Search the Community
Showing results for tags 'தமிழீழ விடுதலைவீரர்கள்'.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 1982 முதல் 18.05.2009 நள்ளிரவு வரை களமாடி வீரச்சாவடைந்தோர்:- 25,500 - 26,500 சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது.. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம் சென்றவர்களில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. அவர்களை வீரச்சாவடைந்தோரோடு சேர்த்தல் சரியா இல்லை தனியாக போராளிகள் என்று சேர்த்தல் சரியோ என்பது தெரியவில்லை.) எனவே இவற்றை நாம் சரியாக கண்டறிய மெள்ள மெள்ளமாக கணக்குகள் போடுவோம். அதற்கு 1982 இல் இருந்து 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினை அறிதல் வேண்டும். 'தினக்கதிர்: 20-6-2001' 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' (மணலாற்றுச் சமர் = மின்னல் முறியடிப்புச் சமர்) இதய பூமி-1 நடவடிக்கை - 8 போராளிகள் சத்ஜெய-1 எதிர்ச்சமர் - 254 போராளிகள் ஓயாத அலைகள் மூன்று - 1336 போராளிகள் --> ஆனையிறவும் அதனோடான யாழ் மீட்பு முயற்சியில் மட்டும் - 973 போராளிகள் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த யாழ். மீதான படையெடுப்பு - 372 போராளிகள் 1989 நவம்பர் 20 வரை இந்திய அமைதிப்படையோடு களமாடி வீரச்சாவடைந்தோர் - 640 போராளிகள் | ஆதாரம்: தலைவரின் 1989 ஆம் ஆண்டு தேசிய மாவீரர் நாள் உரை 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 20.11.2005ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு: https://tamilnation.org/tamileelam/maveerar/2005.htm (2005-38) 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை | ஈரோஸ் & மற்றும் தனிக்குழு மாவீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளது' 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு:- "2008 இல் மே மாத இறுதி வரை 918 மாவீரர்கள் (616 ஆண் மாவீரர்கள், 302 பெண் மாவீரர்கள்) வீரச் சாவடைந்துள்ளனர்" 'கிட்டிப்பு(credit): மாவீரர் பணிமனை' 20 நவம்பர் 2008 வரை வீரச்சாவடைந்த மொத்த மாவீரர் எண்ணிக்கை: 22,390 | 2007 - 2008 மாவீரர் ஆண்டில் மட்டும் 2,239 போராளிகள் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்துள்ளனர். (மேற்கண்ட படிமம் ஒக்டோபர் வரை மட்டுமே. இது நவம்பரையும் உள்ளடக்கியது ஆகும்.) 'கிட்டிப்பு(credit): https://www.tamilnet.com/art.html?catid=71&artid=27600' மேற்கண்ட 25,500-26,500 எண்ணிக்கையினை நிறுவ இறுதி ஐந்து மாதங்களிலும் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளினது எண்ணிக்கையினைக் கண்டறிதல் வேண்டும். அதற்கு நாமொரு தோராயமான கணக்குப்போடுவோம். இற்றைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள படைத்துறையின் அதிகாரநிறைவு வலைத்தளத்தில் (http://www.defence.lk/Article/view_article/862) இருந்து எடுத்தது. இது சிங்களத்தின் மனக்கணக்கு மட்டுமே... நாமொரு அண்ணளவான கணக்காக இதை எடுத்துக்கொள்ளலாம். 2009 மேற்கண்டது போன்று சிங்களத்தின் படைத்துறை மற்றும் வலுவெதிர்ப்பு அமைச்சு(Defence minstery) ஆகியவற்றினது வலைத்தளங்களில் இறுதி 5 மாதங்களிலும் வீரச்சாவடைந்த போராளிகளினது எண்ணிக்கை தொடர்பாக நாளாந்தம் ஒரு கணக்கு வெளியிடப்படும். அது மிகவும் நகைச்சுவையானதாக இருக்கும். அது பற்றி அந்தக் காலத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை:- சரி இனி நாம் கணக்கெடுப்போம். சிங்களத்தினால் வெளியிடப்பட்ட வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையான (செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரை) 5,953 என்பது ஒரு அண்ணளவான கணக்கே... மெய்யானது அதைவிடக் குறைவாக இருக்கும். இருந்தாலும், பகை கொடுத்த எண்ணிக்கையினை கணக்கெடுத்தால், செப். 