்டதாகத் தெரியவில்லையே? புலம் பெயர்ந்த தமிழ் மக்களோ, தாயகத்தில் வாழும் தமிழ் மக்களோ பெரும்பாலானோர் ஒருபோதுமே இராசபக்சேக்களை ஏற்றுக்கொண்டது கிடையாது. ஈழத் தமிழர்கள் ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும் இராசபக்சேகளுக்கு எதிராக நின்ற வேட்பாளர்களுக்கே தங்களது வாக்குகளைச் செலுத்தினார்கள். குறிப்பாக கோத்தபய இராசபக்ச முதன்மையான இனப்படுகொலை யுத்தக் குற்றவாளி என்பதுவே தமிழ் மக்களின் கருத்தாகும். கோத்தபய இராசபக்ச அதிபர் தேர்தலில் வென்றதும் ‘சிங்கள மக்களின் வாக்குகளாலேயே நான் வென்றேன்’ எனச் சொன்னார். பெரும்பாலான தமிழ் மக்கள் எப்போதுமே இராசபக்சக்களை நிராகரித்தே வந்திருக்கிறார்கள். எனவே இராசபக்சக்களின் வீழ்ச்சியை அவர்கள் எப்போதுமே விருப்பத்துடன் எதிர்பார்த்தே இருந்தார்கள். ஆனால், சென்ற வருடம் சிங்கள மக்களால் வழி நடந்தப்பட்ட இராசபக்சேக்களுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே போராட்டத்தின் முதன்மைப் பிரச்சினையாக முன்வைக்கப்பட்டது.அந்தப் போராட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்தெல்லாம் யாரும் உறுதிபடப் பேசவில்லை. இன்று தமிழ் அரசியல் தரப்புகளால் கோரப்படும் 13வது திருத்தச்சட்டம், அதன் வழியான முழுமையான மாகாண சுயாட்சி போன்ற கோரிக்கைகளையெல்லாம் போராட்டத்தில் யாருமே முன்வைக்கவில்லை. யுத்தக் குற்றங்களுக்கு நீதி விசாரணையை வலியுறுத்தவில்லை. வெறுமனே இழவுத் துக்கம் கேட்டதுடனும், கொழும்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பருகியதுடனும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் இலகுவாகக் கடக்கப்பட்டன. ஆகவே இயல்பாகவே பெரும்பாலான தமிழ் மக்கள் இந்தப் போராட்டத்திலிருந்து ஒதுங்கி நின்றதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவர்களைப் பொறுத்தவரை எந்தச் சிங்களக் கட்சியும், எந்தச் சிங்களத் தலைமையும் நம்பிக்கையானதல்ல. ஆனால், பெருமளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது தமிழ், முஸ்லிம் மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். அதேவேளையில் பரந்துபட்ட தமிழ் மக்களுக்குச் சிங்கள அரசியல் சக்திகள் மீதிருக்கும் நியாயமான சந்தேகத்தையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் முக்கிய பாத்திரங்களை வகித்த அரசியல் சக்திகளான ஜே.வி.பியும், இன்றைய முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர்களும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது, போருக்கும் இராசபக்சக்களுக்கும் ஒருமித்து ஆதரவளித்தவர்கள் என்பதை எப்படி நம்மால் மறந்துவிட முடியும். சிறுபான்மையினரின் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற வார்த்தையைக் கேட்டாலே காதுகளை மூடிக்கொள்ளும் அறப் படித்த மார்க்ஸியர்களல்லவா இவர்கள். இடதுசாரிப் போர்வைக்குள் மறைந்திருக்கும் பச்சை இனவாதிகள் இவர்கள். இதையெல்லாம் எற்கனவே கட்டுரைகளில் நான் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறேன். இந்த இனப்படுகொலைக்குப் பின்பாக நடந்த தேர்தல்களில் பெருவாரியான சிங்கள மக்கள் இராசபக்சேவை வெற்றிநாயகனாகக் கொண்டாடி வெற்றியை அளித்தார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிப்பு உண்டெனிலும், அதை விடவும் முக்கியமான அரசியல் உரிமைகள், காணாமலாக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், சிறுபான்மையினரின் நிலங்களில் நடுநிசியில் திடீரெனத் தோன்றும் புத்தர் சிலைகள், நில அபகரிப்பு, இனப்படுகொலைக்கான நீதி தொடர்பிலான பாரதூரமான பிரச்சினைகள் இருக்கின்றன. அது குறித்துப் போராட்டக்காரர்கள் உண்மையான அக்கறையைக் கொண்டிருக்கவில்லை. நடந்து முடிந்த போராட்டத்தில் இந்தப் போதாமைகள் இருப்பினும் இராசபக்சவை வீழ்த்தியது பெரும் சாதனையே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஏன் இந்தப் போராட்டம் அத்தோடு முடங்கிப்போனது? புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டுவருவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டமா இது? இல்லையெனில் ஏன் போராட்டம் தொடரவில்லை? என்றெல்லாம் நிறையக் கேள்விகள் உள்ளன. இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிட்டதா என்ன? உலக வங்கியினதும், சர்வதேச நாணய நிதியத்தினதும் ஒவ்வொரு அழுத்தத்துக்குப் பணிந்தும் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கிறார். பொதுமக்களுக்கான மானியங்களிலும் அரச ஊழியர்களது ஊதியத்திலும் வெட்டுக்களை ஏற்படுத்துகிறார். வேடிக்கையானது என்றாலும் ஒர் உண்மையைச் சொல்கிறேன். இராசபக்சக்களை விட ரணில் விக்கிரமசிங்கவே உலக ஏகாதிபத்தியத்திற்கும் மூலதனத்திற்கும் உலகமாயமாக்கலுக்கும் சிறப்பாகச் சேவை செய்யக்கூடியவர். இதை அவரதும் அவரது கட்சியினதும் வரலாறு கடந்த அய்ம்பது வருடங்களாக நிரூபணம் செய்திருக்கிறது. -தாயகத்தின் இப்போதைக்கான தன்னெழுச்சியும் ஆட்சி மாற்றமும் தாயகம் திரும்புவதற்கான சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறதா? அந்த மாற்றம் 2015-ல் அமைந்த ‘நல்லாட்சி’ என அழைக்கப்பட்ட மைத்திரிபால சிறீசேனா ஆட்சிக் காலத்திலேயே உருவாகிவிட்டது என்றே நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட போதுதான் ‘தமிழ் மக்களின் வாக்குகளால் நான் தோற்கடிக்கப்பட்டேன்’ என்று மகிந்த இராசபக்ச வன்மத்தோடு புலம்பினார். இராசபக்சக்கள் அல்லது ரணில் விக்கிரமசிங்கவோடு ஒப்பிடும்போது, மைத்திரிபால சிறீசேனாவது ஆட்சிக்காலம் ஒப்பீட்டளவில் பரவாயில்லை. வெள்ளை வேன் கடத்தல்களும், கொலைகளும், காரணமற்ற கைது நடவடிக்கைகளும் அந்த நான்கு வருடங்களில்தான் ஓரளவாவது கட்டுப்படுத்தப்பட்டன. அந்தக் காலத்தில்தான் புலம் பெயர்ந்த தமிழர்களில் ஏராளமானோர் நீண்ட காலங்களுக்குப் பின்பு தாயகம் திரும்பினார்கள். அப்போது இலங்கைக்குச் செல்லக்கூடிய கடவுச்சீட்டு என்னிடம் இல்லாததால் என்னால் தாயகத்துக்குச் செல்ல முடியவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவை நடந்ததாலும், என்னிடம் சரியான கடவுச்சீட்டு இருந்ததாலும், யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசிக்கும் என்னுடைய எண்பத்தொரு வயது தாயாரைப் பார்ப்பதற்காகத் திடீரென ஏற்பட்ட உந்துதலால் கிளம்பிச் சென்று, அம்மாவுடன் ஒரு வாரம் இருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறேன். கண்டிப்பாக எந்த இலக்கியக் கூட்டத்திலும் பங்கு கொள்ளவில்லை. எந்த ஊடகத்திற்கும் நேர்காணல் வழங்கவில்லை. நான் பிறந்து வளர்ந்த, என்னுடைய பல கதைகளில் இடம்பெறும் அல்லைப்பிட்டிக் கிராமம் இடிந்து விழுந்த வீடுகளுடன் காடாகிக் கிடக்கிறது. ஏறத்தாழ முக்கால்வாசிக் கிராமமும் இடம்பெயர்ந்துவிட்டது. இருக்கும் சொற்ப மக்களும் யுத்த வடுக்களுடனும், துன்ப நினைவுகளோடும் வாழ்கிறார்கள். இலங்கைப் படையினர் நடத்திய மூன்று கூட்டுப் படுகொலைகளைச் சந்தித்த சின்னஞ் சிறிய கிராமம் அது. முப்பத்து மூன்று வருடங்களுக்குப் பின்பாகத் தாயக நிலத்தில் கால் வைத்தபோது, உணர்ச்சியில் என்னுடைய மனது கொந்தளித்துக்கொண்டிருந்தது. திரும்பி வரும்போது துயரால் என்னுடைய மனம் செத்திருந்தது. என்னுடைய இயல்புக்கு மாறாக முதற்தடவையாக என்னை மிகப் பலவீனமாக உணர்கிறேன். வெறுமை! https://www.shobasakthi.com/shobasakthi/2023/03/02/யுத்தம்-கதைகளை-உருவாக்கி/?fbclid=IwAR2M6o21KMHtWJVDNo4HzmpjwwsNjHPz__IbZgR0CaQ2P5CBRZ9rGDt7_Xw
  3. மெய்யெழுத்து February 14, 2023 ஷோபாசக்தி 2009 -வது வருடம், வைகாசி மாதத்தின் இறுதி நாளில்; ஓர் இளநிலை இராணுவ அதிகாரி “நாங்கள் திலீபனின் உடல் எச்சங்களைக் கைப்பற்றிவிட்டோம்” என்றொரு செய்தியை வவுனியா இராணுவ மையத்திற்கு அறிவித்தான். அப்போது மருத்துவர் ராகுலன் மனநிலை சரிந்தவர் போன்று, மணலை அள்ளித் தனது தலையில் போட்டுக்கொண்டு, குழறி அழுதவாறிருந்தார். 1977 -வது வருட இன வன்செயல்களின் பின்பாக, ராகுலனின் குடும்பம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது. யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் பத்தாவது வகுப்பில் சேரும்போது ராகுலனுக்கு வயது பதினாறு. அங்கேதான், பார்த்திபன் என்ற பெயரோடு எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த திலீபனை அவர் முதன்முதலாகச் சந்தித்தார். கல்லூரியில் நடக்கவிருக்கும் விஞ்ஞானக் கண்காட்சியில், ராகுலனின் வகுப்பு மாணவர்கள் ஏதாவது ஒரு புதுமையை வைக்க வேண்டும் என்று விஞ்ஞான ஆசிரியர் வரதராஜ சர்மா கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இவர்களாலோ குறுகிய காலத்திற்குள் ஏதொன்றையும் உருவாக்க முடியாமலிருந்தது. வெறுத்துப் போன ஆசிரியர் கடுங்கோபத்துடன் ராகுலனைப் பார்த்து “எயிட் ஏ வகுப்பிலயிருக்கிற பார்த்திபன் எண்ட ஸ்டுடண்டைக் கூட்டிக்கொண்டு வாரும். அப்பயாவது சோத்து மாடான உங்களுக்கெல்லாம் புத்தி வருதா எண்டு பார்ப்பம்” எனச் சொல்லி, திலீபனை அழைத்துவருமாறு ராகுலனை அனுப்பிவிட்டார். சோற்று மாடு என ஆசிரியர் தன்னைத்தான் குத்திக்காட்டியிருக்க வேண்டும் என்று நினைத்து ராகுலன் தனக்குள்ளே துக்கித்தவாறேதான் திலீபனைத் தேடிப் போனார். ‘ஏன் இந்தப் பொடியன் சோறு தின்னமாட்டானோ?’ என்று அதுவரை பார்த்திராத திலீபனை மனதிற்குள் கரித்துக்கொட்டியவாறு தான் போனார். ராகுலன் கொழும்பில் பாற்கட்டிகளும், நெய்ச்சோறுமாகச் சாப்பிட்டுச் சொகுசாக வளர்ந்த பிள்ளை. அதனால் மினுமினுப்பாகக் கொழுத்த கன்றுக்குட்டி போலிருப்பார். சற்றுக் குள்ளமானவர் என்பதால் அவருடைய குண்டுத் தோற்றம் இன்னும் தூக்கலாகவே தெரியும். இந்த உடல்வாகு அவருடன் எப்போதுமிருந்தது. ராகுலன் தேடிச் சென்ற அந்த மாணவர் மிக ஒல்லியாக, பொது நிறத்திலிருந்தார். அவருடைய முன்வாய்ப் பற்கள் சற்றுத் துருத்திக்கொண்டிருந்தன. அடர்த்தியான தலைமுடி கலைந்து விழுந்திருந்த நெற்றிக்குக் கீழே மூக்குக் கண்ணாடிக்குள் அவரது கண்கள் சற்றே கிறங்கியிருந்தன. இந்தக் கிறக்கம் கடைசிவரை திலீபனோடு இருந்ததை, ராகுலன் எப்போதுமே ஞாபகம் கொள்வார். திலீபனை அழைத்து வரும்போது “நீர் எங்கயிருந்து வாறனீர்?” என்று ராகுலன் கேட்க “ஊரெழு” என மிக மென்மையான குரலில் திலீபன் பதில் சொன்னார். “நீர் படிப்பில பெரிய கெட்டிக்காரனோ?” என்று ராகுலன் எகத்தாளமாகக் கேட்டபோது “ஓம்” என்று ஒற்றை வார்த்தையில் திலீபன் அதே மென்மையான குரலில் பதில் சொன்னார். ஒருவிதமான விலகியிருக்கும் சுபாவம் அந்த மாணவனிடம் ஒட்டியிருப்பதை ராகுலன் கவனித்தார். வகுப்பறையில் ஆசிரியர் வரதராஜ சர்மா முன்பு நின்றபோதும், அதே விலகல் தன்மையோடுதான் திலீபன் நிலைகொள்ளாமல் கால்மாறி கால்மாறி நின்றார். இப்படி ஏதாவது சேட்டைகளைச் செய்தால் “என்ன உனக்குப் பிரச்சினை… மாதவிலக்கே? நேரா நிமிந்து நிக்கேலாதே?” என வெடுக்கெனக் கேட்பவர் வரதராஜ சர்மா. ஆனால், திலீபன் மிகப் புத்திசாலியான மாணவன் என்று அவர் கருதியிருந்ததால், திலீபன் மீது அவருக்குத் தனி அன்புண்டு. திலீபனின் தந்தையாரான இராசையா வாத்தியாரோடு ஒரு காலத்தில் பணியாற்றியதால் திலீபனின் குடும்பச் சூழலையும் அவர் அறிவார். திலீபன் பத்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே தாயை இழந்தவர் என்பதால், திலீபன் மீது கூடுதல் பரிவும் வரதராஜ சர்மாவுக்கு இருந்தது. திலீபனின் விலகியிருக்கும் சுபாவத்திற்குத் தாயாரின் இழப்புக்கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனப் பிற்காலத்தில் ராகுலன் யோசித்ததுண்டு. “பார்த்திபன்… வாற எக்ஸிபிசனில புதுமையா நாங்கள் என்ன செய்யலாம் எண்டு நீ இந்த பத்தாம் வகுப்பு எருமைகளுக்குச் சொல்லிக்குடு!” எனச் சொல்லிவிட்டு, ஆசிரியர் வெளியே போய்விட்டார். “ஒரு மயிலின்ர எலும்புக்கூட்டை நாங்கள் விளக்கங்களுடன் கண்காட்சியில வைக்கலாம்’ என்று திலீபன் மாணவர்களுக்குச் சொன்னார். அதுவொரு புதுமையான யோசனையாகவே மற்றைய மாணவர்களுக்கும் தெரிந்தது. யாழ்ப்பாணத்தாருக்கு மயில் பறவை அதிசயம்தான். யாராவது வன்னியிலிருந்து கொண்டுவந்து வளர்த்தால் தான் உண்டு. ஆனாலும், யாழ்ப்பாணத்தின் அனல் பறக்கும் காலநிலையாலோ அல்லது வனச்சூழல் இல்லாததாலோ அந்த மயில்களும் சீக்கிரமே இறந்து போகும். “மயில் எலும்புக் கூட்டுக்கு எங்க போறது?” என்று ராகுலன் கேட்டார். “அது ஒரு இடத்தில இருக்கு… ஆராவது ஒராள் மட்டும் என்னோட வந்தால் போதும். எடுத்துத் தருவன்” என்றார் திலீபன். மாலையில் பாடசாலை விட்டதும், ராகுலனே திலீபனோடு சென்று, அந்த மயில் எலும்புக்கூடைப் பெற்றுவருவதென்று தீர்மானம் ஆயிற்று. பாடசாலை விட்டு ராகுலன் வெளியே வந்தபோது, சொன்னது போலவே திலீபன் வெளிவாசலில் நின்றிருந்தார். “போகலாம்” என்று ராகுலன் சொன்ன போது “இப்ப போய் சாமானை எடுக்க ஏலாது, நீர் இரவு பத்து மணிக்கு ஊரெழு கணக்கன் சந்திக்கு வாரும்! நான் அங்க நிப்பன்” என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் கூடக் காத்திராமல், திலீபன் வெளியேறிக்கொண்டிருந்த மாணவர்களுடன் கலந்து மறைந்துவிட்டார். ராகுலன் குழம்பிப் போனார். முதலில் அவருக்கு ‘ஊரெழு கணக்கன் சந்தி’ எங்கேயிருக்கிறது என்பதே சரியாகத் தெரியாது. அதுவும் இரவு பத்துமணிக்கு அங்கே போவதென்றால் எப்படிப் போவது? போகாவிட்டாலோ வரதராஜா சர்மாவைச் சமாளிக்க முடியாது. தனது வீடு இருக்கும் உரும்பிராய் தெற்குக்கு, பக்கத்துக் கிராமமே ஊரெழு என்பதால், குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று மனதைத் தேற்றியவாறே ராகுலன் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்குப் போனார். இரவு ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, ஊரெழுவை நோக்கி நடந்தார். அன்று நிலவு வெளிச்சம் அவருக்கு வழி காட்டிற்று. வழியில் தென்பட்ட ஒரேயொரு சைக்கிள்காரரிடம் விசாரித்ததில், அதே தெருவால் நேராக நடந்து போனாலே ஊரெழு கணக்கன் சந்தி வந்துவிடும் என்பதைத் தெரிந்துகொண்டார். பத்து மணிக்கு முன்பே குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டவர் அங்கே திலீபனுக்காகக் காத்திருந்தார். இரவு பத்து மணிக்கு அப்படியென்ன மயிலைப் பிடிக்கிற மயிர் வேலை என்ற குழப்பம் அவருக்கு இருந்துகொண்டேயிருந்தது. சரியாகப் பத்து மணிக்கு ராகுலனுக்குப் பின்னால் திலீபன் தோன்றினார். “வாரும்” என்று முணுமுணுத்துவிட்டு திலீபன் முன்னே விரைந்து நடக்க, ராகுலன் செம்மறி ஆடு போலப் பின்தொடர்ந்தார். அய்ந்து நிமிட நடைதூரத்தில், வண்ண மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஊரெழு முருகன் கோயில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. கோயில் புறமதிலைச் சுற்றிப் பின்புறமாக திலீபன் ராகுலனை அழைத்துப் போனார். அங்கே முழத்துக்கொரு உயரிப் பனையாக அடர்ந்த பனங்கூடல் இருந்தது. ஓரிடத்தில் நின்று, வடலி மறைவிலிருந்து ஆறு மின்கலங்கள் போடக்கூடிய டோர்ச் லைட்டையும், ஒரு மண்வெட்டியையும், ஒரு பெரிய சாக்குப் பையையும் திலீபன் எடுத்தார். “இது ஆற்ற சாமான்கள்?” என்று ராகுலன் கொஞ்சம் திகிலுடன்தான் கேட்டார். “நான் பொழுதுபட முன்னமே கொண்டுவந்து வைச்சிட்டன்” என்று சொன்னவாறே திலீபன் இன்னும் சற்றுத் தூரம் பனங்கூடலுக்குள் நடந்து சென்று, ஓரிடத்தில் நின்றவாறே மெதுவாகச் சொன்னார்: “கோயில்ல நிண்ட மயில்தான். இஞ்சதான் தாட்டிருக்கு!” “நாமள் தோண்டினால் பிரச்சினை ஏதும் வராதே?” “தோண்டின தடயமே இல்லாமல் செய்துபோட்டுப் போகவேணும் ஐஸே!” ராகுலனின் கையில் டோர்ச் லைட்டைக் கொடுத்துவிட்டு, திலீபன் மண்வெட்டியால் மெதுவாகச் சாறிச் சாறி மணலைக் கவனமாக விலக்கிக்கொண்டே போனார். ராகுலனுக்கு உண்மையிலேயே நடுக்கமாக இருந்தது. அவரது கையிலிருந்த விளக்கு வெளிச்சம் அங்குமிங்குமாகத் தளம்பியது. “நேராப் பிடியும் ஐஸே…” என்று திலீபன் எரிச்சலுடன் சொன்னார். மதியம் பாடசாலையில் விலகல் சுபாவத்துடன் குரல் எழாமல் பேசிக்கொண்டிருந்த சிறுவன், இப்போது கட்டளை அதிகாரி போல மாறிவிட்டிருந்ததை ராகுலன் வாயைப் பிளந்துகொண்டே கவனித்தார். மயில் எலும்புக்கூடு பெரிய சேதங்களில்லாமல் கிடைத்தது. அதைச் சாக்குப் பைக்குள் பத்திரமாக வைத்துவிட்டு, திலீபன் அந்தக் குழியை இருந்தது போலவே மூடிவிட்டு, அதன் மீது இரண்டு காவோலைகளை இழுத்துப் போட்டார். வந்த திசைக்கு எதிர்த் திசையால் திலீபன் நடக்க, ராகுலன் சாக்குப் பையுடன் பின்னாலேயே போனார். பனங்கூடலால் வெளியேறிதும் எதிர்ப்பட்ட ஊரி ஒழுங்கையின் ஓரமாக ஒரு சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. “நீர் சைக்கிள எடும்” என்று சொன்னவாறே தீலீபன் சாக்குப் பையை வாங்கிக் கரியரில் கட்டினார். தனக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதைச் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டே “நீர் ஓடும்… நான் பெடல் போட்டுத் தருவன்” என்று ராகுலன் சமாளித்தார். “எலும்புக் கூடு எங்கயிருந்தது எண்டு ஆராவது கேட்டால், என்ர வீட்டில இருந்தது எண்டுதான் சொல்லவேணும்…சரியா” என்று கொஞ்சம் கடுமையான தொனியில் திலீபன் சொல்ல “சரி மச்சான்” என்றார் ராகுலன். இப்படித்தான் திலீபனுக்கும் ராகுலனுக்குமான நட்பு ஆரம்பித்தது. அதன் பின்பாக, ராகுலன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படிக்கும்வரை ‘லவ்வர்ஸ்’ என்று மாணவர்கள் கேலி செய்யக்கூடியளவுக்கு இருவரும் மயிலும் வேலும் போல ஒட்டிக்கொண்டார்கள். ராகுலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்பதற்குத் தேர்வானதற்கு இரண்டு வருடங்கள் கழித்து, திலீபனும் அதே மருத்துவ பீடத்தில் கற்பதற்குத் தேர்வானார். அந்தச் செய்தியைச் சொல்வதற்காக ராகுலனைத் தேடி உரும்பிராய் வீட்டுக்குச் சென்றிருந்த திலீபன், சில நாட்களுக்குப் பின்பு ராகுலனுக்குச் சொல்லாமலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டார். 2 1987 -வது வருடம், செப்டம்பர் மாதத்தில்; திலீபன் நீரையும் உணவையும் முற்றாக மறுத்து, நல்லூர் முருகன் கோயிலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இரண்டாவது நாளில், ராகுலன் கூட்டத்தோடு கூட்டமாக நின்று, மேடையிலிருந்த திலீபனைப் பார்த்துக்கொண்டிருந்தார். உண்மையிலேயே இதுவொரு தேவையில்லாத அரசியல் சாகசம் என்றுதான் ராகுலன் நினைத்தார். இரண்டு, மூன்று நாட்கள் உண்ணாவிரதமிருந்து நாடகமாடிவிட்டு, ஏதாவதொரு சாக்குப்போக்கைச் சொல்லி உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வார்கள் என்றுதான் அவர் நம்பினார். அதற்குக் காரணமுமிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான், இலங்கை அரசுக்குக் கோரிக்கை வைத்து, பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதமிருந்து அறப்போராட்டம் நடத்திய மதிவதனி, படிகலிங்கம், வனஜா உள்ளிட்ட ஒன்பது மாணவர்களும் பட்டினி மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, அந்த உயிர்களைப் பாதுகாப்பதற்காக புலிகள் வலுகட்டாயமாக துப்பாக்கிமுனையில் அந்த மாணவர்களைக் கடத்திச் சென்றிருந்தார்கள். அந்த நடவடிக்கையை முன்னின்று செய்தவர்களில் திலீபனும் ஒருவர். அவர் அப்போது ஒரு சிறிய ஏரியாவுக்குப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராகயிருந்தார். ராகுலனுக்கோ அரசியலில் துளி ஆர்வமும் கிடையாது. எல்லா ஆயுத இயக்கங்களின் மீதும் அவருக்கு அவநம்பிக்கையே இருந்தது. எந்தப் பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டம் தீர்வாகாது என்பதுதான் ராகுலனின் எண்ணம். அப்போதெல்லாம் திலீபன் அடிக்கடி பல்கலைக்கழகத்திற்கு வருவார். ராகுலனைக் கண்டால் அவரோடு சேர்ந்து ஒரு தேநீராவது அருந்தாமல் போகமாட்டார். இந்த நல்லூர் உண்ணாவிரதத்தைப் புலிகள் சீக்கிரமே முடித்துக்கொள்வார்கள் என ராகுலன் நம்புவதற்கு இன்னொரு வலுவான காரணமுமிருந்தது. போர்முனைகளில் படுகாயப்பட்ட திலீபனுக்கு இதுவரை மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு நடந்த அறுவைச் சிகிச்சையில், திலீபனது குடலில் பதினான்கு அங்குலங்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அவர் தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதமிருப்பது மிக மிக ஆபத்தானது. மேடையில் திலீபனைச் சுற்றி நான்கைந்து புலிகள் இயக்க இளைஞர்கள் நின்றிருந்தார்கள். ‘ஆக்களப் பாரு… ஒவ்வொருத்தனும் ஒரு கொட்டுப்பனை போல உருண்டு திரண்டு நிக்கிறான். உவங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே… எப்பிடியும் ஒரு மாசம் தாக்குப் பிடிப்பாங்கள்… அதை விட்டுப்போட்டு எதுக்கு ஒரு ஏலாவாளியான நோயாளியை மேடையில இழுத்துவிட்டிருக்கிறாங்கள்’ என்று மனதிற்குள் ராகுலன் மருகிக்கொண்டிருந்தார். மேடையில் திலீபன் உரையாற்றிக்கொண்டிருந்தார். “நான் இறந்தால் என்னுடைய உடலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைத்துவிடுமாறு தலைவர் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். எம் மண்ணின் மாணவர்களது கல்விப்புல ஆய்வுக்காக எனது உடல் பயன்பட வேண்டும். நான் மலரப் போகும் தமிழீழத்தை வானத்திலிருந்து பார்ப்பேன்” என்று உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே, திலீபனின் கிறங்கிய கண்கள் மேடையின் கீழே கூட்டத்தில் நின்றிருந்த ராகுலனின் முகத்தைக் கண்டுவிட்டன. பேசி முடித்ததும், மேடையிலிருந்த கட்டிலில் தளர்வாக உட்கார்ந்துகொண்டவர், ராகுலனுக்குச் சைகை செய்து தன்னிடம் வருமாறு அழைத்தார். ராகுலனுக்குக் கொஞ்சம் பதற்றமாகயிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க இப்போது மேடையில் இருப்பவர் இவரோடு இந்துக் கல்லூரியில் படித்த விலகல் சுபாவியான பார்த்திபன் இல்லை. நேற்றைய தினம் சர்வதேசப் பத்திரிகைகளில் நாயகனாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் புலிகளின் அரசியல்துறைத் தலைவரே அங்கிருக்கிறார். புலிகள் இயக்கத்தின் கவனம் மட்டுமல்லாமல், இலங்கை – இந்திய அரசுகளின் மொத்தக் கவனமும் அந்த மேடையில்தான் குவிந்திருக்கிறது. திலீபன் தன்னை அழைத்தது ராகுலனுக்குக் கொஞ்சம் பெருமையாகவுமிருந்தது. தன்னுடைய கனத்த உடலை மேடையை நோக்கி நகர்த்திச் சென்றவரால், உயரமான மேடையில் ஏற முடியாமலிருந்தது. மேடையிலிருந்த ஒருவன் ராகுலனைக் கைகொடுத்துத் தூக்கிவிட்டான். திலீபனின் சோர்ந்திருந்த முகத்தில் அற்புதமானவொரு புன்னகை வந்து அமர்ந்துகொண்டது. “வாடா தடியா…” என்று திலீபன் வரவேற்றவாறே, ராகுலனுடைய கையைப் பற்றிக் கட்டிலில் தன்னருகே உட்கார வைத்துக்கொண்டார். திலீபனின் உடல் எவ்வளவு தளர்ந்திருக்கிறது என்பதை அந்தத் தொடுகையிலேயே ராகுலன் தெரிந்துகொண்டார். அவர் திலீபனின் கையைப் பற்றிப் பிடித்து, நாடித் துடிப்பைப் பரிசீலிக்க முயன்றபோது. திலீபன் வெடுக்கெனக் கையைப் பின்னே இழுத்துக்கொண்டார். “தடியா…என்ர பிரேதம் யூனிவர்ஸிட்டிக்குத் தானே வரும். அங்க நீ என்ர உடம்ப செக் செய்யலாம், இப்ப சும்மாயிரு” என்று சிரித்தார் திலீபன். அவரது குரல் மிகவும் பலவீனப்பட்டிருந்தது. “சீக்… இதென்ன கதை பார்த்தீ? அப்பிடியெல்லாம் ஒண்டும் நடவாது. உன்ர கோலமும் குறியும் என்ன? பத்தாயிரம் சனம் உன்னத்தானே பார்த்துக்கொண்டிருக்கு… குளிச்சு உடுப்ப மாத்திப்போட்டு மேடையில இருக்கலாம்தானே…” “விடுறா தடியா…அழியப் போறவனுக்கு கோடித் துணிதான் கேடு” தான் இறக்கப் போகிறேன் என்று திலீபனுக்கு மிக உறுதியாகவே தெரிந்திருக்கிறது என்பது போலவே அவரது பேச்சுகள் அமைந்திருந்தன. அதை ராகுலனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை அவருக்கு அருகே அமர்ந்திருப்பது அவர் பதினான்கு வயதுச் சிறுவனாகக் கண்ட பார்த்திபன் தான். அந்தச் சிறுவன் தலைமுதல் பாதம்வரைக்கும் வெண்துணி சுற்றி இறந்து கிடக்கும் காட்சி அவரையறியாமலேயே அவரது மனதில் விரியலாயிற்று “இஞ்சே பார்த்தீ… தண்ணியாவது கொஞ்சம் குடியன். மகாத்மா காந்தி கூட மிளகு போட்டுத் தண்ணி குடிச்சுக்கொண்டுதான் உண்ணாவிரதம் இருந்தவர்…” “அப்பிடியே டொக்டர்… அவர் கூடுத்தி ஒரு நாட்டுக்காரனை எதிர்த்துத்தான் போராடினவர். நாங்கள் உலகத்தையே எதிர்த்துப் போராட வேண்டியிருக்கு. தண்ணியக் குடி சு***யைக் குடியெண்டு சொல்லி என்னை அவமானப்படுத்தாத!” “உனக்கு நான் புத்திமதி சொல்ல ஏலாது பார்த்தீ… உனக்கு எல்லாமே தெரியும். ஆண்டு அனுபவிச்சு பிள்ள குட்டியப் பெத்துப்போட்டுத்தான் காந்தி உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் எண்டு கிழட்டு வயசில வெளிக்கிட்டவர். அழிய வேண்டிய வயசே உனக்கு? நீ இருந்து செய்ய வேண்டிய போராட்ட வேலையள் இன்னும் கனக்கக் கிடக்கெல்லே…” “மச்சான்… போராடுறது என்ர வேலையில்ல… அது என்ர குணம்!” இந்த உரையாடல் நிகழ்ந்ததிலிருந்து ஒன்பதாவது நாள் காலை 10 மணி 48 நிமிடத்திற்கு, மருத்துவர் சிவகுமார் உண்ணாவிரத மேடையில் அசையாமல் கிடந்த திலீபனின் நாடித்துடிப்பைப் பரிசீலித்துவிட்டு, திலீபனின் கால்களில் வீழ்ந்து வணங்கினார். அப்போதும் ராகுலன் அந்த மேடையில் இருந்தார். அவரது கண்களிலிருந்து ஒரு சொட்டு நீரும் திலீபனின் உடலத்தின் மீது விழவில்லை. அந்தக் கணத்தில் அவர் கடுமையான ஆத்திரத்தில் இருந்தார். ‘எல்லோருமாகச் சேர்ந்து ஒருவனைக் கொன்றுவிட்டார்கள்’ என்று மனதிற்குள் கறுவியவாறே மேடையிலிருந்து இறங்கிச் சென்றார். பூரணமாக இராணுவ உடைகள் அணிவிக்கப்பட்டு, லெப்டினன்ட் கேர்ணல் என்ற பட்டத்தோடு திலீபனின் உடல் யாழ்ப்பாணத்தின் கிராமங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில், பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பார்த்திபனுக்காக ராகுலன் காத்திருந்தார். 