Search the Community
Showing results for tags 'சரவிபி'.
-
கடைசிப் பக்கத்தில் முடியாது தொடரும் கதைப்புத்தகம் வாழ்க்கை... மற்றவர்கள் சிபாரிசில் கிடைக்கும் உயர்வான வேலையை விட உன் திறமைக்குக் கிடைக்கும் கூலிவேலை மேன்மையானது... அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை எனினும் எப்போதும் அனுசரித்து வாழ்வது வாழ்க்கையே இல்லை.... தோல்விக்குத் தோள் கொடுங்கள் வெற்றிக்கு அதிகாலை விழித்திருங்கள் விமர்சனங்கள் எந்நாளும் வரவேற்றிடுங்கள் புகழுரையை கேட்காமல் கடந்திடுங்கள் இதுதான் வாழ்க்கையென வாழ்ந்திடுங்கள்... சரவிபி ரோசிசந்திரா
-
உறவுகளின் உயிர்ப்பை நுட்பமாய் தீர்மானிக்கிறது தேவை சரவிபி ரோசிசந்திரா
- 3 replies
-
- 1
-
- தேவை
- உறவுப்பாலம்
-
(and 2 more)
Tagged with:
-
பக்கத்துல நீயிருந்தும் பாவிமனம் பாக்கல கண்ணுக்குள் நீரிருந்தும் காணாமல் தூங்கல பாசம் வெச்ச நேச மச்சான் பேசாம போவதேன் உள்ளுக்குள் உன் நெனப்பு உறங்காம விழிப்பதேன் உன்னோடு வாழ வழியில்ல உன் நெனப்ப மறக்க முடியல எங்கே நான் செல்ல தெரியல என் நேசம் ஏனோ! புரியல ஒத்தச் சொல் சொன்னாயே உள்ளத்துல ஒசுரா நின்னாயே எங்கே நீ சென்றாயோ? என்னை நீ மறந்தாயோ! நேசம் வெச்ச ஆசை மச்சான் என் நெனப்பு பேசலையா! சுவாசிக்கும் காற்றும் என் மனவலியச் சொல்லலையா? சரவிபி ரோசிசந்திரா
- 2 replies
-
- பக்கத்தில்
- நீயிருந்தும்
-
(and 3 more)
Tagged with:
-
கலைந்த ஆடையை உடுத்திக் கொள்ள மறுக்கிறது அப்பால்... சற்று தாமதமாக வந்தால் பொங்கி வழிகிறது முழு ஆடை... தெரியாதுபோல் சில நேரம் தெரிந்ததே தெரியாமல் போகிறது பலநேரம். .. சரவிபி ரோசிசந்திரா
-
பாதைகள் மாறினோம் ஆனால் ஒரு வழியாய் இணைக்கிறது வாழ்க்கை... பயனற்ற யாக்கையை பயன்படுத்தி வீடுபேறு அடைவது பேரறிவின் நிலை மூலம் அறிந்த பின் முக்தி கிடைப்பது முதிர்ச்சி நிலை... சரவிபி ரோசிசந்திரா
-
உன் புகைப்படத்தை ஓராயிரம் முறை பார்த்து இருப்பேன் ஏனோ நீ இன்னும் பார்க்கவில்லை என் குறுஞ்செய்தியை காத்திருந்தால் காதல் அதிகரிக்கும் என்று நானும் கூட சிலாய்த்துப் பேசியது உண்டு என் தோழியின் காதலுக்கு தூது போன நாட்களில் தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியுமென அப்போது தெரியாமல் போனது ஏனோ! நீ இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறாய் இம்மியளவும் மாறாமல் உன்னை நினைத்து உண்ணவும் முடியாமல் உறங்கவும் இயலாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் கோட்டானாய் நள்ளிரவில் நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா? என நினைத்தால் நெஞ்சம் பஞ்சாய் வெடிக்கிறது என்ன செய்ய நீயும் கொள்கையின் வாரிசு தானே! உன் கொள்கையை காதல் களவாடுமென நினைத்தேன் மாறாக கொள்கை களவாடியது காதலை... எல்லாவற்றிலும் நீ முழுமை காண விரும்புகிறாய்.... நான் உன்னை மட்டுமே காண விரும்பிறேன் உணர்வுகள் சேர்த்து வைக்கும் உறவை என்று நானும் நம்பினேன் என் நம்பிக்கைக்கு பரிசளித்தது உறவல்ல பிரிவு என் நினைவுகள் ஒருநொடி பேசியிருந்தாலும் நீ அழைத்திருப்பாய் உரிமையுடன் இன்று என் பிறந்தநாள் நீ மறந்து விட்டாய் நான் மரணித்து விட்டேன்... சரவிபி ரோசிசந்திரா
