Jump to content

Search the Community

Showing results for tags 'போர்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 2 results

  1. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! ஓகஸ்ட் 29, 1995 அன்று 'ஐரிஸ் மோனா' பொறியில் சிக்கி புலிகளின் தகரிச் சூட்டில் தீப்பிடித்த டோறாவை அன்று காலையில் கைப்பற்றி கரைக்கு கட்டியிழுத்துவரும் கடற்புலிகளின் வோட்டர் ஜெட் படகு "... வல்வையில் முதன்முதல் எடித்தாராவை வல்லவர் கடற்புலி இடித்தார் இவை வண்டியில் போனது சக்கையடி, வந்த பகைப்படை புக்கையடி!" --> போர்க்கால இலக்கியப் பாடல் இவை தமிழீழத் தேசப்பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களால் கரும்புலிகள் பற்றிப் பாடப்பட்ட போரிலக்கியப் பாடலொன்றின் வரிகளின் நடுவிலுள்ள கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலையும் சிங்களக் கடற்படையின் கலமொன்று முதன்முதலில் சேதமானதையும் குறித்த வரிகளாகும். கடற்புலிகளால் 1990 ஆம் ஆண்டு தொட்டு சிங்களக் கடற்படையின் பல்வேறு கடற்கலங்கள் கைப்பற்றப்பட்டும் சேதமாக்கப்பட்டும் மூழ்கடிக்கப்பட்டும் வந்தன என்பது பலரும் அறிந்த ஒன்று. இத்திரட்டான ஆவணத்தில் தமிழீழ விடுதலைக்காக நடந்த ஈழப்போரின் காலத்தில் தமிழீழக் கடற்பரப்பிலும் சிறிலங்காக் கடற்பரப்பிலும் சிங்களக் கடற்படையுடன் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் மிண்டிய போது பகைவர் தரப்பில் சேதப்பட்ட, மூழ்கடிக்கப்பட்ட மற்றும் அவர்களிடமிருந்து கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள் பற்றியும் மோதல்களின் நிகழ்வு விரிப்பும் அதனால் இரு அடிபாட்டுக் கன்னைகளின் ஆளணியினரில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவற்றையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன், தமிழர் தரப்புத் தகவல்களாக. இவ்வாவணத்தில் 1991ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ம் நாள் வரை, அதாவது “கடற்புறா” அணி “விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்” என்ற பெயரோடு தமிழீழக் கடற்படையாகப் பரிணாமம் பெற்றது வரை (கடற்புலிகள் மகளிர் பிரிவு 1992.03.01 அன்று தோற்றம் பெற்றது), கடலில் நடைபெற்ற சமர்கள் எல்லாம் கடற்புறா என்ற பெயரின் கீழ் பதிவிடப்பட்டுள்ளன. 'கடற்புலிகள்' என்ற பிடாரச்சொல்லானது 1986 நவம்பரிற்கு முன்னரே பாவனையிலிருந்தது குறிப்பிடத்தக்கது (நவம்பர், குரல் 11, விடுதலைப்புலிகள் இதழ்).. சிறிலங்காவின் வான்படையிடமிருந்த மூன்று அவ்ரோ வழங்கல் வானூர்திகளில் இரண்டு 1995 ஆம் ஆண்டு ஏப்பிரல் 28 மற்றும் 29ம் திகதிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால் யாழில் வன்வளைப்பிற்காக நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்துறைக்கு வான்வழி வழங்கல் செய்யும் திறன் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த அடியால் யாழிற்கு வான்வழி வழங்கல் இனிமேல் நடைபெறாது என்று அப்போதைய சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசு அறிவிப்பு வெளியிட்டது. இவ்வான்வழி வழங்கல் பாதை நிறுத்தப்பட்டதன் விளைவாக யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்காவின் வழங்கல் பாதையானது