3 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் துறையில் விரிவுரையாளராகப் பணியை ஏற்கும் போது, ராகுலனுக்கு வயது முப்பத்துநான்கு. அப்போது, திலீபனின் உடல் அங்கே வைக்கப்பட்டு முழுதாக எட்டு வருடங்களாகியிருந்தன. பணியை ஏற்றவுடன் அவர் நேராக திலீபனின் உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குத்தான் சென்றார். மேற்படிப்புக்காக இலண்டனில் இருந்த அய்ந்து வருடங்களில், பலமுறை திலீபனின் உடலைப் பற்றி அவர் சிந்தித்திருக்கிறார். அதன் காரணமாகவே உடலத்தைப் பாதுகாத்து வைப்பதற்குரிய அதிநவீன தொழில்நுட்பங்களை அவர் ஆராய்ந்தார். இலண்டனுக்குக் கிளம்பவதற்கு முன்பும் இங்கே வந்து திலீபனின் உடலைப் பார்த்து, அவருடைய நேசத்துக்குரிய பையனிடம் விடைபெற்றுத்தான் சென்றார். கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த திலீபனின் உடலில், உண்மையில் பாரதூரமான மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை. உடல் மேலும் கருமையேறி இருந்தது. உதடுகளின் ஓரங்கள் மெலிதாகக் கரைந்து பற்கள் கடல் சோழிகளைப் போன்றிருந்தன. உடலைப் பதப்படுத்தும் இரசாயனங்களால் உடல் சற்றே ஊதியிருந்தது. கைகளிலும் தொடைகளிலும் மட்டும் தசையை சில அங்குலங்களுக்குக் கீறியிருந்தார்கள். நீண்ட நேரமாகத் தனியராகவே நின்று அந்த உடலைப் பார்த்துக்கொண்டிருந்த ராகுலன் சற்றுச் சத்தமாகவே முணுமுணுத்தார்: “நீ இப்ப என்ர பொறுப்பில பார்த்தீ…” அன்று மாலையில் அவர் வீட்டுக்குத் திரும்பும் போது, அவரது மனைவி ஜனனி அவரைப் பார்த்தும் பார்க்காதது போலவே புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். இருவரும் அமெரிக்காவுக்கோ, கனடாவுக்கோ சென்று அங்கேயே குடியேறிவிட வேண்டும் என்ற ஆசை ஜனனிக்கு இருந்தது. ஆனால், ராகுலனுக்கோ வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்வதில் விருப்பமில்லாமலிருந்தது. “என்ன உம்மிட லவ்வரப் பார்த்தாச்சோ?” என்று ஜனனியிடமிருந்து குரல் வந்தது. “ம்” என்று சொல்லிவிட்டு ராகுலன் குளிக்கப் போய்விட்டார். திலீபனுடனான தன்னுடைய அனுபவங்களை ஆங்கிலத்தில் சிறு நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ராகுலனுக்கு இருந்தது. அந்த முயற்சியை அவர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார். குளித்துவிட்டு வந்ததும், தேநீர் கோப்பையோடு மேசையின் முன்னால் அமர்ந்து, திலீபனைப் பற்றி ஏற்கனவே எழுதி வைத்திருந்த குறிப்புகளை எடுத்துப் பரிசீலிக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னாலிருந்து ஜனனியின் குரல் கேட்டது: “கல்வெட்டு எழுதத் தொடங்கியாச்சே?” ஜனனி எப்படிச் சீண்டினாலும், இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் ராகுலனுக்குக் கோபமே வருவதில்லை. ஜனனி எரிச்சலுறுவதில் நியாயம் இருக்கிறதென்றே அவர் நம்பினார். யுத்தம் நாலாபுறத்தாலும் நகரத்தைச் சூழ்ந்துகொண்டிருந்தது. விமானக் குண்டுவீச்சுகள் நகரத்தில் நிகழாத நாட்களேயில்லை. யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் மருத்துவராகக் கடமையிலிருந்த ஜனனி ஒரு நாளைக்கு அய்ம்பது நூறெனக் கோராமாகச் சிதைந்த உடல்களைப் பார்க்க வேண்டியிருந்தது. இதனால் ஜனனி உளச்சோர்வுக்கு ஆளாகி, சில சமயங்களில் பிரமை பிடித்தது போலவே கடமையிலிருந்து வீட்டுக்குத் திரும்புவார். இப்போது கர்ப்பகால விடுப்பில் இருப்பதால், அவரது கவலையெல்லாம் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றியே இருந்தது. “என்ர குஞ்சையும் நான் சிதறின உடம்பாக பார்க்க வேண்டி வருமோ?” என்று ஒவ்வொரு நாளுமே ராகுலனிடம் கேட்டு அச்சத்தில் உறைந்திருந்தார். யாழ்ப்பாண நகரத்தை நோக்கி இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் நகரத்தைப் பிடித்துவிடுவார்கள் என்றும் கதைகள் பரவிக்கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேறாதவாறு புலிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், கணிசமான மக்கள் புலிகளையே ஏய்த்துவிட்டுத் திருட்டுப் பாதைகள் வழியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். தாங்களும் கொஞ்ச நாட்களுக்கு எங்கேயாவது போய்விடலாம் என்று ஜனனி சொல்லும் போதெல்லாம், புலிகள் ஒருபோதும் யாழ்ப்பாணத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்று ராகுலன் சொல்லி, அதற்கான காரணங்களையும் ஜனனிக்கு விளக்குவார். அது ஜனனியின் அழுகையில் முடிவுறும். ஆனால், ராகுலன் சொல்லிய காரணங்கள் எல்லாமே சத்தற்றவை என்பது சீக்கிரமே தெரிந்தது. 1995 -வது வருட அய்ப்பசி மாதத்தின் கடைசி நாட்களில், இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாண நகரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பெரும் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வெளியேறுவது என்ற முடிவைப் புலிகள் எடுத்தார்கள். ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களையும் அங்கிருந்து வெளியேறி வன்னிப் பெருநிலப் பரப்புக்குச் செல்லுமாறு புலிகள் கட்டளையிட்டார்கள். மேலே விமானங்கள் குண்டுகளை வீசிக்கொண்டிருக்க, கீழே புலிகளின் வாகனங்கள் இந்தக் கட்டளையை ஒலிபெருக்கிகளில் இடைவிடாது அறிவித்தவாறே சுற்றிக்கொண்டிருந்தன. இந்த அறிவித்தலைக் கேட்டபோது, ராகுலன் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் திலீபனோடு இருந்தார். சில நாட்களாகவே பல்கலைக்கழகம் மூடப்படிட்டிருக்கிறது. ராகுலன் மட்டும் திலீபனின் உடலைக் கவனிப்பதற்காக அங்கே வந்து போய்க்கொண்டிருந்தார். ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களையும் வெளியேற்றுவது புலிகளின் நோக்கமல்ல என்றே ராகுலன் நினைத்தார். அது எப்படிச் சாத்தியம்? மருத்துவர்கள், மருத்துவனைப் பணியாளர்களாவது இங்கே இருக்க வேண்டுமல்லவா. படுத்த படுக்கையாகக் கிடக்கும் நோயாளிகளையும், போரில் காயமடைபவர்களையும் பாதுகாப்பது அவசியமல்லவா. ஆனால், அன்று மதியம் புலிகளின் இரண்டு வாகனங்கள் மருத்துவ பீடத்திற்கு வந்த போதுதான், முழு யாழ்ப்பாணத்தையும் வன்னிக்கு நகர்த்தப் புலிகள் முடிவெடுத்திருக்கிறார்கள் என்பது ராகுலனுக்குப் புரிந்தது. வந்திருந்த புலிப் போராளிகளில் அவர்களது மருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்களில் சிலர் ராகுலனுக்கு ஏற்கனவே அறிமுகமுள்ளவர்கள் தான். ராகுலன் திலீபனின் இளமைக்கால நண்பர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். வந்தவர்களது திட்டம் திலீபனின் உடலைத் தங்களோடு வன்னிக்கு எடுத்துச் செல்வதே என்று ராகுலன் அறிந்தபோது, அவர் அதிர்ந்து போனார். ஆத்திரத்தால் அவரது நாக்குத் துடித்தது. “தம்பியவை… பார்த்தீ தன்ர உடம்ப யூனிவர்ஸிட்டிக்குத்தான் தந்தவன். அது மாணவர்களின்ர சொத்து. நீங்கள் உங்கிட எண்ணத்துக்கு எடுக்கேலாது!” “டொக்டர்… தயவு செய்து விளங்கிக்கொள்ளுங்கோ! நாளைக்கு இஞ்ச ஆமி வந்திருவான். அவன்ர கையில திலீபன் அண்ணையின்ர உடலம் சிக்கக் கூடாது எண்டு தலைவர் சொல்லிப் போட்டார்.” “அத நான் பாத்துக்கொள்ளுறன் தம்பியவை. நான் கொழும்புக்கு கதைக்கிறன். யூனிவர்ஸிட்டிக்குள்ள ஆமி உள்ளிடாது.” “அப்பிடி இல்ல டொக்டர்… வந்தாறுமூலை யூனிவர்ஸிட்டிக்குள்ள ஆமி பாய்ஞ்சு இருநூறு பேரைச் சுடயில்லையே…” “இந்த உடம்பு இப்பயே எட்டு வருஷமாயிற்று. நீங்கள் வன்னிக்குக் கொண்டு போறதுக்கிடையில டீகொம்போஸ் ஆகிரும்…” “அதுக்கான ஏற்பாடுகளோட தான் வந்திருக்கிறம் டொக்டர்… எங்கிட மருத்துவப் போராளிகள் திலீபன் அண்ணையின்ர உடலத்தைப் பத்திரமா வன்னிக்குக் கொண்டு வந்திருவினம்… நாங்கள் கெதியில யாழ்ப்பாணத்தைத் திரும்பிப் பிடிப்பம். அப்ப திலீபன் அண்ணையின்ர உடலத்த இஞ்ச கொண்டுவந்து உங்கிட கையில பத்திரமா ஒப்படைக்கிறது எங்கிட பொறுப்பு.” ‘கிழிச்சியள்’ என்று ராகுலன் மனதிற்குள் நினைத்துக்கொண்டார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நடுவில் கர்ப்பவதியான ஜனனி வேறு அவரது நினைவுக்கு வந்துகொண்டிருந்தார். எல்லோருமே வன்னிக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் தெரிந்துவிட்டது. அவரது ஞாபகத்தில் மயில் எலும்புக்கூடை எடுக்கத் தன்னைக் கூட்டிக்கொண்டு போன அந்தச் சிறுவன் வந்துகொண்டேயிருந்தான். அவன் முன்னே நிலவொளியில் நடக்க, பின்னே மயிலின் எலும்புக்கூடைச் சுமந்தவாறே அவர் நடந்துகொண்டிருந்தார். ராகுலன் அறைக்குள்ளே போய், மூடியிருந்த திலீபனின் இமையைத் திறந்து பார்த்தார். குழியாயிருந்த இடத்தில் சிறுவனின் கிறங்கிய கண் தெரிந்தது. அப்போதுதான் ராகுலன் அந்த முடிவை எடுத்தார். அவர் வெளியே வந்து புலிப் போராளிகளிடம் சொன்னார்: “நானும் கூட வருவன். ஓமெண்டால் பார்த்தீயின்ர உடம்ப நீங்கள் எடுக்கலாம்.” இதை உறுதியான குரலில் அறிவித்துவிட்டு, ராகுலன் அறைக்குள் நுழைந்து திலீபனின் உடலுக்கு அருகிலேயே நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துகொண்டார். ஜனனியின் ஞாபகம் அவரைக் குழப்பிக்கொண்டிருந்தது. ஜனனியின் பெற்றோரும் வீட்டிலிருப்பதால், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று தன்னைத்தானே அவர் சமாதானப்படுத்திக்கொண்டார். புலிப் போராளிகள் வெளியே தொலைத் தொடர்புக் கருவிகளில் பேசிக்கொண்டிருப்பது தெளிவற்றுக் கேட்டது. சற்று நேரத்தில் ஒருவன் உள்ளே நுழைந்து ராகுலனிடம் சொன்னான்: “நீங்களும் வரலாம் டொக்டர். அது எங்களுக்கும் நல்லதுதான். ஆனால், இதுவொரு இரகசிய நடவடிக்கை. நீங்கள் இரகசியத்தைப் பாதுகாப்பீங்கள் எண்டு நம்புறம். உங்கிட குடும்பத்துக்குக் கூடச் சொல்லக்கூடாது. நாங்கள் உடனேயே வெளிக்கிடோணும்.” அங்கே ஆலோசிக்க நேரமிருக்கவில்லை. உடலத்தை அங்கிருந்து அகற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தபோதும், அதை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பதற்கான இரசாயனங்களை எடுத்துப் போராளிகளிடம் கொடுத்தபோதும், ஜனனியைக் குறித்த சிந்தனையே ராகுலனை வதைத்துக்கொண்டிருந்தது. நான் புலிகளோடு சேர்ந்து வன்னிக்குப் போவதை ஜனனி ஒருபோதும் விரும்பமாட்டார். நான் எதற்காகப் போகிறேன் என்பதையும் அவரிடம் சொல்ல முடியாது. எதற்கும் நான் இப்போது உடலத்தோடு வன்னிக்குப் போய்விடலாம். இவர்களை நம்பி இதை ஒப்படைக்கவே முடியாது. புலிகளின் கற்றுக்குட்டி மருத்துவக் குழுவுக்கு உடலை அழியாமல் காப்பாற்றும் வல்லமை இல்லை. களத்தில் காயமடைந்த தோழனைக் கொன்றுவிட்டுப் பின்வாங்கும் வழக்கமுள்ளவர்கள், இந்த உடலையா பத்திரமாக வைத்திருக்கப்போகிறார்கள் என்றெல்லாம் குறுக்குமறுக்காக ராகுலனின் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. அவர் திலீபனின் உடலோடு கடலைக் கடக்கப் புலிகளின் படகில் ஏறியபோது, கரையில் நின்றிருந்த அவருக்குத் தெரிந்த போராளியொருவனிடம் ஒரு தகவலைச் சொன்னார்: “தம்பி உங்களுக்கு என்ர வீடு தெரியுமெல்லே… பிரவுண் ரோட்டில போய் பெரியாஸ்பத்திரி டொக்டர் ஜனனியின்ர வீடெண்டு கேட்டாலே காட்டுவினம். நான் வன்னிக்குப் போயிட்டன் எண்டும், அவவையும் வன்னிக்கு வரச் சொல்லியும் சொல்லிவிடுங்க. அவ கர்ப்பவதி தம்பி… உடனேயே தகவல் சொல்லுறியளா?” “நீங்கள் கவலைப்படாதீங்க டொக்டர். நான் இப்பயே யாழ்ப்பாணத்தில நிக்கிற போராளியளுக்கு வோக்கியில தகவல் சொல்லுறன். நீங்கள் முன்னால போங்கோ…பின்னாலேயே ஜனனி டொக்டர அனுப்பிவிடுறம்.” பேய்மழை பெய்த அன்றைய இரவில்தான், அந்த மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. இலட்சக்கணக்கான யாழ்ப்பாண மக்கள் தங்களது வீடுகளையும், உடைமைகளையும், முதியவர்களையும் கைவிட்டு, உப்புநீரைக் கடந்து வன்னிப் பெருநிலப் பரப்புக்குச் சென்றார்கள். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் பிறகு எப்போதும் அந்நிலத்தை விட்டு நீங்கவேயில்லை. 4 திலீபனின் உடல் மிக இரகசியமாக வன்னிக்குக் கொண்டுவரப்பட்டதைப் புலிகளின் முக்கியமான உறுப்பினர்களைத் தவிர அறிந்த ஒரேயொரு நபர் மருத்துவர் ராகுலன்தான். எனவே தன்மீது புலிகள் எப்போதும் ஒரு கண்ணை வைத்திருப்பார்கள் என்பது ராகுலனுக்கும் தெரியும். அவர் எங்கு சென்றாலும் புலி நிழல் தன்னைத் தொடர்ந்துவருவதை அவர் உணர்ந்திருக்கிறார். இதனால் அவர் ஆத்திரமேதும் அடையவில்லை. அது அவர்களின் கடமை, அவர்களின் குணம் என்பதை ராகுலன் தெரிந்தே வைத்திருக்கிறார். வன்னிக்குக் கொண்டுவரப்பட உடலை கிளிநொச்சியிலிருந்த புலிகளின் மருத்துவ முகாமில்தான் இரகசியமாக மறைத்து வைத்தார்கள். அந்த முகாமுக்குப் பக்கத்திலேயே ராகுலன் தங்குவதற்கு ஒரு சிறிய வீட்டையும் புலிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ராகுலன் மருத்துவ முகாமுக்குச் சென்று, திலீபனின் உடலைப் பாதுகாப்பதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார். வேறு எவரும் அந்த உடலத்தைத் தொடுவதற்கு ராகுலன் அனுமதிக்கவேயில்லை. ஜனனி வன்னிக்கு வரவேயில்லை. அவரும் பெற்றோரும் யாழ்ப்பாண நகரத்திலிருந்து வெளியேறி, தென்மராட்சியில் எங்கேயோ தங்கியிருக்கிறார்கள் என்ற தகவலும், பின்னர் அவர்கள் எப்படியோ கொழும்புக்குச் சென்றுவிட்டார்கள் என்ற தகவலுமே தென்மராட்சியிலிருந்து வன்னிக்கு வந்தவர்கள் மூலமாக ராகுலனுக்குக் கிடைத்தன. அவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கட்டும் என்று ராகுலன் நினைத்துக்கொண்டார். ஜனனி கொழும்பு மருத்துவக் கல்லூரியில் படித்தவர். அங்கே அவருக்கு ஏராளமான நண்பர்களும் உறவினர்களுமிருக்கிறார்கள். ஜனனியின் நண்பியான தர்ஷினியின் முகவரி ராகுலனது ஞாபகத்திலிருந்தது. ஒரு கடிதத்தை எழுதி, அந்த முகவரிக்கு ராகுலன் அனுப்பிவைத்தார். ஒரு முக்கியமான மருத்துவக் கடமையில் தான் ஈடுபட்டிருப்பதாக மட்டுமே அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்திற்குப் பதில் ஏதும் வராததால், தனக்கு ஞாபகத்திலுள்ள கொழும்பு விலாசங்களுக்கு எல்லாம் ராகுலன் கடிதம் எழுதிப் போட்டார். அவற்றுக்கும் பதில்கள் கிடைக்கவில்லை. அவர் அனுப்பிய எல்லாக் கடிதங்களும், அவருக்கு அனுப்பப்பட்ட எல்லாக் கடிதங்களும் புலிகளின் உளவுத்துறையால் கைப்பற்றி அழிக்கப்பட்டன என்று பல வருடங்கள் கழித்துத்தான் ராகுலன் அறிந்துகொண்டார். வன்னிக்கு வரும்போது, அவரது மனைவிக்குப் போராளி ஒருவன் மூலம் அனுப்பிவைத்த தகவல் கூட மனைவியிடம் சென்று சேர்ந்திருக்காது என்று அவர் ஊகித்தார். இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது. நீண்ட காலங்களிற்குப் பின்பு விசுவமடுவில் ராகுலனைச் சந்தித்த நோர்வே நாட்டைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்க மருத்துவர் ஒருவர் சொன்னார்: “டொக்டர்… காணாமற்போனவர்களது பட்டியலில் மருத்துவர் சேக்கிழார் ராகுலன் என்ற உங்களது பெயரும் இருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்ட முகம் எரியுண்ட உடல் உங்களுடையது என்றே எல்லோராலும் நம்பப்படுகிறது”. இதற்குச் சில நாட்கள் கழித்து ஜனனியும் குழந்தையும் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி புலிகள் மூலமாக ராகுலனுக்குக் கிடைத்தது. அதையிட்டும் ராகுலன் மகிழ்ச்சியடையவே செய்தார். போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. இவையெல்லாம் முடியும் நாளில், நான் அவர்களைச் சந்திப்பேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். திலீபனின் உடலைக் கிளிநொச்சியில் பாதுகாத்துவைத்த அடுத்த வருடமே, அந்த நகரமும் இராணுவத்திடம் வீழ்ந்தது. ராகுலன் திலீபனின் உடலோடு, முத்தையன்கட்டிலிருந்த புலிகளின் மருத்துவ முகாமுக்குச் சென்று, அங்கே உடலைப் பாதுகாத்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தார். புலிகளுக்கு ராகுலனின் பணியில் முழுத் திருப்தியேயிருந்தது. தலைவரின் நேரடி உத்தரவு எனச் சொல்லி, மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை ராகுலனுக்குச் சம்பளமாகக் கொடுத்தார்கள். ராகுலன் அந்தத் தொகையில் கால்வாசியைக் கூடச் செலவு செய்ய மாட்டார். எஞ்சியிருக்கும் பணத்திற்கு மருந்துகளை வாங்கி, ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கினார். புலிகளின் மருத்துவக் கட்டமைப்பைத் தான் மிகக் குறைவாக மதிப்பிட்டுவிட்டதாகக் கூடப் பல தடவைகள் ராகுலன் நினைக்க வேண்டியிருந்தது. திறமையான பல மருத்துவர்கள் புலிகளின் அணியிலிருந்தார்கள். மருத்துவ முகாம் கிட்டத்தட்ட ஒரு வெளிநாட்டு மருத்துவமனைக்குரிய உபகரண வசதிகளுடனிருந்தது. திலீபனின் உடலைப் பாதுகாப்பதற்காக ராகுலன் கேட்ட இரசாயனங்களையும், மருந்துகளையும் புலிகள் எந்தக் குழப்பமுமின்றி வழங்கினார்கள். இரண்டு வருடங்கள் கழித்து, திலீபனின் நினைவு நாளன்று ‘ஓயாத அலைகள்-2’ என்ற தாக்குதல் நடவடிக்கையைப் புலிகள் ஆரம்பித்து, மூன்றே நாட்களில் கிளிநொச்சியைத் திரும்பவும் கைப்பற்றினார்கள். திலீபனின் உடலோடு ராகுலன் மறுபடியும் கிளிநொச்சி மருத்துவ முகாமுக்கு வந்து சேர்ந்தார். சில வருட வன்னி வாழ்க்கையில் ராகுலனே மோசமான உடல் உபாதைகளில் சிக்கிக்கொண்டார். ஆனாலும், அவர் ஒருபோதும் மனம் சோர்ந்தாரில்லை. திலீபனின் உடலை ஓர் அற்புதச் செடியைப் போன்று கவனித்தார். ஒவ்வொருநாள் காலையிலும் அதை மலர வைத்தார். மற்றைய வேளைகளில் மருத்துவமனைகளுக்குச் சென்று, நோயாளிகளைப் பராமரித்தார். சமாதான காலம் வந்தபோது, புலிகள் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் தளர்த்தியிருந்தார்கள். வன்னிக்கான பாதைகள் திறக்கப்பட்டன. அப்போது கூட வன்னியிலிருந்து வெளியேற ராகுலன் யோசிக்கவில்லை. அவருக்கு அங்கேதான் கடமையிருந்தது. கிளிநொச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டியெழுப்பி, அங்கே மருத்துவ பீடத்தில் திலீபனின் உடலைப் பாதுகாத்து வைப்பதற்குப் புலிகளின் தலைமை திட்டமிட்டிருப்பதாக மருத்துவக்குழுப் போராளிகள் மூலமாக ராகுலன் அறிந்தார். இந்தச் சமாதான காலத்தில் அதற்கான சாத்தியமும் நிறையவே இருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால், அங்கே திலீபனின் உடலைப் பாதுகாத்துவைக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, மனைவியிடமும் குழந்தையிடமும் போய்விடலாம் என்று ராகுலனுக்கு மனதிற்குள் ஓர் எண்ணமிருக்கவும் செய்தது. சமாதான காலத்தில் மனைவியிடமும் குழந்தையிடமும் தொலைபேசியில் பேசவும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இங்கே பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கவிருப்பதாகச் சொல்லி, அதை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு வந்துவிடுவதாகச் சொன்னார். ஒரு சொல் கூட அவர் திலீபனைப் பற்றிச் சொன்னாரில்லை. ‘நீங்கள் பொறுப்பற்றவர், வெற்றுப் பகட்டுக்காரர்’ என்று ஜனனி சொல்லவும் தவறவில்லை. ராகுலன் முடிந்தவரை ஜனனியைச் சமாதானப்படுத்தி, நம்பிக்கையூட்டினார். இனித்தான் மிகத் துன்பமான, பேரழிவான, ஊழியான காலத்தை எல்லோருமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ராகுலன் அப்போது உணரவில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிக்கப்பட்டு, மீண்டும் உக்கிரமாகப் போர் ஆரம்பித்த போது, புலிகளின் தளங்கள், முகாம்கள் குறித்து எல்லாத் தகவல்களும் துல்லியமாக இலங்கை விமானப்படையினரிடம் இருந்திருக்க வேண்டும். அவர்கள் குறிவைத்து இலக்குகளின் மீது வெற்றிகரமாகத் தொன் கணக்கில் குண்டுகளை இறக்கினார்கள். அப்படியான ஒரு தாக்குதலில்தான் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனும் கொல்லப்பட்டார். காலையில், திலீபனின் உடலை மீள் பதப்படுத்துவதற்கான வேலைகளை முடித்துவிட்டு, மருத்துவ முகாமை விட்டு ராகுலன் வெளியேறிய இரண்டாவது நிமிடத்தில், மருத்துவ முகாம் மீது இரண்டு போர் விமானங்கள் குத்தி இறங்கி ஏறின. முகாமிலிருந்து சிதறிய எச்சங்கள் பறந்து வந்து ராகுலனைச் சுற்றி வீழ்ந்தன. ராகுலனும் தன்னையறியாமலேயே நிலத்தில் வீழ்ந்துவிட்டார். எனினும் சுதாகரித்துக்கொண்டு எழுந்து, மருத்துவ முகாமை நோக்கி ஓடினார். அந்த முகாமிலிருந்த அத்தனை பேரும் சிதறிக் கிடந்தார்கள். வலுவாகக் கட்டி எழும்பப்பட்டிருந்த நான்கு நெருக்கமான இரகசியச் சுவர்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி சிதறுண்டு, வெளிறிய நட்சத்திரங்களைப் போன்ற துகள்கள் திலீபனின் உடலை மூடியிருந்தன. கிளிநொச்சி மறுபடியும் இராணுவத்தினரிடம் வீழ்ந்தபோது, திலீபனின் உடலையும் எடுத்துக்கொண்டு ராகுலன் கிளம்பினார். அவர் புலிகளின் மருத்துவ அணியுடன் ஒவ்வொரு