-
- 1
-
- மரணித்து விட்டேன்
- சரவிபி
-
(and 1 more)
Tagged with:
-
வாழ்க்கை ஒன்றும் பாடத்திட்டம் அல்ல அப்படியே படித்துப் படியெடுக்க அது ஒரு இனிய கலை கற்க பணம் தேவையில்லை தெளிந்த நல்மனமே தேவை... சரவிபி ரோசிசந்திரா
-
- வாழ்க்கை
- வாழ்க்கைப்பயணம்
-
(and 1 more)
Tagged with:
-
எல்லாவற்றிலும் முழுமை காண விரும்பும் நாம் தான் பாதி வாழ்க்கையை தொலைத்துவிடுகிறோம் முழுமையாய்... சரவிபி ரோசிசந்திரா
-
- வாழ்க்கைப்பயணம்
- வாழ்க்கை
-
(and 1 more)
Tagged with:
-
பெத்த மனம் தூங்கலையே பிள்ளை மனம் ஏங்கலையே பார்த்துப் பல நாளாச்சு பங்குனியும் பிறந்தாச்சு வந்து கூப்பிடுவானு வாசல் வந்து நின்னாச்சு விக்கல் வந்தாலும் நீ தான் நினைக்கிறனு வெசனத்த மறந்து பித்துக் கொள்ளும் தாய்மையடா தாய்ப்பால அதிகம் சுரக்குமுனு பத்தியம் பல இருந்தேன் கசக்கும் வைத்தியத்தை கற்கண்டாய்ச் சுவைச்சேன் பேச்சு வரலையினு மண்சோறு சாப்பிட்டேன் டா காத்துக் கருப்பு தீண்டும்னு அப்பா கருப்பசாமிக்கு நேந்துகிட்டார் பள்ளிக்கூடம் போக காலு வலிக்கும்னு அப்பா பத்துக்காதம் தொலவுத் தூக்கி வருவார் மண்ணுக்குள்ள போகும் முன்னே என் மகராசா வந்துடுடா சீக்கிரம் வந்தாக்கா உன்னத் தொட்டு உச்சி முகந்துடுவேன் பார்த்துப் பல நாளாச்சு பார்வையில் பூ விழுந்துடுச்சு தேகம் சுருங்கிடுச்சு தாகம் அடங்கிடுச்சு பேச்சுக் குறைஞ்சிடுச்சு நடையோ தளர்ந்துடுச்சு சீக்கிரம் வந்துடா? சீமையாளும் என் மவனே! சொத்து சுகம் தேவையில்ல என்று நாங்க நினைச்சோம் சொத்தாய் நீயிருக்க சொத்தெல்லாம் வித்துப்புட்டோம் காடு கழனி எல்லாம் கடனுக்குக் கொடுத்துப் புட்டேன் நீ படிச்சா போதுமுனு எல்லாத்தையும் இழந்தோம் சீமை வேலை போகனுமுனு நீ தான் ஆசைபட்ட படிச்சப் புள்ளையாச்சேனு பாவிமக தடுக்கலையே? காலங்கள் போன பின்னே கடுதாசி வந்தது கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தை இருக்குனு திகைச்சு நின்னேன் செய்வது அறியாம அக்கம் பக்கம் எல்லாரும் ஆளுக்கு ஒன்னு சொன்னாங்க அப்பா ஆத்தா நாங்க அழுதும் தீர்த்தோம் டா அப்பாக்குச் சேவை செய்ய அம்மாக்குத் தெம்பு இல்ல அதனாலதான் போகிறோம் முதியோர் இல்லம் பெத்த புள்ள சொந்தம் இல்ல எங்க பேருல பணமும் இல்ல எதுவுமே எங்களுக்கில்ல அதனால இழந்தேன் அப்பாவ மெல்ல அப்பா இழவுக்கு வருவேனு காத்திருக்கல மகனா நான் செஞ்சேன் என் ஆசை மச்சானுக்கு காலதாமதாய் கணினியில் இரங்கல் செய்தி எங்களுக்கு படிக்கத் தெரியாதுனு பாவம் மறந்துட்ட சீக்கிரம் வந்துடுடா? சீமையாளும் என் மவனே! என் உசுறுப் போகும் முன்னே உன்னப் பார்த்துடனும் உசுறுப் போனாக்கா என் முந்தானை அவித்துப் பாரு ரூபா மூவாயிரம் இருக்கும் இழவுச் செலவுக்கு அண்ணாச்சியிடம் ஏழு நூறு கொடுத்து இருக்கேன் மறந்து விடாம பணத்தை வாங்கிக்கடா மறக்காம என் மவனே! மறு விசாயக் கிழமை வந்துடுடா... சரவிபி ரோசிசந்திரா