கடல் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடலில் மக்களின் பயன்பாட்டிற்கும் இடருதவிப் பொருட்களைக் கொணர்வதற்குமென யாழ் மாவட்ட அரச அதிபரால் அமர்த்தப்பட்ட கப்பல்கள் எல்லாம் படையினரால் கையகப்படுத்தப்பட்டு அவற்றில் இடருதவிப்பொருட்கள் என்ற பெயரில் படைக்கலன்களும் போர்த்தளவாடங்களும் யாழிற்கு கொணர்ப்படுவது வாடிக்கையானது (உதயன்: 24/10/1995). ஆகையால் 1996 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான லோரன்ஸ் திலகர் அவர்கள், சிறிலங்கா படைத்துறையின் வழங்கல் பாதையை சிறிலங்காவின் நிலப்பரப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் புலிகள் குறிவைப்பார்கள் என்று பறைந்தார் (தமிழ்நெற்: Tigers target sea bridge, 11/07/1997). மேலும், "தமிழ் ஆட்புல கடற்பரப்பில் - வெளிநாட்டிற்குச் சொந்தமான அல்லது மறுவளமானது - சிறிலங்கா படைத்துறையுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் மிண்டும் எந்தவொரு கடற்கலமும் முறையான படைத்துறை இலக்குகளாக கருதப்படும் என புலிகள் ஏற்கனவே எழுதருகையிட்டுள்ளனர்." என்றார். எனவே யாழிற்கான கடல்வழி வழங்கலை அறவே துண்டிப்பதற்காக 1997 ஜூலை 15 அன்று விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் முறையான படைய இலக்குகளாகக் கருதப்படும் என்று அறிவித்ததோடு “மக்களுக்கான உணவு மற்றும் தேவைகளை வழங்குகிறோம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு போர்த் தளவாடங்களை சிறிலங்கா படைத்துறை அனுப்புகிறது” - உதயன்: 17/07/1997 என்றும் குற்றம் சாட்டினர். எவ்வாறெயினும் 1996 ஆம் ஆண்டு முதலே புலிகள் வழங்கல் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கிவிட்டனர். மேலும், 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் திகதி முதல் சிங்கள அரசால் மூடப்பட்ட ஏ9 வீதி வழியே முன்னர் யாழிற்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுப்பொருட்கள் பின்னர் கடல் வழியாக எடுத்துச் செல்லப்படுமென்று - 12 ஆயிரம் தொன் உணவுப்பொருட்களாம் - சிறிலாங்கா அரசு பரப்புரை செய்தது. இவ்வீதி மூடப்பட்டதற்கான காரணமாக சிங்கள அரசு கூறிய சாட்டுகளில் ஒன்று புலிகளின் யாழ் மீதான (விடுவிப்புப்) படையெடுப்பு தொடங்கியதால் - ஓகஸ்ட் 11ம் திகதி - என்பதாகும். ஆனால் அது தொடங்கிய கையோடு அதையே சாட்டாக வைத்து மூடிவிட்டு படையெடுப்பு கைவிடப்பட்ட பின்னரும் - ஓகஸ்ட் 19ம் திகதி மட்டில் - மூடல் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடல்வழியே உணவுப்பொருட்களும் மக்களின் கடல் போக்குவரவும் என்ற போர்வையின் கீழ் சில பொதுமக்களோடு கப்பல்களில் சிங்களப் படைகளுக்கான படைக்கலன்கள், போர்த்தளவாடங்கள் மற்றும் படையினரே திருமலையிலிருந்து யாழிற்கும் யாழிலிருந்து திருமலைக்குமென மெய்யில் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று பொதுமக்கள் வழங்கிய நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தனர் (உதயன்: 21/02/2007) என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு 1996 அம் ஆண்டு முதல் உண்மைக்குப் புறம்பான போர்வையின் கீழ் பயணித்த போது கடற்புலிகளால் குறிவைக்கப்பட்ட மற்றும் அதனால் அழிபட்ட