ஊராக நகர நகர அந்த ஊர்களும் இராணுவத்திடம் வீழ்ந்துகொண்டேயிருந்தன. அவை மிகக் கடுமையான காலங்களாகின. பஞ்சமும், தீயும், வெடி முழக்கமும், அழுகுரல்களும், இரத்தமும், சாவும் எல்லோரையுமே பைத்தியங்களாக்கிக்கொண்டிருந்தன. என்றாலும் அந்த மக்கள் கூட்டம் கிழக்குக் கடல் நோக்கி நகர்ந்துகொண்டேயிருந்தது. அவர்களுடன் திலீபனின் உடலும் நகர்ந்தவாறேயிருந்தது. இனியும் திலீபனின் உடலைப் பாதுகாக்க முடியாது என்ற நிலை தோன்றிவிட்டது. அதற்குத் தேவையான இரசாயனங்களும் மருந்துகளும் கிடைப்பதாகயில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கே மருந்தில்லாத போது, உயிரற்ற உடலுக்காக மருந்துகளைச் செலவழிப்பது நீதியற்றது என்றே ராகுலனுக்குத் தோன்றிற்று. எல்லாமே கையை விட்டுப் போய்விட்டன. திலீபனின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டிய தருணம் இதுவென்றே அவர் நினைத்தார். அதை இப்போதுகூடச் செய்யாவிட்டால், ஓடும் வழியில் துர்நாற்றமடிக்கும் அழுகிய மூட்டையாக அதைக் கைவிட்டுவிடுவார்களோ என்று அவர் அஞ்சினார். இந்துக் கல்லூரியில் அவர் முதன் முதலாகப் பார்த்த கிறங்கிய கண்களும் அடக்கத்தையே கேட்டுக்கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றிற்று. புலிகளின் மருத்துவ அணிக்கும் நிலைமை தெளிவாகப் புரிந்தது. அவர்களும் திலீபனின் உடலை அடக்கம் செய்வதே நல்லது என்று நினைத்தார்கள். ஆனால், தலைமையிடமிருந்து அதற்குக் கண்டிப்பான மறுப்புக் கிடைத்தது. எப்பாடு பட்டாவது திலீபனின் உடலைப் பாதுகாக்க வேண்டுமெனத் தலைமையிடமிருந்து உத்தரவு வந்தது. நல்லூர் முருகன் கோயிலில், திலீபன் ஆற்றிய கடைசி உரையை ராகுலன் நினைத்துக்கொண்டார். பேசுவதற்கான சக்தியை முழுமையாக இழந்திருந்த திலீபன் மெல்லிய குரலில் முனகினார்: “நேற்றுத் தலைவர் என்னை வந்து பார்க்கும் போது ஒன்றைச் சொன்னார்… திலீபன் நீ முன்னாலே போ, நான் பின்னாலே வருகிறேன் !” கிடைக்கும் இரசாயனங்களையும், மருந்துகளையும் பயன்படுத்தி, திலீபனின் உடலைப் பாதுகாக்க ராகுலன் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அது சிறுகச் சிறுக அழிந்துகொண்டிருக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. உயிரை வதைத்து மரணமுற்றவனின் உடலும் இப்படி வதைபட்டு, நாற்றம் பெருகித் தன் கண்முன்னே காய்ந்த இறைச்சியாகப் புழுத்துக்கொண்டிருப்பதை அவரால் தாங்கவே முடியவில்லை. ஆனாலும், திலீபனின் உடல் நகர்ந்துகொண்டேயிருந்தது. உடலை அடக்கம் செய்துவிடுவதே நல்லது எனச் சொல்லியவாறே ராகுலனும் கூடவே போய்க்கொண்டிருந்தார். இறுதியாக, 2009-வது வருடத்தின் சித்திரை மாதத்தில், திலீபனின் உடலை அடக்கம் செய்வதற்குத் தலைமையிடமிருந்து உத்தரவு கிடைத்தது. மிக இரகசியமான முறையில், இரகசியமான இடத்தில், இராணுவ மரியாதைகளோடு திலீபன் புதைக்கப்பட்டார். ஓர் எலும்புக்கூட்டுக்கு இராணுவச் சீருடை போர்த்தப்பட்டிருந்ததை ராகுலன் பார்த்தவாறே நின்றிருந்தார். அவரது கண்களிலிருந்து இப்போதும் ஒரு சொட்டுக் கண்ணீர் விழவில்லை. அவரது ஆன்மா உணர்ச்சியற்றுக் கடினமாகியிருந்தது. ‘யுத்தம் முடிந்தது’ என்று அவர் உதடுகளுக்குள் முணுமுணுத்துக்கொண்டார். இதற்கு ஒரு மாதம் கழித்து, நந்திக்கடலைக் கடந்த மக்களோடு ராகுலனும் கலந்து சென்று இராணுவத்திடம் சரணடைந்தார். சில நாட்கள் கழித்து, அவரை வவுனியா தடுப்பு முகாமில் எதேச்சையாகப் பார்த்த ஒரு நடுத்தர வயது இராணுவ அதிகாரி “உன்னைப் பார்த்தால் பிரபாகரன் மாதிரி இருக்கிறதே…அந்த ஆளைத்தான் நாங்கள் முடித்துவிட்டோமே…இங்கே எப்படி?” என்று நக்கலாகப் பேசியபடியே அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றான். தானொரு மருத்துவர் என்று ராகுலன் சொன்னதும், அதிகாரியின் விசாரணைக் கோணமே மாறிவிட்டது. ஓரளவு மரியாதையுடன் ஆனால், துருவித் துருவி ராகுலனிடம் அவன் விசாரணை செய்தான். ராகுலன் இத்தகைய விசாரணைகளுக்குப் பழக்கப்படாதவர். அவர் திலீபனின் உடல் குறித்த உண்மையை எக்காரணத்தாலும் வெளிப்படுத்தக்கூடாது என்ற உறுதியோடுதான் இருந்தார். ஆனாலும், அந்த அதிகாரி குறுக்கு விசாரணையில் நிபுணனாக இருந்தான். “டொக்டர்… நீங்கள் இலண்டனில் மருத்துவம் கற்றது போலவே, நானும் இலண்டனில் தான் புலனாய்வுத் துறையில் உயர்ந்த பயிற்சியைப் பெற்றிருக்கிறேன்” என்று சொல்லியவாறே, சுத்தமான கண்ணாடிக் கோப்பையில் குளிர்ந்த நீரை நிரப்பி ராகுலனிடம் கொடுத்தான். கடைசியில் ராகுலன் சிலந்திவலை போன்று பின்னப்பட்டிருந்த விசாரணை வளையத்திற்கு நடுவே திலீபனின் உடலத்தை எடுத்து வைக்க வேண்டியதாகப் போய்விட்டது. ராகுலன் சொன்னதைக் கேட்டதும், அந்த அதிகாரியே ஆடிப்போய்விட்டான். “திலீபனின் உடல் எங்கே புதைக்கப்பட்டிருக்கிறது டொக்டர்?” என்று இராணுவ அதிகாரி கேட்கவும், “முள்ளிவாய்க்கால்” என்று ராகுலன் சொல்லிவிட்டார். அது அவர் எதிர்பாராமலேயே அவரது வாயிலிருந்து உருண்ட வார்த்தை. அதைக் கேட்டதும் அந்த அதிகாரி ஒரேயடியாக உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டான். திலீபனின் உடல் இருக்கிறதா இல்லையா என்பது கூட இதுவரை அரசாங்கத்திற்குத் தெரியாமலேயேயிருந்தது. அந்த உடல் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்ததும், அந்த உடலைக் கைப்பற்றிவிட அதிகாரி துடித்துக்கொண்டிருந்தான். திலீபனது ஒவ்வொரு எலும்பும் அவர்களது வெற்றிக் கேடயத்தில் பொறிக்கப்படும் ஒவ்வொரு நட்சத்திரம். உடனடியாகவே அதிகாரி ஓர் இராணுவ அணியை ராகுலனுடன் முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பிவைத்தான். அது ராகுலன் எதிர்பாராதது. இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துபோன ஒரு மனிதனின் உடலை, பதினான்கு வருடங்கள் வன்னியின் வனாந்தரம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஓர் உடலை இவர்கள் மீளத் தோண்டி எடுப்பார்கள் என்றெல்லாம் அவர் நினைத்திருக்கவில்லை. செல்லும் வழியெல்லாம் ஒன்றை மட்டுமே ராகுலன் திரும்பத் திரும்ப மனதிற்குள் உறுதியாகச் சொல்லியவாறே சென்றார். நான் ஒருபோதும் இவர்களிடம் பார்த்திபனின் உடலைக் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. இத்தனை வருட அலைச்சலுக்குப் பிறகு பூமிக்குள் அமைதியடைந்திருக்கும் அவனை மீண்டும் ஒருபோதும் வெளியே கொண்டுவரக்கூடாது. ராகுலனது மூளையில் வேறொரு திட்டம் உருவாகியது. வயலில் எள்ளை விதைத்தது போலவே முள்ளிவாய்க்காலில் எல்லா இடங்களிலும் மனிதர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே ஏதாவதொரு இடத்தைக் காட்டி, அங்கேதான் திலீபனைப் புதைத்தார்கள் எனச் சொல்லிவிட வேண்டியதுதான். நிச்சயமாக ஏதாவதொரு உடல் கிடைக்கும். ஏதாவது பிசகு நேர்ந்தால், நினைவுத் தடுமாற்றம் எனச் சாக்குபோக்குச் சொல்லிவிட்டு, இன்னொரு இடத்தைக் காட்ட வேண்டியதுதான். அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்து சேரும்போது மாலை நேரமாகிவிட்டது. அந்த நிலத்தில் இராணுவத்தினர் மட்டுமே நின்றிருந்தார்கள். அலைகள் பேரிரைச்சலோடு கரைக்கு ஏறிக்கொண்டிருந்தன. அங்கே ஓர் இடத்தைக் காட்டி “இங்கேதான்” என்றார் ராகுலன். இராணுவத்தினர் மிகுந்த உற்சாகத்தோடு அந்த இடத்தை மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார்கள். உள்ளே என்ன இருக்கப் போகிறது என்ற பதற்றத்தோடு ராகுலன் காத்திருந்தார். அதிக தூரம் தோண்ட வேண்டியிருக்கவில்லை. இரண்டடி தோண்டியதுமே சில எலும்புகள் கிடைத்தன. இராணுவத்தினர் ஆளுக்கொரு எலும்பை மகிழ்ச்சியுடன் எடுத்துப் பார்த்தார்கள். ராகுலனும் கண்களை விரித்து அந்த எலும்புகளைக் கூர்ந்து கவனித்தார். அவரது கண்களிலிருந்து நீர் உருண்டு கொழுத்த கன்னங்களில் இறங்கியது. அதைக் கவனித்தவாறே, ஓர் இளநிலை அதிகாரி தொலைத்தொடர்புக் கருவியில் வவுனியா இராணுவ மையத்திற்குப் பேசினான்: “நாங்கள் இப்போது சில எலும்புகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால், மிகச் சிறிய எலும்புகளாகயிருக்கின்றன. அவன் பட்டினி கிடந்து செத்ததாலும், நீண்ட நாட்களாகிவிட்டதாலும் அவனுடைய எலும்புகள் சிறுத்துவிட்டன என்றே நினைக்கிறேன்.” அப்போதுதான் மருத்துவர் ராகுலன் தனது கனத்த சரீரத்தை அந்தக் கடற்கரையில் உட்கார்த்திக்கொண்டு, மணலை அள்ளித் தலையில் போட்டவாறே குழறி அழத் தொடங்கினார். இராணுவத்தினரின் கைகளிலிருந்தவை மயில் பறவையொன்றின் சிதைந்த பாகங்கள் என்பதை அவர் கண்டுபிடித்திருந்தார். (உயிர்மை – சனவரி 2023 இதழில் வெளியானது) https://www.shobasakthi.com/shobasakthi/2023/02/14/மெய்யெழுத்து/?fbclid=IwAR2RDWpWcjyrMGYeFDBo85HNZcqzTAQde-b_1b6yTyfqX6vIDad7M8C7qv8
  4. பல்லிராஜா February 2, 2023 ஷோபாசக்தி நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ! நான், சாக்கியமுனியும் ததாகதருமான சம்புத்தர் அருளிய தம்மம் வணங்கி; இக்காலத்தில் இலங்கைத் தீவில் பெயர் பெற்றவரும், தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கொடிய சித்திரவதைக் கூடத்திற்குள் இரகசியமாக வீழ்த்தப்பட்டவரும், தற்போது அய்ம்பத்தியிரண்டு கனிந்த வயதுகள் நிரம்பப் பெற்றவருமான சீவலி பால தேரரின் கதையைக் கூறத் தொடங்குகிறேன்! ஒரு தெருநாயே இலகுவாக வாயில் கவ்வி இழுத்துச் செல்லக் கூடியளவுக்குத் தான் சீவலி தேரரின் உடலிலுள்ள மொத்த எலும்புகளும் மாமிசமும் இருக்கும். கடுமையான நீண்ட உபவாசங்களாலும், மற்றைய தினங்களில் ஒருவேளை மட்டுமே உள்ளங்கையளவு உண்ணும் வழக்கத்தாலும் தேரரின் உடல் வற்றிக் கிடக்கிறது. இலங்கையரின் சராசரி உயரத்தை காட்டிலும் குறைந்தது ஓரடி அளவுக்காவது தேரரது சரீரம் உயரமாகயிருப்பதால்; சீவர துறவாடை தரித்து, மிதியடிகள் தீண்டா வெற்றுப் பாதங்களால் அவர் நடந்து வரும்போது, ஒரு மஞ்சள் பல்லியைப் போலத்தான் தோற்றமளிக்கிறார். ஆனாலும், அவரது உடல்வலு நம்ப முடியாதளவுக்கு அபரிதமானது என்பதற்கு, அவர் தனது வலப்புறத் தோளில் சுமந்துவரும் சம்புத்தரின் மூன்றடி உயரமான வெண்ணிறக் கற்சிலையே பூரண சாட்சியமாகும். கொத்திமலையை நோக்கி, சம்புத்தரின் சிலையைச் சுமந்தவாறே, சீவலி தேரர் தன்னந்தனியாகவே நடந்து வந்துகொண்டிருந்தார். காலையில் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாகவே புறப்பட்டவர், உச்சி வெயிலில் குளித்து வந்தாலும் சிறிதும் களைப்பு இல்லாதவராகவே காணப்பட்டார். தாகம் அவரை வாட்டியது தான். அவரது இடப்புறத் தோளில் தொங்கும் காவிநிறத் துணிப் பையில் தண்ணீர்க் குடுவையும் வடிகட்டியும் உள்ளன. ஆனாலும், கொத்திமலையை அடையும்வரை ஆகாரம், நீர் எதுவுமே உட்கொள்ளக் கூடாது என்றொரு விரதத்தை சீவலி தேரர் வரித்திருந்தார். தேரரின் பயணப் பாதையில் எதிர்ப்பட்ட இராணுவ அதிகாரிகளும், சிப்பாய்களும் தேரரை வணங்கி “ஹாமத்துருவெனே! எங்களது வண்டியில் ஏறி அமருங்கள்” என்று மன்றாட்டமாக அழைத்தபோதும், உணர்ச்சியற்றதும் உதடுகள் பிரியாததுமான புன்னகையுடன் அவர்களது வேண்டுதல்களை நிராகரித்துவிட்டு, தன்னுடைய பித்தவெடிப்பேறிய பாதங்களை எட்டிப்போட்டு சீவலி தேரர் நடந்தே சென்றார். அப்போது நேரம் மாலை நான்கு மணியாகிவிட்டது. தூரத்தே கொத்திமலை உச்சியிலிருக்கும் கைக்கல்லும் சீவலி தேரரின் கண்களுக்குத் தெரியலாயிற்று. சூரியன் படுவதற்குள் தோளிலிருக்கும் சம்புத்தரின் சிலையை இறங்கி வைத்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் தேரர் இருந்ததால், எலும்பு துருத்திக்கொண்டிருக்கும் தன்னுடைய கொக்குப் பாதங்களை இன்னும் வேகமாக முடுக்கிவிட்டார். பெயர் தான் மலையே தவிர, உண்மையிலேயே கொத்திமலை ஒரு மொட்டைப் பாறை தான். அங்கே செங்குத்தாக ஆறடி உயரத்திற்கு எழுந்து நிற்கும் கல்லையே கிராமத்தினர் கைக்கல் என்றழைக்கிறார்கள். இந்த மொட்டைப் பாறைக்குக் கீழேயிருக்கும் பசுமையான சமவெளியில் ஒருகாலத்தில் முந்நூறு குடும்பங்களுக்குக் குறையாமல் வசித்தார்கள். இப்போது நாற்பது குடும்பங்கள்தான் இங்கே எஞ்சியுள்ளன. போர்க் காலத்தில் பெருமளவு கிராமவாசிகள் படகுகளில் இந்தியாவுக்குப் போய்விட்டார்கள். இராமேஸ்வரத்தையொட்டியுள்ள மண்டபம் அகதி முகாமில் ‘கொத்தி செட்’ என்றொரு தனிப்பகுதியே உள்ளது. கொத்திமலைக் கிராமத்தின் எல்லையில் நுழைந்து, ஒற்றையாளாக சம்புத்தர் சிலையோடு வந்துகொண்டிருந்த தேரரை முதலில் ஒரு மூதாட்டிதான் பார்த்தார். சில நிமிடங்கள் கழித்து, ஆதிவைரவர் கோயிலின் சிறிய மணி ஒலித்தது. அதற்கடுத்த நிமிடத்தில் வேறெங்கிருந்தோ காண்டா மணியொலிக்கத் தொடங்கியது. இரண்டு மணிகளும் இடையறாது ஒலித்துக்கொண்டிருக்க, சீவலி தேரர் கொத்திமலையை நோக்கி இப்போது மெதுவாக ஓடவே ஆரம்பித்துவிட்டார். வயல்களிலும், தோட்டங்களிலும் வேலையாகயிருந்த கிராமத்து மக்கள் மொட்டைப் பாறையை நெருங்குவதற்கு முன்பாகவே, சீவலி பால தேரர் அங்கே ஏறிச் சென்று; நிமிர்ந்து நின்ற கைக்கல்லின் தட்டையான உச்சியைப் பீடமாக்கி, அங்கே சம்புத்தரின் சிலையை வைத்துவிட்டார். அந்தப் பீடத்திற்குக் கீழாக, கைக்கல்லில் ஆழமாகப் பதிந்து குழிந்துபோன அய்ந்து கைவிரல்களின் தடங்களிருந்தன. ஒவ்வொரு விரலும் ஒரு முழுப் பனங்கிழங்கின் நீளத்திலிருந்தது. சீவலி தேரரின் தவறாத கணக்குப்படி, இது அவர் நிறுவியிருக்கும் இருபத்தியிரண்டாவது சம்புத்த சிலையாகும். கொத்திமலையைக் குறித்து ஸ்ரீ சுபூதி தேரரிடமிருந்து அறிந்த கணத்திலேயே, இருபத்தியிரண்டாவது சிலையை அங்கேதான் நிறுவுவது என்று சீவலி தேரர் முடிவெடுத்திருந்தார். ஆனால், இந்தக் காரியத்தில் சீவலி தேரரின் வழிமுறை ஸ்ரீ சுபூதி தேரரின் வழிமுறையிலிருந்து வேறானது. ஸ்ரீ சுபூதி தேரரின் முரட்டுத்தனத்தையும், அடாவடிப் பேச்சையும் சீவலி தேரர் உண்மையில் வெறுக்கவே செய்தார். ஸ்ரீ சுபூதி தேரரால் அன்புநெறிக்கும் தம்மத்துக்கும் இகழ் நேர்கிறது என்பதுவே சீவலி தேரின் எண்ணமாகயிருக்கிறது. கைக்கல்லின் மீது திடீரெனத் தோன்றிய சம்புத்தர் சிலையை நோக்கிக் கிராமத்துச் சனங்கள் ஓரிருவராகக் கூட ஆரம்பித்து, பத்து நிமிடங்களிலேயே முழுக் கிராமமும் மொட்டைப் பாறைக்கு வந்து சேர்ந்துவிட்டது. சம்புத்தரின் சிலைக்குக் கீழே, மொட்டைப் பாறையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த சீவலி தேரர் கிராம மக்களைத் தன்னுடைய சாந்தமானதும் அடக்கமானதுமான கண்களால் நோக்கினார். அவருடைய வாயில் எஞ்சியிருந்த ஒருசில பற்களால் முறுவலித்தவாறே, அவர் கிராமவாசிகளிடம் பேசத் தொடங்கினார்: “நம்முடைய சகோதர சகோதரிகளுக்குப் புத்த பெருமானின் அருளால் நிறைவான ஆசிகளைத் தருகிறேன். இந்தப் புனிதமான கல்லில் சம்புத்தரை ஏற்றி வைத்திருப்பதால், இப்போதிலிருந்து நற்காரியங்களும், அதிர்ஷ்டங்களும், அமைதியும், சமாதானமும் மட்டுமே மஹா புத்தரின் பெருங்கருணையால் உங்களைச் சூழ்ந்திருக்கும்…” சீவலி தேரரை இடைமறித்து ஒரு கிராமவாசி தமிழில் ஏதோ சொன்னார். தேரருக்குத் தமிழ் மொழியில் ஒரேயொரு வார்த்தைதான் தெரியும். ஆனால், அந்த வார்த்தைக்குக் கூட என்ன பொருளென்று அவர் அறியமாட்டார். அந்த வார்த்தையைக் கடந்த முப்பது வருடங்களாக அவர் நினைக்காத நாளில்லை. ஆனால், அந்த வார்த்தையின் பொருளை அறிந்துகொள்ள அவர் ஒருபோதும் விரும்பினாரில்லை. அந்த வார்த்தையை நினைவுறும் போதெல்லாம் தேரர் அளவற்ற துக்கத்தால் பீடிக்கப்படுவதுண்டு. கொத்திமலைச் சனங்களிடம் சீவலி தேரர் புன்னகை மாறாமலேயே கேட்டார்: “சகோதரர்களே! உங்களில் யாருக்காவது சிங்கள மொழி தெரியுமா?” கூட்டத்திலிருந்து முன்னே வந்த, முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணைத் தேரர் கனிந்த விழிகளால் நோக்கினார். குரூபி என்றே சொல்லக் கூடிய அந்தப் பெண்ணில் மூக்கு, காது, உதடு என்ற எந்த அடையாளத்தையும் குறிப்பாகக் காண முடியாதவாறு, அவளது முகம் தீயில் வெந்திருந்ததால், அம்முகம் முறுகக் காய்ச்சிய இரப்பர் போன்றிருந்தது. அந்தப் பெண் சீவலி தேரரை வணங்கிவிட்டு நின்றாள். “சகோதரிக்கு நன்மையே விளையட்டும்! உங்களுக்குச் சிங்களம் பேசத் தெரியுமா?” “ஹாமத்துருவெனே!” அந்தப் பெண்ணின் இரப்பர் முகம் சற்றே அசைந்தது. இப்போது விட்ட இடத்திலிருந்து சீவலி தேரர் பேசலானார்: “இப் புனித நிலத்தில் வாழும் ஜனங்களான நீங்கள், கலிங்கத்து அரசன் குஹசிவவைக் காட்டிலும் பேறுடையோர். அவனிடமிருந்த சம்புத்தரின் புனிதப் பல்லைக் கொள்ளையிடுவதற்காக, பெரும் சேனையைத் திரட்டி கீரதர நரேந்திர வம்சத்தார் போர் தொடுத்தபோது, மன்னன் குஹசிவ தன்னுடைய புத்திரியான இளவரசி ஹேமமாலியிடம் ததாகதரின் புனிதப் பல்லைக் கொடுத்து, இரகசியமாக இலங்கைத் துவீபத்துக்கு அனுப்பிவைத்தான். இளவரசி தன்னுடைய கூந்தலுக்குள் புனிதப் பல்லை மறைத்து வைத்துக்கொண்டு, இந்த முல்லைக் கடற்கரையிலேயே தரையிறங்கி, தலைநகர் அனுராதபுரத்திற்குச் சென்று, அரசனான ஸ்ரீ மேகவண்ணவிடம் புனிதப் பல்லைக் கையளித்தாள். அவன் மேஹகிரி விகாரையில் புனிதப் பல்லை அறுக்கை செய்துவைத்து வழிபட்டான். அவனது வம்சத்தினரின் தலைநகரங்கள் மாற மாற புனிதப் பல்லும் அவர்களுடனேயே எடுத்துச் செல்லப்பட்டது.” சீவலி தேரர் பேச்சை இடைநிறுத்தி, இரப்பர் முகப் பெண்ணை நோக்கினார். அவள் தேரர் சொல்லியதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கிராமவாசிகளிடம் சொல்லலானாள். முழுக் கிராமமும் கவனமாக அந்தக் கதையைக் கேட்டது. சிலர் மொட்டைப் பாறையில் தளர்வாக உட்கார்ந்துகொண்டது, தேரர் சொல்லவிருக்கும் சுவையான மிகுதிக் கதைக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது போலவேயிருந்தது. சீவலி தேரர் முகத்திலும் இப்போது நிம்மதி ரேகை தோன்றி மறைந்தது. அன்புவழியைத் தேர்ந்தெடுத்தவர்களை சம்புத்தர் கைவிடார் என்று அரத்த தம்மசக்கரம் அவர் இருதயத்தில் மெல்லச் சுழலலாயிற்று. தேரர் தொடர்ந்தார்: “இளவரசி ஹேமமாலி முல்லைக் கடற்கரையில் இறங்கி, இந்தக் கொத்திமலை வழியாகவே சென்றாள். இரவைக் கழிப்பதற்காக, இங்கே படுக்கையைப் போன்றிருந்த ஒற்றைக்கல்லின் மீது சயனித்தாள். விடியல் கருக்கலில் அவள் எழுந்தபோது, அந்தக் கல்லும் கூடவே எழுந்து நிரந்தரமாக இதோ நிற்கிறது! அவளது வலது கை இந்தக் கல்லில் விட்டுச் சென்ற அடையாளம் குழிந்து இது கைக்கல்லுமாயிற்று…” “இது கொத்தியம்மாவின் கை” என்று தன்னையறியாமலேயே தமிழில் உரக்கச் சொன்ன இரப்பர் முகப் பெண், தேரர் சொன்னதைக் கிராமவாசிகளிடம் சொல்லத் தொடங்கினாள். அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருந்த சனங்கள் மெல்ல எழுந்தார்கள். அவர்கள் சலசலத்துப் பேச ஆரம்பித்தார்கள். “அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று அந்தப் பெண்ணிடம் சாந்தம் நுரைக்கும் குரலால் சீவலி தேரர் கேட்டார். “இந்தக் கை எங்களது தாயார் கொத்தி அம்மாவுடையது என்றே அவர்கள் கருதுகிறார்கள்.” அடக்கத்துடன் புன்னகைத்த சீவலி தேரர் வானத்தை நோக்கிக் கைகூப்பித் தொழுதுவிட்டுச் சொன்னார்: “கொத்தி தெய்வமல்ல! அது அலைவுறும் ஆவி. அதனால் அடையாளத் தடங்களை நீரிலோ நிலத்திலோ கல்லிலோ காற்றிலோ மேகத்திலோ ஒருபோதுமே பதிக்க முடியாது!” “தெரியும் ஹாமத்துருவெனே” என்று தலையசைத்த அந்தப் பெண் தொடர்ந்தாள்: “கொத்தி ஆவியாக இருக்கும் அதே வேளையில், அவள் காவல் தெய்வமாகவும் இருப்பாள். எங்களது குழந்தைகள் பிறக்கும் போது கொத்தி தெய்வமாக மாறி மருத்துவிச்சியை இயக்குவாள். குழந்தை பிறந்ததும் ஆவியாகிவிடுவாள். அவளுக்காக நாங்கள் ‘கொத்தி கழிப்பு’ செய்வோம்.” இப்போது, சீவலி தேரர் தனது வலது கையால் இடது கையைப் பற்றிக்கொண்டார். இன்னொரு கதையைச் சொல்வதற்கு அவர் தயாராகிறார் எனக் கிராம மக்கள் தெரிந்துகொண்டனர். “தலதாவம்சம் புனித நூலில் இருக்கும் செய்தியை உங்களுக்கு அறிவிப்பது என்னுடைய கடமையாகிறது சகோதரர்களே! தனது கடமையை நிறைவேற்றிய இளவரசி ஹேமமாலி கலிங்க தேசத்திற்குத் திரும்பிச் செல்லவேண்டிப் பயணித்தபோது, இரவான போழுதில் இந்தக் கைக்கல்லின் மீது தலையைச் சாய்த்து நின்றபடியே துயின்றாள். அவ்வேளையில் யட்சர்களின் நாகம் இரத்தின ஒளியை உமிழ்ந்தவாறே பறந்து வந்து அவளைத் தீண்டியதால், அந்தப் புனிதவதி இங்கேயே முகம் கருகி உயிர்விட்டாள். ஆகவேதான் அவள் கருணைத் தெய்வமாகவும், அதேவேளையில் தந்தை குஹசிவவிடம் சென்று சேர முடியாத துக்கத்தால் ஆவியாக அலைபவளுமாக இருக்கிறாள். இப் புனித இடத்தில் சம்புத்தரை இப்போது நிறுவியுள்ளதால், இனி ஹேமமாலி அமைதியுறுவாள். அவள் அமைதியுற்றால், இந்த நிலமெங்கும் அது பரவிச்செல்லும். இரப்பர் முகப் பெண் சீவலி தேரருக்கு முதுகைக் காட்டியவாறே உடலைத் திருப்பி, கூடியிருந்த கிராமவாசிகளைப் பார்த்து, தேரர் சொன்ன மிகுதிக் கதையைச் சொன்னாள். அதைக் கேட்டதும் சனங்களிடமிருந்து கேலியாக எழுந்த முனகல்கள் அப்படியே கூச்சல்களாக மாறத் தொடங்கின. அவள் சீவலி தேரரிடம் உடலைத் திருப்பிச் சொன்னாள்: “ஹாமத்துருவெனே! கொத்தி எங்கிருந்தோ இங்கு வந்தவளல்ல! முல்லைக் கடலோரக் குறுமணிலில் உதித்த கன்னி. சூலன் பரியாரியின் இளைய மகள். அவளைப் பற்றி எங்களிடம் நூறு கதைகளும் ஆயிரம் பாடல்களுமுள்ளன. மேலதிகமாக உங்களிடமிருந்து கதையும் சிலையும் எங்களுக்குத் தேவைப்படாது என்கிறார்கள் சனங்கள்.” சீவலி தேரர் மொட்டைப் பாறையில் கூடியிருந்தவர்களை ஊடுருவிப் பார்த்தார். ஏழ்மையும் நோயும் பரவிக் கிடந்த சனங்களாக அவர்களிருந்தார்கள். இளந்தாரிப் பருவ ஆண்கள் அதிகமாகயில்லை. சட்டையற்ற ஆண்களின் தேகங்கள் தழும்புகளாலும் காய்ந்து சொரசொரத்த தோலாலும் போர்த்தப்பட்டிருந்தன. அநேகமான பெண்களோ உதடுகளும் நகங்களும் அசிங்கமாக வெடிப்புற்று இரத்தச் சோகை பூத்திருந்தார்கள். குழந்தைகளோ வயிறுகள் வீங்கிக் கிடக்க, ஈர்க்குக் கால்களால் தள்ளாடி ஓடித்திரிந்தார்கள். தேரர் நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து பேசலானார்: “என் சகோதர்களான உங்களது நம்பிக்கைகளில் தலையிடவோ மறுத்து நிற்கவோ நான் தகுதியற்றவன். எனினும், இந்த நாட்டின் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையின்படி, இது புனிதப் பல்லைக் கொண்டுவந்த இளவரசி மரணித்த புனிதத் தலம். அவளது சரீரம் பட்டெழுந்த கல்லில் மஹா புத்தர் வீற்றிருந்து பாலிக்கும் கருணை உங்கள் மீதும் இந்த நாட்டின் மீதும் நித்திய சமாதானத்தைக் கொண்டுவரும்!” அந்தப் பெண் தேரரிடம் சொன்னாள்: “இது கொத்தியம்மா காலமாக உறைந்திருக்கும் மனை! நன்மையோ புன்மையோ அது கொத்தியம்மாவோடேயே எங்களுக்கு இருக்கட்டும். ஹாமத்துருவெனே! இந்தச் சிலையையும் தூக்கிக்கொண்டு இங்கிருந்து புறப்படுமாறு உங்களைத் தயவாக வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம்.” இப்போது தேரரது சரீரம் நடுங்கத் தொடங்கியது. பொழுதும் செக்கலாகி இருள் கீழே கவியலானது. கடற்காற்று கூவென மொட்டைப் பாறையில் மோதித் திரும்பிற்று. சீவலி தேரர் பூமியை நோக்கிக் கண்களைத் தாழ்த்தியவாறே துயரோடு சொன்னார்: இந்தப் புத்தர் சிலையை அகற்றுமாறு நீங்கள் சொல்வது, நானும் நீங்களும் துக்கத்தைப் பெருக்குவதாகும். இந்த நாட்டில் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் – ஏன் தலைநகரத்தில் கூட – எத்தனையோ முருகன் கோயில்களும், இயேசு