Jump to content

Search the Community

Showing results for tags 'இனப்படுகொலை'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 3 results

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ அறிமுகவுரை இந்த ஆவணக்கட்டில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை முஸ்லீம்களால்; 1989ம் ஆண்டு இவர்களை 'முஸ்லிம்கள்' என்ற தனி இனக்குழுவாக விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர்; மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மாத்திரமே ஒருமுகப்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்படும். முஸ்லிம்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டதென்று (புலிகள் மறுத்துள்ள போதிலும்) அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவை குறித்து எதுவுமே பதிவிடப்படாது என்பதையும் முன்கூட்டிய பறைந்துகொள்கிறேன். இதைத் தொகுப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதும் தம்மால் எழுதப்படும் கட்டுரைகளிலிலும் புத்தகங்களிலும் தமது தரப்பால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் அனைத்தையும் வேண்டுமென்று மறைத்தே தமிழர் தரப்பு மீதான கொலைப் பழிகளை விரிப்பர். அவ்விரிப்புகளில் நல்லபிள்ளை வேடமிட்டு தாம் முதலில் தமிழரைத் தாக்கவில்லை என்பது போன்றும் தமிழரே சும்மா இருந்த தம்மைத் தாக்கினர் என்பதான தோற்றப்பாட்டையும் உண்டாக்கியிருப்பர். அதாவது மெய்மைக்கு மாறாக பொய்யான தோற்றப்பாட்டை உண்டாக்கியிருப்பர். மேலும், அதில் தமிழர் தரப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்ட கொலைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்த தம்மால் தமிழருக்கு ஏவல்செய்யப்பட்ட படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் எழுதியிரார். ஆகவே காலம் காலமாக இருந்துவந்த இந்த முஸ்லிம் பக்கம் மட்டும் நியாயம் கேட்பு என்பதற்கு மாறாக தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளையும் எடுத்துரைக்க இவ் ஆவணக்கட்டு முயலும். மேலும் தமிழர் தரப்பும் இதுநாள் வரை வீரியமாக சிங்களவரின் படுகொலைகளை ஆவணப்படுத்தியது போல் முஸ்லிம்களின் அட்டூழியங்களை ஆவணப்படுத்த சிரத்தை எடுத்ததில்லை என்பது எம்தரப்பின் வலுவீனமே. ஆகவே அக்குறையினை போக்கும் படியாகவும் தமிழர் தரப்பு அனுபவித்த கொடுமைகளை எடுத்துரைக்கவும் இவ்வாவணக்கட்டு எழுதப்படுகிறது. இதில் எனது சொந்த எழுத்தாக ஆதாரங்களின் துணையோடு எழுதியிருப்பது "முன்னுரை" மாத்திரமே. மேற்கொண்டு பதிவிட இருப்பவை எல்லாம், பல்வேறு நம்பகமான வலைத்தளங்கள், உதயன் & ஈழநாதம் நாளேடுகள் மற்றும் சில குறிப்பிட்ட பன்னாட்டு அமைப்புகள் ஆகியவற்றால் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், ஊர்காவல்படை, & காடையர்கள் பற்றியும் அவர்களால் ஈழப்போர் காலத்தில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் பற்றியும் வெளியிடப்பட்ட கட்டுரைகள், செய்திகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவையே ஆகும். சுருகங்கச் சொல்லின் ஒரு தொகுப்பாக இருக்கும். இவ் ஆவணக்கட்டானது தொடர்ந்து என்னால் இற்றைப்படுத்தப்பட்டு எமது தமிழ் தேசத்திற்கு இலங்கை முஸ்லிம்களின் இனவெறியால் ஏவல்செய்யப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பான ஒரு பாரிய வரலாற்றுப் பேழையாக, அடுத்தடுத்த தலைமுறைகளின் வரலாற்று அறிவுப்பெட்டகமாக பேணப்படும். *****