சில கப்பல்களையும் கைப்பற்றப்பட்டு பின்னர் ஒப்படைக்கப்பட்டவற்றையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளேன். ஆவணத்தை வாசகர் வாசிக்கத் தொடங்கு முன்னர் இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக ஈழப்போர்க் காலத்தில் பாதுகாப்புச் சிக்கலாலும் தமது ஆளணி எண்ணிக்கையினை பகைவர் எடைபோடக்கூடும் என்பதாலும் தவிபு எந்தவொரு சமரிலும் தம் தரப்பில் காயப்பட்டோரின் எண்ணிக்கையினை அறிவித்ததில்லை. ஆகையால் கடற்சமர்களிலும் கடற்புலிகள் தரப்பில் காயப்பட்ட போராளிகளின் விரிப்பானது அறியப்பெறவில்லை. இதே போன்று கடற்சமர்களில் கடற்புலிகளின் படகுகள் (வழங்கல் வண்டிகளாயினும் சரி, சண்டைவண்டிகளாயினும் சரி) ஏதேனும் மூழ்கடிக்கப்பட்டால் அது தொடர்பான தமிழர் தரப்பின் தகவல்கள் எங்கேனும் பெறக்கூடியவாறு உள்ளது. அவ்வாறு 1995 ஆம் ஆண்டின் இறுதிவரை மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் படகுகள் பற்றிய தகவல் முற்றாக எடுத்துவிட்டேன். ஆனால் அதற்குப் பிந்தைய காலத்தியவையில் சிலதே கிடைக்கப்பெற்றுள்ளன. அதிலும் தமிழரின் கட்டளையாளர்களோ அல்லது முக்கியமானவர்களோ வீரச்சாவடைந்திருந்தால் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. வீரச்சாவுகள் நிகழாமல் மூழ்கடிக்கப்பட்ட எந்தவிதமான படகுகள் பற்றிய செய்தியும் கிடைக்கப்பெறவில்லை. சிறு குறிப்புக்கூட இல்லை. கடற்கரும்புலிகள் பயன்படுத்தப்பட்ட கடற்சமர்களின் போது கடற்புலிகளின் வண்டிகள் (கடற்புலிகளின் படகுகள் வண்டிகள் என்றே அழைக்கப்படும்) ஏதேனும் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான தகவல் ‘உயிராயுதம்’ நிகழ்படங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது; அதாவது கடற்புலிகளே தம் இழப்பினை அறிவித்துள்ளனர். ஆனால் அவ்வாறான கடற்சமர்களின் போதுகூட சேதப்பட்ட படகுகளின் விரிப்பு அங்குகூட அறிவிக்கப்பட்டதில்லை. தமிழர் தரப்பில் சேதப்பட்ட அ மூழ்கடிக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கையை சிங்களப் படைத்தரப்புச் செய்திகள் யாவும் நம்பவியலாத அளவிற்கு அள்ளுகொள்ளையாக ஏற்றிக் காட்டியுள்ளன, குறிப்பாக 2006ம் ஆண்டில் பல தடவைகள்; 14 படகுகளை தாம் ஒரே கடற்சமரில் மூழ்கடித்ததாக சிறிலங்கா தேசிய ஊடகமொன்று 10/11/2006 (உதயன் வழியாக) அன்று செய்திவெளியிட்டது இவற்றில் குறிப்பிடத்தக்கது ஆகும். இதுபோன்ற சிங்களப் படைத்துறையின் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட அனைத்துத் தகவலைப் பற்றி பரவலறியான சிங்களச் சார்புக் கொழும்புப் படையப் பகுப்பாய்வாளர் திரு. இக்பால் அத்தாஸ் அவர்கள் பம்பலாகப் பின்வருமாறு கூறியிருந்தார். "கடந்த காலத்தில், பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமையகம் அதிகமான பகை இழப்புகளை வெளியிட்டதாக அறியப்படுகிறது. இந்தப் புள்ளி விரிப்புகளைச் சேர்த்தால், பிரிவினைவாதப் போரின் முழுக் காலத்திலுமானதை, அது புலிகளின் ஆளணி வலுவை விட அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியையும் கொண்டிருக்கும் என்ற கருத்துக்குறிப்புகளுக்கு அடியெடுத்துக் கொடுத்தது." - சன்டே ரைம்ஸ், மார்ச் 30, 1997 (Navy's moment of glory in Mullaitivu seas) ஆகவே சிங்களக் கடற்படைக்கு இழப்புக்கள் ஏற்பட்ட கடற்சமர்களின் போது மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் வண்டிகள் பற்றிய தகவலை - என்னால் உறுதிப்படுத்தப்பட்டவை - மட்டுமே இவ்வாவணத்தில் வெளியிட்டுள்ளேன். எதிர்காலத்தில் மேலும் கிடக்குமாயின் இவ்வாவணத்தில் இற்றைப்படுத்துகிறேன் (update). இல்லையேல் அதை தனியான ஒரு ஆவணமாக வெளியிட முயற்சிக்கிறேன். ******