மாடங்களும், மசூதிகளுமிருக்கின்றன. அப்படியிருக்கும் போது, ஒரு தமிழ் கிராமத்திலோ, முஸ்லீம் கிராமத்திலோ கருணையையும் சமத்துவத்தையும் போதிக்கும் புத்த பெருமானின் சிலையோ, பன்சாலையோ இருக்கக்கூடாது எனச் சொன்னால் அது தர்மமாகுமா?” அந்தப் பெண் கூடியிருந்த சனங்களிடம் பேசி விட்டுச் சொன்னாள்: “இந்தக் கைவிடப்பட்ட சனங்கள் சொல்வதைக் கேளுங்கள் துறவியானவரே! அங்கெல்லாம் பிற ஆலயங்கள் உண்டெனில், அங்கே வாழ்ந்தவர்களும் குடியேறியவர்களும் அவற்றை உண்டாக்கவும் வழிபடவும் செய்தார்கள். இந்தக் கிராமத்தில் ஒரேயொரு பவுத்தர் கூட வசிக்கவில்லையே. எங்கிருந்தோ வரும் நீங்கள் திடீரென இங்கேயொரு சிலையை நாட்டுவது எங்களது நிலத்தைக் களவாடும் சூதென்றே இந்த ஏழைச் சனங்கள் கருதுகிறார்கள்.” சீவலி தேரர் இப்போதும் சாந்தமாகவும் ஆனால், குரலில் உறுதி தொனிக்கவும் சொன்னார்: “சம்புத்தர் போதி ஞானமடைந்த ஒன்பதாவது மாதத்தில், பூஸ பவுர்ணமியன்று இந்தத் தீவில் இறங்கி, தன்னுடைய அற்புதங்களால் இங்கிருந்த தீயர் யட்சர்களை அகற்றிவிட்டு, இந்த அழகிய நிலத்தை நமக்குத் தத்தம் செய்தார். அந்தத் தூயரின் திருவுருவை இங்கிருந்து அகற்றுவதே உங்களது முடிவான விருப்பமானால், என்னைக் கொன்றுவிட்டு, தாராளமாக நீங்கள் அதைச் செய்துகொள்ளுங்கள். கிராமத்துச் சனங்கள் இந்த நாளை மட்டுமல்லாமல், தேரரின் இந்தப் பதிலையும் எதிர்பார்த்தேயிருந்தார்கள். இங்கிருந்து நான்கு கட்டைகள் தொலைவிலிருக்கும் ஈச்சங்குடா கிராமத்தில், முதலில் இவ்விதமே ஒரு புத்தர் சிலை இரவோடு இரவாக ஸ்ரீ சுபூதி தேரரால் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த நிலம் பண்டைய சகாப்தத்தில் புத்த விகாரையாகயிருந்தது என்ற கதையைப் பவுத்த மடாலயங்களும், அரசியல்வாதிகளும் கிளப்பிவிட்டார்கள். புத்தர் சிலையை அகற்றக் கோரிய வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றபோது, விசாரணையை நடத்தவிருக்கும் நீதிபதி ஒரு தமிழர் என்பதையறிந்த ஸ்ரீ சுபூதி தேரர் தீக்குளிக்கப் போவதாக அறிவித்துக்கொண்டு நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். தடுத்த இரண்டு பொலிஸ்காரர்களுக்கும் மண்ணெண்ணெய் நாற்றமடித்த கையால் கன்னத்தைப் பொத்தி ஆளுக்கொரு அறைவிட்டார். அந்த நீதிபதி கூட ‘நாட்டில் திடீரென எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு ஸ்ரீ சுபூதி தேரரும் ஒரு காரணம்’ என்று தனிப்படக் குறைப்பட்டுக்கொண்டாராம். இப்போது ஈச்சங்குடாவில் பெரிய புத்த விகாரையே கட்டி எழுப்பப்படுகிறது. எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடுத்திருந்த முகிலன், மரியநேசன் என்ற இரண்டு இளைஞர்களும் ஈச்சங்குடா கிராமத்திற்குள்ளேயே நுழையக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக, ஸ்ரீ சுபூதி தேரருடன் சில துறவிகள் வந்து மொட்டைப் பாறையில் வழிபாடு செய்துவிட்டுப் போனதிலிருந்தே, இங்கேயும் இரவோடு இரவாகப் புத்தர் சிலை தோன்றக்கூடும் எனக் கிராம மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஆனால், அதை எப்படித் தடுப்பது என்று இவர்களுக்குத் தெரியவில்லை. கடைசியில் கொத்தியம்மனில் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, அவளையே நம்பியிருந்தார்கள். ஒவ்வொருநாள் காலையிலும் கைக்கல்லைப் பார்த்து நிம்மதியடைந்தார்கள். இப்போது சீவலி தேரர் பகலிலேயே புத்தர் சிலையை வைத்துவிட்டார். இப்போதும் சனங்கள் செய்வதறியாமல் தங்களுக்குள்ளேயே விவாதித்துப் பேசியும், ஒருவரையொருவர் குற்றம் சொல்லியும் தளர்ந்து போனார்கள். தாங்கள் கையாலாகாதவர்கள் என ஒருவரையொருவர் பழித்துக்கொண்டார்கள். இவர்களால் இந்தப் புத்தர் சிலையின் நகத்தைக் கூடத் தொட முடியாது. மீறித் தொட்டால், அது நாட்டு அதிபருக்கோ, இராணுவ ஜெனரலுக்கோ ஊனம் விளைவிப்பதற்குச் சமமான குற்றமாகும். சீவலி தேரர் எழுந்து நின்று, தனது இடது தோளில் மாட்டியிருந்த துணிப் பைக்குள்ளிருந்து அகல் விளக்கையும், நெய் குப்பியையும், தீப்பெட்டியையும் எடுத்தார். சூத்திரங்களை உச்சாடனம் செய்தபடியே, புத்தர் சிலையின் முன்னே அகல் விளக்கைத் தேரர் ஏற்றிவைக்கும்போது, சல்லடை இருளைப் பிளந்துகொண்டு காவல்துறையினரின் ஜீப் வண்டி கொத்திமலையை நோக்கி வந்தது. பொலிஸ் அதிகாரி மூச்சிரைப்போடு மொட்டைப் பாறையில் ஏறிவந்து, சீவலி தேரரைப் பணிந்து வணங்கினான். அவனோடு வந்திருந்த பொலிஸார் மொட்டைப் பாறையில் மண்டியிட்டுத் தேரரை வணங்கினார்கள். தேரரிடமிருந்து மீண்டும் ஓர் உணர்ச்சியற்ற வெற்றுப் புன்னகையே மொட்டைப் பாறையில் வீழ்ந்தது. இரப்பர் முகப் பெண் அங்கிருந்து காணாமற்போயிருப்பதைத் தேரர் அறிந்துகொண்டார். பொலிஸ் அதிகாரிக்குக் கொச்சைத் தமிழ் பேசத் தெரிந்திருந்தது. அவனது வாயிலிருந்து முதல் வசனமாக “எல்லோரும் இங்கிருந்து கலைந்து வீடுகளுக்குச் செல்லுங்கள்” என்ற உத்தரவே கொத்திமலைச் சனங்களுக்குக் கிடைத்தது. “புத்தர் சிலையை இங்கே வைக்க அனுமதிக்கக் கூடாது” என்று தைரியமாக ஒரு முதியவர் சொன்னபோது “பெரியவரே… இந்த இடம் உன்னுடையதா? நீ அதற்கான காணி உறுதிப் பத்திரம் வைத்திருக்கிறாயா? எங்கே காட்டு! வேறு யாரிடமாவது இந்த மொட்டைப் பாறைக்கான உரிமைப் பத்திரம் இருக்கிறதா?” எனக் கேட்டுப் பொலிஸ் அதிகாரி சீறிச் சினந்தான். பின்பு சற்றுத் தணிந்து “எதுவாகயிருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்! இப்போது கலகம் செய்யாமல் இங்கிருந்து கலைந்து போங்கள்!!” என்றான். நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த சீவலி தேரர் தனது குரலை உயர்த்திப் பொலிஸ் அதிகாரியிடம் சொன்னார்: “நீங்கள் உடனடியாக இங்கிருந்து போய்விடுங்கள். நான் இந்த மக்களிடம் பேசிக்கொள்கிறேன். எளியவர்களிடம் அதிகாரம் செய்வது பவுத்த நெறியல்ல. தயவுசெய்து இங்கிருந்து இறங்கிச் செல்லுங்கள்!” பொலிஸ் அதிகாரி தலையைத் தாழ்த்தி, வலது கையால் தனது நரைத்த மீசையை மறைத்துக்கொண்டு கிசுகிசுப்பாகத் தேரரிடம் சொன்னான்: “ஹாமத்துருவெனே! உங்களைச் சுற்றி நின்றிருப்பவர்கள் காட்டுச் சனங்கள். எந்தத் தர்மத்துக்கும் கட்டுப்படாத சண்டைக்காரர்கள். தருணம் பார்த்து சம்புத்தரின் சிலையைச் சல்லியாக உடைத்துக் கற்குவியலில் கரைத்துவிடுவார்கள். இந்த மாவட்டத்தில் சங்கைக்குரிய ஸ்ரீ சுபூதி தேரர் நிறுவிய சிலையொன்று ஏற்கனவே உடைக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் உங்களுடனேயே இருக்கத் தயவு செய்து நீங்கள் அனுமதிக்க வேண்டும்.” “ஸ்ரீ சுபூதி தேரரின் வழிமுறை வேறானது. அவர் போதிசத்துவரைப் பரப்புவதற்கு உங்களைப் போன்ற காவல் அதிகாரிகளையும் நீதிபதிகளையும் அரசியல்வாதிகளையும் நம்பியிருக்கிறார். நானோ முழுவதுமாகத் தம்மத்தையும் ததாகதரையும் இந்த மக்களின் இருதயங்களையுமே நம்பி நடந்துவருகிறேன். நான் நிறுவிய சிலைகளில் ஒன்றுகூட இதுவரை சேதப்பட்டதில்லை! அகற்றப்பட்டதில்லை!!” கடைசியில் சீவலி தேரரின் பிடிவாதமே வென்றது. அதிருப்தியுடன் பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். போவதற்கு முன்பாக, அங்கே கூடிநின்ற சனங்களின் முகங்களில் பொலிஸார் வெளிச்சத்தைப் பாய்ச்சி, கைத்தொலைபேசியில் அவர்களைப் படம் பிடித்துக்கொண்டார்கள். அதன் பின்பு, மொட்டைப் பாறையிலிருந்த சனங்களும் தமக்குள் பேசியவாறே மெதுமெதுவாக அங்கிருந்து கலைந்து செல்லத் தொடங்கினார்கள். அப்போது அங்கே இரப்பர் முகப் பெண்ணை தேரர் மறுபடியும் கண்டார். அவளை நோக்கி “இங்கே சம்புத்தரின் சிலை இருப்பதற்கு கிராமத்துச் சனங்கள் ஒப்புதல் கொடுத்துவிட்டார்களா சகோதரி?” என்று கேட்டார். அப்போது அந்த இரப்பர் முகப் பெண் தமிழில் ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு நிதானமாக இருளுக்குள் நடந்து சென்றாள். அந்த வார்த்தை முப்பது வருடங்களுக்கு முன்பு சீவலி தேரர் கேட்ட அதே வார்த்தையாகயிருந்தது. அந்தக் கணத்தில் அதீத துக்கம் அவரை மூழ்கடித்துக் கீழே தள்ளிற்று. யாருமற்ற மொட்டைப் பாறையில் கால்களை நீட்டியவாறே, கைக்கல்லில் தளர்வாக முதுகைச் சாய்த்துக்கொண்டார். துக்கம் ஒரு பாறையாக அவரை அமிழ்த்திக்கொண்டிருக்கிறது. தன்முன்னே விரிந்திருக்கும் இருளைக் கண்களை விரித்துப் பார்த்தவாறே, சம்புத்தரைத் தியானித்து இரு உள்ளங்கைகளையும் மார்பில் வைத்துக்கொண்டார். அவரது மெல்லிய உதடுகள் “துக்கங் அரியசச்சங்” என்று முணுமுணுத்துக்கொண்டன. துக்கம் இவ்வுலகின் மாற்றமுறா நித்திய உண்மை என்பதுவே கவுதம புத்தருக்கு முதன் முதலாகச் சித்தித்த ஞானமாகும். 2 முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னதாக, கண்டியிலுள்ள குண்டசாலை பவுத்த துறவு மடத்தில் இருந்தபோது, சீவலி தேரருக்குப் பத்தொன்பது வயதுதான் ஆகியிருந்தது. துறவின் உச்சநிலையை எட்டுவதைத் தவிர வேறு சிந்தனைகளே இல்லாத இளம் துறவியாகவே அவரிருந்தார். தம்மத்தின் நாற்பேருண்மைகளான துக்கம், துக்கத்திற்கான காரணம், துக்க நிவர்த்தி, துக்க நிவர்த்திக்கான மார்க்கம் ஆகியவற்றைக் குறித்து இடையறாது சிந்திப்பது, மூத்த துறவிகளிடம் பாலி கானான் பாடம் கேட்பது, விமானவத்து, பீடவத்து போன்ற சுத்த பிடக குத்தக நிகாயகங்களை ஆராய்வது, சக்க சம்யுக்த சூத்திரத்தைக் கசடறப் புரிந்துகொள்ள முயல்வது போன்றவற்றில் அவர் மூழ்க்கியிருந்தபோது தான்; அவரைத் தேடி நெருங்கிய உறவினனும், பால்ய தோழனுமான மனோஹர சேனக வந்திருந்தான். சேனக அவரிடம், தான் ‘தேசப்பிரேமி ஜனதா வியபரயா’ இயக்கத்தைச் சேர்ந்தவன் எனச் சொன்னதை சீவலி தேரரால் முதலில் நம்பவே முடியவில்லை. சேனகவின் குடும்பம் கடுமையான வறுமையில் தத்தளிக்கிறது. சேனக பூனைக்குட்டியைப் போல அமைதியானவன். தவளையைப் போல மந்தமானவன். நாளொன்றுக்கு நான்கு வார்த்தைகளுக்கு மேலாகப் பேசிப் பழக்கப்படாதவன். அப்படியானவன் ஓர் ஆயுத இயக்கத்தின் முக்கிய உறுப்பினரென்றால் யாரால்தான் நம்ப முடியும். சேனக உறுப்பினராக இருந்த ‘தேசப்பிரேமி’ என்ற தலைமறைவு இயக்கம் அப்போது நாட்டையே கதிகலங்க வைத்துக்கொண்டிருந்தது. ஆளுங்கட்சி அரசியல்வாதிகளை அந்த இயக்கம் தேடித் தேடிக் கொன்றது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும், இந்திய அமைதிப் படையின் இலங்கை வருகையையும் ஓர்மத்துடன் எதிர்த்து நின்ற அந்த இயக்கம் அம்பாறையிலும், திருகோணமலையிலும் இந்திய அமைதிப் படையின் மீது கண்ணிவெடித் தாக்குதல்களைச் செய்திருந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு குண்டுத் தாக்குதலையும் நிகழ்த்தியது. தேசப்பிரேமி இயக்கத்தின் எந்தவொரு செயலையும் அணுவளவு கூட ஆதரிக்க இயலாதவர் சீவலி தேரர். அவரது இருதயத்திலே ஓயாமல் சுழன்றுகொண்டிருப்பதாக, அவர் நம்பும் அரத்த தம்மசக்கரமும் ததாகதரின் நெறிகளும் வன்முறையை எதன்பொருட்டும் ஏற்றுக்கொள்ளாதவை. ஆனால், சேனக தன்னுடைய பேச்சால் சீவலி தேரரை வளைக்க முயன்றான். தேசப்பிரேமி இயக்கம் சேனகவின் நாவில் வசிய சூத்திரத்தைப் பொறித்திருந்தது: “ஹாமத்துருவெனே! கவனமாகவும் பொறுமையாகவும் கேட்க வேண்டும். நமது சிங்கள மக்களுக்காக அமைந்த ஒரேயொரு நிலம் இந்தச் சிறிய நாடே. இந்தத் தீவைக் கடல் நீர் மட்டும் சூழ்ந்திருக்கவில்லை. தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வரும் தமிழர்களால் ஆயிரம் வருடங்களாகவே அபாயமும் சூழ்ந்திருக்கிறது. சோழர்கள் படைகொண்டு வந்து எங்களுடைய குடிகளையும், தலைநகரத்தையும்,விகாரைகளையும், புராதனப் புத்தர் சிலைகளையும், ஆயிரங்கால் மண்டபத்தையும் அழித்தும் கொளுத்தியும் போட்டார்கள். அதே போன்றுதான் இப்போது இங்கே இந்திய இராணுவமும் நுழைந்திருக்கிறது. இலங்கை அரசாங்கமும் ஒத்துப் போய் இந்த நாட்டையே விற்றுவிட்டது. இந்தத் தேசத்துரோகத்தைத் தேசப்பிரேமிகள் எப்படி அனுமதிக்க முடியும்?” உண்மையிலேயே சீவலி தேரர் தனது நண்பன் சேனகவை மறுத்துப் பேச முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டார். நாட்டின் அரசியல் நிலைமைகளைக் குறித்து அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதும் உண்மையே. தன்னுடைய புலன்கள் முழுவதையும் துறவையும் தம்மத்தையும் நோக்கி ஒருமுகப்படுத்தியே இந்தனை காலங்களாக அவர் வாழ்ந்திருக்கிறார். புத்தரின் தம்மத்தையும் அஹிம்சையையும் சேனகவுக்குப் புரியப்பண்ண சீவலி தேரர் எத்தனித்தபோது, சேனக மிக இலகுவாக தேரரை நிலைகுலையச் செய்தான்: “இறைமையுள்ள பவுத்த நாடொன்று இருந்தால்தான் தம்மத்தை காப்பாற்ற முடியும்! அதற்காகவே இலங்கையைக் கவுதமர் தேர்வு செய்தாரென்பதை சீவலி தேரருக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை.” தேசப்பிரேமி இயக்கம் செய்யவிருக்கும் அடுத்த நடவடிக்கைக்கு சீவலி தேரர் உதவாவிட்டால், நாட்டைப் பெரும் ஆபத்து அழித்துப்போடும் என்ற பீடிகையுடன் சேனக திட்டத்தை விளக்கினான். “பெப்ரவரி, எட்டாம் தேதியன்று கண்டி புனிதத் தந்த தாது விகாரைக்குள் நுழைவதற்குத் தேசப்பிரேமி இயக்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் புனித விகாரைக்கோ, பவுத்த துறவிகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவொரு ஆபத்தும் நிகழாது என்று முன்கூட்டியே உத்தரவாதம் கொடுத்துவிடுகிறேன். எங்களுடைய திட்டம் மிக இலகுவானதும் வெற்றியளிக்கக் கூடியதுமாகும். தேசப்பிரேமியின் பெண் தோழர்கள் இருவர் வெள்ளை ஆடைகளை அணிந்து, மலர்களால் நிறைந்த தட்டுகளுடன் வழிபாட்டுக்குச் செல்வதுபோல விகாரைக்குள் நுழைவார்கள். மகர தோரண முகப்பில் காவல் கடமையில் இருக்கும் பொலிஸார் புனிதருக்காக எடுத்துச் செல்லப்படும் மலர்களைத் தொடவோ சோதனையிடவோ போவதில்லை. ஏற்கனவே விகாரைக்குள் பக்தர்களுடன் கலந்து நின்றிருக்கும் எங்களுடைய இரண்டு ஆண் தோழர்களின் அருகே இந்த மலர்த் தட்டுகள் சென்றவுடன், மலர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைத்துப்பாக்கிகளை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அந்தத் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, சம்புத்தரின் புனிதப் பல் வைக்கப்பட்டிருக்கும் பேழையை எங்களது தோழர்கள் கவர்ந்து வந்துவிடுவார்கள்.” சேனக சொன்னதைக் கேட்டதும் சீவலி தேரரின் உடல் குளிர்ந்து நடுங்கிவிட்டது. “என்னவொரு கீழ்மையான முட்டாள் திட்டம்” என்று அவரது மெல்லிய உதடுகள் முணுமுணுத்தன. “கிடையாது ஹாமத்துருவெனே! இதுவொரு புத்திசாலித்தமான உயர்ந்த அரசியல் திட்டம். ஆட்சியாளர்கள் சம்புத்தரின் புனிதப் பல்லைப் பாதுகாக்கும்வரை தான் மக்கள் அவர்களை நம்புவார்கள். இந்தத் தீவின் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகால அரசியல் வரலாறே இந்தப் புனிதப் பல்லைப் பாதுகாக்கும் வரலாறுதான். இந்தத் தேசத்தில் மன்னர்களிடையே நிகழ்ந்த ஒவ்வொரு போரும் இந்தப் புனிதப் பல்லுக்காக நடத்தப்பட்டதுதான். வெள்ளையர்களுக்கு எதிராகக் கண்டி மன்னன் கடைசிவரை போரிட்டு நின்றதற்கும், ரதல பிரபுக்களின் சதியால் அவன் வீழ்த்தப்பட்டதற்கும் காரணம் இந்தப் புனிதப் பல்லே. இந்தப் புனிதப் பல்லைப் பாதுகாக்கத் துப்பில்லாதவர்களை இந்நாட்டு மக்கள் ஆட்சியாளர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்நாட்டு மக்கள் கூடிக் கலகம் செய்யும் தருணத்திற்காக ஏங்கிக் கிடப்பவர்கள். அவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரான கலகத்தில் கண்டிப்பாக இறங்குவார்கள். புனிதப் பல்லை வைத்திருக்கும் தேசப்பிரேமி இயக்கமே ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கும். அதுவே மாற்றமுறாத நியதி எனும் ஆரிய சத்தியம்!” புனிதப் பல்லை ‘தேசப்பிரேமி’ இயக்கம் எடுத்துச் செல்லப்போகிறது என்ற விஷயத்தை சீவலி தேரரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இவர்கள் அதை என்ன செய்வார்கள்? பேழையின் புனிதத்தன்மையை இவர்களால் காப்பாற்ற முடியுமா? குப்பைமேட்டில் புதைத்து வைப்பார்களா? பேழையுடன் கடலில் விடுவார்களா? அசிரத்தையாக எங்காவது தொலைத்து இந்நாட்டுக்கும் தம்மத்துக்கும் அபகீர்த்தியைக் கொண்டுவருவார்களா? சீவலி தேரர் இதையெல்லாம் சேனகவிடம் கேட்டேவிட்டார். “இங்கேதான் சங்கைக்குரிய சீவலி தேரரின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது. புனிதப் பல்லை கெரில்லாக் குழுவான நாங்கள் வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியானதல்ல. புனிதப் பல்லை வைத்திருக்கும் எங்களது அணியொன்று முற்றாக அழிக்கப்பட்டால், புனிதப் பல்லுக்கு என்ன நிகழும் என்பதும் நமக்குத் தெரியாது. என் நண்பனும், நம்பிக்கைக்குரியவனும், தம்மத்தின்மீது அளவற்ற பற்றுள்ளவனுமான சீவலி தேரர் தான் தகுந்த காலம் வரும்வரை புனிதப் பல்லைப் பூஜித்துப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.” இதைக் கேட்ட சீவலி தேரர் மனக் குழப்பத்துடன், ஆழ்ந்த யோசனைக்குள் செல்லலானார். ஆனால், சேனகவோ “சிந்திக்கவெல்லாம் நேரமில்லை. சீவலி தேரரின் சம்மதத்தைப் பெற்றாகிவிட்டது என்ற நற்செய்தியுடன் எங்களது தலைமைத் தோழரை இன்றிரவே சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன். இப்போதே தாமதமாகிவிட்டது. தன்னுடைய புனிதக் கடமையை ஏற்றுக்கொள்வதற்கு வணக்கத்திற்குரிய சீவலி தேரர் மறுத்துவிட்டார் என்ற அவச் செய்தியுடன் நான் இங்கிருந்து செல்ல முடியாது!” என்றான். மனோஹர சேனகவுடைய, வசியச் சூத்திரம் பொறிக்கப்பட்டிருந்த நாவு தங்கத் தகடுபோல சீவலி தேரரின் முன்னே ஒளியாகத் துடித்தது. 3 தேசப்பிரேமி ஜனதா வியபரயாவின் திட்டப்படி, சரியாகப் பிற்பகல் 02:30 மணிக்கு, கண்டி புனிதத் தந்த தாது ஆலயத்தில் நடவடிக்கை தொடக்கப்படும். அங்கிருந்து எடுத்துவரப்படும் புனிதப் பல் மகாவலிகங்கைக் கரையில் சேனகவிடம் ஒப்படைக்கப்படும். கங்கைப் பாலத்தை சேனக மோட்டார் சைக்கிளில் கடந்து, பிற்பகல் மூன்று மணிக்கு நரப்பிட்டிய சந்தியை அடைந்துவிடுவான். அங்கே சீவலி தேரர் காத்திருக்க வேண்டும். புனிதப் பேழை தேரரிடம் ஒப்படைக்கப்பட்டதும், பேழையை அவர் தரித்திருக்கும் சீவர ஆடைக்குள் மறைத்துவைத்து, குண்டசாலை பவுத்த மடாலாயத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாத்து வைக்க வேண்டும். நரப்பிட்டிய சந்திக்கு பிற்பகல் 02:55 மணிக்கு சீவலி தேரர் வந்துவிட்டர். அவர் தங்கியிருக்கும் மடாலயத்திலிருந்து அய்ந்து நிமிட நடை தூரத்திலேயே அந்தச் சந்தி இருந்தது. அங்கிருக்கும் சிறிய படிப்பகத்திற்குள் வைத்துத்தான் புனிதப் பேழை கைமாற்றப்படும். சேனக துல்லியமாகக் கணித்தவாறே அந்த நேரத்தில் படிப்பகத்தில் ஒருவருமில்லை. அங்கே தனியாக உட்கார்ந்திருந்து செய்தித்தாள்களைப் புரட்டிய சீவலி தேரர் உள்ளூறப் பதற்றமுற்றிருந்தாலும், தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் ஒரு வரலாற்றுக் கடமையைச் சுமப்பதால் அவரது உள்ளத்தில் அபரிதமான கிளர்ச்சியுமிருந்தது. சேனகவின் தங்க நாவுக்குத் தான் கட்டுப்பட்டிருப்பதை அவரால் இன்னும்தான் நம்ப முடியவில்லை. புனிதப் பேழையைப் பாதுகாக்க சீவலி தேரரிடம் தெளிவான திட்டமிருந்தது. தங்கத்தால் பூஜை மணி வடிவத்தில் செய்யப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கவசக் கூட்டுக்குள்ளே வைக்கப்பட்டிருக்கும் புனிதப் பல்லிருக்கும் சிறு பேழை உள்ளங்கைக்குள் அடங்கிவிடக் கூடியதே. சீவலி தேரரின் அறைச் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் இரும்புக் கதவுள்ள புத்தக அலுமாரிக்குள் பேழையைப் பத்திரமாக வைத்துவிடலாம். அலுமாரியின் சாவியை சீவர ஆடையில் முடிச்சிட்டு எப்போதும் கூடவே வைத்துக்கொள்ளலாம். மணி மூன்றைக் கடந்த போது, தேரரின் இருதயத்திலிருந்த அரத்த தம்மசக்கரம் நின்று போயிற்று. பதற்றம் மெல்ல மெல்ல அச்சமாகி, அது கனத்த துக்கமாகித் தேரரை மூடிற்று. புனிதப் பல்லுடன் சேனக வரவேயில்லை. ஆனால், நரப்பிட்டிய சந்தியில் தேரரைச் சூழவர ஒரு செய்தி வேகமாகவும் கோபமாகவும் பரவிற்று: ‘புனிதத் தந்த தாது விகாரையை, மாறுவேடத்தில் வந்த தமிழ்ப் பயங்கரவாதிகள் தாக்கினார்கள். முதலில் அவர்கள் காவல்துறையினரில் இருவரைச் சுட்டுக் கொன்றார்கள். ஆனால், காவல்துறையினர் துரிதமாகச் செயற்பட்டு, எதிர்த் தாக்குதலை நிகழ்த்திப் பயங்கரவாதிகளில் ஓர் ஆணையும் பெண்ணையும் கொன்றுவிட்டார்கள். இன்னொரு ஆணும் பெண்ணும் காவல்துறையினரால் காயங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புனிதப் பல் பாதுகாப்பாகவேயுள்ளது.’ முதலில், அந்தச் செய்தி உண்மையாகவே இருக்கட்டும் என்றுதான் சீவலி தேரரின் மனம் விரும்பியது. இந்தத் தாக்குதலை தேசப்பிரேமியினர் செய்யாமல் தமிழர்கள் செய்திருந்தால், தன்மீதிருக்கும் மலைபோன்ற பாரம் காற்றாக வீழ்ந்துவிடும் என்பது போலத் தேரர் கற்பனை செய்தார். ஆனாலும், அவரது அறிவு முற்றாக மழுங்கிவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயமாகத் தேசப்பிரேமிகளே இந்தத் தாக்குதலைச் செய்திருப்பார்கள் என்றே அவரது அறிவு சொன்னது. மறுநாள் அதிகாலையில் சீவலி தேரர் விழித்தபோது; இன்று யாராவது, ஏதாவதொரு சேதியைத் தன்னிடம் கொண்டுவரக் கூடும் என்றொரு உள்ளுணர்வு அவரை அருட்டிப் போட்டது. செய்தித்தாளை வாங்கிப் படித்தால், நேற்றைய தாக்குதல் குறித்து ஏதாவது விபரம் தெரியும் என்று நினைத்துக்கொண்டே, ஆட்கள் நடமாட்டமற்ற அந்தப் பொழுதில் அவர் தனியராக நரப்பிட்டிய சந்திக்கு வீதியோரமாக நடந்து போய்க்கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ புறப்பட்டு வந்த சிறிய கறுப்புநிற வண்டியின் பின்புறக் கதவு திறந்துகொள்ள, சீவலி தேரர் உள்ளே இழுத்துப் போடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டார். தன்னைக் கடத்தியிருப்பது தேசப்பிரேமி இயக்கமே என்றுதான் முதலில் சீவலி தேரர் நினைத்தார். ஆனால், வாகனத்தினுள்ளே ஒலித்துக்கொண்டிருந்த தொலைத்தொடர்புக் கருவிகளின் பேச்சுச் சத்தம், அவர் அரச புலனாய்வுத்துறையினராலேயே கடத்தப்பட்டிருக்கிறார் என்பதை அவருக்கு மெல்ல மெல்லத் தெளிவுபடுத்திற்று. அக்கணத்திலேயே, புலனாய்வுத்துறையினரிடம் எதையும் மறைத்துவைத்துப் பேசக்கூடாது எனத் தேரர் மனதில் உறுதியெடுத்துக்கொண்டார். புனிதப் பல்லை மறைத்துவைக்க நினைத்ததற்கு இதுவே தகுந்த பிராயச்சித்தம் என்று அவரது மனதின் அரத்த தம்மசக்கரம் உரைத்தது. ஒருநாள் தம்மத்திலிருந்து வழுவியதற்காக, தன்னுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதும் பிராயச்சித்தம் செய்துகொண்டேயிருக்கப் போவதாகவும் அவர் பிரதிக்ஞை கொண்டார். ஆனால், புலனாய்வாளர்களுக்கு சீவலி தேரரிடமிருந்து எந்த உண்மையுமே தேவைப்படவில்லை. ஏற்கனவே மனோஹர சேனக தன்னுடைய தங்க நாக்கால் எல்லாவற்றையும் புலனாய்வுத்துறையினரிடம் வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தான். புலனாய்வுத்துறையினர் தன்னை எங்கே கடத்திச் சென்றார்கள் என்பது இப்போதுவரை சீவலி தேரருக்குத் தெரியாது. சீவலி தேரரின் கண்கட்டு அவிழ்க்கப்பட்ட போது, போறணை போன்றிருந்த ஓர் அறைக்குள் அவரிருந்தார். பாழடைந்து கிடந்த அந்த அறைக்குச் சாளரங்கள் ஏதும் கிடையாது. அறையின் மூலையில் ஒரு கோணலான மலக்குழி திறந்து கிடந்தது. அதிலிருந்து கிளம்பிய பிணநாற்றம் அறையை நிறைத்திருந்தது. கீழிருந்து வரும் வேதனைக் கூக்குரல்களை வைத்துப் பார்க்கையில், இதுவொரு மாடி அறையாகத்தான் இருக்கவேண்டும். அறையில் ஊசலாடும் மின்விளக்குக்குரிய பொத்தான் அறைக்கு உள்ளேயில்லை. அறையிலிருந்த ஒரேயொரு துருப்பிடித்த நாற்காலியில் தேரரை அமர வைத்துவிட்டுப் புலனாய்வுப் பொலிஸார் வெளியேறினார்கள். இரும்பாலான அறைக்கதவை மூடியதும், வெளியே தாழிடும் சத்தம் தேரருக்குக் கேட்டது. அடுத்த விநாடியே மின்விளக்கும் அணைந்துபோக, தேரர் மை இருளுக்குள் தோய்ந்தார். குத்தக நிகாயகமான பீடவத்துவை அவரது மனம் நினைக்கலாயிற்று. மானுடப் பிறவியில் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக, நித்திய இருளாகயிருக்கும் பேய்களது உலகில் வாழ விதிக்கப்பட்டவர்களது கதைகளைச் சொல்வது பீடவத்து. துக்கத்தைத் தவிர வேறு உணர்வுகள் சீவலி தேரரிடம் இருக்கவில்லை. துக்கம் அவரை மலைப்பாம்பு போலச் சுற்றிப்பிடித்து நொறுக்கியது. அப்போது அந்த அறையில் ஒரு பல்லி சொல்வதைத் தேரர் கேட்டார். அந்தச் சத்தம் அவரது இடதுபுறமிருந்தே வந்தது. ஆனால், அது எத்திசை என்பதைத் தேரரால் அறிய முடியாது. இன்னொரு முறை பல்லி சொன்னால் கேட்பதற்காகத் தேரர் தன்னுடைய முகத்தை இடதுபுறம் திருப்பிக் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டார். அப்போது அறைக்குள் ஒளி பிரகாசித்தது. பல்லி சுவரில் குத்தென இறங்கி, சுவரிலேயே மறைந்தும் போனது. அறைக்கதவு திறக்கப்பட்டு மறுபடியும் மூடப்பட்டபோது, கைக்குட்டையால் தனது மூக்கைப் பொத்தியவாறே புலனாய்வுத்துறை உயரதிகாரி அமரக்கூன் உள்ளே நின்றிருந்தான். கட்டான இளந்தாரியான அவனுக்கு வயது முப்பதிற்கும் குறைவாகவேயிருக்கும். சிவந்த தேகமும், இடுங்கிய கண்களும், அடர்த்தியான கம்பித் தலைமுடியும் கொண்டிருந்த அமரக்கூனில் சீன முகச் சாயலிருந்தது. தன்னெதிரே அமைதியாக நின்றுகொண்டு, தன்னுடைய கண்களையே உற்றுப் பார்க்கும் அமரக்கூனின் கண்களை நாற்காலியில் அமர்ந்தவாறே சீவலி தேரர் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார். தேரரது பார்வை அவர் எத்தகைய பிராயச்சித்தத்திற்கும் தயாராகவேயிருக்கிறார் என்பது போலிருந்தது. அமரக்கூன் தன்னுடைய ஒரேயொரு கேள்வியைக் கேட்டான்: “ஹாமத்துருவெனே! உமக்கு சுபசிங்க பளிகவர்த்தன ஆராய்சிலாகே என்ற மனிதனைத் தெரியுமா?” அந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போலத்தான் சீவலி தேரருக்குத் தோன்றியது. அந்தப் பெயரைச் சேனக தன்னிடம் சொல்லியிருப்பானோ என்று தேரர் யோசிக்கும் போதே, அமரக்கூன் சொன்னான்: “சுபசிங்க பளிகவர்த்தன ஆராய்சிலாகே என்னுடைய இரத்தவழி மூதாதை. கண்டி புனிதத் தந்த தாது விகாரையை அமைப்பதற்கு நிலம் வழங்கியவர்…” சொல்லிக்கொண்டிருக்கும் போதே தன்னுடைய வலது காலைத் தூக்கி, சீவலி தேரரின் மார்பில் அமரக்கூன் ஓங்கி மிதித்தான். நாற்காலியோடு சாய்ந்து பின்புறமாகத் தரையில் வீழ்ந்த சீவலி தேரரின் மழிக்கப்பட்ட தலை பந்து போலத் தரையில் மோதித் துள்ளியது. அமரக்கூனின் கனத்த பூட்ஸ் தேரரின் இடது மார்பில் அச்சாகப் பதிந்து போயிற்று. தன்னிடம் புலன் விசாரணை செய்வதல்ல அமரக்கூனின் நோக்கம், மாறாகத் தன்னைச் சிறுகச் சிறுகப் பழி தீர்ப்பதே அவனது நோக்கம் எனச் சில நாட்களிலேயே சீவலி தேரர் புரிந்துகொண்டார். தன்னை ஒரு சாட்சியாக அல்ல, குற்றவாளியாகக் கூட நீதிமன்றத்தில் அவன் நிறுத்தப் போவதில்லை என்பது அவருக்குத் தெளிவாகிவிட்டது. தேரர் கடத்தப்பட்டதும் எவருக்குமே தெரியாது. தேரர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் அமரக்கூனைத் தவிர வேறு யாருமே வரவும் முடியாது. சீவலி தேரருக்கு எப்போதாவது கிடைக்கும் உணவையும் நீரையும் கூட அமரக்கூனே கொண்டுவருவான். அவன் வராத நாட்களில் உபவாசம் இருப்பதைத் தவிர தேரருக்கு வேறு வழியில்லை. அமரக்கூன் எதையாவது விசாரித்துத் தொலைத்தால் கூட சீவலி தேரருக்குச் சற்று நிம்மதியாக இருக்கும். தன்னுடைய பாவத்தை அவன் முன்னே இறக்கி வைத்துவிடுவார். ஆனால், முதல் சந்திப்பில் பேசியதை விடுத்து, வேறெப்போதும் தேரரிடம் அமரக்கூன் பேசியதேயில்லை. ஆனால், ஓயாமல் உத்தரவுகளைப் பிறப்பிப்பான். ஒவ்வொரு உத்தரவும் தேரருக்குச் சிறுமையையும் வலியையும் கொண்டுவரும். அவர் அந்த அறையில் அமரக்கூனோடு வருடங்களைக் கழிக்க வேண்டியிருந்தது. அமரக்கூனின் கையால் சீவலி தேரர் வதைபட்ட இரத்தம் தெறித்துத் தெறித்து அந்த அறையின் அழுக்குச் சுவர்கள் மினுங்கும் செந்நிறமாக மாறிக்கொண்டிருந்தன. அமரக்கூனின் தடித்த தோல் இடுப்புப் பட்டியும், முள்ளுத் தடிகளும் விளாறி விளாறித் தேரரின் உடலெங்கும் ஏற்பட்ட பச்சைப் புண்களிலிருந்து வடியும் ஊனாலும் சீழாலும் தரை செம்மஞ்சள் நிறமேறிற்று. தேரர் குளிக்கவோ, மழிக்கவோ அனுமதிக்கப்படவேயில்லை. சிக்கேறிய கத்தை முடிகள் தேரரின் தோளைத் தொட்டன. முகத்தில் வளர்ந்திருந்த முடியால் முகத்தின் அரைப் பகுதி மறைந்துபோனது. முன்வாயில் சில பற்கள் தெறித்து விழுந்துவிட்டன. ஒவ்வொரு பல்லையும் அமரக்கூன் கைக்குட்டையில் சுற்றி தன்னோடு எடுத்துச் சென்றான். தேரரும் சளைத்தவரல்ல. எந்த வேளையிலும் அவர் அமரக்கூன் முன்னே கண்ணீர் விடவோ, ஓலமிடவோ செய்ததில்லை. சகிப்புத்தன்மையின் உச்சமாகயிருப்பதே அரஹந்தப் பாதை. பொளியப்படும் கருங்கல் போன்று தேரரின் துறவு மனம் சீராகச் செதுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒருநாள், சீவலி தேரர் பேசிய வார்த்தைகள் தான் அவரது நித்திய துக்கத்திற்குத் திறவுகோலாகியது. அந்த நாளுக்குப் பின்பு, துயரற்ற ஒரேயொரு விநாடிகூட சீவலி தேரருக்கு இருந்ததில்லை. அன்றைய இரவில்தான் அமரக்கூன் “இது உமக்குப் பொருத்தமற்றது” என்றவாறே முதன்முறையாக தேரரின் சீவர ஆடையைக் களையத் தொடங்கினான். அப்போதும் சலனமற்று நின்றிருந்த சீவலி தேரர் உண்மையிலேயே அமரக்கூனுக்குச் சலிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். “புனிதத் தந்த தாது ஆலயத்தில் இரண்டு பொலிஸ்காரர்களைச் சுட்டுக்கொன்ற மாவீரர் கூட்டத்தைச் சேர்ந்த நீர் என்முன்னே பட்ட மரம்போல நிற்கலாமா?” எனக் கேட்டவாறே, அமரக்கூன் சீவலி தேரரை முழு அம்மணமாக்கியபோது, தேரர் அமரக்கூனின் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னார்: “தசசீலத்தைக் கடைப்பிடிக்கும் துறவி இழப்பதற்குத் தம்மத்தைத் தவிர ஏதுமற்றவன்.” இந்த வார்த்தைகள்தான் அமரக்கூனைச் சிந்திக்க வைத்திருக்க வேண்டும். அவன் உடனேயே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான். அறைக்கதவைக் கூடத் தாழிடாமல், அவன் குதித்து மாடிப்படிகளில் ஓடிச் சென்றான். தேரர் தரையில் கிடந்த சீவர ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். இப்போது மாடிப்படிகளில் காலடியோசைகள் கேட்டன. மறுபடியும் அறைக்குள் நுழைந்த அமரக்கூன், கைகளில் விலங்கிடப்பட்ட ஒரு பெண்ணைத் தன்னோடு அழைத்து வந்திருந்தான். அந்தப் பெண்ணுக்கு இருபது வயதிருக்கும். மார்பிலிருந்து தொடைகள் வரை, நாற்றமடிக்கும் அழுக்குப் பாவாடையைக் கட்டியிருந்தாள். அவள் இயல்பிலேயே குண்டான உடல்வாகு உள்ளவளாக இருக்க வேண்டும். கைகளிலும் கால்களிலும் தசை வழிந்தது. தாடையிலும் தசை இலேசாகத் தொங்கியது. அவளது புழுத்துக்கிடந்த தலைமுடியிலிருந்து இரத்தவாடை கசிந்தது. அவளின் தடித்த உதடுகள் புண்ணாகி, அயறு படர்ந்திருந்தது. அவளது கண்கள் வியப்புடன் தேரரை நோக்கியிருந்தன. அமரக்கூன் அந்தப் பெண்ணிடம் சில வார்த்தைகளைச் சொன்னான். அவற்றில் ஒரு வார்த்தை கூட சீவலி தேரருக்குப் புரியாது. ஆனால், அமரக்கூன் தமிழில் பேசுகிறான் என்பது மட்டும் தேரருக்குத் தெரிந்தது. அந்தப் பெண் பாவாடையை அவிழ்த்துத் தரையில் நழுவவிட்டாள். சீவலி தேரர் தன்னுடைய கண்களை இறுக மூடிக்கொண்டார். இந்தக் கண்களில் அமரக்கூன் காய்ச்சிய எண்ணெயை ஊற்றினால்கூட இவை திறக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். அறைக்கதவை உள்ளிருந்து மூடும் சத்தம் கேட்டது. அமரக்கூனின் கனத்த பூட்ஸ்கள் தன்னை நெருங்கி வருவதையும் சீவலி தேரர் உணர்ந்தார். தனது மார்பில் உள்ளங்கைகளைப் பதித்தவாறே அவர் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார். தேரரை நெருங்கிய அமரக்கூன் அவரது இடதுபுறச் செவிமடலைப் பற்றியிழுத்து, தேரரின் காதுக்குள் கிசுகிசுத்தான்: “தசசீலரான துறவி சீவலி பால தேரர் இந்தப் பெட்டை நாயைத் தனது ஆண்மையால் அடக்க வேண்டும்! அந்தக் கணத்தில் சீவலி தேரரின் உள்ளத்தில் அச்சம், கோபம், பச்சாதாபம் என எந்த உணர்வும் எழவில்லை. முழுவதுமாக அவர் துக்கத்தால் மட்டுமே போர்த்தப்பட்டிருந்தார். அவர் தனது உடலை மரத்துப்போகச் செய்வதற்கு முயன்றார். தன்னையொரு காய்ந்த விறகாகக் கற்பனை செய்துகொண்டார். அப்போது அந்தப் பெண் தன்னுடைய விலங்கிடப்பட்ட கைகளைச் சீவலி தேரரின் இடது முழங்காலில் வைத்து, தமிழில் ஒரு வார்த்தையைச் சொன்னாள். தன்னுடைய முழுப் புலன்களையும் அடக்கி மரக்கட்டையாவதற்கு முயன்றுகொண்டிருந்த தேரரின் செவியில் அந்த வார்த்தை தைத்து அங்கேயே நிலைத்தது. அமரக்கூன் மறுபடியும் தேரரின் ஆடையைக் களைந்தபோது கூட, தேரர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. அவரது உடல் மரத்துக்கொண்டே வந்தது. நிர்வாணியான தேரரை இழுத்து அமரக்கூன் குப்புறப் படுக்க வைத்தபோதும் தேரர் கண்களைத் திறந்தாரில்லை. அவர் துக்கத்தின் உன்மத்தத்துள் ஆழ்ந்துகொண்டிருந்தார். சீவலி தேரர் அந்தப் பெண்ணின் மீதே படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவள் உடல் வலியால் முனகுவது தேரருக்குக் கேட்டது. அவளது முலைக் கும்பங்கள் தேரரின் ஒட்டிய வயிற்றின் கீழே சப்பளிந்து கிடந்தன. தேரர் மூளையில் தீயின் வாசனையை உணர்ந்தார். அமரக்கூனின் கண்முன்னே இரண்டு அழுக்குப் பிண்டங்கள் அசைவற்றுக் கிடந்தன. அமரக்கூன் தமிழில் ஏதோ கத்தியபோது, அந்தப் பெண் தனது சதைப்பிடிப்பான கால்களால் தேரரின் கால்களைப் பின்னிக்கொண்டாள். அவளது விலங்கிடப்பட்ட கைகள் தேரரின் நிர்வாணத்தைப் பற்றின. தேரர் சம்புத்தரைத் தியானித்து தனது மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்தார். அப்போது, அமரக்கூனின் கையிலிருந்த தடித்த தோல் இடுப்புப் பட்டி தேரரின் புட்டத்தில் சடசடவென விளாறத் தொடங்கியது. தேரர் கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டே, வலியைச் சத்தமேயில்லாமல் தாங்கிக்கொண்டார். புட்டத்தில் முதல் துளி இரத்தம் துளிர்த்தபோது, சீவலி பால தேரருக்கு விந்தும் வெளியாகியது. அந்தக் கணத்திற்குப் பின்பு அமரக்கூன் அந்த அறைக்குள் வருவதில்லை. உணவையும் நீரையும் யார் யாரோ எடுத்து வருகிறார்கள். சீவலி தேரரைக் குளிக்க வைத்து, புதிய வேட்டியும் சட்டையும் கொடுத்தார்கள். தேசப்பிரேமி இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும், சீவலி தேரர் சீக்கிரமே விடுதலை செய்யப்படலாம் என்றும் அவர்களில் ஒருவன் தேரருக்கு இரகசியமாகச் சொன்னான். அவற்றைப் பற்றியெல்லாம் சீவலி தேரர் அக்கறை கொள்வதில்லை. தன்னுடைய சிந்தனை முழுவதையும் அவர் சம்புத்தரிடமே வைத்திருந்தார். மாளாத துக்கத்தால் அவர் மூழ்கடிக்கப்பட்டிருந்தாலும், துறவு நிலையிலிருந்து தான் விலகியதாக அவர் ஒருபோதுமே கருதவில்லை. அந்தப் பெண் குறித்து இந்த முப்பது வருடங்களில் அவர் யாருடனும் பேசியதுமில்லை. அந்தப் பெண் சொன்ன வார்த்தை மட்டும் அவருடன் எப்போதுமிருந்தது. 4 மொட்டைப் பாறையில் படுத்திருந்த சீவலி தேரர் விண்மீன்களை வைத்து நேரத்தைக் கணக்கிட முயன்றார். நடுநிசி தாண்டியிருக்கலாம். கடற்காற்று அவ்வப்போது கைக்கல்லில் இருந்த அகல் விளைக்கை அணைப்பதாகவும், தேரர் திரும்பவும் விளக்கை ஏற்றுவதுமாகத் தூக்கமற்றிருந்தார். அவரது எண்ணங்கள் கட்டற்றுப் பெருகி இருளில் சிதறிக்கொண்டிருந்தன: ‘புனிதப் பல் இந்தத் தீவில் இருக்கும் வரைதான் நாட்டுக்குத் தீங்கு நேராது. நாட்டை மீண்டும் அபாயம் சூழாதவாறு, ஒவ்வொரு கடற்கரையிலும், மலையிலும், கல்லிலும், மரத்திலும், தெருவிலும் சம்புத்தரை வைக்க வேண்டும். நான் இங்கு இருக்கும்வரை, இதோ இந்தச் சம்புத்தர் சிலையில் கை வைக்க யாருக்கும் துணிவு வராது. சீக்கிரமே இங்கேயொரு சிறிய பன்சாலையைக் கட்டி எழுப்பிவிட வேண்டும். அதற்கான வழியை இப்போது நான் அறியமாட்டேன்…’ கூவென வந்த காற்று இன்னொருமுறை விளக்கை அணைத்துத் திரும்பியது. சீவலி தேரர் இருளில் தடுமாறி நடந்து சென்று, திரும்பவும் அகல் விளக்கை ஏற்றிய போது, கைக்கல்லில் பதிந்துள்ள விரல் குழியில் ஒரு பல்லி ஒட்டியிருப்பதைப் பார்த்தார். பல்லி இருப்பது தென்மேற்குத் திசையென தேரர் கணித்தார். அவர் கையில் விளக்கோடு பல்லியை நோக்கி மெல்லக் குனிந்தார். தென்மேற்குத் திசையிலிருந்து பல்லி சொன்னால், எடுத்த கருமம் நிறைவேறும் என்று பலன் என்பதைத் தேரர் அறிவார். அவர் பல்லி சொல்வதற்காகக் காதுகளைக் குவித்துக் காத்திருந்தார். அந்தப் பல்லியோ ஒன்றும் சொல்லாமலும், அசையாமலும் அங்கேயே சித்திரம் போல ஒட்டிக்கொண்டிருந்தது. சீவலி பால தேரர் பல்லிக்கு நெருக்கமாக விளக்கை எடுத்துச்சென்று “ஒரேயொரு சத்தமெழுப்பு! இலங்கைத் தீவு முழுவதற்கும் உனக்கு அரசுரிமை அளிக்கிறேன்” என்றார். (நீலம் – டிசம்பர் 2022 இதழில் வெளியானது) https://www.shobasakthi.com/shobasakthi/2023/02/02/பல்லிராஜா/?fbclid=IwAR3mHFfC0S4jp_t0B4aFda6XDdRb5E3bmIbcVatpUrY1u6_a4vw4lS-qGLM
  5. ONE WAY – ஷோபாசக்தி அய்ரோப்பாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழருக்கு இலங்கையிலிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே, அது மரணச் செய்தியை மட்டுமே கொண்டுவரும் என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. அதனாலேயே, நான் இரவில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணங்களைத் தள்ளிப்போடுவதற்காக, நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வது போல, மாந்திரீகத்தின் மூலம் கழிப்புக் கழிப்பது போல, அலைபேசியை அணைத்து வைப்பதும் மரணத்தைத் தடுத்துவிடும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக, ஒரேயொரு இரவில் நான் அலைபேசியை அணைத்து வைக்க மறந்து தூங்கிவிட்டேன். அதிகாலை நான்கு மணிக்கு என்னை அலைபேசி அலறி எழுப்பி, அப்பாவின் மரணச் செய்தியை எனக்குச் சொல்லிற்று. என்னுடைய அப்பா கொஞ்சம் கோணல் புத்திக்காரர். அப்பாவித்தனத்தால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள என்னுடைய அம்மா, ஒரு கிறுக்குத் தீவிரவாதியிடம் சிக்கிக்கொண்ட பணயக் கைதியைப் போலத்தான் அப்பாவிடம் சிக்கியிருந்தார். ஆனால், நான் அப்பாவை இலேசாக முறைத்தாலோ, வார்த்தையைச் சிதற விட்டாலோ அப்பாவுக்கு ஏவம் கேட்டு அம்மா என்னுடன் சண்டைக்கே வந்துவிடுவார். தன்னுடைய கணவர் ஓர் அருமையான புத்திசாலி, சுத்த வீரர் என்றெல்லாம் சொல்லி அம்மா என்னை எச்சரிப்பார். அவர்களுக்குக் கல்யாணமான புதிதில், அம்மாவை ‘அன்பே வா’ திரைப்படம் பார்ப்பதற்காக அப்பா அழைத்துப் போயிருக்கிறார். இடைவேளையின் போது, திரையரங்கில் இருந்த ஒரு வாலிபன் அம்மாவைப் பார்த்துச் சிரித்திருக்கிறான். அவன் தன்னுடன் பள்ளிக்கூடத்தில் அய்ந்தாம் வகுப்பு வரை – அம்மா அவ்வளவுதான் படித்திருக்கிறார் – ஒன்றாகக் கற்றவன் என்பதால் அம்மாவும் பதிலுக்குப் புன்னகைத்திருக்கிறார். இதைக் கவனித்த அப்பா உடனேயே அம்மாவைத் திரையரங்கை விட்டு வெளியே அழைத்துச் சென்று, நடுவீதியில் வைத்து அம்மாவின் கன்னத்தைப் பொத்தி அறைந்துவிட்டு “யாரடி அவன்?” என்று கேட்டிருக்கிறார். அத்தோடு முடிந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. ஆனால், எண்பத்தொரு வயதில் அப்பா இறந்துபோவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகக் கூட, அம்மாவின் கன்னத்தில் அறைந்துவிட்டு “யாரடி அவன் உன்னைத் தியேட்டரில் பார்த்து இளித்தவன்?” என்று கேட்டிருக்கிறார். தொடர்ந்து அய்ம்பது வருடங்களாக தோன்றும் போதெல்லாம் அப்பா இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டேயிருந்திருக்கிறார். கோணல் புத்தியிருந்தாலும் அப்பா காரியக்காரர் என்பதில் மறுப்பில்லை. புகையிலைத் தரகு வியாபாரத்தில் அவர் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமாக அலைந்து திரிந்து, கொஞ்சம் கொஞ்சமாக எங்களது குடும்பத்தின் பொருளாதார நிலைமையைத் தூக்கி நிறுத்தினார். அவர் தரகு வியாபாரத்தில் சில மோசடிகளையும் செய்வார் எனப் பேச்சுண்டு. சில வழக்குகள் எங்களது வீடு தேடியே வந்துள்ளன. ஊருக்கு நடுவில் ஒரு பென்னம் பெரிய வெறுங் காணியை வாங்கி, அதைத் தென்னஞ்சோலையாக்கி, ஒரு வீட்டையும் கட்டியுள்ளார். முதலில் பிறந்தது நான்குமே பெண் குழந்தைகள் என்பதால், அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதற்காகக் கட்டுச்செட்டாகப் பணத்தைச் சேமித்து வைத்திருந்தார். அப்பாவின் முயற்சியோடு, எனது நான்கு அக்காமாருக்கும் அம்மாவின் அழகும் இயற்கையாகவே கிடைத்திருந்ததால், வெளிநாட்டு மாப்பிள்ளைகள் அக்காக்களைக் கொத்திக்கொண்டு போய்விட்டனர். முதலாவது அக்காவான திலகா பிரான்ஸுக்குப் போனதும், அவரது ஏற்பாட்டில் இரண்டாவது அக்காவான ரோகிணிக்கு மாப்பிள்ளை அமைந்தது. அக்காவை வழியனுப்பும் கொண்டாட்டத்தில் வீடே திளைத்திருந்தபோது தான், நான் சொல்லாமற்கொள்ளாமல் இயக்கத்திற்கு ஓடிப்போய், கொண்டாட்ட வீட்டை இழவு வீடு போல மாற்றிவிட்டேன். என்னுடைய அந்தச் செயலை அப்பா ஒருபோதும் மன்னிக்கவேயில்லை. கடைசி அக்காவான வேணி கல்யாணத்திற்காகப் பிரான்ஸுக்குக் கிளம்பியபோது, நான் சிறையில் இருந்தேன். வேணி அக்கா விமானம் ஏறுவதற்கு முன்பாக, அம்மாவோடு மகசீன் சிறைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டே போனார். அப்போதெல்லாம் என்றாவது ஒருநாள் நான் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவேன் என்று நானே நம்பவில்லை. எனக்கு எப்படியும் முப்பது வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். அதுதான் அப்பா கோணல் புத்திக்காரரென்று சொன்னேனே… அவர் ஒரு தடவை கூட என்னைச் சிறையில் வந்து பார்க்கவில்லை. அம்மா தான் ஊரிலிருந்து யாராவது ஓர் உறவினரைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு, அவ்வப்போது வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவார். அம்மா தன்னை வருத்திப் பிடித்த விரதங்களாலோ, கோயில் கோயிலாக வைத்த நேர்த்தியாலோ என்னவோ நான் சிறையிலிருந்து ஏழு வருடங்களிலேயே விடுதலையாகிவிட்டேன். வெளியே வந்ததும், பிரான்ஸிலிருந்த நான்கு அக்காமார்களும் ஆளுக்கொரு பங்கு பணம் போட்டு, பயண முகவர் மூலம் என்னைப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொண்டார்கள். நான் இங்கே வந்ததும், அவர்கள் ஒரே குரலில் எனக்கு ஒன்றைச் சொன்னார்கள்: “தம்பி! நாங்கள் உன்னுடைய வழக்குக்காக ஏழு வருடங்களாகப் பணம் செலவு செய்திருக்கிறோம். உன்னை இப்போது வெளிநாட்டுக்கும் அழைத்துவிட்டோம். அந்தப் பணத்தையெல்லாம் நாங்கள் உன்னிடம் திருப்பிக் கேட்கப் போவதில்லை. ஆனால், இனி அம்மாவையும் அப்பாவையும் கவனித்துக்கொள்வது உன்னுடைய பொறுப்பு.” நான் இயக்கமும் போராட்டமும் கசந்து போய்த்தான், என்னுடைய இருபத்தேழாவது வயதில் பிரான்ஸுக்கு வந்தேன். நான் சிறையிலிருந்த காலத்தில் இயக்கம் என்னை முழுமையாகக் கைவிட்டிருந்தது. என்னுடைய குடும்பமே என்னைக் காப்பாற்றிச் சிறையிலிருந்து மீட்டது. என்னுடைய மிகுதிக் காலத்தைக் குடும்பத்தின் நன்மைக்காகச் செலவழிப்பது என்ற எண்ணத்தோடு, நான் கடுமையாக உழைத்தேன். நான் பிரான்ஸுக்கு வந்து அய்ந்து வருடங்களான போது, பயண முகவர் மூலம் அம்மாவையும் அப்பாவையும் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ளுமளவிற்கு என்னிடம் பணம் சேர்ந்திருந்தது. அம்மாவையும் அப்பாவையும் அழைப்பதில் என்னுடைய அக்காமார்களும் ஆர்வமாகயிருந்தார்கள். ஆனால், கோணல் புத்திக்காரரான என்னுடைய அப்பா வெளிநாட்டுக்கு வர மறுத்துவிட்டார். “என்னால் உங்களைப் போல அகதியாக மானம் கெட்டு வாழ முடியாது. வேண்டுமானால் அம்மாவைக் கூப்பிட்டுக்கொள்ளுங்கள்!” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். அப்பாவைத் தனியே விட்டுவிட்டு அம்மா வரமாட்டார் என்பதை விளக்கத் தேவையில்லை. அவர்களை அழைப்பதற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தில்தான், என்னுடைய மச்சாள் முறையான செவ்வந்தியை இலங்கையிலிருந்து பயண முகவர் மூலம் பிரான்ஸுக்கு வரவழைத்துத் திருமணம் செய்துகொண்டேன். என்னுடைய முழு வாழ்க்கையிலும் நான் செய்த ஒரேயொரு புத்திசாலித்தனமான செயல் அதுதான். கல்யாணங்களின் போது ‘இன்பங்களிலும் துன்பங்களிலும் ஒருவரையொருவர் பிரியோம்’ எனச் சாட்டுக்கு உறுதிமொழி எடுப்பார்கள். ஆனால், செவ்வந்தி மச்சாள் அந்த உறுதிமொழியை இப்போதுவரை தீவிரமாகக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள். அப்பா இறந்த போது, தூரத்து உறவினர் தான் அப்பாவுக்குக் கொள்ளி வைக்க வேண்டியதாகப் போய்விட்டது. கொள்ளியிட உரித்துள்ள நானும், அக்காக்களும் பிரான்ஸில் அகதி நிலையில் வசிப்பதால் எங்களிடம் இலங்கைக் கடவுச்சீட்டுக் கிடையாது. எங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் வழங்கியிருக்கும் அகதிகளுக்கான கடவுச்சீட்டில் <இலங்கைக்குப் பயணம் செய்ய அனுமதியில்லை> என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அய்ந்து பிள்ளைகளைப் பெற்றும் அப்பா பிள்ளைகுட்டி இல்லாதவரைப் போல அநாதையாக இறந்துவிட்டார். அம்மாவுக்கு இப்போது எண்பது வயதாகிவிட்டது. முதுமையின் கனியாகிய நோய்கள் அவரில் பூரணமாகப் படர்ந்திருந்தன. அப்பாவுக்கு ஏற்பட்ட கதிதான் அம்மாவுக்கும் ஏற்படும் என்ற பதற்றத்திலேயே நான் இரவுகளில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தேன். ஆனால், பகலிலும் எனக்கொரு கெட்ட சேதி வந்தது. சமையலறைப் பானைக்குள் மறைந்திருந்த பாம்பு அம்மாவைத் தீண்டியதால், அவர் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று பெரியக்கா எனக்கு அலைபேசியில் சொன்னதும், நான் உடனேயே அம்மாவின் அலைபேசிக்கு அழைத்தேன். அம்மா ஆஸ்பத்திரியிலிருந்து என்னிடம் பேசிய முதல் விஷயமே, தன்னை உடனடியாகப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகயிருந்தது. அப்பா தவறிப் போன சில நாட்களிலேயே, பிள்ளைகள் நாங்களும் இதுபற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தோம். ஆனால், அம்மாவை பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் அது யோசனை அளவிலேயே நின்றுவிட்டது. இப்போது அம்மா அவராகவே வாய்விட்டுக் கேட்டுவிட்டார். அந்த நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிச் சொன்னால் உங்களாலேயே சரிவரப் புரிந்துகொள்ள முடியாத போது, படிப்பறிவற்ற, உலகமறியாத என்னுடைய அம்மா எப்படிப் புரிந்துகொள்வார் சொல்லுங்கள்! அகதிகளான நாங்கள் ‘ஸ்பொன்ஸர்’ செய்து அம்மாவை அழைக்க முடியாது. பயண முகவர் மூலம் அம்மாவைச் சட்டவிரோதமான வழிகளில் தான் பிரான்ஸுக்கு வரழைக்க முடியும். அதைத் தவிர வேறெந்த வழியும் எங்கள் முன் கிடையவே கிடையாது. ஆனால், இந்த வயதில் அம்மாவை எப்படி ஒரு சட்டவிரோதப் பயணத்திற்குள் நாங்கள் தள்ளிவிட முடியும். அந்தப் பயணத்தில் பல பனிப்பாலைகளையும் குளிராறுகளையும் கால்நடையாகவே கடக்க வேண்டியிருக்கும் அல்லது ஏதாவது ஒரு திருட்டுக் கடவுச்சீட்டிலோ, போலி விசாவிலோ அம்மா ஆகாய மார்க்கமாகப் பயணிக்க வேண்டியிருக்கும். வழியில் ஏதாவது ஒரு விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால் சிறையில் போட்டுவிடுவார்கள். பெரியக்காவின் கணவர் ஒரு யோசனையைச் சொன்னார். ஒருமுறை சுற்றுலா விசாவுக்கு முயற்சித்துப் பார்க்கலாம். கிடைத்துவிட்டால், அம்மா பிரான்ஸுக்கு வந்ததும் இங்கே அகதியாகப் பதிவு செய்துவிடலாம். அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முழுவதுமாக என்னிடமே கொடுக்கப்பட்டிருந்ததால், நான்தான் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தேன். அம்மா ஒரளவு உடல்நலம் தேறியதும், அவருக்குத் தெரிந்த ஒருவரின் உதவியோடு கொழும்புக்குச் சென்று, பிரஞ்சுத் தூதரகத்தில் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தார். நேர்முக விசாரணையில் தூதரக அதிகாரி ஒரேயொரு கேள்விதான் கேட்டாராம்: “நீங்கள் முதியவராக இருக்கிறீர்கள். உங்களை அலையவைக்க நான் விரும்பவில்லை. உங்களுக்கு மூன்று மாதங்கள் விசா வழங்கிவிடலாம். ஆனால், மூன்று மாதங்கள் முடிந்ததும் நீங்கள் மறுபடியும் இலங்கைக்குத் திரும்பி வருவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” நான் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தேன். எனவே நேர்முக விசாரணைக்கு முன்பாகவே, நான் அம்மாவை இது விஷயமாக எச்சரித்திருந்தேன். எனவே அம்மா தூதரக அதிகாரியின் கேள்விக்குப் பதிலாக “ஊரில் நிலமும் வீடும் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு நான் பிரான்ஸிலேயே தங்கிவிடமாட்டேன்” என்றிருக்கிறார். அதற்கு அந்த அதிகாரி “யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏராளமான நிலங்களும், வீடுகளும் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றின் உரிமையாளர்கள் அய்ரோப்பாவுக்கும் கனடாவுக்கும் சென்றுவிட்டுத் திரும்பி வரவேயில்லை” எனச் சொல்லிவிட்டு, அம்மாவின் விசா விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார். அந்த நிராகரிப்பு எனக்கு அம்மா மீதுதான் கோபத்தைக் கிளப்பிவிட்டது. பதினைந்து வருடங்களுக்கு முன்பே, நான் அழைத்தபோது அம்மாவும் அப்பாவும் கிளம்பி இங்கே வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சட்டவிரோதப் பயண முகவர் மூலம் பயணம் செய்யுமளவுக்கு அப்போது அம்மாவுக்குத் தெம்பிருந்தது. இங்கே வரும் வழிகளும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. நிறையச் சனங்கள் பயண முகவர்கள் ஏற்பாடு செய்துகொடுத்த போலி விசாக்களோடு கொழும்பில் விமானம் ஏறி, பாரிஸ் விமான நிலையத்தில் இறங்கி அகதித் தஞ்சம் கேட்டார்கள். அது இலங்கையில் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலம் என்பதால், இலங்கையிலிருந்து வரும் அகதிகளைப் பெரிய கெடுபிடிகளில்லாமல் பிரான்ஸ் ஏற்றுக்கொண்டிருந்தது. இப்போதோ அங்கே போரும் முடிந்துவிட்டது. அம்மாவும் பழுத்து முதுமையடைந்து நோயாளியாகிவிட்டார். ஒருநாளைக்குப் பன்னிரண்டு மாத்திரைகளைச் சாப்பிடுகிறார். பிரான்ஸின் பனிக்குள்ளும் குளிருக்குள்ளும் இன்னும் எத்தனை வருடம்தான் அவர் சீவித்துவிடுவார்? வெட்ட வெட்டத் தழைக்கும் வாழைமரத்தைக் கொண்டுவந்து நட்டால் கூட அது இந்தக் காலநிலையில் செத்துவிடுகிறதே. இலங்கையின் வெயிலும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையும் அம்மாவுக்கு அதிக ஆயுளைக் கொடுக்கக்கூடும். இயலாமையால் என்னுள் எழுந்த தாழ்வுணர்ச்சியை விரட்டுவதற்காக, நான் இப்படிக் காரணங்களை வலிந்து தேடிக் கோபப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், பிரான்ஸுக்கு வந்தே தீருவது என்பதில் அம்மா மிக உறுதியாகயிருந்தார். அதற்காக அவர் சொன்ன காரணங்களில் ஏதொன்றையும் என்னால் மறுத்துப் பேசிவிடவே முடியாது. “கவனமாகக் கேள் தம்பி! இந்த ஊர் காடாகி வருடங்களாகிவிட்டன. பாம்பும், பூரானும், விசர் நாய்களும்தான் இங்கே நாட்டாமை. ஊரில் பத்து வீடுகளைத் தவிர எல்லா வீடுகளும் பாழடைந்து கிடக்கின்றன. யுத்தத்தின் போது, இங்கிருந்து தப்பிச் சென்றவர்கள் ஊருக்குத் திரும்பி வரவேயில்லை. எங்களுடைய வீட்டைச் சுற்றி அரைக் கிலோமீற்றர் தூரத்திற்கு யாருமேயில்லை. மின்சாரம் இரவில் வராமல் பகலில் மட்டுமே எப்போதாவது வருகிறது. இந்த வீட்டில் நோயாளிக் கிழவியான நான் எப்படித் தனித்திருக்க முடியும்? கிழக்குத் தெருவில் என்னைப் போலவே தனியாக வசித்துவந்த கிழவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். செய்தது கொள்ளையர்களா? ஆவா குறூப்பா? ஆர்மியா? நேவியா? என்று யாருக்குமே தெரியாது. கிழக்குத் தெருவுக்கும் மேற்குத் தெருவுக்கும் பெரிய தூரமா என்ன? எப்போது வேண்டுமானாலும் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.” “அம்மா…நீங்கள் கொஞ்ச நாட்களுக்கு சொந்தக்காரர்கள் யாருடைய வீட்டிலாவது போய் இருக்கலாமே?” “யார் வீட்டுக்குப் போவது? உன்னுடைய அப்பா எல்லோருடனும் பகையைத் தேடி வைத்துவிட்டுத்தானே போயிருக்கிறார். ஆனால் ஒன்று… அவராகச் சண்டையை ஒருபோதும் தொடக்கியதில்லை. சரி… இப்போது நான் போய் யாராவது சொந்தக்காரர்களோடு இருந்தாலும், அவர்கள் என்னை நன்றாக வைத்துப் பார்ப்பார்களா? என்னிடம் காசு பிடுங்கத்தான் பார்ப்பார்கள். தம்பி! இது நீயிருந்த இலங்கையில்லை. எல்லோருமே வெளிநாட்டுப் பணத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். “இப்போது இங்கே வருவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது அம்மா. சட்டங்களை இறுக்கிவிட்டார்கள்… உங்களுக்கும் வயதாகிவிட்டது.” “அதெல்லாம் ஒன்றுமில்லை. சென்ற மாதம்தானே செல்லையாவின் பெண்சாதியைப் பிள்ளைகள் கனடாவுக்குக் கூப்பிட்டார்கள். அவள் எனக்கு இரண்டு வயது மூப்பு. மனுசி சக்கர நாற்காலியில்தான் உலாவியது. எனக்கு இன்னும் இரண்டு கால்களிலும் தெம்புள்ளது. நான்தான் தனியாகக் கிணற்றில் தண்ணீர் அள்ளுகிறேன், வளவில் தேங்காய் பொறுக்கி வைக்கிறேன், மழை வெள்ளம் வீட்டுக்குள் ஏறும்போது, நான்தான் தனியாகவே சிரட்டையால் அள்ளி அள்ளித் தண்ணீரை வெளியேற்றுகிறேன். பஸ் பிடித்துப் பத்து மைல்கள் பயணம் செய்து பெரியாஸ்பத்திரிக்குப் போகிறேன். ஆனால், இன்னும் எத்தனை காலத்திற்கு என்னால் இப்படித் தனியாக இருக்க முடியும் தம்பி? எனக்குப் பதினைந்து பேரப் பிள்ளைகள்! ஒருவரது முகத்தைக் கூடத் தொட்டுப் பார்க்காமல் நான் செத்துப்போனால், என்னுடைய உடம்பு தான் வேகுமா? எனக்குக் கொள்ளி வைக்க நீ தான் வருவாயா?” அக்காமார்கள் முழுவதுமாக அம்மாவின் பக்கமே நின்றார்கள்: “தம்பி! அம்மா இதுவரை எங்களிடம் பணம் அனுப்பு என்று ஒரு ஈரோ கூடக் கேட்டதில்லையே. நாங்களாக அனுப்பும் பணத்தைக்கூட அவர் தாராளமாகச் செலவு செய்து அனுபவிக்காமல், சிக்கனமாகச் சேர்த்துத்தான் வைத்திருக்கிறார். அவருடைய கடைசிக்கால விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், நாங்கள் அவருக்குப் பிள்ளைகளாக இருக்கத் தகுதியற்றவர்கள். தம்பி… உன்னிடம் பணம் போதாமலிருக்கிறது என்றால் நாங்களும் தருகிறோம். அம்மா வந்ததும் நீ தான் அவரை வைத்துப் பராமரிக்க நேரிடும் என்று தயங்காதே. நாங்கள் நான்கு பெண் பிள்ளைகள் இருக்க, மருமகளின் பொறுப்பில் அவரை விட்டுவிட மாட்டோம்.” அம்மாவை வரவழைப்பதற்கு நான்தான் ஏதோ முட்டுக்கட்டை போடுகிறேன் என்பது போலவே அக்காமார்கள் பேசியது எனக்கு இன்னும் கோபத்தைக் கூட்டியது. அந்த ஆத்திரத்தில் அன்றைக்கே ஒரு பயண முகவரைத் தேட ஆரம்பித்தேன். என்னுடன் இயற்கை உணவு அங்காடியில் வேலை செய்யும் கைலாசநாதன் உதவிக்கு வந்தார். அவரது நண்பரொருவர் கொழும்பில் பயண முகவராகயிருக்கிறார் என்று சொல்லித் தொலைபேசியில் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த ஏஜெண்ட் கேட்ட தொகை மிக அதிகம் என்றாலும், நான் ஒப்புக்கொண்டேன். விமானப் பயணம்தான். ஏஜெண்டுக்கு முதலில் பாதிப் பணத்தைச் செலுத்துவதென்றும், அம்மா பிரான்ஸ் வந்து இறங்கியதும் மீதிப் பணத்தைக் கொடுப்பதென்றும் பேசிக்கொண்டோம். அக்காமார்களிடம் செப்புச் சல்லி வாங்கவும் நான் விரும்பவில்லை. என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையெல்லாம் வழித்துத் துடைத்துப் பாதித் தொகையை ஏஜெண்டுக்குச் செலுத்தினேன். மீதித் தொகையைக் கட்டுவதற்கு செவ்வந்தியின் நகைகள் இருக்கின்றன. பணம் கிடைத்ததும், ஒரே வாரத்தில், அம்மாவை டெல்லிக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் அங்கிருந்து அம்மாவைப் பாரிஸுக்கு அனுப்ப ஓர் இந்தியக் கடவுச்சீட்டைத் தயார் செய்தான். டெல்லியிலிருந்து பிரான்ஸுக்கு வரும் முதியவர்களால் நிரம்பப்பெற்ற சுற்றாலாக் குழுவுக்கு நடுவில் அம்மாவைத் தந்திரமாகக் கலந்துவிட்டான். இந்தத் தந்திரத்தை மிகப் பழமையானதும் எளிமையானதுமான மறு தந்திரத்தால் டெல்லி விமான நிலைய அதிகாரிகள் உடைத்துவிட்டார்கள். அவர்கள் அம்மாவிடம் ஒன்று…இரண்டு…மூன்று எனப் பத்துவரை விரல்விட்டு எண்ணிக் காட்டுமாறு கேட்டிருக்கிறார்கள். அம்மாவும் விரல்களை ஒவ்வொன்றாக மடக்கி எண்ணிக் காட்டியிருக்கிறார். இந்தியர்கள் இப்படி எண்ணும் போது, எங்களைப் போல விரல்களை ஒவ்வொன்றாக மடக்காமல், விரல்களை ஒவ்வொன்றாக விரித்தே எண்ணுவார்களாம். எனவே அம்மா இந்தியரல்ல என்பதை அதிகாரிகள் சுளுவாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். அம்மாவை டெல்லியிலுள்ள குடிவரவுச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற தகவலை ஏஜெண்ட் தயக்கத்தோடு தொலைபேசியில் என்னிடம் சொன்னபோது, நான் படு தூஷணத்தால் அவனைத் திட்டித் தீர்த்தேன். எண்பது வயது மூதாட்டியொருவர் மொழி தெரியாத நாட்டில், சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு என்னைவிட அதிக ஆத்திரம் ஏற்படுகிறதா இல்லையா! அம்மா சிறையிலிருக்கும் செய்தியை நான் அக்காமார்களிடம் மறைத்துவிட்டேன். அவர்களால் இந்தச் செய்தியைத் தாங்கவே முடியாது. அவர்களது துக்கமெல்லாம், நான்தான் பயண ஏற்பாட்டில் கவனமின்றித் தவறிழைத்துவிட்டேன் என்பது போல என்மீதே கோபமாகத் திரும்பும். என்னுடைய மொத்தக் கோபமும் அந்த முட்டாள் ஏஜெண்டை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த கைலாசநாதன் மீது திரும்பியது. அவர் எனக்கு உதவி செய்ய முன்வந்ததால், என்னிடம் தும்பு பறக்க ஏச்சு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் இனிமையான குணமுள்ள அந்த மனிதர் என்னுடைய கவலையையும் கோபத்தையும் புரிந்துகொண்டு, முட்டாள் ஏஜெண்டைப் பாடாகப் படுத்தி, அம்மாவை அய்ந்தே நாட்களில் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்துவிட்டார். அம்மா சிறையிலிருந்து வெளியே வந்து, தொலைபேசி வழியாக என்னிடம் பேசும் போது, நான் உண்மையிலேயே குழறி அழுதுவிட்டேன். முட்டாள் ஏஜெண்ட் மறுபடியும் ஒரு முயற்சியை மும்பை விமான நிலையம் வழியாக எடுப்பதாகச் சொன்னான். “ஒரு மயிரும் வேண்டாம்! அம்மாவைப் பத்திரமாக ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்” என்றேன். அப்படியானால் தனக்குக் கொடுத்த பாதிப் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்றான். “வேண்டாம்… அது எனக்கு வேண்டாம்! அம்மாவைப் பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் சென்றால் போதும்” எனச் சொல்லிவிட்டேன். அடுத்த வாரம், அம்மா இலங்கையிலிருந்து தொலைபேசியில் அழைத்துப் பேசினார்: “தம்பி! இந்தியா வழியாக வருவது கொஞ்சம் கஷ்டம் போலல்லவா இருக்கிறது… இப்போது உக்ரேன் வழியாகத் தான் சனங்கள் பிரான்ஸுக்கு வருவதாக தொலைக்காட்சியில் சொல்கிறார்கள்…” “அம்மா… அங்கே கடுமையான சண்டை நடந்துகொண்டிருக்கிறது” என்றேன். “அது பரவாயில்லைத் தம்பி… நான் பார்க்காத சண்டையா! நீ வீணாகப் பயப்படாதே! நாளைக்கே சாகப்போகிற கிழவியான என்னை அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்றார் அம்மா. அம்மா ஒவ்வொரு நாளுமே எங்கள் எல்லோரையும் வாட்ஸப்பில் கூப்பிட்டுப் பேசிக்கொண்டேயிருந்தார். தன்னால் ஒரு நிமிடம் கூட இலங்கையில் இருக்க முடியாது என்று திரும்பத் திரும்பச் சொன்னார். “காசு பணம் இருந்து என்ன பலன்? சாப்பாட்டுச் சாமான்கள் எதுவும் கிடைப்பதில்லையே! சனங்கள் இங்கே பஞ்சத்தில் சாகப் போகிறார்கள். சீனாக்காரன் கொடுக்கும் அரிசிப் பசையையும், குப்பையில் விளையும் கீரையையும் சாப்பிட்டே இங்கே வாழ வேண்டியிருக்கிறது” என்றார். இதைக் கேட்ட பின்பும் நிம்மதியாக ஒருபிடி சோறு தின்பதற்குப் பிள்ளைகளான எங்களுக்கு எப்படி மனம் வரும்! எனக்கு அங்காடியில் வேலை ஓடவேயில்லை. அம்மாவைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். நிராசையால் ஏங்கியே என்னுடைய அம்மா அநாதையாகச் செத்துவிடுவாரா என்றெல்லாம் யோசித்து எனது தலை கொதித்துக்கொண்டிருந்தது. நான் தட்டுத் தடுமாறிக்கொண்டிருப்பதை யூதரான முதலாளி கவனித்துக்கொண்டிருந்தார். என்னைக் கூப்பிட்டு, ஒலிம்ப் அம்மையாரிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாகச் சொல்லி, அம்மையார் கேட்டிருக்கும் இயற்கை உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று, அவரது வீட்டில் கொடுத்துவிட்டு வருமாறு சொன்னார். நான் பட்டியலிலுள்ள பொருட்களை எடுத்துத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிவாறே ஒலிம்ப் அம்மையாரின் வீட்டை நோக்கி நடந்தேன். அங்கே போவதென்றாலே என்னிடம் ஓர் உற்சாகம் ஒட்டிக்கொள்ளும். இப்போது உற்சாகம் ஏற்படவில்லை என்றாலும் மனதிற்குச் சற்று ஆறுதலாகவேயிருந்தது. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பாக, இந்த யூதரின் அங்காடியில் வேலைக்குச் சேர்ந்த போது, என்னுடைய முதல் வேலையே ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குப் பொருட்களைத் தள்ளுவண்டியில் எடுத்துச் செல்வதாகவே இருந்தது. அவரது வீடு அதிக தூரத்திலில்லை. நான் வேலைக்கு வந்து இறங்கும் ட்ராம் தரிப்பிடத்திற்கு, எதிரேயிருந்த சிறிய காணித் துண்டிலேயே அவரது பழமை வாய்ந்த வீடு இருந்தது. பிரஞ்சு – கோர்ஸிகா பெற்றோருக்குப் பிறந்த ஒலிம்ப் அம்மையாருக்குக் கிட்டத்தட்ட என்னுடைய அம்மாவின் வயதுதான் இருக்கும். அம்மாவைப் போலவே இவரும் தனிமையிலேயே வசிக்கிறார். சராசரி உயரம் உள்ளவர் என்றாலும், அவரது முதுகில் பெரிதாகக் கூன் விழுந்திருப்பதால், சிறிது குள்ளமாகத் தோற்றமளிப்பார். முகத்தில் இலேசாகத் தாடி மீசை அரும்பியிருக்கும். உச்சந்தலையில் சிறிதளவு வழுக்கையுமுண்டு. ஒலிம்ப் அம்மையார் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. உளவியலில் பட்டப் படிப்புப் படித்தவராம். அவரது வீடு முழுவதும் கருப்பு அட்டை போட்ட தடிமனான புத்தகங்கள் எல்லா இடங்களிலுமே அடுக்கப்பட்டிருக்கும். நான் ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குச் சென்ற முதல் நாளிலேயே, அம்மையார் தன்னுடைய சாம்பல் நிறச் சிறிய கண்கள் ஒளிர என்னைப் பார்த்துவிட்டு, வீட்டினுள்ளே அழைத்து உட்காரவைத்துப் பேசினார். “அழகிய இளைய மனிதனே! நீ ஸ்ரீலங்கனா?” “ஆம்… அம்மா” என்றேன். அதன் பின்பு, நான் அங்கே பொருட்களை விநியோகிக்கப் போய்வரும் போதெல்லாம் ஒலிம்ப் அம்மையார் என்னிடம் சிறுகச் சிறுகச் சொல்லியது இவைதான்: “அதுதான் மகனே! அப்போது இரண்டாம் உலகப் போர் முடிந்து சில வருடங்களே ஆகியிருந்தன. பிரான்ஸ் நாசிப் படையிடமிருந்து விடுதலை பெற்றுச் செழிக்கத் தொடங்கிய காலம். அப்போதும் எங்களது குடும்பம் இந்த வீட்டில்தான் வசித்தது. என்னுடைய அப்பா போரில் இறந்துபோயிருந்தார். அம்மா முரடனான ஒரு கிரேக்கனைச் சிநேகிதம் செய்துகொண்டார். அப்போது எனக்குப் பதின்மூன்று வயது. எங்கிருந்து வந்ததெனத் தெரியாத ஓர் இலங்கைக் குடும்பம் இந்த ஊரில் குடியேறியது. அந்தக் குடும்பம் சிங்களக் குடும்பமா? தமிழ்க் குடும்பமா? அல்லது கலப்புக் குடும்பமா? என்பது கூட எனக்குத் தெரியாது. அந்தக் குடும்பத்தில் என்னுடைய வயதையொத்த ஒரு பையன் இருந்தான். அவன் எங்களுடைய பாடசாலையில்தான் தான் சேர்க்கப்பட்டான். அவனுக்கு ஆரம்பத்தில் ஒரு பிரஞ்சு வார்த்தை கூடத் தெரியாது. ஆனால், போர்த்துக்கேய மொழியை ஓரளவு பேசுவான். நானும் அதை ஓரளவு புரிந்துகொள்வேன். அவனுடைய பெயர் தோமஸ். நான் சீக்கிரமே வெட்க சுபாவமுள்ள அந்தக் கறுப்பு அழகனிடம் காதல் வயப்பட்டேன். அப்போது இந்த ஊர் ஒரு சிறு கிராமம். காடு பூத்துக் கிடக்கும். இப்போது போல் அல்லாமல் அப்போது நதியில் ஏராளமாக நீர் வரும். புல்வெளிகளில் குதிரைகள் நிதானமாக மேய்ந்துகொண்டிருக்கும். நானும் தோமஸும் காடுகளுக்குள்ளும் நதியிலும் விளையாடித் திரிந்தோம். ஒரு வேடிக்கையான விஷயம் சொல்லட்டுமா? தோமஸுக்கு முத்தமிடக் கூடத் தெரிந்திருக்கவில்லை. நான்தான் அதை அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன். எங்களுடைய உறவு அம்மாவுக்குத் தெரிய வந்தபோது, அவர் என்னைக் கடுமையாகக் கண்டித்தார். அவரது காதலனான கிரேக்கன் என்னை முரட்டுத்தனமாக அடித்தான். அப்போதும் நான் தோமஸைச் சந்திப்பதை நிறுத்தவில்லை. ஒருநாள் அந்த இலங்கைக் குடும்பமே இந்த ஊரிலிருந்து திடீரெனக் காணாமற் போய்விட்டது. இரண்டு மாதங்கள் மட்டுமே நீடித்த அந்த உறவை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது. என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் செல்வேன் என்ற முட்டாளத்தனமான எண்ணமொன்று இந்தக் கிழவியின் மனதிற்குள் ஒளிந்து கிடப்பதை நான் உன்னிடம் மறைக்கத் தேவையில்லைத்தானே மகனே!” ஒலிம்ப் அம்மையாரின் வீடடில் இலங்கை சம்பந்தமான நூல்கள், படங்கள், சிலைகள், முகமூடிகள், வரைபடங்கள் எல்லாமே இருந்தன. இலங்கையைக் குறித்துப் புத்தகங்கள் வழியாக அவர் ஏராளமாகப் படித்திருந்தார். என்னிடம் பேசுவதால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதை அவர் சொல்லிக்கொண்டேயிருப்பார். ஆனால், நான் வேலைக்குத் திரும்பாமல் ஒலிம்ப் அம்மையாரது வீட்டில் மெனக்கெடுவது என்னுடைய முதலாளிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. நான் ஒலிம்ப் அம்மையாரை ஒருநாள் எனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து, வகைவகையான இலங்கை உணவுகளைப் பரிமாறினேன். காரத்தால் அவருக்குக் கண்களில் நீர் கசிந்த போதும், தட்டில் வைத்த எதையும் மீதம் வைக்காமல் இரசித்துச் சாப்பிட்டு முடித்தார். அது பிரஞ்சுக்காரர்களின் வழக்கம். “அம்மா… நான் ஒருநாள் உங்களை நிச்சயமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வேன்” என்று நான் ஒலிம்ப் அம்மையாரிடம் அடிக்கடி சொல்வேன். அவர் சிறு குழந்தையைப் போலப் புன்னகைப்பார். எனக்கே இலங்கைக்குப் போக வழியில்லை என்பது ஒலிம்ப் அம்மையாருக்குத் தெரியாது. நான் தள்ளுவண்டியோடு ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குள் நுழைந்ததுமே, அவர் கேட்ட முதல் கேள்வி “ஸ்ரீலங்காவில் உன்னுடைய அம்மா நலமாகயிருக்கிறாரா? கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றி விட்டார்களாமே. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், அடிதடி என்று பத்திரிகையில் படித்தேன். உன்னுடைய கிராமத்தில் பிரச்சினை ஏதும் இல்லையல்லவா?” நான் உங்களிடம் உண்மையை மட்டுமே சொல்கிறேன்! ஒலிம்ப் அம்மையார் ‘பிரச்சினை’ என்று சொன்ன அந்த விநாடியில்தான் என்னுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் திடீரெனப் பளிச்சிட்டு ஓடியது. அதை ஒலிம்ப் அம்மையாரிடம் சொல்லலாமா வேண்டாமா எனக் கடுமையான மனப் போராட்டம் எனக்குள் நடந்துகொண்டிருந்த போதே, என்னுடைய பரிதாபத்திற்குரிய நாவு பேசிற்று: “அம்மா உங்களால் எனக்கொரு உதவி செய்ய முடியுமா?” “சொல்லு மகனே! நிச்சயம் செய்வேன்!” “இப்போது இலங்கையில் நிலைமை அவ்வளவு சரியில்லை. பஞ்சம் பரவிக்கொண்டு வருகிறது. மருந்துப் பொருட்களும் தட்டுப்பாடு. நோயாளியான என்னுடைய அம்மாவை பிரான்ஸுக்கு அழைத்து, கொஞ்ச நாட்களுக்கு என்னுடன் வைத்திருக்க விரும்புகிறேன் அம்மா…” “ஆம்… அதை நீ நிச்சயம் செய்தாக வேண்டும் மகனே. நான் உனக்கு எந்த விதத்தில் உதவ முடியும்?” “நீங்கள் ஒரு ஸ்பொன்ஸர் கடிதம் கொடுத்தால், என்னுடைய அம்மாவுக்கு விசா வழங்கிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்…” “அவ்வளவு தானா! உன்னுடைய அம்மா பிரான்ஸுக்கு வந்துவிட்டார் என்றே வைத்துக்கொள்! அவரைப் பயணத்திற்குத் தயாராகச் சொல். நான் இப்போதே நகரசபை அலுவலகத்திற்குப் போய்த் தேவையான படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் ஸ்பொன்ஸருக்கான பத்திரத்தைப் பெற்று வந்துவிடுகிறேன். நீ வேலை முடிந்ததும் மாலையில் என்னை வந்து பார்!” நன்றியுணர்வால் எனக்குப் பேச்சு எழவில்லை. என்னுடைய கண்கள் கலங்கியதைப் பார்த்ததும், குழந்தைச் சிரிப்புடன் எழுந்துவந்து ஒலிம்ப் அம்மையார் என்னைக் கட்டியணைத்துக்கொண்டார். நான் வேலையில் இருந்த போது, அங்காடிக்குத் தொலைபேசியில் அழைத்த ஒலிம்ப் அம்மையார் என்னுடைய அம்மாவின் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விபரங்களை என்னிடம் கேட்டார். அப்போது ஒலிம்ப் அம்மையார் நகரசபை அலுவலகத்தில் இருந்தார். ஆயிரம் கேள்விகள் மனதிற்குள் குத்திமுறிய, நான் மாலையின் ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குச் சென்றேன். அவர் என்னை அவரது படிப்பு மேசையின் முன்னே உட்காரவைத்துவிட்டு, அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்து அய்ந்து பத்திரங்களை என்னிடம் கொடுத்தார். “கேள் மகனே! முதலாவது பத்திரம் உன்னுடையை அம்மாவை நான் விருந்தினர் விசாவில் மூன்று மாதங்கள் பிரான்ஸில் தங்க வைப்பதற்கான நகரசபையின் ஒப்புதல் பத்திரம். இரண்டாவது என்னுடைய வங்கிக் கணக்கு விபரம். மூன்றாவது என்னுடைய பிரஞ்சுத் தேசிய அடையாள அட்டையின் பிரதி. நான்காவது உன்னுடைய அம்மாவை என்னுடைய விருந்தினராக வருமாறு கேட்டு நான் அவருக்கு அனுப்பும் கடிதம். அய்ந்தாவது பத்திரம் உண்மையிலேயே அவசியமற்றது… ஆனால், அதுவே மிக முக்கியமானது என்று நகரசபையில் சொன்னார்கள். மூன்று மாதங்களுக்குள் விருந்தினர் பிரான்ஸிலிருந்து வெளியேறாவிட்டால், உள்துறை அமைச்சு என் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் ஒப்புதல் தெரிவிக்கும் பத்திரம். இவற்றை எடுத்துக்கொண்டு போய் உன்னுடைய அம்மா கொழும்பிலிருக்கும் பிரஞ்சுத் தூதரகத்தில் விண்ணப்பித்தால், நிச்சயமாக விசா கொடுத்துவிடுவார்கள். உன்னுடைய அம்மாவைச் சந்திக்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நானே அவரிடம் வருவேன்!” ஒலிம்ப் அம்மையார் என்னிடம் கொடுத்த ஒவ்வெரு