-
- 3
-
- தாய்மை
- தாயின் ஓலம்
-
(and 3 more)
Tagged with:
-
நான் உன்னைத் தொலைத்து நீ தேட நீ என்னைத் தொலைத்து நான் தேட இருவரும் தேடினோம் எங்கெங்கோ? இதுவரை கிடைக்கவில்லை நாமெங்கோ! உணர்வுக்குள் சென்று உயிருக்குள் நனைந்து உறவாடி மகிழ்ந்த நாமெங்கே? என்னை அழைத்து அளாவிப் பேசிய ஆருயிர் அன்பே நீயெங்கே! உன்னை அணைத்து உள்ளம் நனைத்த உன்னுயிர் அன்பே நானெங்கே? நம்மை இணைத்த நல்மனம் எங்கே? நன்றி சொல்வோம் தினம் இங்கே! அல்லும் பகலும் உன் நினைவு அழுது துடிக்குதே என் உணர்வு சரவிபி ரோசிசந்திரா
-
காதல் உன்னைக் கட்டிக்கொள்ள காமம் என்னை விட்டுச்செல்ல அடங்க வைத்தது வயது அடக்கம் செய்தது மனது வெள்ளத்தில் ஓடும் உள்ளம் பள்ளத்தில் நாடத் துள்ளும் சிற்றின்ப மாயையில் நெஞ்சம் சிலகாலம் மகிழ்வாய்த் துஞ்சும் ஆசையின் வழியோ சிறிது ஆக்கிரமிக்கும் அளவோ பெரிது அறுசுவை உணவு ருசிக்கும் அடிமையானால் அதுவுன்னைப் புசிக்கும் மோனம் உள்ளே செல்ல மோகம் வெளியே செல்லும் இருக்கும் நாட்கள் குறையும் இகவாழ்வு நாளும் கரையும் தேடி அலையாதே என்னை தேடு உனக்குள் உன்னை பார்ப்பவை எல்லாம் அழகு பார்வையை மாற்றிடப் பழகு அறிவின் வடிவே உலகு அன்பே இறையின் அலகு சரவிபி ரோசிசந்திரா
-
எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய் என்னை நீ அழைத்து எங்கே சென்றாய் தினந்தோறும் பணந்தேடி எங்கே சென்றாய் திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய் உடலுக்குள் உயிர் காணாமல் எங்கே சென்றாய் உடலை தினம் பேணாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எதிலும் நான் தெரிகின்றேன் எங்கே சென்றாய் எல்லாம் நான் அறிகின்றேன் எங்கே சென்றாய் பேதமின்றி அள்ளித் தந்தேன் எங்கே சென்றாய் பேரிடரிலும் துணை வந்தேன் எங்கே சென்றாய் மும்மலம் நீ அறியாமல் எங்கே சென்றாய் முற்பிறவி நீ தெரியாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் உயிர்தோறும் என்னைக் காணாமல் நீ எங்கே சென்றாய் உள்ளத்தில் என்னை எண்ணாமல் நீ எங்கே சென்றாய் சிற்றின்பத்தை ரசித்த நீ எங்கே சென்றாய் சிந்தையை வெறுத்த நீ எங்கே சென்றாய் நான் அக்கத்தில் இருக்கின்றேன் நீ எங்கே சென்றாய் நான் பக்கத்தில் பார்க்கின்றேன் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் நிம்மதியாய் தினம் வருகின்றேன் எங்கே சென்றாய் நிம்(ம)தியை மறந்து நீ எங்கே சென்றாய் சரவிபி ரோசிசந்திரா