Search the Community
Showing results for tags 'காதல்'.
-
நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் நான் வாழ நீயின்றி வேறேது காரணம் புதிய தாகம் இதுவோ காதல் பானம் பருக வருமோ நமது காதல் விளைய இது புதுமையான களமோ நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் காற்றுப் போலவே நெஞ்சம் சூழலுதே உன் கண்ணைக் கண்டதாலே பேதை என்னையே வாழ வைத்ததே நேசம் கொள்ளைக் கொண்டதாலே உன்னைப் பார்க்கையில் அன்னைப் பார்க்கிறேன் உந்தன் ஜீவக்கண்ணில் என்னைப் பார்க்கையில் உன்னைப் பார்க்கிறேன் உந்தன் வடிவந்தன்னில் அன்பைச் சொல்லியே என்னைச் சேர்க்கிறேன் இன்று உந்தன் வாழ்வில் அன்பே! எண்ணம் கூடுமோ இந்த மாய வாழ்வினில்.... அன்பே! நேசம் கூடுமோ உந்தன் ஞான வாழ்வினில்.... அன்னை நீ! தந்தை நீ! விண்ணும் நீ! மண்ணும் நீ! கீதை போலே உந்தன் பேரை ஓதும் பேதை நான்.... நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் கல்வி செல்வமும் அன்பு செல்வமும் வாரித் தந்தவன் நீயே! நாளும் என்னையே வாழவைத்திடும் பேசும் தெய்வம் நீயே! என்னை வணங்கிடும் என்னை ஏந்திடும் மோனவல்லியே வெள்ளை மனத்தில் அன்பை மேவியே என்னை ஆளும் கோதையே என் மன மேடையில் நீ தான் ராதையே என் நினைவில் வாழ்ந்திடும் என் சுவாச பாதையே என்னுயிர் நீ அல்லவா இன்னும் நான் சொல்லவா நீதான் மனைவி நீதான் காதலி நீதான் என் வசந்தம் நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் சரவிபி ரோசிசந்திரா
-
பக்கத்துல நீயிருந்தும் பாவிமனம் பாக்கல கண்ணுக்குள் நீரிருந்தும் காணாமல் தூங்கல பாசம் வெச்ச நேச மச்சான் பேசாம போவதேன் உள்ளுக்குள் உன் நெனப்பு உறங்காம விழிப்பதேன் உன்னோடு வாழ வழியில்ல உன் நெனப்ப மறக்க முடியல எங்கே நான் செல்ல தெரியல என் நேசம் ஏனோ! புரியல ஒத்தச் சொல் சொன்னாயே உள்ளத்துல ஒசுரா நின்னாயே எங்கே நீ சென்றாயோ? என்னை நீ மறந்தாயோ! நேசம் வெச்ச ஆசை மச்சான் என் நெனப்பு பேசலையா! சுவாசிக்கும் காற்றும் என் மனவலியச் சொல்லலையா? சரவிபி ரோசிசந்திரா
- 2 replies
-
- பக்கத்தில்
- நீயிருந்தும்
-
(and 3 more)
Tagged with:
-
இறுதியில் கிடைத்த உனதன்பு இளைப்பாறிக் கொண்டு இருக்கிறது இதயத்தில்.... சரவிபி ரோசிசந்திரா