பத்திரத்தின் அடியிலும் நடுங்கும் கையால் ஒலிம்ப் அம்மையார் இட்ட கையெழுத்து இருந்தது. கிறுக்கலான கையெழுத்து என்றாலும், பிரஞ்சுக் கையெழுத்துக்கு ஒரு மதிப்பிருக்கத்தான் செய்கிறது இல்லையா! கொழும்பிலிருக்கும் பிரஞ்சுத் தூதரகத்தில் விண்ணப்பித்த பத்து நாட்களுக்குள்ளேயே, அம்மாவுக்கு மூன்று மாதங்களுக்கான விருந்தினர் விசாவைக் கொடுத்துவிட்டார்கள். இந்தச் செய்தியை அறிந்ததும் என்னுடைய அக்காமார்கள் பூரித்துப்போய், என்னை அலைபேசி வழியே கொஞ்சித் தள்ளிவிட்டார்கள். அதன் பின்பு, அம்மாவை என்னுடைய வீட்டில் நான்தான் வைத்துக்கொள்வேன், நான்தான் வைத்துக்கொள்வேன் என்று அவர்களிடையே கடும் போட்டி தொடங்கிவிட்டது. எப்போதும் போலவே இந்தப் போட்டியிலும் தன்னுடைய விட்டுக்கொடுக்காத பிடிவாதத்தால் என்னுடைய மூன்றாவது அக்காவான மலரே வெற்றிபெற்றார். அவர்கள் மகிழ்ச்சியில் தத்தளித்துக்கொண்டிருந்த போது, என்னுடைய உள்ளம் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தது. பிரான்ஸுக்கு வரும் அம்மா நிச்சயமாக மூன்று மாதங்களில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். தன்னுடைய அய்ந்து பிள்ளைகளையும், பதினைந்து பேரக் குழந்தைகளையும் விட்டு, மறுபடியும் அவர் தனிமையை நோக்கித் திரும்ப வேண்டியிருக்கும். ஆனால், நான் அம்மாவிடம் அதைச் சொல்லத் துணியவில்லை. அது பிரான்ஸுக்கு வரும் அவரது மகிழ்ச்சியில் நிச்சயமாகவே மண்ணையள்ளி எறிந்துவிடும். பிரான்ஸுக்கு வந்ததும், அதைப் பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்லி, அவரைத் தேற்றித் திருப்பி அனுப்பிவிடலாம் என்றே நினைத்தேன். இன்னொன்றும் நடக்கக் கூடும். சீக்கிரமே வரவிருக்கும் கடுங்குளிர் காலத்தாலும், இங்குள்ள அடைத்த அடுக்குமாடிக் குடியிருப்புகளாலும், சமைத்த உணவைக் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருந்து, ஒரு வாரம் வரை உண்ணும் உணவுப் பழக்க வழக்கங்களாலும் அம்மாவே சலிப்புற்று இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பலாம். இருபது வருடங்களாக இங்கேயிருக்கும் எனக்கே இலங்கைக்கு எப்போது போகலாம் என மனம் தவித்துக்கொண்டிருக்கிறதே! அம்மா அவ்வாறாக விருப்பப்பட்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் எல்லாமே மகிழ்ச்சியாக முடிந்துவிடும். பேரக் குழந்தைகளைப் பார்த்த திருப்தியில் ஊர்ச் சுடலையிலேயே அவர் நிம்மதியாக நீறாவார். அம்மா பிரான்ஸுக்கு வந்த மூன்றாவது நாளே, நான் ஒலிம்ப் அம்மையாரை அழைத்துக்கொண்டு, மலர் அக்காவின் வீட்டுக்குச் சென்றேன். ஒரு ‘மிமோஸா’ பூங்கொத்தோடு வந்த ஒலிம்ப் அம்மையார் அங்கிருந்து கிளம்பும்வரை, என்னுடைய அம்மாவின் கையைப் பற்றிப் பிடித்தபடியே இருந்தார். அப்போது, என்னுடைய நான்கு அக்காக்களுமே அங்கிருந்தனர். அவர்கள் ஆரவாரமாக ஒலிம்ப் அம்மையாரை வரவேற்றாலும், அம்மையார் இந்த நேரத்தில் ஒரு வேண்டப்படாத விருந்தாளி என்பதைப் போலவே தங்களுக்குள் சாடை பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னொருநாள் அம்மா என்னிடம் சொன்னார்: “தம்பி! ஊரில் காணியையும் வீட்டையும் கவனித்துப் பார்க்க ஆட்களில்லை. யாராவது அயலவர்கள் கள்ள உறுதி முடித்துக் காணியையும் வீட்டையும் கைப்பற்ற முன்பாக நாங்கள் வீட்டை விற்றுவிட வேண்டும். அதொன்றும் பெரிய பணம் இல்லைத் தான். கைவிடப்பட்டுக் காடாகியிருக்கும் அந்த ஊரில் ஒரு பரப்புக் காணி ஓர் இலட்சத்திற்குக் கூட விலை போகாது. காணியையும் வீட்டையும் ஒரு பாதிரிமார் சபை விலைக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதை விற்று முடிப்பதற்கான வேலையை நாங்கள் சீக்கிரமே செய்ய வேண்டும்.” “அம்மா… அது நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு. எங்களது குடும்பத்திற்கு இலங்கையில் இருக்கும் ஒரே அடையாளம் அந்தக் காணிதான். அது அதுபாட்டிற்கு இருந்துவிட்டுப் போகட்டுமே…” “இருந்து? நாங்கள் யாருமே அங்கே திரும்பிப் போகப் போவதில்லை. கள்ளர் அனுபவிக்கவா அந்தக் காணியை உன்னுடைய அப்பா தேடி வைத்தார்? விற்கிற வேலையைப் பார் தம்பி.” அம்மாவுக்குப் பிரான்ஸ் இவ்வளவு பிடித்துப் போகும் என்று நான் உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. பனியையும் குளிரையும் ஒரு குழந்தையைப் போலல்லவா அவர் அனுபவிக்கிறார். ஒருநாள், நான் மலர் அக்காவின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அம்மா தரைக் கம்பளத்தின் மீது அமர்ந்திருந்து பேத்தியிடம் பிரஞ்சு மொழிப் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார். “அம்மா! தரையில் உட்காராதீர்கள்…குளிர் ஏறிவிடப் போகிறது” என்றேன். “சீச்சி… குளிர்தான் என்னுடைய நோய்க்கு நல்ல மருந்தென்று நினைக்கிறேன். இங்கே வந்ததிலிருந்து எனக்குக் காய்ச்சல், தடிமன் கூட வந்ததில்லையே… வாழப் போகும் நாட்டின் பாஷையில் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே தம்பி. அதுதான் கொஞ்சம் பிரஞ்ச் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். உன்னுடைய அப்பாவுக்குச் சிங்களம் தெரிந்திருந்ததால் தானே கொழும்பு வரைக்கும் போய்க் கெட்டித்தனமாக வியாபாரம் செய்தார்” என்றார் அம்மா. அம்மா பிரான்ஸுக்கு வந்து இரண்டரை மாதங்கள் கழிந்துவிட்டன. மலர் அக்காவின் வீட்டில் அம்மா தங்கியிருந்தாலும், மற்றைய பிள்ளைகளின் வீடுகளிலும் அவ்வப்போது ஒன்றிரண்டு நாட்கள் தங்கி அம்மா எப்போதுமே ரவுண்ட்ஸில் இருந்தார். நடுவில் அம்மாவை அழைத்துக்கொண்டு பெரியக்கா குடும்பம் லூட்ஸ் மாதா கோயிலுக்கும் சென்று வந்தது. பாரிஸையும் அதன் புறநகரங்களையும் அம்மா சுற்றியடித்து, எல்லாச் சைவக் கோயில்களுக்கும் போய்விட்டு வந்துவிட்டார். பேரப் பிள்ளைகளோடு நதிக்கரைக்குச் சென்று விளையாடிவிட்டு வந்து “ச்சா… என்னவொரு சோக்கான நாடு! ஒரு பூச்சியிருக்கா பூரானிருக்கா பாம்பிருக்கா?” என்று வியந்துகொண்டிருந்தார். நடுநடுவே, ஊரிலிருக்கும் காணியையும் வீட்டையும் விற்க வேண்டும் என்று என்னிடம் சொல்லியவாறேயிருந்தார். அம்மாவின் விசா முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. நான் பெரியக்காவைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன்: “பெரியக்கா… நீங்கள்தான் அம்மாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அம்மா முப்பதாம் திகதி இலங்கைக்குத் திரும்ப வேண்டும்.” “தம்பி… என்ன விசர்க் கதை கதைக்கிறாய்? படாத பாடுபட்டு அம்மாவை இங்கே கூப்பிட்டுவிட்டு, திருப்பி அனுப்புவதா? அந்த மனுசி இலங்கைக்குப் போய் என்ன செய்யும்? அம்மா உயிரோடு இருக்கப் போவதே இன்னும் ஒன்றோ இரண்டோ வருடங்கள்தான். அவர் இங்கேயே இருக்கட்டும். இனி நீ கஷ்டப்பட வேண்டாம். நானே அம்மாவுக்குத் தேவையானவற்றைச் செய்கிறேன். விசா முடிந்த அடுத்த நாளே, அம்மாவைக் கூட்டிப்போய் பொலிஸில் அகதியாகப் பதிவு செய்து விடுகிறேன்.” “அக்கா…நான் உங்களுக்கு முதலிலேயே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அப்படிச் செய்ய முடியாது. அம்மா திரும்பிப் போகாவிட்டால் ஸ்பொன்ஸர் செய்து வரவழைத்த ஒலிம்ப் அம்மையார் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வார்.” “நல்ல ஒலிம்பும் பிளிம்பும்! அந்தக் கிழவி ஏதாவது பணம் கேட்டால் கொடுத்துவிடலாம். ஆனால், அம்மாவைத் திருப்பி அனுப்ப முடியாது.” “இங்கே பெரியக்கா.. இது ஒலிம்ப் அம்மையார் பணத்திற்காகச் செய்த காரியமில்லை. எங்கள் மீதுள்ள அன்பால் செய்தது. நம்பிக்கையால் செய்தது. அவருக்கு எங்களது அம்மாவை விட வயது அதிகம். இந்த வயதில் அவரை நீதிமன்றத்திற்கு அலைய வைக்க முடியுமா? ஒருவேளை அவர் சிறைக்குக் கூடச் செல்ல வேண்டியிருக்கலாம்…” “பேய்க்கதை கதைக்காதே தம்பி. இங்கே எவ்வளவு சனங்கள் ஸ்பொன்ஸரில் வந்துவிட்டு இங்கேயே அகதித் தஞ்சம் கேட்டுத் தங்கிவிடுகிறார்கள். ஏதாவது பிரச்சினை நடந்ததா? நீ பயப்படுவது போல எதுவும் நடக்காது.” “இல்லை பெரியக்கா… என்னால் ஒலிம்ப் அம்மையாருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய முடியாது. அம்மா திரும்பிப் போகத்தான் வேண்டும்!” நான் மூன்றாவது அக்காவான மலரைத் தொலைபேசியில் அழைத்தேன். அதற்குள் பெரியக்கா மலர் அக்காவை அழைத்து விபரம் சொல்லியிருக்கிறார். மலர் அக்கா தன்னுடைய இயல்புப்படியே எடுத்ததும் என்மீது சீறி விழுந்தார்: “ஆமோ! அப்படியோ!! என்னுடைய அம்மாவை நீ எப்படித் திருப்பி அனுப்புகிறாய் என்று நானும் பார்க்கிறேன். இப்போதே அம்மாவின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கிழித்து அடுப்பில் போட்டுவிடுகிறேன்” என்று மலரக்கா ராங்கி காட்டினார். “அது முடியாது மலரக்கா… அம்மாவின் பாஸ்போர்ட் என்னிடம்தான் இருக்கிறது.” “உன்னுடைய இயக்கத்துக் குறுக்கு மூளையைக் காட்டிவிட்டாய் தம்பி. உனக்கு அம்மாவை விட அந்த வெள்ளைக்காரக் கிழவி முக்கியமாகப் போய்விட்டாள் தானே! அம்மாவிடம் மட்டும் ஊருக்குத் திரும்பிப் போகவேண்டும் என்று தயவுசெய்து சொல்லிவிடாதே! ஏங்கி இப்போதே செத்துவிடுவார். பழியைச் சுமக்காதே!” ஆனாலும், நான் கடைசியில் பழியைச் சுமக்கவே நேரிட்டது. ஒரு வாரமாகவே ஒலிம்ப் அம்மையாரிடமிருந்து எங்களது அங்காடிக்கு அழைப்பு ஏதும் வரவேயில்லை. ஒருமுறை அவரது வீட்டுக்குச் சென்று பார்க்கவும் எனக்கு மனம் ஏவவில்லை. அம்மாவின் விசா பிரச்சினை என்னைக் கடுமையாகக் குழப்பிக்கொண்டேயிருந்தது. மாலையில் வேலை முடிந்து செல்லும் போது, ஒலிம்ப் அம்மையாரின் வீட்டைக் கவனித்தேன். வெளியே பூட்டுப் போடப்பட்டிருந்தது. கதவின் இடுக்குகளில் விளம்பரப் பத்திரிகைகள் குப்பையாகச் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் நான் இந்த ட்ராம் தரிப்பிடத்திலிருந்து ஒலிம்ப் அம்மையாரின் வீட்டைப் பார்க்கிறேன். இதை எப்படிக் கவனிக்கத் தவறினேன்? என்னையறியாமலேயே ஏதோவொரு கள்ள எண்ணம் என்னுடைய உள்ளத்தில் புகுந்துவிட்டது என்று எனக்குத் தோன்றியதும், வாயில் ஊத்தை எச்சில் ஊறி வந்தது. அதை வீதியில் உமிழ்ந்தேன். வீதியைக் கடந்து சென்று, ஒலிம்ப் அம்மையாரின் பக்கத்து வீட்டுக்காரரின் அழைப்பு மணியை அழுத்தினேன். அந்த இத்தாலியரிடம் எனக்கு ஓரளவு பழக்கமுண்டு. அவருக்கும் நான் தான் பொருட்களை எடுத்து வருபவன். ஒலிம்ப் அம்மையார் மூச்சுத் திணறல் பிரச்சினையால் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று இத்தாலியர் சொன்னார். நான் ட்ராம் தரிப்பிடத்திற்குத் திரும்பவும் சென்று, எனது வீட்டுக்குச் செல்வதற்கான ட்ராம் வண்டிக்காகக் காத்திருக்கலானேன். என்னுடைய சின்ன மூளைக்குள் கட்டெறும்புகளைப் போல ஆயிரம் எண்ணங்கள் புற்றெடுத்துச் சுற்றிக்கொண்டிருந்தன. வீட்டுக்குச் செல்லும் வழியில், மத்திய மருத்துமனைத் தரிப்பிடத்தில் ட்ராம் நின்றபோது, என்னுடைய கால்கள் என்னை அறியாமலேயே ட்ராம் வண்டியிலிருந்து கீழே இறங்கின. ஏதோ ஒரு கிலோ போதை மருந்தைத் தின்றவனைப் போலத்தான் நான் நடந்து சென்றேன். மருத்துவமனையின் வரவேற்புப் பகுதியிலிருந்த பெண்ணுக்கு முன்னால் நான் தளர்ந்து போய் நின்றிருந்தபோது, நான் ஆஸ்பத்திரியில் சேர வந்த நோயாளி என்று கூட அந்தப் பெண் நினைத்திருக்கக் கூடும். அவளிடம் ஒலிம்ப் அம்மையார் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறை எண்ணை விசாரித்துத் தெரிந்துகொண்டு உள்ளே சென்றேன். லிஃப்டில் கூட ஏறாமல், மாடிப் படிகளில் நடந்தே ஏறிச் சென்றேன். ஒலிம்ப் அம்மையாரின் கண்களைச் சந்திக்கும் தருணத்தை நான் கூடியவரை ஒத்திப்போட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை. படுக்கையில் கிடந்த ஒலிம்ப் அம்மையாரின் கண்கள் மூடியே இருந்தன. முகத்தில் மூடியிட்டு பிராணவாயு செலுத்தப்பட்டுக்கொண்டிந்தது. முழங்கால்கள் வரையிருந்த நீல ஆடைக்குள் ஒரு பொம்மை போல ஒலிம்ப் அம்மையார் அசைவற்றுக் கிடந்தார். நான் அங்கிருந்த தலைமைத் தாதியிடம் விசாரித்த போது “இந்த அம்மையாரின் உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது… இவரது உடல் நிலை குறித்து எதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது” என்று அவள் இயந்திரம் போல என்னிடம் சொன்னாள். அதுவரை அலைவுற்றுக்கொண்டிருந்த என்னுடைய ஆன்மா மெதுவே தணிவதை உணர்ந்தேன். என்னுடைய நாவில் ஊத்தை எச்சில் கொத்தாகச் சுரந்தது. அதை வாய்க்குள் அடக்கியபடியேதான் நான் வீடுவரை வந்தேன். நான் வீட்டுப் படியில் கால் வைக்க முன்பே, என்னுடைய கடைசி அக்கா வேணியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. நான் வாய்க்குள் எச்சிலை வைத்துக்கொண்டே பேசினேன். “என்னடா தம்பி… நீ உண்மையில் அம்மாவைத் திருப்பி அனுப்பத்தான் போகிறாயா?” என்று வேணி அக்கா கேட்டார். “எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது” என்றேன். நான் சொன்னது வேணி அக்காவுக்குப் புரிந்ததோ தெரியாது. அடுத்து வந்த நான்கு நாட்களும், நான் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று ஒலிம்ப் அம்மையாரின் படுக்கையைக் கவனித்தேன். அவர் கண்களை மூடி அசைவற்றுக் கட்டையாகக் கிடந்தார். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் நான் அங்கே செல்வதால், அந்தத் தாதி எனக்குப் பழக்கமாகிவிட்டாள். என்னைத் தவிர வேறு யாருமே ஒலிம்ப் அம்மையாரைப் பார்க்க வருவதில்லை என்று அந்தத் தாதி சொன்னபோது, நான் என்னுடைய அம்மாவை நினைத்துக்கொண்டேன். என்னுடைய அம்மா இலங்கைக்குத் திரும்பிப் போகவேயில்லை. * https://vanemmagazine.com/one-way-ஷோபாசக்தி/
  6. வர்ணகலா by ஷோபாசக்தி இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டே பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து, அரசறிவியல் படித்துக்கொண்டிருந்த மிதுனா பாலப்பாவுக்கு அன்றைய காலை மற்றுமொரு கொடூரமான கொலைச் செய்தியுடன் விடிந்தது. அவள் படுக்கையிலிருந்து நகராமல், அலைபேசியின் தொடுதிரையை உருட்டி உருட்டிப் பார்த்தவாறேயிருந்தாள். காலையில் எட்டு மணிக்கு வகுப்பு இருக்கிறது என்பது அவளது ஞாபகத்திலேயே இல்லை. மிதுனாவுக்கு ஆறு வயதாகியிருந்த போதுதான், அவளை இலங்கையில் விடுமுறையை கழிப்பதற்காக முதலும் கடைசியுமாக பெற்றோர் அழைத்துச் சென்றிருந்தார்கள். ஏழாலைக் கிராமத்திலுள்ள அவர்களது பாரம்பரிய, பெரிய நாற்சார் வீட்டில் மிதுனா கழித்த அந்த விடுமுறையை ஒரு குஞ்சுத் தேவதை போன்றே அவள் அனுபவித்தாள். தரையில் அவளது கால்களைத் தீண்டவிடாமல் சொந்தபந்தங்கள் எப்போதும் தூக்கி வைத்துக்கொண்டு திரிந்தனர். பிரான்ஸில் கண்டேயிராத விதவிதமான மரங்கள், கனிகள், வீட்டுக்குள் உல்லாசமாக நுழைந்து படுத்துக்கிடக்கும் வெள்ளாடுகள், தலையைத் தட்டிப் பறக்கும் கோழிகள், குங்கும நிறமூட்டிய கோழிக் குஞ்சுகள், வீட்டின் பின்னே தொழுவத்தை நிறைத்திருக்கும் பசுமாடுகள், வீட்டைச் சுற்றிப் பறந்தபடியே இருக்கும் வண்ணப் பறவைகள், தோள்களில் வந்தமர்ந்து விளையாட்டுக் காட்டும் பட்டாம்பூச்சிகள், இரவில் தேவதைகளைப் பற்றி மட்டுமே கதைசொல்லும் பாட்டியும் தாத்தாவும் என்றிருந்த சூழலின் ஒவ்வொரு வண்ணப் படிமமும் இப்போதும் அவளது நெஞ்சில் படிந்துள்ளது. அவர்கள் இலங்கையை விட்டுத் திரும்பவும் பிரான்ஸுக்குப் புறப்பட்ட அன்றுதான் மாவிலாறில் மறுபடியும் யுத்தம் வெடித்தது. மறுபடியும் அவளைப் பெற்றோர் இலங்கைக்கு அழைத்துச் செல்லவில்லை. மிதுனா கேட்ட போதெல்லாம் “ஆமிக்காரங்கள் நிக்கிற முத்தத்த நான் இனி மிதிக்க மாட்டன்” என்று தந்தை பாலப்பா சொல்லிவிட்டார். ஆனால், ஒவ்வொரு வருட விடுமுறைக்கும் மிதுனாவை இலண்டன், நோர்வே, கிரேக்கம், துருக்கி, துனிஷியா என வெவ்வேறு நாடுகளுக்குப் பெற்றோர் கூட்டிச் சென்றனர். ஆனால், மிதுனாவின் கனவுகள் இலங்கையைச் சுற்றியேயிருந்தன. பெரியவளானதும் தனியாகவே அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொள்வாள். வன்னியியில் இறுதி யுத்தம் நடந்த காலங்களில், பாரிஸ் நகர வீதிகளிலே ஈழத் தமிழர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு பாலப்பா செல்லும் போது, சிறுமி மிதுனாவையும் அழைத்துப் போயிருக்கிறார். அங்கேயிருந்த தட்டிகளிலும், பதாதைகளிலும் மிதுனா பார்த்த இலங்கை வேறுமாதிரியாக இருந்தது. தலையற்ற உடல்கள், எரிந்துகொண்டிருக்கும் வீடுகள், வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தைப் பிரேதங்கள் என்பவற்றைத் தான் அவள் அங்கே பார்த்தாள். பல மாதங்களுக்கு அந்தப் படங்கள் அவளது மனதை வதைத்துக்கொண்டேயிருந்தன. அப்போதிலிருந்தே இலங்கை குறித்த செய்திகளை அவள் கவனமாகப் பின்தொடர்ந்தாள். பல்கலைக்கழகத்தத்தில் நடக்கும் கருத்தரங்குகளில் இலங்கைப் போரைக் குறித்தும், இனப் படுகொலை குறித்தும் மிதுனா சில தடவைகள் உரையாற்றியிருக்கிறாள். இலங்கை இனமுரண்கள் குறித்ததே அவளது அரசறிவியல் பட்டத்திற்கான ஆய்வேட்டை எழுதுவதற்குத் தீர்மானித்து வேலை செய்கிறாள். இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்களை அவள் உன்னிப்பாக அவதானித்துக் குறிப்புகளைச் சேகரித்து வைத்தாள். நீண்டகாலம் சிறைகளிலிருக்கும் அரசியல் கைதிகள், யுத்தத்தில் காணமற்போனவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக நடத்தப்படும் தொடர் ‘அரகலய’ போராட்டம் எல்லாலற்றையும் அவள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். இலங்கையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு முக்கிய செய்தியையும் அவள் தவறவிடுவது கிடையாது. இந்தக் காலையில், அவள் யாழ்ப்பாண இணையமொன்றை உருட்டிக்கொண்டிருந்த போது, இந்தக் கொலைச் செய்தியைப் பார்த்தாள். ஆனால், அது தனக்குத் தெரிந்த வர்ணகலா டீச்சர்தானா என்று அவளுக்கு உறுதிப்படத் தெரியவில்லை. வர்ணகலா டீச்சருக்கு எத்தனை வயதிருக்கும் எனக் கணக்குப்போட்டுப் பார்த்தாள். இவளுக்கும் வர்ணகலாவுக்கும் இடையே வயதால் பதினேழு வருடங்கள் வித்தியாசங்கள் என்பது மிதுனாவுக்குத் தெரியும். அப்படியானால் இப்போது வர்ணகலாவுக்கு முப்பத்தொன்பது வயது. கொலையுண்டவர் நாற்பது வயதுப் பெண் என்றும் வெளிநாட்டிலிருந்து அண்மையில் இலங்கைக்கு வந்தவர் என்றும் அந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது, அது தனக்குத் தெரிந்த வர்ணகலா டீச்சராக இருக்கலாமோ என்ற அவளது சந்தேகம் வளர்ந்துகொண்டே போனது. அந்த இணையத்தில் கொலையுண்டவரின் வண்ண ஒளிப்படத்துடன், சில வரிகள்தான் இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தன: வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த வர்ணகலா என்ற நாற்பது வயதுப் பெண்மணி, வட்டுக்கோட்டைப் பகுதியில் அவர் புதிதாக வாங்கியிருந்த வீட்டினுள்ளே தூங்கிக்கொண்டிருந்தபோது, நேற்று இரவு, தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் காணியையும், வீட்டையும் அவர் வாங்கியதில் எழுந்த தகராறுகள் காரணமாகவே அவர் ஒரு கும்பலால் கொடூரமாக முகம் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வர்ணகலாவின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தச் செய்தியின் நடுவில் பிரசுரிக்கப்பட்டிருந்த படத்தில், ஒளிப்பான சருமமுள்ள பெண் கொலையுண்டு கிடந்தார். அவரது முகம் இருந்த இடத்தில் ஓர் இரத்தக் கோளமேயிருந்தது. முகம் முழுவதுமாகச் சிதைக்கப்பட்டு, எந்தவொரு அடையாளமும் இல்லாமலிருந்தது. அந்தப் படத்தைப் பெரிதாக்கி, அது வர்ணகலா டீச்சர்தானா எனக் கண்டுபிடிக்க மிதுனா முயற்சி செய்தாள். கணினியில் இருந்த பல தொழில்நுட்பச் சாத்தியங்களையும் அதற்காக உபயோகப்படுத்தினாள். ஆனால், அந்தச் சடலத்தின் கழுத்துக்கு மேலே சிவப்புக் குழம்பைத் தவிர அவளால் ஓர் உறுப்பைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாரிஸ் புறநகரொன்றில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்கு மிதுனா தொலைபேசியில் அழைத்து, தனது பெற்றோரிடம் இந்தக் கொலைச் செய்தியைப் பதற்றத்துடன் சொன்னாள். “ஸே வ்ரே? லங்காஸ்ரீ நியூஸில அப்பிடியொரு செய்தியையும் காணேல்லையே” என்றார் தகப்பன் பாலப்பா. “ஆரு… அந்தத் தமிழ் டீச்சரோ?” என்று கேட்டார் தாயார் இந்திரா. 