  2. உலகெங்கும் உள்ள ஈழத் தமிழ் உறவுகளே! இது இரண்டு மாதங்கள் முன்பு வெளியான மிக மிக மிக முக்கியமான கட்டுரை! வெறும் அரசியல் அலசல் இல்லை இது. தமிழினப் படுகொலை தொடர்பாகப் பன்னாட்டளவில் இடைவிடாது செயல்பட்டு வரும் இயக்குநர் புகழேந்தி தங்கராசு அவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் விடுத்துள்ள மிக முக்கியமான கடிதம்! புலம்பெயர் அமைப்புகளுக்கு ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த கோரிக்கை! படித்துப் பார்த்து இதில் உள்ள பரிந்துரையை உடனடியாக முன்னெடுக்க வேண்டுகிறேன்!🙏🏾 * * * * * மாலத் தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து… என்று கோட்டபாயவின் சுற்றுலா தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அடைக்கலம் தேட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. விசாவை நீட்டிக்க முடியாதென்று சிங்கப்பூர் கைவிரித்துவிட்டது. 90 நாள் சுற்றுலா விசா தான் தரமுடியும் - என்கிற நிபந்தனையுடன், வேண்டாத விருந்தாளியாகத்தான் உள்ளே விடுகிறது தாய்லாந்து. தாய்லாந்துக்குப் பிறகு, எங்கே போவது? ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற நிலை. வேறு வழியில்லாததால் நவம்பரில் இலங்கைக்கே திரும்ப வேண்டியிருக்கும் என்று உறுதியான தகவல். சப்ஸ்டியூட் ரணில் அதை விரும்பமாட்டார் என்று இன்னொரு தகவல். எது உண்மையென்று இன்னும் சில வாரங்களில் தெரியலாம். ஒன்றரை லட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க மூலகாரணமாக இருந்த ஒருவர், பல்லாயிரம் தமிழ்க் குழந்தைகளைப் பட்டினி போட்டுக் கொன்ற ஒருவர், இலங்கையின் போர்க் கதாநாயகன் என்று கூறிக்கொண்ட ஒருவர், சிங்கள மக்களால் தான் அதிபரானேன் - என்று தம்பட்டமடித்த ஒருவர், அந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்ட பிறகு, ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல், திரிசங்கு நிலையில் கிடப்பதைப் பார்த்து, நாம் மகிழ்ச்சியடையவில்லை. நாம், இதையெல்லாம் சர்க்கரைப் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிற கோழைகளும் இல்லை. கோதா கோ ஹோம் என்கிற முழக்கத்தையே நாம் ஏற்கவில்லை. தூக்குமேடைக்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு கொடுங்குற்றவாளியை, பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறார்களே என்கிற வேதனையும் கவலையும்தான் வாட்டியது நம்மை! நமக்கிருக்கிற கவலைகளும் அச்சங்களும் குன்றாமல் குறையாமல் அப்படியே நீடிப்பதற்கு, குறைந்தது ஆயிரம் காரணமாவது சொல்லமுடியும். அவ்வளவு வலுவானது நமது குமுறல். எவ்வளவு காலம்தான் நாம் ஏமாற்றப்படுவோம் என்கிற குமுறல். இதை சிங்கள மக்களும் தலைவர்களும் புரிந்து கொள்ளவேயில்லையா, அல்லது புரியாததைப்போல நடிக்கிறார்களா - என்கிற கேள்வியைத்தான் எழுப்பியது கொழும்பில் நடந்த போராட்டம். 2015ல், ராஜபக்சக்கள் மீதான சர்வதேசத்தின் பிடி இறுகிய நிலையில், அதிபர் நாற்காலியில் அமர்ந்த மைத்திரிபால, புதிய அரசு, புதிய நிர்வாகம், நல்லிணக்கம்….. என்று சொல்லிச் சொல்லியே, இன அழிப்புக்கு சர்வதேச நீதி கிடைக்கிற வாய்ப்பைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போனார். ராஜபக்சக்களுக்கு வாய்தா வாங்குவது மட்டுமே, ஜெனிவாவில் அவரது வேலையாக இருந்தது. சர்வதேசப் பொறிமுறையுடன் கூடிய விசாரணை - என்பதை ஜெனிவாவில் ஆதரித்துவிட்டு, கொழும்பில் நிராகரித்தது