  2. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழர் வரலாற்றுச் சிறப்புமிக்க குடாரப்புத் தரையிறக்கம் 'தரையிறங்கிய போராளிகளோடும் தன் மெய்க்காவலர்களோடும் வீரக்களியாற்றின் சதுப்பு நிலத்தினூடாக விடியப்புறம்போல் இத்தாவில் சமர்க்களம் நோக்கி நகரும் கட்டளையாளர் கேணல் பால்ராஜ் அவர்கள். இப்படிமமானது ஈழத்தமிழரின் வரலாற்றுப் புகழ்மிக்க படிமமாகும்.' முன்னுரை "குடாரப்பு புல்லாவெளி கரைகளிலே சென்று குதித்த புலிகளின் கதைகேளும்!" --> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் 'ஆனையிறவுத் தளம்' என்ற போரிலக்கியப் பாடலிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வாகவும், ஆனையிறவின் வீழ்ச்சிக்கு காத்திரமான அடித்தளம் அமைத்துக்கொடுத்த ஒரு தரையிறக்கமாகவும் திகழ்ந்தது தான் குடாரப்புத் தரையிறக்கம் ஆகும். இதுதான் ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் நான்கின் தொடக்கம் ஆகும். இந்நிகழ்வானது வட தமிழீழத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு எ மருதங்கேணிப் பகுதியின் நாகர்கோவில் தெற்கு ஊர்நிலதாரி பிரிவிற்குட்பட்ட 'குடாரப்பு' சிற்றூரின் தெற்கிலும், செம்பியன்பற்று வடக்கு ஊர்நிலதாரிப் பிரிவிற்குட்பட்ட 'மாமுனை' சிற்றூரின் வடக்கிலுமாக இரண்டு சிற்றூர்களின் கடற்கரையிலும் 26/3/2000 ஆம் ஆண்டு இரவு 8:45 மணிக்கு முதலாவது தரையிறக்கம் நடந்தேறியது. இவையே மேற்கொண்டு நடைபெறப்போகும் தாக்குதல்களின் உவர்க்கத்தலையாக பயன்படுத்தப்பட்டன. புலிகளின் போரியல் வரலாற்றில் இதற்கு முன்னரும் (மண்டைதீவில், புல்லாவெளியில், கிழக்கரியாலையில்-அறுகுவெளியில்) பின்னருமாக (அல்லைப்பிட்டியில், எருக்கலம்பிட்டியில், சிறுத்தீவில், நெடுந்தீவில், அளம்பிலில்) பல்வேறு தரையிறக்கங்களை அவர்கள் செய்திருந்தாலும் அனைத்தைக் காட்டிலும் பெரியதானதும் சிறப்புடையதானதுமாக விளங்குவது இதுவேயாகும். இத்தரையிறக்கத்தினை தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் நிகழ்த்திக் காட்டினர். இவர்கள் 1200 தரைப்புலிகளை 11கிமீ காவிச் சென்று சிங்களப் பகைவனின் காவலரண்களுக்குப் பின்னால் இருந்த குடாரப்பு-மாமுனை சிற்றூரில் தரையிறக்கினர். பின்னால் வரப்போகும் போராளிகளின் வெற்றிக்கு வித்திடும் விதமாக முன்சென்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இரு அணியினர் 26 ஆம் திகதி இரவு 7 மணி சொச்சத்திற்குத் தரையிறக்கப்பட்டனர். பின்னர் மேற்கொண்டு ஏனைய போராளிகளும் இரவு 8:45 முதற்கொண்டு தரையிறக்கப்பட்டனர். இத்தரையிறக்கமானது அடுத்த நாள் காலை 10மணிவரை நீடித்தது. இப்பேர்பட்ட வரலாற்று மாட்சிமைமிக்க இத்தரையிறக்கமானது ஈழத்து வரலாற்று ஆசிரியர்களால் இரண்டாம் உலகப்போரின்போது