2007 - ஏப்ரல் 24 2009 வரையிலான சிங்களக் கணக்கு - புலிகளால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வீசாவான மொத்த மாவீரர் எண்ணிக்கை 5953-2,239 = 3,714 2008 வரையிலான மொத்த மாவீரர் எண்ணிக்கை + 3,714 22,390+3,7149 = 26,104 சிங்களவரின் தகவல் அடிப்படையில் ஏப்ரல் 24, 2009 - மே 18, 2009 வரை மொத்தம் 358 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர். ஆக, 26,104+358 = 26,462 ஆக மொத்தத்தில் சிங்களவனின் கணக்கின் அடிப்படையில் 26,462 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கின்றனர் என்பதை நான் உச்ச மாவீரர் தொகையாக கணக்கிலெடுத்து வரையறுக்கிறேன்.. (சிங்களவர் எப்பொழுதும் தமிழர் தரப்பின் இழப்பு எண்ணிக்கையினை ஏற்றிச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பது இங்கு நினைவுபடுத்தத்தக்கது.) இனி நாம் தாழ்ந்த மாவீரர் தொகையினை உறுதி செய்வோம். அதற்கு நாம் எமக்கு கிடைத்த ஒரு அசைக்க முடியா படிம ஆதாரத்தினை எடுத்துக் கொள்வோம். இறுதி 5 மாதங்களின் சில நாட்களுக்கு துயிலுமில்லமாக விளங்கிய பகுதி: இப்படிமத்தை நான் இங்கு இணைக்க சில காரணங்கள் உண்டு. இப்படத்தில் தெரிபவை மாவீரர் துயிலுமில்லமாக விளங்கிய ஓரிடத்தில் உள்ள கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள் ஆகும். இப்படத்தை வைத்து 2009 இன் குறிப்பிட்ட சில நாட்களினுள் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணைக்கையினை நாம் அறிவதோடு ஏனைய நாட்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின் ஒரு தோராயமான கணக்கினை கணக்கிட முடியும். இப்படிமத்தின் சுற்றாடலை வைத்துப் பார்க்கும்போது இது இரட்டைவாய்க்காலையும் வலைஞர்மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி என என்னால் அறிய முடிகிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை வித்துடல்கள் விதைக்கப்பட்டன. இக்கால கட்டத்தில்தான் ஆனந்தபுர முற்றுகைச் சமரமும் அரங்கேறியது என்பதை கவனிக்கவும். ஆனால் அதனுள் சிக்குண்ட போராளிகளின் வித்துடல்கள் ஆனந்தபுரத்திற்குளேயேதான் விதைக்கப்பட்டன; அவை பின்னாளில் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டன (என்னிடம் ஒரு 200 பேரினது கிடத்தப்பட்ட நிலையிலான வித்துடல்களினது படிமமும் நிகழ்படமும் உள்ளது. ஆனால் 31 ஆம் திகதி வீரச்சாவடைந்தோரினது பின்னுக்கு கொண்டுவரப்பட்டதா என்பது அறியில்லை.) எனவே அதை தவிர்த்த்து ஏனைய இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளினது வித்துடல்களே இன்கு விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய துணிபு. அடுத்து இப்படிமத்தில் தெரியும் விதைக்கப்பட்ட வித்துடல்களின் எண்ணிக்கை பற்றிப் பார்ப்போம். மாவீரர் பீடங்கள் யாவும் இங்கு கடும் கபில நிறத்தில் தெரிகின்றன. அவ்வாறு தெரிபவற்றை நான் எண்ணியபோது, முன்னிருந்து பின்னாக... முதல் கணம்: 8 நிரை x 20 வரிசை = 160 (8வது நிரையில் மூன்று மாவீரர் பீடங்கள் இல்லை) இரண்டாம் கணம்: 23 நிரை x 12 வரிசை = 276 மூன்றாம் கணம்: படிமம் தெளிவாக இல்லை. ஆனால் வரிசை 20 