இலங்கை. ‘பார்த்தீர்களா பார்த்தீர்களா இலங்கையையே சம்மதிக்க வைத்துவிட்டோம்’ என்று ஜெனிவாவில் பீற்றிய தமிழ் ஏமாளிகள் முகத்தில் கரிபூசியது. சர்வதேச விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றார் மைத்திரிபால. ராஜபக்சக்களை அவர் கையாண்ட விதமும், அவரை ராஜபக்சக்கள் கையாண்ட விதமும் ஜாடிக்கு மூடி சரிபோயிந்தி என்கிற லட்சணத்தில்தான் இருந்தது. இந்தத் தமிழ் ஏமாளிகளை எப்படிக் கையாண்டார்கள் என்பதுதான் தெரியவேயில்லை. ரணில் விஷயம் வேறு! இவர், மைத்திரிபால மாதிரி கிராமசேவகர் கிடையாது. ஜெயவர்தன போலவே, நரி. ‘நாடு திரும்ப உகந்த நேரம் வரவில்லை….’ என்று கோட்டபாயவுக்கே புளுத்துப்போன புளிசாத பார்சலை அனுப்ப முடிகிறது இவரால்! கோட்டாவின் ராணுவம் தன்னிடம் வாலாட்டினால், மேற்கு நாடுகளும் இந்தியாவும் உதவக் கூடும்… வெளியார் தயவில் பதவிக் காலத்தை ஓட்டிவிடலாம் என்கிற ரணிலின் நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கலாம். ரணிலின் நம்பிக்கையைத் தகர்க்கிறவிதத்தில், சர்வதேச அளவில் ஒரு துல்லியத் தாக்குதல் நடந்து முடிந்திருக்கிறது. அதை நடத்தியிருப்பவர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிஷேல் பச்லெட் அம்மையார். 2009ல் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில், 58 இலங்கை ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டுமென்கிற மிஷேலின் அறிவிப்பு, ரணிலுக்கு நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ரோம் சாசனத்தில் நான் கையெழுத்திடாததால் தான் ராஜபக்சக்கள் மின்சார நாற்காலியிலிருந்து தப்பினர் - என்றெல்லாம் பேசி, ‘அவர்கள் போர்க்குற்றவாளிகள் தான்’ என்பதை உறுதிசெய்தவர் ரணில். இப்போது என்ன செய்யப் போகிறார்? மனித உரிமைகள் பேரவை சொல்வதை அவர் ஏற்க மறுத்தால், வெளிநாட்டு உதவிகளை நம்பி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிற ஒரு நாடு என்ன ஆகும்? எல்லா உதவிகளையும் பெற்றுத் தருவேன் - என்று பேசிக் கொண்டிருக்கிற அவரது நிலைதான் என்னவாகும்? மைத்திரிபாலா மாதிரி, செய்வேன் ஆனால் செய்யமாட்டேன் என்று நாடகமாடுகிற காலச்சூழல் ரணிலுக்கு இல்லை. ஒன்று, அவர்களைக் கைது செய்யவேண்டும், அல்லது கைது செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்க வேண்டும். இரண்டில் ஒன்றைத்தான் அவரால் செய்ய முடியும். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. தமிழின அழிப்பின் சூத்திரதாரிகளைக் காப்பாற்றத் தலைகீழாய் நின்றவர்கள் தமிழர் தரப்பிலும் இல்லாமலில்லை. இந்த உண்மையைத் தப்பித்தவறிக் கூட நாம் மறந்துவிடக் கூடாது. . இலங்கை அரசியல் இப்படியெல்லாம் தலைகீழாக மாறுமென்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. தந்தை செல்வாவின் லட்சுமண ரேகை பற்றி கவலையேபடாமல், கொடியவர்களோடு கைகுலுக்கிக் கொடிவணக்கம் செய்தவர்கள் அவர்கள். ஸ்ரீலங்கா மாதோ நமோ நமோ என்று பாடியவர்கள். 58 பேரையும் கைது செய்தாக வேண்டுமென்று, அவர்களும் இப்போது குரல் கொடுத்தாக வேண்டும். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. தமிழீழ மண்ணில் அதற்கு வேறுமாதிரி மரியாதை தரப்படும். அது ஒன்றரை லட்சம் தமிழரின் ரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டிருக்கும் மண். குற்றவாளிகள், குற்றவாளிகளுக்குத் துணை நின்றவர்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் - என்று அத்தனைப்பேருக்கும் தப்பிக்கவே முடியாதபடி செக் வைத்திருக்கிறார் மிஷேல் பச்லெட். வேறொரு கோணத்தில் பார்த்தால், ரணிலுக்கு கிடைத்திருக்கிற நல்வாய்ப்பாகவும் இது மாறிவிடக் கூடும். அப்படியொரு வாய்ப்பு குறித்து ரணில் யோசிக்காமல் இருக்க மாட்டார். 