செருமனியின் நோர்மண்டியில் நேசநாட்டுக் கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கத்தோடு ஒப்பிடப்படுவதாகும். முதற் தரையிறக்கத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 14 போராளிகள் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். அப்புலிவீரர்களது வித்துடல்கள் தலைவரின் அறிவுறுத்தல்படி குடாரப்பிலேயே விதைக்கப்பட்டதோடு பின்னாளில் ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் புலிகளால் பரம்பப்பட்டு கைப்பற்றப்பட்டபின், அவர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் இத்தரையிறக்கம் தொடர்பான நினைவுக்கல்லொன்று இத்தரையிறக்கத்தினை தலைமையேற்று நடாத்திய கட்டளையாளர் கேணல் பால்ராஜ் (நோய்ச்சாவிற்குப் பின் பிரிகேடியராக தரநிலை உயர்த்தப்பட்டார்) அவர்களால் 26/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டு வரலாற்று ஞாபக இடமாக 2009 தமிழீழத் தமிழர் இனப்படுகொலை நடந்தேறும்வரை வரை பேணப்பட்டது. அந்நினைவுக்கல்லானது பின்னாளில் சிங்கள வல்வளைப்புப் படைகளால் இடித்தழிக்கப்பட்டது. குடாரப்புத் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சிக் கிழக்கிற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. அதாவது அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினத்தில் இச்செம்பியன்பற்றுப் பகுதியில் சோழப் பேரரசின் படைகள் தரையிறங்கியதாக குறிப்புகள் உள்ளதாக கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்கள் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில்தான் மீண்டும் தமிழர் சேனை மற்றுமொரு தரையிறக்கத்தினை நடாத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாவணக்கட்டில் இத்தரையிறக்கம் தொடர்பான தகவல்களை மட்டுமே வழங்கியிருக்கிறேன். அதாவது இத்தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து தரையிறங்கியோருக்கான தரைவழி வழங்கல் பாதை திறக்கப்பட்ட 29/3/2000 வரையிலான 4 நாட்களில்(26,27,28,29) வடமராட்சி கிழக்குப் பகுதியில் நடந்தவை தொடர்பான தகவல்கள் மட்டுமே இதனுள் உள்ளது. இத்தாவில் பெட்டிச்சமர் முதல் ஆனையிறவுத் தளம் அதிர்ந்து வீழ்ந்தது வரையிலான ஆனையிறவுச் சமர் தொடர்பான ஏனைய அனைத்துத் தகவல்களும் பிறிதொரு ஆவணக் கட்டில் விரிவாக வழங்கப்படும். அத்துடன் இவ் ஆவணக்கட்டில் நான் குறிப்பிடும் அனைத்து படைத்துறை தரநிலைகளும் 2000 ஆம் ஆண்டில் தமிழர் சேனையின் கட்டளையாளர்கள் மற்றும் போராளிகள் பெற்றிருந்தவையாகும். வரலாற்றை தக்க வைப்பதற்காகவும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவுமே இவ்வாறு செய்கிறேன். மேலும், இவ்வாவணக்கட்டானது எதிர்வரப்போகும் ஒரு ஆவணக்கட்டின் ஓர் உறுப்பு என்பதையும் முன்கூட்டியே அறிவித்துக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பு: இதனை ஒரு வரலாற்று ஆவணமாக பாதுகாக்கும் பொருட்டு இதனுள் நான் எழுதப் போகும் தகவல்கள் யாவும் - படைத்துறையின் படைக்கலன்கள் - எமது தாய்மொழியான தமிழில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். Artillery - சேணேவி Howitzer - தெறோச்சி Mortar - கணையெக்கி Tank - தகரி Garrison - தானைவைப்பு ******
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.