2 மிதுனாவுக்கு பத்து வயதான போது, வீட்டுக்கு அருகிலிருந்த தமிழ்ச்சோலையில் ஞாயிறு காலைகளில் நடத்தப்பட்ட தமிழ் வகுப்பில் அவளைப் பாலப்பா வலுகட்டாயமாகச் சேர்த்துவிட்டார். மிதுனாவுக்கு அது பிடிக்கவேயில்லை. அங்கே சொல்லிக்கொடுக்கும் பாடங்களும் அவளுக்கு வேதனையாகவேயிருந்தன. ஆனா, ஆவன்னா சொல்லிக்கொடுக்கும் முன்பே பத்துத் திருக்குறள்களைக் கொடுத்து மனனம் செய்து வருமாறு சொல்லிவிட்டார்கள். பாலப்பா பொறுமையாக திருக்குறளை மகளுக்குக் கற்றுக்கொடுத்தார். “எங்கிட தாய் மொழியை நாங்கள் மறக்கவே கூடாது” என்பது அவரது அன்றாடப் போதனையாக மிதுனாவின் குட்டித் தலையில் விழுந்தது. வார நாட்கள் முழுக்க ‘அலெக்ஸாந்தர் துமா’ தொடக்கப் பள்ளியில் படித்த மிதுனாவுக்கு, அந்தப் பிரஞ்சுப் பள்ளிக்குப் போவதென்றால் ஒரே கொண்டாட்டம்தான். அங்கிருந்த ஆசிரியர்கள் மிதுனாவுடன் தோழர்களைப் போலவே பழகி, அவர்களுக்குச் சரிசமமாகவே அவளை நடத்தினார்கள் என்றே சொல்லலாம். ஆனால், இந்தத் தமிழ்ப் பாடசாலைஆசிரியையோ எரிச்சலும் கூச்சலுமாகத்தான் பாடங்களை நடத்தினார். இந்தத் தமிழ்ச் சித்திரவதையெல்லாம், அடுத்த வருடம் வர்ணகலா டீச்சரின் வகுப்புக்கு மிதுனா போகும் வரைதான் இருந்தது. வர்ணகலா டீச்சரின் வகுப்போ, கடவுளும் குட்டித் தேவதைகளும் போல கனவுலகமாக இருந்தது. வர்ணகலா வார நாட்களில் ஓர் அச்சகத்தில் பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றுபவர். ஞாயிறு தினங்களில் தொண்டு அடிப்படையில் தமிழ்ச்சோலையில் ஆசிரியையாகப் பணியாற்றினார். அவர் சங்கப்பாடல் விளக்கவுரை, தலைவர் மாமாவின் சிந்தனையிலிருந்து சில துளிகள் என்றெல்லாம் பொட்டலங்களைக் குழந்தைகளின் குரும்பைத் தலையில் சுமத்தி வைக்கவில்லை. அவரது முதல் வகுப்பையே இப்படித்தான் ஆரம்பித்தார்: தாளந்தான் போடுகிறேனே தமிழ் பாட அறியேனே தாதிமிதா தாதிமிதா தத்திமிதா தத்திமிதா வர்ணகலா டீச்சருக்கு சிரிக்காமல் பேசவே தெரியாது. காலையில் வரும்போது, வீட்டிலிருந்து முறுக்கு, பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை எடுத்துவந்து இடைவேளையில் குழந்தைகளுடன் பகிர்ந்து சாப்பிடுவார். அவரது வகுப்பு பாடலாலும், நடனத்தாலும், சிரிப்பாலும் நிறைந்திருந்தது. இப்படியாகத்தான் மிதுனா ஆர்வத்துடன் தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கிய கட்டமொன்று நிறைவேறிற்று. மிதுனாவின் தமிழ்ப் படிப்புத் தீவிரம் பாலப்பாவையே திகைக்க வைத்தது. ஞாயிறு காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் வர்ணகலா டீச்சரின் வகுப்புக்காக, எட்டு மணிக்கே மிதுனா தயாராகிவிடுவாள். பாடசாலைக்குக் காரில் அழைத்துவரும் பாலப்பாவும் மெல்ல மெல்ல வர்ணகலாவுடன் பழக்கமானார். இந்தப் பழக்கம் ஒருவருடைய வீட்டுக்கு இன்னொருவர் வந்து போவதுவரை வளர்ந்தது. வர்ணகலாவின் கணவர் வெள்ளையினத்தவர். அவரும் சிறிதளவு தமிழ் பேசக் கற்றிருந்தார். தீபாவளி விருந்துக்கு மிதுனாவின் வீட்டுக்கு வர்ணகலா குடும்பமும், புதுவருட விருந்துக்கு வர்ணகலாவின் வீட்டுக்குப் பாலப்பா குடும்பமும் பரிசுகளோடு போய்வந்து உறவு கொண்டாடினார்கள். ஒரு கொடுமையான பனிக்காலத்தில், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் மிதுனா பருவமடைந்தாள். ஒரு வாரம் வீட்டிலேயே வைத்திருந்து, சோறும் நல்லெண்ணெய் ஊற்றிய கத்தரிக்காய் பால்கறியும், பச்சை முட்டைகளும், உளுத்தம்மாக் களியுமாகக் கொடுத்து உடலைத் தேற்றி, அடுத்த வாரமே அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டார்கள். பருவமடைந்த காரணத்தைச் சொல்லியெல்லொம் பிரஞ்சுப் பள்ளிக்குப் போகமலிருக்க முடியாது. ஆனால், தமிழ்சோலைக்கு ஒரு மாதகாலம் அவள் அனுப்பப்படவில்லை. முப்பதோராவது நாள் அய்யரை வீட்டுக்கே கூப்பிட்டு, புண்ணியவாசம் செய்து தீட்டைக் கழித்த பின்புதான் மிதுனாவைத் தமிழ் வகுப்புக்கு அனுப்பிவைத்தார்கள். ஏழு மாதங்கள் கழித்து வரும் கோடைகாலத்தில், மஞ்சள் நீராட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்துவதாக பாலப்பாவும் இந்திராவும் முடிவெடுத்தார்கள். பிரான்ஸில் கோடை காலம்தான் விழாக்களை நடத்துவதற்கு ஏற்ற காலம். அற்புதமான காலநிலையுள்ள அந்த நாட்களில்தான் நண்பர்களும் உறவினர்களும் வெளிநாடுகளிலிருந்தும் விழாவுக்கு வருவார்கள். ஆனால், மிதுனாவுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை நடத்துவது சரியற்றது என்பது பாலப்பாவின் தம்பியான பாலரஞ்சனின் எண்ணம். அவன், பாலப்பா வீட்டுக்கு வந்தபோது தனது மறுப்பைக் கடுமையாகத் தெரிவித்தான்: “பெரியண்ணே… இது காலத்துக்கு ஒவ்வாத வழக்கம் கண்டியே. நீ இதைச் செய்யாத!” பாலப்பா சற்றும் மனம் சளைக்காமல் உடனடியாகவே பாலரஞ்சனுக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்தார். “மடக் கதை கதைக்காத… வெளிநாட்டுக்கு வந்தா வெள்ளைக்காரனுக்கு நடிக்க ஏலுமே? எங்கிட கலாச்சாரத்தப் பண்பாட விட்டுக் கொடுக்க ஏலுமே… இஞ்ச எல்லாரும் தானே சடங்கு செய்யினம்.” “இது சீரழிவுக் கலாச்சாரம் கண்டியே… ஊருக்கெல்லாம் சொல்லி பெரிய எடுப்பில சாமத்தியச் சடங்கு எதுக்கு நடத்துறது சொல்லு பார்ப்பம்?” “என்னத்துக்கோ? எங்கிட பிள்ளை பெரிய பிள்ளையான சந்தோசத்தை நாலு இனசனத்தைக் கூப்பிட்டுக் கொண்டாடடத்தான்…” “இல்லவேயில்லை… கலியாணத்துக்கு ரெடியா எங்கிட வீட்டில ஒரு பொம்புள இருக்கெண்டு ஊருக்குப் பறைதட்டிச் சொல்லத்தான் இந்தச் சடங்கு வந்தது.” “இஞ்சே… நாலு பேப்பர் புத்தகத்த அரைகுறையாப் படிச்சுப் போட்டு லூசு மாதிரிக் கதைக்காத ரஞ்சன். எங்கிட கலாச்சாரத்தில ஒவ்வொண்டுக்கும் அர்த்தமிருக்கு…” “இது எங்கிட கலாச்சாரமே இல்ல… இது தேவதாசிக் கலாச்சாரம் கண்டியே… எங்களட்ட ஒரு பொம்பிள தொழிலுக்கு ரெடியா நிக்கிறாள் எண்டு… உன்னட்ட எல்லாம் உடைச்சுச் சொல்லோணும் பெரியண்ணே… “பொத்தடா வாயை… உனக்கு விருப்பமில்லாட்டி நீ வர வேணாம்… முறை மயிரொண்டும் செய்ய வேணாம்… நான் யானையில என்ர மகளை ஊர்வலம் கொண்டு போறனா இல்லையா எண்டு இருந்து பாரு!” உரத்த சத்தத்தைக் கேட்டு, சமையலறைக்குள்ளிருந்து மிதுனாவின் தாயார் இந்திரா எட்டிப் பார்த்தார். “இஞ்சேரும் இந்திரா இதைக் கேட்டீரே… சாமத்திய வீடு செய்ய வேணாமெண்டு இந்த விடுபேயன் சொல்லுறான்… ஸெ பா விறே பித்தான்..” “பெரியண்ணே! முதலில பிரஞ்சப் பிழையாக் கதைக்கிறத நிப்பாட்டு.” மிதுனாவின் தாயார் சொன்னார்: “இருக்கிறது ஒரு பிள்ளை. அதுக்குச் சடங்கு செய்ய வேணாமே… சனம் என்ன சொல்லும்! ஊரில இருக்கிற உங்கிட அம்மா அப்பா ஒத்துக்கொள்ளுவினமே? நாங்கள் பிரான்சுக்கு வந்து இருபது வருசத்தில் எத்தின கொண்டாட்டங்களுக்குப் போய்க் காசு போட்டிருப்பம்… எப்படியும் ஒரு லட்சம் ஈரோவாவது இருக்கும். திருப்பி வாங்கத்தானே வேணும்… எங்கிட இவர் வீடு வாங்கி வித்த தமிழ்ச்சனமே அய்நூறு இருக்கும். அவயளும் வருவினம்…” பாலரஞ்சன் மெல்லிய சிரிப்போடு கேட்டான்: “ஏன் அண்ணி உங்களிட்ட இருக்கிற காசு காணாதே?” எதுவும் பேசாமல் இந்திரா மாடிக்குச் சென்றார். ஒவ்வொரு படியிலும் ஏற அவருக்குப் பாலரஞ்சன் மீது கொதிப்பும் படிப்படியாக ஏறிக்கொண்டே வந்தது. ‘எல்லாம் இவர் குடுக்கிற இடம்’ என்று நினைத்துக்கொண்டார். ‘நாங்கள் கயிட்டப்பட்டு உண்ணாமத் தின்னாம, சுடுதண்ணீ பாவிக்காம குளிர் தண்ணியில தோய்ஞ்சு முழுகி ஒவ்வொரு சென்ரிமாச் சேர்த்துப் பெருக்கின காசு இவற்றை கண்ண உறுத்துதாமோ? சோம்பேறி நாய்… இதெல்லாம் புதுசாப் பெந்தக்கோஸ்தில சேர்ந்ததால கதைக்கிற கதை… அதுகள் தான் உதெல்லாம் செய்யாம புரியன் உயிரோட இருக்கேக்கையே வெள்ளைச் சீலை கட்டுறதுகள்’ என்று மனதிற்குள் கோபமும் கொந்தளிப்புமாகப் போய், மிதுனாவின் அறைக்குள் நுழைந்தார். படித்துக்கொண்டிருந்த மிதுனா என்ன என்பது போலப் பார்க்க “உன்ர சித்தப்பருக்கு உனக்குச் சாமத்தியச் சடங்கு செய்யிறது பிடிக்கேல்லையாம். சடங்கில உனக்கு ஏதாவது சங்கிலி காப்புப் போட்டு முறை செய்யோணுமே… அதுதான் அந்தக் கசவாரம் தேவையில்லாக் கதை கதைக்கிது.” இதைக் கேட்டதும் மிதுனாவுக்குப் பெரும் கவலை பிடித்துக்கொண்டது. வரப் போகும் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக அவள் ஆவலுடனும், மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடனும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவள் பாரிஸில் நிகழ்ந்த எத்தனையோ மஞ்சள் நீராட்டு விழாக்களுக்குப் பெற்றோருடன் போயிருக்கிறாள். விழாவின் நாயகியான பெண்ணை எவ்வளவு சோபனமாக அலங்கரித்திருப்பார்கள். அந்த நாளின் உச்ச நட்சத்திரம் அவள்தானே! தேவதைக் கதைகளில் நிகழ்வதுபோல எவ்வளவு அற்புதப் பரிசுகள் அவளுக்குக் கிடைக்கும். அவளது தோழிகள் சூழ்ந்து மலர்களைத் தூவ நடுவில் ராஜகுமாரி போலல்லவா அவள் அமர்ந்திருப்பாள். எத்தனை எத்தனை புகைப்படங்கள்! மஞ்சள் நீராட்டு விழாவின் வீடியோப் பிரதி ஒரு பொலிவூட் படம் போல எவ்வளவு குதூகலமாகயிருக்கும்! கோடை நெருங்கிக்கொண்டிருந்த போது, மிதுனாவின் பெற்றோர் வர்ணகலா டீச்சர் வீட்டுக்குப் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, வெற்றிலை, பழங்கள் சகிதமாகச் சென்று, மஞ்சள் நீராட்டு விழாவுக்குப் பத்திரிகை வைத்தார்கள். மிதுனாவின் அம்மா “டீச்சர் நீங்கள் வேளைக்கே வந்து உங்கிட வீட்டுக் கொண்டாட்டமா நினைச்சு முன்னுக்கு நிண்டு எல்லாம் செய்யோணும். மிதுனா உங்கிட பிள்ளை” என்றார். 3 பாரிஸ் நகரத்தின் ஆகாயம் நீல வெளிச்சமாக மின்னிக்கொண்டிருந்தது. சரியாகப் பகல் பன்னிரண்டு மணிக்கு, அந்த வெளிச்சத்தைப் பிளந்துகொண்டு, ஒரு ஹெலிகொப்டர் கீழே இறங்கத் தொடங்கியது. மைதானத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். வெள்ளைக்கார விமானியால் மிக இலாவகமாக ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்ட போது, நாதஸ்வரங்களும், தவில்களும் மங்கல இசையை முழங்கத் தொடங்கின. ஹெலிகொப்டரின் கதவு திறக்கப்பட்டபோது, பட்டு வேட்டியும், பட்டுச் சட்டையும், தோளில் தங்கச் சரிகை அங்கவஸ்திரமும், கண்களிலே கறுப்புக் கண்ணாடியுமாகக் கைகளைத் தலைக்கு மேலே தூக்கிச் சனங்களைப் பார்த்துக் கும்பிட்டவாறு, கறுப்பு எம்.ஜி.ஆர். போலவே பாலப்பா ஹெலிகொப்டரிலிருந்து கீழே இறங்கினார். அவருக்குப் பின்னால் கும்பிட்டவாறே, திருவிழா காலத்து முத்து மாரியம்மன் போன்று மிதுனாவின் தாயார் இறங்கினார். அவர்களின் பின்னே தேவதையாக அலங்கரிக்கப்பட்டிருந்த மிதுனாவின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வர்ணகலா இறங்கினார். மைதானத்தில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த பலகீனமான யானை இலண்டனிலிருந்து கப்பலில் வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த யானையின் முதுகில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுக் கம்பீரமாக இருந்த அம்பாரி மாடத்துள் மிதுனாவை உட்கார வைத்து, விழா மண்டபம் வரை அவளை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். யானையிலிருந்து இறங்கியதும், எட்டுப் பேர்கள் சுமந்த அலங்காரப் பல்லக்கில் மிதுனாவை உட்காரவைத்து மேடைவரை தூக்கிச் சென்றார்கள். பல்லக்கின் இருபுறத்திலும் ஒவ்வொரு பக்கத்துக்கும் இருபது சிறுமிகள் மிதுனா மீது மலர்மாரி பொழிந்தவாறே நடந்தார்கள். மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரமாட்டேன் என்று சூளுரைத்திருந்த பாலரஞ்சன் மண்டபத்தின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மதுபானச்சாலையில் நின்று விஸ்கி அருந்தியவாறே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான். மதுச்சாலையை மெல்ல மெல்ல ஆண்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. பெண்கள் வட்டமான மேசைகளைச் சூழ உட்கார்ந்துகொண்டார்கள். ஒவ்வொரு மேசையும் வெண்ணிறப் பட்டுத் துணி விரிக்கப்பட்டு, சுற்றிவர எட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நாற்காலிகளும் வெண்ணிற மஸ்லின் துணிகளால் போர்த்தப்பட்டிருந்தன. மேசைகளை நிரப்பி வகைவகையான சிற்றுண்டிகளும், குளிர்பானப் போத்தல்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தங்கத்தாலும் பட்டாலும் போர்த்தப்பட்டிருந்த மக்கள் கூட்டம் நாசூக்காக சிற்றுண்டிகளைக் கொறித்துக்கொண்டிருந்தது. விழாவுக்கு நாயகி மிதுனா என்றால், புகைப்படக்காரரும் வீடியோ படப்பிடிப்பாளரும்தான் எப்போதும் போலவே இந்த விழாவிலும் நாயகர்கள். கல்யாணங்களின் போது தாலி கட்டுவது சரியாக வீடியோவில் பதிவாகவிட்டால், கழுத்தில் ஏறிய தாலியைக் கழற்றவைத்து மறுபடியும் கட்டவைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இந்த ஒளி ஓவியர்கள். அதிலொரு ஒளி ஓவியர் பறக்கும் குட்டிக் கமெரா ஒன்றை மண்டபத்தில் ஒவ்வொருவரின் தலைக்கு மேலும் வேகமாக இறக்கியும், சட்டெனத் திசைமாற்றி ஏற்றியும் மொத்த வித்தையையும் காட்டிக்கொண்டிருந்தார். மண்டபத்தின் எல்லாப்புறங்களிலும் ஒலியைப் பெருக்கும் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்ததால், பெரும் சத்தத்தால் மண்டபமே அதிர்ந்துகொண்டிருந்தது. இசைத்தட்டைச் சுழலவிடும் நிபுணரை ஜெர்மனியிலிருந்து அழைத்திருந்தார்கள். அந்தப் பையன் தன்னுடைய சேவல் கொண்டையைச் சிலுப்பிச் சன்னதம் ஆடியவாறே, ஒரு பாட்டைக் கூட முழுதாகக் கேட்க முடியாமல் பாடல்களைக் கொத்துரொட்டி போட்டுக்கொண்டிருந்தான். உணவு வகைகளில் இலங்கை, இந்திய, சீன வகைகளோடு கொஞ்சம் பிரஞ்சு அயிட்டங்களும் இருந்தன. பாலப்பாவுடைய ‘வீடு விற்பனை முகவர்’ நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டு வெள்ளையர்களும் விழாவுக்கு வந்திருந்து வாய்களை அகலப் பிளந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மண்டபத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னும் தமிழ்க் கலாசாரம் இருக்கிறதென்றே அவர்கள் நம்பியிருக்கக்கூடும். “பிரஞ்சுக்காரன் கலாச்சாரம் எண்டு எதைச் சொன்னாலும் த்ரில்லாகி நம்புவான்” என்று பாலரஞ்சன் அடிக்கடி சொல்வதுண்டு. மேடையில் வைத்து மிதுனாவுக்கு பாற்சோறு, அரிசிமாவுக் களி, பிட்டு, பால்ரொட்டி ஆகியவை வைக்கப்பட்டிருந்த வெள்ளித் தட்டுகளால் ஆரத்தி சுற்றினார்கள். வர்ணகலாவும் இந்திராவின் தங்கையான சித்ராவுமே அவற்றைச் செய்தார்கள். ஆரத்தி சுற்றி முடித்ததும், ஏதோ மலையையே தூக்கிச் சுற்றிய பாவனையோடு சித்ரா முகத்தைச் சுழித்தவாறே, ஒற்றைக் கையால் இடுப்பைப் பிடித்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கிவிட்டார். இவை எல்லாவற்றையும் மேடையில் நின்று கண்களில் நீர் கண்ணாடித் திரையிடப் பெருமிதத்துடன் பாலப்பாவும் இந்திராவும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாலரஞ்சன் தள்ளாடியபடியே திடீரென மேடையிலேறி, மிதுனாவைக் கன்னங்களில் முத்தமிட்டுப் பத்துப் பவுண் சங்கிலியை அவளது கழுத்தில் அணிவித்துச் சிற்றப்பன் கடமையை முடித்தான். மண்டபத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊஞ்சலில் மிதுனாவை உட்கார வைத்துத் தாயும் தகப்பனுமாக ஆட்டினார்கள். யாழ்ப்பாணத்தில் ஊஞ்சல் ஆடியதற்குப் பிறகு, இப்போதுதான் மிதுனா ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறாள். அங்கே அப்போது ஒலித்த பாடலுக்கு அவளையறியாமலேயே அவளது கால் விரல்கள் அசைந்து தாளம் போட்டன. விழாவில் பாடுவதற்கு ‘சுப்பர் சிங்கர்’ புகழ் ஆணும் பெண்ணுமாக இருவர் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் பொருத்தமானதொரு பாடலை அப்போது பாடினார்கள். கொலுசுங்க சத்தமிட கல் உடைய மண் உடைய குதியாட்டம் போட்ட புள்ள குமரி புள்ள ஆனாளே… அவர்கள் அருமையாக இசைக்க, பாலப்பாவும் சளைத்தவரில்லையே… அவர் ஒரு கையால் ஊஞ்சலை ஆட்டியாவாறே அந்தப் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டே மற்றக் கையால் பலவித அபிநயங்களைச் செய்தார். இந்திரா தான் வெட்கப்பட்டுக்கொண்டே நடனத்திலிருந்து ஒதுங்க, வர்ணகலா டீச்சர் வாய்கொள்ளாச் சிரிப்புடன் பாலப்பாவுடன் சேர்ந்து நளினமாகச் சில நடன அசைவுகளைப் போட்டார். காலையில் மிதுனாவைப் படுக்கையிலிருந்து எழுப்பி, அவளது கைகளில் பாக்குகளும், ஈரோ நாணயங்களும் வைத்துச் சுருட்டப்பட்ட வெற்றிலைச் சுருளைக் கொடுத்துத் தலையில் பால் வார்ப்பதிலிருந்து மிதுனாவை விட்டு அசையாமல் கூடவேயிருந்தவர்கள் வர்ணகலா டீச்சரும், புகைப்படக்காரரும், வீடியோக்காரருமே. வர்ணகலா தன்னுடைய வீட்டு விஷேசம் போலவே எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு ஓடியாடி வேலை செய்தார். நீலப்பட்டில் வெள்ளி நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்த சேலைத் தலைப்பை இடுப்பில் வரிந்துகட்டிக்கொண்டு வர்ணகலா மண்டபத்தில் எந்த இடத்தில் நின்றாலும், அவர் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டேயிருந்தார். மஞ்சள் நீராட்டு விழா நிறைவடையும் வரை வர்ணகலா சாப்பிடக் கூடயில்லை. பிற்பகலில் விழா நிறைவுற்று விருந்தினர்கள் எல்லோரும் கிளம்பிய பின்பாக, தனியாக உட்கார்ந்து நான்கு சோற்று உருண்டையை உருட்டி வாயில் திணித்துக்கொண்டிருந்த வர்ணகலாவைப் பார்த்தபோது, பாலப்பாவுக்கு கண்கள் கலங்கியதற்கு நன்றியுணர்ச்சி அடிப்படைக் காரணமாகயிருந்தாலும், கொஞ்சமாக அருந்தியிருந்த விஸ்கியும் ஒரு துணைக் காரணம் என்றே சொல்லலாம். அன்று மிதுனா தேவதை! அவளது சிறகுகள் வர்ணகலா! 4 மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தாலும், மிதுனாவின் தாய்மாமனும், இந்திராவின் தம்பியுமாகிய சுரேந்திரன் விழாவுக்கு வராதது ஒரு குறையாகவேயிருந்தது. விழாவுக்கு வரமுடியாதவாறு வேலைப்பளுக்களில் சிக்கியிருந்த சுரேந்திரன், கிறிஸ்துமஸ் விடுமுறையில் அவுஸ்ரேலியாவிலிருந்து குடும்பத்தோடு மருகளுக்கு முறை செய்ய வந்திருந்தான். சுரேந்திரனின் மனைவி நந்தினி பிரான்ஸ் குளிரைப் பார்த்து அரண்டு போய்விட்டாள். அன்றைக்கு காலநிலை மைனஸ் ஆறைத் தொட்டிருந்தது. மிதுனாவின் வீட்டைச் சுற்றி ஓரடி உயரத்திற்குப் பனி சொரிந்து கிடந்தது. வீட்டின் பெரிய வரவேற்பறையிலிருந்த கணப்பை விறகுகளைச் செருகி பாலப்பா எரியவிட்டார். மதிய உணவுக்குப் பின்னாக, எல்லோரும் உட்கார்ந்து மிகப் பெரிய தொலைக்காட்சித் திரையில் மஞ்சள் நீராட்டு விழாவின் வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தார்கள். மிதுனா இந்த வீடியோவைப் பத்தோ பன்னிரண்டாவதோ தடவையாகப் பார்க்கிறாள். அவளுக்கு இது ஒருபோதுமே சலிப்பை ஏற்படுத்தியதில்லை. பாலப்பா ஹெலிகொப்டரிலிருந்து இறங்கும் காட்சி ஸ்லோமோஷனில் படம் பிடிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் பாலப்பாவே கொஞ்சம் நாணமுறுவார். சுரேந்திரன் பெரிதாகக் கெக்கடமிட்டுச் சிரித்து “அத்தார் அந்தமாதிரி க்ளாஸ்” என்றான். இப்படிச் சிரிப்பும் கனைப்புமாக அந்த வரவேற்பு அறை அமளிப்பட்டுக்கொண்டிருக்க, சுரேந்திரனின் மனைவி நந்தினி மட்டும் அமைதியாக வீடியோவைக் கவனித்துக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டாள்: “நீலச் சாரியோட ஆரத்தி எடுக்கிற பொம்பிள ஆர் ?” “அது மிதுனாவின்ர தமிழ் டீச்சர்… நல்ல குணமான பிள்ள. சாமத்திய வீட்டில அரைவாசி வேலை அதுதான் செய்தது” என்றார் இந்திரா. “வர்ணகலாவே பேர்?” என்று கேட்டாள் நந்தினி. “ஓமோம்… வர்ணகலா டீச்சரை உமக்குத் தெரியுமே நந்தினி?” “தெரியாமலென்ன! இவள் என்ர ஊர்தான். முசலிக்குளம் கணவதி நளவன்ர மகள்…” என்று சொன்ன நந்தினி முஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டு பாலப்பாவைப் பார்த்து “என்ன அத்தார் நீங்கள்? வெளிநாட்டுக்கு வந்தா இதெல்லாம் பார்க்கேலாது தான்… ஆனால், அதுக்காக உள்வீட்டுக்கேயே அடுக்கிறது? அங்கபாரு எங்கிட பிள்ளைய அந்த நளத்தி ஆலாத்தி ஆலாத்தி எடுக்கிறாள்…” என்று சொன்ன நந்தினியின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. பாலப்பாவும் இந்திராவும் ஏங்கிப் போய் அரைச் சவமாகிவிட்டார்கள். பாலப்பா மெதுவாக எழுந்து போய் ஓடிக்கொண்டிருந்த வீடியோவை நிறுத்தவிட்டு, கம்மிய குரலில் நந்தினியிடம் கேட்டார்: “நீ சரியாத்தான் சொல்லுறியோ நந்தினி! அவளைப் பார்த்தால் அப்பிடித் தெரியேல்லையே…” “இதென்ன அத்தார்… எங்கிட அடிமை குடிமையள எனக்குத் தெரியாதே? எங்கிட பின்வளவுப் பனையெல்லாம் கணவதி தானே இப்பவும் சீவிறவன்…போன வருச ஹொலிடேக்கு ஊருக்குப் போகக்கயும் அவன வளவுக்குள்ள கண்டனான்… மோள்காரி பிரான்ஸில இருக்கிறாள் எண்டும், தன்னை மரம் ஏறுறத நிப்பாட்டச் சொல்லியிருக்கிறாள் எண்டும் பெரிய நடப்பா என்னட்டச் சொன்னானே… மரம் ஏறுறதுகள நீங்கள் இப்ப மேடையில எல்லோ ஏத்தியிருக்கிறீயள். ஆர் என்னெண்டு விசாரிச்சு நடக்கிறதில்லேயே அத்தார்?” பாலப்பா கொஞ்ச நேரம் பல்லை நெருமிக்கொண்டு, கையைக் கட்டியவாறே உட்கார்ந்திருந்தார். பிறகு அவக்கென எழுந்து போய் சி.டி. பிளேயரிலிருந்த குறுந்தகட்டை வெளியே வரச் செய்து, தனது பெருவிரலாலும் சுண்டுவிரலாலும் எலியின் வாலைப் பிடிப்பது போல குறுந்தகட்டின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு கணப்பை நோக்கி நடந்து சென்று, முளாசி எரிந்துகொண்டிருந்த நெருப்பினுள் அதனைச் சுழற்றி வீசினார். நடப்பது எல்லாவற்றையும் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் பார்த்துக்கொண்டிருந்த மிதுனாவுக்கு குறுந்தகடு எரிக்கப்பட்டது பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. மஞ்சள் நீராட்டு விழாவில் ஒரு தேவதையைப் போல இருந்த அவளையே நெருப்பில் தூக்கிப் போட்டது போலத்தான் அவள் உணர்ந்தாள். எதுவும் பேசாமல் எழுந்து சென்று, வெளியே பனி நடுவேயிருந்த மர இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள். சொரிந்துகொண்டிருந்த வெண்பனி அவளை மூடிக்கொண்டிருந்தது. இதற்குப் பின்பு தமிழ்ச்சோலைப் பள்ளிக்குச் செல்லாமல் மிதுனாவைப் பாலப்பா தடுத்துவிட்டார். சில மாதங்களின் பின்பு, அவர்களது குடும்பம் இன்னொரு புறநகருக்குக் குடிபெயர்ந்தது. மிதுனாவும் மெல்ல மெல்ல வர்ணகலாவை மறந்துவிட்டாள். வர்ணகலாவும் மிதுனாவை மறந்திருப்பார். 5 வர்ணகலா என்ற நாற்பது வயதுப் பெண்மணி முகம் முற்றாகச் சிதைத்துக் கொல்லப்பட்டதற்குச் சில வாரங்கள் கழித்து, மிதுனா பாரிஸ் புறநகரிலிருந்த பெற்றோரின் வீட்டுக்குச் சென்றாள். இரவுணவு மேசையில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கும் போது வர்ணகலா டீச்சர் குறித்துப் பேச்சு வந்தது. “அண்டைக்கு போனில ஒரு நியூஸ் சொன்னனானெல்லோ… அது தமிழ்ச்சோலை டீச்சரே அப்பா?” “தெரியேல்லையே பிள்ள. நாங்கள் இஞ்சால வீடு வாங்கி வந்தாப் பிறகு நான் அந்தப் பக்கம் போகவேயில்லை” எனச் சொல்லிவிட்டு, பாலப்பா சாப்பாட்டில் கவனம் செலுத்தினார். “நீ சாப்பிடு பிள்ள… ஆராராக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கோ அதுதானே நடக்கும்” என்று சொல்லிக்கொண்டே, தட்டில் இடியப்பங்களை வைத்து மேலாக இறால் சொதியை ஊற்றினார் இந்திரா. நீண்ட நாட்களுக்குப் பின்பாகத் தமிழ்ச் சாப்பாடு சாப்பிட்டதில் மிதுனாவுக்குக் கண்களைக் கட்டிக்கொண்டு வந்தது. தந்தையையும் தாயையும் முத்தமிட்டுவிட்டுத் தனது அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்துகொண்டு, அலைபேசியின் தொடுதிரையை உருட்டத் தொடங்கினாள். கட்டிலுக்கு எதிரே சுவரில், மஞ்சள் நீராட்டு விழாவில் எடுக்கப்பட்டிருந்த மிதுனாவின் மார்பளவு ஒளிப்படம் மூன்றடிக்கு இரண்டடி அளவில் தொங்கிக்கொண்டிருந்தது. தற்செயலாக அந்தப் படத்தின் மீது மிதுனாவின் பார்வை படவும், அவள் கட்டிலிலிருந்து எழுந்து, அந்தப் படத்தை நெருங்கிச் சென்றாள். அப்படத்தில் தேவதை போன்று அலங்கரிக்கப்பட்டிருந்த மிதுனாவின் இடது தோளைச் சில விரல்கள் பற்றியிருந்தன. அந்த விரல்கள் வர்ணகலாவின் விரல்களாக இருக்குமோ என்று திடீரென அவளுக்குத் தோன்றவே, அவள் கடகடவென மாடிப்படிகளில் இறங்கிக் கீழே சென்றாள். “அம்மா… என்னைக் குழந்தைப் பிள்ளையில எடுத்த போட்டோ அல்பங்கள் எங்கயிருக்கு?” “என்ன பிள்ள திடீரெண்டு அதைத் தேடுறாய்?” “சின்னப்பிள்ளையில் எடுத்த ஒரு நல்ல போட்டோ தேவைப்படுது… யூனிவர்ஸிட்டி புத்தகமொண்டில போடுறதுக்கு” “ஸ்டோர் ரூமுக்குள்ள ஒரு சிவப்பு சூட்கேஸ் இருக்கும் பார். அதுக்குள்ளதான் பழைய அல்பங்கள் கிடக்கு” என்றார் இந்திரா. ஸ்டோர் ரூமுக்குள் சென்ற மிதுனா அங்கே தாறுமாறாகத் தூசி தும்பு படிந்துகிடந்த பலசரக்குகளிடையே அந்தச் சிவப்பு பெட்டியைக் கண்டுபிடித்து, அதை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்று, படுக்கையில் வைத்துப் பெட்டியைத் திறந்தாள். அதற்குள் பாலப்பா – இந்திரா கல்யாண அல்பம் முதற்கொண்டு பத்துப் பன்னிரெண்டு அல்பங்கள் கிடந்தன. அவற்றுக்கு நடுவேயிருந்த தன்னுடைய மஞ்சள் நீராட்டு விழா அல்பத்தை மிதுனா கண்டுபிடித்து, கொஞ்சம் பதற்றத்துடனேயே பக்கங்களைப் புரட்டினாள். பெரியளவிலான அந்த அல்பத்தில் பக்கத்திற்கு ஆறு ஒளிப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. எல்லாப் படங்களிலும் அவள் இருந்தாள். சில படங்களில் அவளோடு அவளது பெற்றோர் இருந்தனர். வேறு பலரும் இருந்தனர். ஆனால், அந்தப் படங்களில் வர்ணகலா டீச்சர் இல்லை. அவள் சோர்வுடன் அந்தப் பெட்டியைக் கிளறியபோது, உள்ளேயொரு தடித்த கடிதவுறையைக் கண்டாள். அதைத் திறந்தபோது, அதற்குள்ளிருந்த பல ஒளிப்படங்களுக்குள், மஞ்சள் நீராட்டு விழாவில் மிதுனாவுக்கு ஆரத்தி சுற்றும்போது எடுத்த படம் ஒன்றுமிருந்தது. மிதுனாவுக்கு வலது புறத்தில் ஒளிப்பான சருமத்தோடு, நீலப்பட்டில் வெள்ளி நட்சத்திரங்கள் மின்ன வர்ணகலா டீச்சர் ஆரத்தி சுற்றிக்கொண்டிருந்தார். அவரது முகமிருந்த பகுதி மட்டும் அந்தப் படத்தில் திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்டு, கழுத்துக்கு மேலே மொட்டையாக இருந்தது. இதற்கு மேலே மிதுனா பாலப்பா சொல்லிய கதையின் போக்கையும் முடிவையும் தேர்ந்த வாசகரான நீங்கள் நிச்சயமாகவே ஊகித்திருப்பீர்கள் என்பதால், நான் இந்த இடத்தில் நிறுத்திக்கொள்கிறேன். * https://vallinam.com.my/version2/?p=8902
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.