58 அதிகாரிகளைக் கைது செய்யாவிட்டால் சர்வதேச உதவிகள் கிடைக்காமல் போகலாம். அப்படியொரு நிலையில், 58 பேரையும் கைது செய் என்று ஒட்டுமொத்தத் தென்னிலங்கையும் முழங்கக் கூடும். 58 பேர் கைது செய்யப்படுவதன் மூலம், ரணிலுக்கு ராணுவத்தினரால் இருக்கிற ஆபத்தும் ஓரளவு குறையலாம். 58 பேர் கைதானால், கோட்டபாயவும் கைது செய்யப்படுகிற நிலை நிச்சயமாக உருவாகும். அப்படியொரு நிலையில், ரணில், அச்சமில்லாமல் பதவியில் தொடரலாம். என்றாலும், இந்த விஷயத்தில் ரணில் என்ன செய்வாரென்று இப்போது கணிக்க முடியவில்லை. “தண்ணீர் கொதிக்கும் வரை, பாத்திரத்துக்குள் இருக்கிற நண்டு நடனமாடிக் கொண்டுதான் இருக்கும்” - என்பது ஒரு சிங்களப் பழமொழி. அப்படித்தான் ஆடிக் கொண்டிருக்கிறார் ரணில். மழையைப் பார்த்துப் பயப்படுபவர்களெல்லாம் என் குடைக்குக் கீழே வந்துவிடுங்கள் - என்று ஊரிலிருக்கிற அத்தனைக் கட்சியையும் அழைத்துக் கொண்டிருக்கிறார். கையில் ஒரு ஓட்டைக் குடையை வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் அழைப்பு விடுப்பது, அவருக்கு மட்டுமே சாத்தியம். இதெல்லாம் ஒரு பிழைப்பு - என்கிற விமர்சனத்தைக் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டார். இந்த லட்சணத்தில், கொள்கைப் பிரகடன உரை வேறு தேவைப்படுகிறது ரணிலுக்கு! இவரது பிரகடனமும், கோதபாயவின் பிரகடனத்தைப் போல், பௌத்த சாசனத்துக்கான முக்கியத்துவம் மற்றும் முதலிடம் குறித்து அழுத்தந்திருத்தமாகப் பேசுகிறது. சிங்கள பௌத்த வெறி - என்கிற பொறியை வைத்துத்தான் ராஜபக்ச பரிவாரம் நாட்டைத் திவாலாக்கியது. கஜானாவைக் காலி செய்தது. நாக்கு வழிப்பதற்குக் கூட எதுவுமில்லை என்கிற நிலையை உருவாக்கியது. அதையேதான் பேசுகிறார் ரணிலும்! கோவிட் போய் ஒமிக்ரான் வந்ததைப் போல, கோதா போய் ரணில் வந்திருக்கிறார்… அவ்வளவுதான்! ரணிலின் பிரகடனம் முழுக்கவே கேலிக்கூத்துதான் என்றாலும், அதிலிருக்கிற குரூர நகைச்சுவை, ‘இலங்கையை மீளக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழ் உறவுகள் உதவ வேன்டும்’ என்பது. கொழுப்பில் தோய்த்தெடுத்த இந்தத் தடித்த வார்த்தைகள், பௌத்த சிங்கள ஆதிக்கத் திமிரை உணர்த்துகின்றன. நாம் கொஞ்சம் அசந்தால், ‘வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை வேட்டையாடப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் உறவுகளும் இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதில் துணை நிற்கவேண்டும்’ என்று கூட இந்த மனிதர் பேசக் கூடும். 2015ல் மைத்திரிபாலவைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்ததும், அவரை முந்திக்கொண்டு, சர்வதேச விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்ன பிரகஸ்பதி, இதே ரணில்தான்! அத்துடன் நில்லாமல், ராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நாமே விசாரித்து, அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று பொறுப்பேயில்லாமல் பேசியவர். அதிலிருந்து, அவர்களை அவர்களே விசாரித்தால் என்ன நடக்குமென்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ரணில் இப்போது பேசுவதிலும், எதுவும் புதிதல்ல! ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பேசியதுதான்! எல்லாமே வெல்லப்பாகில் ஊறவைத்த பூச்சிமருந்து. . “புதிய இலங்கையை உருவாக்க அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும், தங்கள் தாயகத்தின் புதல்வியாக / புதல்வராக இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் திகழவேண்டும்” என்பதெல்லாம் ரணிலின் நிரந்தர போதனைகள். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், யதார்த்தம் இடிக்கிறது. ராஜபக்சவின் ராணுவத்தால் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் யார்? அவர்கள் அதே தாயகத்தின் புதல்வர்களும் புதல்விகளும் கிடையாதா? வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்களா? சிங்கள ராணுவ மிருகங்களால் வயது வித்தியாசமில்லாமல் சீரழிக்கப்பட்ட எங்கள் சகோதரிகளை மறந்துவிட்டு, அதைக்கொண்டாட பால்சோறு பொங்கிய சமூகத்துடன் இணைந்து புதிய நாட்டை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்கிறாரா? தமிழருக்கு அநீதி இழைத்த ராணுவத்தைக் கூண்டில் ஏற்றாமல், இலங்கையின் பேரினவாத வெறிக்கு முடிவுகட்ட முடியாது. அதுவரை இலங்கை புதிய இலங்கையாக மாற வாய்ப்பேயில்லை. இதை ரணிலும் ஏனைய சிங்களத் தலைவர்களும் உணர்ந்துகொள்ளாவிட்டால் அந்த நாடு திருந்த வாய்ப்பேயில்லை. தாயகத்திலிருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும், இந்த 58 பேர் கைது விவகாரம் ஓர் அரிய வாய்ப்புதான்! தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் - என்கிற எண்ணம் வலுத்துவருகிற தருணத்தில், அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட, இதைக்காட்டிலும் அருமையான வாய்ப்பு கிடைத்துவிடப் போவதில்லை. சர்வதேசமும், உலகெங்கும் சிதறிக் கிடக்கிற லட்சக்கணக்கான தமிழ் மக்களும் தங்களை உன்னிப்பாகக் கவனிப்பதைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர் பகுதிகள் அனைத்திலும், தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும், தமிழ்நாட்டிலும், இந்த 58 பேர் மீதான கைது நடவடிக்கையை வலியுறுத்தும் நிகழ்வுகள் அவசியம், அவசரம். இன்னும் ஒருபடி மேலே போய், ‘சர்வதேச விசாரணையை முறைப்படி அனுமதித்தால், பொருளாதார ரீதியாக இலங்கைக்கு உதவத் தயார்’ என்றுகூட புலம்பெயர் அமைப்புகள் அறிவிக்கலாம். ரணிலுக்கும் சிங்கள மக்களுக்கும் அது உறைக்கிறதா என்று பார்ப்போம். இந்த 58 என்பது வெறும் எண் அல்ல! குற்றவாளிகளின் எண்ணிக்கை. இது, இன அழிப்பில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளுக்கான வலை. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் விரிக்கப்பட்டிருக்கிற இந்த வலை எவ்வளவு வலுவானது என்பதை காலம் உணர்த்தும். அதற்கு முன்பாக, தமிழினத்தின் ஒற்றுமையையும் வேதனையையும் வலியையும் ஒன்றுபட்டு நின்று சர்வதேசத்துக்கு நாம் உணர்த்தியாக வேண்டும். ஈழ மக்களை நேசிக்கும் அத்தனைப்பேரும் ஒற்றுமையுடன் இந்தக் களத்தில் இறங்குவது முக்கியம். . இதில் தனிப்பட்ட எவருக்கும் பெயர் கிடைத்துவிடப் போவதில்லை. எல்லாப் புகழும் மிஷேலுக்கே - என்பதால் அந்தப் பிரச்சினையே எழாது. இந்த விஷயத்தில் கூட நம்மால் ஒரே குரலில் பேச முடியாதென்றால், நாளைய தலைமுறையின் நக்கல் பார்வையிலிருந்து நாம் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. - புகழேந்தி தங்கராஜ் நன்றி: தாரகம்