விடக் கூடவாகத்தான் உள்ளது. தெளிவானதுவரை எண்ணியபோது 23 வரிசைகள் வரை செல்கிறது, ஒரு நிரையில். எனவே அந்த முறிப்பு வரை 18 நிரை x 23 வரிசை = 414. அந்த முறிப்பிற்குப் பின்னரும் 7 நிரை உள்ளது. அதில் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை, நிழலாக உள்ளதால். கவனி: படிமத்தின் இடது பக்கம் வெட்டப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் கணத்தினை முழுமையாக கணக்கிட முடியவில்லை மொத்தமாக 160+276+414 = 850 பின்னால் கணக்கிடப்படாமல் மொத்தம் 7 நிரை உள்ளதை அவதானிக்கவும். எனவே அதையும் சேர்த்தால் தோராயமாக ஒரு 850-900 வரையிலான மாவீரர் பீடங்கள் இதற்குள் உள்ளது. ஆக மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து (தோராயமாக 8ம் திகதி எனக் கொள்கிறேன்) ஏப்ரல் 20 வரை, மொத்தம் 43 நாட்களில் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கை 800-900 ஆகும். இந்த தோராயக் கணக்கினடிப்படையில், சனவரியில் இருந்து மே 5 வரை கணக்கிட்டால் 2,550 - 2,700 வரையிலான போராளிகள் மாவீரர்கள் ஆகியிருக்கின்றனர். மேற்கொண்டு (மே 10-18) சமர் உச்சியில் இருந்ததால் இந்த கணக்கு சரிப்பட்டு வராது. சிங்களவரின் சரமாரியான எறிகணைகளில் எல்லா இடங்களிலும் வீரச்சாவுகள் நடந்துகொண்டேயிருந்தன. மேலும், எல்லா நாட்களிலும் மார்ச் 8 - ஏப்ரல் 20 வரை நடந்த சமர்கள் போன்ற சமர்கள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லைத்தான். எனவே கடைசி ஐந்து மாதங்களில் வீரச்சாவடைந்த மொத்த மாவீரர்கள் எண்ணிக்கையானது தோராயமாக 2,550 - 3,000 ஆக இருந்திருக்கலாம் என்பது என்னுடைய துணிபு. நான் கொடுத்த கணக்கோடு சற்று கூடக் குறையவும் வாய்ப்புண்டு என்பதையும் கவனிக்கவும். அடுத்து 2008 டிசம்பர் மாதத்திற்கான மாவீரர் தொகையினைக் கணக்கெடுத்தால், நடந்த சமர்களின் அடிப்படையிலும் 2008 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையின்(2,239) அடிப்படையிலும் பார்த்தால் ஒரு மாதத்திற்கு தோராயமாக 200 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். எனவே டிசம்பர் மாதத்திற்கும் தோராயமாக மொத்தம் 200 போராளிகள் வீரச்சாவடைந்திருப்பர். எனவே மொத்தத்தில் தாழ்ந்த மாவீரர் எண்ணிக்கையாக, 22,390 + 200 + 3,000 = 25,590 25,590 ஐ வரையறுக்கலாம். ஆக, மொத்த மாவீரர் எண்ணிக்கையாக தமிழர் தரப்பினது கணக்கினை தாழ்ந்த கணக்காகவும் சிங்களத்தின் கணக்கினை உச்சக் கணக்காகவும் வைத்தால், 25,500 - 26,500 என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் மொத்த வீரச்சாவடைந்தோர் எண்ணிக்கையாக நாம் வரையறுக்கலாம். இதனுள் ஆயுதங்கள் மௌனித்து சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளினது எண்ணிக்கை அடங்கவில்லை என்பதை கவனத்தில் எடுக்கவும். "எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம் இவர்கள் சிந்திய குருதி - தமிழ் ஈழம் மீட்பது உறுதி 😢" - மாவீரர் நாள் பாடல்களில் ஒன்று உசாத்துணை: Tamilnet.com https://anyflip.com/zmfgt/pzff https://www.deseret.com/2000/6/6/19560902/censors-stifling-reports-on-war-in-sri-lanka https://www.defence.lk/index.php/Article/view_article/862 https://web.archive.org/web/20160304055103/http://www.defence.lk/news/20110801_Conf.pdf https://tamilnation.org/ ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 4 replies
-
- 5
-
-
-
- வீரச்சாவடைந்தோர்
- மாவீரர் நாள்
- (and 9 more)