Search the Community
Showing results for tags 'பேரினவாதம்'.
-
https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950 இலங்கையை ஆள யார்வேண்டும்? அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும் இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும் புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச் சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும். இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா? அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார். நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப் புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர் இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர் வெறிபிடித்தலைந்த கூட்டம் வேற்றின மக்கள்தன்னை நெறிபிறழ்ந்துயிர் பறித்த நீசர்கள் சுயநலத்தர் அறிவிலாதுரக்க “அப்பே ஆண்டுவ” எனக்குரைத்த சொறியர்கள் இனபேதத்தால் தூய்மையைக் கெடுத்தகூட்டம் பேரினவாதரென்னும் பேயர்கள், பிடிவா தத்தால் ஓரினம் மட்டுமாள உரிமைகள் மற்றோர்க்கில்லாக் காரியம் பலவும் செய்து கல்வியை மறுத்துத்தீய போரினாலடக்கிப் புத்தன் புகழினைக் கெடுத்த கூட்டம் போனநற் பெயரையிந்தப் புவியினில் மீட்டாலன்றி ஆனநல்லுதவி சேர்ந்தும் ஆவது ஒன்றுமில்லை. ஈனர்;தம் குணத்தால்வேற்று இனத்தரை மதியாராகில் ஊனமுற் றிலங்கையிந்த உலகினில் தோற்றுப்போகும் ஆனதனாலே இந்த அவனியின் ஆசிவேண்டில் போனது போக இன்று பொருமிடும் மாற்றினத்தோர் தானினியுதவி யென்று தமிழரின் உரிமைபோற்றி மாநில ஆட்சிதன்னை வழங்கலே நன்மை சேர்க்கும்.
-
பேரினவாதத்தின் பிரலாபம் சித்தி கருணானந்தராஜா உலகமே எங்கள் உறுபசியைப் போக்காயோ பேரினவாதப் பெரும்பூதத்தால் வயிற்றில் பற்றியெரியும் பசித்தீயைத் தீர்ப்பதற்காய் நக்குவாரப் பெயர்பெற்று நாடெல்லாம் அலைகின்றோம் சர்வதேச நாணயஸ்தர் தருவாரா ஏதாச்சும்? பெரிய இடமென்று பிச்சைக்குப் போயுள்ளோம் கரியை வழித்துக் கையில் தருவது போல் ஆனைப் பசியில் அலறுகிற எங்களுக்கு சோளப் பொரிதூவிச் சோர்வகற்றச் சொல்வாரோ? என்ன செய்வதென்றறியோம் எம் ஆமத்துறுமார்கள் சொன்னதே வேதமென்றோம் துயர்வந்து சேர்ந்ததுவே! படங்கொண்ட பாந்தள்வாயில் பற்றிய தேரைபோலும் கடன்பட்டுத் தவிக்கின்றோம் காப்பதற்கு யார்வருவார்? சீனத்தலைமைகளும் சிந்துவெளி நாட்டினரும் ஏனித்துரோகமிழைத்தார்கள் எங்களுக்கு? எங்கள் சகோதரர்கள் இருப்பதற்கொன்றோரிடத்தை அன்போடு நாங்கள் அளித்திருக்கலாமன்றோ! முன்னின்று எங்கள் மூத்த சகோதராரை நாட்டைவிட்டு ஓட்ட நயவஞ்சகம் புரிந்தார். பட்டதுயருமினப் படுகொலையும் தாங்காமல் ஓடியொழிந்தவர்கள் உதவிக்கு வருவாரா? தேசிய கீதம்பாடத் திறனிழந்து போனவர்க்கு தேசத்தின்மீதன்பு திரும்ப வந்து சோ்ந்திடுமா? ஒன்றும் புரியாமல் உருக்குலைந்து வாடுகிறோம் காலமென்ன காட்டுமென்று கண்கலங்கி நிற்கின்றோம் புத்தனுரைத்த புனிதவிதி கருமம் இத்தரையில் என்றும் எமக்கும் திரும்புமென்ற தத்துவமே இன்றெம் தலைவிதியை மாற்றியது. நடக்கட்டும் ஓர்நாள் நம் பாவமும் அழியும் தடுக்கட்டும் துன்பததைத் தர்மம் மாநக்கவாரம் - நிக்கோபார் தீவுகள், நக்குவாரம் - இலங்கைத்தீவு.