  3. பற்றி எரிகிறது இலங்கை! சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வயிறும் வாழ்வும் உடம்பும் உடைமைகளும் பற்றி எரிந்த அதே மே மாதம் இதோ அதற்கெல்லாம் காரணமான இராசபக்சவின் வீடு தீப்பற்றி எரிந்திருக்கிறது! தமிழர்கள் குழந்தை குட்டியுடன் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்ததைப் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய சிங்கள மக்களின் வயிறு இன்று பசித் தீயால் எரிகிறது! ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து மகிழும் அளவுக்குக் கொடூர மனம்தான் நமக்கு வாய்க்கவில்லை. சிலர் இதைக் கடவுளின் தீர்ப்பு என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரு நிமையம் (minute) நீங்கள் உங்களைக் கடவுளாக நினைத்துக் கொள்ளுங்கள்! இப்படி ஓர் இனப்படுகொலை நடக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மக்களைக் காப்பாற்ற ஏதேனும் செய்வீர்களா? அல்லது, மக்கள் குண்டு வீச்சால் உடல் பிய்ந்து சாவது, வெட்டவெளியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொடூரமாகக் கொல்லப்படுவது, இந்த உலகத்தை இன்னும் கண்ணால் கூடப் பாராத குழந்தைகள் தமிழச்சி வயிற்றில் உதித்த ஒரே காரணத்துக்காகக் கருவிலேயே அழிக்கப்படுவது ஆகியவற்றையெல்லாம் நடக்க விட்டுவிட்டுப் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா? குற்றம் செய்தவனைத் தண்டிக்கத் தெரிந்த கடவுள் அவன் அந்தக் குற்றத்தைச் செய்யும்பொழுது மட்டும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால், ஆக மொத்தம் அவன் எப்பொழுதும் யாராவது ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க விரும்புகிறான் என்றுதானே பொருளாகிறது? சரி, அப்படியே இது கடவுளின் தீர்ப்பு என்றே வைத்துக் கொண்டாலும் ஈழத் தமிழ் மக்களைக் கொன்று அழித்த இலங்கைக்குக் கடவுள் தண்டனை வழங்கி விட்டார் என்றால் ஈராக், ஈரான் போன்ற பல நாடுகளில் ஏதுமறியா மக்களைக் கொன்று குவித்த அமெரிக்காவுக்கு ஏன் இதுவரை அவர் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை? காலங்காலமாகப் பாலத்தீன (Palestine) மக்களை அழிப்பதையே பொழுதுபோக்காக வைத்திருக்கும் இசுரேலை ஏன் கடவுள் தொட்டுப் பார்க்கக் கூட அஞ்சுகிறார்? எடுத்துக்காட்டுக்காக இரண்டு சொல்லியிருக்கிறேனே தவிர இப்படிக் கொலைகார நாடுகள் உலகில் இன்னும் நிறையவே இருக்கின்றன. அங்கெல்லாம் தீர்ப்பு வழங்காத கடவுள் தமிழர்களான நமக்காக மட்டும் மனமிரங்கி வந்து விட்டார் என நாம் நம்பினால் அது முட்டாள்தனம்! இதோ, அன்று உடன் வாழும் மக்களின் இன அழிப்பைக் கொண்டாடிய சிங்களர்கள் இன்று காலி முகத் திடலில் தமிழர்களோடு சேர்ந்து இனப் படுகொலையில் கொல்லப்பட்ட நம் தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்! கண்ணெதிரே வாழும் இத்தகைய மனிதர்களின் மனமாற்றத்தை வேண்டுமானால் நம்பலாம். ஆனால் கண்ணுக்கே தெரியாத கடவுளின் காலங்கடந்த தீர்ப்புகள் ஒருபொழுதும் நம்பத் தக்கவையல்ல! சரி, இனப்படுகொலை நினைவு நாளில் எதற்காக இந்தக் கடவுள் ஆராய்ச்சி என்றால் ‘கடவுளின் தீர்ப்பு’ எனும் சொல்லாடல் நம் போராளித்தனத்தை மட்டுப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான். இனப்படுகொலைக்கான நீதியைப் பெற நாம் செல்ல வேண்டிய தொலைவு இன்னும் ஏராளம். அதற்குள் கடவுளே இராசபக்சவைத் தண்டித்து விட்டார், சிங்கள மக்களுக்குப் பாடம் புகட்டி விட்டார் எனவெல்லாம் நாம் நம்பத் தொடங்கினால் நீதிக்கான