2021 May 6ல் எனக்கு செய்யப்பட்ட pcr testன் ரிசல்ட் positive. எனவே நான் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டேன் அதோடு எனது வீடும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. Corona விற்கான 2 வது தடுப்பூசி (covishield) போடப்பட்டு அடுத்தநாள் காலையில் காய்ச்சல்,தொண்டைவலி ,உடல்வலி போன்ற அறிகுறிகள் இருந்ததால் நானாக சென்று pcr பரிசோதனையை செய்துகொண்டேன்,ரிசல்ட் பொசிட்டிவ் என்றுகாட்டியது.உடனடியாக வைத்தியசாலையில் தடுத்துவைக்கப்பட்டேன் 2 நாட்கள் intermediate ward எனப்படும் வாட்டில் அனுமதிக்கப்பட்டேன் அங்கும் என்னைப்போல் பலர் என்னுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.கொரோனா பொசிட்டிவ் ஆகியிருந்தாலும் உடலில் எந்தவித அறிகுறிகளும் தென்படாமல் விட்டால்தான் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றுவார்கள்.எனக்கு 6 மணித்தியாலங்கள்வரைதான் அறிகுறிகள் தென்பட்டது பின்னர் எந்த அறிகுறிகளும் இல்லை எனவே 2 நாட்களின் பின்னர் என்னை கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றினார்கள்.அங்குசென்றதும் என்னை பரிசோதித்தபின்னர் எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்லுமாறுகூறினார்கள்.
சுருக்கமாகக்கூறினால் அது ஒரு அகதிமுகாம்போலத்தான் இருந்தது அங்கு என் நோய் நிலைக்கு என்ன நடந்தது?அங்கு செல்வதாயின் என்னென்ன பொருட்களைக்கொண்டுசெல்லவேண்டும்?கொரோனா தொடர்பான ஆலோசனைகள் என்ன?என் அனுபவம் என்ன என்பதை ஒட்டுமொத்தமாக இந்த வீடியோவில் கூறியிருக்கின்றேன் பாருங்கள் நண்பர்களே
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/1DrCkFs7p8U" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>