போராட்டத்தில் அது பெரும் தொய்வை ஏற்படுத்தி விடும். கொடுமை நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துக் கடந்த ஆண்டுதான் இனப்படுகொலை குறித்து ஆராயவே முன்வந்திருக்கிறது பன்னாட்டுச் சமுகம். அதுவும் அன்னை அம்பிகை செல்வகுமார் அவர்கள் நடத்திய பின்வாங்காத உண்ணாநிலைப் போராட்டத்தால்தான். இனி ஆய்வு முடிந்து... நடந்தது இனப்படுகொலைதான் என உறுதிப்படுத்தப்பட்டு... அதன் பேரில் இலங்கை மீது நடவடிக்கை கோரி... அதற்கு உலக நாடுகள் ஒப்புக்கொண்டு... என நீதியை அடைய இன்னும் எவ்வளவோ கட்டங்கள், எத்தனையோ பெருந்தடைகள் இருக்கின்றன! இந்நிலையில் கடவுள், தீர்ப்பு போன்ற நம்பிக்கைகள் நம்மிடையே பரவினால் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள், போராளிகள், மக்கள் மத்தியில் அது சுணக்கத்தை உண்டாக்கும். செய்த குற்றத்துக்குக் கடவுளே அவர்களைத் தண்டித்து விட்டார் இனி நாம் வேறு ஏன் அவர்களைத் தொல்லைப்படுத்த வேண்டும் என்கிற மனப்பான்மை வந்து விடும். அப்படி வந்து விட்டால் அதன் பின் இனப்படுகொலைக்கான நீதி என்பது என்றைக்கும் எட்டாக்கனியாகி விடும்! கொடுமைக்காரக் கணவனைச் சட்டத்தின் மூலம் தண்டிக்காமல் கடவுள் தண்டிப்பார் என நம்பிக் காலமெல்லாம் காத்திருந்து ஏமாந்து உயிர் விட்ட எத்தனையோ முட்டாள் பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். தொழிலில் ஏமாற்றியவனையும், கடன் வாங்கித் திருப்பித் தராதவனையும் நீதிமன்றத்துக்கு இழுக்காமல் கடவுள் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டுக் கடைசியில் பெற்ற பிள்ளைகளைக் கரை சேர்க்கக் கூட வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற எத்தனையோ மூடர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கடவுளின் தண்டனை, காலத்தின் தீர்ப்பு போன்றவற்றுக்காகக் காத்திருப்பது இத்தகைய ஏமாற்றங்களைத்தாம் தருமே தவிர எந்தக் காலத்திலும் நீதியைப் பெற்றுத் தராது. எனவே இத்தனை காலமும் கடவுளின் பெயரால் நாம் ஏமாந்தது போதும். இதுநாள் வரை தனிமனிதனுக்கு நீதி கிடைக்கத் தடையாயிருந்த இந்த மூடநம்பிக்கை நம் ஒட்டுமொத்த இனத்துக்குக் கிடைக்க வேண்டிய நீதிக்கும் தடையாகி விடாமல் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது முக்கியம்! இராசபக்சவுக்கு இன்று கிடைத்திருக்கும் தண்டனை அவன் செய்த கொடுமையில் நூறாயிரத்தில் ஒரு பங்கு கூடக் காணாது! சிங்கள மக்கள் இன்று படும் வறுமையின் துன்பம் கொடுமையானதுதான் என்றாலும் நாம் கேட்கும் இனப்படுகொலைக்கான நீதியும் தனி ஈழ விடுதலையும் அவர்களை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. அவர்களைப் பாதிப்புக்கு ஆளாக்குவது நம் எண்ணமும் இல்லை. எனவே கடவுள், தீர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை விட்டொழிப்போம்! நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்! தமிழினத்தின் விடுதலையை வென்றெடுப்போம்! நினைவேந்தல் சுடர்தனை ஏற்றி வைப்போம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!! ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி இந்தியா டைம்சு, தமிழ் ABP நாடு. தொடர்புடைய பதிவுகள்: 📂 நினைவேந்தல் தொடர்புடைய வெளி இணைப்புகள்: ✎ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: இலங்கைத் தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து அஞ்சலி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.